சனி, 25 ஏப்ரல், 2026

ஒரே சிற்பமா?

 

நீ
ஒரே சிற்பமா?
ஒரு கோடி சிற்பமா?
முதல் உளியில் முதல் சிற்பம்
உன் ஒலியே அது.
உன் ஒளியே அது.
வினாடிகள் தோறும்
உன் பிரசவம்.
நீயே குழந்தை.
நீயே தாய்.
இந்த உலகத்து மண்ணில்
உன் ஒவ்வொரு தடமே தான்
உன் முகம்.
ஒரு நாள் கண்ணாடி
சுக்கு நூறு ஆனது.
உன் மனம் தூள் தூள்.
ஆனால் பிம்பங்கள் மட்டும்
ஆயிரமாய் சிரித்தது.
ஆயிரமாய் அழுதது.
இதே பிறவியில்
இன்னும் உன் பிறவிகள்
ஆயிரம் ஆயிரம் மிச்சம்.
இப்போது உன் கையில்
எத்தனையாவது உளி?
செதுக்கும் முன்னே
சிற்பங்கள் கையில்
ஆயிரம் ஆயிரம்
முகங்கள் காட்டும்.
அகங்களும் காட்டும்.
___________________________________
சொற்கீரன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

நிகழ்வுகள்

 


நிகழ்வுகள்

______________________________________



ப்ரோ

ஒரு மாத்தம் வேணும் ப்ரோ.

இவிய்ங்க அடிக்கிற‌

ஊழல் காசுகள்ளை

இந்தியாவுக்கு பட்ஜெட்டே

போட்ரலாம்.

தொட்டில்ல தூங்கிகிட்டு

இருக்கிற‌

இவிய்ங்க கொள்ளுப்பேரந்தான்

வரப்போகிற முகலமைச்சரு..

இந்த சமூக நீதிக்குத்தான்

இப்டி

ஓட்டுகள பொறுக்குறானுக..

மல்டி பீஸ் வண்ணச்சட்டைகளும்

ஸ்லோகன்களை கர்ஜிக்கும்

டி ஷர்ட்டுகளும்

கோரஸ்களில்

எரியும் கோஷங்களாக‌

வானத்தில் முட்டிக்கொண்டே

இருக்கத்தான் செய்கின்றன.

இவை தேவையா?

காலத்தின் கட்டாயமா?

ஆம்.

எல்லாம் தான்.

நொடிக்கு நொடி

மின்சாரக்கம்பங்கள் என்றாலும்

சாலையோரத்து

புங்க மரக்கூட்டங்கள் என்றாலும்

பைக்குகளின்

புகை உமிழும் குழல்கள்

என்றாலும்

நாலு வே

ஆறு வே ரோடுகளானாலும் சரி

சூடு பொறுக்கவே முடியாத‌

அத்தியாயங்கள்

எழுதப்பட்டுக்கொண்டு தான்

இருக்கின்றன.

நியாயங்களும் நீதிகளும்

ஆடி ஆடி அடங்கும் தராசுத்தட்டுகளாய்

காட்சிப்படுகின்றன.

தடம் புரட்ட வருபவை

முகமூடிகள் அல்லது போலிகள்

என்று

சூ ச்ச்சூ என்று

காக்காய்கள் விரட்ட முடியாது.

நெருக்கடிகளும் அழுத்தங்களும்

எப்போதும்

எல்லா ஊடகங்களுக்குமே

தீனிகள் தான் 

அல்லது பாப் கார்ன்கள் தான்.

சித்தாந்தங்கள் 

எப்போதும்

சாணை தீட்டப்பட வேண்டியவையே!

நேற்றைய இன்றைய நாளைய‌

ப்ரோக்களே

அல்லது

புறாக்களே...

சிறகுகளின் படபடப்புகளில்

யுகங்கள் 

உதிர்கின்றன‌

பிஞ்சு இறக்கைகளாய்

தூசி மின்னல்களாய்

சில்லறை சில்லறையாய்

சில்லிடும்

சூறாவளிகளாய்..

பஞ்சு டைலாக்குகளிலும்

பற்றி எரியும் சாளரங்கள் தான்.

விழிகள் தெறிக்கும் 

மைல் கற்கள் தான்.

நிழலாடும் மேகக்கூட்டங்களும் தான்.

வரலாறுகளுக்கு

நிகழ்வுகள் முக்கியமல்ல.

நிகழும் தருணங்களின்

கொதிக்கும் கடிகார முட்துடிப்புகளே

போதும்.

__________________________________________

சொற்கீரன்

அந்த நவ்வாப்பழங்கள்

 

25.04.26 முக நூலில் "ப்ளூ பெரி" பற்றி

எழுதிய வண்ணதாசன் அவர்களின் 

கவிதைப்பழத்தை நான் ருசித்தபோது 

எழுதிய கவிதை

____________________________________________


வண்ணதாசன் அவர்களே!

ஆயுளுக்கும் முதல் முறையாக‌

"ப்ளு பெரி"என்று

குறிபிட்டீர்களே!

ஆங்கிலத்தில் பெயர் சொல்லி

சாப்பிடும் அந்த 

சின்ன சின்ன கருநீலப்பழம்

நான் சாப்பிட்ட நவ்வாப்பழத்தை

நினைவூட்டுகிறத்.

அம்பாந்த்ரம் போகும்

ஆத்துப்பாலம் மருத மரத்து

முண்டு தட்டிய பச்சை நிழலில்

கூறு கட்டி வித்துக்கொண்டிருப்பான்.

குடமுருட்டி சங்கரன்கோயில் அருகே

ஆடித்தவசுக்காத்துலே

வரிசையாய் நின்னு

கரு கரு நீலப்பழங்களை

அழகிய கண்விழிகளைப்போல்

தோரணம் கட்டி நின்று கொண்டிருக்குமே.

அப்ப வாங்கி வாய்க்குள் 

உதப்பிக்கொண்டிருக்கும்

அந்த நவ்வாப்பழங்கள்

ஏதோ அந்த 

குரங்கு‍_ முதலை_ஆறு_ந‌வ்வாபழம்

கதையை ருசியாக 

நாவல் எழுதிக்கொண்டிருக்கும்.

__________________________________

சொற்கீரன்

வெள்ளம் வடிந்த காட்டாறு.

 



நாளை?

___________________________________________


வெள்ளம் வடிந்த காட்டாறு.

இன்னொரு வெள்ளத்தோடு வந்து

கலக்கி அடிக்குமுன் 

கண்ணயர்ந்த இமைகளுக்குள் தான்

எத்தனை எத்தனை

கலைடோஸ் திருப்பல்கள்?

அரசியலின் 

அக்கினிகுழம்புக்குள்

குமிழியடிக்க வேண்டிய‌

சீறல்கள்

வெறும் பட்டாம்பூச்சிகளின்

சிறகு வண்ணங்களில்

சிலிர்த்துக்கொள்ளும்

பிஞ்சு நிலவுகளாக‌

பாய்ந்து படரும்

சித்திரங்களை வைத்துக்கொண்டு

என்ன செய்யும் இந்த மண்?

இதன் நரம்புகளை நிமிண்டி

பேய் ஆடல்களுடன்

கூந்தல் சிலுப்பிக்கொள்வதையா

இங்கு புயல் என்பது?

உள்ளீடு அற்ற எலும்புக்குழல்களில்

ஊறும் பூரான்களுடன்

பால் சிந்தும் ரப்பர் மரக்காடுகளிலா

இந்த ஜிவ்வுத் தெறிப்புகள்?

கணிதவியல் கணக்குக்களில்

கணிப்பொறியின்

சில்மிஷங்களும் சேர்ந்த‌

குழப்ப க்ராஃபிக்ஸ் களா

அந்த முடிவுகள்?

எப்படி ஆயினும்

வானம் இடித்த காயங்களில்

அந்த‌

சிவப்புக்குடைக்காளான்களும்

ரத்தக்கசங்கல்களாய்

ஓவியம் தீற்றட்டுமே.

பார்க்கலாம்

கிழக்கு விளிம்புகளில் கேட்கும்

அந்த சுளீர் சொடுக்கு ஒலிகளை

நாளை?

______________________________________‍‍‍‍‍

சொற்கீரன்

"நரிவெரூ௨த் தலையன்".




வயதுகள் என்ன‌

தீக்குச்சிகளா?

உரசி உரசி 

தீயைப்பற்றிக்கொள்ள?

இள ரத்தம்

முது ரத்தம்

எரிமலைக்கில்லை!

கந்தல் ஆன 

சமுதாயம் 

சீர்ப்பட வேண்டுமென்ற

சிந்தனைக்கு 

இங்கே 

சிக்கிமுக்கிக்

கல்லா வேண்டும்?

பொறி தெறிக்கும்

சீற்றம் கொண்டு

பொய்மைகளைக்

கிழித்தெறியும் 

வாளேந்துமின்.

இளையதற்கும் இளையதாய்

ஒரு யுகம் வேண்டுமா?

கனலேந்தும்

இமையோரக் கனவுகள்

அமைந்தொரு அலைபாயும்

சினம் வேண்டுமா?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுமுன்னே

தோன்றிய நம் தொன்மை மொழி

வதை படவும் மிதி படவும்

வீழ்ந்ததென்ன?

நூறில் மூன்றெனக்கணக்கு 

சொன்னார்.

மூண்டு வந்த சூழ்ச்சி வெறி

நம்மையெல்லாம்

மூடிக்கிடக்கும் அந்த‌

அந்த‌






 இன்னும்

௭னக்கு நம்பிக்கை இருக்கிறது.
௭ன் முகத்தின் மீது கடைசியாய்
மூடும் ௮ந்த
வரட்டி
விடை ௮ளிக்கும்
௭ன்று.
"௭னக்கு ௭தற்கு
கடவுள்?"
----"நரிவெரூ௨த்
தலையன்"

24.04.2026

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

சிந்தனைச்சுடர் கொளுத்து!

 




விடியும் என்று

ஆயிரம் ஆயிரம் கவிதைகளை

வானத்தில் உலர்த்திக்

கொண்டு தான் இருக்கிறோம்.

உலர்த்த வேண்டிய அறிவின்

ஒளியில் 

ஒளிந்து கிடக்கும்

அறிவை நாம்

இன்னும் எட்டவில்லையே.

தன் நிழல் தான் 

மறைக்கிறது

சாதி மதங்களின்

மூடத்தனமாய்.

மனம் விழித்து

கண் விழி.

சிந்தனைச்சுடர் கொளுத்து!

_________________________________________

சொற்கீரன்

தேரோட்டம் தான்.

 



தேரோட்டம் தான்.



புழுதி கிளப்பிக்கொண்டு

கொட்டு முழக்கி

வடம் பிடித்து இழுத்து...

நூற்றாண்டுகள் நூற்றாண்டுகள் என்று

எத்தனை இழுத்திருப்போம்?

இன்னும்

அந்த அலங்காரத்துள்

பொதிந்து வைக்கப்பட்டவன்

முகம் தெரியுமா?

அகம் தெரியுமா?

புராணம் மட்டும்

சவ்வு மிட்டாய் மாதிரி

இழுத்து இழுத்து

சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப்போல‌

குழந்தை குட்டிகளுடன்

சண்டை சச்சரவுகளுடன்

ஏன்

சக்களத்திச்சண்டைகளுடன்

வேத கோஷங்கள் முழங்க‌

புகைமூட்டத்துள்

புதைந்து கிடக்கின்ற‌

தெய்வங்களை 

இழுத்துக்கொண்டிருக்கிறோம்.

அந்த சந்துகள் பக்கம் வேண்டாம்.

இந்த சாதிகள்..

காற்று கூட படவேண்டாம்.

பார்த்து பார்த்து..

சக்கிரதையாய்

வடம்பிடியுங்கள்.

ஒரு பரமார்த்த குரு சொன்னான்

எதைச்செய்தாலும் 

சேர்ந்து செய்யுங்கள்.

ஆம்.

ஒரு ஊசியை எடுத்துக்கொண்டு வாருங்கள்.

அவருக்கு தைக்க வேண்டுமாம்.

சீடர்கள் என்ன செய்தார்கள்?

ஒரு பன‌ங்கட்டையில்

அந்த ஊசியை குத்திவைத்து

எல்லோருமாய்

இழுத்துக்கொண்டு செல்கிறோம்.

நாமும் 

எக்கி எக்கி பார்க்கிறோம்.

எந்த முகமும்

தெரியவில்லை.

_________________________________________________

இபியெஸ்