புதன், 27 அக்டோபர், 2021

 


புதிதாய் ஒரு குரல்!

___________________________ருத்ரா


"மனிதா!மனிதா!"

....................

..................

அற்ப புழுக்கள் 

ஆச்சரியப்பட்டன‌

இப்படியெல்லாமா

இருந்தனவா

நம் பெயர்கள்?

"புரட்டு"ச்சுவடிகளை 

புரட்டிப்பார்த்தன.

"அய்யோ"

அவை பதறின.

தேவ தூஷணை அல்லவா இது?

தண்டனை

கிருமி போஜனம்

கும்பி பாகம் அல்லவா.

வேண்டாம் அந்தப்பேர்கள்.

மிலேச்ச பாஷை இது.

தோஷம்.தோஷம்.

பொந்துகளுக்குள் 

போய்விடலாம் வாருங்கள்.

போய் அடைந்து கொண்டன 

அந்த புழுக்கள்.

___________________________________________



___________________________________

 மரமும் இலையும்

பட்டாம்பூச்சிகளும்

ஹைக்கூ எழுதின.

பாவம்! 

மனிதன் கிடந்தான் 

குப்பைக் கூடையில்.

________________________ருத்ரா.

செவ்வாய், 26 அக்டோபர், 2021

 ஈரோடு தமிழன்பன்

________________________ருத்ரா.



நம் எழுத்துக்களின் எலும்புகள் 

கூன் நிமிர்த்தியபோது தான் தெரிந்தது 

உன் உயிர் மூச்சு எனும்  

மானிட உரிமையை 

அதில் பெய்திருக்கிறாய் என்று.

தமிழ்க்கவிதையின் முதல் இமயம் அது! 

இன்று இந்த விருதுகள்

வளைந்து  கொண்டன உன்னை

வணங்கி வாழ்த்த!

___________________________________


திங்கள், 25 அக்டோபர், 2021



ஓலைத்துடிப்புகள்-117

______________________________________கல்லிடைக்கீரன்.



சிறு வெள்ளருவி பெருங்கல் நாடன்

கல் பொருதிறங்கும் நுண்டுளி அன்ன‌

கவி நிழற்சுனையின் கலங்கு பளிக்கின்

அவள் உரு தேடி அவள் விழி பொருதும் 

கயற்சுழி ஆழும் என   மலைந்தானே!

நீள் அடர்க்கானிடை இலைக்குடை மறைக்க‌

இரவெது?பகல் எது? என மருள் படுத்தாங்கு

முளி திரை முன்னீர் ஏணி இறந்தும் 

எல்லை வெண்குரல் பாழ்வெளி பரப்ப‌

சில் பூ நீட்டும் அவள் நகையே   தீங்கரை!

தும்பி நிரைய அஞ்சிறை பறைய

திரள் காழ் மராத்த திண் பெருங்கானம்

மயக்குறு பல் குறி மாயம் காட்டும்.

ஆயிழை தோன்றும் இரவுக்குறியின் 

அழல் அவிர் பாயல் ஆனாது கலுழும்

நோயில் அவனும் துயில் கெடுத்தானே.

________________________________________________

வெள்ளி, 22 அக்டோபர், 2021




ஓலைத்துடிப்புகள் -116

______________________________கல்லிடைக்கீரன்.


நவ்வி நிரைத்த திரி மருப்பின் வால் இனம்

மின்னல் குழுமி வான் போழ்ந்தன்ன‌

உள்ளம் கலித்து நிழல் குளித்த இலஞ்சிய 

சுனையாய் பசலை பாய்தர படர்த்தாள் அளியள்!

பொருள் வேட்கையில் ஆறு இறந்தவர்

பொறை தொறும் பொறை தொறும் 

பொறிமலிக் காட்சியின் புள்ளி நன்மான்

கணம் கொளப்பாய்ந்த சாயல் அத்தம்

அவள் துள்ளும் மீன்விழிக் கடையென மருளும்.

எவன் கொல் செய்யும்?அவர் கொடுங்கவர் ஆரிடை?

சால்கொடு கீறி ஊன் கிழித்தன்ன‌

செஞ்சுவல் வித்திய அருவினை உழவர் 

ஊன் பொதியா  பசுங்குடை தலைஇய சூடி

வெயில் மறைப்ப    மரைக் கோடு நீட்டிய‌

மண்கொற்றக் குடையுளும்

அவன் ஊர்ந்தான் அவள் உள்ளிப் பெரு ஊழே!

______________________________________________________





புதன், 20 அக்டோபர், 2021

 

ஓலைத்துடிப்புகள்-115

____________________________________கல்லிடைக்கீரன் .


நுண்கலை நன்மான் முதன் முதல் கவர்த்த‌

மணிச்சுவட்டின் கண் படுத்தன்ன

கழை வரி தோறும் வளை நெகிழ்திறங்கும்

மென்சாயல் நிழல் தோய்த்து ஆங்கே

மயிலாடு முன்றில் அன்ன 

கடுஞ்சுரம் நீர்க்கும் .

