வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஒரு தேர்தல்

ஒரு தேர்தல் விவரிக்கப்படுகிறது

( an election is described )

By  "ஆலிவர் கோல்ட்ஸமித்"

புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர்  எழுதிய கட்டுரை இது.தலைப்பை மட்டுமே மகுடமாய் சூட்டிக்கொண்டு வரும் எழுத்துக்களின் ஊர்வலம் இது.


பிளந்து கிடந்த ஒரு

நடு இரவில்

ஊமையாக சிமிட்டிக்

கொண்டிருந்த

நட்சத்திரங்களின் சாட்சியாக

சுதந்திரக்கொடியை

விரித்துக் கொள்ளுங்கள்

என்று 

கொடுத்து விட்டுப் போனான்

அந்த வெள்ளையன்.

இந்த வெள்ளையனோ 

மூவர்ணத்துள்ளும்

அந்த நாலு வர்ணத்தையும்

சேர்த்து சுருட்டி

மிச்சர் பொட்டலம் போட்டு

கொடுத்திருக்கிறான்.

வர்ண வர்ணமாய்

அந்த  சாதிமத வெறிகளின்

அபினிச்சித்திரங்களே

இங்கு தேர்தல் சினிமாக்கள்

---------------------------------------------

சேயோன்



வியாழன், 18 ஏப்ரல், 2024

ஏராளம்...ஏராளம்!



தினம் தினம் அது
புதிய வானம்.
புதிய பூமி.
இதை
நாம் தினம் தினம்
சோப்பு போட்டுக் குளித்து
கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் அது
சோப்பு அல்ல.
அழுக்கு.
கனவு.
கண்ணீர்.
ஆசைகள்.
அவலங்கள்.
வாழ வேண்டும்
அல்லது
சாக வேண்டும்
என்ற வெறி.
மனிதன்
சக மனிதன்
அன்பு..மனிதம்
புழு பூச்சிகள்
எல்லாம் ஒன்று தான்
என்ற
கானல் நீர்ப்படகுகள்
நம் கைவசம்
ஏராளம் ஏராளம்!
......................
.................
........................
----------------------------------
சேயோன்.









செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நூலகம்

நூலகம்

-------------------------------


அட்டை 

போட்டுக்கொண்டு

சட்டை மாட்டிய புத்தகங்கள்

வரலாறுகளாய்

நெளிந்தோடின.

விஞ்ஞானங்கள் 

பொய்த்தோல் உரித்து

உண்மையின்

இமைகள் விரித்தன.

புராணங்கள் எனும்

அம்புலிமாமாக் கதைகள்

ஆயிரம் குவிந்து கிடக்கட்டும்.

ஆங்காங்கே மூலைகளில்

சாதி மத "நூலாம்படைகள்"

படிந்து கிடந்த போதும்

படிக்கப்படவேண்டும்

புத்தகங்கள்.

அந்த இண்டு இடுக்குகள்

எல்லாம்

அறிவின் ஆவேச

சுநாமிகளால்

துழாவி துழாவி

அடித்துச் செல்லப்படட்டும்.

மானுடத்தின்

கூர் அறிவு எல்லா

இருட்டுச்சிப்பங்களையும்

அழித்தொழிக்கட்டும்.

சிந்தனைச்சுடர்கள்

ஓங்கித்தெறிக்கட்டும்.

---------------------------------------------

ருத்ரா.













ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

என்ன இது?

என்ன இது?

துன்பம் நெஞ்சைப்

பிசைந்து கொண்டிருக்கிறது.

எதை நினைத்து?

எல்லாவற்றை‌யும் தான்.

என்ன சொல்கிறாய்?

இந்த  இ சி ஜி யை பார்.






ஞாயிறு, 31 மார்ச், 2024

உன்னோடு நீ பேசிக் கொள்வது....

உன்னோடு 

நீ பேசிக்கொள்வது...

----------------------------------

ருத்ரா.


உன்னோடு 

நீ பேசிக் கொள்வது 

எப்போது?

தூங்கும் போது 

கனவில் பேசுவது எ‌ன்பது 

உன் ஆழ் மனக் 

குமிழிகள் ஆகு‌ம்.

அந்த சோளத் தட்டையில் 

எந்தக் கோட்டையு‌ம் 

கட்ட முடியாது.

கண்ணாடியின் முன் நின்று 

தலை வாரும்  முன் 

அந்த சீப்பின் பல் வ‌ரிசையில் 

விரல்களைக் கொண்டு 

கொஞ்சம் "யாழ்"

வாசிப்பீர்களே 




ஞாயிறு, 24 மார்ச், 2024

ஒரு மரங்  கொத்திப்பறவை

...... ... . .. .... . - - - .. ...

அது ஏதோ "கட கட் கட  கட"

என்று அந்த மரத்தில் 

தந்தி அடித்துக்  

கொண்டிருக்கிறது 








..


சனி, 23 மார்ச், 2024

உச்சி மீது வானிடிந்து

வீழுகின்ற  போதிலும் 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே.

பாரதி தான் பாடினார்.

அச்சா! அச்சா!

ஜாவ்! ஜாவ்!

அனுமார் படைகள் 

தமிழின் மீது 

கதாயுதங்களைக்கொண்டு 

..................

அச்ச மூட்டுகின்றனவே.

------------------------------------