ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

காலப்பிரளயமாய்...

 

The Odyssey ending, explained


நெடுங்கதையா?

நெடிய நெட்டைப் பெருங்கன‌வா?

ஹோமர் விட்ட கொட்டாவியில்

பூதங்களும்

சிறகு முளைத்த மிருகங்களும்

கூந்தல் சர்ப்பங்களின்

மரணத்து மங்கைகளும்

ஏதோ ஒரு கனியைத்தின்று

தடம் மாறி தவிப்பவர்களும்

இன்னும் இன்னும்

போர்க்களத்தின்

கூரிய வாட்களையே

குடலும் வயிறுமாக காட்டி

ஏய்த்த பொய்க்குதிரைகளும்

அது துரோகமா?

அபகரித்தலின் வேட்டையா?

ரத்தம் 

ஆறாகி கடலாகி

எதையோ பலிகேட்டது.

காலத்தின் பசி..

தீனியாகவே

எங்கும் எங்கும் மக்கள்!

முடிவின் வாய்

இன்னொரு ஆரம்பத்தை

கவ்வியத்தாக‌

மாயப்பாம்புகள்

நெளிந்து ஓடுகின்றன?

...............

___________________________________________

சொற்கீரன்


ஓடிஸ்ஸி பாருங்கள்.

முடிவில்லாத 

நம் அரசியல் அனக்கொண்டாவின்

வயிற்றூள்ளும்

அந்த கூரிய பல்லின் முனையிலும்

அந்த முடிவு

ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறது

அந்த் சொட்டும் ரத்தம்

புஷ்பிக்கிறது

காலப்பிரளயமாய்...

______________________________________________________

சொற்கீரன்


"கல்லத்தி முடுக்கு"

 

"கல்லத்தி முடுக்கு"

----------------- ------------------------------------------------


திருநெல்வேலியின் 

மூலை முடுக்குகள் கூட 

எனக்கு 

வரலாற்றுத் திருப்பங்கள்.

பள்ளிக்கூட கோடைக்கால 

விடுமுறைகளின் 

வசந்த மாளிகைகளாக 

அந்த திலி-டவுணின் சந்து பொந்துகள் 

உல்லாச வெளிச்சத்தை 

சொக்கப்பனையாக்கி நிற்கும்.

பாப்புலர் டாக்கீஸின் 

ஒலிச்சித்திரங்கள் 

கொலுசு கட்டி ஆடும்.

"வீடு நோக்கி ஒடி வந்த என்னையே ..."

என்ற அந்த சிவாஜியின் பாட்டு 

கன்னம் அதிர இசைக்கும் உணர்சசியை 

அங்கு படரவிடும்.

அதிலும் அந்த 

"கல்லத்தி முடுக்கு"

முடுக்கிவிடும் விசையை 

மறக்க முடியாது.

பெயர் சொல்லும் அந்த‌

கல் அத்தி மரம்

எங்கே நிற்கிறது என்று

தெரியவில்லை.

மரத்தையே கல்லாக போகுமாறு

எந்த முனிவன் சபித்தானோ?

பாவங்களும் சாபங்களும் தானே

நம் கடவுள் பிம்பங்கள்!

அந்த "குறுந்தெருவு"முனையிலிருந்து 

என் நடையைத் துவக்குவேன்.

நெல்லை நகரத்தின் 

விலாப்புறத்தை உரசிக்கொண்டே 

ஒரு 

கிச்சு கிச்சு தாம்பாளம் 

கீயாளித்தாம்பாளம் 

விளையாடிக்கொண்டே 

போவது போல் தான் இருக்கும் .

நடந்து கொண்டே 

மணித்திரமூர்த்தி  உயர்நிலைப்பள்ளியைத் 

தழுவிக்கொண்டு நிற்கும் 

தூங்குமூஞ்சி மரத்து பூஞ்சிறகு நிழல்களின் 

மகரந்தப்பொழிவில் 

கொஞ்சம் நனைந்து பார்க்கச்சொல்லும்.

கரிப்புகையை மூச்சு விட்டுக்கொண்டே 

செல்லும் 

மேக்கே போகும் ரயில் ஒன்று 

திலி ஜங்க்ஷனிலிருந்து 

தம் பிடித்து குப் குப்பென்று 

ஓடுவது 

ஒருவன் சட்டையின் பின் புறத்தை 

இன்னொருவன்  பிடித்துக்கொண்டு ஓடும் 

குறும்புக்கார பயல்களின் 

ரயில் விளையாட்டை 

கண் முன் நிறுத்தும்.

அந்த "அம்பதுகள் "

இந்த 

வைரப்பூங்கா கால ஓட்டத்தின் 

"ஸ்பேஸ் டிராவல்" புகை விளையாட்டை 

நடத்தித்தராதா?

---------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

"மகிழ்ச்சி ஜீவா"

"மகிழ்ச்சி ஜீவா
வணங்குகிறேன்"
. . . . . . . . .
திரு வண்ணதாசன் அவர்களே!
இந்த ஓவியத்தில்
சிரித்துக்கொண்டே
கண்மூடி
ஆனால் தூக்கத்தொடு
கண்ணாமூச்சியாடி
கனவு காண்பதைக்கூட‌
ஒவ்வொரு எழுத்தாக‌
நிறுத்தற்குறிகள்
அணிவகுக்கும்
வியப்புக்குறியாக‌
அந்த ஆரியன் காவு
குகைவழி நிழல் தூவல்களாக‌
கவிதையாக்கி
பரிமாறியிருக்கிறீர்கள்.
நன்று நன்று,,நன்றி
______________________________________

சொற்கீரன். 

நிழல் தூவல்களாக‌

 "மகிழ்ச்சி ஜீவா

வணங்குகிறேன்"

. . . . . . . . . 

திரு வண்ணதாசன் அவர்களே!

இந்த ஓவியத்தில்

சிரித்துக்கொண்டே

கண்மூடி 

ஆனால் தூக்கத்தொடு 

கண்ணாமூச்சியாடி

கனவு காண்பதைக்கூட‌

ஒவ்வொரு எழுத்தாக‌

நிறுத்தற்குறிகள்

அணிவகுக்கும்

வியப்புக்குறியாக‌

அந்த ஆரியன் காவு

குகைவழி நிழல் தூவல்களாக‌

கவிதையாக்கி

பரிமாறியிருக்கிறீர்கள்.

நன்று நன்று,,நன்றி

‍______________________________________

சொற்கீரன்.


ஒரு ரோஜாப்பூ

 

நவீனத்துவம் கவிதையை

கழுவேற்றும் 

கொடுமையைப்பாருங்கள்.

காதலி 

ஐ லவ் யூ

சொல்லிவிட்டாளாம்.

காதலன் 

வானத்துக்கும் பூமிக்கும்

குதிக்கிறானாம்

எப்படியெல்லாம்?

இப்படியெல்லாம் தான்

யாரையாவது நாலு சாத்து சாத்தி

அப்புறம்

அய்யா தெரியாதய்யா

மன்னிச்சிக்குங்க என்று சொல்லி

புன்சிரிப்போடு 

அவருக்கு பிரியாணி வாங்கிக்

கொடுக்கணும் என்று.

அது யாராய் இருக்கும்.

ஏன் காதலியின் அப்பாவாகக்கூட‌

அது இருக்கலாம்.

தக் லைஃப் என்று

ஒரு வக்கிரத்தின் மென்படலத்தை

அப்படியே பூசி

அதில் ஒரு ரோஜாப்பூ

பார்க்கவேண்டுமாம்.

நாம் திரைப்படங்களில்

பார்த்த சேதுக்களின்

வாழ்க்கையிலும் 

இப்படி ஓடிய சோக இழைகளைப்

பார்த்திருக்கிறோம்.

இது நவீனத்துவத்து இலக்கியத்து

ராட்சசமா?

இல்லை சர்ரீயலிசச் சவ்வுப் படலமா?

________________________________________________

சொற்கீரன்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ALIENS IN OUR WATER WORLD ?

 


Snaiad built an entire ecosystem with no Earthlike animals






BOMBARDED BLOOMS OF ALIENS IN OUR WATER WORLD ?........EPS

இரண்டு புதிர்களை...

 



விண்வெளி எனும் பிரபஞ்சம்

இரண்டு புதிர்களை

தன்னுள் வைத்துக்கொண்டு

மனித மூளையையே

சலவை சலவை செய்து

மிக மிக நுட்பம் வாய்ந்த‌

ஒரு மூளையையே தனதாக்கிக்கொண்டு

இங்கு

எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறது.

அவை இந்த இரண்டும் தான்.


(1) கருந்துளை ...ப்ளாக் ஹோல்

(2) இருட்பிண்டம் ... டார்க் மேட்டர்


கட்டுரைக்குள் சென்று தெளிவுறுக!


சொற்கீரன்


The two biggest mysteries in the universe may be linked | Watch