புதன், 3 ஜூன், 2026

இன்று என்ன சேதி..

இன்று என்ன சேதி..

___________________________________சொற்கீரன்


திடீரென்று

கண் விழித்த சிங்கம்

கர்ஜனை 

செய்து கொண்டிருக்கிறது.

அதன் வலை மீது

சுண்டெலிகள்

ஓடி ஆடிக் 

களித்துக்கொண்டிருக்கின்றன.


____________________________________________


டில்லியில்

கரப்பான்பூச்சிகளின்

"ஒலிம்பிக்ஸ்"

தூள்.தூள்.

தங்கப்பதக்கங்கள்

குவிந்து கொண்டிருக்கின்றன.


_________________________________________________

திங்கள், 1 ஜூன், 2026

"சொற்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டன"

 


"சொற்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டன"


இலங்கை எழுத்தாளர்

வாஃபா பருக்

அந்த தூக்குக்கயிற்றின் 

கண்ணி முடிச்சுகளில் உட்கார்ந்து

சொற்களின் 

தொண்டைக்குழிக்குள் இறங்கி

முக்குளித்து

பேனா நிப்புகளில்

துளிர்த்த சொற்றுளிகளில்

கசியும் 

அர்த்தமின்மைகளையும்

வெற்று அலப்பறைகளையும்

செதுக்கித்தள்ளுகிறார்.

சொற்களின் மூளைச்செதில்களில்

புதிய சிந்தனைகளை

மூண்டெரியச்செய்கிறார்.

அந்தக் கத கதப்பில்

நாம் விறைத்துப்போகாமல்

மீண்டு நிற்கிறோம்.

___________________________________________________________

_சொற்கீரன்_





விமர்சனத்தின் விமர்சனம்.

 விமர்சனத்தின் விமர்சனம்.

___________________________________________________

(ரியாஸ் குரானாவின் சினிமா விமர்சனத்தைப்

பற்றிய கவிதை இது.)

___________________________________________________


பாப் கார்ன் கொறித்தல்களே

மிச்சம் என்று

தள்ளிவிடமுடியுமா

நம் சினிமாக்களை.

இதோ யதார்த்த கத்தி கொண்டு

அறுவை சிகிச்சை தந்திருக்கின்றேனே

அந்த நம் சமுதாயத்தின்

எலும்பு மிச்சங்களைப்பற்றி

என்ன நினைக்கிறீர்கள்.

எது எப்படியாயினும் நம்

வெளிச் சாக்கடைகளின் முடை நாற்றங்களை

முட்டையிட்டு

குஞ்சு பொரிக்கும்

இந்த சிறகு விரிப்புகளின்

இருட்டில்

எல்லா வெளிச்சமும் 

கரைந்தே தான் காணாமல்

போய்விட்டது.

_______________________________________

சொற்கீரன்


ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

 ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

______________________________________


கவிதையின் 

நொட்டை 

நெய்வழிச்சல்களையும்

அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்

கள்ளச்சங்கிலிகளையும்

அங்குலம் அங்குலமாய்

இதயம் பிளந்து

கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்

பாற்க்கடலை அல்ல‌

பாழ்க்கடலை

கடைந்து திர்ட்டியிருக்கிறார்.

உவமைகளையும் உருவகங்களையும்

உள்ளுக்குள் உள்ளாய் 

வெளியிலும் வெளியேயாய்

அற்புதமாய்

ஓவியம் தீட்டியிருக்கிறார்.

சர்க்கஸ் கோமாளி ஒருவன்

மிக மிக நுட்பமான வித்தைகளை

கோமாளித்தனமாய்

செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.

ஆனால்

அந்த நுட்பமான வித்தை

வல்லுநர்களுக்கு

ஆசானாய் இருப்பவனே

அவனாகத்தான் இருப்பான்.

அந்த சர்க்கஸின் 

சிங்கம் புலி கரடி மற்றும்

மலைப்பாம்புகளின்

மற்றும்

அன்றாட வசூல்களைக்

குவித்துக்காட்டும்

முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்

அவனே தான் எஜமானியாக‌

இருப்பான்.

