வண்ணதாசன் அவர்களின் 19.03.26ன் முகநூல் கவிதை
_________________________________________________________
அன்புள்ள வண்ணதாசன் அவர்களே.
..."என்று தோன்றுகிறது...."
இப்படி முடித்திருந்தீர்கள் அந்த கவிதை/கட்டுரையில்.
சரிந்து விழ இருந்த உங்களை
தடுத்து பிடித்துக்கொண்டு
முதுகை தடவி ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.
கவிதைக்கு பேனா காகிதம் மை எல்லாம் அப்புறம்.
கவிதை நெஞ்சம் ஒன்று
பிழிந்து ஒரு கொத்து மழையை அல்லவா
அங்கே தூவியிருக்கிறது.
அந்த வெள்ளிமோதிரத்தில்
கருணையின் முத்தில்
அலைகள் ஆர்க்கும் நெஞ்சம் அங்கே
ஆரம்பித்திருக்கிறது
ஒரு மனிதாபிமானக்கவிதையை.
இல்லாத மோதிரமோ?
அல்லது
இருக்க வேண்டிய மோதிரமோ?
கவிதைப் பொட்டலத்து
பொற்கிழி அது.
___________________________________________
சொற்கீரன்