சனி, 21 பிப்ரவரி, 2026

வண்ணதாசனும் விக்கிரமாதித்தனும்

 வண்ணதாசனும் விக்கிரமாதித்தனும்

____________________________________________


வாசகன் கவிஞன் அப்புறம் நண்பன்.

இந்த பெர்முடா முக்கோணத்துக்குள்

நன்றாகவே

முக்குளி போட்டிருக்கிறார்

வண்ண தாசன்.

வைசூரி பொருக்குகள் போல..

தங்கள் தலைகளையே

தாம்பாளத்தில் அரிந்து தருகிறது போல..

என்றெல்லாம்

அவர் உவமிக்கும்போது

நாம் நம்மீது பீலிப்புழுக்கள்

நெளிந்தாற்போல்

புல்லரிக்கிறோம்.

அதை மொட்டையாய்

சராசரிக்கு மேல் கொஞ்சம் உயர்வு என்று

வெட்கத்தின்

படுகுழிக்குள் அல்லவா பதுங்கிக்கிடக்கிறார்.

கவிஞர் விக்கிரமாதித்தனும்

கவிஞர் வண்ணதாசனும்

ஏதோ ஒரு பளிங்குப்பாளத்தை

நொறுக்கிய பிம்பங்களில்

கலைடோஸ் கோப் செய்து

உருட்டி உருட்டி தரிசிக்கிறார்கள்.

கவிதையையா?

கவிஞனையா?

வாசகனையா?

தென்காசியோ கடையநல்லூரோ

முப்பிடாத்திக்கள்

சிவப்பு வெள்ளைப்பட்டை வீடுகளுக்குள்

இருந்து கொண்டு

மூலத்தானத்து நெருப்பை மூள விட்டதை

ஆலவட்டம் போட்டுக்கொண்டே

அவர்கள் ஆர்ப்பரித்திருப்பது

அற்புதம் அற்புதம்.

எழுத்துகளின் பிம்பங்கள்

இப்படி தாடி முளைத்து

மூக்குக்காண்ணாடிகள் உறுத்தி 

கற்பனை உடலங்களை

முறுக்கிப்பிழிந்து

தர்ப்பூசணிச்சாறுடன்

தருமா 

என்பதே ஒரு இமாலய வியப்பு!

___________________________________________

சொற்கீரன்.


a terminal rope

a terminal rope

_______________________________

நம் குறுக்கு நெடுக்குகளின்

அநாடமியா

நம் வாழ்க்கை.

எப்போது வேண்டுமானாலும்

"கேல்லோ"க்களில்

நிற்பதாய்

தடுமாறுவோம்.

அந்த வியர்வை வெள்ளத்தின்

தூசு

துரும்பு கூட‌

கவிதை என்று பார்ப்பதற்கு

ஆயிரம் தடவை 

சிதையில் படுத்து எழுந்திருக்கும்

துணிவு 

அல்லவா வேண்டும்?


எத்தனை கோடி இன்பம்...?

 



எத்தனை கோடி இன்பம்...?

______________________________________


வண்ணதாசன் அவர்களே!

அந்த "இன்ஃபினிடியின்" காதை முறுக்கி

இழுத்து வந்து

வரம்புக்குள் வைத்தீர்கள்.

மகாகவி வியந்த‌

சந்து முனைக்குள்ளும்

சிந்து வாசித்து

சிந்து பூந்துறைப்படிக்கட்டுகள்

பளிங்குத்தளும்பலில்

திருநெல்வேலி அல்வா இனிப்பாய் சுருட்டி

இலைக்குள் தந்தீர்கள்.

அங்க சுத்தி இங்க சுத்தி

எங்க சுத்திப்போனாலும்

அந்த குறுக்குத்துறையின்

நெடு நெடு மருதமரம்

நம் மீது

மௌனம் தூவும்.

அந்த முருகன் கோவில் மணிஒலி

பாவும்.

அவன் கிடாக்கறி தின்னும்

குறிஞ்சிச்சித்தனா?

ஒரு வள்ளிப்பித்தனா?

திருமுருகாற்றுப்படையின்

கபாபில் செருகிய சொற்துண்டு

ஒவ்வொன்றும் 

கற்கண்டா?

நக்கீரன் சுற்றித்தந்த

சீனிச்சேவு

இனிக்க இனிக்க நீட்டித்தந்தது போல்

"எத்தனை எத்தனை கோடிகள் இன்பச்"

சவ்வுமிட்டாய்க்

கவிதை இழுத்து இழுத்துத் தந்தாய்.

கையில் கடிகாரம் சுற்றி

மயில் வைத்து

"அகவி அகவித் தந்தாய்"

இந்த ஜொள்ளு போதும்

இதற்குள்

எத்தனை எத்தனை எங்களுக்கு

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்!

________________________________________

சொற்கீரன்

தடுமாறாதே தடம் மாறாதே

 

தடுமாறாதே தடம் மாறாதே

________________________________________

சொற்கீரன்



தமிழா..

கூட்டத்தப்பாத்து

ஆ ன்னு வாயப்பொளக்கிறதிலோ

அதுக்குள்ள

விசிலத்திணிச்சு

சுத்து பத்து மக்க‌ளின்

செவிப்பறையை கிழிக்கிறதிலோ

அர்த்தமே இல்ல.

ஊழல் ஊழல்னு பேசுறீங்க.

சின்ன மக்கா பெரிய மக்கா

பொடியன் மக்கா வரைக்கும்

அலையடிக்கிறீங்க..

எத ஊழல்னு சொல்ரீங்களோ

அதுலேயே உழன்று புழுவாகி 

நெளியுறீளே

அந்த சுரண்டல் சமுதாயமுறை பற்றி

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?

மூலதனம் குவிக்கிறதெல்லாம்

நம்ம உப்புக்கரிக்கிற வேர்வைக்கடல்ல‌

இருந்து தானே.

உப்பக்கரிக்கிற வர்க்கம் தொண்ணூத்தொம்பது

விழுக்காடுன்னா

உப்பரிகை வர்க்கம் ஒரு விழுக்காடு தானே.

சாதி மத சனாதனம் 

கொட்டு அடிக்கிறதுலேயே

கொமஞ்சு கெடக்கிறீங்களே..


அர்ச்சனைத்தட்டுலே

சில்லறையும் நோட்டுமா கொட்டுறீங்க.

சாமிக்கே லஞ்சம் தான் குடுக்கிறீங்க.

அது போகட்டும்.

கோயிலு திருவ்ழான்னு 

ஈசல்கள் மாதிரி குவியுறீங்க.

அது பொழுது போக்கு அம்சமா?

இல்லாட்டி

உங்க கவலகளெல்லாம்..தாவுகளெல்லாம்

தீரல்லேன்னு

யாருட்டயோ பிராது குடுக்கலாம்ணு

வந்திரிக்கீங்களா?

இப்டி இடிச்சுபிடிச்சு வேர்வ நாத்தத்தெல்லாம்

பங்கு போட்டுக்கிட்டீங்களே

இத சாதி நாத்தமாக்கி தீண்டாமையாக்கி

கடவுளுக குடும்பத்துலயும்

பொண்டாட்டி வப்பாட்டி சுவாரசியங்களெல்லாம்

சேத்து சேத்து சொல்கிற 

புளுகு மூட்டைகளுக்குள்ளே

போட்டு நசுக்குற கரப்பாம்பூச்சிகளாய்

பூஜை புனஸ்கார மந்திரப்

புகை மூட்டங்களிலே

புதைந்து போகும் அரசியல்

ஒரு பக்கம் னா

ஒடக்காம்புடிச்சி அது மேல‌

ஒண்ணுக்கு அடிச்சி

ராமபிரானுக்கு ஏண்டு

பழி தீத்துக்கிட்டு

இன்னும் விடலைத்தீப்பிடித்து

நரம்பெல்லாம் முறுக்கேறி

கட் அவுட்டுக்கு பால்குடங்கள்

கவிழ்த்து

உலகத்து படத்து மொத்தவசூல்களையெல்லாம்

முறியடிக்க‌

வீட்டுக்குடும்பத்து

சொத்துக்களக்கூட சொரண்டிக்கொண்டாந்து

நம்ம "ப்ரோ"வை உச்சாணிக்கொம்புக்கு

கொண்டு வர்ரத விட வேற என்ன வேல‌

நமக்குன்னு

ராட்சசவெள்ளமாய் படரும்

விஷக்காய்ச்சலுக்கு

மருந்துகள் எது?