அப்படி

உலகக் கவிதைகளுக்கெல்லாம்

எஜமானியாக இருக்கும்

ஒரு சொற்கூத்தனும் 

பொருட்செறிவின் ஒரு

பெரும் சக்கரவர்த்தியும் 

இவனே இவனே இவனே தான்.

ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே

இந்தக்கவிஞனை 

ஏன் இன்னும்

உங்கள் பரிசுக்கைவிலங்கில்

மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?

உண்மையில் 

நீங்கள் இது வரை சிறப்பித்த‌

கவிஞர்களின்

மொத்தக்கருவூலமே இவன்தான்.

இது

உண்மையிலும் உண்மை.

கவிதைகளின்

ப்ளாக் ஹோல் என்று 

ஒன்று இருக்குமானால்

அதுவும் இவனே.

இந்த கரும்புயலின்

கருவுக்குள்

சொற்களின்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

தொலைந்து கிடக்கும்.

இந்த கற்பனைப்பிழம்பு

இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?

அந்த நீண்ட இடைவெளியின்

"சொற்பாலம்"கடக்க‌

இவனிடமே இருக்கிறது

அந்த பொற்சாவிகளின் 

வைரச்சாவிக்கொத்து!

இவன் சொற்பாலம்

கடந்து கடந்து

குதித்து குதித்து நடப்பதில்

உள்ளம் 

மிக மிக களிப்புடன்

ஓர்மை கொண்டு 

இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.

வாழ்க! வாழ்க!

கவிதைகளின் இந்த‌

யுக சிற்பியன்!

___________________________________________

சொற்கீரன்



ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

______________________________________


கவிதையின் 

நொட்டை 

நெய்வழிச்சல்களையும்

அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்

கள்ளச்சங்கிலிகளையும்

அங்குலம் அங்குலமாய்

இதயம் பிளந்து

கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்

பாற்க்கடலை அல்ல‌

பாழ்க்கடலை

கடைந்து திர்ட்டியிருக்கிறார்.

உவமைகளையும் உருவகங்களையும்

உள்ளுக்குள் உள்ளாய் 

வெளியிலும் வெளியேயாய்

அற்புதமாய்

ஓவியம் தீட்டியிருக்கிறார்.

சர்க்கஸ் கோமாளி ஒருவன்

மிக மிக நுட்பமான வித்தைகளை

கோமாளித்தனமாய்

செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.

ஆனால்

அந்த நுட்பமான வித்தை

வல்லுநர்களுக்கு

ஆசானாய் இருப்பவனே

அவனாகத்தான் இருப்பான்.

அந்த சர்க்கஸின் 

சிங்கம் புலி கரடி மற்றும்

மலைப்பாம்புகளின்

மற்றும்

அன்றாட வசூல்களைக்

குவித்துக்காட்டும்

முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்

அவனே தான் எஜமானியாக‌

இருப்பான்.

அப்படி

உலகக் கவிதைகளுக்கெல்லாம்

எஜமானியாக இருக்கும்

ஒரு சொற்கூத்தனும் 

பொருட்செறிவின் ஒரு

பெரும் சக்கரவர்த்தியும் 

இவனே இவனே இவனே தான்.

ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே

இந்தக்கவிஞனை 

ஏன் இன்னும்

உங்கள் பரிசுக்கைவிலங்கில்

மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?

உண்மையில் 

நீங்கள் இது வரை சிறப்பித்த‌

கவிஞர்களின்

மொத்தக்கருவூலமே இவன்தான்.

இது

உண்மையிலும் உண்மை.

கவிதைகளின்

ப்ளாக் ஹோல் என்று 

ஒன்று இருக்குமானால்

அதுவும் இவனே.

இந்த கரும்புயலின்

கருவுக்குள்

சொற்களின்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

தொலைந்து கிடக்கும்.

இந்த கற்பனைப்பிழம்பு

இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?

அந்த நீண்ட இடைவெளியின்

"சொற்பாலம்"கடக்க‌

இவனிடமே இருக்கிறது

அந்த பொற்சாவிகளின் 

வைரச்சாவிக்கொத்து!

இவன் சொற்பாலம்

கடந்து கடந்து

குதித்து குதித்து நடப்பதில்

உள்ளம் 

மிக மிக களிப்புடன்

ஓர்மை கொண்டு 

இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.

