வெள்ளி, 10 ஏப்ரல், 2026

ஒரு காதலின் பரிணாமம்

 ஒரு காதலின் பரிணாமம்

________________________________________


இலையாடைகளில் இருந்தவள்

திடீரென்று 

பூக்கத்துவங்கும் குமிழிகளில்

தன்னைப்

புகுத்திக்கொண்டாள்.

வானவில் புருவத்தில் வந்து

தைத்துக்கொண்டு விட்டதாக‌

வர்ணங்களின் மேல் 

படுத்துப்புரண்டு கொண்டாள்.

இரவில்  அவள் 

தூங்கும்போது

பகலின் நிழல்பூக்கள்

அவள் மீது கனவு மகரந்தங்களை

தூவிப்பார்த்தது.

திடீரென்று

மின்னல் பாம்புகள் வந்து வந்து

கொத்தி விட்டுப்போயின.

இப்போதெல்லாம் இனம் தெரியாத‌

மின்காந்தம் 

அவள் மடியில் ரங்கோலிகளை விரித்தது.

அவன் உதட்டோர பூச்சி மீசை

அவளை 

கிச்சு கிச்சு மூட்டத்தொடங்கி விட்டது.

ஆம்.

அவள் காதலிக்கக் கிளம்பிவிட்டாள்.

_______________________________________

சொற்கீரன்

வியாழன், 9 ஏப்ரல், 2026

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

 


என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

__________________________________________



கூட்டம் கூடுது

லட்சக்கணக்காய்.

கழுகுப்பார்வையில்

காக்காய் இறகுகளோ

லட்ச லட்சமாய்.

கிரீடம் யாருக்கு?

முறுக்கிய ரத்தங்கள்.

துரத்திய வயதுகள்.

ஓரங்கட்டப்பட்ட‌

எண்ணெய் போட வேண்டிய‌

லொட லொடத்த‌

காயலாங்கடை அடி சரக்குகள்

ஆனாலும் 

அவற்றின் ஆழ் கிணற்று

எரிவாயுக்கனவுகள்.

சலுகைகள் 

சலங்கை கட்டி ஆடும்

விளம்பரங்கள்.

விடலைகளின் பேரலைகள்.

விட்டுத்தள்ளுங்கள்

என்று 

கடந்து போக முடியாத‌

சந்திப்புகளின்

சந்தடி இரைச்சல்கள்.

மீட்க வந்ததாய் 

மீட்ட வந்த‌

சங்கீத நரம்புகள்.

சாதி நச்சுகளில்

செத்துக்கிடக்கும்

சிந்தனைச் சவங்களை

தானே

தூக்கிச்சுமக்கும்

தற்குறித்தனங்கள்.

இவையெல்லாமா

அந்த‌

கணிப்பொறிக்குள்

விடியலை

தூண்டில் வீசி பிடித்திடுமா?

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

இருட்டையே தின்று கிடக்கும்

சித்தாந்தங்களின்

சில்லறைச்சத்தங்கள் 

ஓயட்டுமே

ஒழியட்டுமே!

புதுச் சிந்தனை 

வாளெடுத்து வீசி 

வந்திடட்டுமே.

இந்த அரக்கங்கள் 

வீழ்ந்து மறையட்டுமே!

___________________________________________

சொற்கீரன்

கி ரா

 

கி ரா

______________________________________________________________________________

எழுத்துக்களுக்குள் தெலுங்கு மக்கள் ஒரு தமிழ் மண்ணை பதியமிட்டு செவ்விய இலக்கியம் ஒன்றின் வெளிச்சத்தை தமிழ் உயிர்ப்பின் காவியமாக காட்டிசென்ற ஒரு எழுத்தாளப்பெருந்தகை கி.ரா. கரிசல் இலக்கியம் என்ற‌ ஒரு புதிய எழுத்துக்களின் வெளிச்சத்தநமக்குப்பாய்ச்சியவர் கி.ராஜநாராயணன். மண்ணின் நரம்போட்டமே மனிதர்களின்ஆசை அவலங்களில் ரத்தம் வற்றிப்போன‌ பாழின் படுகை தான்.அந்த கோவில்பட்டி காய்ஞ்சக் காட்டு மனச்சித்திரங்களை அருமையாக தீட்டியவர் கி.ரா.அவரது "வேட்டி" எனும் சிறுகதைக்கே ஆயிரம் ஞானபீடங்களின் விருது வழங்கலாம்.நகைச்சுவை போன்று தெரியும் அவர் கதைகளில் எல்லாம் நம் உள்மனத்தின் எரிமலைகள் கொழுந்து விட்டு எரிவது நன்றாக தெரியும்.எழுத்துக்குள் மக்களின் மண்ணும் மணமும் எப்படி வெளிச்சம் காட்டும் என்பதே அவரது இலக்கியப் பாணி.

_______________________________________________________சொற்கீரன்

புதன், 8 ஏப்ரல், 2026

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்




"சில நேரங்களில் சில மனிதர்கள்"

ஆனால் எல்லா நேரங்களிலும்

இவர் எழுத்துக்களே எழுத்துக்கள்.

சமுதாயம் நீங்கள் பார்க்கிற‌

சமுதாயம் கிடையாது.

அதன் உள் ஓட்டத்தில் அது

நேர் எதிரிடையானது.

இந்த நுட்பமான தன்மையே

"சோசியல் ஃப்ராய்டிசம்" என்பது.

ஜெயகாந்தன் இந்த உள்சிற்பத்தை

உண்மையாக செதுக்கினார்.

மேலை நாட்டு சிந்தனை இலக்கியம்

நம் நாட்டு பம்மாத்து பக்தி இலக்கியங்கள் போல்

பதுங்கிப்படுத்துக்கொண்டு

அழிச்சாட்டியங்களில் வக்கிர வர்ணங்களுக்கு

சாமரங்கள் வீசியதில்லை.

அவை மனிதத்தை வெளிப்படுத்தில்

ஒளிவு மறைவு காட்டியதே இல்லை.

அந்த சிந்தனைப்போக்கில்

நம் தமிழ் இலக்கியத்தின் 

அரும்பெறும் கருவூலம் இவர்.

______________________________________

சொற்கீரன்

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

நாக்குறுதிகள்

 நாக்குறுதிகள்

________________________________


தேர்தல் விழா

களை கட்டி விட்டது.

அன்று

வாக்குறுதிகளாக‌

வலம் வந்தவை

இன்று

நாக்குறுதிகளாய்

எங்கு பார்த்தாலும்..

நாவுகளின்

நெளிவு சுழிவுகளை

சினிமா நோட்டீசுகளாய்

எங்கும் 

வாரி இறைக்கிறார்கள்.

ஆளுக்கொரு வீடு

அந்த சின்ன வீட்டுக்கும் 

ஒரு வீடு

என்று

வண்ண வண்ண பலூன்கள்

ஆகாசத்தில்.

மாநில சுயாட்சியாவது

மண்ணாங்கட்டியாவது

தமிழ் நம் ...

வேண்டாம் 

எதுக்கு பல்லை உடைத்துக்கொண்டு...

அது தான் கம்பியூட்டரில்

சமஸ்கிருத‌த்தை 

ஐஸ்கிரீம் ஆக்கித்தருகிறார்களே..

நம் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட.

அப்புறம்

எதுக்குத்தான்

இந்த 

கூட்டங்களும் பரபரப்புகளும்..

அது ஒரு "பேண்ட் வேகன்" சிண்ட்ரோம்...

மனிதர்களாய் இருப்பதை விட‌

நமக்கு

மந்தைகளாய் இருப்பதே சுகம்!

________________________________________

மந்தைதாசன்.

திங்கள், 6 ஏப்ரல், 2026

யாழ்

 

vannadaasanin kavithai paRRiya kavithai.

(muka nool 07/04/26)



முரண்பாடுகளின் சங்கீதமே

இந்த சமுதாய யாழ்!

எவ்வளவு ரத்தம் 

சொட்டிக்கொண்டிருந்தாலும்

அது வாள் அல்ல‌

யாழ் தான்.

___________________________________

சொற்கீரன்

அந்த "ஃபேன்"...

 


என் அறையில்

வெறுமே 

சுற்றிக்கொண்டிருக்கிறது

அந்த "ஃபேன்"...

கூச்சல் கிளப்பவில்லை.

கார் மீது பாய்ந்து

முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு

உள்ளே போய்

ஃப்லையிங் கிஸ் வாங்கவில்லை

செல்ஃபீகளுக்கு மொய்க்கவில்லை.

இன்றைக்கே 

தன் கதாநாயக வடிவத்தை

அப்படியே கடித்து விழுங்கிவிட வேண்டும்

என்று பதறவில்லை...துடிக்கவில்லை.

பவுன்ஸர்கள் கைகளில் அள்ளி

குப்பையாக வீசிய போதிலும்

மனம் கலங்கவில்லை.

ஆங்கிலப்படங்களில் திகில் ஊட்டும்

வைரஸ் "சோம்பிகளாய்"

படையெடுக்க வில்லை.

இரண்டாவது "எம் ஜி ஆர்"எனும்

வெட்டுக்கிளிகளின் புயலா இந்த‌

ஜென்ஸி.

பிரெஞ்சு புரட்சியின்

கில்லட்டின்களா இவை?

வானமும் வேண்டாம்

விடியலும் வேண்டாம்

வெட்டிச்சாயுங்களடா

இந்த சித்தாந்தக் கரப்பான் பூச்சிகளை

எனும்

"வெறி ஆற்றின் வெள்ளோட்டங்களா இவை?

மக்கள் புற்றீசல்கள் அல்ல.

புயல்களின் கருப்பைக் கொத்துக்கள் இவை.

ஏதோ

எங்கோ இருந்து

இந்த கொப்புளிப்புகள்.

வழக்கமாய் சொல்லும்

இல்லுமினாட்டிகளின் கிலுகிலுப்பைகளா

இவை?

கனவுகளின் இமைகளுக்குள்ளா

இத்தனை அக்கினி வெள்ளம்?

என் அறையின் ஃபேன்

தட்டாப்பூச்சி போல் சிறகு அதிர்க்கின்றது.

சாதுவாய் பஞ்சுமிட்டாய்

கேட்டு சுற்றுகிறது.

____________________________________________

சொற்கீரன்