வியாழன், 30 ஜூலை, 2020

அஞ்சலி

அஞ்சலி
_____________________________
எழுத்துக்களைத்
தொலைத்துவிட்டோம்.
இனி இந்த பேனாக்களை
முறித்துப்போடுங்கள்
________________________ருத்ரா
கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் பெறுநர் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்/HAIKU SOCIETY OF WORLD TAMIL POET
சாகித்திய அகாதமி விருதாளர், மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அஞ்சலிகள்.

புதன், 29 ஜூலை, 2020

வாசல்

வாசல்
======================================ருத்ரா

அன்பே!
அது என்ன
கொரோனா
பேயா?பிசாசா?
நாம் எல்லாம் எங்கேயாவது
ஒடிப்போய்விடவேண்டுமாமே!
ஒரு நாள் அதைக்கட்டி இழுத்துவந்தேன்.
காதலிக்கக் கற்றுக்கொடுத்தேன்.
அதுவும் கற்றுக்கொண்டது.
கிளம்பியது.
சற்று நில்!
என்ன?
இப்படி உன் தலையில் முள்ளைப்பரப்பி வைத்தால்
காக்காய் கூட வந்து கூடு கட்டாது.
தலையெல்லாம் ரோஜாக்கள் பூக்கவேண்டும்.
ம்ம்ம்
என்று ஓடி விட்டது.
அப்புறம்..
அப்புறம் எங்கள் மாவட்டம்
"பச்சை" ஆகி விட்டது.
ஒரு நாள் தலைமுழுதும் ரோஜாக்கள்
மூடியிருக்க‌
என்னை வந்து பார்த்தது.
அது சரி!
காதலி வரவுக்காக காத்திருக்கும்
தவம் ஒன்று செய்யவேண்டும் என்று சொன்னாய்
எவ்வளவு நேரம்?
ஓ! அதுவா!
நேனோ செகண்டிலிருந்து
கோடி கோடி யுகங்கள் வரை நீளும்.
நீ என்ன சொல்கிறாய்.
சொன்னவன் மறைந்து விட்டான்.
அது சுற்று முற்றும் பார்த்தது.
அந்த இடம்
கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை வாசல்.

================================================


செவ்வாய், 28 ஜூலை, 2020

what do you look at me?

what do you look at me?
===========================ruthraa

what do you look at me?
the eyes
the thirst in the deepest
pain and pleasure
the words i buried
the phrases i painted with
long-wound think and sink
the unfinished portraits
of an ill-baked make.
still
what do you look at me?
do you build a temple of fallacy
or you try an extract from
those empty nooks and corners of thought
a God
which is but a "use and throw" pack.
Think it or reveal it
and throw it once for all..
fly away free
even the sky and tree
are your
true and sincere friends..
to share a lot.
Never be caught under this
boulder of life
like a meek and bleating
cocoon
pregnant with the wings of
whimpering poesy.

_________________________ruthraa









திங்கள், 27 ஜூலை, 2020

கரை

கரை
===================================ருத்ரா.

தட்டுங்கள் திறக்கப்படும்.
தட்டினேன் திறந்தது.
தெரிந்தது
கடவுளா? அறிவா? அன்பா?
இல்லை
மூன்றிலும் கொஞ்சம் கொஞ்சம்
பிய்த்து ஒட்டி
அது
கடவறின்பா?
சரி தான்.
திருப்பி திருப்பி
அதைச்சொல்லிப்பார்க்கிறேன்.

என்ன கதவைத்தட்டித் திறந்தாயே?
எல்லாம்
பார்த்துவிட்டாயா?
ஆமாம் எல்லாம் பார்த்துவிட்டேன்.
நான் ஞானி என‌
அழைக்கப்பட்டேன்.

என்னை
எல்லோரும் வணங்கினார்கள்.
நான் கை கூப்பவில்லை.
என்னிடம்
சங்கீதம் பாடினார்கள்.
வசனங்கள் பொழிந்தார்கள்.
என் காதுகளில்
எதுவும் விழவில்லை.
"கடவறிவன்பு"...
இதன் ஒலி
ஓங்கி ஓங்கி ஒலித்தது.
கடவறிவன்பு...
இது வெறும் உளறல்.
அர்த்தம் இல்லாத ஒலி.
இது கடவுள் இல்லை.
இல்லை இல்லை
இது தான் கடவுள்.
இது.ல் ல்லை
இல்லை.
இல்லை இது.
இது இல்லை.
இது..ல்ல்ல்..ல்ல்லைலை..
சரிதான்.
இது தான் முற்றிய பைத்தியம்.
இல்லை
இது தான் முற்ற்றிய தெய்வம்...
நான் ஒலிப்பது
புது மந்திரமாய்
அவர்களை வசியம் செய்தது.
கொப்பறை கொப்பறையாய்..
என் மீது மெழுகை ஊற்றினார்க‌ள்.
என் மீது தீபம் ஏற்றினார்கள்
இது எரிகின்றது.
இது உருகுகுன்றது..
எரிந்து எரிந்து......கேள்வி.
உருகி உருகி.........பதில்
மீண்டும்  கேள்வி
மீண்டும் பதில்..
பதில் பதில் அல்ல.
அது மீண்டும் கேள்வி..
எது கடல்?
எது கரை?
கடவுள் இன்னும்
கரை ஏறவில்லை.

=========================================

சித்ரகுப்தனின் கருப்புக்கணக்கு

சித்ரகுப்தனின் கருப்புக்கணக்கு
========================================ருத்ரா


"நாரதா பூலோகத்தில்
என்ன விசேஷம்?"

"நாராயண..நாராயண..
அதை ஏன் கேட்கிறீர்கள்?
நம் சித்ரகுப்தர் மரணக்கணக்கில்
எல்லாம்
கருப்புக்கணக்கு இருக்கிறதாம்.
அவரும் ஏட்டை
புரட்டி புரட்டிப்பார்த்து விட்டார்
ஏன் இப்படி உயிர்கள் 
ஏட்டுக்கணக்கில் வராமல்
தொலைந்து கொண்டிருக்கின்றன‌
என்று முழி பிதுங்குகிறார்."

அப்படியா?
சிவனும் பிரம்மனும் 
என்ன சொல்கிறார்கள்?

"அவர்கள் என்ன சொல்வது?
சிவனுக்கு ரொம்பக்கஷ்டம்.
கோவில்களில் பூட்டுகள்
தொங்குகின்றன.
பிரதோஷ பூஜை கூட‌
நடக்க வழியில்லை.
பக்தர்கள் இல்லாமல்
பட்டர்களே 
தீபம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மனுக்குத்தான் கோயில் இல்லையே."

"அதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை.
வியாசன் தான் பிரம்ம சூத்திரம் என்று
555 சூத்திரங்கள் எழுதியிருக்கிறானே!"

"ஆமாம் பிரபோ!"

விஷ்ணு
திருவிளையாடல் 
சிவன் பாணியில்
"வெட்ட்க்கம்..வெட்ட்க்கம்"
என கர்ஜிக்கிறார்.

"பிரபு! நரர்கள் லட்சக்கணக்கில்
செத்து விழுகிறார்கள்.
சித்ரகுப்தன் ஏட்டில் 
எந்த விவரமும் இல்லை."

"நரகாசுர வதமா? 
அதுக்கு இன்னும் தீபாவளி வரவில்லை.
சிவகாசி வெடிகள் 
உற்பத்தியே தொடங்கவில்லை.
விஷ்ணு சக்கரங்களும் ரெடியாக வில்லை"
விஷ்ணு அங்காலாய்த்துக்கோண்டே போனார்.

மீண்டும் நாரதர் விஷ்ணுவை
உற்றுப்பார்க்கிறார்.
ஏற இறங்க பார்க்கிறார்.

"பிரபோ!
கண்டு பிடித்துவிட்டேன்.
எங்கே உங்கள் 
கையில் உள்ள சக்கரம்?"

"என்ன சொல்கிறீர்?
ஆமாம் காணவில்லை"
விஷ்ணு திடுக்கிடுகிறார்.

"ஆம் பிரபு!
பூலோகத்தில் தான்
அது முள் வடிவில்
சக்கரமாய் சுழலும் 
உயிராய்
கண்ணுக்குப்புலப்படாமல்
"நரகா"க்களையெல்லாம்
பலி வாங்கிக்கொண்டிருக்கிறது.
அதை "கொரோனான்னு"
எல்லோரும் விழுந்து
கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்"

"என்ன அக்கிரமம் இது?
நாரதா இதை உடனே தடுத்தாக வேண்டும்"

"பிரபோ..
பூலோகத்தில் இதற்கு
ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள்
தடுப்பூசி வைத்து..."

விஷ்ணு குறுக்கிடுகிறார்.
என்ன சொன்னீர்?
சந்தனம் குங்குமம் போல்
எதையோ பூசி வைத்து
பூஜை செய்கிறார்களா?

இல்லை பிரபோ.
அது ஏதோ ஊசியாம்..
................
....................
"ஊசியா? அய்யோ! வேண்டாம் வேண்டாம்.."
................
...............
"என்னடா ? என்ன ஆச்சு? என்ன கனவு கண்டே?"

மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்த
பேரனிடம் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தாள்.

"ஆமாம் பாட்டி.அந்தக்காலத்துலெ
அம்மைக்கு ஊசி போட வரான்னு
பயந்து நீ ஒடி ஒளிஞ்சுகிட்ட 
கதை சொன்னியா..
அதான்..
பெருமாளுக்கே ஊசி போட வராப்ல‌
கனவு கண்டேன்."

"நல்ல கனவு கண்டே..போ!"

பேரனை ஆரத்தழுவிக்கொண்டாள்
பாட்டி.

============================================
(நகைச்சுவைக் கற்பனை)

ரஜினியின் அரோஹரா

ரஜினியின் அரோஹரா
____________________________________ருத்ரா

தமிழ்நாட்டைப்பார்த்து
ரஜினி
அரோஹரா சொல்லிவிட்டார்.
இனி
இவருக்கு
முதலமைச்சர் நாற்காலி
"கோவிந்தா கோவிந்தா"தான்
என்று தமிழ் மக்கள்
சொல்லிவிடுவார்களோ
என்ற ஐயம் எழுந்திருக்கிறது.
(அவரே வேறு யாரையாவது தான்
இழுத்து வைப்பேன் என்று
சொல்லியிருக்கிறார்.)
மதிப்பிற்குரிய
இன்னொரு (சூப்பர் இல்லாத) ஸ்டார்
எஸ் வி சேகர் அவர்கள்
ரஜினி நினைத்தால் பத்து நாளில் ஆகிவிடுவார்
என்றிருக்கிறார்.
ஆனால் அவரால் நினைக்கத்தான் முடியாது
என்று அர்த்தம்.
இதுவும் "எஸ் வி சேகர்" பாணி காமெடி தான்.
எது எப்படியோ?
சினிமா ஹீரோயிஸம்
எனும் அட்டைக்கத்தி நிழல் தான்
நம் தமிழ் நாட்டு மக்களை
பிடித்திருக்கும் கிரகணம்.
சாஸ்திரப்படி கிரகணம் விட்டால் தானே
சாப்பிடமுடியும்.
எனவே ஜனநாயகம் இங்கே பட்டினி தான்.
பஞ்சாங்க பூமியல்லவா நம் நாடு!
"வறுமையின் தத்துவம்" சொல்வார்கள்.
ஆனால்
"தத்துவத்தின் வறுமை"என்று
அறிவுப்பசி எடுத்து
என்றைக்கு சொல்லத்தொடங்குகிறார்களோ
அன்றைக்கு இங்கே
அரிதாரங்கள்
அவதாரங்கள் ஆக முடியாது.

____________________________________________

சனி, 25 ஜூலை, 2020

ஜிமிக்கி கம்மல்

ஜிமிக்கி கம்மல்
=========================================ருத்ரா
"கொஞ்ச நேரம் பேசாமல்
நில்லேன்.
தலையை ஆட்டாமல் 
அசையாமல் இரு.
என் இதயம் கூசுகிறது.
புல்லரிக்கிறது.
அப்புறம்
இன்பமான ஒரு வலி பிறக்கிறது."

"என்ன சொல்கிறாய்?"

"உன் ஜிமிக்கிக்கம்மலை
அப்படியே அசையாமல் வைத்திரு."

"போடா! ஃபூல்
ஆட்டி ஆட்டி அசைப்பதில்
அப்படி 
"அந்த பொம்மை மாதிரி"
அசைச்சு வளைச்சு ஒடிச்சு 
ஆட்டாமல்
அதுவே இயற்கையாய் ஆடுவதைப்போல்
ஆட்டி ஆட்டி 
அழகு பார்ப்பது தானே
எங்களுக்கு ஆசை"

அது இல்லை 
இந்தக்கம்மலை
"ஒரு இதயம் கொடுத்து
பவுன் வாங்கி
இன்னொரு இதயத்தையும் 
கூலிக்கும் சேதாரத்துக்கும்
கொடுத்து செய்யச்சொல்லி
வாங்கியது.
அது குலுங்கி குலுங்கி ஆடுவது
நம் இதயங்களுக்குள்ளேயே
ஒரு பூகம்பத்தை
இன்ப அதிர்ச்சியாய்
கொடுப்பது போல் இருக்கிறது."

"அப்படியா..சரி
ஒரு சின்னக்கண்ணாடிப்பேழை
வாங்கி வா.."