வாழ்க! வாழ்க!

கவிதைகளின் இந்த‌

யுக சிற்பியன்!

___________________________________________

சொற்கீரன்



கவிதை என்ற சொற்பாலத்தைக் கடப்பதெனில்,
மூளைக்குள் குடையை விரித்துக்கொண்டு எப்போதாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா? சொற்களால் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் நடப்பது அப்படியொரு விபரீதமான அனுபவம்தான்! பயணிகளின் பாதுகாப்பை விட, தங்களின் பௌத்திக மீறல் தற்பெருமைக்கே அதிக பட்ஜெட் ஒதுக்கி இதைக் கட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் இதில் முதல் அடி எடுத்து வைக்கும்போது, பெயர்ச்சொற்கள் மட்டும் கொஞ்சமாவது சிமெண்ட் போல உறுதியாக இருப்பதை உணர முடியும். ஆனால், உஷார்! உரிச்சொற்களின் மீது எக்காரணம் கொண்டும் கால் வைத்துவிடாதீர்கள். ஏனெனில், நவீன கவிஞர்கள் அவற்றின் மீது தாராளமாக வெண்ணெயைத் தடவி வைத்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே அடுக்கப்பட்டிருக்கும் உருவகங்கள் பார்ப்பதற்கு இரும்புத் தூண்கள் போலப் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், மிதித்தால் அவை வெற்றுப் பஞ்சு மிட்டாய்கள் போல அமுங்கி, உங்கள் செருப்பைக் கவ்விக்கொண்டு விடவே விடாது.
பயணிகளின் வசதிக்காகச் சில தத்துவார்த்தக் குப்பைகளைப் பாலத்தின் நடுவே ஸ்பீட் பிரேக்கர்கள் போலக் குறுக்கே வீசியிருக்கிறார்கள். வழியில் புதிய பொருள்முதல்வாதம், உணர்வுத் தளம் போன்ற கனமான வார்த்தைகள் கிடந்தால், அவற்றைக் கவனமாகத் தாண்டிச் செல்வதே பாதுகாப்பானது.
பார்ப்பதற்குக் கல் பாறை போலத் தோற்றமளிக்கும் அந்த வார்த்தைகளின் மீது ஏறி நின்றால், அவற்றின் எடையற்ற தன்மை காரணமாக நீங்கள் நேராகப் பாதாளத்தில் உள்ள அகவயச் சிக்கலுக்குள் விழுந்துவிடுவீர்கள்.
இதையெல்லாம் தாண்டிச் சென்றால், பாலத்தின் நடுவே ஒரு பெரிய பள்ளம் இருப்பதைப் பார்த்து நீங்கள் பயப்படக்கூடும். இந்தப் பாலத்தைக் கட்டிய முதன்மைப் பொறியாளர், வேறொருவரின் கவிதை வரியைத் திருடித் தன் சொந்தக் கவிதையாகப் பாவனை செய்து, அதனை முக்கியத் தூணாக நிறுவியதே இந்தப் பள்ளத்திற்குக் காரணம்.
அந்தத் திருட்டு வரிக்கு எந்த அசலான உயிர்ப்பும் இல்லாததால், அது இடிந்து விழுந்து இந்த நாசகார வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. இந்தப் பள்ளத்தைத் தாண்டுவதற்கு உங்களிடம் கவித்துவ மனமும் கற்பனைத் திறனும் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாலத்தின் நுழைவாயிலில் உள்ள பெட்டிக்கடையில் மணி நேரத்துக்கு 50 ரூபாய் வாடகையில் ஒரு கற்பனைத் திறனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செல்வது விவேகமானது.
இந்தப் பாலத்தில் நடக்கும்போது பயணிகள் அதிக சுமையோடு வருவதை நிர்வாகம் வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக, எழுத்தாளர் ஜெயமோகனின் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெருநாவல்களை ஆய்வு செய்யும் பல அத்தியாயங்கள் கொண்ட கனமான ஆய்வேடுகளைச் சுமந்துகொண்டு நடக்கக் கூடாது.
கடந்த வாரம் அப்படி நடந்த ஒருவரின் சுமையால் பாலம் பயங்கரமாகக் குலுங்கி, அந்தப் பக்கங்களின் அதீத அழுத்தத்தாலும் தத்துவச் சுமையாலும் மூன்று விமர்சகர்கள் நதிக்குள் விழுந்துவிட்டார்கள்.
அதேபோல, மோட்டார்சைக்கிளில் இந்தச் சொற்பாலத்தைக் கடக்க முயல்வதும் முற்றிலும் முட்டாள்தனமானது. இங்குள்ள முடிவில்லாமல் நீளும் காற்புள்ளிகளிலும், அரைப்புள்ளிகளிலும் பைக்குகளின் டயர்கள் சிக்கிச் சறுக்குமே தவிர, வண்டி ஒரு அங்குலம் கூட முன்னால் நகராது. அதிலும், நேற்று ஒரு புல்லட் ஓட்டி வந்தவர், ஒரு அடைப்புக்குறிக்குள் சிக்கி இன்னும் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு பௌதிக விதிகள் எதுவும் வேலை செய்வதில்லை என்பதை நீங்கள் சீக்கிரமே உணர்வீர்கள். நீங்கள் நேராகத்தான் நடந்து கொண்டிருப்பீர்கள், ஆனால் பாலம் திடீரென நனவோடை உத்தி மூலம் பின்னோக்கி வளைந்து, நீங்கள் ஆரம்பித்த இடத்திற்கே உங்களைக் கொண்டு வந்து துப்பிவிடும்.
ஒருவேளை தவறி கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாது. மாறாக, நீங்கள் நிரந்தரமாக ஒரு விளிம்புநிலைப் படிமமாக மாறி, எந்த அர்த்தமும் இல்லாமல் காற்றில் மிதக்கத் தொடங்கி, இலக்கியக் கூட்டங்களில் பேயாக அலைய நேரிடும்.
எனவே, இந்தப் பாலத்தைக் கடக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. உங்கள் கைகளில் எந்தவிதக் கோட்பாடுகளையும் வைத்திருக்காதீர்கள். அரை கிலோ மௌனத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, எந்த இலக்கியவாதியின் கண்ணிலும் படாமல் நைஸாக நடந்து செல்வதே சாலச் சிறந்தது.






ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

______________________________________


கவிதையின் 

நொட்டை 

நெய்வழிச்சல்களையும்

அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்

கள்ளச்சங்கிலிகளையும்

அங்குலம் அங்குலமாய்

இதயம் பிளந்து

கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்

பாற்க்கடலை அல்ல‌

பாழ்க்கடலை

கடைந்து திர்ட்டியிருக்கிறார்.

உவமைகளையும் உருவகங்களையும்

உள்ளுக்குள் உள்ளாய் 

வெளியிலும் வெளியேயாய்

அற்புதமாய்

ஓவியம் தீட்டியிருக்கிறார்.

சர்க்கஸ் கோமாளி ஒருவன்

மிக மிக நுட்பமான வித்தைகளை

கோமாளித்தனமாய்

செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.

ஆனால்

அந்த நுட்பமான வித்தை

வல்லுநர்களுக்கு

ஆசானாய் இருப்பவனே

அவனாகத்தான் இருப்பான்.

அந்த சர்க்கஸின் 

சிங்கம் புலி கரடி மற்றும்

மலைப்பாம்புகளின்

மற்றும்

அன்றாட வசூல்களைக்

குவித்துக்காட்டும்

முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்

அவனே தான் எஜமானியாக‌

இருப்பான்.

அப்படி

உலகக் கவிதைகளுக்கெல்லாம்

எஜமானியாக இருக்கும்

ஒரு சொற்கூத்தனும் 

பொருட்செறிவின் ஒரு

பெரும் சக்கரவர்த்தியும் 

இவனே இவனே இவனே தான்.

ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே

இந்தக்கவிஞனை 

ஏன் இன்னும்

உங்கள் பரிசுக்கைவிலங்கில்

மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?

உண்மையில் 

நீங்கள் இது வரை சிறப்பித்த‌

கவிஞர்களின்

மொத்தக்கருவூலமே இவன்தான்.

இது

உண்மையிலும் உண்மை.