தீர்வுகள் எது?

ஆழ்ந்த அரசியலின்

கூர்ந்த வரலாற்றுப்பார்வையின்

குவியம் நோக்கிய‌

சிந்தனையே அது!

ஜிகினா மழையல்ல‌

சிந்தனைப்பொழிவு.

உயிர்க்கும் சிற்பங்களே

செதுக்க அணி திரளும்

ஆற்றல் அது!

சீற்றம் அது!

______________________________________________

சொற்கீரன்


வியாழன், 19 பிப்ரவரி, 2026

மெஷின் லேங்குவேஜ்

 மெஷின் லேங்குவேஜ்

________________________________


கணிதம்

ஒரு நுண்ணிய குகையில்

குடி கொண்டிருக்கிறது.

அது ஒரு புழுக்கூட்டு வழி

என்று

புதிர் மொழி காட்டிவிட்டு சென்றார்

ஐன்ஸ்டீன்.

பெருக்கலும்

பெருக்கலின் பெருக்கலும்

மற்றும்

எக்ஸ்பொனென்ஷியல் எனும்

வானமே பொத்துக்கொண்டு போகும்

சங்கிலிப்பெருக்கலும்

கணிதத்தை

நம் மண்டை உடையச் செய்து விட்ட பிறகு

"ஹில்பர்ட்ஸ் நுண் வெளி"

எல்லையின்மையை

ஒரு இல்லை இன்மையாய்

நம் கையில் உருட்டித்தந்து

பந்து விளையாடச்சொல்லி விட்டது.

கடவுள்களும்

பில்லியன் பில்லியன் 

தலைகள் முளைத்த‌

பூச்சிகளாய்

மினுக்கி இருட்டி 

பிதுக்கும் கண்களின்

ஃபோட்டான்களில்

குவாண்ட அண்டங்களின்

சமன்பாடுகள் புரியாமல்

தவித்துக்கிடக்கின்றன.

அந்த ஹில்பர்ட் ஸ்பேஸ் கெர்னல்களின்

சோழிக்குலுக்கல் ஒலிகள்

நம் நிகழ்தகவு இருத்தலியங்களை

பூச்செண்டுகள் ஆக்கி

புல்லரிக்க 

வைத்துக்கொண்டிருக்கின்றன.

____________________________________________

சொற்கீரன்.


வண்ணதாசனும் ஆவாரம்பூக்களும்

 


வண்ணதாசனும் ஆவாரம்பூக்களும்

_______________________________________


நேற்றைய புதையலுக்குள்

நெடியக்கிடக்கும்

எலும்புக்கூடுகள்

என்றைக்காவது நமக்கு

வாசிக்கத்தரும் 

நம் தொன்மைக்கூடுகளை.

அகழ்வு எந்திரங்களின்

அசுரப்பசிக்குள் 

டாலர்கள்

செரித்துக்கிடக்கும் நகரக்கட்டிட‌

இரும்பு எலும்புகள்

விறைத்து விறைத்து

வானத்தையே முட்டி

நிமிர்ந்ததில்

ஊர்க்குருவிகளும் சிறகு உதடுகளில்

எதையோ இனிமையாய்

சலம்பிக்கொண்டிருக்கின்றன.

கனத்த கெட்டியான 

அத்தம் நண்ணிய ஆழ்மவுனம்

கிழிசல்கண்களல்

வெறித்து நோக்குகின்றன.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________

சொற்கீரன்.


வண்ணதாசனின் பிரளயங்கள்.

__________________________________


நெல்லா புல்லா..?

சொல்லா சொல்லா..

என‌

மொத்தப்பிரபஞ்சப்பொதியை

இழுத்து நுழைத்து

திணித்து 

இனிமை இழையை

நூற்றுத்திரித்து

எப்போது வேண்டுமானாலும்

பற்றிக்கொண்டு

வெடித்து உதிர்க்கும்

கருமருந்துப்பிரளயம் 

என்கிற கவிதைக்கொத்துகள்

அந்த 

சொற்பூத்தொடுத்தலில்

தமிழ்க்கன்னிக்குடம் உடையும்.

பிறத்தல் என்னும்

பறத்தலும் துவங்கும்.

__________________________________

சொற்கீரன்