திங்கள், 13 ஜூலை, 2026

இருட்டு நிழற்காடுகள்....

 



ஆடு மாடு வெட்டறது..

தீபம் ஏத்தறது

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு

தார் பூசி

சரஸ்வதி தேவி 

மற்றும் காளிகளின் வாழ்த்துக்கு

அரிதாரம் பூசி

அடி தடி அரசியலை

"ஆஃப்" ஆகாமல் வைத்திருப்பது...

சாதி வர்ணக்

கோட்டை கொத்தளங்களையும்

கொடி ஏற்றி

வெறியேற்றி வைத்திருப்பது.

சமுதாயம் கண்விழிக்கவே கூடாது

என்பதற்காக‌

கல் அடுக்கி செதுக்கி

பொம்மைகளையும் வடித்து

கோபுரங்கள் உயர்த்திக்கட்டி

கும்பிட்டுக்கொண்டே இருப்பது.

தமிழா!

இது தான்

உன் உலக மானிடமா?

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

என்றானே

அவன் மூச்சு எங்கே சிறகடித்துப்போனது?

அறிவின் உச்சம் எங்கோ

எட்டாத உயரங்கள் 

தாவிக்கொண்டிருக்கும் போது

மூடத்தனத்தின்

கிடு கிடு பள்ளங்களில்

வீழ்ந்து கிடப்பதா "மனிதம்?"

உலகின் முக்கால் வாசி மக்களுக்கு

உணவு உடை உறைவிடம்

என்று ஏதும் இல்லாமல் இருக்கும்

நிலை கண்டும்

மரத்துப்போய் மடிந்து கிடக்கும்

நிலையில் மக்கிக்கிடக்கிறதா

உலக சமுதாய ஜனநாயம்?

எப்படியோ கிடக்கிறது..விடுங்கள்..

சிந்தனைகள் எழுச்சியுற 

வலுவின்றி

அதோ குத்தாட்டம் போட‌

கொத்து கொத்தாக‌

வக்கரித்துப்போய்க்கொண்டிக்கும்

சைகோ டெமோக்ராஃபிக் 

நிழற்சித்திரங்களின்

இருட்டு நிழற்காடுகளின் 

மின்னட்டாம்பூச்சிகளா நீங்கள்?

_________________________________________

சொற்கீரன்

ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

 ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

___________________________________________


தினமும்

தமிழின் உயிர் மழை

பெய்து கொண்டிருப்பாயே!

தமிழின் மழைபெய்தால் போதும்

உனக்கு?

என் உயிர் எங்கோயோ

மேகமாய் நின்று அதை

பெய்து கொண்டிருக்கட்டும்.

தமிழுக்கு

எப்போதுமே

வான்சிறப்பு உண்டு.

தமிழ்(உடம்பும் உயிரும்) விசும்பின்

துளி வீழினல்லால்

உன் சொல்லின் 

பசும்புல் தலை காண்பு அரிது.

உன் தமிழின் எழுச்சியை

எப்போதும் மழை பெய்து கொண்டிரு.

என் தமிழ் மூச்சின்

உயிர் அளபடையாய்

ஒற்று அள‌படையாய்

தமிழின் புகழ்பாடும்

இன்னிசை அளபடையாயும்

நம் இலக்கணத்தமிழ் மழையை

உங்கள் மீது 

பொழிந்து கொண்டேயிருப்பேன்.

_____________________________________

சொற்கீரன்

கரிசல் இலக்கியச்செம்மல்

 

கரிசல் இலக்கியச்செம்மல்
பூமணி அவர்கள் மறைவிற்கு
என் மனம் கசிந்த அஞ்சலி
_________________________________
அரிய அற்புத எழுத்துக்கள்
எனும் கருப்பு வைரங்களை
கரிசல் எழுத்துக்களில்
சுடரத்தந்த கந்தல் சூரியனே.
மண்ணில் பூக்கள் தோன்றுவது
அழகு தான்.
ஆனால் அதன் தூசிகளும் துரும்புகளும்
கூட‌
மலர்ந்து செழித்து
மகரந்தங்கள் சிந்தி
மனிதம் மலர்த்திக்காட்டியிருக்கிறதே
உன் எழுத்துக்களால்!
கலப்பை பிடித்து
காய்த்த விரல்களில்
தோட்டங்கள்
பூத்துக்குலுங்கி
புன்முறுவல்கள் செய்கின்றனவே.
எழுத்துக்களை
சீராட்டி குளிப்பாட்டி
பள்ளிக்கு அனுப்பியிருக்கிறாய்.
அவை உயிர்த்து பயிர்த்து
பண்பு கற்பித்தன எங்களுக்கு.
மண்ணின் வேர் வேர்வையில் சொட்டி
உன் வரிகளை
வியக்க வைத்திருக்கின்றன.
உன் ஒரு நாவல் போதும்
நம் கிராமங்களின் நரம்பின் நெசவின்
நேர்த்தி சொல்ல.
அந்த கிராமத்து "வெக்கையில்" படுத்துக்கிடக்கும்
அசுர எரிமலைகள் பரல்கள் தெறித்தபோது...
வெறும் ஆட்டுப்புழுக்கைகள் என‌
ஆதிக்க வெறிகள் எக்காளமிட்ட போது...
நீ ஆணியடித்துக்காட்டியிருக்கிறாய்
இந்த மரத்த மனங்களின் மீது.
உன் எழுத்துக்கள் கொட்டிய‌
வெளிச்சத்தில்
ஆயிரம் விடியல்களின்
முகங்கள் தெரிகின்றன.
வாழ்க உன் எழுத்துக்கள்.
அவற்றிற்கு மரணம் இல்லை.
அவை நெருப்பு சிந்தனைகளின்
பிறப்பிடம் அல்லவா.
__________________________________________
சொற்கீரன்

ஞாயிறு, 12 ஜூலை, 2026

பேச்சுமில்லை மூச்சுமில்லை.

 



ஒன்று திரண்ட மக்களை

கோடிக்கால் பூதம்

என்பார்கள்.

ஒரு புதிய யுகம் படைக்க‌

அந்த பூதம் தான் வேண்டும்.

ஆனால்

இது 

மாய நிழல்களின்

ஜிகினா பிம்பங்களின்

வர்ண பூதம்.

நான்கு வர்ணமாவது

பேதமாவது என்று

ஜம்பம் பேசும் சனாதன‌

வரட்டு பிம்பங்களில்

விடியல்கள் தேடியா

படையெடுத்தீர்?

ஆதரவுக் கரங்கள் நீட்டுவது

இருக்கட்டும்.

பாசிசத்தை பாயாசமாய்

பருகக்கூப்பிடும் 

குரல்களிலா

மக்கள் கீதங்களை

முழங்கப்பொகிறீர்கள்?

சிந்தனையைக் 

கழற்றி வைத்துவிட்ட‌

பேச்சு வார்த்தைகளில்

எந்த‌

பேச்சுமில்லை மூச்சுமில்லை.

__________________________________

சொற்கீரன்.




சனி, 11 ஜூலை, 2026

இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு எங்கள் அஞ்சலி

 இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு

எங்கள் அஞ்சலி

______________________________________‍


இசைக்குயிலே!

நாப்பது ஆயிரம் பாடல்கள்

என்று சொல்கிறார்கள்.

அந்த இசை மூச்சுகளின் 

வழியே எத்தனை 

கோடிக்குயில்கள் 

ராகங்களில் 

ஊஞ்சல் ஆடியிருக்கும்?

எந்த பாட்டை சொல்வது?

வானமும் கடலும்

மண்ணும் மலையும் கூட‌

மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதே

இந்த பாட்டுகளில்!

பூக்களும் பட்டாம்பூச்சிகளும்

இன்னும் இங்கே

மொழிபெயர்த்து ஒலி பெயர்த்து

மவுனத்தையும் அமுதக்குழம்பாக்கி

இந்த அண்டத்தையும் அணைத்து

அலை விரிக்கின்றனவே!

உன் குரல்களுக்கு இங்கே

மரணம் இல்லை.

இந்தப்பாட்டுகளுக்குள்

மின்காந்தம் பாய்ச்சிக்கொண்டே

இருக்கிறாய்

இனிய தேன்மழையால் 

வருடிக்கொண்டே இருக்கிறாய்.

இறப்புக்கு மாமூல் தெய்வம் எனும்

அந்த எமன் 

உன் இசையில் எல்லாம் மறந்து போவான்.

ஆம்.

எங்களுக்கு இனி

மரணமில்லாப் பெருவாழ்வே தான்.

உன் பாடல்களில்

ஊறும் இதயங்கள் எங்களுக்குள்

துடித்துக்கொண்டே இருக்கும்.

தாயினும் சாலப்பரிந்து ஊட்டும்

இசை அம்மா உங்கள் இசை!

என்றும் எங்கள் உள்ளங்களில்

இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு

எங்கள் அஞ்சலி

______________________________________‍


இசைக்குயிலே!

நாப்பது ஆயிரம் பாடல்கள்

என்று சொல்கிறார்கள்.

அந்த இசை மூச்சுகளின் 

வழியே எத்தனை 

கோடிக்குயில்கள் 

ராகங்களில் 

ஊஞ்சல் ஆடியிருக்கும்?

எந்த பாட்டை சொல்வது?

வானமும் கடலும்

மண்ணும் மலையும் கூட‌

மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதே

இந்த பாட்டுகளில்!

பூக்களும் பட்டாம்பூச்சிகளும்

இன்னும் இங்கே

மொழிபெயர்த்து ஒலி பெயர்த்து

மவுனத்தையும் அமுதக்குழம்பாக்கி

இந்த அண்டத்தையும் அணைத்து

அலை விரிக்கின்றனவே!

உன் குரல்களுக்கு இங்கே

மரணம் இல்லை.

இந்தப்பாட்டுகளுக்குள்

மின்காந்தம் பாய்ச்சிக்கொண்டே

இருக்கிறாய்

இனிய தேன்மழையால் 

வருடிக்கொண்டே இருக்கிறாய்.

இறப்புக்கு மாமூல் தெய்வம் எனும்

அந்த எமன் 

உன் இசையில் எல்லாம் மறந்து போவான்.

ஆம்.

எங்களுக்கு இனி

மரணமில்லாப் பெருவாழ்வே தான்.

உன் பாடல்களில்

ஊறும் இதயங்கள் எங்களுக்குள்

துடித்துக்கொண்டே இருக்கும்.

தாயினும் சாலப்பரிந்து ஊட்டும்

இசை அம்மா உங்கள் இசை!

என்றும் எங்கள் உள்ளங்களில்

சுருதி மீட்டுங்கள்.

___________________________________________________

சொற்கீரன்.


___________________________________________________

சொற்கீரன்.


"பொய்"



செவ்வாய், 7 ஜூலை, 2026

OUT OF NOTES

 


WALKING ALONG THE ISLE 

MY MUSIC IS ALWAYS A FURIOUS MUM

WORDS SLAUGHTERED

MEANINGS HAVE THEIR OWN GRAVES

AND MY THEME WAS ALREADY BURNT.

YET A ROAR AND CLOUDY MUSIC 

OUT OF NOTES 

FLOW WITH VAIN SPASM ALONG THE

ELECTRIC NERVES..

THE GREATEST VOID OF THE SKY

IS MY SONG BOOK..

A BOOK NOT WITH VERSES

AND IT RUSTLES YOU CALL A BLEED

THOUGH YOU ALL

DRINK UNTO THE BOTTOM!

MY GLORY DANCES ON MY CORPSE.

THE FAME IS JUST A FLAME

TO MAKE MY ASHES FROM ME..

MY SOUL FISSILE OUT

IN GREAT GRIM AND BRIM OF

OMNIBUS DEATH ECSTACY.

-----------------------------------------------------------------

epsiVAN.