வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பரல் நானூறு (8)

 பரல் நானூறு (8)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________

சொற்கீரன்



வெம்பரல் நீடிய அத்தம் போகு

திரட்சுரம் திரங்கிய நீழல் கள்ளிய‌

ஆறு அலைபடும் கொல் தொழில் செறிய‌

பொருள்வயின் சென்றுழி கரைவீச்

சிறு பூ கண் கொடு விழிப்ப 

திரிமருப்பின் பொறிமா ஆங்கே அலமர‌

அவளின் காட்சியின் கிளர் நிழல் படுத்த‌

பொறியறை குடுமிய மலை ஓர் வானின்

உச்சியென ஏய்க்கும் இல் தோற்றி

நெடு நீர் காட்டும் அம்மவோ 

ஆண்டு அழல் ஓவு பறந்தலை நீர.

வறம் கூர்ந்த கானம் கல்லென‌

பாசடை கழிந்த தீப்பெரும் ஆறு

கல்லையும் தின்று வெயில் உமிழ்ந்தன்ன‌

காடு இடறு மலை படு கடாத்த‌

நீளிடை நிரம்பா அவிர் தூஉய்

பாழ்பட்டன்ன பல்லூழி இழைதரு

தடம் தடம் பதித்தான் பாவை நினைந்து.

_______________________________________________________


சிற்றுரை 

-------------------------------------------------------------------------------

பொருள் தேடிச்செல்லும் தலைவன் 

கற்பரல் இடறும் பாலை நிலத்திடையே

தீப்பிழம்பை வெயிலென ஊற்றும்

வழித்தடத்திலும் தலைவியை

நினைந்து காடுகள் இடையே

மலைகள் சூழ்ந்த கடுவெளிகளும்

கடந்து செல்வதை விவரிக்கும்

"பரல் நானூறு" எனும் 

சங்கச்செய்யுள் நடையில்

நான் எழுதிய கவிதைப்பாடல் இது.

_________________________________________

சொற்கீரன்



வியாழன், 2 ஏப்ரல், 2026

சொற்கீரன் கவிதைகள்

 

சொற்கீரன் கவிதைகள்

----------------------------------------------03.04.26



அமெரிக்கா இஸ்ரேல் ...

ஈரான் ....

அந்த ஏவுகணைகள் எல்லாம் 

பசித்தீயுடன் 

எங்கள் அடுப்புகளில்.

______________________________________1


சிவலிங்கங்களை

அங்கே கொண்டு போங்கள்.

மறைக்காதீர்கள்!

சம்போ மகாதேவ 

சிலிண்டர்களே 

நமோ நமக!

________________________________________2



மைக்குகள் முன்

வாயசைப்பவர்களுக்கு

குரல் கொடுப்பவர்களே!

இந்தக்காலத்து 

கணிப்பொறிகளுக்கு 

அந்தக்காலத்தில் 

சொல்வோம்

பாழுங்கிணறுகள் என்று.

உங்கள் குரல்களை 

அந்த கிளிக்குகளில் 

போட்டு விடுங்கள்.

செல்லரித்த அந்த உண்டியல் 

உங்களால் 

எப்போதாவது 

உடைக்கப்படும்போது 

பார்த்துக்கொள்ளலாம்.

________________________________________3

புதன், 1 ஏப்ரல், 2026

இன்னுமா....



(1)


எழுபத்தி ஒன்பது ஆண்டுகள்!

இன்னுமா

உன் சுதந்திரத்தை 

எழுத்துக்கூட்டி

வாசித்துக்

கொண்டிருக்கிறாய்?

அகர முதல என்று

ஆரம்பிக்கும் போதெல்லாம்

ஆண்டவனை உன் மடியில்

அமர்த்திவிடுகிறார்கள்.

அப்புறம் அந்த‌

சொர்க்கவாசல் தான்

உன் சோமபானங்கள்.

ஓட்டுக்கள் போட்டு போட்டு

உன் மிச்சமும் எச்சமும்

வெறும் புகை மூட்டமே.

________________________________________

சொற்கீரன்





(2)


நீரிணை.

__________________________________

இயற்கை

கடலில் கூட‌

உனக்கு வாய்க்கால்

வெட்டித்தந்திருக்கிறது.

அதில் ஏன் இந்த‌

காட்டுத்தீ?

முதலில் தீக்குச்சி கிழித்தவன்

யார் என்று

மரங்கள

நடத்திக்

கொண்டிருக்கின்றன

ஐ நா கூட்டம்.

_____________________________________

சொற்கீரன் 

ஞாயிறு, 29 மார்ச், 2026

திரு வண்ணதாசன் அவர்களின் கவிதை 30/03/2026 முகநூல்.

 

திரு வண்ணதாசன் அவர்களின் கவிதை 

30/03/2026 முகநூல்



"என் ஆமையைக்காணோம்.."


எவ்வளவு சுகமான வாகனம் 

உங்கள் கவிதை.

அது என்ன‌

பேனா மூடியைத் திறந்தாலே

"கூர்மாவதாரம்" தான்?

நல்லவேளை

திருமாலின் 

நாபிக்கொடி நாற்றங்களெல்லாம் இல்லை.

இருப்பினும்

அந்த பிஞ்சுவின் 

உதடு பிதுக்கலில்

ஏழு சமுத்திரங்களின் ஏக்கம்

பீச்சியடிக்கிறது.

நான் நினைக்கிறேன்

உங்கள் கனவு இடுக்குகளில்

ஃப்ராய்டுகள் 

அசை போட்டுக்கொண்டிருக்கலாம்.

கடவுள் 

தன் படைப்பின் அழகைக்கண்டு

சப்புக்கொட்டுவதற்கு தான்

இங்கே

கவிஞர்களை அனுப்பியிருக்கிறார்

போலும்!

______________________________________

சொற்கீரன்





வெள்ளி, 27 மார்ச், 2026

என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

 



என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

______________________________________________


என் அருமை மகளே!

உன் இல்லம் நன்கு செழிப்புறக!

உன் குடும்பம் நன்கு

எல்லா நலங்களும் வளங்களும்

நிறைந்து சுடர்க!

மனிதர்கள்

மனம் இருப்பதாலேயே

மனிதர்கள் எனப்படுகிறார்கள்.

அது எப்போது

நிறைந்து இருக்கும்

எப்போது

இல்லாமல் இருக்கும்

என்பதுவே

மனிதன் என்பதன் அர்த்தத்தை

புலப்படுத்தும்.

நானும் நிறைந்த மனத்துடனேயே

உன்னை வாழ்த்துகிறேன்.

நீயும் நிறைந்த மனத்துடனேயே

உன் அன்புப்புன்முறுவலுடன்

எங்களை நோக்குகிறாய்

என்பதையும் நான் அறிகின்றேன்.

உனக்கு

என் அன்பு வாழ்த்துக்கள்.

ஆம்

உங்கள் யாவருக்கும்

எங்கள் 

அன்பு வாழ்த்துக்கள்.

___________________________________

அன்புடன்

வாழ்த்தும் உள்ளங்கள்.

---------------------------------------------------------

சொற்கீரன்.

பூமியின் கர்ப்பம்.

 

  லிங்குக்கு நன்றி!!

Scientists intrigued by “negative mass anomaly” under surface of Mars




மேலே காணும் லிங்க் மிகப் பயனுள்ள ஒரு கட்டுரை.

பூமியின் கர்ப்பம்.

--------------------------------------------------------------



ஆங்கிலத்தில் மாஸ் எனப்படுவது தமிழில் "பொருள் திணிவு " ஆகும். இதற்கு நேர் எதிரானது எது ? அது நெகட்டிவ் மாஸ் அனாமலி தான்.தமிழில் அதை பொருள் தன் உள் திணிவை வாந்தியெடுக்கிறது என்று சொல்லலாமா?நியூட்டனின் விதிப்படி.ஓவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு.அதனால் பூமியிலிருந்து அதன் உள்ளே உள்ள எதிர் விசை காரணமாக அதாவது அதன் ஈர்ப்பு விசைக்கு சமமாக இன்னொரு விசை பூமியின் மையத்திலிருந்து வெளியே  பீ ய்ச்சி க்கொண்டிருக்கிறது.


ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்


ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்
____________________________________________
முகநூலில் ஒரு நண்பர் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் அளித்தது சரியல்ல என்று அவரும் ஒரு அஞ்ஞானக்காட்டில் திக்கு தெரியாத மனநிலையில் இருப்பது போன்று தான் எழுதியிருந்தார்.அது பற்றிய கருத்து களே இவை.
இவரும் ஒரு வகையில் புளிச்ச மாவுக்கார எழுத்தாளர் ஜெயமோகனை ஒட்டித்தான் செல்கிறார்.கவிதை எழுதுபவர்கள் எல்லாருமே தன் பேனாமுனையில் ஞான பீடங்களையோ நோபல் பரிசுகளையோ கட்டி உச்சியில் வைத்துக்கொண்டு அந்த மன நோயால் துன்புறுபுவர்கள் அல்ல. ஆனாலும் பெரும்பாலும் அதுவும் ஒரு பேய்நிழலாய் அவர்கள் தோள்களில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் அவரே ஒரு சான்று.இல்லை யென்றால் அடுத்த இலைக்கு பாயசம் கேட்பது போல் அந்த மற்றக்கவிஞர்களையும் தன் கட்சிக்கு இழுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.இந்த உலகப்புகழ் பெற்ற பரிசுகளையும் வேண்டாம் அதை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் என்று சீற்றம் கொண்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்களே! அவர்களுக்கு உங்களிடம் என்ன விருது வைத்திருக்கிறீர்கள். கவிஞர் வைரமுத்துவை ஜெயமோகன் போல் புளிச்ச ஏப்பத்துடன் அணுகாமல் அதையும் விட கொச்சையாக நீங்கள் அணுகியிருக்கிறீர்கள்.மனிதனுக்குள் இயற்கையாய் கொழுந்து விட்டு எரியும் பொறாமைத்தீ உங்களிடம் அதிகமாகவே எரிந்தது தான் நீங்கள் கங்கை அமரன் மற்றும் பல கவிஞர்களை உங்கள் தோள் மேல் தூக்கிக்கொண்டது.கவிஞன் என்று பேனா தூக்கியவன் எந்த "மண்டபத்திலே இருந்து பாட்டு எழுதிக்கொண்டிருப்பவனாக இருந்தாலும்" அவனுக்கும் ஒரு நோபல் பரிசை அவனுக்கு முண்டாசு கட்டலாம் தான்.ஆனாலும் இந்த பேய்த்தீயால் தன்னையே எரித்துக்கொண்டு சாம்பாலாக புலம்பும் உங்களைப்போன்றவர்கள் தன்னைப்பற்றி சுய விமர்சனமாக ஒரு கவிதை எழுதியும் அதை வாசித்துக்கொண்டிருக்கலாம்.நீங்கள் எழுதியதைப்பார்த்தால் வைரமுத்து அவர்கள் உங்களிடம் கருத்து கேட்டுக்கொண்டு தான் பேனாவையே தொடவேண்டும் என்பது போல் அல்லவா இருக்கிறாது.கவிஞர்களுக்கு அவர்களது எழுத்துக்கர்வமே அவர்களது வெண்கொற்றக்குடை என்பதில் எனக்கும்
எந்த முரண்பாடு இல்லை. "ரோஜா" திரைப்படத்தில் அவர் எழுதிய "சின்ன சின்ன ஆசை..."என்ற ஒரு கவிதைப்பாட்டு போதும்.நோபல் பரிசே கொடுக்கலாம். இருப்பினும் இப்படி நீங்கள் எழுதுவது ஒரு கவிதை இயலுக்கு முரண்பட்ட மனவியல் ஆகும்.உங்கள் எழுத்துகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________இ பரமசிவன்