புதன், 15 ஜூலை, 2026

பேழைக்குள் ஒரு பிரளயம்.

 

பேழைக்குள் ஒரு பிரளயம்.
===================================ருத்ரா
(மைக்கேல் ஜாக்ஸன் மறைவுக்கு ஒரு கவிதை அஞ்சலி)


கரடு முரடாய் வாழ்க்கை.
கனவுகளோ மூளி வானத்தை
பாதாம் அலவாவின் கனசதுரங்களாய்
வெட்டி வைத்திருக்கின்றன.
மொய்த்துக்கொண்டிருப்பது
கொசுக்களா?
பூச்சிகளா?
தேனீக்களா?
இல்லை சாக்கடை ஈக்களா?
அந்த "காதலைத்தான்" சொல்கிறேன்.
ஏக்கத்தின் தீக்கொளுந்துகளில்
ஜீன்ஸ் அணிந்து கொண்டு
ந‌ட‌மாடிக்கொண்டிருந்த‌ போதும்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ளின்
வ‌ர‌ம்புக‌ள் அறுந்துபோய்
அவிழ்ந்து நிற்கின்ற‌ன‌.

கம்பிக்காடுகளில்
பங்களாக்களில்
பதுங்கிக்கொண்டு
என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
சுவாசங்களில் கந்தல்விழுந்த
அந்த நுரையீரல்களை கழற்றிவைத்துவிட்டு
இசையின் புதிய யுகத்தைப்பூங்கொத்தாக்கிய
நுரையீரல்களை சூட்டிக்கொள்ளுங்கள்.
எத்தனை ஓசைகள்! எத்தனை வண்ணங்கள்!
தேன்சிட்டுகள் ரெக்கைகளில்
அதிரும் ஏ.ஆர்.ரஹ்மான்கள்
தட்டாம்பூச்சிகளின் கண்ணாடி சிறகுகள்...
அதில் எவ‌னாவ‌து ஒரு புதுக்க‌விஞ‌ன்
தாஜ்ம‌ஹால்க‌ள் க‌ட்ட‌த்த‌விப்ப‌து...
அதோ வான‌த்தை பிய்த்துக்கொண்டு கொட்டுகிற‌தே
மைக்கேல் ஜாக்ஸ‌னின்
"த்ரில்ல‌ர்" இசைக்குழ‌ம்பின்
வ‌ர்ண‌ப்பிர‌வாக‌ங்க‌ள்....
அவ‌னா இற‌ந்துவிட்டான்?
இந்த‌ செவிக‌ளுக்குள்
செதில் உதிர்த்துக்கொண்ட‌ இத‌ய‌ங்க‌ள்
இத‌ய‌ங்க‌ளுக்குள்
செதுக்கிக்கொண்டேயிருக்கும்
அவ‌ன் ர‌த்த‌ங்க‌ளின் ச‌ப்த‌ங்க‌ள்..
கோடி கோடி டால‌ர்க‌ள் கொட்ட‌த்த‌யாராய்
இருக்கும்
ர‌சிக‌ சூறாவ‌ளியின் அக‌ல‌விரித்த
பெருங்க‌ர‌ங்க‌ள்...
"ஒன்றாய் குர‌லெழுப்பினால்
ந‌ட‌க்காத‌து ஏதுமில்லை"
இந்த‌ உல‌க‌த்துக்கே வ‌லிக‌ள் தீர‌
சிகிச்சை அளிப்போம்"...
குர‌ல்க‌ள் ம‌ழை பொழிகின்ற‌ன‌.
இது க‌ண்ணீர் அல்ல‌.
வைரக் "கிடாரை" த‌ங்க‌ப்பேழைக்குள்
வைப்ப‌து போல்
அவ‌ன் உட‌ல் அட‌க்க‌ நிக‌ழ்வு
இந்த‌ உல‌க‌த்தையே உதிர‌வைத்த‌து.
அந்த பேழைக்குள் கிடப்பது
தூக்க மாத்திரைகளின் சதியோ?
தூங்காத இசையின் நதியோ?
எதுவாய் இருப்பினும்