அவள் அந்த‌
ஜிமிக்கி கம்மலைக்
கழற்ற ஆரம்பித்தாள்

"அய்யையோ ! கோவிச்சுக்கிட்டியா?"

அவன் 
நிஜமாகவே நெஞ்சைப்
பிடித்துக்கொண்டான்.



================================================

வெள்ளி, 24 ஜூலை, 2020

சுமை

சுமை
______________________________ருத்ரா

எனக்கு எப்போதும்
ஒரு கேள்வி
என் இடுப்பில் உட்கார்ந்திருக்கும்.
எதற்கு இந்த‌
கடவுள் எனும்
சுமையில்லாத ஒரு சுமையை
சுமந்து கொண்டிருக்கவேண்டும்?
அதையேத்தாண்டா 
நான் உன்னிடம் கேட்கிறேன்.
என்று என்னிடம் கேட்க‌
ஒரு கேள்வி 
அந்தக்கடவுளிடம் 
இருந்தது.

_____________________________________

வியாழன், 23 ஜூலை, 2020

காதல் என்னும் கொசுக்கடிகள்

காதல் என்னும் கொசுக்கடிகள்
__________________________________________ருத்ரா


சென்ற பெப்ரவரியில்
பொன் வர்ணத்தில்
இதய வடிவத்தில்
அட்டையை
வெட்டி ஒட்டி எழுதி
அனுப்பினேன்.
அடுத்த பெப்ரவரிக்கு
என்ன செய்யலாம்?
இதயத்துடிப்புகளில்
அவள் வந்து வந்து போனாள்.
அவளுக்கும்
கேட்டிருக்கும்.
என்ன செய்யலாம்?
அட்டை எதற்கு
என் இதயத்தை அட்டை ஆக்கி
அவள் பூஞ்சிரிப்பை
அதில் செதுக்கி அனுப்பலாம்.
..............
.............
"டேய் ஃபூல் அப்படி
எல்லாம் யோசிக்காதே.
அட்டையில் செதுக்குவது எல்லாம்
இருக்கட்டும்.
அது என் இதயமடா!"
அவள் சொற்கள் அந்த துடிப்புகளில்
அவனுக்கு
கேட்டிருக்குமோ இல்லையோ?
யாராவது
அந்த "க்ரேசி பாயை"காப்பாற்றுங்களேன்.
கேட்கிறதா?
நண்பர்களே!
காதல் வெறும் கள்ளிக்காடு இல்லை.
ரோஜா வனமும் இல்லை.
உள்ளத்தை வார்த்து உருக்கி
நெளிய விட்ட‌
கனவின் மின்னல்கள்.
ஒரு கவசமும் வைத்திருங்கள்.
வாழ்க்கைக்குள் வாழ வந்துவிட்ட பிறகு
அதைத்தூக்கியெறியும்
முட்டாள்தனத்தை முதலில்
தூக்கி எறியுங்கள்.
காதல் தோல்வி என்றாலும்
காதல் முழுமை பெறுவது
உன் கையில் மிச்சமாக இருக்கும்
உன் வாழ்க்கையில் தான்.
மத்தாப்பு எரிந்த பின்
உன் கையில் மிச்சமாக
இருக்கும்
கரிக்குச்சித்தூரிகையில்
உன் வாழ்க்கையை
கோடு போட்டு காட்டும்
பிக்காசோவாக இரு.
பிய்ந்துபோன
காக்கைச் சிறகாக
கிடக்காதே.

===============================================

புதன், 22 ஜூலை, 2020

எல்லாம் தெரிந்தவர்கள் யார்?




தனக்கு தெரியும் என்பதை
தெரிந்து கொண்டவனும்
தனக்கு தெரியாது என்பதையும்
தெரிந்து கொள்ளாதவனும்
தான்
அக்கரையிலும் இக்கரையிலும்
நின்று கொண்டிருக்கிறார்கள்.

தெரியாது என்பதை
தெரிந்து கொண்டவனும்
தெரியும் என்பதைக்கூட
தெரியாதவனும் தான்

அதோ
அறிவு அறிவின்மை
எனும் வெள்ளத்தில்
நீச்சல் அடித்தும் அடிக்காமலும்
மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் தெரிந்தவர்கள் யார்?

________________________ருத்ரா

சுஜாதா ஓட்டம்


சுஜாதா ஓட்டம்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________ருத்ரா

நான்
கவிதை எழுதுவதை விட‌
சுஜாதாவின் பேனா
தானாகவே கவிதை எழுதத்துவங்க‌
அதன் பின்னாலேயே
நான் ஓடினால்
எப்படியிருக்கும்?
இதோ
அவரது விசைப்பலகை
இயங்கத்துவங்கி விட்டது
_____________________________
‍‍‍‍‍
‍‍‍‍‍‍

கோப்பை நிறைய நுரை

உமர்கயாம் உதடு
கோப்பையை ஸ்பர்சித்தது.
காதலைச் சுவைத்தது.
முத்தங்களை முற்றங்கள் ஆக்கி
மல்லாந்து கொண்டது.
"எழுதிச்செல்லும் விதியின் கையில்"
ஒரு கரும்பு வில்.
தத்துவம் நொதித்ததில் வந்த‌
நுரை எழுத்துக்களில்
கரையும் உடைந்தது
___________________________

அல்காரிதம்.

என் தாயின் கருப்பையில்
என் அல்காரிதம்
பிஞ்சுக்காலாய்
அம்மாவின் வயிற்றை
எம்பி உதைத்தும்
அம்மாவின் அடிவானம்
எல்லாம்
இனிப்பு இனிப்பு
இனிப்பு மட்டும் தான்.

‍‍‍‍‍_______________________

மலைப்பாம்பு

சி என்றும்
சி ப்ளஸ் ப்ளஸ் என்றும்
பைத்தான் வரை வந்து
கணிப்பொறி
விழுங்கிக்கொண்டே இருக்கிறது.
நம் நாட்டில் வந்து
எப்படி அது
ஜனநாயகத்தைக்கூட‌
விழுங்கி விட்டு
அசையாமல் கிடக்கிறது?

______________________________

புரியாததிலிருந்து..

ஆம்
புரியாததிலிருந்து
புரிந்து கொள்ளும் வரை
இந்த பிரபஞ்சம்
வீங்கிக்கொண்டு தான்
இருக்கிறது.
இந்த "இன்ஃப்லேஷன் தியரியின்"
திரி முனையில்
பிரம்ம சூத்திரமும் ந்யாய வைசேஷிகமும்
ப்ரேன் காஸ்மாலஜியில் நிரவியிருக்கிறது.

_______________________________________

என்னால் இதற்குமேல்
ஓடமுடியவில்லை.
மண்டைக்குள்
நண்டுகள் பிறாண்டுகின்றன.

