you tube 88...origin of Boltsmann constant and its bearing onPlanck's contants?
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
you tube 88...origin of Boltsmann constant and its bearing onPlanck's contants?
கண்ணாடியில்
நாம் முகத்தையே
பார்த்துக்கொண்டிருப்பதால்
நம் முதுகு அழகாயிருப்பது
தெரியாமலேயே
போய்விடுகிறது.
போர் என்றால் புறமுதுகும்
சேர்த்து தானே.
காதல் போர் தோல்வி என்றால்
அப்போது உன்
கண்ணாடி காத்துக்கொண்டிருக்கும்
உன் முகத்தை விட
உன் முதுகை பார்க்க ஆவலாய்!
_______________________________________
ப்ரஸ்
உலுக்கிப்பாருங்கள்?
_________________________________________________
கணிப்பொறி தட்டி
உங்கள் கனவுகளையெல்லாம்
உலுக்கிப்பாருங்கள்?
குலுக்கிப்பாருங்கள்?
என்ன வெல்லாம் விழும்
என்பதையும்
உற்று நோக்குங்கள்.
இது வரை விழுந்த
அந்த குவியல்களில்
என்ன என்ன என்று
கிளறிப்பார்த்தீர்களா?
கொடியும்
அதற்குள் சுருண்டு கிடந்த
வர்ணங்களையும் கவனித்தீர்களா?
மூர்ணம் என்றார்கள்.
விரித்து நோக்கினால்
நான்கு வர்ணம்
மனிதத்தின் சமநீதியை
நரபலி கேட்டு
நாக்கு நீட்டுகிறது.
மூலதனைத்தை
இயக்கி இயற்றும்
மக்கள் சுதந்திரம்
தட்டி நொறுக்கப்பட்டு
அதன் சிதலங்களாக
வேலையின்மையும்
வறுமைக்கோடும்
மேலும் மேலும் உயர்ந்து
மக்கள் அதில்
அமிழ்ந்து போயினர்.
கடவுள் புராணங்களின்
அழுக்கு மூட்டைகளே
அரசியல் சாசனங்கள்
ஆகிப்போயின.
இன்னும் இன்னும்
என்னத்தை
"கிளிக்" பண்ணி
கம்பியூட்டர் கேம்ஸ்
ஆடப்போகிறீர்கள்?
பாருங்கள்..பாருங்கள்..
அதோ அந்த குவியலில்
கை வேறு கால் வேறு
தலை வேறு உடல் வேறாய்
வெட்டுண்டு கிடப்பது
உங்கள் ஜனநாயகமே.
ஆயிரம் வெட்டரிவாளாய்
அருகில் கிடப்பது
சாதிகள் சாதிகள் சாதிகளே.
____________________________________________
சொற்கீரன்
mystery of photons makes the UNIVERSE still more a MYSTERY!
you tube ..87...woondersof photon!
SCIENCE OF SLEEP!
யுகசிற்பியனின் கவிதை
______________________________________
முப்பது நாப்பது களில்
இப்படி கூட்டம் திரண்டபோது
கொழுப்பெடுத்த பயலுக
சும்மாக் கெடக்க மாட்டாங்க...
வெள்ளக்காரங்க
என்ன வெல்லாம் நமக்கு
செஞ்சுருக்காங்க?
என்று புலம்பினார்கள்.
அம்பதுகளில்
இப்ப நம்ம ஆட்சி தான்.
பப்பர்மெண்ட்லாம் குடுத்து
கொடியேத்தி
பாடுராங்க..
அப்பவும்பாருங்க
இவனுக
கொடி பிடிச்சு கோஷம்
போட்டுகிட்டு...
முகாரிப்பாட்டு
மறுபடியும்.
இங்கு
மொழி தனிமனித மரியாதை
என்றெல்லாம்
கூட்டம் வெள்ளமெனத்திரண்ட போது
ஆட்சி செய்த எளிய மனிதரை
தடம்புரட்டினார்கள்.
அப்போது
அவர்கள் "விஷக்கிருமிகள்" ஆனார்கள்.
அதன் பிறகு
உள் விவகாரம்.
தன் மகன் அந்த பெரிய நடிகர் போல்
நடிக்கிறானே..
இனி என்ன செய்யலாம்
என்ற எண்ணஓட்டங்கள் ஓடியபோது
வடக்கத்தியவர்கள்
தென்னகத்துக் குரல் ஒடுக்க
எண்ணிய போது
வருமான வரித் துருப்புச்சீட்டு
வாகாய் வந்தது.
வடக்காவது..தெற்காவது?