அந்த பேழைக்குள் இருப்பது
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஒரு பிரளயம்.
எம‌ன் எனும் பொறாமைப்பிண்ட‌மே!
உன் தோலையே உரித்துப்போட்டுவிட்டு
ஒரு பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்துகொண்டு வா!
இவ‌ன் இசையை உன்னால்
உருவாக்க‌ முடியாது.
ஐம்ப‌து வ‌ய‌துக்குள்
அவ‌னை ப‌ல‌கார‌ம் ப‌ண்ணிவிட்டேன் என்று
கொக்க‌ரிக்காதே.
நீ தின்ற‌து இவ‌ன் ச‌தையை ம‌ட்டும் தான்.
இசை "டோர்ன‌டோவாய்"
உய‌ர‌ங்க‌ள் எல்லாம் க‌ட‌ந்து
ஒரு சுழ‌லில் "ஃபுன‌ல்" வ‌டிவில்
விஸ்வ‌ரூப‌ம் எடுத்துக்கொண்டு நிற்கிறான்.
ஓ! ம‌னித‌ர்க‌ளே!
உங்க‌ள் துய‌ர‌ங்க‌ளை இதில் வ‌டிக‌ட்டிக்கொள்ளுங்க‌ள்.
ம‌னித‌ப்பிற‌விக‌ள் பிரபஞ்சக்கூழாய் க‌ரைந்து
அந்த‌ "எத்தியோப்பிய‌" சிசுக்க‌பால‌ங்க‌ளிலும்
க‌ண் குழிக‌ளிலும் உயிர் ஈர‌த்தை
ந‌க்கிக்காட்டுகிற‌து அது.
தாய்மையின் க‌த‌க‌த‌ப்பே அந்த‌ இசை.
இசைச் சுர‌ங்க‌ளுக்கு
ச‌ங்க‌மம் தான் உண்டு; ச‌மாதிக‌ள் அல்ல‌.
லாஸ் ஏஞ்ச‌ல‌ஸின் "ஸ்டேப்ள‌ர்ஸ் சென்ட‌ரில்"
அன்று (ஜூலை 7 2009)
தேச‌ எல்லைக‌ளின் காங்கிரீட் கோடுக‌ள் கூட‌
நொறுங்கிப்போயின‌.
குறுகிய‌ வ‌ன்முறைக‌ள் தொலைந்து போயின‌.
வெள்ளைக்க‌ண்க‌ளிலும்
க‌ண்ணீர்க்க‌ருங்க‌ட‌ல் முட்டிநின்ற‌ன‌.
நினைவின் க‌ட்ட‌ங்க‌ள்
சிறைவைத்திருக்கும்
இந்த‌ புழுக்கூட்டை உடைத்துக்கொண்டு
புற‌ப்ப‌ட்டு வ‌ருவேன்.
என்று ஒரு புதிய‌ இசையை
அந்த‌ ஹாலிவுட் ஹில்ஸின் தூரிகைப்புல்க‌ளில் கூட‌
ந‌ம்பிக்கையின் மெட் அமைத்து
பாடுகிறான் அவ‌ன்.
தியாகைய்ய‌ர் ஆராத‌னையென்றாலும் ச‌ரி
செம்ம‌ங்குடியின் தொண்டைக்குழியென்றாலும் ச‌ரி
என‌க்கு அதில் மைக்கேல் ஜாக்ஸ‌னின்
ஜெண்டை வ‌ரிசையும் க‌ம‌க‌மும் கார்வை நூற்கிற‌து.
அந்த‌ திருவால‌ங்காட்டு சிவ‌ன்
மைக்கேல் ஜாக்ஸ‌னாய்
மைக் பிடித்துக்கொண்டு ஆடிப்ப‌டுகிறான்.
திவ்ய‌மாய் கேட்க‌லாம் வாருங்க‌ள்.
=========================================================

ருத்ரா
(இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)
த‌வுச‌ண்ட் ஓக்ஸ் (லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்)
க‌லிஃப்போர்னியா
யு.எஸ்.ஏ.

<>

______________________________________________________________

7th July 2009

_____________________________________________________________

.

நற்சுவை மண்டலமாம் .

 Sugar found in raspberries discovered near the center of the Milky Way




இனியவை நாற்பது 

இன்னா நாற்பது 

என்று

தமிழன் வாழ்வின் உயிர்ச்சத்தை

செய்யுட்களாக்கினான்.

பிரபஞ்ச தோற்றம் மற்றும்

நம் "பால்வழி மண்டலங்கள்"

ஒரு உயிர்ப்பான இனிப்பை

(எரித்ருலோஸ்)

முதலில் விண்வெளியில்

விண்கற்களில்

எரிகற்களில்

நிரப்பி நம் பூமியில்

உமிழ்ந்து உருவம் காட்டியிருக்கிறது

மனித உயிரின் 

அடிக்கருவை!

அந்த இன்சுவை  மண்டலமே

நம் உயிர்த்தொகுப்பின் பெ ரும் 

நற்சுவை மண்டலமாம் .

மெலே லிங்கில் உள்ள கட்டுரையில்

அந்த உயிர்ப்பின் ஆர்ப்பரித்த‌

பெரும் நயாகராவில்

திளைத்துப்பாருங்கள்!

_____________________________________

சொற்கீரன்

திங்கள், 13 ஜூலை, 2026

இருட்டு நிழற்காடுகள்....

 



ஆடு மாடு வெட்டறது..

தீபம் ஏத்தறது

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு

தார் பூசி

சரஸ்வதி தேவி 

மற்றும் காளிகளின் வாழ்த்துக்கு

அரிதாரம் பூசி

அடி தடி அரசியலை

"ஆஃப்" ஆகாமல் வைத்திருப்பது...

சாதி வர்ணக்

கோட்டை கொத்தளங்களையும்

கொடி ஏற்றி

வெறியேற்றி வைத்திருப்பது.

சமுதாயம் கண்விழிக்கவே கூடாது

என்பதற்காக‌

கல் அடுக்கி செதுக்கி

பொம்மைகளையும் வடித்து

கோபுரங்கள் உயர்த்திக்கட்டி

கும்பிட்டுக்கொண்டே இருப்பது.

தமிழா!

இது தான்

உன் உலக மானிடமா?

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

என்றானே

அவன் மூச்சு எங்கே சிறகடித்துப்போனது?

அறிவின் உச்சம் எங்கோ

எட்டாத உயரங்கள் 

தாவிக்கொண்டிருக்கும் போது

மூடத்தனத்தின்

கிடு கிடு பள்ளங்களில்

வீழ்ந்து கிடப்பதா "மனிதம்?"

உலகின் முக்கால் வாசி மக்களுக்கு

உணவு உடை உறைவிடம்

என்று ஏதும் இல்லாமல் இருக்கும்

நிலை கண்டும்

மரத்துப்போய் மடிந்து கிடக்கும்

நிலையில் மக்கிக்கிடக்கிறதா

உலக சமுதாய ஜனநாயம்?

எப்படியோ கிடக்கிறது..விடுங்கள்..

சிந்தனைகள் எழுச்சியுற 

வலுவின்றி

அதோ குத்தாட்டம் போட‌

கொத்து கொத்தாக‌

வக்கரித்துப்போய்க்கொண்டிக்கும்

சைகோ டெமோக்ராஃபிக் 

நிழற்சித்திரங்களின்

இருட்டு நிழற்காடுகளின் 

மின்னட்டாம்பூச்சிகளா நீங்கள்?

_________________________________________

சொற்கீரன்

ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

 ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

___________________________________________


தினமும்

தமிழின் உயிர் மழை

பெய்து கொண்டிருப்பாயே!

தமிழின் மழைபெய்தால் போதும்

உனக்கு?

என் உயிர் எங்கோயோ

மேகமாய் நின்று அதை

பெய்து கொண்டிருக்கட்டும்.

தமிழுக்கு

எப்போதுமே

வான்சிறப்பு உண்டு.

தமிழ்(உடம்பும் உயிரும்) விசும்பின்

துளி வீழினல்லால்

உன் சொல்லின் 

பசும்புல் தலை காண்பு அரிது.

உன் தமிழின் எழுச்சியை

எப்போதும் மழை பெய்து கொண்டிரு.

என் தமிழ் மூச்சின்

உயிர் அளபடையாய்

ஒற்று அள‌படையாய்

தமிழின் புகழ்பாடும்

இன்னிசை அளபடையாயும்

நம் இலக்கணத்தமிழ் மழையை

உங்கள் மீது 

பொழிந்து கொண்டேயிருப்பேன்.

_____________________________________

சொற்கீரன்

கரிசல் இலக்கியச்செம்மல்

 

கரிசல் இலக்கியச்செம்மல்
பூமணி அவர்கள் மறைவிற்கு
என் மனம் கசிந்த அஞ்சலி
_________________________________
அரிய அற்புத எழுத்துக்கள்
எனும் கருப்பு வைரங்களை
கரிசல் எழுத்துக்களில்
சுடரத்தந்த கந்தல் சூரியனே.
மண்ணில் பூக்கள் தோன்றுவது
அழகு தான்.
ஆனால் அதன் தூசிகளும் துரும்புகளும்
கூட‌
மலர்ந்து செழித்து
மகரந்தங்கள் சிந்தி
மனிதம் மலர்த்திக்காட்டியிருக்கிறதே
உன் எழுத்துக்களால்!
கலப்பை பிடித்து
காய்த்த விரல்களில்
தோட்டங்கள்
பூத்துக்குலுங்கி
புன்முறுவல்கள் செய்கின்றனவே.
எழுத்துக்களை
சீராட்டி குளிப்பாட்டி
பள்ளிக்கு அனுப்பியிருக்கிறாய்.
அவை உயிர்த்து பயிர்த்து
பண்பு கற்பித்தன எங்களுக்கு.
மண்ணின் வேர் வேர்வையில் சொட்டி
உன் வரிகளை
வியக்க வைத்திருக்கின்றன.
உன் ஒரு நாவல் போதும்
நம் கிராமங்களின் நரம்பின் நெசவின்
நேர்த்தி சொல்ல.
அந்த கிராமத்து "வெக்கையில்" படுத்துக்கிடக்கும்
அசுர எரிமலைகள் பரல்கள் தெறித்தபோது...
வெறும் ஆட்டுப்புழுக்கைகள் என‌
ஆதிக்க வெறிகள் எக்காளமிட்ட போது...
நீ ஆணியடித்துக்காட்டியிருக்கிறாய்
இந்த மரத்த மனங்களின் மீது.
உன் எழுத்துக்கள் கொட்டிய‌
வெளிச்சத்தில்
ஆயிரம் விடியல்களின்
முகங்கள் தெரிகின்றன.
வாழ்க உன் எழுத்துக்கள்.
அவற்றிற்கு மரணம் இல்லை.
அவை நெருப்பு சிந்தனைகளின்
பிறப்பிடம் அல்லவா.
__________________________________________
சொற்கீரன்

ஞாயிறு, 12 ஜூலை, 2026

பேச்சுமில்லை மூச்சுமில்லை.

 



ஒன்று திரண்ட மக்களை

கோடிக்கால் பூதம்

என்பார்கள்.

ஒரு புதிய யுகம் படைக்க‌

அந்த பூதம் தான் வேண்டும்.

ஆனால்

இது 

மாய நிழல்களின்

ஜிகினா பிம்பங்களின்

வர்ண பூதம்.

நான்கு வர்ணமாவது

பேதமாவது என்று

ஜம்பம் பேசும் சனாதன‌

வரட்டு பிம்பங்களில்

விடியல்கள் தேடியா

படையெடுத்தீர்?

ஆதரவுக் கரங்கள் நீட்டுவது

இருக்கட்டும்.

பாசிசத்தை பாயாசமாய்

பருகக்கூப்பிடும் 

குரல்களிலா

மக்கள் கீதங்களை

முழங்கப்பொகிறீர்கள்?