கவிதைகளின்

ப்ளாக் ஹோல் என்று 

ஒன்று இருக்குமானால்

அதுவும் இவனே.

இந்த கரும்புயலின்

கருவுக்குள்

சொற்களின்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

தொலைந்து கிடக்கும்.

இந்த கற்பனைப்பிழம்பு

இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?

அந்த நீண்ட இடைவெளியின்

"சொற்பாலம்"கடக்க‌

இவனிடமே இருக்கிறது

அந்த பொற்சாவிகளின் 

வைரச்சாவிக்கொத்து!

இவன் சொற்பாலம்

கடந்து கடந்து

குதித்து குதித்து நடப்பதில்

உள்ளம் 

மிக மிக களிப்புடன்

ஓர்மை கொண்டு 

இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.

வாழ்க! வாழ்க!

கவிதைகளின் இந்த‌

யுக சிற்பியன்!

___________________________________________

சொற்கீரன்















ஞாயிறு, 31 மே, 2026

எழு தமிழா!

 



அன்பான இளைஞர்களே

இப்படி அழைப்பதன் மூலம் 

நான் இளைஞன் இல்லை என்றோ

அல்லது

இளைஞர்களின் சீறும் அலைகளில்

நானும் ஒரு திவலை என்றோ

நீ எடுத்துக்கொள்ளலாம்.

இளைஞன் என்பது

ஒரு சிந்தனைப்புயல்.

அது வயதுகளின் கனத்தில் 

தொய்வதில்லை.

அது வயதுகளின் இலேசான

காக்காய் இறகுகளும் இல்லை.

"உன்னையே நீ அறிவாய்" என்று

அன்று முழக்கமிட்டவன் வயது

கி மு க்களில் குமிழியிட்டது.

நஞ்சுக்கோப்பைகள் 

அவனுக்கு

முற்றுப்புள்ளி வைத்த போதும்

அவன் கடல் அலைகள்

எல்லா இடத்திலும் இன்னமும்

கால்கள் நனைக்கின்றன.

உள்ளத்துள் அளைகின்றன.

சீற வேண்டிய தருணங்களை

தவற விட்டால்

மேற்கே படுக்கப்போகும் சூரியன்கள்

உன் மீது காறி உமிழ்ந்து விட்டுத்தான் போகும்.

எனவே

தமிழா!

சீறு.

உன் பழஞ்சுவடிகளில்

உன் எலும்பு மிச்சங்களும்

ரத்தச்சுவடுகளும்

சொல்லும் வரலாற்று வரிகள்

சாட்டை அடிகளாய்

கிளர்ந்து கிளர்ந்து 

தீ மூட்டுவதெல்லாம்

இந்த கிழக்குகளில் உன்

நெற்றிக்கண்களை 

நாற்று நடுவதற்குத்தான்.

சூழ்ச்சிகளின் புள்ளிகள் கூட‌

போலியான புழுதிப்புயல்களை

அள்ளி வீசலாம்.

அவையும் உன் கணக்கில் வரக்

காத்து இருக்கின்றன.

உன் மயக்கங்களை மோதி நொறுக்கு.

உண்மையின் இதயத்துள்ளும் 

ஏன் 

அதன் நுரையீரல் கல்லீரல் 

கொத்துக்களுக்குள்ளும்

உன் உயிர்ப்பை துடித்துக்காட்ட வேண்டும்.

எழு.தமிழா!

உன் எழுவாய் பயனிலை இலக்கணங்களே

உன் பீரங்கி வாய்கள்.

உமிழ்ந்தெழு.

பொய்மைப் புகைமூட்டங்கள்

சல்லி சல்லியாய்

பொடிந்து போகட்டும்.

சீறி எழு.

கணிப்பொறிகள் தீவுகள் அல்ல.

உன் பல கோடி வானங்கள் 

அதில் தான் படுத்துக்கிடக்கின்றன.

உன் அறிவுக்கூர்மையின்

பொறிகள் தெறிக்கட்டும்.

சீறி எழு தமிழா!

மண்ணாங்கட்டிகள் அல்ல நீ.

சிந்தனைப்புயல் 

எந்த மொட்டைவெளிகளிலிருந்தும்  கூட‌

சூல் கொள்ளட்டும்

சுழற்று உன் எண்ணச்சுழிகளை.