‍‍‍‍‍‍==============================================


 =

செவ்வாய், 21 ஜூலை, 2020

அஜந்தாக் குகை ஓவியம்

அஜந்தாக் குகை ஓவியம்
=========================================ருத்ரா

வீட்டுச்சுவருக்குள்
விரிசல்கள்.
வானத்தில் மின்னல்கள் போல.
இடைவெளிக்குள் 
பக்கத்து வீட்டு தென்னங்கீற்றுகள்
தூரிகை அசைக்கும்.
பொறியாள நிபுணரிடம் கேட்டேன்.
அடி மண் அதிருகிறது
என்றார்.
என்ன செய்யலாம் என்று கேட்டேன்.
இடித்துவிட்டு...
அவர் முடிக்கவில்லை
என் இதயம் சுக்கல் நூறாய் ஆனதுபோல்
நொறுங்கி விட்டேன்.
வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
பழுது பார்க்கலாமா சார்?
ஈனஸ்வரத்தில் முனகினேன்.
ஆமாம் சார்.
பண்ணலாம்.
ஒரு புது வீடு கட்ற செலவு ஆகும சார்.
என்ன பண்ண சொல்றீங்க?
எங்க அப்பாவுக்கு
இதய மாற்று அறுவை செய்யவேண்டும் 
என்று டாக்டர் சொன்னார்.
செலவு லட்சக்கணக்கில் ஆகும் என்றார்.
இதற்காக‌
"உங்கள் தாத்தாவை இன்னொரு அப்பா
பெத்துக்கொள்ளச்சொல்லி
வாங்கிக்கிறது தானே என்று
அவர் சொல்லவில்லை.
சார்..இது ரிப்பேர் இல்லை சார்.
என் வீடு எனும்
இதயத்துக்கு 
இதய மாற்று அறுவை சிகிச்சை" சார்.
எப்படியாவது சரி பண்ணிக்கொடுங்க..
நா தழு தழுத்தேன்.
கவலைப்படாதீங்க.
என் உதவிப்பொறியாளரை அனுப்புகிறேன்.
சரி பண்ணிடலாம் என்றார்.
என் வீட்டுச்சுவர்க்கீறல்களைப்பார்க்கிறேன்.
ஆம்..
அது எவ்வளவு அழகாக இருக்கிறது
"அஜந்தாக் குகை ஓவிய வரிகளைப்போல்!"

===================================================

சனி, 18 ஜூலை, 2020

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
________________________________________________
ருத்ரா

(ஓலைத்துடிப்புகள்..36)


குரவமும் மரவமும் குழீஇ அடர
வேங்கை அம் இணர் மணிப்பூ சொரிய‌
சுரம்புகு கணுத்தோள் கழைபுரை மல்ல!
முள் செறி முருங்கை குருதிப்பூக்கள்
செந்தழல் தொடுத்த செங்குழைக் கவரி
அன்ன வளிப்போழ் அஞ்சிறைத்தும்பி
அதிர்நுண் பாலை கேட்டிலையோ?
இறைகலி ஆர்த்த அகல்வளை குலுங்கும்
இசையினில் அவள் உன் அணைமொழி கேட்கும்.
வானுதல் வியர்த்த முத்துக்கள் தோறும்
உன் அகலம் கிடந்த பொழுதினை ஊரும்.
கொடுமா எதிரத் தொலைச்சிய காலை
நின் தகை எண்ணி அவள்  எவ்வம் படரும்.
நின் பொருள்சேர் பெரும்புகழ் யாவும் ஈண்டு
இவள் காந்தட்கைவிரல் நீண்டு தீண்டும்
இன்பம் ஒரு பால் அடங்கும் நீ அறிதி.
கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
நுண்ணிதாய் உணர்த்தும் குறி நீ அறிதி.
குவளைக்கண்ணி இமைபோர்த்த கனவின்
நெருப்பின் தீங்கனி அருந்திட விரைதி.
பரல்சுரம் யாறு முரல்தர விரைதி
கல்பொரு பஃறுளி யாறென இன்றே.

======================================================

புதன், 15 ஜூலை, 2020

புதிய கரு

புதிய கரு
========================================ருத்ரா

நூல் படிக்க‌
நூல் வேண்டும் என்றார்கள்.
நூல் போட்டுக்கொண்டவுடன்
நூல் படிக்க மறந்தார்கள்.
நூல் படிக்க மறந்ததால்
மனிதனை அறிய மறந்தார்கள்.
மனிதனின் உள்ளே எரியும்
விளக்கை அணைத்து விட்டார்கள்.
தன்னைப்பிறப்பித்த‌
அம்மாவையே தீட்டு என்றார்கள்.
பெண்ணை பாவம் என்றார்கள்.
பெண் என்றால் மண்.
மண்ணுக்குள் அவள் அமிழ்த்தப்பட‌
ஆவேசம் கொண்டார்கள்.
உலகிலேயே மிகச்சிறந்த பெண்
சீதையை 
மண் விழுங்க வைத்தார்கள்.
பிறவிகள் இல்லை.
மனிதர்கள் இல்லை.
வானமும் மண்ணும்
மூளியாகி
மலடு தட்டிப்போகவேண்டும்
என்று 
ஒப்பாரி இட்டார்கள்.
அதாவது மந்திரங்களை
இரைச்சலிட்டார்கள்.
மேலே இருந்து பார்த்த‌
கடவுள் சிரித்தார்.
உன்னில் 
என்னைப்பார் என்றேனே!
அதையும்
ஸ்லோகங்களாய்த்தானே
கொப்பளித்தாய்.
பொருந்தி உள் நின்று
நினை என்றேனே.
அந்த மெய்ப்பொருளை
தோண்டி எடு என்றேனே.
"கட உள்" என்றேனே.
உனக்குத்தெரிந்த‌
"பிரம்மம்"என்பதை வைத்து
நக்கிப்பார்த்து
அந்த "மிலேச்ச பாஷையில்" எல்லாம்
நீ இல்லை என்று
என்னையும் கூட‌
கடாசி விட்டுபோனாய்.
நீ என்னை தீண்டாமையில் 
தள்ளி எரிக்கவும் தயார் ஆனாய்.
எரிந்து போ
இந்த ஸ்லோக எச்சில்களின்
அசிங்கமே
உன்னை எரித்துக்கொள்ளட்டும்.
இதிலிருந்து
மனிதச்சாற்றின்
புதிய உரு
புதிய கரு
அறிவின் பேரொளியாய்
சுடர் முகம் காட்டட்டும்.

================================================

ஓ ஜனநாயகமே!



