வியாழன், 11 ஜூலை, 2024

மனிதம்

 மனிதம்

_________________________________


இதைப்போல‌

மலினம் அடைந்த சொல்

வேறில்லை.

நம் சினங்கள் எல்லாம்

நம் ஆற்றாமை அவலங்கள் எல்லாம்

நியாயம் இறந்த போன‌

தருணங்களின் போது 

நிலை இழந்து நாம்

துயர்ப்படுவ‌தெல்லாம்

நீர்த்துப்போய்

மவுனத்தின் கழுமரம் ஏறி

கடைசி உயிர்ச்சொட்டு

உதிரும்போது

கூடவே உதிரும் சொல் இது.


__________________________________________

கல்லாடன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக