வெள்ளி, 17 ஜூலை, 2026

அந்த ஏழு மராமரங்கள்

 

https://www.msn.com/en-us/lifestyle/other/7-ancient-cultures-that-predicted-the-end-of-the-world-and-what-they-really-said/ar-AA2875co?ocid=msedgntp&pc=SCOODB&cvid=9b11361d89db4deecf21d7c4f7f1618b&ei=23


______________________________________________________________________________

அந்த ஏழு மராமரங்கள்

_____________________________________________


இந்த "இணைப்பு" (லிங்க்)

ஏழு முக்கிய தொல்லியல் 

மதக்கருத்துகளை

பேசுகிறது.

நான் இதை ஏழு மராமரங்களாக‌

கற்பனை செய்கிறேன்.

இந்து மதத்தில் வருகிற

ராமாயணம் என்ற கதையில்

தெய்வீக ராமன் 

வாலி என்ற மனிதக்குரங்கு அரக்கனை

நேரடியாக கொல்வதற்கு இயலாத வழியில்

"மறைந்திருந்து" ஏழு மரங்களை துளைத்துக்கொண்டு

போகும் அம்பின் மூலம்

வதைத்துக்கொன்றதாக வருகிறது.

கடவுள் என்னும் மிக வல்லமை வாய்ந்தவரை விட‌

வலிமையான அந்த குரங்கு அரக்கன்

ஏன் இவ்வாறு கொல்லப்பட வேண்டும்

என்ற கேள்விகளை

வரிசையாக வீசினால்

இப்படித்தான் பல கதைகள் உட்கதைகள் கிளைக்கதைகள்

காரணங்கள் தர்க்கங்கள் உண்மை போல் தெரியும் பொய்கள்

பொய்களாகவே அவதரித்து உண்மைகளை வதம் செய்யும்

கதைகள் என்று

இந்த மதங்கள் கடவுள்கள் அவர்கள் அச்சமூட்டும் 

அழிவுகளின் விஞ்ஞானங்கள் போல் தோன்றி

மருளச்செய்யும் அஞ்ஞானங்கள்

ஆகிய எல்லாமும் மூட்டைகள் கட்டிக்கொண்டு

உலா வரும் தன்மைகளை 

நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இதை எல்லோரும் படிக்க வேண்டும்.

மனிதன் பல லட்சம் வருடங்களுக்கு முன்

தோன்றிய போதிலும்

அவனுக்கு முன்பே தோன்றிய‌

அவனின் உள் அச்சம் எங்கிருந்து

முளை விட்டது?

அந்த அச்சம் ஒரு பிண்டமா? ஆற்றலா?

எனும் கேள்வி இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த பரிணாமமே ஒரு குவாண்டம் டைனாமிக்ஸ் 

என்பதை எல்லோரும் 

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனாலும்

கடவுள் அச்சம் எனும் அந்த பிரபஞ்ச மொக்கையே

மொத்தப்புயலாக அல்லது சுனாமியாக‌

இந்த குவாண்டத்தை நம்மிடம் இன்றும்

கற்பித்துக்கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரையை ஆழ்ந்து படித்து

பயன் பெறுங்கள்.

எனது இந்தக்கட்டுரை அவரது 

கட்டுரையை  விவரிக்க வில்லை.

இதை நீங்களே படித்து

தெளிந்து கொள்ளுங்கள்.

__________________________________________________

சொற்கீரன்.


_______________________________________________________







எனது இந்தக்கட்டுரை அவரது 

கட்டுரையை அப்படியே விவரிக்க வில்லை.

இதை நீங்களே படித்து

தெளிந்து கொள்ளூங்கள்.


கிறுக்கல்கள்

 

உன் எழுத்துக்களை

கிறுக்கல்கள்

என்று நீ சொல்லிக்கொண்ட‌

போதும்...

"அவற்றை 

உங்களுக்காக நான் படைக்கவில்லை"

என்று

நீ ஒரு உச்சியில் உட்கார்ந்து

கொண்டிருந்த போதும்...

எந்த விருதும் கொடுத்து

அதை கொச்சைப்படுத்திவிடாதீர்கள்

என்று

ஏதோ ஒரு பின் பின் நவீனத்துவ‌

பாணியில் நீ

உன்னையே குழப்பிக்கொண்டு

கிடந்த போதும்

கவலைப்படாதே.

நாங்கள் குழம்பிக்கொள்வதே இல்லை

அவற்றை

வாய் பிளந்து கிடக்கும்

குப்பைத்தொட்டியின்

தொப்பை வயித்துக்குள்ளே

சடாரென்று வீசி விடுவோம்.

______________________________________

குப்பைகளுக்கு

பெயர் ஒரு கேடா?


வியாழன், 16 ஜூலை, 2026

பூதங்களும் வேதாளங்களும்

 



பூதங்களும் வேதாளங்களும்

_____________________________________________


கற்பனையின் நீண்ட இந்த 

சொரசொரப்பான விரல்கள்

நம்மை சொரிந்து விடுகின்றன.

இருப்பினும்

கண்ணீரின் கன அழுத்தம்

மரண அச்சத்தின்

கூர் நகங்கள்

காதலின் மெல்லிய அநிச்ச சிறகுகள்

அல்லது

அதன் கனவுக்கழுவேற்றங்கள்

பெருமூச்சு விட்டுக்கொள்ள‌

வானவில்லில் கூட‌

தூக்கிட்டுக்கொள்கின்றன.

அம்புலிமாமா பக்கங்களில்

நம் பத்து பன்னிரெண்டு வயதுகள்

சோப்புக்குமிழி ஊதுகின்றன.

அப்போதே அவை திடீரென்று

சொக்கப்பனை கொளுத்த 

ஆரம்பித்து விடுகின்றன.

விக்கிரமனின் வாள் கொண்டு

கூறு போட்டாலும்

ஆயிரம் ஆயிரம் முண்டக்கண்களோடு

வானப்படுதாவில்

ரத்தம் கசியும்

கந்தல் சாளரங்களில்

விடியல் கொத்து பரோட்டாக்களை

வீசி எறிகின்றன.

எதுவாகினும்.

படியுங்கள்...படியுங்கள்.

காகிதங்களில் 

வரி ஊறும் எழுத்துக்களில்

சிந்தனைகளும் உண்டு.

சிதைகளும் உண்டு.

எரிந்து எரிந்து

பிறப்புகளில் குமிழ்க்கலாம்.

இந்த முடை நாற்றம் எடுத்த‌

புராணங்களே தான்

நம் மைல்கற்கள் தொலைந்த‌

பாதைகளா?

மீண்டு வாருங்கள்.

யுகங்களை விழுங்கி விழுங்கியும்

உங்கள் அறிவின் பசி

எப்போது தொடங்கும்?

_________________________________________

சொற்கீரன்

mellow gulps

 

mellow gulps

_________________________________________ 


Quite interesting still the

Korkin's Books where the fantasies

wash off all our dirts

from the dwarves of short-sights

to the elves of shabby outlooks and panics..are 

our hobbids are the most mellow gulps

and lolly pops off these thorny human bondages

The gollins on our shoulders 

sting us with the most IQ embedded swaps

from those hell of physics and equations

and godly tortures of pensive moods

the deepest words of of the most

sensual and sensuous inhibitions

those fancy pages burn all our evil civils of

pre-ponderous think-stuffs..

we are born yet to die beating all the bush of

beans and berries 

and what not?

_______________________________________________

epsi Van .


புதன், 15 ஜூலை, 2026

பேழைக்குள் ஒரு பிரளயம்.

 

பேழைக்குள் ஒரு பிரளயம்.
===================================ருத்ரா
(மைக்கேல் ஜாக்ஸன் மறைவுக்கு ஒரு கவிதை அஞ்சலி)


கரடு முரடாய் வாழ்க்கை.
கனவுகளோ மூளி வானத்தை
பாதாம் அலவாவின் கனசதுரங்களாய்
வெட்டி வைத்திருக்கின்றன.
மொய்த்துக்கொண்டிருப்பது
கொசுக்களா?
பூச்சிகளா?
தேனீக்களா?
இல்லை சாக்கடை ஈக்களா?
அந்த "காதலைத்தான்" சொல்கிறேன்.
ஏக்கத்தின் தீக்கொளுந்துகளில்
ஜீன்ஸ் அணிந்து கொண்டு
ந‌ட‌மாடிக்கொண்டிருந்த‌ போதும்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ளின்
வ‌ர‌ம்புக‌ள் அறுந்துபோய்
அவிழ்ந்து நிற்கின்ற‌ன‌.

கம்பிக்காடுகளில்
பங்களாக்களில்
பதுங்கிக்கொண்டு
என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
சுவாசங்களில் கந்தல்விழுந்த
அந்த நுரையீரல்களை கழற்றிவைத்துவிட்டு
இசையின் புதிய யுகத்தைப்பூங்கொத்தாக்கிய
நுரையீரல்களை சூட்டிக்கொள்ளுங்கள்.
எத்தனை ஓசைகள்! எத்தனை வண்ணங்கள்!
தேன்சிட்டுகள் ரெக்கைகளில்
அதிரும் ஏ.ஆர்.ரஹ்மான்கள்
தட்டாம்பூச்சிகளின் கண்ணாடி சிறகுகள்...
அதில் எவ‌னாவ‌து ஒரு புதுக்க‌விஞ‌ன்
தாஜ்ம‌ஹால்க‌ள் க‌ட்ட‌த்த‌விப்ப‌து...
அதோ வான‌த்தை பிய்த்துக்கொண்டு கொட்டுகிற‌தே
மைக்கேல் ஜாக்ஸ‌னின்
"த்ரில்ல‌ர்" இசைக்குழ‌ம்பின்
வ‌ர்ண‌ப்பிர‌வாக‌ங்க‌ள்....
அவ‌னா இற‌ந்துவிட்டான்?
இந்த‌ செவிக‌ளுக்குள்
செதில் உதிர்த்துக்கொண்ட‌ இத‌ய‌ங்க‌ள்
இத‌ய‌ங்க‌ளுக்குள்
செதுக்கிக்கொண்டேயிருக்கும்
அவ‌ன் ர‌த்த‌ங்க‌ளின் ச‌ப்த‌ங்க‌ள்..
கோடி கோடி டால‌ர்க‌ள் கொட்ட‌த்த‌யாராய்
இருக்கும்
ர‌சிக‌ சூறாவ‌ளியின் அக‌ல‌விரித்த
பெருங்க‌ர‌ங்க‌ள்...
"ஒன்றாய் குர‌லெழுப்பினால்
ந‌ட‌க்காத‌து ஏதுமில்லை"
இந்த‌ உல‌க‌த்துக்கே வ‌லிக‌ள் தீர‌
சிகிச்சை அளிப்போம்"...
குர‌ல்க‌ள் ம‌ழை பொழிகின்ற‌ன‌.
இது க‌ண்ணீர் அல்ல‌.
வைரக் "கிடாரை" த‌ங்க‌ப்பேழைக்குள்
வைப்ப‌து போல்
அவ‌ன் உட‌ல் அட‌க்க‌ நிக‌ழ்வு
இந்த‌ உல‌க‌த்தையே உதிர‌வைத்த‌து.
அந்த பேழைக்குள் கிடப்பது
தூக்க மாத்திரைகளின் சதியோ?
தூங்காத இசையின் நதியோ?
எதுவாய் இருப்பினும்
அந்த பேழைக்குள் இருப்பது
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஒரு பிரளயம்.
எம‌ன் எனும் பொறாமைப்பிண்ட‌மே!
உன் தோலையே உரித்துப்போட்டுவிட்டு
ஒரு பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்துகொண்டு வா!
இவ‌ன் இசையை உன்னால்
உருவாக்க‌ முடியாது.
ஐம்ப‌து வ‌ய‌துக்குள்
அவ‌னை ப‌ல‌கார‌ம் ப‌ண்ணிவிட்டேன் என்று
கொக்க‌ரிக்காதே.
நீ தின்ற‌து இவ‌ன் ச‌தையை ம‌ட்டும் தான்.
இசை "டோர்ன‌டோவாய்"
உய‌ர‌ங்க‌ள் எல்லாம் க‌ட‌ந்து
ஒரு சுழ‌லில் "ஃபுன‌ல்" வ‌டிவில்
விஸ்வ‌ரூப‌ம் எடுத்துக்கொண்டு நிற்கிறான்.
ஓ! ம‌னித‌ர்க‌ளே!
உங்க‌ள் துய‌ர‌ங்க‌ளை இதில் வ‌டிக‌ட்டிக்கொள்ளுங்க‌ள்.
ம‌னித‌ப்பிற‌விக‌ள் பிரபஞ்சக்கூழாய் க‌ரைந்து
அந்த‌ "எத்தியோப்பிய‌" சிசுக்க‌பால‌ங்க‌ளிலும்
க‌ண் குழிக‌ளிலும் உயிர் ஈர‌த்தை
ந‌க்கிக்காட்டுகிற‌து அது.
தாய்மையின் க‌த‌க‌த‌ப்பே அந்த‌ இசை.
இசைச் சுர‌ங்க‌ளுக்கு
ச‌ங்க‌மம் தான் உண்டு; ச‌மாதிக‌ள் அல்ல‌.
லாஸ் ஏஞ்ச‌ல‌ஸின் "ஸ்டேப்ள‌ர்ஸ் சென்ட‌ரில்"
அன்று (ஜூலை 7 2009)
தேச‌ எல்லைக‌ளின் காங்கிரீட் கோடுக‌ள் கூட‌
நொறுங்கிப்போயின‌.
குறுகிய‌ வ‌ன்முறைக‌ள் தொலைந்து போயின‌.
வெள்ளைக்க‌ண்க‌ளிலும்
க‌ண்ணீர்க்க‌ருங்க‌ட‌ல் முட்டிநின்ற‌ன‌.
நினைவின் க‌ட்ட‌ங்க‌ள்
சிறைவைத்திருக்கும்
இந்த‌ புழுக்கூட்டை உடைத்துக்கொண்டு
புற‌ப்ப‌ட்டு வ‌ருவேன்.
என்று ஒரு புதிய‌ இசையை
அந்த‌ ஹாலிவுட் ஹில்ஸின் தூரிகைப்புல்க‌ளில் கூட‌
ந‌ம்பிக்கையின் மெட் அமைத்து
பாடுகிறான் அவ‌ன்.
தியாகைய்ய‌ர் ஆராத‌னையென்றாலும் ச‌ரி
செம்ம‌ங்குடியின் தொண்டைக்குழியென்றாலும் ச‌ரி
என‌க்கு அதில் மைக்கேல் ஜாக்ஸ‌னின்
ஜெண்டை வ‌ரிசையும் க‌ம‌க‌மும் கார்வை நூற்கிற‌து.
அந்த‌ திருவால‌ங்காட்டு சிவ‌ன்
மைக்கேல் ஜாக்ஸ‌னாய்
மைக் பிடித்துக்கொண்டு ஆடிப்ப‌டுகிறான்.
திவ்ய‌மாய் கேட்க‌லாம் வாருங்க‌ள்.
=========================================================

ருத்ரா
(இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)
த‌வுச‌ண்ட் ஓக்ஸ் (லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்)
க‌லிஃப்போர்னியா
யு.எஸ்.ஏ.

<>

______________________________________________________________

7th July 2009

_____________________________________________________________

.

நற்சுவை மண்டலமாம் .

 Sugar found in raspberries discovered near the center of the Milky Way




இனியவை நாற்பது 

இன்னா நாற்பது 

என்று

தமிழன் வாழ்வின் உயிர்ச்சத்தை

செய்யுட்களாக்கினான்.

பிரபஞ்ச தோற்றம் மற்றும்

நம் "பால்வழி மண்டலங்கள்"

ஒரு உயிர்ப்பான இனிப்பை

(எரித்ருலோஸ்)

முதலில் விண்வெளியில்

விண்கற்களில்

எரிகற்களில்

நிரப்பி நம் பூமியில்

உமிழ்ந்து உருவம் காட்டியிருக்கிறது

மனித உயிரின் 

அடிக்கருவை!

அந்த இன்சுவை  மண்டலமே

நம் உயிர்த்தொகுப்பின் பெ ரும் 

நற்சுவை மண்டலமாம் .

மெலே லிங்கில் உள்ள கட்டுரையில்

அந்த உயிர்ப்பின் ஆர்ப்பரித்த‌

பெரும் நயாகராவில்

திளைத்துப்பாருங்கள்!

_____________________________________

சொற்கீரன்

திங்கள், 13 ஜூலை, 2026

ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

 ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

___________________________________________


தினமும்

தமிழின் உயிர் மழை

பெய்து கொண்டிருப்பாயே!

தமிழின் மழைபெய்தால் போதும்

உனக்கு?

என் உயிர் எங்கோயோ

மேகமாய் நின்று அதை

பெய்து கொண்டிருக்கட்டும்.

தமிழுக்கு

எப்போதுமே

வான்சிறப்பு உண்டு.

தமிழ்(உடம்பும் உயிரும்) விசும்பின்

துளி வீழினல்லால்

உன் சொல்லின் 

பசும்புல் தலை காண்பு அரிது.

உன் தமிழின் எழுச்சியை

எப்போதும் மழை பெய்து கொண்டிரு.

என் தமிழ் மூச்சின்

உயிர் அளபடையாய்

ஒற்று அள‌படையாய்

தமிழின் புகழ்பாடும்

இன்னிசை அளபடையாயும்

நம் இலக்கணத்தமிழ் மழையை

உங்கள் மீது 

பொழிந்து கொண்டேயிருப்பேன்.

_____________________________________

சொற்கீரன்