புதன், 30 நவம்பர், 2022

நுனி

 நுனி

________________________________________

ருத்ரா



ஆகா..குரல்

வெண்கலக்குரல்.

பேசும்பொருள் 

கேட்பதற்கு முன்னரே

ஆவியாகப்போய் 

காணாமல் போய்விடும்

கவர்ச்சி நிறைந்தது.

கேட்டாலே போதும்.

கையில் கம்பு கட்டையை 

தூக்கிக்கொண்டு

அவர் குறித்த நபரை

தாக்கி கந்தலாக்கி விட்டுத்தான்

மறுவேலை

என்று மயிர்க்கால் எல்லாம்

மஞ்சள் குங்கும

மதநீர் ஒழுக வைத்துவிடும்.

சோமபானம் காய்ச்சி

வடித்துத்தந்த‌

சொற்கள் எல்லாம்

வானத்திலிருந்து வரும் 

சொற்கள் என்று

பொய்க்குமிழிகள் 

பூதாகரமாய்

இந்த மண்ணை 

கரையான் அரித்தது போல்

அழித்துவிட்டதில்

மிஞ்சி இருப்பதெல்லாம்

வெறித்தீயின் சாம்பல்கள் மட்டுமே.

மானுடமே இந்த சவப்பெட்டிக்குள் தான்.

அதற்கு இறுதி ஆணிகள்

அடிக்கும் சம்மட்டியின் கொடு நிழலே

இது.

இதன் காட்டுக்கூச்சல்களில்

நம் மரண ஒலங்களே

நமக்கு மத்தாப்பு காட்டுகின்றன.

அவை எரிந்து எரிந்து

நம் கையையே பொசுக்கும்

மரண நுனி

இதோ அருகில் அருகில்..

அதுவே இது.

2024.


_______________________________________________________

செவ்வாய், 29 நவம்பர், 2022

ஜெகதீஷ்சந்திரபோஸ்

 

ஜெகதீஷ்சந்திரபோஸ்

_________________________________ருத்ரா


செடி கொடி இனங்களுக்கு

தமிழன் "பயிர்" என்று

பெயர் வைத்ததிலேயே

ஒரு அறிவியல் உளது 

என்று காட்டிவிட்டான்.

அச்சம் மடம் நாணம் அப்புறம்

"பயிர்ப்பு"என்று

சொல் வழங்குவதைப் பாருங்கள்.

பயிர்ப்பு எனும் மெல்லிய சிலிர்ப்பு

உணர்ச்சியையே அந்த சொல் சுட்டுகிறது.

"வாடிய பயிரை"கண்ட போதெல்லாம்

நம் வள்ளலார் வந்து விடுகிறார்.

ஜெகதீஷ் சந்திரபோஸ்

"பயிர் என்றால் உயிர்"

என்ற தமிழ் விஞ்ஞானத்தை

நமக்கு புகட்டிவிட்டார்.

போஸின் அறிவியல் ஒரு 

சிந்தனைப்புரட்சியின் வடிவம் தான்.

இயற்கையின் அறிவியல் அவரிடம்

உயிர் மூச்சாய் இழைந்து

இந்த உலகிற்கு ஒரு வெளிச்சம்

தந்திருக்கிறது.

அந்த மேதையின் புகழ் ஓங்குக!


________________________________________________

சத்தியேந்திரநாத் போஸ்!

சத்தியேந்திரநாத் போஸ்!

_____________________________________



இயற்பியல் மேதையே!

உன் பெயரைத் தொட்டுக்கொண்டு தான்

இந்த பிரபஞ்சமே 

அந்த ஊசிமுனையில் 

களிநடம் புரிகிறது.

அதுவே "போஸான்"

வாழ்க வாழ்க நீ.

இறப்பே இல்லாத அறிவொளியின்

ஒரு வழிப்பாதை நீ.

அதுவே மனிதனின் வெற்றி.

________________________________

சொற்கீரன்



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்!

_______________________________________________



அருகில் யாழ் இல்லை.

அதன் நரம்புகள் இல்லை.

இருப்பினும் 

அகன்றதொரு வானின்

வெளிச்சமாய்

எப்போதுமே

ஒரு உற்சாகத்தையும் உந்துவிசையையும்

மானிடராகமாய்

பண் இசைத்துக்கொண்டிருக்கும்

உன் அப்பா

செங்கோடியை

தொட்டுக்கொண்டு தான்

எனக்கு விடிகிறது.

கல்லிடைக்குறிச்சியின்

பளிங்கு நீர் வாய்க்காலும் பசும்புல்லும்

அவனைக்கொண்டு தான்

துளிர்த்து சிரிக்கிறது.

அன்பின் கார்த்திக்

நீடுழி நீடூழி நீ வாழ்க!

உன் இனிய குடும்பம்

எல்லா நலங்களும் செழித்துச் சிறந்து

வாழ்க!வாழ்க!வாழ்கவே!


அன்புடன்

பெரியப்பா ..பெரியம்மா


மதுரை‍ 7

30.11.2022

___________________________________________












கொழுநிழல் மறைக்கும் . . . . . .

 


கொழுநிழல் மறைக்கும்.............

___________________________________________________

சொற்கீரன்




கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின்

வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ

உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும் 

வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை

சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே.

வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும்

மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே 

பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார்

கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை

அரசிலை எஃகம் தனியன் ஏந்தி 

வரும் கொல் என துயில் மறுத்து

நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்.

புள் மொழி ஓர்த்து புதல் மறைத்து ஆங்கே

புல்லென ஒலிக்கும் நிமித்தம் அஞ்சும்.

பொருளும் வேண்டாம் புதைபடு இருளின்

மருளும் வேண்டாம் எல்லே உயிர்க்கும்

அவன் புன்னகை ஈண்டு புகுதந்திடுக என‌

இறை இறைஞ்சும்மே இறைவளை நெகிழ.


_________________________________________________________


குறிப்புரை

_________________


(நக்கண்ணையார் பெண்பாற்புலவர் ஆவார். ’பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணை’ எனவும் கூறப்படுவார்.இப்பாடலில் வரும் "ஆளி" என்பது நம் தமிழின் தொன்மை அடையாள விலங்கான"யாழி"யைக்குறிக்கும். புலியைக்கண்டு யானை அஞ்சும்.இவை இரண்டுமே யாழியைக்கண்டு மிகவும் அஞ்சும்.அத்தகைய வெஞ்சுரம் ஏகி பொருள் தேட்டைக்குப் போன தலைவனை எண்ணி எண்ணி அஞ்சும் தலைவியின் நிலப்பாட்டையே நான்இந்த சங்க நடைச்செய்யுளில் எழுதியிருக்கிறேன்.......சொற்கீரன்)



திங்கள், 28 நவம்பர், 2022

கோடு

 கோடு

_________________________________

ருத்ரா




மூச்.

இதற்கு மேல் பேசாதே

எதையும் கேட்காதே

எதையும் பார்க்காதே

ஒரு குரல்

நம் பிடறிக்குப்பின்னே

நம்மை இழுத்து நிறுத்தியிருக்கிறது.

அறிவு என்பது

கோடுகளை உடைப்பது.

விளிம்புகளை கடப்பது.

வாசல்களை திறப்பது.

அச்சம் எனும்

துருப்பிடித்த பூட்டுகளை

அடித்து நொறுக்குவது.

முன்னே ஒரு குரல்

நம்மை ஈர்க்கிறது.

இருட்டுக்குள் 

மேலும் ஒரு இருட்டான‌

கோட்டை தாண்ட அஞ்சிய கால்கள்

முடமாகின.

விளிம்பு எனும் ஊசி முனையில்

நின்றுகொண்டு

விழாமல் நிற்கிறோம்

கையில் சிந்தனைச்சுடர் ஏந்தி.

ஒரு சிறுவன் வரைந்த‌

கோட்டுச்சித்திரமாய்

பிரபஞ்சங்கள்

மேல் அடுக்கிய‌

கோடி கோடி பிரபஞ்சங்கள்.

கோடு ஆவியாகி அகன்றது.

விளிம்பு எல்லாம் நம்

சொகுசு மாளிகை ஆனது.

நமக்கு விளக்கு ஏந்த

குட்டிச்சூரியன்கள்.

நியூகிளியர் ஃப்யூஷன் 

எனும் அறிவின் திறவுகோல்

இந்த இருட்டுப்பிழம்பையே

பழரசம் ஆக்கி நீட்டுகிறது.

மனிதனின்

துளியிலும் துளியாய்

இருக்கும் 

உந்து விசை

குவாண்டமாய்

கிரீடம் சூட்டிக்கொண்டிருக்கிறது.

மனித ஆற்றலின்

வர்ணமற்ற வர்ணத்துக்கா

பொய்மைப்புருசுகொண்டு

வர்ணம் தீட்ட வருகிறீர்கள்?

சோமச்செடி என்றாலும் 

கஞ்சாச்செடி என்றாலும்

போதை போதை தானே.

அது கடவுளின் குரல் என்று

உங்கள் மூலம் 

பாஷ்யங்களாய்

எங்களை ஏமாற்றியது எல்லாம்

புரிந்து கொண்டோம்.

அறிவே அகண்ட மானிடம்.

மற்றக்

குப்பைகள் எல்லாம் அகலட்டும்.


______________________________________________





வீட்டு முற்றத்து கிரில்

 நிழலாடு முன்றில்

______________________________________________

சொற்கீரன்



வீட்டு முற்றத்து கிரில் 

வீட்டுக்குள்

சூரியனைக்கொண்டு

நிழலைக்கலந்து

பிக்காசோவை பிசைந்து

ஊற்றியிருந்தது.

கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி

கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்

பாம்புகளாய் நெளிந்து

சிரித்துக்கொண்டிருந்தாள்.

காற்றெல்லாம் நஞ்சு.

எப்படி நஞ்சு கூடவா அழகு?

ஆமாம் 

இரண்டும் ஒன்று தான்.

அது அரக்கர்களிடம் இருந்தால்

நஞ்சு.

தேவர்களிடம் இருந்தால் அது

அமுதம்.

என்ன ஒரு மோசமான கணிதம்?

சமன்பாட்டை மாற்றிவிடத்தான்

சிவன் எண்ணினான்.

அதை அவனே குடித்துக்கொண்டான்.

அப்படியும் 

பிதுங்கி வெளியே வழிந்தது

நான்கு வர்ணமாய்!

அது அவனுக்கு மட்டுமே தெரியும்.

தேவர்களே அரக்கர்கள் என்றும்.

அரக்கர்களே தேவர்கள் என்றும்.

அதை தெரிவிக்க‌

அதோ

அவன் உடுக்கை ஒலிகள்

துடிக்க துடிக்க‌

கேட்டுக்க்கொண்டே இருகின்றன.

மாலை வந்தது.

நிழல்கள் கரைந்தன.

சமநீதியற்ற அந்த‌

நிஜங்களின் முள் மண்டிய‌

தேசத்தில் 

கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌

அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்

அந்த‌

"ஊர்த்துவ தாண்டத்தை"


_____________________________________________________


ஞாயிறு, 27 நவம்பர், 2022

நிழலாடு முன்றில்


 நிழலாடு முன்றில்

_______________________________________________

சொற்கீரன்




வீட்டு முற்றத்து கிரில் 


வீட்டுக்குள்


சூரியனைக்கொண்டு


நிழலைக்கலந்து


பிக்காசோவை பிசைந்து


ஊற்றியிருந்தது.


கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி


மெடுஸா 


கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்


பாம்புகளாய் நெளிந்து


சிரித்துக்கொண்டிருந்தாள்.


காற்றெல்லாம் நஞ்சு.


எப்படி நஞ்சு கூடவா அழகு?


ஆமாம் 


இரண்டும் ஒன்று தான்.


அது அரக்கர்களிடம் இருந்தால்


நஞ்சு.


தேவர்களிடம் இருந்தால் அது


அமுதம்.


என்ன ஒரு மோசமான கணிதம்?


சமன்பாட்டை மாற்றிவிடத்தான்


சிவன் எண்ணினான்.


அதை அவனே குடித்துக்கொண்டான்.


அப்படியும் 


பிதுங்கி வெளியே வழிந்தது


நான்கு வர்ணமாய்!


அது அவனுக்கு மட்டுமே தெரியும்.


தேவர்களே அரக்கர்கள் என்றும்.


அரக்கர்களே தேவர்கள் என்றும்.


அதை தெரிவிக்க‌


அதோ


அவன் உடுக்கை ஒலிகள்


துடிக்க துடிக்க‌


கேட்டுக்க்கொண்டே இருகின்றன.


மாலை வந்தது.


நிழல்கள் கரைந்தன.


சமநீதியற்ற அந்த‌


நிஜங்களின் முள் மண்டிய‌


தேசத்தில் 


கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌


அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்


அந்த‌


"ஊர்த்துவ தாண்டத்தை"


_______________________________________


கனவுக்குள் கனவாய்...

 கனவுக்குள் கனவாய்...

____________________________________

ருத்ரா


ஒரு கனவு காண்பதாக‌

ஒரு கனவு.

கடவுளை

கனவுகளின் கனவாகத்தான்

தரிசிக்கிறோம்.

தூக்கத்தை சுற்றிவைத்துக்கொண்ட‌

ஒரு விழிப்பின் கணப்பில்

கண்களின் உள் நெருப்பில்

கடவுளை

வார்த்துக்கொள்கிறோம்.

என் முகத்தில் மற்றவர் முகம்.

மற்றவர்கள் முகத்தில்

என் முகம் என்று

ஆயிரமாயிரம் பிம்பங்கள்

கருவுற்றதில்

உருவு தெளிவு இல்லை.

நிழல்களின் நெளியல்களும் சுழியல்களும்

இங்கு 

ஒவ்வொரு பாஷ்யங்கள்.

மனிதனுக்குள் கடவுள்

கடவுளுக்குள் மனிதன்

என்று மந்திரம் சொல்லிவிட்டு

அப்புறம் ஏன்

அசிங்கமாய் இந்த‌

நாலு வர்ண பிலாக்கணங்கள்?

கொன்றுவிட்ட கடவுளை

பிணமாக நிறுத்தி வைத்துக்கொண்டு

எதற்கு இத்தனை

நைவேத்தியங்களும் அர்ச்சனைகளும்?

இருங்கள்..

சற்று பொறுங்கள்.

எங்களுக்கு மனம் புண்பட்டு விட்டது

என்று தானே

சொல்லப்போகிறீர்கள்.

தினம் தினம் உங்கள்

மொக்கைச்சொற்களைக்கொண்டு

தாக்கு தாக்கு என்று

தாக்கியதில்

புண்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாய்

கிடக்கிறாரே கடவுள்..

அதற்கு யாரை சிறை வைப்பது?

உங்களையா?

உங்கள் கூச்சல் பாஷைகளையா?



___________________________________________



















வெள்ளி, 25 நவம்பர், 2022

வனம்.

 வனம்.

____________________________________________________

ருத்ரா




எனக்கு என்ன வேண்டும் என்று

எனக்குத்தெரியாது

என்று ஒரு மனிதன் 

எய்தும் நிலை 

கடவுள் நிலையா?

"ஆட்டிசம்"நிலையா?

இரண்டிலும் 

நினவு ஓர்மை முதலியன‌

கழன்று விட்ட நிலை தான்.

இதில் முதல் நிலைஞர் யார்?

இரண்டாம் நிலைஞர் யார்?

யாரானால் என்ன?

அவர்கள் இருக்கும் இடம்

ஒன்று கோயில் ஆக இருக்கும்.

இல்லாவிட்டால் 

குணப்படுத்த முடியாத நோய்களுக்கு 

மருத்துவம் தருவதாக முயற்சிகள்

மட்டும் நடந்து கொண்டே இருக்கும்

மருத்துவ மனையாக இருக்கும்.

மிருகம் தான்

வளர்ச்சியின் உயர்ந்த நிலையில்

மனிதன் ஆகிறான்.

இன்னும் இன்னும் உயர்ச்சி பெற்ற‌

மனிதன் யார்?

மீண்டும் அவன் மனிதனே.

மனிதன் இயல்பு 

வளர்ந்து கொண்டே இருப்பது.

மலர்ந்து கொண்டே இருப்பது.

மொத்தமாய் பில்லியன்கள் கணக்கில்

அவன் பெருகிக்கொண்டே இருந்தாலும்

அவன் 

மொத்த மனித இனத்தை

ஒரு நேயம் கொண்டு கோர்த்துக்கொள்கிறான்.

அந்த மனிதம் தான்

புரிந்து கொள்ளப்படவேண்டும்.

உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

இதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்படாத வரை

இங்கு கடவுள்களின் குத்தாட்டமே தான்.

கண் கூசுகிறது

இந்த "லேசர்"வனங்களில்.


_________________________________________________________________




செவ்வாய், 22 நவம்பர், 2022

நீ மட்டும் தான்.

 

நீ மட்டும் தான்.

_______________________________________________

ருத்ரா


ஜாபாலா முனிவர் சொல்லுகிறார்.

"புருவமத்தியில் 

அவிமுக்தம் எனும்

குண்டலினியின்

உச்சாங்கிளை இருக்கிறது.

அதற்கு சன்யாசம் எனும் 

கோடரி கொண்டு

அடிக்கிளையான அறிவுகளை

வாழ்க்கை முடிச்சுகளை

வெட்டிவிடு " என்று.

வீடு எனும் முக்தி பற்றி.

எதிலிருந்து எதற்கு விடுதலை வேண்டும்?
மனித சிந்தனையில்
எப்பொழுது தேக்கம் ஏற்படுகிறதோ
அப்பொழுது தான்
பாழ்வெளிகள் தோன்றுகின்றன.
ஆம்.
அந்த அழகிய பூமி கூட‌
அவனுக்கு சூன்யம் ஆகிவிடுகிறது.
பிறக்கிறாய்
இறக்கிறாய்.
எதற்கு பிறந்தாய்?
எதற்கு இறந்தாய்?
இந்த‌ கேள்விகள்
வெறும் மொக்கையானவை.
ஆன்மீக பொக்கிஷம்
என்று
வெறும் புழுக்களாய்
நெளிந்து கொண்டிருப்பது தான்
இந்திய தத்துவம்.
ஐரோப்பியன்
உயிரின் உந்துதலை உணர்ந்து
உயிர்ச்சங்கிலியின்
முன்னும் பின்னும் பார்வையிடுகிறான்.
இந்த இன்டர்பொலேஷன் எக்ஸ்ட்ராபொலேஷனில்
காலம் எனும் முழுமையை
ஆராய்ச்சி செய்கிறான்.
சும்மா நடந்து கொண்டிருந்தவன்
பறவையின் இறக்கையை
மாட்டிக்கொள்ளலாமா என்று நினைக்கிறான்.
காற்றுப்படலங்களுக்குள்
படுத்துக்கொண்டிருக்கிற‌
வெளியையும் அதனுள்
நெசவு செய்து கொண்டிருக்கும்
மின்காந்தப்படுகையையும்
தொட்டுப்பார்த்து விடுகிறான்.
அது அறிவின் புரட்சி.
அதி சிந்தனையின் வெளிச்சம்.
இங்கே
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே இருக்கிற சூன்யம்
நம்மை என்னவோ பாடாய் படுத்துக்கிறது.
அப்போது
அவனுக்குக்கிடைத்த முட்டுச்சந்து
பிரம்மம்.
உயிர்களே போதும்
நீங்கள் உண்டு உடுத்து உறங்கியது.
உங்கள் எலும்பு சதைகளை
உரித்து எறியுங்கள்.
உயிர்க்குப்பின் நீங்கள் உலாவ‌
ஒரு திடல் உண்டு.
ஒரு இன்பத்தீவு எனும் சொர்க்கம் உண்டு.
அதுவே முக்தி.
அதை நோக்கி நடக்க
ஒரு ஊன்றுகோல் உண்டு
அது பிரம்மம்.
பாருங்கள் அந்த முட்டுச்சந்து
அவனுக்குள் ஒரு
மன முறிவை ஏற்படுத்துகிறது.
அதன் ஊளையும் ஊங்காரமும்
வெறி கொள்கிறது.
பேதங்களின் தோற்றங்களில்
மனிதம் எனும் வெளிச்சத்தையே
வேண்டாம் என்று
மரண குழிக்குள் சமாதியாவதையே
பிரம்மம் என்கிறது.
மனித மதிப்புகள்
வர்ணங்களுக்குள் எரிந்து போகின்றன.
வெறியோடு
எதையோ எதுவோ
ஆதிக்கம் செய்வதே பிரம்மம்
என்று கூப்பாடு போடுகிறது.
அந்த கூச்சல் மொழி
வெட்டியானாய் மாறி
மனிதத்தையே சுட்டுப்பொசுக்கி
சாம்பல் ஆக்குகிறது.
மேலை அறிவு வாசனையைக்கொண்டு கூட‌
இந்த வெறியின் வேதாந்தம்
அக்கினி வளர்த்துக்கொண்டே இருக்கிறது.
மனிதா
உன் மோட்சம் முக்தி எல்லாம்
இந்த பொய் அறிவின் தேக்கத்தை
உடைத்து நொறுக்குவது தான்.
குப்பையாய் மக்கிக்கிடக்கும் மக்களின்
அறிவுச்செதில்களிலிருந்து
பெரு வெளிச்சம் தோற்றுவிப்பது தான்.
மனித ஆளுமையின் நிழல் தான்
ஆத்மா.
நிழல் ஏற்படுத்தும்
முதல் அறிவை
மனித மலர்ச்சியை
அழித்து விட்டால்
ஆத்மா ஏது? பிரம்மம் ஏது?
இந்த பிம்பங்களுக்கு
இவர்கள் கும்பாபிஷேகம்
நடத்திக்கொண்டிருக்கட்டும்.
அறிவின் ஒளி நோக்கி
இந்த பிரபஞ்சங்களின் ஜியாமெட்ரியை
மாற்றி அமைத்து
புதிய கணித தேற்றங்களை எழுது.
கடவுள் என்ற‌
பாறாங்கல்லை
உன்னை இடறவிடாதே.
அதைப் படி பரவாயில்லை.
அல்லது
உன் படிகளாய் செதுக்கிக்கொண்டு
அதையும் மீறிச்செல்.
வெளிச்சமே எல்லாம்.
அதற்குள் ஒரு
இருட்டு ஆற்றலும் இருட்டுப்பிண்டமும்
டார்க் எனர்ஜி..டார்க் மேட்டர் என்று
மொத்தமாய் மூளியாய்
திரண்டு இருக்கும் விஞ்ஞானத்தையும்
தோலுரிப்பவன் மனிதனே.
மனிதா
அது நீ தான்.
நீ மட்டும் தான்.

_____________________________________________

திங்கள், 21 நவம்பர், 2022

ஒடக்காய்

 


பதரே பதரே..

__________________________________________


ஒரு திரைப்படக்காட்சி.

நான் கோவையில் இருக்கும் போது

பெரியநாயக்கன் பாளையம் எனும்

ஒரு அரை நகரத்தில்

ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது

ஊருக்குள் வாக்கிங் செல்வது உண்டு.

அப்போது நாலைந்து சிறுவர்கள்

கையில் சிறிய நீண்ட கம்பு வைத்துக்கொண்டு

அங்கேயும் இங்கேயும் 

அலைந்து கொண்டிருப்பார்கள்.

அண்ணா...ஒடக்காய் அடிக்க‌

ஓடுகிறோம் என்பார்கள்.

அந்த திரைப்படம் இக்காட்சியை

அப்படியே அச்சடித்து காட்டியது.

அந்த ஒடக்காயை விடாதீங்கடா

என்பான் ஒருவன்.

அதற்குள் அதன் வாலை சிறு கயிற்றில்

கட்டி அதை ஓட விட்டு

மேய்த்துக்கொண்டிருப்பான் 

இன்னொருவன்.

இவர்களின் "வாலி வதைப்"படலத்தில் 

கண்ணைப்பிதுக்கி

குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும்

அந்த ஒடக்காய் என்ற ஓணான்.

டே அடிக்காதீங்கடா..பாவண்டா

உட்டுருங்கடா என்பார்

கமலஹாசன் என்ற சப்பாணி.

போங்கண்ணா உங்களுக்கு தெரியாது.

அது ராமருக்கு ஒண்ணுக்கு அடிச்சிக் குடுத்துது.

ராமாயணத்தில் இப்படி ஒரு

இன்னா நாற்றக் காண்டம் இருப்பது

இப்போது தான் தெரிகிறது.

"சரிடா..விட்டுடுங்கடா..அதை.

இனி அது ஒண்ணுக்கே அடிக்காது"

இப்படி அவர் சொல்லும்போது

அவர்காட்டும் 

நகைச்சுவை

அப்பாவித்தனம்

அச்சம் 

அனுதாபம் எல்லாம் கலந்த

அற்புத நடிப்பை நம்மால்

மறக்கவே முடியாது.

அதற்கே தனியாக 

ஒரு "ஆஸ்கார்"கொடுக்கலாம்.

அந்த இடத்தில் 

உலகளாவிய இலக்கிய உலகில்

ஒரு தலைசிறந்த எழுத்தாளரை

நிறுத்தி வைத்துப்பாருங்கள்.

அவர் தான் நம் பதிப்புக்கும் பெருமைக்கும்

உரிய திரு பெருமாள் முருகன் அவர்கள்.

அந்த ஒடக்காய் தான் 

அவர் எழுதிய‌

"மாதொரு பாகன்" எனும்

ஒப்பற்ற நாவல்.

அந்த விடலைச்சிறுவர்கள் தான்

"ஆண்ட பரம்பரைடா"

எனும் கூச்சல்காரர்கள்.

ஒரு உயிர்த்துடிப்பான நாவல் என்பது

ஆயிரம் ஆயிரம் பக்கங்களில்

பெய்யும் "மையின்"அடர்மழை அல்ல.

கல்லெறிகளிலும்

ரத்த விளாறுகளிலும்

மரண காயங்களிலும்

உயிர்ப்பலிகளிலும்

உருவாவதே அந்த‌

உயிர்த்துடிப்பான எழுத்துக்கள்.

அந்த ஆசிரியர் எழுதியதே

ஆனந்த விகடன் தீபாவளி இதழில்

வெளி வந்த‌

"பதரே பதரே"

இதுவும் ஒரு "பாதர் பாஞ்சாலி"குவாலிடி

சிறுகதை தான்.

மனம் எனும் கலைடோஸ்கோப்பை

வண்ண வண்ணமாய் 

திருப்பி திருப்பிக்காட்டும்

அற்புதக்கதை.

அந்த எழுத்துக்களின் தீயில்

குளித்து எழ முடியாது.

எரிந்து தான் குளிக்க முடியும்.

அதையும் தான் பார்த்துவிடுவோமே


(தொடரும்)

_______________________________________________

ருத்ரா

ஞாயிறு, 20 நவம்பர், 2022

வாக்குறுதிகள்.

 வாக்குறுதிகள்.

_____________________________________

ருத்ரா



பாதை மங்கல்.

புகை மூட்டம்.

முகமும் தெரியவில்லை.

முகவரியும் தெரியவில்லை.

என்ன செய்வார்கள்?

எப்படி செய்வார்கள்?

இனி 

உங்களுக்கு

கல்வியே தேவை இல்லை.

கல்வியை வைத்துக்கொண்டு

தீப்பொறி உரசுகிறீர்கள்.

இருட்டையும் 

கிளறி கிளறி

நட்சத்திரங்களைக்கூட‌

மடி நிறைய அள்ளி

வைத்துக்கொள்கிறீர்கள்.

மறு பிறவி மண்ணாங்கட்டிகள்

இருக்கட்டும்.

இப்பிறவியிலேயே

சொர்க்கங்களை

கிலோ பத்துரூபாய்

என்று 

பொட்டலம் கட்டித்தந்து விடுங்கள்

என்கிறீர்கள்.

அதெல்லாம் போகட்டும்

ஓட்டுக்கு

ஸ்கூட்டர்கள் தருகிறீர்களா

சந்தோஷம்.

வீடுகள் தருகிறீர்களா

சந்தோஷம்.

அட சுடுகாடுகளைக்கூட‌

டிஜிடல் ஆக்கித்தருகிறீர்களா

ரொம்ப சந்தோஷம்.

என்னது?

எங்களையும் பிராமணர்கள்

ஆக்கி விடுகிறோம் 

என்கிறீர்களா?

ஆகா!ஆகா!

திவ்யம்..திவ்யம்.

"அஹம் ப்ரஹ்மாஸ்மி"

"தத்வமஸி"...

அப்புறம் என்ன?

இனி எல்லாம் சமம் தான்.

மரம் மட்டை புழு பூச்சிக்கு கூட 

பூணூல் தான்.

அதோ கத்திக்கொண்டு ஒடுகிறதே 

அந்த எருமையின் குரலும் 

வேதம் தான்!


_____________________________________________________


சனி, 19 நவம்பர், 2022

பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

 பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

__________________________________________________

ருத்ரா


காதறுந்த ஊசியும் வாராது காண்

கடைவழிக்கே

வாழ்க்கையே ஒரு தத்துவம்.

இது வாழ்க்கையை 

கரடு முரடாய் பார்க்காத‌

தெருவில் பம்பரம் விளையாடும்

சிறுவர்களின் மகிழ்ச்சிக்குமிழி ஒன்று

மூச்சு விடும் தருணங்களின்

அடிவயிற்றுக்கடல்.

ஊசிமுனைக்காதில் ஒட்டகங்கள்

நுழையலாம்

பணக்காரர்களுக்கு சொர்க்கம் இல்லை.

ஏழைகளாக இருப்பதே

இறைவனுக்கு மிக அருகில் 

இருக்கும் இடம்.

இறைவன் என்றால் கொம்பு முளைத்தவனா என்ன?

இந்த இறுமாப்பு தான்

விடுதலை பெற்ற எண்ண ஒழுக்கு.

இறைவன் அருகே இருப்பவன் தான்

இப்படி பட்டவர்த்தமான மொழியில்

இறைவனை உற்றுப்பார்க்க முடியும்.

பணம் என்றால் இறைவன் தான்

என்ற‌

ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறதே.

அதுவும் பெண் உருவில் அழகாகவே

இருக்கிறது.

பண மறுப்பு வாதம்

கடவுள் மறுப்பு வாதம் அல்ல.

எல்லோரும் 

மகிழ்ச்சியாய் இருப்பது.

எல்லோருக்குள்ளும்

கடவுள் இருப்பது

அல்லது

அப்படி எதுவுமே இல்லாமல்

ஒரே வெள்ளையாய் கருப்பாய்

இருப்பது.

இப்படி பம்பரம் விடுவது எல்லாம்

உருமா கட்டப்படும் அடையாளம் தான்.

கூடவே நடந்துவரும்

இன்னொரு மனிதனுக்கு

கோரைப்பல் கொம்பு இருப்பதாய்

பகைப்புகை எப்படி கிளம்புகிறது.

ஒரு குருட்டுத்தனம்

வெறித்தனம் ஆகி

கொழுந்து விடுகிறது.

