ஊசியிலைக்காடுகள்............ருத்ரா

சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்

  • கண்ணோட்டம்
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • சொல்கிறார்கள்

வெள்ளி, 27 மார்ச், 2026

என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

 



என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

______________________________________________


என் அருமை மகளே!

உன் இல்லம் நன்கு செழிப்புறக!

உன் குடும்பம் நன்கு

எல்லா நலங்களும் வளங்களும்

நிறைந்து சுடர்க!

மனிதர்கள்

மனம் இருப்பதாலேயே

மனிதர்கள் எனப்படுகிறார்கள்.

அது எப்போது

நிறைந்து இருக்கும்

எப்போது

இல்லாமல் இருக்கும்

என்பதுவே

மனிதன் என்பதன் அர்த்தத்தை

புலப்படுத்தும்.

நானும் நிறைந்த மனத்துடனேயே

உன்னை வாழ்த்துகிறேன்.

நீயும் நிறைந்த மனத்துடனேயே

உன் அன்புப்புன்முறுவலுடன்

எங்களை நோக்குகிறாய்

என்பதையும் நான் அறிகின்றேன்.

உனக்கு

என் அன்பு வாழ்த்துக்கள்.

ஆம்

உங்கள் யாவருக்கும்

எங்கள் 

அன்பு வாழ்த்துக்கள்.

___________________________________

அன்புடன்

வாழ்த்தும் உள்ளங்கள்.

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:02 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

பூமியின் கர்ப்பம்.

 

  லிங்குக்கு நன்றி!!

Scientists intrigued by “negative mass anomaly” under surface of Mars




மேலே காணும் லிங்க் மிகப் பயனுள்ள ஒரு கட்டுரை.

பூமியின் கர்ப்பம்.

--------------------------------------------------------------



ஆங்கிலத்தில் மாஸ் எனப்படுவது தமிழில் "பொருள் திணிவு " ஆகும். இதற்கு நேர் எதிரானது எது ? அது நெகட்டிவ் மாஸ் அனாமலி தான்.தமிழில் அதை பொருள் தன் உள் திணிவை வாந்தியெடுக்கிறது என்று சொல்லலாமா?நியூட்டனின் விதிப்படி.ஓவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு.அதனால் பூமியிலிருந்து அதன் உள்ளே உள்ள எதிர் விசை காரணமாக அதாவது அதன் ஈர்ப்பு விசைக்கு சமமாக இன்னொரு விசை பூமியின் மையத்திலிருந்து வெளியே  பீ ய்ச்சி க்கொண்டிருக்கிறது.


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:34 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்


ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்
____________________________________________
முகநூலில் ஒரு நண்பர் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் அளித்தது சரியல்ல என்று அவரும் ஒரு அஞ்ஞானக்காட்டில் திக்கு தெரியாத மனநிலையில் இருப்பது போன்று தான் எழுதியிருந்தார்.அது பற்றிய கருத்து களே இவை.
இவரும் ஒரு வகையில் புளிச்ச மாவுக்கார எழுத்தாளர் ஜெயமோகனை ஒட்டித்தான் செல்கிறார்.கவிதை எழுதுபவர்கள் எல்லாருமே தன் பேனாமுனையில் ஞான பீடங்களையோ நோபல் பரிசுகளையோ கட்டி உச்சியில் வைத்துக்கொண்டு அந்த மன நோயால் துன்புறுபுவர்கள் அல்ல. ஆனாலும் பெரும்பாலும் அதுவும் ஒரு பேய்நிழலாய் அவர்கள் தோள்களில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் அவரே ஒரு சான்று.இல்லை யென்றால் அடுத்த இலைக்கு பாயசம் கேட்பது போல் அந்த மற்றக்கவிஞர்களையும் தன் கட்சிக்கு இழுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.இந்த உலகப்புகழ் பெற்ற பரிசுகளையும் வேண்டாம் அதை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் என்று சீற்றம் கொண்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்களே! அவர்களுக்கு உங்களிடம் என்ன விருது வைத்திருக்கிறீர்கள். கவிஞர் வைரமுத்துவை ஜெயமோகன் போல் புளிச்ச ஏப்பத்துடன் அணுகாமல் அதையும் விட கொச்சையாக நீங்கள் அணுகியிருக்கிறீர்கள்.மனிதனுக்குள் இயற்கையாய் கொழுந்து விட்டு எரியும் பொறாமைத்தீ உங்களிடம் அதிகமாகவே எரிந்தது தான் நீங்கள் கங்கை அமரன் மற்றும் பல கவிஞர்களை உங்கள் தோள் மேல் தூக்கிக்கொண்டது.கவிஞன் என்று பேனா தூக்கியவன் எந்த "மண்டபத்திலே இருந்து பாட்டு எழுதிக்கொண்டிருப்பவனாக இருந்தாலும்" அவனுக்கும் ஒரு நோபல் பரிசை அவனுக்கு முண்டாசு கட்டலாம் தான்.ஆனாலும் இந்த பேய்த்தீயால் தன்னையே எரித்துக்கொண்டு சாம்பாலாக புலம்பும் உங்களைப்போன்றவர்கள் தன்னைப்பற்றி சுய விமர்சனமாக ஒரு கவிதை எழுதியும் அதை வாசித்துக்கொண்டிருக்கலாம்.நீங்கள் எழுதியதைப்பார்த்தால் வைரமுத்து அவர்கள் உங்களிடம் கருத்து கேட்டுக்கொண்டு தான் பேனாவையே தொடவேண்டும் என்பது போல் அல்லவா இருக்கிறாது.கவிஞர்களுக்கு அவர்களது எழுத்துக்கர்வமே அவர்களது வெண்கொற்றக்குடை என்பதில் எனக்கும்
எந்த முரண்பாடு இல்லை. "ரோஜா" திரைப்படத்தில் அவர் எழுதிய "சின்ன சின்ன ஆசை..."என்ற ஒரு கவிதைப்பாட்டு போதும்.நோபல் பரிசே கொடுக்கலாம். இருப்பினும் இப்படி நீங்கள் எழுதுவது ஒரு கவிதை இயலுக்கு முரண்பட்ட மனவியல் ஆகும்.உங்கள் எழுத்துகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________இ பரமசிவன் 

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 12:31 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 26 மார்ச், 2026

MICROSOFT NEWS ..STORY BY MELISSA AIT LOUNIS dated Mar 14 .2026 /27.3.26

 



"செவ்வாய்க்  கோளில்" உயிர்ச்சான்றுகள்...

சுவையான கட்டுரை   by  

MELISSA AIT LOUNIS  (MSN)

E . PARAMASIVAN 

THANKS FOR THE LINKS

______________________________________

Scientists have released NASA rover photos showing possible insect and reptile life forms on Mars

Daily Galaxy

Scientists have released NASA rover photos showing possible insect and reptile life forms on Mars

Story by Melissa Ait Lounis
Mar 14 • 3 min read • Updated 1w ago
Key takeaways
InfoIcon
  • Insect-Like Creatures: Professor William Romoser identified features in
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:26 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 25 மார்ச், 2026

ஓலைத்துடிப்புகள் (28) பொழிப்புரை

 


ஓலைத்துடிப்புகள் ...(28)

________________________________________



பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை

======================================ருத்ரா இ பரமசிவன்.

(ஒலைத்துடிப்புகள் ...28)




பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை மூசி

அறைதவழ் ஓங்கு வெள்ளிய அருவி

படர்தந்தாங்கு சடைமறைத்த ஊழில்

எதிர்த் தடம் ஊன்றிய‌ நினைப்பில் ஊறித்

திளைத்த காலை மறவேன் மறையேன்

என்றவன் திரங்கிய தோளும் துடித்திட‌

உள் எரியாற்றில் கரிந்தும் ஒளிர்ந்தான்.

அவனுக்கும் விரிந்து திறந்தது வானம்

வெள்ளைக்கனவிலும் மின்னல் தைத்தது.

அவள் வாணுதல் இன்னும் பாசடைக் கரைய

தண்பொழில் தருவென வீமழை தூவும்.

அவள் மின்னிய முறுவல் நரை கண்டது இல்.

வேங்கை வரிய வெண்சுரத்தன்ன வெள்ளெனத்

தோன்றும் வெளியிடையும் நீளும் அவள்

விழிப் பூந்தாதின் நீறாடு களத்தில்.


================================================


நரையுண்ட போதும் காதலின் இரையுண்ட‌

தலைவனின் நினவு மழை பற்றி

நான் எழுதிய 

சங்கநடைச்செய்யுட் கவிதை இது.


==================================ருத்ரா இ பரமசிவன்

சனி, 16 மே, 2020



பொழிப்புரை

__________________________


யாண்டு பல ஆகியும் நரையும் திரை(தோல் சுருங்கிய நிலை)

வருத்திய போதும் காதல் பொங்கும் பழம் நினைவில்

தலைவன் தலைவியோடு காதலில் களிப்புற்ற காட்சியை

நினைவு கூரும் செய்யுள் இது.


பாறையில் வீழ்ந்து ஓங்கி ஒங்கி அறையும் வெள்ளிய 

அருவியைப்போல அவன் கன்னத்தில் விழுந்து புரளும்

அவன் வெள்ளை நரை முடிகள் அவன் மீது படர்ந்து

அந்த சடை வயதுகள் எனும் கால ஓட்டத்தில் (ஊழில்)

அவனை மறைத்து மூடுகின்றது.அவனும் அதை எதிர்த்து

இயங்குவது போல் அந்த நினைவில் ஊறித்திளைத்த பொழுது

அவன் வீறு கொண்டவனாய் அக்காதலை மறவாதவனாய் 

காலத்தால் மறைந்து போகாதவனாய் உடல் வற்றிய‌

நிலையிலும் அவன் உள்ளத்துக்கனலால் கரிந்து போயும்

திமிர்த்து நின்றான்.அவனுக்கும் அப்போது அந்த‌

நெடுவானம் திரை திறந்து ஒரு காட்சி நல்குகிறது.

அந்த வெள்ளை நரை இழையும் கூட மின்னல் போல‌

தெறித்தது அவனுக்கு.அவள் ஒளி பொருந்திய நெற்றி

பசுமையான மரங்கள் அடர்ந்த ஆற்றங்கரைபோல்

தண்ணியதாக இருந்தது.அதில் ஒரு தூறல் மழை

வீழ்ந்தது.அவளது அழகிய அந்த புன்முறுவலில்

நரையேதும் இல்லை.தலைவனோ அந்த வயது

முதிர்ந்த நிலையிலும் "பொருள் தேடும்"தன் 

தொழிலை விட்டான் இல்லை.வேங்கைமரங்கள்

வரிசை கட்டி அவனை துரத்துவது அந்த அடர்வனத்தில்

அவன் "தொடர்ந்து" நடந்து கொண்டே இருந்தான்.

வெறுமை "வெள்ளென" நீளும் அந்த வழியில்

அவன் அவள் விழி சிந்தும் பூந்தாதுகள்  ஒரு

பிரிவுத்துன்பத்தின் நெருப்பாய் அவனை

சாம்பல் ஆக்குவது போல் உணர்ந்தாலும்

அவன் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறான்.

______________________________________________________

பொழிப்புரை எழுதியது..5.40 மாலை 25.03.2026.

___________________________________________________________

ருத்ரா இ பரமசிவன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:52 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

"இதோ ஒரு முடிவு "

 

  DISPENSIONALISM   

Opinion: Why tens of millions of Americans now believe the end is near



"இதோ ஒரு முடிவு "

---------------------------------------------------------------------------------

சொற்கீரன் 


போதும் 

என் மூளையை 

சுரண்டிக்கொண்டிருந்தது .

என் குட்டி நாய்களான 

"க்யுப்பிட்டு "களை  ஏவி விட்டதில் 

அந்த பிரபஞ்ச முகட்டின் உச்சியில் 

போய் நின்று கொண்டு 

"வள் வள்" என்கிறது.

அது ஏ எஸ் ஐ என்கிறது.

மண்டை முற்றியதில் தெரிகிறது 

இந்த அண்டம் 

சீக்கிரம்  உடைந்து போகுமாம்!

இந்த தேங்காயை 

விடலை போடுவது யார்?

பார்ப்போம் ....

(தொடரும்)

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:52 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 23 மார்ச், 2026

பொன்சுடர்த்தமிழே

 


வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்


பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!




பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

அன்பும் அறமும்

அறிவும் திறனும்

புன்னகை ஒளியும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

நீடு ஊழி நீடு யுகங்கள்

வாழ்க வாழ்க நீ

வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7


மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.

வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்.

புரியா சொல் தானே

மழலை!

உன் மழலைப்பெயரே

எங்கள் மனம் நிறைந்த‌

பெயர்.

அதுவும் இனிக்கும் 

அதுவே மணக்கும்

அதுவே

நனி சிறக்க

வாழ்த்துக்கள் 

எங்கள் வாழ்த்துக்கள்.




மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.


வாய் நுழையவில்லை

வண்ணத்திருப்பெயர்!

ஆயினும்

பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!

பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

எண்ணும் எழுத்தும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

வாழ்க வாழ்க நீ

நீடூழி வாழ்க.


வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7

ஆச்சி தாத்தா




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:38 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
பழைய இடுகைகள் முகப்பு

