வெள்ளி, 26 ஜூன், 2026

திரு ரியாஸ் குரானா அவர்கள் படைத்த‌ ஒரு "சொற்றுலா" .

 சமுதாயக்காடு நுழைந்து வருவது பற்றி

திரு ரியாஸ் குரானா அவர்கள் படைத்த‌

ஒரு "சொற்றுலா" பற்றியது இது.

_____________________________________________


சமுதாய உளவியலில்

நுண்ணோக்கி நுவலும் 

எழுத்துச்சிற்பியே!

ரியாஸ் குரானா அவர்களே.

அக்கறையோடு பேசி

பிறகு அதிலேயே

அக்கரை இக்கரையாக நின்று

நம்மை நோட்டமிடும் 

மனிதர்களை அற்புதமாக‌

"படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறீர்கள்!"

சில மனிதர்கள் நிறங்கள் காட்டுவதில்

பச்சோந்திகள் கூட தோற்றே போகும்.

எப்படியோ தோதாக வாழைப்பழத்தோடு தான்

போவோம்...

அவர்கள் "வக்கணையாய் அதில் ஊசியேற்றி"

உள்ளுக்குள் ஆனந்தக்கூத்தாடுவார்கள்.

நண்பராயிற்றே என்று தான்

முகத்தாட்சண்யம் பார்ப்போம் நாம்.

கிடைத்தது தோள் என்று

நம்மீது சவாரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அப்புறம் நாம் சிந்துபாத்து

அவரோ "கடற்கிழவர்" தான்.

நாம் அந்த வட்டாரத்தை விட்டு

அகலும் வரை அந்த "சொற்சுமை" தாங்காமல்

சோர்ந்தே விடுவோம்.

நீங்கள் எழுதியது நீண்டதொரு காவியம்.

எந்த வகை என்றாலும் எலிப்பொறி ஒன்று தான்.

மசால் வடைகள் தான் வேறு வேறு.

பதிலே எதிர்பார்க்காமல் கேள்வி மழை

பொழிவோர்கள் ஒரு வகை.

என்ன கேள்வி? அதற்கு என்ன பதில்?

என்றெல்லாம் கவலை இன்றி

கேள்வியும் நானே பதிலும் நானே

என்று நம்மீது 

சொர்க்கவாசம் செய்து கொண்டிருப்பார்கள் 

அது ஒரு வகை.

இந்த நிலையில்

மக்களோடு நட்பு கொள்வது எப்படி என்று

ஒரு ஆயிரத்து சொச்சம் பக்கங்களில்

நான் எழுதிய நூல் பற்றி தெரியுமா உங்களுக்கு

என்று

அந்த பளபளப்பான பிளாட்டினம் கார்டு ஒன்றையும்

உங்களுக்கு நீட்டுவார்.

கவனம் கொள்வீராக.

_________________________________________________

சொற்கீரன். 

வியாழன், 25 ஜூன், 2026

துளிர்க்கும் என்று.....

துளிர்க்கும் என்று.....

____________________________________


கை பேசியில்

கை மட்டும் தான்

கிளிக் பண்ணி பேசுகிறது.

கணிப்பொறி யுகம் என்றாலும்

மூளையும் சிந்தனையும்

கையில் இருந்து இழையுமா என்ன?

கருவியின் பாட்டரிக்குள்

அவன் சிந்தனையின் கர்ப்பம் இருக்கிறது.

மனிதன் எந்திரமாய் ஆகி விடுகிறான்.

அவனது இன வரலாறு மொழி வரலாறு

மற்றும் சமுதாய ஆற்றோட்டங்கள எல்லாம்

அற்றவனாய் 

பாலைத்திணையில் மட்டுமே பேசுகிறான்.

சினிமா எனும் அந்த "சஹாரா"வில்

கானல் நீர்க்காட்சிகளின்

நிழல்களாய் மாறிப்போகிறான்.

உயிரற்ற உணர்வற்ற அந்த வெறுமையின் கொடூரம்

அவன் அரசியலில் "மானுடம்" எனும்

ஈரப்பசையையே இல்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது.

கணிப்பொறிக்குள் மனிதன் புகுந்தபின்

"பெரும் பூதமாகி"ப்போனான்.

இனியும் ஒரு பசுமையும் உயிர்மையும் கலந்த‌

அரசியல் இங்கே தோன்றுமா?

"கட் அவுட்"உலகங்களின் கனவுக்கூச்சல்களில்

மனித சிந்தனையின் கீற்றுகள் துளிர்க்குமா?

நம்புவோம்.


கை பேசியில்

கை மட்டும் தான்

கிளிக் பண்ணி பேசுகிறது.

கணிப்பொறி யுகம் என்றாலும்

மூளையும் சிந்தனையும்

கையில் இருந்து இழையுமா என்ன?

கருவியின் பாட்டரிக்குள்

அவன் சிந்தனையின் கர்ப்பம் இருக்கிறது.

மனிதன் எந்திரமாய் ஆகி விடுகிறான்.

