புதன், 29 ஏப்ரல், 2026

சில்லறைக்கூச்சல்கள்

 



அரசியலுக்கு 

விடலை வயது மட்டும் போதுமா?

பச்சைகுதிரை தாண்டுவதும்

பம்பரம் விளையாடுவதும்

கோலி குண்டுகள் பின்னே

உருண்டு ஓடுவதும் மட்டும் போதுமா?

தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்றானே கணியன் பூங்குன்றன்.

இதில்

தீயது தூயது

என்று குத்தாட்டம் போடுவதா

அரசியல்?

மனிதனுக்கு தன்மானம் போல்

அவன் மண்ணுக்கு அதுவே உயிர்.

மாநில சுயாட்சி என்பதே

அதன் மொழி பெயர்ப்பு.

அந்த உயிர்வெளிச்சத்தை 

இருட்டாக்கி

நமக்கு விலங்கு பூட்டவரும்

ஒரு நெருக்கடியை புரிந்து கொள்ளுவது தானே

அரசியல்.

அதை திசைதிருப்பி

ஒரு "விடலை விளையாட்டுக்கு"

சினிமாத்தனமாய்

கில்லி விளையாடுவதா அரசியல்?

சிந்தனை முதிர்ச்சி தான்

தமிழர் நாகரிகத்தின்

சிகரம்.

சிந்திக்க மறுத்து 

அதை ஜிகினாத்தோரணம் ஆக்கி

 சில்லறைக் கூச்சல்கள் இடுவதா

அரசியல்?

இளைய தலைமுறைபிஞ்சுகளே!

உங்கள் புயல்

உங்களை அழிப்பதற்கு அல்ல.

உங்கள் உணர்வுகளை உணருங்கள்.

உங்கள் அறிவின் சுடரேந்திகளை

ஒரு போதும்

நழுவ விட்டு விடாதீர்கள்.

வெற்றி நம் தமிழுக்கே!

தமிழுக்கு மட்டுமே வெற்றி.

பொறிவண்டுகளின் ரீங்கரிப்புகளே

பூபாளம்.

விசில்கள் அல்ல.

பூங்குயில்களின் விழிப்புக்குரல்களே

விடியல்கள்.

விசில்கள் அல்ல.

_________________________________________

சொற்கீரன்

திங்கள், 27 ஏப்ரல், 2026

"போன்சாய்" மரமா?

 



என் பையன் கேட்கிறான்

அடம் பிடிக்கிறான் என்று

ஆகாயவிமானம் 

வாங்கிக்கொடுத்தேன் விளையாட.

அப்புறம்

ட்ரோன் கேட்டான்.

பிறகு அந்த வானைத்தையே

பட்டா போட்டு

வாங்கித்தாருங்கள்

வான வில்லுடன் விளையாட‌

என்றான்.

இப்போ சொல்கிறான்.

ஓட்டுகள் கொத்து கொத்தாக‌

நம் வீட்டு ஓட்டுகள் எல்லாமும்

அவருக்கே தான் போடவேண்டுமாம்.

அட்வான்ஸாக‌

"செயின்ட் ஜார்ஜ் கோட்டை"மாடலும்

வேண்டுமாம்.

அவர் தான் இனி நம் எல்லோருக்குமான‌

முதலமைச்சாராக 

இருக்க வேண்டுமாம்...

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்

கர்ஜிக்கிறான்..

கொந்தளிக்கிறான்..

ஐ ஐ டி யில் ரேங்க் வாங்குவதில்

ஒன்றும் குறைச்சல் இல்லை.

ஆனாலும் 

செயற்கை நுண்ணறிவை

விஜய்ணாவின் பெப்சி கோக் ப்ராண்ட்

ஆக்கி குடித்தே தீருவது

என்று அடத்துக்கு மேல் அடம் பிடித்து

ரோடு எல்லாம் அவன்

குத்தாட்டம் தான்.

இப்படி பிள்ளைகள் விளையாட ஆரம்பித்தால்

நாம் "ஏ ஐயை" வைத்து

இன்னொரு பூமியின்

"ஸ்டெப்னி"யை ௭ப்படி

தயார் செய்வது?

இந்த பசங்கள் என்றால்

பொண்ணுகளும் தான்.

கல்யாணமாலையாவது

கத்தரிக்காய் மாலையாவது

எல்லாம் அவரே தான்.

இனி ஓவ்வொரு வீடும்

ஜென்ஸிக்களின்

"போன்சாய்" மரமா?

_______________________________________

சொற்கீரன்.

111 வயதுச் சிறுமியே!

தன் வயதுகளால் (111) காலத்துக்கே
 நாமம் போட்டுக்கொண்டிருப்பவரே! 
இந்த உலகத்தின் உற்சாக ஊற்றே! 
நீங்கள் உலா போக 
இன்னும் நூற்றாண்டுகள் 
உங்களை ஏந்தி செல்லக்காத்திருக்கின்றன!
நீநீநீ...நீடூழி வாழ்க நீங்கள்!!!!






அந்த நூறுவயதுக்கும் 
பின்னே போய் 
ஒளிந்து கொண்ட‌
பதினொரு வயதுச் சிறுமியே!
ஆயிரம் ஆயிரம்
மத்தாபூக்களின்
வெளிச்ச வனமே!
உன் சிரிப்பில் அன்று பூத்த‌
குறும்பூ
இன்றும் எல்லா 
பிரபஞ்சங்களையும்
சுருட்டி மடக்கி
அந்த கை குவிப்பில்
அடையாளம் காட்டும்
அந்த ஆலயதரிசனத்துக்கு
எல்லா ஆலயங்களும்
கை கட்டி காத்துக்கிடக்கின்றன.
_____________________________________
சொற்கீரன்



ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் படமாக இருக்கக்கூடும்


தீபா வியால் (DEEPA VIYAL)அவர்களின் முகநூல் பதிவு..25.04.26

வண்ணதாசன் கவிதை / 27.04.26

 

வண்ணதாசன் கவிதை / 27.04.26


27.04.26 முகநூலில்

வண்ணதாசன் அவர்கள் எழுதிய 

கவிதை ஒன்றில் பூவின்

மகரந்தங்களை அவர் தெறிக்கவிட்டதைப்

பற்றிய கவிதை இது.

______________________________________________


கவிஞனின் கையில்

அந்த கவிதை

கனவு காண்கிறது.

இதழ்களை விரித்துக்காட்டுகிறது.

அங்கே தான் அவன்

சன்னல் திறக்கிற‌து.

கவிஞனுக்கு அது

அப்போது தான் 

எழுதி முடித்த ஒரு

கவிதைத்தொகுப்பு.

வாசக வனங்களில் எல்லாம்

அது

வாசல் தெளித்து கோலம்

போட்டுக்கொண்டே இருக்கிறது.

மொட்டு என்றும்

பூ என்றும்

சருகு என்றும்

உதிர்வு என்றும்

அது பரிமாணங்களை

துகிலுரித்து வேடிக்கை காட்டுவதை

நீங்கள்

பார்த்துக்கொண்டே இருங்களேன்.

யார் வேண்டாம் என்றது?

_____________________________________

சொற்கீரன்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

இனிய நாற்றுச் சூரியன்களே?

c




____________________________________________

சொற்கீரன்.




ஒரு பிரபஞ்ச அற்புதம் தான்./26.04.26

 



26.04.26 அன்று முகநூலில்

வண்ணதாசன் அவர்களின் கவிதை ஒன்று

ஒரு கருப்பு நாயின் "வீச்சம்" ஒன்றை

கல் பாக்கத்து கதிர் வீச்சாய் சொற்கரு பிளந்த‌

அணு அலைகளாய் விரித்த விந்தையை

இங்கு கவிதையாக்கியுள்ளேன்.

_____________________________________________________


நானும் இப்படித்தான்

எங்கள் வீட்டு

வெள்ளை பொமரேனியனின்

அந்த "மூசு மூசு" மூச்சுகளின்

பூக்குளியலில்

திளைத்திருக்கிறேன்.

அதனுள் கீற்றாடும் அந்த 

பைரவ நாற்றம் அல்லம் வீச்சம்

ஏதோ ஒரு க்ரேண்ட் யுனிஃபிகேஷனுக்கு

கணித சமன்பாடு சொன்னது.

கவிதைகளுக்குள்ளும்

பெட்ஸ் 

கூடு விட்டு கூடு பாய்ந்து

சொல் எலும்புத்துண்டுகளை

சுரண்டி சுரண்டித்

தின்னு கொண்டு தான் இருக்கும்.

ஓவியத்தின் எண்ணெய் வண்ணம்

எத்தனை தூரிகைகளைக்கொண்டு

உங்களை கிச்சு கிச்சு மூட்டும்?

கித்தான் மேல் பரப்பின்

எண்ணெய் மினுமினுப்பில்

எங்கிருந்தோ உட்கார்ந்து கொண்டு

கன்னத்தின் பளிங்கு கொண்டு

உள்ளத்தின் கரடு முரடுகளை

வழவழப்பாக்கும் அவளின் ஓவியம்

நிச்சயம் 

ஒரு பிரபஞ்ச அற்புதம் தான்.

எப்படி  வைத்துப்பார்த்தாலும்

ஓவியம் தீக்கொழுந்துகளின்

நெருப்பு மயிர் வருடல்களில் தானே

தன் தூரிகையைக்

கருவுயிர்த்துக்கொண்டிருக்கும்.

_______________________________________

சொற்கீரன்

சனி, 25 ஏப்ரல், 2026

ஒரே சிற்பமா?

 

நீ
ஒரே சிற்பமா?
ஒரு கோடி சிற்பமா?
முதல் உளியில் முதல் சிற்பம்
உன் ஒலியே அது.
உன் ஒளியே அது.
வினாடிகள் தோறும்
உன் பிரசவம்.
நீயே குழந்தை.
நீயே தாய்.
இந்த உலகத்து மண்ணில்
உன் ஒவ்வொரு தடமே தான்
உன் முகம்.
ஒரு நாள் கண்ணாடி
சுக்கு நூறு ஆனது.
உன் மனம் தூள் தூள்.
ஆனால் பிம்பங்கள் மட்டும்
ஆயிரமாய் சிரித்தது.
ஆயிரமாய் அழுதது.
இதே பிறவியில்
இன்னும் உன் பிறவிகள்
ஆயிரம் ஆயிரம் மிச்சம்.
இப்போது உன் கையில்
எத்தனையாவது உளி?
செதுக்கும் முன்னே
சிற்பங்கள் கையில்
ஆயிரம் ஆயிரம்
முகங்கள் காட்டும்.
அகங்களும் காட்டும்.
___________________________________
சொற்கீரன்.