சிந்தனையைக் 

கழற்றி வைத்துவிட்ட‌

பேச்சு வார்த்தைகளில்

எந்த‌

பேச்சுமில்லை மூச்சுமில்லை.

__________________________________

சொற்கீரன்.




சனி, 11 ஜூலை, 2026

இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு எங்கள் அஞ்சலி

 இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு

எங்கள் அஞ்சலி

______________________________________‍


இசைக்குயிலே!

நாப்பது ஆயிரம் பாடல்கள்

என்று சொல்கிறார்கள்.

அந்த இசை மூச்சுகளின் 

வழியே எத்தனை 

கோடிக்குயில்கள் 

ராகங்களில் 

ஊஞ்சல் ஆடியிருக்கும்?

எந்த பாட்டை சொல்வது?

வானமும் கடலும்

மண்ணும் மலையும் கூட‌

மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதே

இந்த பாட்டுகளில்!

பூக்களும் பட்டாம்பூச்சிகளும்

இன்னும் இங்கே

மொழிபெயர்த்து ஒலி பெயர்த்து

மவுனத்தையும் அமுதக்குழம்பாக்கி

இந்த அண்டத்தையும் அணைத்து

அலை விரிக்கின்றனவே!

உன் குரல்களுக்கு இங்கே

மரணம் இல்லை.

இந்தப்பாட்டுகளுக்குள்

மின்காந்தம் பாய்ச்சிக்கொண்டே

இருக்கிறாய்

இனிய தேன்மழையால் 

வருடிக்கொண்டே இருக்கிறாய்.

இறப்புக்கு மாமூல் தெய்வம் எனும்

அந்த எமன் 

உன் இசையில் எல்லாம் மறந்து போவான்.

ஆம்.

எங்களுக்கு இனி

மரணமில்லாப் பெருவாழ்வே தான்.

உன் பாடல்களில்

ஊறும் இதயங்கள் எங்களுக்குள்

துடித்துக்கொண்டே இருக்கும்.

தாயினும் சாலப்பரிந்து ஊட்டும்

இசை அம்மா உங்கள் இசை!

என்றும் எங்கள் உள்ளங்களில்

இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு

எங்கள் அஞ்சலி

______________________________________‍


இசைக்குயிலே!

நாப்பது ஆயிரம் பாடல்கள்

என்று சொல்கிறார்கள்.

அந்த இசை மூச்சுகளின் 

வழியே எத்தனை 

கோடிக்குயில்கள் 

ராகங்களில் 

ஊஞ்சல் ஆடியிருக்கும்?

எந்த பாட்டை சொல்வது?

வானமும் கடலும்

மண்ணும் மலையும் கூட‌

மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதே

இந்த பாட்டுகளில்!

பூக்களும் பட்டாம்பூச்சிகளும்

இன்னும் இங்கே

மொழிபெயர்த்து ஒலி பெயர்த்து

மவுனத்தையும் அமுதக்குழம்பாக்கி

இந்த அண்டத்தையும் அணைத்து

அலை விரிக்கின்றனவே!

உன் குரல்களுக்கு இங்கே

மரணம் இல்லை.

இந்தப்பாட்டுகளுக்குள்

மின்காந்தம் பாய்ச்சிக்கொண்டே

இருக்கிறாய்

இனிய தேன்மழையால் 

வருடிக்கொண்டே இருக்கிறாய்.

இறப்புக்கு மாமூல் தெய்வம் எனும்

அந்த எமன் 

உன் இசையில் எல்லாம் மறந்து போவான்.

ஆம்.

எங்களுக்கு இனி

மரணமில்லாப் பெருவாழ்வே தான்.

உன் பாடல்களில்

ஊறும் இதயங்கள் எங்களுக்குள்

துடித்துக்கொண்டே இருக்கும்.

தாயினும் சாலப்பரிந்து ஊட்டும்

இசை அம்மா உங்கள் இசை!

என்றும் எங்கள் உள்ளங்களில்

சுருதி மீட்டுங்கள்.

___________________________________________________

சொற்கீரன்.


___________________________________________________

சொற்கீரன்.