வெள்ளி, 31 மார்ச், 2017

சூத்திரத்துக்குள் ஒரு சூத்திரம்.






சூத்திரத்துக்குள் ஒரு சூத்திரம்.
=============================================ருத்ரா.

அரிஸ்டாட்டில்
ஒரு சிறு நேர்கோட்டை
பாதியாக்கு என்றார்.
மீண்டும் பாதியாக்கு.
பாதியையும் பாதியாக்கு
பாதி..பாதி..
அது புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம்.
ஆனாலும்
பாதியாக்கு
பாதியை பாதி ஆக்கு...
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை "அபெய்ரான்" என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
பாலுக்குள் தயிர் உண்டு.
பால் இல்லாமலேயே
தயிர் அங்கு எப்படி வந்தது?
வெறுமையே மத்தாகி
வெறுமையே கடலாகி
கடைந்து வந்ததில்
"திடீர்" என்று
எப்படி அது திரண்டு வந்தது?
ஹிக்ஸ் துகளே
"கடவுள்" துகள் ஆகிப்போனது.
பால் கடைவது போல்
தீ கடைந்த மனிதனுக்கு
தீயே திடீர் அச்சம் ஆனது.
அச்சமே "கடவுளை" இங்கு
எச்சம் இட்டது.
ப்ராபபளிடியில்
ஒரு தொடர்பு எனும்
தொப்பூள் கொடியை
விழுது ஆக்கி
வித்தை ஆக்கத்தெரிந்தவனே
அண்டத்தையும்
விண்டு பார்க்கத்தெரிந்தவன் ஆனான்.
அந்த "கப்ளிங் கான்ஸ்டான்டை"
சூத்திரம் செய்யவே
இங்கு விஞ்ஞானிகளின் வேட்டை.
இந்த நுரை அளபடைவெளிக் கோட்பாட்டின்
(குவாண்டம் ஃபோம் தியரி)
திரை இன்னும் விலகவில்லை.
கடவுள் உண்டு என்பதிலும்
கடவுள் இல்லை என்பதிலும்
ரகசியம் ஏதுமில்லை என்பதே
சிதம்பர ரகசியம்.
யார் கண்டது?
குவாண்டத்தின் அந்த "பஞ்சு நுரை வெளி"
எனும் அந்த "திருவாதிரைக்களியில்"
தெரியலாம் அந்த சூத்திரம்.
அது என்ன சூத்திரம்?
சூத்திரத்துக்குள் ஒரு சூத்திரம்.
கடவுள் உண்டு என்பதன் சூத்திரமே
கடவுள் இல்லை என்பதுதான்!

==============================================

வியாழன், 30 மார்ச், 2017

மூளிகள்


செவ்வாய், 28 மார்ச், 2017

வால் மட்டும்...

வால் மட்டும்...
=======================================ருத்ரா.


"எல்லாம் ஏசுவே
எனக்கு எல்லாம் ஏசுவே"
அம்பதுகளில்
ஒலித்த அந்த இனிய பாடலின்
ஒரு மொழிபெயர்ப்பாக‌
அந்த "நீல வண்ணன்" போல்
உயர உயரக் கட்டிடமாய்
நெடிதுயர்ந்து நிற்கிறது ஆலயம்.
அந்த "புனித மாட்டுக்கொட்டிலை"
திருப்பாற்கடலின்
பாம்புப்படுக்கையிலும்
நான் படம் பிடித்துக்கொண்டேன்.
ஓங்கி ஒலிக்கும்
எல்லாப்புகழையும் இறைவடிவமாக்கும்
தன்மை கசிந்த மனிதத்தையும்
மனத்தில் அச்சிட்டுக்கொண்டேன்.
வீரமும் தியாகமும்
வடிவெடுத்த‌
அந்த "கிரந்த சாகேப்புக்கு"
கவரி வீசி
கண்களில்
பனிக்கச்செய்தேன் மனத்தை.
"மெஸ்ஸையா" இன்னும்
வரவில்லை
அவர்களோடு
அந்த யூத பஸ் ஸ்டாப்பில்
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அரச மரத்து இலைகளோடு
அன்பை
இன்னும் கிசு கிசுத்துக்கொண்டிருக்கும்
அந்த அரச முனிவனின்
கச்சாமியின்
காலடியில் வீழ்ந்து கிடக்கின்றேன்.
எல்லாவற்றையும்
களைந்த நிர்வாணத்தில்
பிரபஞ்ச பேரொளியின் பிரளயத்தில்
ஜைனனாய் கல்லில்
இறுகத்தொடங்கி விட்டேன்.
கன்பியூஸியஸ் சொன்ன‌
சமுதாய ஆன்மாவுக்கு
கண் மூக்கு முகம் அமைத்து
பிரபஞ்ச மண் பிசைந்து உருவம் செய்து
அகத்துள் நுழைந்து பார்த்தேன்.
மாசே துங்..லெனின் என்றாலும்
மார்க்ஸ் என்றாலும்
மானிடம் நோக்கி
கடவுளை உமிழ்ந்து எறியும்
ஒரு கடவுளின் கடவுளைக்கண்ட
கருத்துகளிலும் வியர்த்து வியந்தேன்.
நியூயார்க்கில் கடற்கரையில்
மனித விடுதலை உணர்ச்சியின்
கரு தாங்கிய ஒளியின்
அந்த தேவதையின்
மாணிக்க கிரீட சாளரங்களில்
நின்று கொண்டு
ஒரு பிரம்மாண்ட தரிசனம் செய்தேன்.
விஞ்ஞானம்
அங்கே ஊர்த்துவ தாண்டவம் செய்தது.
அதன் விரிகூந்தலில்
கோடி கோடி...கோடி
பால் வெளியின் ஒளி மண்டலங்கள்.
டார்க் எனர்ஜி ..டார்க் மேட்டர் எனும்
இருட்டுப் பிண்டமாய் இருட்டு ஆற்றலின்
இதய துடிப்புகளாய்
சிவம் ஆனதை சிலிர்க்க சிலிர்க்க நின்று
பார்த்து
பேரொன்றியம் ஆனேன்.
(கிராண்ட் யூனிஃபிகேஷன்)
ஹிக்ஸ் போஸானும் நியூட்ரினோவும்
அலங்காரத்தேரில் பவனி வர‌
"செர்ன்" அணு உலைக்குள்
நானும் கரைந்து போனேன்.
சூரியன் பிழம்பையே பிளந்து பார்க்க
"நாசா" ஏவு கணை வெடித்துக்கிளம்புகிறது.
எங்கும் புகைமூட்டம்.
112 அடி உயர சிவனையும்
அங்கு காணோம்.
.........
..........
"என்ன எல்லாம் கருத்தில் நுழைந்ததா?"
"எல்லாம் நுழைந்தது
வால் மட்டும் நுழையவில்லை!"

=======================================================

திங்கள், 27 மார்ச், 2017

உறங்குவது போலும்...

உறங்குவது போலும்  சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
==============================================ருத்ரா


அந்த ஜன்னலின் திரைச்சீலைகள்
படபடக்கின்றன.
அதில் பின்னல் கொடிகள் பூக்களுடன்
எப்படி நெளியல்களில்
அலைகளாக தெரிந்த போதும்
எங்கோ குமிழியிட்ட‌
காற்றின் நுரையீரல் படமே அது.
திரைச்சீலைகள்
விலக்கின..மறைத்தன..
தூரத்து "பால்வெளி" மீன்குஞ்சுகள்
சிமிட்டி சிமிட்டி
ஜன்னலின் செவ்வக வடிவின்
ஆகாசத்துண்டு வழியாய்
ஆயிரத்தொரு அராபிய இரவுகளை
பிழிந்து பிழிந்து கதை சொல்கின்றன.
இரவின் பெரிய இமை போர்த்துக்கொண்டபோது
விடியலின் விழிக்கோளம்
தத்தளித்து தளும்புகிறது.
படுக்கையில் புதைகின்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக‌
மண்ணை அள்ளிப்போட்டு மூடுவது யார்?
"தூங்குவது போலும் சாக்காடு..."

================================================

சனி, 25 மார்ச், 2017

உலக கவிதைகள் தினம்

உலக கவிதைகள் தினம்
==============================================ருத்ரா இ பரமசிவன்.


உலக கவிதைகள் தினம் ஆயிற்றே!
என்ன எழுதலாம்?
பேப்லோ நெருதாக்கள் எழுதாதா?
ஒரு புரட்சியின் பூவுக்குள்
தன் உயிர் மகரந்தங்களை பெய்து
தன் சொல்லுக்குள் எரிமலையாய்
அவன் தரிக்காத கவிதைக்கர்ப்பமா?
ரவீந்திரநாத தாகூர்
அந்த சொற்கூட்டுக்குள்
அடைக்காத சொர்க்கங்களா?
டி.எஸ் எலியட் உருவாக்கிய
சோளக்காட்டுப்பொம்மை மனிதனுக்குள்
திணிக்காத நெருப்புக்கடலா?
ஏன்
நம் வைரமுத்துக்களின்
தமிழுக்குள் இல்லாத கிம்பர்லிகளா?
நேற்று தான் இறந்தான் என்று சொல்கிறார்கள்!
இன்றும்
புதிது புதிதாய்
கவிதையின் கன்னிக்குடம் உடைத்து
சொல் மடை திறந்து கொண்டிருக்கிறானே
அந்த நா.முத்துக்குமார்கள்
இசையில் தராத இன்பப்பிரசவ வலிகளா?
கண்ணதாசனின்
ஒரு பேனா சொட்டுக்குள்
அலையடிக்காத செந்தமிழ்க்கடல்களா?
வாலி எனும்
வார்த்தைகளின் வானவில்
எய்யாத வர்ண அம்புகளா?

இன்னும் பட்டியல் நீட்டினால்
நாலு பிரபஞ்சத்தை வலம் வரலாம்.
மனிதனின்
அறிவு வியர்த்த போது
விஞ்ஞானம் எல்லாவற்றையும் ஆண்டது.

மூளைக்கபாலத்துள்ளும்
மூண்டெரியும் மார்க்சிஸ சிந்தனை அணுக்கள்
சமுதாயக்காவியம் படைத்துத் தந்தது!

"அக்னிமீளேம் புரோகிதம்"என்று
முதல் கவிதை வரியைத் தந்தானே
அந்த ரிஷி!
அவனுக்குத்தெரியுமா
இவர்கள் அதைக் கழுவி ஊற்றுகிறேன் என்று
சாக்கடையால் அபிஷேகம் செய்வார்கள் என்று?

கல் தோன்றா மண் தோன்றாக்
காலத்திற்கும் முன்பே
"ஃபாஸ்ஸில்" ஏடுகளில்
இருந்த நம் தொன்மை வரிகள்
காட்டும் வெளிச்சங்களில்
இல்லாத ஒளி மண்டலங்களா?


இன்னும் நான் என்ன‌
சோப்புக்குமிழிகளை ஊதிக்கொண்டிருப்பது?

போதும்!போதும்!
அந்த வெற்றுக்காகிதத்தை
நாலாய் மடித்து வைத்துவிட்டேன்.

====================================================

ரஜனிக்கு நன்றி!

ரஜனிக்கு நன்றி!
====================================ருத்ரா இ பரமசிவன்.

தமிழர்களின்
உரிமைக்குரல்களின்
உஷ்ணத்தை புரிந்து கொண்ட
நயத்தக்க நல்லவர் ரஜனி.
உயிரைக்காக்கும்
98.4 டிகிரி உஷ்ணத்தைக்கூட
சூடு சொரணையாக
இந்த தமிழ்ப்பாமரர்கள்
பெற்றுவிடாமால் அவர்கள்
நடை அல்லது கிடைப்பிணங்களாய்
இருந்தால் போதும்
என்று
என்னென்னவோ சாணக்கியங்கள்
அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.
அன்றைக்கு இந்த குரங்குத்தமிழன்கள்
"சேது பந்தனம்" கட்டியதாய்
பூரித்தவர்கள்
இன்று லட்சம் தமிழன்களின்
பிணங்களை அடுக்கி
சிங்களத்தவனோடு நட்புப்பாலம்
போடுவதன் உட்குறிப்பு என்ன?
அவன் "புத்த மதம் தழுவியிருந்தாலும் "
பரவாயில்லை
அவன் மொழிக்குள் இந்தியின்
மூலம் முளைக்கட்டியிருக்கிறதே
அது போதுமே
அவனுக்கு திருப்பதி லட்டுகளுடன்
பூரண கும்பம் ம ரியாதை கொடுக்க.
"இறையாண்மை" அது இது
என்ற அரிதாரத்துக்குள்
தமிழ் மொழியின் உயிர் வீச்சை
அதன் உள்  மூச்சை
அவித்து விடுவது ஒன்றே அவர்கள் குறி.
சிந்து தமிழின் மூலச்சித்திரமே
இந்த பரத கண்டம் என்ற
வரலாற்று நெருப்பை மூடி மறைப்பதே
இவர்களின் யாக குண்ட மந்திரங்கள்.