ஓ ஜனநாயகமே!
_____________________________________ருத்ரா


ஓ ஜனநாயகமே!
நீ எங்கே இருக்கிறாய்?
அலாவுதீன் அற்புதவிளக்கை
தேய்ப்பது போல்
அந்த பட்டனைத்தட்டினால்
போதும் என்றார்கள்.
தட்டினால்
வந்ததோ
பூதங்களின் கூட்டம்.
உடுக்கைகளின் சத்தம்.
மந்திர ஜபங்களின் ஆரண்யம்.
மனிதர்களின் வீடு
மறைந்து போய் விட்டதோ?
போ!
பூதமே இந்த விளக்கை எடுத்துக்கொண்டு
போய்விடு.
மானிடச்சோலையில்
மலரும் அந்த‌
ஜனநாயகம் எனும்
பாரிஜாத புஷ்பம் வேண்டும்.
கம்பியூட்டர் யுகம் ஆயிற்றே
என்று தான்
"பட்டன்"தட்டினோம்.
எப்படி உள்ளே இத்தனை
அரக்கு மாளிகை?
நெருப்பு விழுங்குவதற்குள்
ஒரு
"புதிய மகாபாரதம்"
உருவாகிடட்டும்.
இனிய பாரத புத்திரர்களே
இந்த வர்ணப்புகை மூட்டங்களுள்
தொலைந்து போகுமுன்
உங்கள் சிந்தனையை
கூர் தீட்டுங்கள்.
அறிவின் சுடர் கூட்டுங்கள்.
வாழ்க ஜனநாயகம்!

==========================================









திங்கள், 13 ஜூலை, 2020

melancholy wrapped sky...

melancholy wrapped sky...
-----------------------------------------ruthraa

every here and there
the sun bleached 
white and white
with dead fear and melancholy.
we can write beautiful "ode"
on that veil
that wraps all the shoot of
life
the fire and spark.
mere genetical maths of that
twisted helix and chains in nano plank
call it a protein 
but the equations are sterile with out solutions.
with spade  and pit...
with dilapidated tents of
oxygen-starving beds
aided with ventilators..
with statistics and curves
howsoever mesokurtis or leptokurtis
but bell shaped one delude and delude
unto the
horizon of all our extinction.

-------------------------------------------------


ஞாயிறு, 12 ஜூலை, 2020

கொரோனா

கொரோனா
_______ ___________ருத்ரா

கடவுள் 
உண்டா? இல்லையா?

இந்த கேள்விக்கா
நீ
இத்தனைப்பிணங்களைக்
குவித்தாய்?

___________________

சனி, 11 ஜூலை, 2020

காத்திருப்போம்

காத்திருப்போம்
========================================ருத்ரா


லட்சக்கணக்காய் பிணங்கள்
குவிய காரணம்
அந்த ஆர் என் ஏ ப்ரொடீன் என்வெலப்  தானே.
ஆமாம்
அதற்கு என்ன இப்போ?
கண்ணுக்கே தெரியாத‌
அந்த நுண்ணிய 
நேனோ ஒலிம்பிக்ஸ் திடலில்
புகுந்து ஓட‌
யார் முன் வருவது?
அந்தப்போட்டியில் வெல்ல‌
மனித மூளையின் 
நுண்ணறைகளுக்குள்
பயணிக்க‌
கோடி கோடி டாலர்கள்
குவித்தால் 
உடனே மருந்து கிடைக்கலாம்.
மானிட நேயம் எனும்
ஒரு உந்து விசையும் அந்த‌
ஆராய்ச்சிகளின்
ஆரண்யங்களுக்குள் 
நுழைந்தால்
இந்த மனித சவங்களின் 
குப்பைமேடாக‌
இந்த உலகம் ஈ மொய்த்துக்கிடப்பதை
தடுக்கலாமே.
பார்க்கலாம்.
தடுப்பூசிக்கே
பஞ்சாங்கம் ஜோஸ்யம் எல்லாம்
பார்த்துவிட்டுத்தான்
அரம்பிக்கவேண்டும்
என்று 
விஞ்ஞானிகள் நினைக்கமாட்டார்களே.
உள்ளுக்குள்
புகையும் வர்த்தகநெடியும்
இந்த மனிதர்கள் பிழைப்பதால்
நம் பணங்காய்ச்சி மரங்களில்
என்ன மகசூல் வந்து விடப்போகிறது?
என்ற லாப அரசியலும்
எங்கோ எதிலோ
ஒளிந்து கிடந்து
அந்த வைரஸ்களையும் விட‌
மோசமான வைரஸ்களாய்
நம்முள் ஊடுருவியிருக்குமோ
என்ற 
கவலையும் அச்சமும் தான்
செத்துப்போன‌
அந்த மில்லியன் ஆண்டுகள்
பழமையான டைனோசார்களையும் விடவும்
பயங்கரமாய் 
உறுமல் இடுவது தான்
ஊடகங்களில் 
கிடுகித்துக் கொண்டிருக்கிறது!
"சமுதாய மானிடத்தின்" பொதுமை நீதி
கல்லறைக்குள்
கண் மூடிக்கிடக்கிறது போலும்.
இருப்பினும்
அந்த ஒற்றை விஞ்ஞானி
எங்கேனும் இருப்பான்
இந்த உலகத்தைக் காத்து நிற்க.
கோடி கோடி நம்பிக்கையுடன்
அவனுக்கு பூச்செண்டு நீட்டக்காத்திருப்போம்
ஆயிரக்கணக்கில் தினமும்
நாம் நமக்கு மலர் வளையங்களுக்கு
ஆர்டர் செய்த போதும்.

================================================














the world is too much away with us

the world is too much away with us
---------------------------------------------


within and without 

the world envelopes us 

but to find scary

we are very much de-encapsulated

from that

crystal clear water

from that leafy canopy

from that life flowing air

and from our own flesh and blood

and much with a rape of deadly 

carbon emissions.

they wipe and eat all our

civilizations aground in those

tombs of decimations and derelict.

we reverse the galvanizing will

of evolution.

we simply fall prey to

that nano world of microbes and vira.

our deep and penetrating peep

of origin of our own existence

lacks fervor and fury for a thirst of knowledge

for a search of keys towards that holy grail

how to make those RNA spirals our smiling murals

and how to win those "iniverses" which

I mean the reverse universes in tune with

our own whims and fancies.

---------------------------------------RUTHRAA

செவ்வாய், 7 ஜூலை, 2020

"கனவு காணுங்கள்"


A. P. J. Abdul Kalam in 2008.jpg
https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam   (WITH COURTESY)




"கனவு காணுங்கள்"
===============================================ருத்ரா



"கனவு காணுங்கள்"
மேதை திரு அப்துல்கலாம்
நமக்கு விட்டுச்சென்ற வரி.

