ஞாயிறு, 1 மார்ச், 2026

"மோக முள்ளின்"...

 



ஒரு பெருங்கதையாடல்!

_____________________________________


ஒரு ராமாயணத்தை

இன்னொரு மகாபாரதம் கொண்டு

சப்ளாக்கட்டையை

தட்டி தட்டி 

சுரங்களையும் அசுரங்களையும்

கலந்து பிசைந்து

கதைக்கும் பெருங்கடலா இது?

தெரியவில்லை.

எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள்

இன்னொரு

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின்

எழுத்துக்களின் 

நாடித்துவாரங்களுக்குள் எல்லாம்

புகுந்து புகுந்து

தும்மல் போட்டு போட்டு

புல்லரித்துக்கொள்வது தான் இது.

இரு கல்லும் மோதி

பொறி பறக்கும்

சிக்கிமுக்கி கல்லாக‌

சிந்தனைகளின்

கற்பனை நிகழ்வுகளின்

உரசல்களையெல்லாம்

தேன் பிழிந்து தருவது தான் இது.

இப்படித்தான்

கும்பகோணம் 

அணைக்தால் தெருவுக்குப் போனால்

"மோக முள்ளின்"

பாபுவும் யமுனாவும்

அங்கே தூசிகளிலும் 

காத்துப்பிழம்பின் நெஞ்சுத்துடிப்புகளிலும்

காதல் கொப்பளிக்காமல்

குமிழிகள் விட்டுக்கொண்டே இருப்பதை

புளகாங்கிதத்துடன்

"பௌராணிகம்" செய்வதும் தான் இது.

பவா செல்லத்துரை

நாவல்களின் 

"லைவ்" நாவல்கள்.

இலக்கு இல்லாத திசைகளையும்

கோர்த்து இலக்கிய அனுபவத்தின்

ஆச்சரியமான திசைகளைக்கொண்டு

அருந்தத் தரும் 

அற்புதக்"குடி"யிருப்பு

பவா செல்லத்துரை அவர்கள்

_____________________________________________

சொற்கீரன்

சனி, 28 பிப்ரவரி, 2026

vannadaasan kavithai /01.03.26

 


வண்ணதாசன் அவர்களே!


என்ன இப்படி?

ஒரு தீயை அள்ளிப்பூசி

பசியின் கொடும் தீக்கொழுந்து வைத்து

நகங்களுக்கு

விடியல் நகப்பூச்சு பூசுவது போல்

அந்த அழகிய முதுகு மழலைப்பெண்ணின்

முகம் காட்டி

நெஞ்சத்தை கிள்ளி விட்டீர்கள்.

மாவிலை செம்புத்தளிர்

சொட்டிக்காட்டியிருக்கும்

நெருப்பாற்றங்கரை நோக்கிய‌

உங்கள் ஆற்றுப்படைக்குள்

இந்த கற்பாறைகளை

உடைத்து நொறுக்கும்

ஆயுதப்படையிலும்

தேமா புளிமாக்களும்

க‌ருவிளங்கண்ணி 

கூவிளங்கண்ணிகளூம்

கூவிக்கொண்டு தானிருக்கின்றன.

______________________________________

சொற்கீரன்.

ஆற்றுப்படை

 


THIS IS MINNOOTTAM FOR "RAMESH KANNAN:'S KAVITHAI ON HIS FACE BOOK ON 

01.03.2016

______________________________________________________________

என்னடா இது.

எசப்பாட்டுகளின் தொல்லையாகிப்போச்சு

என முணுமுணுக்க வேண்டாம்.

ஒரு கவிதையை

ஒரு கவிதையால் தானே பார்க்கவேண்டும்.

கவிதையை படிப்பது அல்ல இது.

ஒகோ!

அவ்வளவு பெரிய அப்பா டக்கரா நீங்கள்?

கருக விட வேண்டாம்.

தளிர் விடும் கவிதை ஆர்வங்களை.

அந்த சொற் துண்டங்கள்

குத்தி குத்திச் சொருகி கொடுத்திருந்த‌

உங்கள்

எழுத்துக்கோர்வைகளின்

ஆற்றுப்படை 

உண்மையிலேயே

சுவையோ சுவை!

அருமையோ அருமை!

________________________________________

சொற்கீரன்

அப்போது பிறந்தது தான்.

 

நீங்கள் யாருடைய பிள்ளைகளாக‌

இங்கே பிறக்கப்போகிறீர்கள்?

என்னுடையவர்களாக‌வா?

அவனுடையவர்களாகவா?

இறைவனும் கேட்டான்.

சாத்தானும் கேட்டான்.

சரி.

ஓட்டுப்பெட்டி வைக்கலாம்

எனப்பட்டது.

ஓட்டுபெட்டி முன்னே

குவிந்தனர் கூட்டம் கூட்டமாய்.

ஓட்டுகள் குவிந்தன.

எண்ணப்பட்டன.

இருவருக்கும் சமமாய்

ஓட்டுகள்!

என்ன?

எனக்கு ஓட்டுப்போட‌

இன்னும் இங்கு எவரும் இல்லையா?

என்று

இருவருமே கேட்டனர்.

வெகு நேரம் ஆயிற்று.

யுகங்கள் ஆயிற்று.

கோடி கோடி காலங்கள்

வந்து வந்து

மறைந்து போயின.

அவர்கள் இருவர் மட்டுமே நின்றனர்.

அவர்கள் 

கை குலுக்கிக் கொண்டனர்.

என்ன செய்யலாம்?

அவர் ஓட்டு இவருக்கும்

இவர் ஓட்டு அவருக்கும் 

விழுந்தன.

அப்போது பிறந்தது தான்.

மனிதமும்

மனித அறிவும்!!

________________________________________

சொற்கீரன்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

ஆலங்காட்டு தரிசனத்துக்கு...

27.02.2026.

பிடித்தவை 12ம.நே 
ஒரு தெய்வம்
வாகை மரத்தின் கீழ்
பதநீரும் நொங்கும் விற்கிறது.
புனிதமேரி தெருமூலையில் ஒன்றுக்கு
புதன் கிழமையில் மீன் வியாபாரம்.
பொது மருத்துவமனைப் பக்கம் ஒன்று
தோளில் சார்த்திய குளிர்ந்த பிள்ளையுடன்.
முடிதிருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது.
பித்துற்றுப் பேசி ஒன்று
பச்சைப்பழஞ்சேலையுடன் அலைகிறது.
நான்கு கால் தெய்வம் ஒன்று
நடைபாதையில் குட்டியுடன் படுத்தபடி.
தன்னைக் காட்டாது பறக்கும் தெய்வமோ
என் மீது சூடாக எச்சமிடுகிறது.
சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ
கோவிலுக்கு வெளியேதான்
கும்பிடுகிறேன் அனைத்தையும்.
%
2013





_____________________________________________________-


 Vannadasan Sivasankaran S..........27/02/2026

பிடித்தவை

 ·

6ம.நே

 ·


நீண்ட காலம் 

படுக்கையில் இருந்தவர்

இன்றைக்கு அவரே எழுந்து 

முகம் கழுவிக் கொள்கிறார். 

அவருக்கு அவர் முகத்தைப் பிடித்திருக்கிறது.

ஈரம் வழியும் ஒடுங்கிய கன்னத்தை,

கண்களின் பள்ளத்தை,

நுனிச் சதை தளர்ந்த மூக்கு நுனியை

எலும்பு தட்டுப்படும் நாடியைப் பிடித்திருக்கிறது.

தண்ணீர் விழும் திருகு குழாயை

கைப்பிடியுள்ள இந்த ப்ளாஸ்டிக் கோப்பையை

அதிலிருந்து சரியும் தண்ணீரைப் பிடித்திருக்கிறது.

நெற்றியில் இருந்து விழும்

ஒரே ஒரு சொட்டை ஏந்துவதற்காக

அவர் அதிகபட்சம் நாக்கை 

நீட்டிக்கொண்டு இருக்கிறார்.


_______________________________________________‍‍


எங்கள் வகுப்பில் தமிழ் ஆசிரியர்

உருவகக்கதை சொல்லுவதில் வல்லவர்.

சுடுகாடு பற்றி

ஒரு கட்டுரை வரைக என்று

மாணவர்களுக்கு

அவர் சொன்னார்.

இந்த கனமான அச்சம் தரும்

தலைப்பு 

இவர்களால்

எப்படி பார்க்கப்படுகிறது என்று

அவர்க்கு அறிய ஆவல்.

மாணவர்களுடைய கட்டுரைகள்

கால் பக்கம் அரை பக்கம் கூட இல்லை.

சில வற்றில்

ஓரிரு வரிகள்

அல்லது வார்த்தைகள் மட்டுமே.

ஒரு கட்டுரை

இரண்டு மூன்று

தாள்களை நிரப்பி எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு

வியப்பு தாங்க வில்லை.

அதைப்படித்தார்.

"சுடுகாடு..."என்று துவங்கியிருந்தது.

அது அந்த ஆத்தங்கரையில் இருக்கிறது.

அதில் ஒரு அழகிய மரம்.

நாவல் மரம்.

அதன் இலைகள் சிலுக்கு மாதிரி

பளபளப்பில்

பச்சை பச்சையாய் வெட வெடப்பு சத்தத்தோடு

இருக்கும்.

பழங்கள்..

கருப்பு கருப்பாய்

இனிப்பு இனிப்பாய் இருக்கும்.

அது எப்படி?

மரத்தில் சமைக்கிறார்களா?

அது கூட‌

சூடாய் இருக்குமா?

