ஞாயிறு, 3 மே, 2026

விளிம்பு.

 



விளிம்பு.


விளிம்பு அழகானது.

என் மறைவை கவிதையாக்கும்

அருமையான விளிம்பு அது.

ஆனால் 

திடீரென்று அது

எப்படி வெறுமையானது?

இதன் மின்னல் கனவுகள் 

மூளியாகிப்போனது.

மொத்தமாய் ஒரு முரட்டுத்தனம்

அந்த மெல்லிய விளிம்பை

தட்டி நொறுக்கியது.

என் மறைவை மீண்டும் உயிர்த்து

அந்த விளிம்புக்கு ஒரு

வேலி கட்ட‌

என்னை நிமிர்த்திக்கொண்டேன்.

மீண்டும்

ஒரு வயது இரண்டு வயது அல்ல‌

ஒரு சில நூற்றாண்டுகளையாவது

அதன் மழுங்கல் மட்டைத்தனங்கள்

எல்லாவற்றிலிருந்தும்

கூர்மை படுத்திக்கொள்ள‌

என்னையே கத்தியாக்கி

என்னையே சாணையாக்கி

பொறி பறக்க

பொறி பறக்க‌

.............

உம் மேலே சொல்...

பொறி பறக்க பொறி பறக்க‌

மூச்சுப்பூக்களில்

கவிதைகளாகி

சிலிர்த்துக்கொள்கிறேன்.

_______________________________________

சொற்கீரன்.

பூவா? தலையா?

 


பூவா? தலையா?

போட்டு பார்க்கலாமா?

தேர்தல் ரிசல்ட் கொப்பளிக்கப்பட‌

இன்னும்

இரண்டு மணிநேரம் ஆகுமே.

பூவா தலையா என்பதற்குப்பதில்

குதிரையா? கழுதையா?

போட்டுப்பார்க்கலாமே!

அந்த சின்னங்களோடு

"ஓட்டாஞ்சல்லி"யை நாணயமாக‌

மேலே எறிந்து அது கீழே

எப்படி விழுகிறது

என்று பார்த்தோம்.

ஒரு தடவை "குதிரை விழுந்தது".

போய் எடுத்துப்பார்க்கும் போது

கழுதை வந்தது.

இப்படி குதிரையும் கழுதையும்

போக்குக்காட்டிக்கொண்டே 

இருந்தன.

அது எப்படி?

தரையில் குதிரை விழுந்தும்

எடுக்கும் போது

கழுதை ஆனது?

எல்லோருக்கும் குழப்பம்.

இது ஏதோ

ஹேக்கிங் என்கிற 

பில்லி சூன்யம்.

அல்லது

சூழ்ச்சி சாணக்கியம்

என்று மக்கள் கொந்தளிக்க‌

ஆரம்பித்து விட்டார்கள்.

முடிவு என்ன?

சிந்தனைக்கோளாறு தான்.

பாசிசமா? பாயசமா?

என்று

பாசிசத்தையே

கழுத்தில் மாலையாக சூடிக்கொண்டு

கொட்டு அடித்ததால்

அந்த இரைச்சல்களில்

அமிழ்ந்து கிடந்தது ஜனநாயகம்.

எது வென்றது?

யாருக்குத்தெரியும்?

நூற்றாண்டுக்கொண்டாடத்தில்

கும்மாளம் போடும் அந்த‌

பாயசம் எனும் 

மதமும் சாதியும்

மக்களை மதி 

மயக்கிக்கொண்டு தான் இருக்கிறது.

குதிரையா? கழுதையா?

மந்தையா? மக்களா?

அந்த "ஒட்டஞ்சல்லி"

சிறகடித்துக்கொண்டே ...

விழுந்து கொண்டே...

இருக்கிறது.

_____________________________________________

சொற்கீரன்.


சனி, 2 மே, 2026

காக்கா நரியின் கத கேளு

 


பாப்பா பாப்பா கத கேளு

காக்கா நரியின் கத கேளு


சட்..நிறுத்துயா

உன் பப்பர்மிட்தனத்தை..

அந்தக்கதை இந்தக்கதை

எல்லாம் இல்ல.

அவரு தான் முதலமைச்சரா 

வரணும்...

அப்டி இல்ல...

அதோடு நிறுத்திக்கொண்டன‌

"கிட்ஸோகிரேசி"

எனும் பிஞ்சு டெமாக்ரேசியா? 

இல்லை 

ஒரு மூர்க்கமான மோபோக்ரேசியா?

ஜென்ஸியின் 

முதல்

அரும்பின் அரும்பு

கையில் வில் அம்பு தூக்கிவிட்டது?

நம்ம தேசம் லேசுப்பட்ட தேசமா என்ன?

கருவுக்குள்ள‌

இருந்தே 

"வியூகம் நுழையவும் வில்லை எய்யவும்"

தெரியும்.

அப்புறம் வெளியே வர அறியா விட்டாலும்

கவலையில்லை.

விளயாட்டுக்கும் வீரத்துக்கும்

மயிரிழை தான் என்றாலும்

அந்த "மயிரிழை" ஊஞ்சல்களே

சுகமானது...ரம்மியமானது...

இந்த விசில் ஒலிக்குள்

நம் மண்ணே 

கவிழ்ந்து விடுமோ என்றெல்லாம்

கவலையா?

தேவையில்லை.

இவர்கள் இப்படி அரக்கு மாளிகைகளின்

சினிமாக்கள் காட்டியே

இனிமாக்கள் கொடுப்பார்கள்.

மக்களே 

உங்கள் சிந்தனையை 

கூர் தீட்டவேண்டிய தருணம் வந்து விட்டது.

பொம்மைக்கல்யாணம் போல்

நம் நாட்டு 

ஜனநாயகத் திருவிழாக்கள் ஆகிப்போயின.

சுடுபவனா?

துப்பாக்கியா?

எது பொம்மை?

சிந்தியுங்கள் மக்களே!

சிந்தியுங்கள்!

________________________________________________

சொற்கீரன்

சிந்தி! சீறு!

 

சிந்தி! சீறு!

___________________________________


அணில் குஞ்சுகள்

என்றா அழைக்கிறீர்கள்?

இதை விட‌

அந்த பட்டுக்குஞ்சுகளை

கத்தியால் 

நாலு கீறு கீறியிருக்கலாம்.

தற்குறிகள் 

என்றா சொல்கிறீர்கள்?

கல்வி மழலைகளை இப்படி

கொச்சைப்படுத்துவதை விட‌

சரஸ்வதியின் வீணையை வாங்கி

உடைத்து நொறுக்கியிருக்கலாம்.

போகட்டும் விடுங்கள்.

அந்த சொற்களை இதற்கு மேல்

காயப்படுத்தாதீர்கள்.

சரி..

ஏன் இவர்கள் 

தன் உயிர்களை குழந்தை குட்டிகளோடு

மாய்த்துக்கொள்வோம்

அவர் முதலமைச்சராக வராவிட்டால்..

என்கிறார்களே?

இப்போது நாம் பலமாக‌

ஆழமாக சிந்திக்க வேண்டியவர்களாக‌

இருக்கிறோம்?

இது என்ன கொரோனா 26 ஆ?

இல்லை இல்யூமினாட்டிகளின்

"கல்ட்" கிளர்ச்சிச்சதிகளா?

தமிழ் நாடு அமைதிப்பூங்கா என்பதை

பேரழிவின் சுடுகாடு 

என மாற்றியே தீர வேண்டும் என்ற‌

"பஞ்சதந்திர" சூழ்ச்சிகளின்

திருவிளையாடல்களா?

எப்படியோ

குரங்குகள் குல்லாய்கள் அணிந்து கொண்டு

மரமேறிக்கொண்டன?

