சனி, 15 ஆகஸ்ட், 2026

மதம் என்றொரு...

 ஆயுள் கடத்தும் விஞ்ஞானிகள் 

   BIO HACKING..........



மறந்து போ

மரத்துப் போ

சுருக்கமாய்

மதம் என்றொரு அபினி

கண்டு கொண்டான் மனிதன்.

பண்டை சித்தர்கள்

மூலிகைகளில்

மருந்து களில்

போதையில்



Father of biohacking hints that highly-addictive drug could be the next longevity breakthrough

கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது

 "என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"

________________________________________________


"என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"

அந்த உருமியில்

இன்னும் சுருண்டு சுருண்டு

அலை ததும்பிக்கொண்டிருக்கிறார்

அந்த "கண்மணி ராசா" அவர்கள்!

எங்கள் கல்லிடைக்குறிச்சியின்

அந்த "வேம்படியம்மன்" கொடையின்

பந்தல் அடியின் வட்ட வட்ட சூரிய ஒளியின்

காசு மழையில் நனைத்து

அந்த உருமியோடு

சுருதி சேர்த்து நின்றிருக்கிறேன்.

அது இசையா?

இழைவா?

ஓங்காரங்களின் அந்த மகா ஓங்காரத்தை

உரித்துக்காட்ட‌

இமயப்பனி உருகி

அந்த சிவன் இன்னும்

கருதரித்து வரவில்லை.

அந்த உருமிக்குள் தான்

டி என் ஏ ..ஆர் என் ஏக்கள் எல்லாம்

சங்கிலி கோர்த்துக்கிடகின்றன.

எழுபத்தெட்டு மேள்கர்த்தாக்கள்

இடுப்பு வலி யெடுத்துக்கிடக்கட்டுமே

இந்த உருமியே

மூச்சுகளின் உருவம் எல்லாம் காட்டும் 

பேருருவம்.

________________________________________

சொற்கீரன்.


கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது





"பொரு விளங்கா"லட்டு.

 

Scientists solve 90-year-old mystery in quantum physics




 "பொரு விளங்கா"லட்டு போன்ற உருண்டை எங்கள் திருனெல்வேலிச் சீமையிலே ஒரு சுவையான "மிட்டாய்" இந்த குவாண்டம் அப்படித்தான் அதன் பொரு(ள்)விளங்காமலே கூட இனிக்கிறது திடுக்கிடும் சுவைகளுடன்.பொருள் விளங்கா அதன் சுவை மிக மிக அருமையானது.பாருங்கள் 90 வருடமாக புரியாமலே இருந்த புதிர் இப்போது தான் அவிழ்ந்து "தீர்வுகளை"க்காட்டுகிறது. அது என்ன? பாருங்கள் மேற்கண்ட அந்த லிங்கில்.(மிக்க நன்றியுடன்)...

எண்ணிக்கொண்டே...


எண்ணிக்கொண்டே

எண்பதாம் ஆண்டும்

வந்து விட்டோம்.

கனவும் ஏக்கமும் காட்டின‌

இன்னும் நூறு நூறு

மைல்க்கல் தூரமென்று.

துன்பம் இன்பம்

விரவிக்கிடந்தோம்.

ஆயினும் 

எப்போதும் அது

இனிமையே!

என்றும் அது

இனிமையே!

நம் சுதந்திரம்!

_______________________________

சொற்கீரன் 

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

காலப்பிரளயமாய்...

 

The Odyssey ending, explained


நெடுங்கதையா?

நெடிய நெட்டைப் பெருங்கன‌வா?

ஹோமர் விட்ட கொட்டாவியில்

பூதங்களும்

சிறகு முளைத்த மிருகங்களும்

கூந்தல் சர்ப்பங்களின்

மரணத்து மங்கைகளும்

ஏதோ ஒரு கனியைத்தின்று

தடம் மாறி தவிப்பவர்களும்

இன்னும் இன்னும்

போர்க்களத்தின்

கூரிய வாட்களையே

குடலும் வயிறுமாக காட்டி

ஏய்த்த பொய்க்குதிரைகளும்

அது துரோகமா?

அபகரித்தலின் வேட்டையா?

ரத்தம் 

ஆறாகி கடலாகி

எதையோ பலிகேட்டது.

காலத்தின் பசி..

தீனியாகவே

எங்கும் எங்கும் மக்கள்!

முடிவின் வாய்

இன்னொரு ஆரம்பத்தை

கவ்வியத்தாக‌

மாயப்பாம்புகள்

நெளிந்து ஓடுகின்றன?

...............

___________________________________________

சொற்கீரன்


ஓடிஸ்ஸி பாருங்கள்.

முடிவில்லாத 

நம் அரசியல் அனக்கொண்டாவின்

வயிற்றூள்ளும்

அந்த கூரிய பல்லின் முனையிலும்

அந்த முடிவு

ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறது

அந்த் சொட்டும் ரத்தம்

புஷ்பிக்கிறது

காலப்பிரளயமாய்...

______________________________________________________

சொற்கீரன்


"கல்லத்தி முடுக்கு"

 

"கல்லத்தி முடுக்கு"

----------------- ------------------------------------------------


திருநெல்வேலியின் 

மூலை முடுக்குகள் கூட 

எனக்கு 

வரலாற்றுத் திருப்பங்கள்.

பள்ளிக்கூட கோடைக்கால 

விடுமுறைகளின் 

வசந்த மாளிகைகளாக 

அந்த திலி-டவுணின் சந்து பொந்துகள் 

உல்லாச வெளிச்சத்தை 

சொக்கப்பனையாக்கி நிற்கும்.

பாப்புலர் டாக்கீஸின் 

ஒலிச்சித்திரங்கள் 

கொலுசு கட்டி ஆடும்.

"வீடு நோக்கி ஒடி வந்த என்னையே ..."

என்ற அந்த சிவாஜியின் பாட்டு 

கன்னம் அதிர இசைக்கும் உணர்சசியை 

அங்கு படரவிடும்.

அதிலும் அந்த 

"கல்லத்தி முடுக்கு"

முடுக்கிவிடும் விசையை 

மறக்க முடியாது.

பெயர் சொல்லும் அந்த‌

கல் அத்தி மரம்

எங்கே நிற்கிறது என்று

தெரியவில்லை.

மரத்தையே கல்லாக போகுமாறு

எந்த முனிவன் சபித்தானோ?

பாவங்களும் சாபங்களும் தானே

நம் கடவுள் பிம்பங்கள்!

அந்த "குறுந்தெருவு"முனையிலிருந்து 

என் நடையைத் துவக்குவேன்.

நெல்லை நகரத்தின் 

விலாப்புறத்தை உரசிக்கொண்டே 

ஒரு 

கிச்சு கிச்சு தாம்பாளம் 

கீயாளித்தாம்பாளம் 

விளையாடிக்கொண்டே 

போவது போல் தான் இருக்கும் .

நடந்து கொண்டே 

மணித்திரமூர்த்தி  உயர்நிலைப்பள்ளியைத் 

தழுவிக்கொண்டு நிற்கும் 

தூங்குமூஞ்சி மரத்து பூஞ்சிறகு நிழல்களின் 

மகரந்தப்பொழிவில் 

கொஞ்சம் நனைந்து பார்க்கச்சொல்லும்.

கரிப்புகையை மூச்சு விட்டுக்கொண்டே 

செல்லும் 

மேக்கே போகும் ரயில் ஒன்று 

திலி ஜங்க்ஷனிலிருந்து 

தம் பிடித்து குப் குப்பென்று 

ஓடுவது 

ஒருவன் சட்டையின் பின் புறத்தை 

இன்னொருவன்  பிடித்துக்கொண்டு ஓடும் 

குறும்புக்கார பயல்களின் 

ரயில் விளையாட்டை 

கண் முன் நிறுத்தும்.

அந்த "அம்பதுகள் "

இந்த 

வைரப்பூங்கா கால ஓட்டத்தின் 

"ஸ்பேஸ் டிராவல்" புகை விளையாட்டை 

நடத்தித்தராதா?

---------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

"மகிழ்ச்சி ஜீவா"

"மகிழ்ச்சி ஜீவா
வணங்குகிறேன்"
. . . . . . . . .
திரு வண்ணதாசன் அவர்களே!
இந்த ஓவியத்தில்
சிரித்துக்கொண்டே
கண்மூடி
ஆனால் தூக்கத்தொடு
கண்ணாமூச்சியாடி
கனவு காண்பதைக்கூட‌
ஒவ்வொரு எழுத்தாக‌
நிறுத்தற்குறிகள்
அணிவகுக்கும்
வியப்புக்குறியாக‌
அந்த ஆரியன் காவு
குகைவழி நிழல் தூவல்களாக‌
கவிதையாக்கி
பரிமாறியிருக்கிறீர்கள்.
நன்று நன்று,,நன்றி
______________________________________

சொற்கீரன்.