ஏதோ ஒரு பயம் இருட்டாய்

அதுவே பயமுறுத்தும் நிழலாய்

விரிகிறது.

சரி போகட்டும் வெறும் நிழல் தானே!

அதை கொஞ்சம் உற்றுப்பார்ப்பதற்குள்

எத்தனை

ரத்த ஆறுகள்?

எத்தனை எத்தனை

கபாலக்குவியல்கள்?

மனிதப்பரிமாணம்

மனிதனை விட்டு கழன்று விடுகிறது.

அப்புறம்

வரலாறுகள் கூர்மை மழுங்கி

மூளியாகி விடுகின்றன.

மீண்டும் எப்போது

கண்ணைத்திறக்கும் 

வெளிச்சம் வரும்.

மண்டையில் வெறும் கொண்டை வைத்த‌

பம்பரங்கள்

இங்கே சுழன்றுகொண்டிருக்கின்றன.

நிற்கும் போது 

திசைகள் அழிந்து

சுழன்று கொண்டேயிருக்கின்றன.

_______________________________________________________










ப்ராபபலிடி

 ப்ராபபலிடி

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________

ருத்ரா


சோழி குலுக்கிப்போடலாமா?

எதற்கு?

ஒற்றையா ரெட்டையா விளையாட்டுக்குத்தான்.

எப்படி?

குலுக்கிப்போட்டு பார்த்து

ஒற்றைப்படை வந்தால் 

நீ இருக்கிறாய் என்று பொருள்.

இரட்டைப்படை வந்தால்

நான் இருக்கிறேன்

என்று பொருள்.

அமர்த்தலான சிரிப்புடன்

சோழிகளை குலுக்கிக்கொண்டே இருந்தது

சைத்தான் கடவுளின் எதிரில் உட்கார்ந்து.

சோழிகள் சிதறின.

எண்ணிப்பார்த்து சொல்லவேண்டும்.

விண்ணில் எத்தனை நட்சத்திரப்புள்ளிகள் என்று?

கடவுளுக்கு அக்கறையில்லை.

சைத்தானும் கவலைப்படவில்லை.

அதோ

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

துருவிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

யாரால் யார்?

யாரிடம் யார்?

யாருக்கு யார்?

இந்த கேள்விகள் விடைகளை எதிர்பார்க்கவில்லை.

அந்த விடைகளுக்கும் கேள்விகள் தேவையில்லை.

இருப்பினும்

விளையாட்டு தொடர்ந்து கொண்டேஇருக்கிறது.


_____________________________________________________


என்ன தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கிறது?

தமிழில் என்ன தலைப்பு?

"நிகழ்தகைமை"

புரிந்தது போலும் இருக்கிறது.

புரியாதது போலும் இருக்கிறது.

கடவுளும் சைத்தானும் அப்படியே.

_____________________________________________________

ருத்ரா


வியாழன், 17 நவம்பர், 2022

சரணம் அய்யப்பா.

 சரணம் அய்யப்பா.


‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________


ருத்ரா








சாமியே சரணம் அய்யப்பா.


இதை மீண்டும் மீண்டும்


கேளுங்கள்.


அது அந்த தூய புத்தனை


சரணம் அடைந்தவர்களின்


அடிவயிற்று முழக்கம் அது.


சங்கம் சரணம் கச்சாமி


என்ற தூய 


மானிட சங்கம் நோக்கித்தான்


அதுவும் ஒலியெழுப்புகிறது.


வைதிகம் கவ்விப்பிடித்திருக்கிற‌


காரணத்தால்


புராணக்கதைகள் அதில் 


ஒட்டிகொண்டன.


நாயர் புடிச்ச புலிவால் கதை தான்.


அந்த யாத்திரையின் நடுவில்


வாவர் சாமிகள்


எனும் பாபர் சாமிகள் தான்


ஐயப்பனின் அத்யந்த நண்பராக‌


இருக்கிறார்.


அவருக்கும் சேர்த்து தான்


பக்தர்களின் யாத்திரை இங்கு


தொடர்கிறது.


இந்த வாவரைக்காட்டி


ஐயப்பனைப்பிரிக்க


இவர்கள் நினைத்தால்


ஐயப்பனே அந்த‌


அந்த மசூதிக்குள் போய் 


உட்கார்ந்து கொள்வார்.


இது தான் 


"நாயர் புடிச்ச புலி வால்" என்பது.


மிகவும் "வைராக்கியம்" மிகுந்த‌


தபசு இவருடையது.


அதனால் தான் அந்த‌


சாவதானமான‌


பத்மாசனைத்தை  விட்டு


முழங்கால்களை மடக்கி


குத்த வைத்த அந்த‌


கடினமான ஆசனத்தில் 


அமர்ந்து இருக்கிறார் அய்யப்பன்.


இரு முடிகளோடு


கல்லையும் முள்ளையும்


காலுக்கு மெத்தையாக்கி


ஊர்கின்றன.


பிறப்பு என்பது தாய்மையின் வாசல்.


அது தோன்றும் இடமே


பிரம்மமும் தோன்றுகிறது.


அது எப்படி பாவத்துவாரம் ஆகும்?


அது எப்படி தீட்டு ஆகும்.


அங்கு கன்னிக்குடம் உடைத்து


வரும் பிரம்மம் கூட‌


தீட்டு ஆகிவிடுமா?


அதனால் தானே உச்சநீதி மன்றமும்


அந்த தீர்ப்பை நல்கியது.


பெண்களும் 


படியேறி வந்து 


படிநிலையில் 


அவள் ஒரு கொற்றவை ஆகலாம்


என்பது தானே உட்குறிப்பு.


ஆனால் பழமை வாதிகளோ


அந்த தீண்டாமைக்கு 


இன்னும் பூண் பிடிக்க‌


நீதி மன்றத்திற்கு 


போய்க்கொண்டிருக்கிறார்கள் 


அன்பு தானே படைப்பின்


உலக மகா ஊற்று.


இது தானே "தெளிவு" எனும் ஒளிர்வு.


இதை சமஸ்கிருதத்தில் பிரசாதம் என்று 


சொல்லி அப்பமாய் அதிரசமாய்


உண்கிறோம்.


இந்த வெளிச்சம் தானே


அந்த காந்தமலையில் 


மகரஜோதியாய் தெரிகிறது.


அன்பு கொழுந்து விட்டு எரிந்து


சுடர் காட்டும் இந்த‌


மனித உணர்வே பக்தியின் அடிப்படை.


மனித உணர்வில் பேதங்கள் வளர்க்கும்


அசுரத்தனம்


கொளுத்தப்படத்தானே வேண்டும்.


சாமியேயே...ய் 


சரணம் அய்ய்..யப்பா!


இந்த அடிமனத்து ஆழத்தின்


முழக்கம் 


உலகமெல்லாம் கேட்க வேண்டும்.




__________________________________________________________‍


குயில் குரல்கற்ற வேனில்

 குயில் குரல்கற்ற  வேனில்

______________________________________________________

சொற்கீரன்


மாமை மணிநிறம் மறப்ப விடாது

இலஞ்சி அடர்நிழல் அருகு சினைஇய‌

பழுப்புத்தீயின் தளிர்மின் கலிப்ப‌

மாவும் நோக்கும் என் பசலை ஆர்த்து.

புன்காற் பாதிரி வரிநிழல் தூஉய்

தும்பி சேர் நெடுவனம் கல்லென எடுக்கும்

புலம்பொலி மறக்கல் நேராது ஈண்டு

என் மொழி அவன்பால் நுணங்கறல் போன்ம் 

நீள்வரி எழுதும் என் கண்ணிணை நோக்கும்.

வேனில் பொறிகிளர் வெங்கான் பறந்தலை

துடிசெய் அம்புள் கருங்குயிலும்

என் புலம்புகொள் பண்ணில் தன்

அலம்பல் தீங்குரல் கற்றிட வருமே.

குயில் குரல்கற்ற  வேனில்  இவண்

மாறுகொள் நோன்றல் எய்தியது என்னே.


_____________________________________________________________



செவ்வாய், 15 நவம்பர், 2022

பாடுங்கள் ஒரு பாட்டு.


உங்களுக்கு நான் 

எத்தனை தடவை தான் சொல்வது?

என்னைத்தேடி

கூட்டம் கூட்டமாய் வந்து

ஈசல் சிறகுகள் உதிர்த்து

மீண்டும் சிறகுகள் முளைத்து

மீண்டும் மீண்டும்

சிறகுகள் உதிர்த்து

என்னத்தைக்கண்டீர்கள்?

கல்லில் இறுகிக்கிடக்கும்

அந்த மூடத்தனத்தை தான்

எத்தனை 

தடவைகள் தான் குளிப்பாட்டுவீர்கள்?

அதிலும் நீங்கள் குடமுழுக்கு என்று

சொல்லிவிட்டால்..

அதெல்லாம் இல்லை..

அந்த நீச பாஷையெல்லாம் வேண்டாம்.

கும்பாபிஷேகம் என்றால் தான்

கர்மம் தொலையும்.

தீட்டு கழியும் 

என்பார்கள்.

நீங்களே

உங்கள் உழைப்பின் நரம்புகள்

தெறிக்க கட்டிய கோவில்கள்

நீங்கள் நுழைந்து விட்டதால்

எப்படிப்பாவப்படும்?

எப்படித்தீட்டுப்படும்?

அதை தூய்மைப்படுத்துவதாய்

சொல்லும் மந்திரங்கள்..

உங்களின் அடிமைச்சேறு

என்பதை 

எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

போதும் ஈசல் சிறகுகளே.

இந்த வானம் முழுதும் 

உங்கள் அறிவின் சிறகுகளால்

தூய்மைப்படுவது உங்களுக்கு

தெரியவில்லையா?

ஓ மனிதர்களே!

இறைவா என்று என்னை நோக்கி

நீங்கள் கைகள் குவித்தாலும்

உங்களிடம் தான் இருக்கிறது

என் அறிவின் பல்கலைக்கழகம் எல்லாம்.

இவர்களின் எச்சில் தெறிப்புகளை

என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

என்னைக்காப்பாற்றுங்கள்.

உங்கள் நெஞ்சில் 

மனித அன்பின் கூடு ஒன்றை

கட்டிக்கொள்ளுங்கள்.

அதில் அந்த‌ சிறகொலிகள்

உங்களை சிலிர்க்கச்செய்யட்டும்.

போதும்.

உங்கள் போலித்தனங்களுக்கு

போடுங்கள் ஒரு பூட்டு.

பாடுங்கள் ஒரு பாட்டு

மனித நேயத்துக்கு

பாடுங்கள் ஒரு பாட்டு.


____________________________________________________

ருத்ரா





























"லவ் டுடே"

 "லவ் டுடே"

______________________________________

ருத்ரா




எத்தனையோ படங்கள்

ஒரு சின்னப்பொறியை வைத்து

சொக்கப்பனை

ஆக்கியது போல் 

தூள்கிளப்பியிருப்பார்கள்.

நவீனத்துவ படங்கள் எல்லாம்

நாடி துடிக்கிற‌

சிறு மணித்துளிகளிலேயே

படம் துவங்கி முடிந்தும் விடுகிறது.

கதை என்று எதுவுமே

இல்லாமல்

ஒரு நிகழ்வு

ஏதோ கண்ணுக்குத்தெரியாத‌

ஒரு காக்கா

எச்சம் இட்டு விட்டு

சரேலென்று 

மறைந்தது போல் தான்

இருக்கும்.

இந்தப்படமும் அப்படி

பொறியிலும் சிறு பொறியாய்

ஒரு "கை மாத்து" ஒன்றை

ஒரு பெரும் யுகப்புரட்சியாய்

உருட்டு விட்ட கதை தான்.

எப்போதும் செல்ஃபோனுக்குள்

குடியிருக்கும் காதலர்கள்

ஒரு நாள் முழுதும் அந்த செல்களை

பரிமாற்றம் செய்து கொள்ளவேண்டும்.

அதாவது

இருவரும் ஒரே மௌனராகத்தை மட்டும்

மீட்டிக்கொடிருக்க வேன்டும்.

தம் இதயங்களைக்கூட‌

பெயர்த்து எடுத்து 

மாற்றிக்கொண்டு விடுவார்கள்.

ஆனால் செல்ஃபோன்களை 

அப்படி மாற்றிக்கொள்ளச் சகியார்!

அந்த இதயங்களாகவே ஆகி விட்ட‌

சிலிகான் கிணுகிணுப்புகளையும்

டிஜிடல் வருடல்களான அந்த‌

"எண்ணியத்தில்" 

தங்கள் கனவுகளையே

தடவி தடவி பெறும் கிளுகிளுப்புகளையும்

விட்டுக்கொடுக்க முடியாமல்

அவதிப்படுகிற‌

அந்த தருணங்கள் 

ஒவ்வொன்றும்

ரீல் ரீலாக ஓடும்

தேனாறுகளாய் பொங்கி ஓடுகின்றன.

புதுமுக நடிகர் ஒரு முதிர்ச்சியான‌

இயக்குநராக இங்கு

பரிணமித்து இருப்பது அருமை.

காதலியாக வரும் நடிகையின்

தவிப்பில்

ஒரு காஷ்மீர் பனிக்கட்டியின்

ஐஸ்கிரீம் உருகி உருகி

சித்திரவதை செய்கிறது.

வசூல் வசூல் என்று

முரட்டுக்கண்ணும்

கரடு முரடான தோற்றமும்

உடைய அசுரத்தனமான‌

பாக்ஸ் ஆஃபீஸ் பூதமும்

சாதுவாக நின்று

இமாலய சாதனையை

செய்து காட்டியிருக்கிறது.

இந்த அற்புத இயக்குநருக்கு

நம் வாழ்த்துக்கள்.

____________________________________________________







திங்கள், 14 நவம்பர், 2022

கெமிஸ்ட்ரி

 கடவுள் 

மனிதன் 

இந்த இருவர்க்கிடையே

எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை.

மனிதன் 

தன்னையே கழற்றி

தனியாக வைத்துக்கொண்டு

அதனோடு 

கொஞ்சுவான்

கொதிப்பான்

மதிப்பான் 

மிதிப்பான்.

ஆணாக்குவான் 

பெண்ணாக்குவான்.

உள்ளவியல் முரண்களுக்கும்

உள்ளவியல் உறவுகளுக்கும்

வெளிப்பாடுகள்

என்பது 

வக்கிர வெளிப்பாடுகள் தான்.

அவை வெளியே

பீறிட்டுத் தீர்வதே இயற்கை.

அவை

ரத்த ஆறுகளாக போர்களாக‌

நமக்கு அறிய கொடுக்கப்படுகிறது.

இது தான் 

சமய சமூக வரலாற்றுப்படிமானங்கள்.

______________________________________

ருத்ரா.


சிலம்பு நக இயலி..

 சிலம்பு நக இயலி..

__________________________________________

சொற்கீரன்.


கருங்கால் ஓமை பைஞ்சினை அமரும்

வெண்குருகு நரல அயல நான்ற சில்பூ அதிரும்.

மண்ணிடை ஊழ்க்கும் வள்ளியெனப் படர்ந்து

வரிபூ காட்டும் சுரனிடைத் துணிந்தாள் மன்னே.

சூர் உடை இருள் வெளி கண்டும் அஞ்சா

விழி உறுத்து எதிர்வரு கவலை யாறும்

கணித்து முன் சென்றாள் குறி எதிர்த்தாங்கே.

சிலம்பு நக இயலி வணர் குரல் மூசி

கடுங்கால் அறைமுகம் கடுப்பவும் ஆனாது

ஆடமை புரையும் தோள் திரள் அகலன்

அழ்தரு நகையின் களி மூழ்க விரைந்தாள்.

வட்டில் சோறு மறுத்தாளாய் கட்டில் படுத்தாங்கு

துஞ்சுதலும் இயலாள்.தகரம் மண்ணாள்

பூவும் தொடையா பாழ்நிலைக்கூந்தல்

நறும்புகை யறியாக் கிடந்தாள்

அண்ணல் முகம் நோக்கும் நோக்கம் அன்றி

மறு நோக்கு மறுத்து மற்று ஆறும் தவிர்த்தாள்.

வேழம் முற்றிய பழனத்திடையே ஒரு

வேங்கைத்திட்டில் சிலம்பிய பண்ணின்

குறியாங்கு எய்தும் கூர்பட நடந்தாள்.

பிரிதின் வெஞ்சிறை தகர்த்திடும் நடையில்

அஞ்சிறைதும்பி ஆர்த்திடும் மரத்த‌

வரிநிழல் குறியிடம் சேர்ந்திடும் விசையில்

கலிமாவன்ன பாய்பரி தன்னில்

காற்றையும் பிளந்துக் கடுகினள் ஆங்கே.


______________________________________________________


அவள் அவனைக்கண்டதும் காதல் கொண்டாள்.

அவனைக்காணாது ஒரு கணம் இருக்க முடியாதாளாய்

பிரிவு நோய் மிகுந்து வேதனையுற்றாள்.தோழி மூலம்

அவனை ஒரு இடத்தில் சந்திக்க முனைந்தாள்.இப்படி

ஒரு இடம் "குறி" செய்து காதலர்கள் சந்தித்துக்கொள்வது

சங்க கால மரபு. காதலர்கள் தற்போது இப்படி சந்தித்துக் 

கொள்வது தற்காலத்திலும் உண்டு என்பது நாம் அறிவோம்.

அப்படி அவள் ஒரு வேங்கை மரம் இருக்கும் இடமே

இங்கு "குறி"யாக தோழி மூலம் அவள் அறிந்தாள்.

அந்த குறித்த இடம் ஒரு அடர்ந்த காடு.அந்த அடர்

சுரத்தையும் கடக்கத்துணிந்து செல்லுகின்றாள்

என்பதையே நான் எழுதிய இந்த சங்க நடைச்செய்யுள்

கவிதை சொல்கிறது.


_______________________________________________சொற்கீரன்


ஞாயிறு, 13 நவம்பர், 2022

அது என்ன?...1


அது என்ன?...1

_____________________________________________

ருத்ரா



 ஓ வென்று

வாய்விட்டு அழலாம் 

என்று தோன்றுகிறதா?


"தனியொருவனுக்கு 

உணவில்லை எனில் 

இந்த ஜெகத்தினை

அழித்திடுவோம்" என

சீறவேண்டும் என்று

தோன்றுகிறதா?


இவை இரண்டு

எதிர்நிலைகள்.

உணர்ச்சிகளையெல்லாம்

கழற்றியெறிந்து விட்டு

அதோ

அந்த அரசமரத்தடியில் 

உட்காருங்கள்.


ஒரு மனிதன்

தன் தலையை தானே

வெட்டிக்கொள்ளவேண்டும்

இல்லையெனில்

அடுத்தவன் 

தலையையாவது 

வெட்டி எறிய வேண்டும் 

என்ற வெறிக்குள்

மூழ்கி விடும் 

அபாயங்கள்

அவன் மனக்கடலின்

ஆழத்துள் கிடக்கின்றன.


இதை 

சமப்படுத்தும்

ஒரு ஆழ்நிலையின்

வெளிப்பாடு தான்

மதங்களும்

அவை காட்டும் கடவுள்களும்.


அந்த கடவுள்களே

வெறி கொண்டு

பலி கேட்பதாக‌

இந்த மனிதன் மீண்டும்

அரிவாள்களை 

தூக்கிக்கொண்டிருப்பதை

பார்க்கும் போது

இந்த மனிதனை

கோபம்,

ஏதோ ஒரு பழிவாங்கும்

வெறி,

இவையெல்லாம் இல்லாத‌

"ரோபோட்டுகளாக"

படைத்தால் என்ன‌

என்று 

அறிவுக்கு தினவு

எடுத்ததின் விளைவு தான்

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

மகிழ்ச்சி தான்

என்று ஆரவாரம் செய்தோம்.

இனி இந்த உலகமே

ஒரு அமைதிப்பூங்கா

என்று மகிழ்ந்திருக்கையில்

இந்த ரோபோட்டுகளின் கைவிரல் நுனி

இருக்கும் இடத்தைப்பார்த்து

நாம் மீண்டும் ஒரு

அழிவுக்கடலுள் விழும் அபாயத்தில்

இருக்கிறோம் 

என்பதே இப்போது 

பேரதிர்ச்சி

பெருங்கவலை.

அது என்ன?


(தொடரும்)

சனி, 12 நவம்பர், 2022

கல்லூரிக்காலம்

 கல்லூரிக்காலம்

____________________________________

ருத்ரா


முதலில் அது

ஒரு வினாக்காலம்.

விடைகள் தேடி அலுத்த பின்

வினாக்களை துரத்தும்

விடைகளின் 

பட்டாம்பூச்சிச்சிறகுகளை

கையில் குவித்துக்கொண்டு

அவன் திரியும் போது

வானங்கள் அவனைக்கவிந்து 

கொண்டன.

அதுவே அவனது 

கனாக்காலம்.


___________________________________

"எண்ணியம்"

 

"எண்ணியம்"

__________________________________

ருத்ரா


டிஜிடல்கள் இருக்கும்போது

நெல்லுமணிகள் எதற்கு?

ஆன் லைனில்

சிலிகான் ரவைகளில்

வைட்டின்மின்களை

பூசி வைத்துக்கொண்டால் போயிற்று.

எதற்கு காளையும் பசுவும்?

எதற்கு தென்னை மரங்கள்?

டெர்மினேட்டரில் வருகின்ற‌

மண்டையோட்டு சிதலங்களில்

சர்க்யூட் சமாச்சாரங்கள்

செயற்கை எச்சில் வடித்து

செயற்கை ரத்தச்சேற்றில்

முடியப்போகும்

நம் கூகிள் வயல்களை

உழுது கொண்டிருப்போம்

வாருங்கள்


___________________________________________________

வெள்ளி, 11 நவம்பர், 2022

வெற்றிசெல்வர்கள்

 வெற்றிசெல்வர்கள்

அன்புச்செல்வி_தியாகராஜன்

அவர்களுக்கு....


வெள்ளிப்பனி மலையின் 

வண்ணத்தில் ஒரு "கார்"

நெடுங்கனவுத் திட்டத்தின்

எண்ணத்தில் ஒரு "கார்"

அழகு அழகு அது பேரழகு!

அற்புதம் அருமை அக்"காரழகு"

உங்கள் இருவர்க்கும் அந்தத்தேர் அழகு.

உலகையே வென்று வலம் வருவான்

நம் அன்புச்செல்வன் சங்கரனும்.

திருவளர்ச்செல்வி சங்கவியும்

தீரம் மிக்க அவள் லட்சியத்தின்

வெற்றிப்பவனியை நடத்திடுவாள்.

வெள்ளி முளைத்த வானம் போல்

வெற்றி செழிக்க வலம் வருவீர்.

வாழ்க!வாழ்க!நீடூழி! 

யாவரும் அங்கு நீடூழி!

வாழ்வீர் வாழ்வீர் நீடூழி!


அன்புடன்

பரமசிவன்‍_கஸ்தூரி.

12.11.2022

_________________________________________________

வியாழன், 10 நவம்பர், 2022

தொலைந்து போயிற்று.

தொலைந்து போயிற்று.

_______________________________________

ருத்ரா



வாய்க்கால் வரப்போரம்

கலித்தொகையாய் ஒரு

"செய்யுள்"

செங்குருதி குருத்து விட்டு

கதிர் விரிக்கும் 

உயிர்ப்பின் பொன் சிரிப்பு

விடியல் இங்கு!

கழனிச்சேற்றில்

கெண்டைக்கால் பதிய‌

நாற்றுமுடியை 

நறுக் நறுக் என்று

வயலில் நட்டுக்கொண்டே

கண்டாங்கிச் சேலையோடு

கதை நூறு பேசுகின்றாய்

உன் பசும்புன்னகையை

சேற்றோடு சமைத்து 

பெருஞ்சோறு ஆக்குகின்றாய்.

மக்களின் பசியே அங்கு 

வாய் பிளந்து வாய் பிளந்து

கேட்டதாய் நினைத்து 

உழைப்பின் உன் மின்னல் துளிகளை

அல்லவா 

அங்கு இட்டுக்கொண்டு செல்கிறாய்!

காற்று தானே கேட்கட்டும் என்று

"க்ளுக்" சிரிப்பை தூவி விட்டாயே

முத்துப்பல் வரிசையிலே.

பெண்ணே!

இந்த தீபாவளிகளின் 

மொத்த மத்தாப்பு வெளிச்சமும் 

எங்கோ தொலைந்து போயிற்று

உன் சிரிப்பின் முன்!

________________________________________

புதன், 9 நவம்பர், 2022

முக "நூல்கள்"

 

இந்த ட்விட்டர்களை
கூட்டிப்பெருக்கி அள்ளினால்
நகராட்சி குப்பைத்தொட்டிகள்
தோறும்
மில்லியன் மில்லியன் மில்லியன்
லைக்குகள்.
முக "நூல்கள்" கொண்டு
திறந்து கிடக்கும்.
இதில்
நம் மானம் மறைக்கும்
ஆடை நெய்ய முடியுமா?

____________________________________________-
ருத்ரா

செவ்வாய், 8 நவம்பர், 2022

09.11.2022ல் உதிர்ந்த ஊசியிலைகள்.

 


09.11.2022ல்   உதிர்ந்த ஊசியிலைகள்.




ஜிக்கி

___________________________


அவருடைய‌

"எல்லாம் ஏசுவே"என்ற‌

பாடல் கேட்கும் போது

எனக்கு பத்து வயது

இருக்கலாம்.

இப்போது எனக்கு

வயது எண்பது.

நான் பிறந்த கல்லிடைக்குறிச்சி

ஊரின் மண்ணிலும் மணத்திலும்

அன்று விதையூன்றிய 

அவரது இசை

இன்னும் அமைதியை

அன்பு மொழியாய்

எனக்குள் கிளை 

பரப்பிக்கொண்டிருக்கிறது

என் நுரையீரலின் உயிர்க்காற்றாய்.

______________________________________

கவிஞர் ருத்ரா


பச்சை படர்ந்த தேசத்துள்

சிவப்புச்சூரியப் பழம்!

தோழர் லூலா பிரேசிலில்

அதிபராய் தேர்வு.

________________________________

ருத்ரா


இருப்பு எனும் 

கருப்பையிலிருது

இல்லை பிறந்தது.

இதுவே

ஆதியும் அந்தமும்.

________________________

ருத்ரா


எதிலிருந்து எது

வந்ததோ?

ஆனால் இந்த‌

கேள்வியே 

இப்போது கடவுள்.

____________________________

ருத்ரா


வி ஆர் + ஏ ஐ ல் 

மண்டைவீங்கிப்போன‌

ஒரு அப்பனுக்கும்

ஒரு ஆயிக்கும்

ஒரு குழந்தை பிறந்தது.

தாதி குழந்தையை குளிப்பாட்ட‌

எடுத்துப்போனாள்.

அப்போது தான் பார்த்தாள்

வீல் என்று அலறினாள்.

குழந்தை வி ஆர் ஹெட்செட்டோடு

பிறந்திருந்தது.

கழற்றிப்பார்த்தாள்.

கண் இல்லை.

விழி இல்லை.

குழி தான் இருந்தது.

வாய்த்துவாரம் வீல் வீல் என்று

அலறியது.

பால் வேண்டுமாம்.

அதுவும் 

சுவைக்க‌

வி ஆர் ப்ரெஸ்டில் 

வி ஆர் மில்க்.


________________________________________

ஒரு ஃப்யூச்சரிஸ்ட் கவிஞன்.


ஒரு நூறு ஆண்டுக்கு முன்

இந்த உலகம்

குருடாகவா இருந்தது?

மேடம் மேரி க்யூரியின் 

நினைவு நாள் இன்று.

__________________________________

ருத்ரா

திங்கள், 7 நவம்பர், 2022

புதுச்சேரி கடற்கரையில்

  புதுச்சேரி கடற்கரையில்

__________________________________________

ருத்ரா



முண்டாசு கட்டாத 

முறுக்கு மீசை வைக்காத‌

பாரதியாய் நடந்து கொண்டிருந்தேன்.

"புல்லை நகையுறுத்தி

பூவை வியப்பாக்கி"

விரித்திருந்த இயற்கையின்

ஒரு எம் எம் ஃபோமில்

உட்கார்ந்து படுத்து விட்டேன்.

கனவுகளும் 

அந்த நுரைமெத்தையில்

அடைத்த உருவங்களோடு தான்.

மொய்த்தன.

ஒரு புள்ளிமான் 

குட்டி மான்

முசு முசுவென்று

உருண்டை விழிகளுடன்

முத்தமிட‌

என் மீது உரசியது.

ஒரு முரட்டுச்சிங்கம்

தன் கோரைப்பல்லால் என்னைக்கிழித்தது.

ஆனால் கிழிக்க முடியவில்லை

அந்த நுரை ரப்பர் பல்லால்.

மான் குட்டி என்னை ஒரு

"ஒன்டர் லேன்டு"க்குள்

இழுத்துக்கொண்டு ஓடியது.

அதன் ஒவ்வொரு புள்ளியும்

விரிந்து பெருகி

ஒரு தனி உலகின் 

புகை மண்டலமாய்

என்னைச்சுருட்டிக்கொண்டது.

விருட்டென்று

காலைச்செம்பருதி

செம்பஞ்சுக்குழம்பை 

கடலில் கரைத்தது.

அந்த சூரியன் திடீரென்று

குளிர்ந்த ரப்பர் கோளமாய் மாறி

அதன் உதடுகள் குவித்து

என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

சூரியன் கூட நுரைப்பஞ்சின் 

ஃபோமில் வந்தா

என்னைத் தழுவிக்கொள்ள 

வருகிறது?

இன்னும் விடியவில்லையா?

தூக்கமே இந்த பஞ்சுமிட்டாய்

வானத்திலா?

திடீரென்று விழித்துக்கொண்டேன்.

சூரியன் இன்னும் மேலைத்திசையின் 

கடலுக்குள்

விழுங்கப்படவில்லை.

இப்போது அந்த புல்விரிப்பில்

வேறு இடத்துக்கு நகர்ந்து 

படுத்துக்கொண்டேன்.

ஊஹூம்..

அந்த கற்பனை நுரைமெத்தையை

கடலில் வீசி எறிந்து விட்டேன்.


______________________________________________________



யாஅத்த மராஅத்த அவிர்சுரம் நிழற்ற

 யாஅத்த  மராஅத்த  அவிர்சுரம் நிழற்ற


___________________________________________________


சொற்கீரன்.






யாஅத்த மராஅத்த அவிர்சுரம் நிழற்ற


முள்ளிய கொடுந்தழை வானூடும் இடற‌


புற்றம் அற்றமென ஆற்று முடிச்சுள்


முடங்கிய காலை ஈயம் இனவெழூஉ


சிறைகள் பர‌த்தி சிறைகள் வீழ்க்கும்.


கொல்லிய அடர்கல் கொடுந்தொழில் 


அலைஞர் இடைப்படூஉ நிலையும்


கொளீஇ கடாஅத்த காதல் தலைவன்


அகலம் துஞ்சி அவன் ஆறு படுக்கும்


அடர்மழைக் கண்ணின் அணியிழை 


ஓர்த்தே ஒடுங்கும் துயில் மறந்தற்றே.