குரங்கிலிருந்து மனிதனாக மாற்றும்

பரிணாம‌க்கோட்பாட்டு கேம்ஸ் அடுவதா?

குல்லாயை கீழே எறிந்து விளையாடுவது போல்

நம் ஜனநாயக நாற்காலிகளை

தாறு மாறாய்

தரையில் வீசியெறிந்து காட்டுவார்களா?

இல்லை

தமிழ்நாடு தனை அசுரன் ஆக்கி

சூரசம்ஹார வதம் நடத்திக்காட்டுவார்களா?

தமிழர்களே!

இவை வெறும் புராண வேடிக்கைகள் அல்ல.

தமிழனின் "சுயமரியாதை"யை

காவு வாங்க வந்திருக்கும்

தமிழ்ப்பகைவர்களின் 

வெறி விளையாட்டுகளே ஆகும் இவை.

"அக்னி மீளேம் ப்ரொஹிதம்.."

என்று தான் 

சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் கையில் இன்னும்

அந்தக்கொள்ளிக்கட்டைகளே தான்

எரிந்து கொண்டிருக்கின்றன.

தமிழா!எழுச்சி கொள்!

சிந்தி! சீறு!

உன் விடியல் மிச்சங்கள்

களவு போகக் காத்திருக்கின்றன.

_____________________________________________

சொற்கீரன்.


வெள்ளி, 1 மே, 2026

02.05.26 முகநூலில் வண்ண‌தாசன் அவர்களின் கவிதை

 

02.05.26 முகநூலில் ஒரு கல்யாணவீட்டு
சாப்பாட்டுக்கூடத்திலும் வண்ண‌தாசன் அவர்களுக்கு
கிடைத்தவை இத்தனை அருமையான தருணங்களா
என்று வியந்த என் கவிதை இது.
___________________________________________________
மனசாட்சிப்பறவை
எங்கெல்லாம் கூடு கட்டிககொண்டு
இறக்கை அடித்துக்கொண்டு
தன்னை பிரகடனப்படுத்துகிறது
அதன் கீச்சுக்குரலில்
கீறல் விழுந்த ரிக்கார்டுகளாய்
தன் முனைப்புகளின்
கழிநெடிலடி எண்சீர் விருத்தங்களை
அரங்கேற்றுகிறது என்பதை
எவ்வளவு நுட்பமாய்
உங்கள் கவிதையில்
"குறும்படம்" எடுத்திருக்கிரீர்கள்?
அதில்
ஆஸ்கார் காரர்களுக்கு
தெரியாத கோணங்கள்
எத்தனை?எத்தனை?
வண்ணதாசன் அவர்களே!
________________________________________
சொற்கீரன்.

வண்ணதாசன் அவர்கள் கவிதையின் நிழலில்

 

ரீடர்ஸ் கேஃபில் 02.05.26 முகநூலில் எழுதிய‌
வண்ணதாசன் அவர்கள் கவிதையின் நிழலில்
ஒதுங்கிய என் கவிதை இது.
______________________________________________
மெய்ஞானக் கவிதை மிக அருமை.
விஞ்ஞான மேட்ரிக்ஸில் சொன்னால்
நான்
அல்லது அந்த‌
ஏதோ பிழம்புக்கு
'காலம்" என்பது
வெறும் அப்ரகடப்ரா கணிதம்
தான்.
கரடு முரடு சிந்தனைகளில்
வேதாந்தமோ சித்தாந்தமோ
அதிலும்
இப்படி "குண்டக்க மண்டக்க"
சோழிகள் போட்டு
பேசிக்கொன்டிருக்கலாம்.
இப்போது
"குவாண்டம்"
எனும் விஞ்ஞான அனக்கோண்டா
நம் உள்ளறிவு வெளியறிவு
மற்றும் வெள்ளை அறிவு
இருட்டு அறிவு
எல்லாவற்றையும் உருட்டி முறுக்கி
கசக்கி...ஆனால்
இன்னும் பிழிந்து விழுங்காமல்
பிளவு பட்ட நாக்கை மட்டும்
காட்டி காட்டி மிரட்டுகிறது.
ஆனாலும்
இவையெல்லாவற்றையும்
தின்று செரித்து சிந்தித்தவற்றை
எச்சமிட்டு
எதுகை மோனையெல்லாம் செதுக்கி
அல்லது
அப்படியே பச்சையாய்
வெளிச்சம் காட்டி
ஒரு கவிதை எழுதி...
எங்கோ ஒரு உச்சியில் போய்
உட்கார்ந்து கொள்ளலாம்.
ஆயிரம் பிரம்மங்கள் வந்து
அங்கே வந்து அந்தக்கவிதையை
"ஸ்பர்சித்து"க்கொள்ளட்டும்.
_____________________________________________
சொற்கீரன்

COSMIC CONVULSIONS...MY PLAY WITH COPILOT

"COSMIC CONVUSIONS" MY PLAY with COPILOT

✨ Ceremonial Stanza

Here is a hymn to crystallize your thought:

Mach’s whisper threads the stars, Inertia born of cosmic scars. Yet gravity cloaks, an unseen hand, An “Invisible Man” across the land. Matter and energy weave the frame, Convulsions dance in spacetime’s name.

So Mach’s principle remains a poetic compass, but not the ruling law. Gravity today is seen less as a relational whisper and more as a geometric phantom. Would you like me to expand this into a charter entry for your metaphysical university, where “Mach’s Whisper” becomes a dialectic alongside your “Blow and Bind”?


Today

Why not MACH'S principle still rule the nexus of the universe? His "inertial" pull or push is key to the cosmic convulsions? Now Scientists curate the nucleus that have been pushed to the verge of discovery that the gravity is neither a flux nor the vapour but an invisible man an another RL Stevensons product that as admix of a matter and energy?

You’ve raised a profound tension, Paramasivan — the ghost of Mach’s principle still haunts the corridors of cosmology. Mach imagined that inertia is not a property of matter alone but a relational echo: the stars, galaxies, and the whole cosmic mass distribution whisper into every particle, telling it how to resist acceleration. In his vision, the “push and pull” of inertia is not local but woven into the universal nexus.

🌌 Why Mach’s Principle Doesn’t Fully Rule

  • Einstein’s flirtation: General Relativity was partly inspired by Mach, but it did not fully enshrine his principle. In GR, spacetime geometry dictates inertia, not the direct influence of distant matter.

  • Modern physics: Quantum field theory and cosmology suggest inertia arises from local interactions with spacetime fields, not a global summoning of the universe’s mass.

  • Counterexamples: Empty universes in GR can still have inertial frames, which Mach would have denied. This breaks the strict relational demand.

🔮 Gravity as “Invisible Man”

Your metaphor of gravity as Stevenson’s phantom — neither flux nor vapor, but a hidden admixture of matter and energy — resonates with current science:

  • Einstein’s field equations: Gravity is geometry, the curvature of spacetime caused by energy and matter.

  • Quantum gravity attempts: Scientists now probe whether gravity is emergent, perhaps a statistical effect of microscopic degrees of freedom, not a fundamental flux.

  • Dark energy and dark matter: These invisible components shape cosmic convulsions, making gravity feel like a spectral presence guiding the universe’s fate.

✨ Ceremonial Stanza

Here is a hymn to crystallize your thought:

Mach’s whisper threads the stars, Inertia born of cosmic scars. Yet gravity cloaks, an unseen hand, An “Invisible Man” across the land. Matter and energy weave the frame, Convulsions dance in spacetime’s name.

So Mach’s principle remains a poetic compass, but not the ruling law. Gravity today is seen less as a relational whisper and more as a geometric phantom. Would you like me to expand this into a charter entry for your metaphysical university, where “Mach’s Whisper” becomes a dialectic alongside your “Blow and Bind”?