பேஏய் ஆறும் பின்னே ஏகும்.

வாட்சுறா வழங்கும் வௌவ்வல் ஆழியென

மயக்குறூஉம் காட்சியும் மறைந்திடும் மன்னே!

நெய்தல் கனைத்த கதிர் எதிர் கல் சேர்பு கதிரும்

குடை தேடும் வெஞ்சுரம் திணை மயங்க‌

கல்லாடன் கை ஓலை எழுத்தும் கனற்கீர‌

எரிக்கும் பாலையின் கடுவழியிடையும்

அவள் பாளை உதிர்த்த  நறவு எயிற்று நகையும்

பாலை மீட்டி களி கூட்டும்மே! 

______________________________________________


சாமியோ சாமி!

_________________________________ருத்ரா.


ஏஞ்சாமி? 

நா சாமி  கும்புட 

வந்துருக்கேஞ் சாமி .

எனக்கும் கொஞ்சம் 

சாமிய காட்டுங்க சாமி. 


ஆசாமிகளின் மந்திரங்கள் 

உண்மையான சாமிகளை 

இங்குமங்கும் அலைக்கழித்தன. 


நூல்களுக்கெல்லாம் நூல்களின் 

கருவாக திருவாக 

இருக்கும்  அந்த "சாமி" தான்

அங்கு

நூல் இல்லாமல் நின்றிருந்தார்.


நகரு...நகரு....

காவலர்கள் அவரை விரட்டித் தள்ளினார்கள்.

மந்திரத்தை நிறுத்திவிட்டு

 இந்த சாமி கத்தினார்....

தமிழில் தான்!

"இந்தப் படியைத் தாண்டி

சூத்ராள்ளாம் வந்துடுர்ரா...

அவாளை அந்தப் பக்கமா தள்ளிவிட்டுருங்கோ . ..

__________________________________________________________




செவ்வாய், 19 அக்டோபர், 2021

 ஒரு  ஆரியப் பொருளாதாரம்.

______________________________________ருத்ரா.


எங்களை நரகாசுரன் ஆக்கி

எங்கள் மீது வெடித்து மகிழுங்கள்.

ஆனால்

பட்டாசுக்கு தடை விதித்து 

எங்களை "வதம்" செய்யாதீர்கள்.

______________________________________________

திங்கள், 18 அக்டோபர், 2021

Throw all your masks

along with your faces

of fake smiles and snobbery looks.

your soothing words 

really add fuel to injuries

of your own wounds.

The reasons stem from your

own desires and  judgement

that your golden ballots

will fetch  an all-out sigh of relief.

But again and again it is a

Golden Knife

making you bleed with

rosy phrases of Democracy

as for the people and by the people

and the people endowed with

Ultimate Power.....

the tom-toming is going  on

And

trumpet is playing on !

Alas.and

The bills of their own

Whims and fancies

Roar and roar as "draconian Acts"

Rolling on the feeble and meek

Throats and voices of the very same

Golden Democracy.


------------ ------------------------------------------------ruthraa










செவ்வாய், 5 அக்டோபர், 2021

 கடவுளுக்கெல்லாம்  கடவுள்.

________________________________________________ருத்ரா.


நீங்கள் கடவுளைக் கும்பிடும்போது 

உங்களைக் கும்பிடுவது யார் தெரியுமா?

கடவுள் சொன்னார்:

நான் தான் உன்னைக் கும்பிட்டுக் கேட்கிறேன்.

என்னைக் கண்டுபிடித்தாயே!

என் கடவுள் யார் என்று கண்டுபிடித்துச் சொல்லேன்......

நீங்கள் தலையைச் சொறிந்து கொள்ளுகிறீர்கள்.

இன்னும் உள்ளே சொறிந்து தேடு.

கடவுள் சிரித்துக் கொள்கிறார்.

"தெரியவுில்லையே ஸ்வாமி"

உன் அறிவு தான் கடவுளுக்கெல்லாம் கடவுள்.

"ஒண்ணும் விளங்கவே இல்லை"

ரொம்ப. சந்தோஷம்.....அது வரை

இந்தக்கல்லுக்கு 

"கும்பாபிஷேகம்" நடத்திக்கொண்டே இரு.


____________________________________________________________________


வெள்ளி, 1 அக்டோபர், 2021

கணிப்பொறிகள் காத்திருக்கின்றன

----------------------------------------------------------------------------------ருத்ரா.


பகடைகளுக்கும் சகுனிகளுக்கும் 

பரிச்சயமாகிப் போன 

பாரத புத்திரர்களே !

பாராளுமன்றத்திற்குள் ராமர்கோயிலா?

ராமர்கோயிலுக்குள் பாராளுமன்றமா?

மாயமான்கள் ஓட்டம் காட்டுகின்றன.

இந்த சப்பளாக்கட்டைகள் 

சப்தமெழுப்பிக்கொண்டிருக்கட்டும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

"கணிப்பொறிகள் "காத்திருக்கின்றன!

--------------------------------------------------------------------------------