சீறி எழு தமிழா!

சீறி எழு!

______________________________________________

சொற்கீரன்

சனி, 30 மே, 2026

நெற்றியடி

 நெற்றியடி

____________________________________________


"என் மேல் உருண்டுவிழுகின்ற 

பாறாங்கல் அது"


வண்ணதாசன் அவர்களே...  

(முக நூல் ‍‍...31.05.2026)

அந்த சிரிப்பு அவரது சிரிப்பு அல்ல.

மானிடா! உன் விதியைப்பற்றி நினை!

என்று இளிக்கிறது இறைவம்!

அந்த முதியவர் நோய்மையே

அதன் இப்போதைய "காஸ்ட்யூம்"

இப்படியெல்லாம் 

விழுந்து நசுங்கிக்கூழாகத்தான்

ஆகிக்கொண்டிருக்கிறோம்

யுகங்களாக.

நோய்மை மட்டும் அல்ல எங்கோ எதிலோ 

தொற்றிக்கொண்டிருக்கிறது ஒரு ஆதிக்கவெறி.

வாழ்க்கையின் அர்த்தம் எப்போதோ

இப்படி சிதறிப்போய்த்தான் கிடக்கிறது.

கேட்டால் நாலைந்து யுகங்களை

சமஸ்கிருதத்தில்

"சாளவாய்" குழறி

அந்த‌

இடியாப்ப நெளியல்களாய்

சித்திரம் ஆக்குவார்கள்.

பார்த்தீர்களா? பார்த்தீர்களா? என்று

அந்த ஜேம்ஸ்வெப் க்ரேஃபிக்ஸ் 

குழம்பல் ஒளி இருளையும்

துணைக்கு அழைத்துக்கொள்வார்கள்.

ஏனெனில்

உலகத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் கூட‌

ஒரு பிள்ளையார் சுழியைப்

போட்டுக்கொண்டு தான்

அதன் மீது உட்கார்ந்திருக்கின்றன.

மேக்ஸ்முல்லர் உபயம் இது.

போகட்டும் 

அறியாமை அறிவுடைமை

விஞ்ஞானம் அஞ்ஞானம்

என்று 

பிரம்மத்துக்கு

பட்டம் விட்டுக்கொண்டிருப்பதில்

எந்தப்பயனும் இல்லை.

நான் தான் கடவுளை

ஸ்லோகத்தின் எச்சில் ஒலியில்

படைக்கின்றேன் என்று

அவர்கள் கூப்பாடு போட்டு\

தன் காலில் எல்லோரையும் 

மிதித்துக் கூளங்கள் ஆக்கினாலும்

இதோ எங்கள் தமிழ்சம்மட்டி அடி.

"ஜன்மாக்கள் கர்மாக்கள்" என்று

பீலா விட்டுக்கொண்டே

ஒரு மொட்டை விளையாட்டின்

உங்கள் "நபும்சக"த்தனங்களுக்கு 

எல்லாம் ஒரு நெற்றியடி இது.

"பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"

அவர்கள் கடவுள்களாக இருந்தாலும்

கீழே சாணிப்புழுக்களாக இருத்தாலும்

எங்கள் சம்மட்டி அடியில்

எல்லா இருட்டும் 

தூள் தூள் தூளே தான்.

________________________________________

சொற்கீரன்

வெள்ளி, 29 மே, 2026

விழியல்கள்

 


தூங்கிக்கொண்டிருப்பதே

நம் விழியல்கள் அல்லது

விடியல்கள்.

தூங்கிக்கொண்டு கனவு கண்டு கொண்டு

அந்தக்கனவிலும்

தூங்கிக்கொண்டு கனவு கண்டு கொண்டு

கனவுக்குள்..கனவுக்குள்..

கனவுக்குள்ளிருந்து கனவுக்குள்

ஒரு நாள் கருவுயிர்த்தோம்...

என்ன அது?

உருவுகள் எதுவும் இல்லா

அந்த உருவுகளில்

நம் கூட்டுப்புழுக்கள்

சிறகு விரியலுக்கு

விடியல் தேடும் வலியல்களில்...

________________________________________‍

சொற்கீரன்