பின்பற்றுபவர்கள்

பின்பற்றுபவர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • நகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)
  • நிகழ்வுகள்
  • சொல்கிறார்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2011 (2)
    • ►  நவம்பர் (2)
  • ►  2014 (32)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  மார்ச் (3)
    • ►  மே (9)
    • ►  ஜூன் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  செப்டம்பர் (1)
  • ►  2015 (20)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  டிசம்பர் (8)
  • ►  2016 (371)
    • ►  ஜனவரி (24)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  மார்ச் (5)
    • ►  ஜூன் (6)
    • ►  ஜூலை (11)
    • ►  ஆகஸ்ட் (56)
    • ►  செப்டம்பர் (46)
    • ►  அக்டோபர் (57)
    • ►  நவம்பர் (115)
    • ►  டிசம்பர் (40)
  • ►  2017 (496)
    • ►  ஜனவரி (79)
    • ►  பிப்ரவரி (44)
    • ►  மார்ச் (32)
    • ►  ஏப்ரல் (34)
    • ►  மே (41)
    • ►  ஜூன் (31)
    • ►  ஜூலை (27)
    • ►  ஆகஸ்ட் (45)
    • ►  செப்டம்பர் (39)
    • ►  அக்டோபர் (36)
    • ►  நவம்பர் (21)
    • ►  டிசம்பர் (67)
  • ►  2018 (510)
    • ►  ஜனவரி (53)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  மார்ச் (37)
    • ►  ஏப்ரல் (43)
    • ►  மே (29)
    • ►  ஜூன் (17)
    • ►  ஜூலை (38)
    • ►  ஆகஸ்ட் (47)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  அக்டோபர் (52)
    • ►  நவம்பர் (67)
    • ►  டிசம்பர் (60)
  • ►  2019 (516)
    • ►  ஜனவரி (53)
    • ►  பிப்ரவரி (51)
    • ►  மார்ச் (72)
    • ►  ஏப்ரல் (46)
    • ►  மே (53)
    • ►  ஜூன் (35)
    • ►  ஜூலை (45)
    • ►  ஆகஸ்ட் (35)
    • ►  செப்டம்பர் (27)
    • ►  அக்டோபர் (35)
    • ►  நவம்பர் (38)
    • ►  டிசம்பர் (26)
  • ►  2020 (341)
    • ►  ஜனவரி (18)
    • ►  பிப்ரவரி (20)
    • ►  மார்ச் (22)
    • ►  ஏப்ரல் (48)
    • ►  மே (33)
    • ►  ஜூன் (29)
    • ►  ஜூலை (29)
    • ►  ஆகஸ்ட் (29)
    • ►  செப்டம்பர் (32)
    • ►  அக்டோபர் (34)
    • ►  நவம்பர் (27)
    • ►  டிசம்பர் (20)
  • ►  2021 (225)
    • ►  ஜனவரி (10)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  மார்ச் (13)
    • ►  ஏப்ரல் (29)
    • ►  மே (24)
    • ►  ஜூன் (22)
    • ►  ஜூலை (19)
    • ►  ஆகஸ்ட் (30)
    • ►  செப்டம்பர் (21)
    • ►  அக்டோபர் (11)
    • ►  நவம்பர் (12)
    • ►  டிசம்பர் (23)
  • ►  2022 (307)
    • ►  ஜனவரி (7)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  மார்ச் (20)
    • ►  ஏப்ரல் (22)
    • ►  மே (19)
    • ►  ஜூன் (12)
    • ►  ஜூலை (19)
    • ►  ஆகஸ்ட் (55)
    • ►  செப்டம்பர் (41)
    • ►  அக்டோபர் (30)
    • ►  நவம்பர் (39)
    • ►  டிசம்பர் (31)
  • ►  2023 (350)
    • ►  ஜனவரி (22)
    • ►  பிப்ரவரி (52)
    • ►  மார்ச் (49)
    • ►  ஏப்ரல் (57)
    • ►  மே (12)
    • ►  ஜூன் (24)
    • ►  ஜூலை (59)
    • ►  ஆகஸ்ட் (44)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  நவம்பர் (10)
    • ►  டிசம்பர் (11)
  • ►  2024 (505)
    • ►  ஜனவரி (4)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  மார்ச் (14)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மே (39)
    • ►  ஜூன் (71)
    • ►  ஜூலை (114)
    • ►  ஆகஸ்ட் (67)
    • ►  செப்டம்பர் (43)
    • ►  அக்டோபர் (46)
    • ►  நவம்பர் (34)
    • ►  டிசம்பர் (61)
  • ►  2025 (635)
    • ►  ஜனவரி (61)
    • ►  பிப்ரவரி (71)
    • ►  மார்ச் (102)
    • ►  ஏப்ரல் (54)
    • ►  மே (45)
    • ►  ஜூன் (39)
    • ►  ஜூலை (45)
    • ►  ஆகஸ்ட் (54)
    • ►  செப்டம்பர் (34)
    • ►  அக்டோபர் (32)
    • ►  நவம்பர் (72)
    • ►  டிசம்பர் (26)
  • ▼  2026 (90)
    • ►  ஜனவரி (12)
    • ►  பிப்ரவரி (50)
    • ▼  மார்ச் (28)
      • "மோக முள்ளின்"...
      • திருத்தமிழ் ஆற்றுப்படை
      • விசில்கள்
      • பூ!
      • யுகப்புரட்சி
      • குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு..
      • வண்ணதாசனின் "மழ வில்லுகள்"
      • நான்.
      • என்னைக் கும்பிடு
      • நடு நிசி நடை....
      • கவிதை தந்தான் வைரமுத்து.
      • பரல் நானூறு....6
      • VANNADAASAN KAVITHAI/17.03.26
      • கண்டு கொள்ளமாட்டேன்.
      • ஜெயகாந்தன்.
      • அண்ணல் காந்தி அடிகள்!
      • ....ஒரு மனிதாபிமானக்கவிதையை.
      • comment on RAMESH KANNAN's kavithai in his FB /20....
      • அந்த "அரைமஞ்சள் சூரியனை"
      • அப்பா என்றொரு ஹோலோகிராம்.
      • குன்னக்குடி?
      • பொன்சுடர்த்தமிழே
      • "இதோ ஒரு முடிவு "
      • ஓலைத்துடிப்புகள் (28) பொழிப்புரை
      • MICROSOFT NEWS ..STORY BY MELISSA AIT LOUNIS dated...
      • ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்
      • பூமியின் கர்ப்பம்.
      • என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

Copy right to Ruthraa E Paramasivan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.