ஞாயிறு, 21 ஜூலை, 2024

எங்களிடம் மட்டுமே

 எங்களிடம் மட்டுமே

____________________________________


நாக்குப்பூர் கூட‌

பேசத்தொடங்கி விட்டது.

முதல் வர்ணமே

முழு முதற்கடவுளுக்கும் மேலே என்று.

இதில் 

இடை வர்ணத்துக்கு ஏது

இறைவன் முலாம்?

இருக்கட்டும் 

கறிவேப்பிலைகள்

எந்த உச்சியில் இருந்தாலும்

தூக்கி ஏறியப்படவேண்டியவைகளே.

சேனைகள் ஆயிரம்

இருந்தாலும்

உயிர் வியூகங்கள் எல்லாம்

எங்களிடம் தான்.

வேடன்கள் 

யாதவன்கள்

மீனவன்கள்

என்று 

சுலோகங்கள் அடுக்கினாலும்

ரிஷிகளில் கூட‌

கோத்ரங்கள் இல்லாமல் 

இருந்தாலும்

எங்கள் மந்திரம் இது தான்.

முதல் வர்ணற்ற‌

இவர்கள் எல்லாம் எங்கள் 

வேள்வியில் கிள்ளி எறியப்படவேண்டிய‌

தர்ப்பைப்புல் தான்.

பொம்மைகளின் சூத்திரம் எனும்

நூல்கள் எல்லாம்

எங்களிடம் எங்களிடம்

எங்களிடம் மட்டுமே!


_______________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக