வண்ணதாசனின் "மழ வில்லுகள்"
_________________________________________
சொற்கீரன்
வண்ணதாசனின் வானவில்லுகள் என்று
அவருடைய கவிதைச்சில்லுகள் தெறித்த
வண்ணங்களை ஒக்காந்து
"அசைபோடும் குறுக்குத்துறை படிக்கட்டுகளாக்கி
அமர்ந்து ரசிப்பதே
இந்த "வண்ணதாசனின் மழவில்லுகள்".
பாருங்கள் நம் மலையாழத்தமிழ்
வானவில்லை எவ்வளவு
கவிதைத்தனமாய் வருடி வருடி சொல்கிறது
"மழ வில்லு"ன்னு!
___________________________________________________
அந்தக்கடிக்காரததை
குலுக்கி குலுக்கி
உசுரு இருக்காண்ணு
பார்க்கிறது தான் கவிதை.
ஆத்துத்தண்ணி முழிச்சிட்டுருக்கா
தூங்கிக்கிட்டுருக்காண்ணு
கொள்ளிகாட்டைய வச்சு துப்பறியும்
சீடர்கள்ளாம் இல்ல இவங்க.
காது கூர்மைக்குள்ள
ஆயிரம் ஃபேவர்லூபா வாச்சுக
இருக்காக்கும் இவங்களுக்கு.
அந்த "காலம்" குலுக்குனதுக்கெல்லாம்
கோவப்படல..
எல.. இவங்களுக்கு எப்டிலெ
காது இவ்வளவு கூர்மைன்னு
தெகச்சுட்டுதுலெ.
இந்த சவத்து மூதி இப்டில்லாம்
எசலும்ணுதான்
நம்ம பயலுவ இப்ப
வினாடி முள்ள சொருகி வச்சுருக்காம்லே
வாச்சுக்குள்ளெ.
___________________________________________________________
சொற்கீரன்