எங்கள் அன்பான தலைவரே !
ரஜனிகாந்த் அவர்களே !
நீங்கள் "சூப்பர் ஸ்டார்"என்பதன்
இலக்கணக்குறிப்பு
எங்கள் தமிழில் இன்று தான்
சுடர் விட்டு ஒளிர்கின்றது.
உங்களை கோழை என்று
சொல்கின்ற சூரபத்ம அசுரர்கள்
"சுப்பிரமணியன் சுவாமி"வேடத்தில்
இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் என்றால் சிவன்.
தமிழ் என்றால் முருகன்.
இவருக்கு மட்டும்
சிவனும் முருகனும் "பொர்க்கி"கள்!
எங்கள் இதய நரம்புகளின் முடிச்சுகளில்
அதன் கண்ணிகளில்
ஈழத்தமிழன் கண்ணீரே கடல்களாய்
கொதித்துக்கிடப்பதை
உணர்ந்த உங்கள் உள்ளத்துக்கு
எங்கள் கோடி கோடி நன்றிகள்.
இலங்கைக்காரன் விளம்பரவிளையாட்டில்
அந்த "அட்டை வீடுகளில் "
செட்டிங் போட்டு ஷூட்டிங்க் நடத்தும்
சூழ்ச்சி வலைகளை புரிந்து கொண்டதற்கு
நன்றி நன்றி நன்றி !
"கல் பொருதிரங்கும் மல்லல் பேர் யாறு"
எங்கள் தமிழின் ஆறு.
உணர்ச்சிப்பெருக்கு எனும் அந்த
"ஆறு படையப்பா" அல்லவா நீங்கள்!
ரஜனிக்கு நன்றி!
மீண்டும் சொல்கிறோம்
அன்பான எங்கள்
ரஜனிக்கு நன்றி!

====================================================







வெள்ளி, 24 மார்ச், 2017

எழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்

எழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்
===========================================================ருத்ரா

"எனக்குப் பிடிக்காதது என்றால் 'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்' ஆகியவற்றைச் சொல்லலாம். என்னவோ அவற்றை எழுதி விட்டேன்."


"http://rengasubramani.blogspot.in/2012/10/blog-post_15.html



இது ஒரு நேர்காணலில்
அசோகமித்ரன் அவர்கள் சொன்னது.
இது இந்து மதத்தின்
அடி மனத்து தத்துவம்.
குழந்தைகள் பூக்கள்.
குழந்தைகள் தெய்வங்கள்.
அதெல்லாம் சரி தான்.
ஆனால் அந்த குழந்தைகளை
அங்கங்கே வீசிவிட்டு
என்னுடன் வா
என்று
முனிபுங்கவர்கள்
தங்கள் பத்தினிகளை
இழுத்துக்கொண்டு போனதை
சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.
குழந்தைகள் எனும்
தம் படைப்புகள்
வெறும் ரத்த சதையாலான‌
மாம்சங்கள்.
பிரம்மம் எனும்
எல்லாம் இறந்த (கடந்த) நிலைக்குப்போக‌
இடைஞ்சல்களாக இருப்பவை இவை.
இவற்றை விட உயர்ந்த
அந்த மாம்சம் (மீ மாம்சம்)
அடைவதே முக்தி
என்று முனிவர்கள் அலைந்து திரிந்தார்கள்.
இந்த இந்து அடிப்படைவாதமே
எல்லாவற்றையும்
மறுக்கும் வெறுக்கும் காரணிகள்
ஆகிபோகின்றன.

அசோகமித்திரனுக்கு
அவருடைய
"கரைந்த நிழல்கள்"
ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு
விரிவான "நேர்காணல்கள்"பற்றிய‌
விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும்
ஜெமினி ஸ்டுடியோவில்
அமரர் வாசன் அவர்கள் குறிப்பிட்டது போல்
எழுத்தாளனுக்கு தனிப்பகிர்வாக‌
இலக்கியம் படைக்கும் வேலைஇல்லை.
அவர் திரைப்படங்களுக்கு
"கதை இலாகாக்களே"
முக்கிய ஆணிவேர்.
அப்படி அந்த ஸ்டுடியோவில்
அந்நியப்பட்டுப்போன‌ உணர்வை
"கரைந்த நிழல்களில்"அவர் காட்டியிருக்கலாம்.
ஆயினும்
மிக மிக இலக்கியத்தரம் வாய்ந்த‌
நாவல் எதுவென்றால்
கரைந்த நிழல்கள் மட்டுமே.
ஒரு நாவலை
அப்படியே வரிக்கு வரி காட்டும்
திரைஇலக்கியத்தை
காட்டிய படைப்பாளிகள்
சத்யஜித்ரே..அடூர் கோபாலகிருஷ்ணன்
போன்றவர்கள் மட்டுமே ஆகும்.
எனவே அவரது
கரைந்த நிழல்களில்
எழுத்தின் உயிர்ப்பு
சினிமாக்கதைகளில் வசூல்களால்
கரைந்தே போய்விடுகின்றன‌
என்பதை உட்கருத்தாய் அல்லது ஏக்கமாய்
சொல்லியிருக்கலாம்.
நிழல் என்பதே "ஒன்றின் நிழல்" தான்.
ஆனால்
நிழலின் நிழல் என்றால்
அதன் நாளத்துடிப்புகள்
அதன் பசித்தீயின் நாக்குகள்
அதன் அவமான அவலங்கள்
எல்லாம்
எப்படியிருக்கும் என்பதே
அவரது அந்த உயிரோட்டமான நாவல்.
திரைக்குப்பின்னே
திரைக்குப்பின்னேயும் இருக்கிற‌
திரைக்குப்பின்னே
மீண்டும் மீண்டும்
இப்படி பலத்திரைகள்
உரிக்கப்பட்டதற்கு பின்னே
உள்ள‌
அந்த ரத்தம் வடியும் காயங்களின்
நிர்வாணமே அந்த நாவல்.
நிழல் தரும் ஆலமரம் அந்த தயாரிப்பாளர்.
அவர் தலைமறைவாகி விடுகிறார்.
நிழல்களின் காலை வெட்டிவிடுவதைப்போன்ற‌
அவற்றின் முகங்களையே அகற்றிவிடுகின்ற‌
ஒரு சூன்யத்தின் அவஸ்தைகளை
எழுத்துகளுக்குள் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்.
அறுபதுகளின் உயர்ந்த எழுத்தாளர்.
எழுத்துக்களை ரத்த சதையாக்கியவர் அசோகமித்திரன்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு உயிர்த்து
தளும்பும் எழுத்துகளின்
அணைக்கட்டுகள் அவர் படைப்புகள்.
அந்த அசோகன் கல்வெட்டுகளில் இருக்கிறார்.
இந்த அசோகன் சொல்வெட்டுகளில்
தன்னைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார்.