ஆறிப்போய் இருக்குமா?

கீழே விழுந்ததை

பொறுக்கிப்பார்த்து தான்

புரிந்து கொள்ள முடியும்..

. . . . . . 

கட்டுரை தொடர்ந்து கொண்டே போனது.

ஆசிரியர் அந்தக்கட்டுரையை

அந்த மாணவனைக்கொண்டே 

வாசிக்கச்சொன்னார்.

கை தட்டி கை தட்டி

எல்லாரையும் பாராட்டச்சொன்னார்.

தமிழ் மொழி நாவு கொண்டு

உயர் தனி சிறப்பும் செம்மையும்

பெற்றது.

அந்த தமிழ் நாடு 

நாவலந்தீவு

எனும் பெயர் பெற்றது எப்படி 

என்று அவர்க்கு 

இன்று தான் விளங்கியது.

வண்ணதாசன் அவர்களே!

அந்த ஒரு சொட்டு நீருக்குள்

வாழ்க்கை கனத்தின் 

ஏழு கடல்களா?

_____________________________________

சொற்கீரன்



__________________________________________________










(3)


அது

கடைசிச்சொட்டா?

முதல் சொட்டா?

மகப்பேறு பார்த்தவள்

தன் பிஞ்சு மண்டைக்குழவியை

கழுவும்போதும்

அந்த ஒரு சொட்டு

அவர் வாய்க்குள் விழுந்து

பல அடையாறு ஆலமரங்களின்

விழுதுகளை

விட்டிறங்கி

எங்கெல்லாமோ நடந்து

ஏன்

அந்த சிந்துபூந்துறை ஆற்றையும் கூட‌

ருசி பார்த்து

சப்பு கொட்டிக்கொண்டு இருக்கலாம்.

அந்தத் துளியில்

இன்னும் பல ஏ ஐக்கள்

பூதங்கள் காட்டக் காத்திருக்கலாம்.

இருப்பினும்

கடைசியாக அவர் மூடப்படுவது கூட‌

அவருக்கு பிடித்துப்போன காட்சி தான்.

ஆலங்காட்டு தரிசனத்துக்கு

எல்லோரும் தான் வந்திருக்கிறார்கள்

அந்த கூத்தனும் கூடத்தான்.

__________________________________________

சொற்கீரன்.





அந்த குமிழி

 



(2)


அந்த குமிழி உடையுமுன்

உன் வானவில் சிப்பங்களை

அதில் செருக்கிக்கொள்.

கற்பனை ஒளி

கரு தரிக்குமுன்

உன் வானச் சிலேட்டை

மடியில் வைத்துக்கொள்.

குச்சி நுனியும் விரல் நுனியும்

என்ன பேசிக்கொள்கின்றன‌

என்பதை நீ

உற்றுக்கேட்பதிலிருந்து

உன் கனவு மண்டலங்கள்

உனக்கு குடை பிடிக்க‌

வருகின்றன.

______________________________________

சொற்கீரன்


நூலாம்படைகள்

நூலாம்படைகள்

________________________________


(!)



அங்கும் இல்லை.

இங்கும் இல்லை.

எங்கும் இல்லை.

நான்.

எதற்கு இந்த 

தன்மை

முன்னிலை படர்க்கைகள்?

என்னைக்காட்டிக்கொள்ள‌

ஏதாவது

பேசவேண்டும்

எழுத வேண்டும்

பாட வேண்டும்

நடிக்க வேண்டும்.

வழியில் ஒரு

செத்தக்குச்சியைத் தொட்டால் கூட‌

சுருண்டுகொள்ளும்

வளையல் பூச்சிகள்

எந்த வானவில்லை

வளைத்து முறிக்க இங்கே

காத்திருக்கின்றன.

_______________________________________‍

சொற்கீரன்


(2)


மனுஷ்யபுத்ரன் அவர்கள்

தன்னை

சுஜாதா என்ற‌

எலக்ட்ரானிக் இலக்கிய‌

ஆலமரமே வந்து

நீரூற்றி வார்த்தெடுத்ததை

குறிப்பிட்டிருந்தது

ஒரு வரலாற்று நெகிழ்ச்சியின் 

உயிர்ச்சித்திரம்.

சொற்களை கூர் தீட்டும்

சிக்கி முக்கிக்கல் தான்

கவிதை.

எழுத்துக்களின் மாத்து பற்றி

உரைக்கும்

கட்டளைக்கல் கூட‌

கவிதை தான்.

கவிதை படித்தாலும்

கவிதை எழுதினாலும்

தீப்பற்றிக்கொள்ளும் 

சிந்தனைத் தீற்றுகள் கூட‌

முகவரியற்ற மூலைகளாய்

விழியுறுத்தி நோக்கித்தான்

கிடக்கின்றன.

_____________________________________

சொற்கீரன்