அவனது இன வரலாறு மொழி வரலாறு

மற்றும் சமுதாய ஆற்றோட்டங்கள எல்லாம்

அற்றவனாய் 

பாலைத்திணையில் மட்டுமே பேசுகிறான்.

சினிமா எனும் அந்த "சஹாரா"வில்

கானல் நீர்க்காட்சிகளின்

நிழல்களாய் மாறிப்போகிறான்.

உயிரற்ற உணர்வற்ற அந்த வெறுமையின் கொடூரம்

அவன் அரசியலில் "மானுடம்" எனும்

ஈரப்பசையையே இல்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது.

கணிப்பொறிக்குள் மனிதன் புகுந்தபின்

"பெரும் பூதமாகி"ப்போனான்.

இனியும் ஒரு பசுமையும் உயிர்மையும் கலந்த‌

அரசியல் இங்கே தோன்றுமா?

"கட் அவுட்"உலகங்களின் கனவுக்கூச்சல்களில்

மனித சிந்தனையின் கீற்றுகள் துளிர்க்குமா?

நம்புவோம்.

மீண்டும் துளிர்க்கும் என்று

நம்புவோம்.

________________________________________________________

சொற்கீரன்

+

புதன், 24 ஜூன், 2026

பூனைகளின் தொல்லைகள்

 

ஒரு பூனை கடந்து போகிறது

___________________________________________________

நம் தலைமுறையின் சிறந்த எழு த்தாளர் 

திரு ரியாஸ் குரானா அவர்களின் 

"புத்தகங்கள்"பற்றிய ஒரு சொற்சித்திரம் 

கண்டு எழுதிய என் கவிதை .

-----------------------------------------------------------------------------



ஆம்.

48 மைல் நீள காகிதக்காடுகளில் கூட 

எலி பிடிக்க முடியவில்லை அதனால்.

அருமை அருமை.

இந்த பூனைகளின் தொல்லைகள்

இன்னும்

தாங்கத்தான் முடியவில்லை.

அப்புறம் அந்த அபிமன்யு

வியூகங்களுக்குள் 

புதைந்து போனதைப்போல‌

மவுனக்கிடங்கில்

கிடக்கிறது மகாபாரதங்களாய்....

சவக்காடுகளாய்.

மனிதனை ரத்த ஆறுகளில் கரைக்க‌

எத்தனை தேர்ச்சக்கரங்கள்..

மயில் இறகு கிரீடங்களோடு

புன்முறுவல் காட்டி

மனிதம் புதைகுழிக்குள் வீழ‌

எத்தனை எத்தனை தலையணைகள்

புத்தகங்களாய் 

தூங்கியே இறந்து இறந்து

இந்த நூற்றாண்டுகளை விழுங்கித்தீர்த்தன.

ரியாஸ் குரானா அவர்களே..

புத்தங்களின் எழுத்துக்களைத் தின்ன‌

கரையான்கள் படையெடுத்திருக்கலாம்.

அங்கே கரையான்களே

எழுத்துக்களாய் மொய்த்திருந்தால்...

ஆம்

மானுடம் தொலைந்தது அப்படித்தான்.

_________________________________________

சொற்கீரன்.



செவ்வாய், 23 ஜூன், 2026

வெற்றி மீது வெற்றி வந்து...

 



வெற்றி மீது வெற்றி வந்து...

________________________________________


சும்மா

எதற்கெடுத்தாலும்

வெற்றி வெற்றி என்று

சொல்லிக்கொண்டே

நூறு முறை விழுந்து எழுந்திருங்கள்.

அப்புறம் மூஞ்சியைத் துடைத்துக்கொண்டு

தோல்விகளே

வெற்றியின் படிக்கட்டுகள்

என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

எழுத்துக்களின் வேந்தே!

ரியாஸ் குரானா அவர்களே!

சுவை பட எழுதுதல்

சுவை பட சொல்லுதல்

ஒன்றே

ஒருவன் நூறு இமயங்களை

தலை மீது சூடுதல் என்று பொருள்.

எழுதுதல் 

என்பது

வெற்றியா? தோல்வியா?

அது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வெற்றி பெற்ற எழுத்துக்குள் எல்லாம்

ஆயிரம் தோல்விகள்

அமிழ்த்திக்கிடக்கின்றன.

இப்படி படிக்கும் போது

மனது ஒரு சிறு காக்கா இறகு போல

வானத்தில் மிதக்கிறது.

ஒன்று செய்யலாமே!

வெற்றி இஸ் ஈகுவல் டு தோல்வி.

தோல்வி இஸ் அதர்வைஸ் நோன் அஸ் 

சக்ஸஸ்!

அப்பாடா!

கடவுள் வென்று விட்டார்...அதாவது

மனிதன் தோற்று விட்டான்.

மாற்றி கூட சொல்லிப்பாருங்களேன்.

எதுவும் எதுவும் இல்லை.

எதிலும் ஒன்றுமில்லை.