தமிழாவது? ஆரியமாவது?
கவிழ்த்தவர்கள் தந்த
தொப்பி கருப்புக்கண்ணாடி
விடிந்த சூரியனையே குருடாக்கியது.
அந்த அரிதாரம்
இந்த பத்து அவதாரப் பக்தியைக்கூட
தூக்கி விழுங்கி விட்டது.
சாதியத்தின் அடி நிலையை
மேல் தட்டு
நசுக்கியே தின்றது சூழ்ச்சி.
அப்போது அந்த சூழ்ச்சியை
மிக மிகப்பிரமாண்ட சினிமாவாக
ஆக்கியது
இந்த மந்தைகளின் காட்டாறு.
அப்போது அடி மண்ணில்
புதைந்து போன
தமிழும் மொழியும்
அந்த வரலாற்றுப்பஞ்ச தந்திர
சதிக்குள் வீழ்ந்து போக
இந்த அப்பாவி வெறி வெள்ளமே
ஒரு பெரும் காரணம்.
அது போல் தான்
மீண்டும் வயதுகளின்
சூறாவளிக்கொடுங்காற்று.
மீசை பதியா
பால் முகங்களும்
பேரழிவுப்பிரளயங்களாய்
மின்சாரக்கம்பங்களைக்கூட
பிடுங்கி வாளேந்தி
யுத்தம் செய்யக்கிளம்பி விட்டன.
சாதிவெறியை மதத்தின்
சல்லாத்துணி போர்த்திய
தீப்பந்தங்களுடன்
ஜெயிக்க வைக்க அந்த
இருட்டு சித்தாந்தங்களும்
வாய்க்கால் வெட்டின.
இப்போதும்
தமிழும் மொழியும்
தடம் அழிந்து இடம் மறந்து
காக்காய் இறகுகளாய்
பிய்ந்து சிதறி விழத்தொடங்கி விட்டது.
முதிய வயதுகள்
முதுகொடிந்து வீழட்டும்.
இளைய சிறகுகள்
பட படத்து
ரத்த மழை கூட
பெய்யட்டும்.
எல்லாம் சினிமா என்று
பாப்கார்ன் கொறித்து
வேடிக்கை பார்ப்போமாக
அல்லது
அந்த நாமும்
அந்த
கார்க்கண்ணாடி உடைத்து
நொறுக்கி
அந்த அரிதாரச்செல்வனுக்கு
முத்த மழை பொழிவோமாக!
அரிஸ்ட்டாட்டில்கள் கிடக்கட்டும்.
இந்த ரஸ்புடீன்களே
நமது ரசகுல்லாக்கள்!
__________________________________________
யுக சிற்பியன்.
வண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு 15.04.26
________________________________________________________
வண்ணதாசன் அவர்களே
"கருவாச்சிக் காவியமும் ஓவியமும்"
மிக மிக நன்று.
அதோடு அந்த
பராபவ . . .
"ருக்குமணி பர பர.."
என்ற பாட்டை போல் இருக்கிறது.
நமது பல்லு
இப்படி முறுக்கு சீடை
கடிக்கப் புறப்பட்டது போல் தான்
"தமிழ் வர்ஷ"பஞ்சாங்கத்தை
எடுத்துக்கொண்டு கிளம்புகிறது.
இதில்
அந்த வேப்பம்பூ ரசம் பச்சடி
சாப்பாட்டுக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை.
"தமிழன் என்றொரு இனமுண்டு"
அவன் போல் வேறு இனம்
பார்த்ததில்லை.
அதோ இறக்கையெல்லாம்
பிய்த்து விட்டார்கள்.
சற்று நேரத்தில்
"கோழிப்பிரியாணி ரெடி"
என்கிறான்.
அது கோழி அல்ல..
தமிழை அகவி அகவி
அகநானூறுகள் பாடிய
தமிழ் மயிலடா மயில்!
____________________________________
சொற்கீரன்
தமிழா
என்று யாருமே உன்னை
அழைத்ததில்லை.
ஊமை செவிடுகள் போன்று
"அறுபது தடவைகள்"
உன்னை
கைதட்டி அழைத்தது போல்
வெறும் கூச்சல்களை தந்தவர்க்கா
பூரண கும்ப மரியாதை?
தமிழா
நீ மரத்தமிழனிலிருந்து
என்றைக்கு
மறத்தமிழன் ஆகிறாயோ
அப்போது தான் உனக்கு
புத்தாண்டு.
அது வரை இது
வெத்தாண்டு தான்.
___________________________________
சொற்கீரன்