=========================================================


தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன்
====================================ருத்ரா இ.பரமசிவன்

எழுத்துக்களில்
தன் பேனாவை அளைந்து அளைந்து
இனிப்பு பிரபஞ்சத்தை
பிசைந்து காட்டியவர்.
தன் உள்முகங்களை
அவற்றின் துல்லிய நரம்போட்டங்களை
பாத்திரங்கள் ஆக்கியவர் .
நான் படித்து அவர் எழுத்துகளில்
கரைந்து போனேன்.
மீண்டும் உருண்டு திரண்டு
வரும்போது
கும்பகோணக்காவிரி மூச்சுகளாய்
இசையின் மேளகர்த்தா ஜன்ய ராகங்களாய்
அந்த காகித உடல்களில்
உயிரெழுத்து மெய்யெழுத்துப் புணர்ச்சியாய்
புல்லரித்துக்கிடப்பேன்.

"அம்மா வந்தாள்"

அந்த நாவல் ஒரு தீ.
அவர் அதில் வேதத்தை எரித்த தீயாய்
அல்லது
வேதத்தில் எரிந்த தீயாய்
"காமத்துப்பாலை"
ஆகுதி செய்திருக்கிறார்.

"அலங்காரம்" "அப்பு" "தண்டபாணி"
இந்த மூன்று பாத்திரங்களில்
வழிய வழிய நிறைத்திருக்கிறார்
நம் தினவுகளை
அதன் உணவுகளை
நம் நிமிண்டல்களை
அதன் சீண்டல்களை...
வேதவித்து என்று
கும்பிட்டு கன்னத்தில் போட்டு
ஒரு புனிதம் பூசினாலும்
அது
சமுதாயங்களின்
இந்த புண்களுக்கு புனுகு
தடவுவது போல் தான்
என்று குமைந்து போகிறார்.

பெண் என்பவள் எப்போதும் பெண் தான்.
பொஸ்ஸெஸிவிஸம் அது இது என்று
ஆண் தன் "காமத்துப்பாலை" மட்டும்
காய்ச்சி காஃபி போட்டு குடித்துக்கொள்வதில்..
அந்த "ஃபில்டர் காஃபியில்"..
வடிகட்டிய போலித்தனம் மட்டுமே
ஒரு வெறியின் சுவையாய் இருக்கிறது.
அவள் தன் தவறுகளை
வேதத்தில் பஸ்பம் செய்து
தன் ஆத்மாவை
ஆவியாக்கிக்கொள்ளத் துடிக்கிறாள்.

அப்பு என்ற மகனுக்கு
அந்த வேதமே அர்த்தம் அற்ற குப்பையாய்
போய்விடுகிறது.
குப்பை எப்படி குப்பையை எரிக்கும்?
தண்டபாணி என்ற அந்த கணவரோ
உபனிஷதங்கள் உருவகிக்கும்
அந்த "இரண்டு பட்சிகளாய்"இருக்கிறார்.
ஒன்று
உலகம் என்ற வாழ்க்கைப்பழத்தை புசிக்கும்.
மற்றொன்று
அந்த பழத்தைப் பார்த்துக்கொன்டே
பேசாமல் இருக்கும்.
இரட்டைக்கழுத்துடைய பட்சியா அவர்?
அல்லது
ஒற்றையா இரட்டையா எனும்
தத்துவ விளையாட்டில்
முற்றி முகிழ்த்த அத்வைத பட்சியா?
தவறுகளும்
ருசி மிகுந்த வாழ்க்கையின்
உள்முகம் எனும்
திருமுகத்தை தரிசித்து நிற்பவர்.

பிரம்மமாவது ஒன்றாவது?
வாழ்க்கையின் உள்ளே நின்று
"வெளியை" உணர்வதும்
வெளியே நின்று
"உள்ளே" கசிவதும் ஆன‌
அற்புத பாத்திரம் தண்டபாணி.

இந்த நாவல்
எழுத்தின்
ஏதோ ஒரு நாபிக்கமலத்தின்
அபூர்வ மகரந்தங்களை
இந்த பிரபஞ்சம் எங்கும்
தூவுகிறது.

===================================================================



உருண்டு விழுந்தது..


உருண்டு விழுந்தது..
=================================================ருத்ரா

எனக்கு உயிர் இருக்கிறது.
ஆனால் வாய் இல்லை
வயிறு இல்லை.
அதனால் அதற்கு
நாளும் நான்
வாள் தீட்டத்தேவையில்லை.
எனக்குள் மூச்சுகள் இருக்கின்றன.
உங்கள்
மணிபூரகமும் ரேசகமும்
கும்பகமும்
மற்றும் பதஞ்சலிகளும்
இந்த பெருங்காய டப்பாவுக்குள்
அமுத அடைசல் தான்.
நான் மூச்சுகளின் கிட்டங்கி.
மூச்சுகள் உண்டு
பேச்சுகள்?
நாகப்பாம்புகளின்
மூச்சுகள் மட்டுமே உண்டு.
அது நெடிய நீண்ட ஏக்கம்!
கிலோக்கணக்கில்
அடைத்து வைத்த வெடிபொருளாய்
சொற்கள் உண்டு.
அந்த எழுத்துக்குள் கூட‌
ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்ன
கருந்துளையின்
கருவிழி உண்டு.
பிரஞ்சங்களை நான் பிரசவிக்க முடியும்.
இருப்பினும்
அந்த உதடுகள் இல்லை.
முத்தமிட முடியவில்லை.
எல்லோரும் அந்த தேனில்
திளைந்து கிடக்கிறார்களே!
அதன் ஒரு சொட்டையாவது
நான் நக்கிப்பார்க்க முடியுமா?
ஆம்.
காதல் எனும்
மூச்சுகளின் பிரளயம் அது.
என் குழாயை உருவிக்கொண்டு
அந்த மின்னலின் தொப்பூள் கொடியை
கொஞ்சம்
சொருகி விடுங்களேன்..
ம்ம்ம்...சீக்கிரம்
நான் முடியப்போகிறேன்...
.............
.......
சடாரென்று
ஒரு நர்ஸின் கவனக்குறைவால்
உருண்டு விழுந்தது
அந்த‌
ஆக்சிஜன் சிலிண்டர்.
================================================
23 ஆகஸ்டு 2015 ல் எழுதியது.

வியாழன், 23 மார்ச், 2017

இவர்கள் மறுபடியும் ...


இவர்கள் மறுபடியும் ...
====================================================ருத்ரா

இவர்கள் மறுபடியும் 
க்யூ வரிசையில் நிற்கப்போகிறார்கள்.
தேதி குறித்தாகி விட்டது.
செங்கோல் ஏந்தி ஆள்வதன் அடையாளமாய்
மின்னணுப்பொறியில்
பட்டனைத் தட்ட
இந்தப்பாடு படுகிறார்கள்.
இவர்கள் ஏந்தியதாய் நினைக்கும்
அந்த செங்கோல்
ஒப்பந்தக்காரர்களின் டெண்டர்களிலும்
அவர்களின் பணக்குவியல்களிலும்
தோலைந்தே போனது.
மறுபடியும் மறுபடியும்
இவர்கள் க்யூவில் நின்று
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் எங்கும்
இந்த ஈனத்தனம் இல்லை
தமிழ்நாட்டைத்தவிர.
கற்றை நோட்டுகளை கைகளில் திணித்து
ஜனநாயகத்தை கசாப்பு செய்துகொள்கிறார்கள்.
வெட்ட வெட்ட
சொட்டும் ரத்தங்களோடு
தலைகள் இழந்து  முகங்கள் தொலைந்து
இன்னமும் க்யூவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கியூவில் நின்றுகொண்டிருப்பவர்களே!
இந்த சில நிமிடங்களை
உங்கள் அறிவார்ந்த சிந்தனையில்
அசை போட்டு பாருங்கள்.
திராவிடம் என்பது நம் ஒளி பொருந்திய பாதை.
அதை ஊழல் சகதியால்
சதுப்பு நிலக்காடாய் ஆக்கியவர்களை
நாம் தண்டித்தே ஆகவேண்டும்.
அதே சமயத்தில்
"கைபர்" கணவாய் வழியே வந்த
அந்த சாக்கடை வெள்ளத்தின்
மிச்ச சொச்ச சாதி மத
முடை   நாற்றங்களையும்
அழித்தே ஆக வேண்டும்..

தமிழும் தமிழ் மக்களும்
மூடத்தனத்தின் மதத்தில்
ஊறிப்போய்
ஒரு மதவெறி அரக்கன் தன்  பின்னே
முதுகு சுரண்டி ரத்தம் குடிக்க
மந்திர உச்சாடனங்களில்
பக்தி எனும் "சோம பானம்"நிரப்பிய
கிண்ணங்களோடு வருவது தெரியாமல்
தள்ளாடி நடக்கும் மயக்கங்கள்
தெளிய வேண்டும்.
ஊழல் ஒழிய வேண்டுமானால்
அது எங்களால் தான் முடியும்
என்ற பொய்ப்போதையை நுரைக்கவைத்து
தமிழ் நாட்டை விழுங்க வந்திருக்கும்
அந்த பூதத்தின்
அணி வேரே "ஊழல் சிந்தனைகள்" தான்.

காதல் எரிக்கப்பட வேண்டும்.
அதிலும் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதியை
காதலிக்கும்
இதயங்களை கசக்கிப்பிழிந்து
காளிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.
நான்கு வர்ணத்தையும் கூட
டிஜிட்டல் யுகத்தின் வர்ணம்பூசிய
கொலை ஆயுதமாக்கி
மானிட மாண்பு எனும் மதமற்ற
இந்த யுகம் மீது வீசவேண்டும்
என்று ஒரு கூட்டம்
வெறி வளர்த்து வருகின்றது.
இந்த கூவத்தை மடியில் கட்டிக்கொண்டு
கங்கா ஜலம் தெளிக்க புறப்பட்ட
அந்த கூட்டம் சிதறடிக்கப்படவேண்டும்.
"கங்கை" என்றால் அதில்
பிணங்களும் மிதக்கும்
முதலைகளும் கிடக்கும்.
புனிதம் சொல்லி தமிழைப்
புதைக்கப்பார்க்கும்
"மனு ஸ்மிருதி"யின் மயான காண்டத்துள்
மடிந்து போகாதீர்கள்.
இடைத்தேர்தல் தானே என்று
அந்த சாதி மத கோரைப்பற்களின்
இடைவெளிக்குள் மாட்டிக்கொண்டு  விடாதீர்கள்.
ஊழலை  தூண்டில் புழுவாக்கி
நம் ரத்தக்குளத்தில் மீன் பிடிக்க நினைக்கும்
கண்ணுக்குத் தெரியாத அந்த
ஊழல் அரக்கன்
கார்ப்பொரேட் பொருளாதார "வேதம்"சொல்லி
புறப்பட்ட சூழ்ச்சியை
பொடிபொடியாக்குங்கள்.
மூன்று சதவீதமே இருக்கும்
மேட்டுக்குடியினர்
மொத்த வளர்ச்சியையும் விழுங்கப்பார்க்கும்
ஒரு பகாசுரயுத்தியே
அவர்களின் "வளர்சசி" மந்திரம்!
வாக்குகளை ஏந்திக்கொண்டு வரும்
வெறும் வளையல் பூச்சிகள்  அல்ல  நீங்கள்!
கோடிக்கால் பூச்சிகளாய்  ஊர்ந்து வரும்
உங்கள் கியூவில்
சமுதாய மாற்றத்தின் புயல்சுவடுகளும்
பொதிந்து கிடப்பதை
எப்போது நீங்கள் காட்டப்போகிறீர்கள் ?

அறிவாயுதம் ஒன்றே உங்கள் கையில்.
அதை பாமரத்தனத்தின் "அர்ச்சனைக்காடுகளில்"
மழுங்கடித்துக்கொள்ளாதீர்கள்.
உங்கள் கூரிய அறிவியல் ஆயுதம்
இந்த இருட்டு சித்தாந்தங்களையும்
வேதாந்தங்களையும் ஒழித்து
ஒளி படைக்கவேண்டும்.
நம் தமிழின் வழி படைக்க வேண்டும்.

================================================






செவ்வாய், 21 மார்ச், 2017

பரிணாமம் (3)

Inline image 1

பரிணாமம் (3)
==================================================ருத்ரா இ பரமசிவன் 

கழுத்தா சுளுக்கிக்கொண்டது?
இல்லை ஊடலா?
எங்கே ஓடுகிறாய்.
அழகே வா! அருகே வா!
கால ஒட்டத்திற்குள்
ஊடலின்  வர்ணம் என்ன? நிழல் என்ன?
வாழ்க்கையின் நெருடல்களில்
வர்ணங்களே மரணங்கள்.
அழகான 
மீன் கொத்திப்பறவைச்சிறகுகளின்
வர்ணங்களில்
மீனின் மரண எழுத்துக்கள்
பொறிக்கப்பட்டிருக்கின்றன.
வாத்துகளின் சிறகுகளில்
பிரபஞ்ச காற்றின் மகரந்தங்கள்
ஒட்டி ஒட்டி உதிர்கின்றன.
"ஹம்ஸோபனிஷதம்" தொடர்கிறது.
நீரலைகளில் வட்டங்கள்..சுருள்கள்...
ஒரு வாய்க்குள் இன்னொரு வாய்..
அதனுள்ளும் இன்னும் சிறிதாய் வாய்கள்.
வாய்களின் பரிணாமத்தில்
வயிறுகளின் பரிணாமம்.
சொல்கள் வரும் வாய்களில் வயிறுகளும்...
வயிறுகள் நிறைந்தபின் வரும்
"சுகினோ பவந்து"களும்...
உயிர்களுக்குள் உயிர்களாய்
சுருட்டி சுருட்டி வைக்கப்பட்ட‌
உயிர்களில்
எது பிரம்மம்?
எது அபிரம்மம்?
நிர்பிரம்மமே பிரம்மமாய்
எங்கும் பிம்பம் காட்டுகிறது.
கண்ணாடியின்
முன்னும் பின்னும்
உருவமே இல்லை.
எப்படி இந்த பிம்பம்?
எதற்கு இந்த கும்பாபிஷேகம்?
பகவத் கீதை விஸ்வரூப தரிசனம்
பெரிய பல்லாய்
பெரிய வாயாய்
நீளும் அகன்ற நாக்கில்
எல்லாவற்றையும் சுருட்டுவனவாய்
மரணத்தின் பிம்பம் இது.

லேலிஹ்யஸே க்ரஸமான ஹ ஸமந்தாத்

உதடுகளால் நாக்கினால் சவைத்து சப்புக்கொட்டி
எல்லாதிசைகளையும் கடித்துக் குதறி விழுங்கி

லோகான்ஸமக்ரான்வதனைர்ஜ்வலத்பி

உலக உயிர்களையெல்லாம் ஒன்றாக‌
நெருப்பு வழியும் வாய்க்குள் போட்டு

தேஜோபிராபூர்ய  ஜகத்ஸமக்ரம்

நெருப்பால் நிரப்பி எல்லாஉலகங்களையும்

பாஸஸ்தவோக்ராஹ ப்ரதபந்தி விஷ்ணோ

வெப்பக்கதிர்களினால் உக்கிரத்தோடு சுட்டெரிக்கும்
விஷ்ணுவே! நீ அழிவா? அழகா? (10.30)

இவர்கள்
ஆயிரம் நாமங்களில்
உன் அடியில் விழுந்துகிடக்கும் ரகசியம்
இப்போது அல்லவா தெரிகிறது.

பிரபஞ்சமே நடத்தும் படுகொலைகளுக்கு
அர்ஜுனனே...அலிபி.

மதுரை சித்திரைப்பொருட்காட்சியில்
இப்படித்தான்
நெளிந்து நெளிந்து கிடத்தியிருந்தார்கள்
கண்ணாடியை.
எரியும் சுடர் இப்படித்தான்
பார்ப்போர்களை
விழுங்கி விழுங்கி பயமுறுத்தியது.

இருப்பினும்
வியாஸனின் அற்புதப்படப்பிடிப்பு இது.
வாத்துகள்
அலகுகளில் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டன.

============================================================

ஆகஸ்டு 10   2014 ல் எழுதியது.


2014-06-28_10-26-05_527.jpg

திங்கள், 20 மார்ச், 2017

ஆர். கே.  நகர் குறும்பாக்கள்

ஆர். கே.  நகர் குறும்பாக்கள்
===================================================ருத்ரா


குங்குமக்கலரில்..

.

காந்திப்புன்னகை நிறம் மாறியது.

குங்குமக்கலரில் கட்டு கட்டாய்

பாலாறு தேனாறு. ஆர்.கே நகரில்.


--------------------------------------------------------

எடப்பாடி


எடறி விழுமா தங்க நாற்காலி?

களை கட்டுது

"சீட்"டாட்டம்.

----------------------------------------------------------------

மதுசூதனன்.


கூனி வளைந்து கும்பிட்டு

அழைத்தது தானே

ஞாபகத்துக்கு வருகிறது.


--------------------------------------------------------------------


பன்னீர்.



அது "ஞானோதயமும் அல்ல."

அங்கு அது

போதி  மரமும் அல்ல,


------------------------------------------------------------------------


மருது கணேஷ்



"மீனவ நண்பர்" தான்.....அனால்

இவர் வலைக்குள் விழுமா

சூரிய விடியல் ?


---------------------------------------------------------------------------


வைகோ


இங்கல்ல தேவை இனி தேர்தல்.!

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி

எங்கோ அது நடக்கட்டும்!


-------------------------------------------------------------------------------

புயல்


ஜனநாயகமே ஜாக்கிரதை!

கடல் வழியே புயல் மட்டும் அல்ல

கண்டெய்னர்களும் வரலாம்.


--------------------------------------------------------------------------------

122

இது நம்பர் அல்ல.

ஜனநாயகத்தை சிலுவையில் அறைந்ததன்

குறியீடு.


-----------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய லோகநாதன் அவர்கள்.


மதவெறியின்  இருண்டகண்டத்துக்கு எதிராய்

மார்க்சிசத்தின்

ஒரு மத்தாப்புக்குச்சி.


--------------------------------------------------------------------------------


கூவத்தூர் "சர்வீஸ் சென்டர்"


தேர்தல் கணிப்பொறிகள்

சார்ஜ் செய்யப்பட

இங்கே அடைகாக்கப்படலாம்.


--------------------------------------------------------------------------------


கங்கை அமரன்.


செந்தில் வாங்கிய அந்த

"இன்னொரு வாழைப்பழத்தை " தேடிப்புறப்பட்ட

அரசியல் "ஜோக்கின்" "கலகாட்டக்காரன்"


-----------------------------------------------------------------------------------


"அம்மா" நலத்திட்டங்கள்


பொழுது விடிந்து பொழுது அடைந்தால்

உச்சநீதி மன்ற தீர்ப்பின்

அவமதிப்புகள் தான்.


---------------------------------------------------------------------------------------


வெள்ளி, 17 மார்ச், 2017

தேர்தல் குறும்பாக்கள்

தேர்தல் குறும்பாக்கள்
======================================ருத்ரா

உ.பி

ஜனநாயகத்தின்
மகத்தான தோல்வியின்
பிரம்மாண்ட வெற்றி.

_______________________________________________

மோடி

இனி ஆயிரம் அடியில்
சிலை
ஒரு கார்ப்பொரேட் "ராமனுக்கு"

_______________________________________________‍‍‍‍‍‍‍‍‍

கோவா

பதவி எந்திரம் கீ கொடுத்தால்
சுண்டைக்காயும்
பூசணிக்காயை விழுங்கி விடும்.

________________________________________________

பஞ்சாப்

சிங்கங்களா
வந்து
ஓட்டுக்கள் போட்டன?

________________________________________________

மாயாவதி

யார்கண்டது
கணிப் பொறியில்   புகுந்திருக்கலாம்
"வேதிக் மேத்தமேடிக்ஸ்?"

_________________________________________________





வியாழன், 16 மார்ச், 2017

மாநகரம்

மாநகரம்
=============================================ருத்ரா

வருகின்ற புத்தம்புதுசுகள்
என்னமோ
சமுதாயத்த்தின் "வண்டிமைக்கருப்பாய்"
இருக்கிற
மாநகரத்தின் "முகத்தை" மட்டுமே
மெருகுதீட்டி
பட்டையைக்கிளப்பி படம் எடுத்து விடுகிறார்கள்.
கனத்த இருளுக்குப் பின்னே தானே
விடியல் விளக்கெண்ணெய் எல்லாம்
என்று
ஒரு அச்சமூட்டும் வலது சாரி தனத்தை
பஞ்சுமிட்டாய் ஆக்கி
ஒரு இடது சாரி முத்திரையை
பச்சையாக பச்சை குத்தி கொள்கிறார்கள்.
இந்த "ஜிகர்தண்டாவுக்கு"
எத்தனை "வெர்ஷன்கள்" தான் போடுவார்களாம்?
தப்பை தட்டிக்கேட்பவன் தானே மனிதன்.?
என்று ஒரு அக்கினி ஜரிகையை
பின்னி வைத்துவிட்டு
பத்திரிகைக்கார பாசக்கார நண்பர்களுக்கும்
சிக்னல் கொடுத்துவிட்டு
நாப்பது அம்பது மார்க்குகளை
அள்ளிக்கொள்கிறார்கள்.
என்ன ? ஏன் இந்த எரிச்சல் என்கிறீர்களா?
பத்திரிகைகளும் இதில்
கொஞ்சம் "பெப்"ஏற்றிக்கொள்கின்றன.
சுதந்திரம் போலியாய் கிடைத்தது என்று
தொண்டை வரள கத்தும் இயக்கங்கள்
எழுபது வருடங்களுக்குப்பின்னும்
ஓட்டுக்குப்பைகளில்
அழுகிக்கிடப்பதைப்பற்றி
எந்த சொரணையும் சூடும் இல்லாத
இந்த எழுத்துப்புழுக்கள்
என்ன தான் க்ளாஸ்ஸி பேப்பரில்
அச்சிட்டு "அனல்" வீசினாலும்
அந்த "மாக்கியவல்லி" அரசு சூத்திரத்தின்
"சம்பவாமி யுகே " தந்திரங்கள்
பல்லை இளித்துக்காட்டத்தான் செய்கின்றன.
சமுதாய மலர்ச்சிக்கு கொஞ்சமும்
உதவாத "பழைய பாபு பாய் மிஸ்திரியின்"
புதிய  கணினி யுக
உத்திகள் மட்டுமே இவை.





உயிரலைக்குள் ஓராயிரம் உலகங்கள்.

http://www.msn.com/en-us/news/technology/how-dna-could-one-day-rebuild-cell-phones/vi-BByc2q6?ocid=spartanntp
=========================================
thanks for the above LINK
=========================================

உயிரலைக்குள் ஓராயிரம் உலகங்கள்.
=================================================ருத்ரா இ பரமசிவன்.

உயிரியலில் டி..என்.ஏ மற்றும் ஆர்,என் ஏ பற்றிய அறிவியல் உண்மைகளை
அறிந்து கொண்ட மனிதன் அந்த பிரம்மாவைப்போல் ஆயிரம் பிரம்மாக்களை படைக்கும் வல்லமை பெற்று விட்டான்.க்ளோனிங்க் முறையில் எங்கோ கொஞ்சம் துளியாய் ஒட்டியிருக்கும் டி என் ஏ விலிருந்து ஒரு கம்பளி ஆட்டை "டுயூப்லிகேட்"ஆக்கியவன் கொஞ்சம் கற்பனையைச்சேர்த்து ஆறு தலை பன்னிரண்டு கை அல்லது மனித முண்டத்தோடு யானைத்தலை குதிரைத்தலையும் ஒட்ட வைத்து விடுவான்.அதையெல்லாம் மனித நெறிமுறை களுக்கும் சமுதாய நடைமுறைகளுக்கும் (Humanistic and Social codes of civilized life) உகந்த நாகரிகத்தை காப்பாற்றும் பொருட்டே தானே போட்ட சட்டங்களால் பாதுகாத்துக்கொண்டிருக்கிறான்.ஆனால் வியாபார வெறியின் உள்விசை அந்த அறிவியலை தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறது.

அதன் உந்து விசையாக மனித உயிர்விசைக்குள் இருக்கும் டி என் ஏ _ ஆர் என் ஏ சங்கிலியின் "மறை விசை முறுக்கு சமன்பாட்டை" (ஹிட்டன் கோட்ஸ் ஆஃ ப் ஹெலிகல் டைனாமிக்ஸ்) கண்டுபிடிப்பதில் வெகு அருகில் வந்து விட்டான். இதனால் அவன் "உற்பத்தி மந்திரத்தின்" சூத்திரக்கயிற்றை பிடித்துக்கொண்டு விட்டான்.

இந்த உள் விவரங்களை மேலே உள்ள சுட்டியின் "காணொளியில்"
பாருங்கள்.

========================================================



BLOG RANK ...........107 ON 3rd  FEB  2017

BLOG RANK .........109  ON 20th JAN 2017
BLOG RANK .........109  ON 21st   JAN 2017
BLOG RANK .........109 ON 22nd  JAN 2017
BLOG RANK .........110 ON 23rd  JAN 2017.

BLOG RANK...........107 ON 31st JAN  2017
BLOG RANK...........108 ON 1st   FEB  2017
BLOG RANK ..........108 ON 2nd  FEB  2017
BLOG RANK ..........107 ON 3rd   FEB  2017
BLOG RANK ..........106 ON 4th   FEB  2017
BLOG RANK ..........107 ON 5th   FEB  2017
BLOG RANK ..........115 ON 6th    FEB 2017
BLOG RANK...........107 ON 7th    FEB 2017
BLOG RANK...........113 ON 8th    FEB 2017
BLOG RANK...........106 ON 9th    FEB 2017
BLOG RANK...........106 ON 10th  FEB 2017
BLOG RANK...........105 ON 11th  FEB 2017
BLOG RANK ..........105 ON 12th  FEB 2017
BLOG RANK...........113 ON  13th FEB 2017
BLOG RANK...........105 ON 14th  FEB 2017       (Total 51 pages)
BLOG RANK ..........115 ON  15th FEB 2017.......(Total 41 pages)
BLOG RANK...........105 ON  16th FEB 2017.......(Total 51 pages)
BLOG RANK ..........105 ON  17th FEB 2017........(Total 51 pages)
BLOG RANK...........104 ON  18th FEB 2017.......(Total 51 pages)
BLOG RANK ..........105 ON   19th FEB 2017........(Total 51 pages)
............................................................
.................................................................
BLOG RANK ..........107 ON  24th FEB 2017..........(..50 pages...)
         ''                           ''           25     "                                    ''
         ''                       106           26     "                                   ''
         "                       105           27     "                                   "
         "                       117           28     "                       ( 41 pages )
         "                       116           1st  MAR 2017                   "
         "                       116            2nd     "                              "
         "                       106            3rd     "                      ( 50   "    )


         "                        108            9th   "                         (   49    "   )

        "                         109            13th   "                         (  49    "  )
         "                        109             14th     "                             "      
        "                         110              16th   "                              "

        "                         110               20th  "                               "
        "                         108               28th "                         (  48  "     )
     


       "                           107               2nd  April 2017         (48  "  )
        "                          109              14th April 2017          (47 "  )



     .
     

பதிவின் பெயர் : tamilwritersathyanandhan
3 Month Traffic Rank :106
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 
3 Month Traffic Rank :108
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 
3 Month Traffic Rank :109
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 
3 Month Traffic Rank :112
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 
3 Month Traffic Rank :113
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 
3 Month Traffic Rank :115
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 



3 Month Traffic Rank :112
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog














































































































செவ்வாய், 14 மார்ச், 2017

மணிப்பூர்


மணிப்பூர்

நா முத்துக்குமாரின் "கிம்பர்லி "

ஜீவன் சிவா    1,369
  • Advanced Member
  • ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
  • 1,369
  • 3,530 posts
  • Gender:Male
  • Location:இலங்கை
  • Interests:வாசித்தல்


===================================================
மேலே கண்ட "இணைப்புக்கு" (லிங்க்) மிக்க நன்றி.
====================================================


தூர்
(கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய, நா. முத்துக்குமாருக்கு அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த கவிதை)


"வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்.
 
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே! 
 
'சேறுடா சேறுடா' வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
 
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
 
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள். 
 
கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!"
  
=======================================================
கவிவேந்தன் நா.முத்துக்குமாரின் மேலே கண்ட கவிதை
இனிக்கும் எழுத்தின் காடு.உணர்ச்சிக்கதிர் வீசும் "கிம்பர்லி"
அந்த வைரத்துச் சிதறலே இக்கவிதை.



நா முத்துக்குமாரின் "கிம்பர்லி "
===========================================ருத்ரா இ பரமசிவன்.

அது என்ன
காண்டா மிருகத்துத் தோலா?
அவ்வளவு முட்கள்.
அவ்வளவு முரடு திரடுகள்.
டைனோசர் ஆரண்யத்துள்
அந்த மெல்லிய மான்குட்டியை
வருடுவது என்பது
அவ்வளவு எளிதா என்ன?
பெண்மை எனும்
ரோஜா இதழ்
சட்டென்று ஒரு மின்னல் இனிப்பை
தூவி விட
ஏழு கடல் ஏழு மலை தாவ வேண்டுமா?
"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு "
இதெல்லாம்
ப்ரோகிராம் செய்து
அந்த பூலியன் அல்ஜீப்ராவை
"தீர்வு"செய்ய முடியுமா என்ன?
தொட்டனைத்தூறும் "மனக்கேணி" அது.
மனது முறுகி
மனது திருகி
மனது உருகி
மனதுள்
மனதுகள்
மழை பெய்யவேண்டும்.
மன இதழ்கள் அவிழ...
தூரம்..தூரம் ..இன்னும் இன்னும்
போகத்தான் வேண்டும்
இருளுக்குள்
இருளையே தான்
வெளிச்சம் ஆக்க வேண்டும்.

======================================















தீவு



கவிதை என்றொரு தீவு .................ருத்ரா
===================================


வயிற்றுக்கு சோறு போல்
பாழும் மனத்துக்கு 
சோறு இது.
அதுவே 
எரிந்து
அது சமைத்து
அதுவே வெந்து
அதுவே
வரும்
வாய்முன்னே கவளமாய்.
காக்காய்க்கு போட்டாலும்
ஒரு காக்கா கூட வருவதில்லை.
சுற்றிலும்
அலையடித்துக்கொண்டு
பேய்வெளியில்
கடல் விரிப்பில்
தனித்து உறங்கி
இனித்த கனவின்
நுரைத்த தீவு இது.

"குபுக்"கென்று
ஒரு நாள் அவள் சிரித்தாள்!
என்னை நோக்கி விட்டதா
அந்த "இனிப்புக்குமிழி ?"
இன்னும்
அந்த குமிழி உடையவில்லை.



மூழ்காது.
முடங்காது.
அகர முதல‌ தமிழின்
துளிகள் இருக்கும் வரை
நெஞ்சுக்குழியின்
கிடங்கில்
கங்குகள் கிடக்கும்வரை
சுகமான‌
தீவு இது.

=======================================

ஞாயிறு, 12 மார்ச், 2017

"சாய்வு"நாற்காலி........

"சாய்வு"நாற்காலி........
=======================================ருத்ரா இ பரமசிவன்

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
என்று
நாலாங்கிளாஸில் சத்தம் போட்டு படித்தோம்.

ஒன்றும் புரியவில்லை.

"அன்னையும் தந்தையும் தானே"...
அப்போதும் எம்.கே.டி.பாகவதரின்
கணீர்க்குரலில் வடிந்த தேனை
நக்கியவர்களாக மட்டுமே நாம்.

அப்போதும் அம்மா வெறும் சும்மா.

"அன்னையின் ஆணை" படம் பார்த்த போதும்
நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும்
ரசித்து போற்றினோம்

அன்னை அங்கு வரவில்லை

"தாயில்லாமல் நானில்லை" என்று
வாத்தியார் வாயசைத்து நடித்தபோதும்
நாம் வாயில் ஈ நுழைந்தது தெரியாமல்
படம் பார்த்தோம்.

தாயின் பக்கம் நாம் போகவே இல்லை

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" என்று
அன்று
அவள் நம்மை தன் இதயத்தில்
சாய்த்திருந்தது எல்லாம்
இன்று
இந்த‌ "சாய்வு"நாற்காலியில் ம‌ட்டுமே
நினைவுக்கு வ‌ந்த‌து!

=====================================================
ஏப்ரல் 6  2015 ல்  எழுதியது.

.