______________________________________________

சொற்கீரன்

திங்கள், 22 ஜூன், 2026

கத்திரிகோலும் மழிப்பான்களும்

 



ஒரு கணம் நினைத்துப்பாருங்களேன்.

அந்தக் கத்திரிகோலும் மழிப்பான்களும்

இல்லா விட்டால் என்ன ஆகும்?

நாம் மயிர்க்காடுகளுள் தான்

மறைந்து கிடப்போம்.

வயதுகளை நம் கலைக்கு ஏற்றவாறு

செதுக்கி எறியும் இந்த கருவியே

நம்மை கடைசி வரை

தாலாட்டி சீராட்டும் தொட்டில் ஆகும்.

கொஞ்சம் கொஞ்சமாய்

அருகம் புல்லாய் படர்ந்துவரும்

இது திடீரென்று

நம் தலையில் ஒரு இமயமலையையே

தலைப்பாகையாய் தூக்கி

வைத்தது போன்ற பாரத்தை

அமிழ்த்தும்போது

நம்மை விடுவித்து 

ஒரு அநிச்ச மலர் போல‌

வானத்தில் நாம் பறக்க‌

உதவும் அந்த நிபுணர்களே

நம் "ஆபத்துதவிகள்"

நமது வெண்கொற்றக்குடை

அவர்களின் 

ரேசர் விரலிடுக்குகளில் தான்!

________________________________________

சொற்கீரன்.

("வழுக்கைப்பெருமிதம்" பற்றி

உண்மையிலேயே "மயிர்க்கூச்செறியும் படி"

எழுதிய இலக்கிய மன்னர் "ரியாஸ் குரானா"

அவர்களின் கருத்துச்சித்திரம் பற்றிய பகிர்வு)

அது ஒரு தீவு.

 

 


அது ஒரு தீவு.

_________________________________________________


எல்லாம் அழிந்தது என்று

நம்மீது 

முற்றுப்புள்ளி விழுந்தது

எவ்வாறு?

இந்த "ஆதி‍‍‍ அந்த" மொத்தப்படத்தையும் 

ஓடவிட்டு

அந்த "முற்றுப்புள்ளி"அத்தியாயத்தின் 

"முக தரிசனம்" செய்வதே நமது இப்போதைய  நோக்கம்.

அதை

காலத்தின் நீள்கண்டங்களாகப் பகுத்தும்

பார்க்கலாம்.

அல்லது திடீரென்று ஒரி புள்ளியிலிருந்து

நாம் பார்க்கத் துவங்கலாம்.

எப்படித்துவங்குவது?

சரி!

ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி

கீழே விடுவதிலிருந்து

நாம் திரைப்படமாய் பார்க்க உட்காருவோம்.


அது ஒரு தீவு.

நாம் இப்போது "ஒரு காலவெளிப்பயணத்தின் போது"

விபத்துக்குள்ளாகியிருக்கிறோம்.

பூமியின் பரிமாணத்துக்கும் 

இப்போது இங்கு இருக்கும் பரிணாமங்களுக்குமே

வேறுபாடுகள் இருப்பது போன்று

உணர்கிறோம்.

அது மட்டும் அல்ல‌

நாம் தனியாக உள்ளோமா?

அல்லது

வேறு யாரேனும் இங்கு இருக்கின்றனறா?

என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ளோம்.

இது "தொலந்து போனோம்" என்ற

ஒரு தொலைக்காட்சித் திரைப்படம் 

என்று வைத்துக்கொள்வோம்.

அது கடைசிக்காட்சி தான்.

அப்படியென்றால்

மற்றவர்கள் எங்கே?

அவர்கள் எல்லாம் யார் யார்?

என்று

"குணச்சித்திரங்கள்"  வரைந்து வைத்துக்கொண்டு

அவர்கள் இங்கே

அறிமுகம் ஆக வேண்டும் அல்லவா?

அப்புறமும்

அவர்களிடையே தோன்றும் 

உணர்வுக் குழம்பியங்களின்

படங்கள் என்னவாக இருக்கும்?

(தொடரும்)

ஞாயிறு, 21 ஜூன், 2026

PARADISE





PARADISE

------------------------------------------------------------------EPSVAN


 PARADISE NEITHER TO BE GAINED NOR TO BE LOST

A VERBAL HOAX WITH GODLY TESTAMENT 

SOOTHING ALL THE SINS ERASED WITH IVORY ROSARIES

AND CHANTING MYTHOLOGICAL WHIFFS AND WORDS.

THE MELTING NIGHTS AND CANDLES CAN NOT

LURE IT BACK THE BLEEDING STARS AND DUSTS.

THE GATEWAYS AND THE THRONGS OF BELLS.

THE CRUCIFIXIONS STAGED OR NAILED WITH

THORNY CROWN SO AS EVENTED DEATH.

THE BLEATING LAMBS LOOK FOR HEAVENLY DISH

TO SERVE THEIR OWN FLESH TO THE "GOSPELLD" GOBLINGS.


___________________________________________________________-


_________________________________________________

EPSVAN.