அலந்தலை ஞெமையத்து நுனிக்கொம்பர் 


ஊக்கியும் ஆறா அழிபசி மீமிசை


ஏற்றிய பின்னும் ஏறி நோக்க‌ 


பழம்போல் மரூஉம் குடுமிப்பூக்கள்


உணீஇய ஊரும் கருங்கை எண்கின்


கான்சேர் வேள்வியின் வல் வேள் ஏந்தி


நெஞ்சில் நோதல் கூர்ந்து நொந்தனள் மன்னே.



______________________________________________________________________________


யா மரா ஞெமை போன்ற மரங்கள் அடர்ந்த காட்டிடை வேள்வி எனும் பொருள் வேட்கைக்கு வந்த காதல் மிகு தலைவன் ஈசல் சிறகுகள் பரவிய புற்றிடை வந்து முடங்கி நின்று மீண்டும் அடர்ந்த காட்டுவழி தொடர்கிறான். கருங்கையை உடைய கரடி ஒன்று ஞெமை மரத்தின் உச்சிக்கே சென்று பழம்போல் தோன்றுகின்ற குடுமிப்பூகளை உண்ண ஏறுகின்றன.காதலியோ (அல்லது தலைவியோ) காதலன் செல்லும் அடர்ந்த காட்டை நினைத்து துயில் மறந்து ஒடுங்கித் துயர் உறுகிறாள்.அவனை நெஞ்சில் ஏந்தி அவள் துன்பம் கொண்டு நைந்து வாடுகிறாள்.அகநானூற்றுப்பாடல் 171ல் கல்லாடனார் மிக மிக நுட்பமும் அழகும் செறிந்த சொற்களை யாத்துப் படைத்துள்ளார். அந்த சில சொற்களை யானும் எடுத்துக்கோர்த்து இந்த சங்கநடைச் செய்யுட்கவிதையை இங்கு எழுதியிருக்கிறேன்.........சொற்கீரன்.

___________________________________________________________________________________



கொலுசுகள்

 கொலுசுகள்

_________________________________

ருத்ரா



அங்கே இங்கே போனாலும்

என்னோடு பேசுகிறாய்.

என்ன சொல்கிறாய் என்று

என்னைக் கேட்க விடாமல் 

அந்த ஒலிப்பிஞ்சுகளின்

இனிமையைக்கொண்டு

மூடிக்கொள்கிறாய்.

அதை கண்களாக்கிக்கொண்டு

என்னை நீ

துளைக்கின்றாய்.

ஏழெட்டு வானங்களையும் 

ஊடுருவிக்கொண்டு.

உன் வெண்ணைச்சிற்பக்

கால்கள் கொண்டு நடந்து நடந்து

என்னை செதுக்கிக்கொண்டே இருக்கிறாய்

அந்த ஒலி உளிகளைக்கொண்டு.


_______________________________________



ஞாயிறு, 6 நவம்பர், 2022

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை

________________________________

ருத்ரா


நல்லதோர் 

வீணை செய்தே

நலங்கெட 

புழுதியில் எறிவாயோ?

உள்ளம் மீட்டிய‌

கற்பனைகள்

உள்ளே வீணைக்காடுகள்

ஆகின.

நரம்பு சொடுக்கல்களில்

காலம் கல்லறை போய்விட்ட பிறகு

அதன் அருகே

குவிந்து கிடக்கும் சருகுகளை

சேர்த்துக்கொண்டு

என் உணர்வுகளின் 

சிக்கி முக்கிக்கற்கள் கொண்டு

என் மீதே தீப்பற்றச்செய்து

மூழ்கிக்கொள்வது போல்

இறுமாந்து இருந்தேன்.

கேதார கௌளையா?

புன்னாக வராளியா?

சாரு கேசியா?

சர புன்னை ஒலிக்கீற்றுகளா?

என் மீது அந்த யாழைச் சாத்திக்கொண்டு

கண்மூடினேன்.

ராகங்கள் 

பிரபஞ்சத்தைப்பிழிந்து

சாறு ஊற்றியது.

நான் பிணமா?

இல்லை

அது வெறும் நரம்பு விடைத்த‌

சவமா?

உயிர்க்கரைசலில்

உடல் 

வெட்டப்பட்ட பனித்துண்டுகளாய்

மிதக்க விறைத்திருந்தேன்.

மனிதனிலிருந்த‌

மனிதத்தை 

தோலுரிக்க முடியுமா?

இதற்கு இன்னும் விடையில்லை.

மனிதன் அந்த மனிதத்தை

தரிசனம் செய்தாலே போதும்.

அப்புறம் 

இந்த கோவில்கள் எல்லாம் தூள்.

இந்த சிதிலங்களின் 

அடியிலிருந்து முன‌கல்கள் கேட்கின்றன.

மனிதா!

இந்த மந்திரங்கள் எல்லாம்

என்னை சித்திரவதை செய்கின்றன.

இந்த இரைச்சல்களிலிருந்து

என்னை விடுவிக்கும் 

"மோட்சம்"

நீ மட்டும் தான்.


____________________________________________________________________

  




அழலேர் வாளின் ஒப்ப

 அழலேர் வாளின் ஒப்ப

_______________________________________

சொற்கீரன்.



அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை

அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும்

வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க

பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு

உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள்

விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான்

மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர் வீ அலர்

இறைபு மட நெடு நாரை ஒலி ஆர்த்தன்ன

முல்லை இவர் மன்றும் எதிர்தந்து ஒலிக்கும்.


________________________________________________________________


அகநானூற்றுப்பாடல் 188 ன் அழகிய சொற்கள் சில கோர்த்து நான் எழுதியது இது.

அவள் தழையுடையும் மின்னல் இடையும் கருவிழியும் அவனை மயக்கின.அவர்களுக்கிடையே நடந்த சந்திப்பு ஊரார் காணும்படி அலர் தூற்றும் ஒலிகளால் மொய்த்துக்கொண்டது.இதைப்பற்றி நான் எழுதிய சங்க‌நடைச்செய்யுட் கவிதை இது.



பொழிப்புரை

_____________________________________________________‍‍_________________


தீக்கொழுந்து போன்ற நீண்ட இலைகளை உடைய அசோக மரத்து அழகிய தழையினை ஆடையாக உடுத்தியும் அந்த அழகில் மின்னல் போன்ற இடை அசைந்து வரவும் அதில் அச்சம் கொண்ட வெண் குருகுகள் அந்த பசுமை செறிந்த ஆற்றின் கரையை விட்டு நீங்கவும் பசுமையும் குளுமையும் நிறைந்த நீராடலில் திளத்த அவள் அவனைக்கண்டதும் முகம் மலர்ச்சியுற்று அதனால் வெட்கமும் கொண்டு தனக்குள் மென் நகை புரிகின்றாள். மெல்லிய தளிர்களை ஆடையாய்  உடுத்தி குழைவு கொண்ட இடையுடன் நின்று அவனை நோக்கியதில் அவள் விழிகளால் அவன் உண்ணப்பட்டு விட்டான்.அவனும் உணர்ச்சியுள் ஆட்பட்டு நின்று விட்டான்.நெடுங்குன்றம் போல் நின்ற அவன் அவள் விழிகளில் வீழ்ந்து விட்ட இந்நிலையை அந்த ஆற்றங்கறைக்கு வந்தவர்கள் கண்டு விட்டனர்.இதனால் பற்றிக்கொண்ட அந்த ஊர்ப்பழி எனும் அலர் மெல்லிய சிறு சிறு பூக்கள் காற்றில் இறைவது போல் பரவிவிட்டது. மெல்லிய மடமை பொருந்திய நாரைகள் ஒலி கிளப்புவது போல் அங்கு ஒலிப்புகள் எழுந்தன.அவை முல்லை கொடி படர்ந்து நிற்கும் மன்றுகளிலும் பட்டு எதிரொலித்தன.


_________________________________________________________________சொற்கீரன்.

சனி, 5 நவம்பர், 2022

மனிதேஸ்வரன் கோவில்

 மனிதேஸ்வரன் கோவில்

_____________________________________‍

ருத்ரா



மனிதம் எனும் உயிர்ப்பூ

கசாப்பு செய்யப்படுவதற்கா

இங்கு மதங்கள்?


மனிதம் எனும் சமுதாய ஊற்று

அடைபட்டு போவதற்கா

இங்கு சாதிகள்?


மனிதமே கடவுள் எனும்

உண்மையை புதைப்பதா

சாஸ்திரங்கள்?


மனிதம் எனும் அறிவு

அவிக்கப்படவா

வெற்று மந்திரங்கள்?


கேள்விகளின் சுரங்கமே மனிதன்.

அந்த வெளிச்சம் மறைப்பதற்கா

இருட்டுப்புராணங்கள்?


பரிணாமத்தின் சிகரமே மனிதன்.

அவனை சின்னாபின்னம் ஆக்குவதா

சாதிகள்? மதங்கள்?


கடவுளின் பாஸ்வர்டே மனிதன்

அவனைத்தொலைத்தால் இங்கு

கடவுள் இல்லை கோவிலும் இல்லை.


மனிதேஸ்வரன் கோவில் கட்டுவோம்.

அவன் அறிவின் ஒளியில் இந்த‌

பிரபஞ்சம் கூட நம் உள்ளங்கையில்.


____________________________________________‍





வெள்ளி, 4 நவம்பர், 2022

புறப்படடா தமிழா!

 புறப்படடா தமிழா!

_______________________________________________________

ருத்ரா



புறப்படடா தமிழா!

புறநானூற்றுத்தமிழா!

தமிழை அழித்து

தமிழினம் அழிக்க‌

வருகின்றது இங்கே ஒரு கூட்டம்.

வரு பகையும் உறு பகையும்

கருவறுக்கும் திடம் கொள்ளும்

கடமையுடன் தமிழா!

புறப்படடா தமிழா!

புறநானூற்றுத்தமிழா!




மாடு பிடிக்கும் போரில்லை!

நாடு பிடிக்கும் போரில்லை!

ஏடு காக்கும் போர் இது‍‍_தமிழ்

ஏடு காக்கும் போர் இது.


வாள் பிடிக்கத் தேவையில்லை..வெறும்

ஆள் பிடிக்கவும் தேவையில்லை.

தமிழ் இனம் காக்கும் போர் இது.

தமிழ் மொழி காக்கும் போர் இது.


எதிரி புதிதாய் வரவில்லை

எதிரிலும் அவன் வரவில்லை

பல நூறு ஆண்டுகளாய் நம்

பக்கம் இருந்தே தாக்குபவன்.


மதம் என்றும் பக்தி என்றும் நமை

மக்கச்செய்த மந்திரமாய்

இரைச்சல் மொழியாய் நம்மவரை

இற்றுப் போக வைக்கின்றான்.


சாதித்தீ எனும் காட்டுத்தீயை

சாத்திரம் சொல்லி வளர்க்கின்றான்.

அடுக்கு அடுக்காய் தமிழர்கள்

அடங்கிக் கிடந்தனர் சாதிகளில்.


தன்னையே பிரமனின் புத்திரனென்று

தந்திரவரிகள் பலவாய் சொல்லி

மற்றவர் தலையில் ஏறிநின்றான்.

மணியை ஆட்டி பூசைசெய்து.


அடுத்தவர் எல்லாம் அடிமையென்று

அதர்மமாய் சுலோகம் சொல்லுகின்றான்.

புனிதமாய் வேதம் சொல்லியதென்று

புனைந்தான் பலப்பல புராணங்கள்.


என்ன புனிதம் என உற்றுக்கேட்டால்

எல்லாம் வெட்ட வெளிச்சம் தான்.

ஊற்றிக்கொண்ட சோம பானம்

உளறிய பாஷையே தேவ பாஷை.


வேதம் வருமுன் இம்மண்ணில் இருந்த‌

மொழியே நந்தம் தமிழ் மொழியாம்.

கடல் கடந்து ஒலிகள் திரட்டி

கடற்கரையெல்லாம் தமிழே ஒலித்தது.


வேறு வேறு இடம் பெயர்ந்தவர்

வேர்ச்சொல் இன்றி வெறுஞ்சொல் குவித்தவர் 

நமது மண்ணில் வாழப்புகுந்தார்.

நமது தமிழே அவர்மொழி ஆனது.


தமிழே தந்தது சொல்லின் கூட்டம்.

தமிழே அவர்க்கு எழுத்தும் தந்தது.

நகர் எனும் வினையாகு பெயரே

நாகர் என்றும் நாகரி ஆனது.


நாவல்லவர் வாழ்ந்த தீவு என‌

நாவலந்தீவு என்றே அழைத்தனர்

நாவில் வல்லநம் நறுந்தமிழ் நாட்டை.

நாவுதல் என்பதும் ஆழ்ந்த தொருசொல்!


நாவின் வேலை அலை போன்ற தாகும்.

நாவில் இருந்தே நாவாய் வந்தது.

நாவாய் ஓட்டி உலகம் ஆண்டவன்

நாகரிகம் தந்தது நற்றமிழ் முதல்வனே.


(தொடரும்)


__________________________________________________________




  









புதன், 2 நவம்பர், 2022

யார் அவள்?

 யார் அவள்?

______________________________________



தென்காசியிலிருது கொல்லத்துக்கு

ரயிலில் பயணம்.

ரயில் ஆரியன் காவு குகை வழிக்குள்

புகுந்து 

கொஞ்சம் இருட்டு சதையை

பிய்த்துக்கொண்டு

நம் மீது கொஞ்சம் சுவாரஸ்யமான‌

திகில் பூச்சு பூசி விட்டு

வெளிச்சத்துக்கு வந்தது.

"ஆர்யன்"என்பதில் அந்த "ஆர்"

தமிழின் ஆழம் நிறைந்த வேர்ச்சொல்.

சங்கத்தமிழின் எல்லா சொற்களிலும் 

ஒரு உயிர்ப்பொருள் பூசி நிற்கும்

தனிச்சொல் உரிச்சொல் அசைச்சொல்.

அது உலக மொழிகளிலும் வேர்பிடித்து

அப்புறம் 

கைபர் போலன் கணவாய் வழியே 

எப்படி இந்த "வெறி" பிடித்து

தமிழையே அரிக்கும் கரையான் ஆனது?

எப்படி இருப்பினும் 

வாழ்க அந்த தமிழ்க்கரையான்.

தமிழால் தமிழும் வீழும் என்பது

இது தானோ?

சேர நாடு கேரளநாடு ஆகி 

தமிழை நோக்கி அது ஒரு

ஏளனப்பார்வையை வீசுவதும்

ஒரு வேதனையான வேடிக்கை தான்.

அவர்களின் வரலாற்றுத்தடங்கள் 

நம் பதிற்றுப்பத்தில் பதிந்து கிடப்பது

ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

மலையை ஆளும் நம் மலையாளச்சேரன்

சமஸ்கிருத புகை மண்டிப்போனதால்

அவனுக்கு நாமே கூட மிலேச்சன் 

ஆகிப்போனோம்.

சரி.போதும்.

அந்த தலைவலிக்கு ஏதோ ஒரு 

ஆயின்ட்மென்ட் தடவி விட்டு

மடியில் கிடக்கும் நிகழ்கால‌

நேனோ செகண்டுகளுக்குள் 

படிவோமாக!

ரயிலின் ஊர்வில் என்

கனவுப்பொதிகளும் ஊர்கின்றன.

வெளியே பச்சைத்திட்டுகள் 

மரங்களின் பசுமைக்கொத்துகள்

குவியல் குவியலாய் தென்னைகள்

கூந்தலை சிலுப்பிக்கொண்டு

எங்களுக்கும் தலை வாரி 

பூ முடித்துவைத்துப்போங்களேன்

என்ற ஏக்கத்தை 

அசையும் சித்திரங்களாக்கின.

சின்ன சின்ன ஆறுகள்

பாம்புகளாய் நெளிந்து ஓடின.

அப்புறம்

அந்த தடக் தடக் ஒலி

தாலாட்ட 

ஒரு இனிமையான மௌனத்துள் 

மூழ்கினேன்.

வளைந்து வளைந்து

வளையல் பூச்சி மாதிரி

ரயில் பெட்டிகள் இழுத்துக்கொண்டு

நகர்ந்தன.

அந்த தண்டவாளங்களில்

சக்கரங்கள் மெல்லிதாய் 

சிணுங்கிய குரலில்

கண்ணுக்குத்தெரியாமல் 

அந்த கொலுசுகளை

ஒலித்துக்கொண்டிருக்கிறாளே

யார் அவள்?

_______________________________

ருத்ரா




செவ்வாய், 1 நவம்பர், 2022

குறுக்குத்துறை

 குறுக்குத்துறை

___________________________________

ருத்ரா



தாமிரபரணி

கொஞ்ச நேரம் 

பளிங்குப்பாய் விரித்து

ஓடிக்கொண்டே இருக்கும்

அந்த வைரத்திவலைகளோடு

மனதோடு மனதாக 

பேசிக்கொள்வதற்கு

முருகன் கோவிலில்

நுழைந்து அளைந்து திளைத்து

அப்புறம் அது

வெளியேறும் அழகில்

நான் மனம் மூழ்கிக்கிடப்பதில்

நீருள் முக்குளி போடும்

நீர்க்காக்கை போல் 

தலை நீட்டுவேன்.

கோவிலைத்தழுவிக்கிடக்கும்

வெண்மணற்பரப்பு

ஒரு வெண்பட்டு போல்

பள பளக்கும்.

எதிர்க்கரையில்

கொக்கிரகுளத்து மருத மரக்கூட்டத்தில்

வெள்ளை நாரைகள்

நிறைய நிறைய 

நெற்றிச்சூடிகள் போல்

சுடர் தெறிக்கும்.

தூரத்தில்

சுலோசன முதலியார் பாலம்

பொருனையின் பொங்கும்

பூநுரைகளை

ஒவ்வொரு கண்ணிலும் 

கண் பொத்தி கண்பொத்தி

விளையாடும்.

அதற்கும் அப்பால்

ஒரு புதுமைப்பித்தனை

கவிதை போல்

படித்துக்காட்டும்

சிந்துபூந்துறை படிக்கட்டுகளில்

"கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்"

உரையாடல் செய்துகொண்டிருப்பது

எங்கோ

தப் தப் என்று துணி துவைக்கும்

ஒலிக்கலவையில்

வினோதமாய் பிசைந்து கொண்டிருக்கும்.

இலக்கியம்

கூழாங்கற்களாய்

காலப்படுகையை

நூற்றாண்டுகளில் உருட்டி விளையாடுவதை

புதுமைப்பித்தன்

தன் எதிரே இருக்கும் ஒரு சுட்டிப்பெண்ணுடன்

கற்பனையாய்

கழச்சி விளையாடுவதாய்

ஒரு பிம்பம் காட்டிநிற்கும்.

என் மனம் தோய்ந்த குறுக்குத்துறையே!

இந்த நெல்லைச்சீமையின்

பச்சைவண்ணத்து பவளச்சிலிர்ப்புகளோடு

ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் 

காட்டுகிறாய்.

உடல் நீட்டி படுத்து படுத்து

மூழ்கினாலும்

தண்ணீரை பூக்கள்போல்

வருடி வருடி ஒத்தடம் கொடுக்கும்

தாமிரபரணியின்

சில்மிஷங்களில் சிலிர்த்துக்

கிடக்கின்றேன்.


________________________________________________________________





வாழினும் அவியினும் என்?


மூணு தீபாவளிகளையும் கடந்து இசைப்பட்டாசு வெடித்து மகிழ்வித்த நடிப்பிசை சக்கரவர்த்தி அல்லவா தியாகராச பாகவதர் அவர்கள்!அவர் பாட்டுகள் தேன்குழைத்து தரும் செவிச்சுவையை மறக்க இயலுமா?


செவியிற்சுவை உணரா வாயுணர்வின் மாக்கள்

வாழினும் அவியினும் என்? 


என்று இப்படி ஒரு இனிய இணையற்ற இசை வெள்ளம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வரும் என்று முன்பே இந்த குறளை எழுதிவிட்டாரோ?அவர் எழுதியது கேள்வியறிவு பற்றி மட்டும் அல்ல.இந்த இசை அறிவு பற்றியும் இருக்கலாம்.

வாழ்க எம் கே.டி யின் புகழ்!

_____________________________________________________________________

ருத்ரா.

குஜராத் தொங்கு பாலம்

 குஜராத் தொங்கு பாலம்

_________________________________

ருத்ரா



ராமர் பாலத்துக்கு அங்கே

பாலிவுட் பிரபலங்களைக்கொண்டு

செட்டிங்க் போட்ட‌

அனுமார்களே!

எங்கே உங்கள்

ராமராஜ்ய கொண்டாட்டங்கள்?


______________________________________‍