இதற்கு உறங்க வேண்டும்.
அதற்கு ஒரு வீடு வேண்டும்
அதற்கும் ஒரு முகவரி வேண்டும்.
காடோ நாடோ
அதுவும் வேண்டும்.
ஹிட்லரோ காந்தியடிகளோ
யாராவது வேண்டும்.
அதர்மத்தை வைத்துதானே
தர்மத்தை அடையாளப்படுத்த முடியும்.
பூனை தூங்கினாலும் சரி
அடுப்பு வேண்டும்
அவ்வப்போது
அது எரியவும் வேண்டும்.
தீயை அணைக்க தீயே வேண்டும்.
பசியை அணைக்க சோறு வேண்டும்
சோறு தின்ற பிறகு
தூக்கம் வரலாம்.
அதில் கனவும் வரலாம்.
கனவுகள் ஆயிரம் வந்தது.
நான் விரும்பும் கனவும்
தலையணை ஓரங்களில்
நங்கூரம் பாய்ச்சவில்லை.
ஏசு நாதர் ஒரு ரொட்டித்துண்டை
வைத்து
ஆயிரம் ஆயிரம் பேர்களுக்கு
பசி ஆற்றினாராமே.
அந்த ரொட்டித்துண்டுகள்
எத்தியோப்பியாவின்
எலும்புக்கூடுகளின் பிரதேசத்தில்
மழையாய் பொழிந்தால் என்ன?
இன்னும்
வட்டமாய் சூரியனையும் நிலவையும்
மட்டுமே கண்டு
ஒட்டிய வயிறுகளில் கிடக்கும்
வாய்களுக்கு
இட்லியோ தோசையோ இல்லை
பேன்கேக்கோ
எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கக்கூடாதா?
கோவில்களில் அன்னதானம்
கிடைக்கிறதே
இறைவனே கொடுத்தாலும்
அது பிச்சை தானே.
இறைவனுக்கு பசியெடுத்தது
அதற்காக பிச்சை எடு
என்று சொன்னாலும்
இறைவனின் பசி இப்படி
கொச்சைப்படுத்தப்பட‌லாகுமா
என்று
என் பசியை
அவன் பசிக்கு உணவாக்குவேன்.
என் கேள்விகளே
அவனுக்கு உணவுகள்.
கனவு
என்பது தூக்கத்துக்கான‌
தசை நார்களால் மிடையப்பட்டது
அல்ல.
எல்லாருக்கும் எல்லாமும் வேண்டும்.
இங்கு
இல்லாமை இல்லாமை ஆகவேண்டும்
என்று
ஒரு கவிஞன் கனவு கண்டான்.
அந்தக் கனவு முளைவிட‌
இந்த நிலத்தை துப்பாக்கிகள் கொண்டா
உழவேண்டும்?
ஐயோ
பேய்க்கனவா?
வேண்டவே வேண்டாம்.
................
................
கனவு காணுங்கள்....
அந்த மேதை சிரித்துக்கொண்டே
சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
நானும்
கனவு காணத்தொடங்கி விட்டேன்
மயிற்பீலிகளை க்கொண்டு
எரிமலைகள் கட கடக்கும்
பசி வயிறுகளில்
அந்த தீக்கடலின் அலைகளை
கிச்சு கிச்சு மூட்டுவதாய்
கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

===============================================




திங்கள், 6 ஜூலை, 2020

பாரதியின் குயில்

பாரதியின் குயில்
_______________________________________________ருத்ரா 

எல்லா கவிதைகளுமே
கா..கா..கா என்கின்றன.
அந்த காக்கா கூட்டங்களுக்கு நன்றி.
ஏனெனில்
அந்த இரைச்சல்கள் எல்லாம்
தாகம் கொண்டிருந்தன.
அதை தணிப்பதற்கென்றே
எங்கிருந்தோ ஒரு
இசை கேட்டது.
அது தான் "குயில் பாட்டு."
"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி
நீரில் மலர்ச்சி தரும்"
சூரியனையே இனிப்பால்
குளிப்பாட்டும்
குயில் பாட்டு.
பாரதியின் கவிதை
எங்கோ சுருண்டு கிடந்தது.
இதில் தான் ஏழு கடல்களின்
மொத்த அலையாய்
பொங்கி எழுந்தது.
காதல்
அப்படியொரு காந்த விசையா?
மண் மரம் மட்டையெல்லாம்
குயிலின் இசை வழியே
காதலைப்பூசிக்கொண்டன.
மாடும் குரங்கும் கூட
குயிலின் மேல் காதல் கொண்டன.
காதல் கைக்கு எட்டாத வானமா?
அப்படியென்றால்
அது தொலையட்டும்.
காதலாம் காதல்.
"போனால் போகட்டும் போடா"
என்று அன்றே பாடினான் இப்படி:
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
காதல் இனிது
சாதல் அதை விட இனிது.
இப்படியொரு "பஜ கோவிந்தம்"
காதலுக்கும் சாதலுக்கும்
பாடினான் பாரதி.
40 களின் 50 களின்
எழுத்துகள் எல்லாம்
காதலின் வெற்றி
மரணம்
எனும் மரணமில்லா இலக்கியமாய்
 குவிக்கப்பட்டன.
"தேவதாஸ்" என்ற அந்த திரைப்படம்
காலத்தால் தேய்ந்து போன‌
மூளியாக கச்சாபிலிம் போல்
தெரிந்தாலும்
தேவதாஸ் பார்வதியின் காதல்
அதனுள் இன்னும்
ஏழுவர்ணங்களில் மின்னல் நரம்புகளை
மீட்டி ஒலிக்கும் காதல்
ஒலி பூத்துக்கொண்டே இருக்கிறது.
இப்போதைய கணினி யுகத்தில்
இளமையின் ஜீன்கள் எல்லாம்
வறட்டு "பூலியன் அல்ஜிப்ராவில்" அல்லவா
காதலை
பிறாண்டிக்கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இறந்தாலும்
காதல் என்றும் வாழ்க‌
என்று
பாரதியின் குயில்
தன் அடி உள்ளத்து அமுதத்தை
பிழிந்து ஊற்றிக்கோண்டே இருக்கிறது.

"டப்பென்று" மூடிவிடு அந்த வரிகளை.

இளைய யுகமே!
காதல் எனும் மைல்கல்லில்
உன் இறுதி நடுகல்லை
நட்டுக்கொண்டு விடாதே
என்பது தான்
நேற்று வரை சக்கையாய்
நாம் பிழிந்து எடுத்துக்கொண்ட 
சாறு.
வாழ்க்கையில் நொந்து நூலாவதும்
காதலுக்கு நொந்துபோய்
காணாமல் கரைந்து விடுவதும்
ஒற்றைப்புள்ளியில் வந்து நிற்கிறதே!
சரி!
வாழ்க்கையை காதலிப்போம்.
வாழ்க்கையை முழுதுமாய்
வாழ்ந்து பார்த்து
அந்த "பொருள் விளங்கா" உருண்டையை
அல்லது
அந்த பொரி விளங்கா உருண்டையை
சுவைத்துக்கொண்டே இருப்போமாக!
குயிலா?
அது பாட்டுக்கு கூவிக்கொண்டே
இருக்கட்டும்.

===============================================










A Tree

A Tree
____________________________ruthraa

branching out to the
blue
your secret bristles
sigh in a 
vent of all his hue and cry
of Pablo Picasso
with empty strokes
of thirst and lust.
your blooms dash to the moons
either half or full
either a poetry or a perverse
but the sky is always
longing a kiss with you
without any lips.
the chattering wings of the birds
splash the undying waves
rippling the mum in between the buds.
cool shade is a drink
distilled from those emerald canopy of
dazzling leaves
which i empty
unto the last drops 
to the bottom of a bottomless cup.
I just curl up ocean like trees
into a Bonsai fancy
on my table to inspire a lot of words
to write
but in the sterile reams and reams 
of paper 
which are always blank and white.

---------------------------------------

ஞாயிறு, 5 ஜூலை, 2020

வாருங்கள் வாருங்கள்

வாருங்கள் வாருங்கள்
============================ருத்ரா


அந்தக்குட்டி 
மிக அழகாயிருந்தது.
என் பின்னேயே வந்தது.
நான் நிற்குமிடம் அதுவும் 
நின்றது.
என் நிழல்
அதுவாக இருந்தது.
அது வாலை ஆட்டும்போது
எனக்கு கவரி யாக இருந்தது.
ஒரு நாள் 
என் மடியில் வந்து 
மெதுவாக உட்கார்ந்தது.
எனக்கு அது உருகுவது போலவும்
அதுக்கு நான்
உருகுவது போலவும்
எங்கள் கண்கள்
கசிய கசியப்பார்த்துக்கொண்டோம்.
ஆம்.
பார்த்துக்கோண்டே இருந்தோம்.
பார்த்துக்கோண்டே இருக்கும்போது
"நான் விஸ்வரூபம் எடுக்கப்போகிறேன்"
என்றது.
"அட!
அது கூட பிரம்மாண்ட அழகு தான்.
காட்டு"
என்றேன்.
காட்டியது.
ஐயோ!
என்ன கோரம் அது?
என்ன பயங்கரம் அது?
"போதும் 
பழைய நிலைக்கு வா"
என்றேன்.
"ஹா..ஹா..ஹா"
அட்டகாசமாய் சிரித்தது.
"இது அது அல்ல.
உன் அகம் காட்டும் கண்ணாடி."
"என்ன சொல்கிறாய்?"
"இனி என்னைத்தான் நீ
பிம்பம் காட்ட வேண்டும்.
என் விகாரங்களே
உன் தர்மங்கள் நியாயங்கள்.."
அந்த அழகிய குட்டியை எங்கே?
நான் தேடினேன்.
அந்த கண்ணாடி உடைந்து சிதறியது போல்
அந்த கண்ணாடியே பல துண்டுகளாய்
தோற்றம் காட்டியது.
வர்ணங்களாய்..வர்ணங்களாய்
அந்த நிழல் 
இப்போது
என்னையே பிய்த்துத் தின்க விரட்டி
வருகிறது.
தேர் வடம் பிடித்துக்கொண்டு..
கொட்டு மேளம் முழக்கிக்கொண்டு..
புரியாத மொழியை
ராகம் போட்டு முழக்கிக்கொண்டு..
ஏதோ ஒரு கஞ்சாப்பொடியைத் தூவிக்கொண்டு...
வாருங்கள்...வாருங்கள்
என்னைக்காப்பாற்றுங்கள்.

============================================


வெள்ளிப்பனி மலையில்...

வெள்ளிப்பனி மலையில்...
================================================ருத்ரா


அண்டை நாடுகள்

மீசை முறுக்கிவிட்டுக்கொள்கின்றன.
எல்லைக் கோடு எந்தக்கோடு?
கேள்வி முனைத் திரியில்
பீரங்கிகள் உமிழ்கின்றன
எப்போதும் மரணங்களை.
மனிதன்
பீரங்கியைக் கண்டுபிடித்த பின்
அதற்குத் தீனியாக‌
புல்லுக்கட்டுகள் போன்று
இந்த ராணுவ மனிதர்களையும்
உருவாக்கிக்கொண்டான்.
புதிய புதிய ஆயுதங்கள்
புதிய புதிய விலையில்
சந்தைப்படுத்தப்படுகின்றன.
மனிதனின் உயிர் போன்றது
தேசபக்தி என்றான்.
உயிர்களை லட்சக்க‌ணக்கில்
கூழாக்கித்தின்னும்
அழகிய ஆட்சி எந்திரத்துக்கு
லேபிள் ஒட்டினான் போர் என்று.
இந்த "ஆயுத பூஜையை"
எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும்
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்கேயாவது
ஒரு  புல் பூண்டற்ற பூமியில்
மதம் இனம் மொழியை
அதன் வெறியை 
பச்சை குத்திக் கொள்ளாத‌
அதில் 
பச்சை ரத்தம் பருகத் துடிக்காத‌
மனித உள்ளத்தின் 
கருவறை திறந்திருக்கிறதா?
என்று சொல்லுங்கள்.
அதனுள் 
புகத்துடிக்கிறேன்
ஒரு புதுயுகத்தின் இறக்கைகளோடு
எல்லா உயிர்களிலும் 
ஒட்டிக்கொள்ளும் 
ஒரு நேயப்பிழம்பை ஊற்றிக்கொண்டு
மீண்டும் பிறந்து வர!

==============================================


சனி, 4 ஜூலை, 2020

மணி அடிக்கும் முன்னே....


மணி அடிக்கும் முன்னே....
========================================ருத்ரா


ஆப்பிரிக்க வறுமையின் 
இருண்ட கண்டத்தில்
ஒரு நாடு.
கண்ணுக்கெட்டிய தூரம் பாழ்வெளி.
கொஞ்சம் காடுகள்.
வற்றிக்கிடக்கும் ஆற்றின் சுவடுகள்.
இந்த பெண் எலும்புக்கூட்டின் இடுப்பில்
ஒரு சிசு எலும்புக்கூடு.
அருகே காலடியில் 
நண்டும் சிண்டுமாய்
இரண்டு மூன்று வயதுகளில் 
எலும்புக்கூடுகள்.
இது ஒன்றும் ஆவிகள் பற்றிய‌
ஹாலிவுட் படம் அல்ல.
மானுடம் ஆவியாய் மாறும் முன்
எலும்பு மிச்சங்களாய் திரியும்
அவலச்சித்திரங்கள்.
இந்த எலும்புக்கூடுகளை
சதைப்பற்றின்றி
அப்படியே "ரா"வாய்
மண்ணில் படைக்கும்
அந்த பிரம்மாவின்
முதுகெலும்பை
அடித்து நொறுக்கினால் என்ன?
உலக மானிடமே!
"தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்"
என்ற‌
அந்த மனிதநேயக்கவிஞனுக்கு
மணிமண்டம் கட்டினாலும்
அந்த கவிதைவரிகளுக்கு
தினம் தினம்
கல்லறை தான் கட்டுகின்றோம்.
எத்தனை நாடுகள் இருந்தென்ன?
இந்தக்காட்சிகள்
நம் இதயத்தை நனைக்காத போது
எல்லாம் இங்கு சுடுகாடுகள் தான்.
சூட்டு கோட்டு டையில் 
ஆரவாரமாய் பேசுகிறார்
டிவியில்.
அந்த பேச்சில் கூட‌
வெறும் புள்ளிவிவரங்கள் எனும்
எலும்புக்கூடுகள் தான்.
அந்த நாடுகளில்
வறுமையை வளமையாய் மாற்ற‌
இயலாத வெறும் வறட்டுச்சொற்கள்.
வெட்டியாய்
ஐ.நா வின் 
வெட்டியான்களாய்
அதோ 
பட்டினி மரணங்களின்
கணக்குகளை
காட்டிக்கொண்டிருக்கிறார்.
இதைப்பற்றி தானே
இந்த "கொரோனாவும்"
ஏதோ ஒரு மொழியில் 
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.
பாடம் முடிந்த தென்று
மணி அடிக்கும் முன்னேயாவது
ஓ!மனித உள்ளங்களே
கசிகின்ற‌
உங்கள் இதயக்கதவுகளை 
திறந்து வையுங்கள்.

============================================ 





சரித்திரம்.

சரித்திரம்.
==========================================ருத்ரா

அது ஒரு 
பாழடைந்த கோயில்.
கடவுள் சிலை
முகம் மழுங்கிப்போயிருந்தது.
ஆனாலும்
உயிர்ப்போடு ஒரு சிரிப்பு.
சிலையைச்சுற்றி
பெயர் தெரியாத ஏதோ புதர்கள்.
கோவில் சுவர் 
திறந்த வாயின்
பற்கள் விழுந்த இடைவெளியை
நினைவு படுத்தியது.
இன்னும் சிலைகள்
கை இழந்து கால் இழந்து
எலும்பு முறிவு டாக்டர்களால் எல்லாம்
சரி செய்யப்பட முடியாமல் 
நின்றன.
சில தூண்களில்
வரிசையாய் 
நம்மால் படிக்க முடியாத எழுத்துக்கள்..
தொல்லியல் ஆட்கள்
கி மு கி பி என்று
ஆண்டுகள் எனும் லென்ஸ் வைத்து
படித்தார்கள்.
மனிதர்களின் அர்த்தமற்ற‌
ஆவேசம் சினம் 
இவற்றின் எடுத்துக்காட்டுகள் தான் இவை.
மசூதிகளும் இப்படி
தூளாக்கப்பட்டன.
தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.
கோபமே படாமல்
சிரித்துக்கொண்டே இருக்கும் 
முகங்களுடன்
கடவுள்கள் அங்கே கிடந்தார்கள்.
காலஓட்டத்தின்
மனித முகம் மட்டும்
சிதைந்து சிதைந்து
இப்படி
செதில்களாக சிதறிக்கிடக்கின்றன.
வழிபாட்டுக்குரல்கள்
எத்தனை ஒலித்தும்
அந்த ஆபாசங்கள் இன்னும்
கழுவப்படாமல்
சரித்திரம் எனும்
நொண்டி மாட்டு வண்டி 
அச்சு முறிந்தும் 
அதோ
கடகடத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

=====================================================

காதல் எனும் கோரோனா

காதல் எனும்  கோரோனா
=========================================ருத்ரா


உன்னை 
நினைத்து தினமும் வாடுகிறேன்.
அன்றொரு நாள்
ஒரு புன்னகையை என் மீது 
வீசிய பிறகு
அந்த ரோஜாப்பூ
ஏன் முகமே காட்டவில்லை.
எப்போதும் இந்த முட்களைத் தானா
நான் தரிசிப்பது?
எங்கு பார்த்தாலும்
முக கவசங்களின் கடல்.
அதில் தினமும் நீந்துகிறேன்.
அதில் எப்படி என்னை நீ கண்டுபிடிப்பாய்
என்று தானே கேட்கிறாய்?
உன் இரண்டு கண்களின்
மணிச்சுடர்
எனக்கு மட்டுமே வெளிச்சம் காட்டுவது.
உன் இரண்டு கண்களின்
இமைத்துடிப்புகள்
என் இதயத்து நரம்புகளில் மட்டுமே
யாழ் மீட்டும்.
உன் கண்களின் கருவிழிகள்
எனக்குள் மட்டுமே
கலங்கரை விளக்குகளாக சுழலும்.
மறைந்தே போய்விடும் வரை
எந்த விளிம்பிலும் நான்
விழும்படி
துரத்தப்பட்டாலும்
உன் விழிகள் என் இறக்கைகள் அல்லவா!
உன் கண்களில் எத்தனை பசி?
உன் கண்களில் எத்தனை கேள்விகள்?
பதிலை எதிர்பார்க்காத கேள்விகள்.
அவற்றில் சொற்களின் 
நெருப்பு உராய்தல்கள் எத்தனை எத்தனை?
அவற்றில் 
திராட்சைப்பழத்தோட்டங்கள்
திகட்டாத இனிப்பை உள்ளே
பிழிந்து வைத்திருக்கின்றன!
உன் கண்கள் எனும் 
மயிற்பீலிகளில் 
இந்த வானம் மூச்சு முட்ட மூச்சு முட்ட‌
வருடிக்கொடுக்கின்றன.
பிறவிகள் எனும் கணித இனிஃபினிடிகள்
உன் பார்வை விழுதுகளில்
விழுந்து கிடக்கின்றன‌
உதிர்ந்து கிடக்கும் நாவற்பழங்களாய்!
உலகம் முழுவதும் 
தண்ணீரால் மூடப்பட்டு
"வாட்டர் வர்ல்டு" திரைப்படம் போல்
பயமுறுத்தினாலும்
உன் கண்கள் மட்டுமே
என் நுரையீரலுக்குள்
நின்று போகாத‌
இயக்கமாய் என்னை உலவச்செய்யும்.
........................................
................................
வெண்டிலேட்டரை அப்புறப்படுத்திவிட்டார்கள்.
அவன் துடிப்புகள் மட்டும்
அங்கே மிச்சமாய் இருந்தன.
எந்த இடமோ? எந்த குழியோ?
அவன்
அந்தக் கொரோனாவைக் கைப்பிடித்துக்
கிளம்பி விட்டான்.

================================================