வெள்ளி, 5 ஜூலை, 2024

திருவண்ணாமலை

 திருவண்ணாமலை

______________________________


அண்ணாமை என்றால் 

எட்ட முடியாத உயரம்.

எங்கே என்னைத் தொடு

என்று

இறைவன் சொல்லி

முடிக்குமுன்

ஒரு குரல் கேட்டது...

இறைவா உன்

தலைக்கும் மேல்

எங்கோ நின்று கொண்டு

சொல்கிறேன்...

உன்னைத்தேடி வந்து

உன்னையே காணாமல்  நீ 

அங்கேயே நின்று

கொண்டிருக்கிறாய்.

பார்

இது தானா நீ என்று...

மேலிருந்து

வீசினான் மனிதன்

அதை...

அதுவே..."குவாண்டம்".

------------------------------------------

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக