வியாழன், 19 பிப்ரவரி, 2026

மெஷின் லேங்குவேஜ்

 மெஷின் லேங்குவேஜ்

________________________________


கணிதம்

ஒரு நுண்ணிய குகையில்

குடி கொண்டிருக்கிறது.

அது ஒரு புழுக்கூட்டு வழி

என்று

புதிர் மொழி காட்டிவிட்டு சென்றார்

ஐன்ஸ்டீன்.

பெருக்கலும்

பெருக்கலின் பெருக்கலும்

மற்றும்

எக்ஸ்பொனென்ஷியல் எனும்

வானமே பொத்துக்கொண்டு போகும்

சங்கிலிப்பெருக்கலும்

கணிதத்தை

நம் மண்டை உடையச் செய்து விட்ட பிறகு

"ஹில்பர்ட்ஸ் நுண் வெளி"

எல்லையின்மையை

ஒரு இல்லை இன்மையாய்

நம் கையில் உருட்டித்தந்து

பந்து விளையாடச்சொல்லி விட்டது.

கடவுள்களும்

பில்லியன் பில்லியன் 

தலைகள் முளைத்த‌

பூச்சிகளாய்

மினுக்கி இருட்டி 

பிதுக்கும் கண்களின்

ஃபோட்டான்களில்

குவாண்ட அண்டங்களின்

சமன்பாடுகள் புரியாமல்

தவித்துக்கிடக்கின்றன.

அந்த ஹில்பர்ட் ஸ்பேஸ் கெர்னல்களின்

சோழிக்குலுக்கல் ஒலிகள்

நம் நிகழ்தகவு இருத்தலியங்களை

பூச்செண்டுகள் ஆக்கி

புல்லரிக்க 

வைத்துக்கொண்டிருக்கின்றன.

____________________________________________

சொற்கீரன்.


வண்ணதாசனும் ஆவாரம்பூக்களும்

 


வண்ணதாசனும் ஆவாரம்பூக்களும்

_______________________________________


நேற்றைய புதையலுக்குள்

நெடியக்கிடக்கும்

எலும்புக்கூடுகள்

என்றைக்காவது நமக்கு

வாசிக்கத்தரும் 

நம் தொன்மைக்கூடுகளை.

அகழ்வு எந்திரங்களின்

அசுரப்பசிக்குள் 

டாலர்கள்

செரித்துக்கிடக்கும் நகரக்கட்டிட‌

இரும்பு எலும்புகள்

விறைத்து விறைத்து

வானத்தையே முட்டி

நிமிர்ந்ததில்

ஊர்க்குருவிகளும் சிறகு உதடுகளில்

எதையோ இனிமையாய்

சலம்பிக்கொண்டிருக்கின்றன.

கனத்த கெட்டியான 

அத்தம் நண்ணிய ஆழ்மவுனம்

கிழிசல்கண்களல்

வெறித்து நோக்குகின்றன.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________

சொற்கீரன்.


வண்ணதாசனின் பிரளயங்கள்.

__________________________________


நெல்லா புல்லா..?

சொல்லா சொல்லா..

என‌

மொத்தப்பிரபஞ்சப்பொதியை

இழுத்து நுழைத்து

திணித்து 

இனிமை இழையை

நூற்றுத்திரித்து

எப்போது வேண்டுமானாலும்

பற்றிக்கொண்டு

வெடித்து உதிர்க்கும்

கருமருந்துப்பிரளயம் 

என்கிற கவிதைக்கொத்துகள்

அந்த 

சொற்பூத்தொடுத்தலில்

தமிழ்க்கன்னிக்குடம் உடையும்.

பிறத்தல் என்னும்

பறத்தலும் துவங்கும்.

__________________________________

சொற்கீரன்


செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

"இடக்கையால் எழுதப்பட்ட மொட்டைக்கடுதாசி"

 

"இடக்கையால் எழுதப்பட்ட மொட்டைக்கடுதாசி"

________________________________________________________


அது

படிக்கவேண்டும் என்ற‌

ஆவலைத்தூண்டும் புத்தகம் தான்

வண்ணதாசன் அவர்களே!

"ந‌டுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"

என்று ஒரு படம் எடுத்தார்களே.

அந்த "தலைப்புக்கே"

பத்து ஆஸ்கார்கள் கொடுக்கலாம்.

இந்த மொட்டைக்கடுதாசியும்

கண்ணுக்குத் தெரியாத 

கடவுளால் அல்ல‌

ஆனால் ஒரு சைத்தானால் 

எழுதப்பட்டதோ?

தெரியவில்லை.

படிப்பவர்கள் படித்து

நம்புவதை விட‌

மேலோட்டமான சொற்சிலம்பு ஆட்ட‌

வீச்சுகளிலேயே

வீழ்ந்து விடுவதைத்தான் நாம் 

பார்க்கிறோம்.

இடது சாரி சிந்தனைகளை

வலது சாரிகளாய் முனை மழுங்கடிக்கவும்

இப்படி "மொட்டை" இலக்கியங்கள்

உலா வருவதுண்டு.

இன்று

வரலாறுகள் எனப்படும் மொட்டைப்புராணங்கள்

அப்படித்தான் தோரணங்களோடு

போணிஆகிக்கொண்டிருக்கின்றன.

இந்த புத்தகம் அப்படியில்லை..அப்படியிருக்காது

என நான் நம்ப விரும்புகிறேன்.

ராகுல் சாங்கிருத்யாயனின்

"வால்கா முதல் கங்கை வரை.."

மண்ணின் அடியில் அப்படி

நொறுங்கிக்கிடக்கிற‌

உண்மையின் எலும்புக்கூடுகளைத்தான்

எழுத்துச்சிப்பிகளாக்கி தருகிறது.

செத்துப்போன "முத்து"ப்பூச்சிகளின்

ரத்த சதைச்சித்திரங்களில்

மனிதம் கசிந்து பொழியத்தான் செய்கிறது.

புத்தகங்கள்

ஒரு வகையில் குழந்தைகளே.

எழுத்துக்கள் மழலைகள் போல் வந்து

மருள் ஊட்டலாம்.

இருள் நீக்கலாம்.

அருள் சொல்லலாம்.

அறிவின் கனல் மூட்டலாம்.

புத்தகங்கள் 

சிரிப்பு மூட்டுவதும் உண்டு.

நெருப்பு மூட்டுவதும் உண்டு.

கவிதைப் புத்தகங்கள் மட்டுமே

நூல்களின் நூலாம்படையாய்

கற்பனைப்ப்பொக்களங்களை

மிதக்க விட்டுக்கொண்டே இருக்கும்.

_____________________________________________

சொற்கீரன்




இளங்கரையாற்றுப்படை (ஜென்ஸி)......(2)

 

இளங்கரையாற்றுப்படை

(ஜென்ஸி)......(2)

______________________________

வண்ணம் தேடி

அருகம்புல் வருடும் 

பட்டாம்பூச்சிக்கு

தன் முதுகில் சுமக்கும்

வண்ணத்தோட்டம்

தெரியுமா>

கல்லூரியின் கல்வி மகரந்தங்களை

கையில் ஏந்திக்கொண்டு

கத்துக்குட்டி ஈரோக்கள் எனும்

சினிமா ஸீரோக்களிடமா பாடம் படிப்பது?

நாளைய வரலாறு உங்கள் கனவுகள்.

இந்த இருட்டுத்திரை 

மத்தாப்புகளின்

ஈசல் குவியல்களா நீங்கள்?

நுண்கணிதமும் குவாண்டமும்

உங்கள் அன்றாட அண்டங்கள்.

இந்த சினிமாக்குட்டிச்சுவர்களிலா

உங்கள் சிங்கச்சிந்தனைச் சித்திரங்கள்?

விடியல்கள் என்றைக்கு

வேண்டுமானாலும்

உங்கள் உள்ளங்கையின் செம்புயல்கள் தான்.

இந்த குத்தாட்டங்களின்

"டிஸ்க் ப்ரோலாப்ஸ்களிலா"

உங்கள் 

வவ்வால் மனித விளையாட்டுகள்?

ஏ ஐ களின் மூக்கணாங்கயிறுகளை

பிடிக்கவேண்டிய கைகளில்

கருப்பு டிக்கட்டுகளா?

சிந்தியுங்கள்

மின்னல் நாற்றுகளே!

அறிவின் ஊற்றுகளே!

__சொற்கீரன்__


தீ மூள்க!

 தீ மூள்க!

________________________________

சொற்கீரன்


சிந்தனைத்தீ 

மூளும் இடமே

"மூளை" எனப்படும்.

மனிதனின் 

அறிவு மூலை தான்

அவன் அக்கினி மூலை.

அதை விட்டு

சோழிகுலுக்கிப்போட்டு

தேடிக்கொண்டிருக்கும்

"வாஸ்து" மூலைகளில் அல்ல‌

உங்கள் மூளைத்தோட்டம்.

எண்ணும் எழுத்தும்

கண்ணெனத் தகும்

என்றான் மனிதன்.

எண்ணிப்பார்த்தவன்

அறிவு கொப்பளிக்கும்

எரிமலை அளந்தான்.

அளவு எல்லைகள்

முறித்தான் தொடர்ந்தான்.

குவாண்டம் என்றவன்

"குபிட்டு"களின் 

வேகம் நுழைந்தான்.

கணிப்பொறி என்றால்

கடலை மிட்டாய் வாங்கும் 

காசுக்கும் கூட‌

அவனுக்கு "கிளிக்குகள் தான்"

மனிதன்

காற்றை சுவாசிக்க 

மறந்தான்.

இப்போது அவன் சுவாசிப்பது

செயற்கை நுண்ணறிவின்

வெகு வேகத்துடிப்புகள் தான்.

சிலேட்டும் புத்தகமும் ஆக‌

இருந்தவன்

விண்வெளி நோக்கி

பள்ளிகள் சென்று

விண் அலை அதிர்வின் 

சுவடிகள் ஊர்ந்தான்.

சூரியன் விழிக்கும் 

இமைகளில் கூட‌

ஒட்டி நின்றான்..புதிர்

ஓவியம் ஆனான்.


(தொடரும்)




LHC hunt for NEW PARTICLE PHYSICS.

 

LHC hunt for NEW PARTICLE PHYSICS.


New particle data hints at something standard physics cannot explain