ஞாயிறு, 22 மார்ச், 2026

அந்த "அரைமஞ்சள் சூரியனை"

 

அன்புக்குரிய வண்ணதாசன் அவர்களே


அந்த "அரைமஞ்சள் சூரியனை"ப் படித்தாக‌

வேண்டும் 

என்றொரு மோகமுள்ளைக்

குத்திவிட்டிருக்கிறீர்கள்.

அந்தப் புத்தகம் தேடி செல்வதே

எனது இப்போதைய "மிஷன்".

ஒன்று குறிப்பிட்டீர்கள்.

அந்த புத்தகத்து பாத்திரம் ஒன்றில்

ஒன்று நீங்கள் ஏற்கனவே 

அச்சிடப்பட்டிருக்கவேண்டும்

அல்லது

ஒவ்வொரு எழுத்துப்பிசிறாய்

உங்கள் சிந்தனை எறும்பு 

ஊர்ந்து ஊர்ந்து போய்

அந்த கற்கண்டின் "பொய் மான் கரடு"தனை

ருசித்து ஊறிப்போய் இருக்கவேண்டும்.

உயிரியல் பரிணாமத்தில்

இதயம் உருவாவதற்கு முன்னே

எழுத்துக்கள் துடிக்க ஆரம்பித்திருக்குமோ?

வாசிப்பு என்பது

அந்த சங்க காலப்புலவர்களின்

"மண்டை நிறைய வெண்சோறும் நறவும்" போன்ற‌

ருசி மிகுந்த தருணங்கள் தானோ?

ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களை 

அடுக்கிக்கொண்டு

சரக்கென்று ஒரு ஊசியை செருகினால்

அந்த ஒற்றை இதழின் 

வானவிளிம்புக்குள் 

அந்த தருணத்தின் காலத்துளியில்

என்னென்னத் துடிப்புகள் இழைந்திருக்கும்.

இந்த ஒரு நுண்ணிய கற்பனையின் 

ரத்னக்கம்பளத்தை

தன் நாவலில் அற்புதமாக்கிக்காட்டுவார்

தி ஜானகிராமன்.

உங்கள் இதயம் கோர்த்திருக்கும்

அந்த "அரைமஞ்சள் சூரியனோடு"

சில கழஞ்சு தங்கக்குழம்பு ஊற்றி

சொற்களை சுவைக்கலாம் என இருக்கிறேன்.

______________________________________________

சொற்கீரன்


சனி, 21 மார்ச், 2026

comment on RAMESH KANNAN's kavithai in his FB /20.03.26

 அருமை..அருமைமிகு ரமேஷ் கண்ணன்.


சிமினி விளக்கு தான்.

அது எங்கள் ஊர் 

தாமிரவருணி வாய்க்கால்

குமிழிகளோடு

"நடுமையத்தில்" நின்று கொண்டு

உயரத்தில் நீலமும் சிவப்புமாய்

சிறகடித்து "டொபுக்கென்று"நீருக்குள் விழுமே

அப்படியொரு அழகிய திகிலை எதிர்பார்த்து

எங்கள் வீட்டில்

வட்டாரமாய் அமர்ந்து சாப்பிடுவது

நினைவுக்கு வந்தது.

ஒரு சிறிய "சத்ய ஜித் ரேயின்" குறும்படம்

ஒன்று பார்த்த சிலிர்ப்பு உங்கள் வரிகளில்.

___________________________________

சொற்கீரன்

வெள்ளி, 20 மார்ச், 2026

....ஒரு மனிதாபிமானக்கவிதையை.

 

வண்ணதாசன் அவர்களின் 19.03.26ன் முகநூல் கவிதை

_________________________________________________________


அன்புள்ள வண்ணதாசன் அவர்களே.

..."என்று தோன்றுகிறது...."

இப்படி முடித்திருந்தீர்கள் அந்த கவிதை/கட்டுரையில்.

சரிந்து விழ இருந்த உங்களை

தடுத்து பிடித்துக்கொண்டு

முதுகை தடவி ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

கவிதைக்கு பேனா காகிதம் மை எல்லாம் அப்புறம்.

கவிதை நெஞ்சம் ஒன்று

பிழிந்து ஒரு கொத்து மழையை அல்லவா

அங்கே தூவியிருக்கிறது.

அந்த வெள்ளிமோதிரத்தில்

கருணையின் முத்தில்

அலைகள் ஆர்க்கும் நெஞ்சம் அங்கே

ஆரம்பித்திருக்கிறது

ஒரு மனிதாபிமானக்கவிதையை.

இல்லாத மோதிரமோ?

அல்லது 

இருக்க வேண்டிய மோதிரமோ?

கவிதைப் பொட்டலத்து

பொற்கிழி அது.

___________________________________________

சொற்கீரன்


அண்ணல் காந்தி அடிகள்!

 

அண்ணல் காந்தி அடிகள்!


ஒரு தூரிகைக்குச்சியே

கை கால் முளைத்து

குச்சி யூன்றி

வரைந்த அமைதியின் 

ஓவியமே

உலகத்துக்கோர் நிழல்!

________________________________

சொற்கீரன்

புதன், 18 மார்ச், 2026

ஜெயகாந்தன்.

மூடியை எடுத்து

இறுக மூடிக்கொண்டு

முடங்கிக்கொண்டது

அந்த பேனா.

அது அந்த இருட்டு யுகங்களின் பேனா.

இவன் 

உயிரெழுத்து அத்தனையும்

மூண்டெரியும்

நெருப்பெழுத்து.

கருப்பிடித்த நாளிலிருந்து

துருப்பிடித்துக்கிடந்த‌

சமுதாயம்

துலங்கித்தெரிந்த‌

தன் மனிதத்தை

உயிர்ப்பு கொண்டு

உயர்த்தித்தந்த 

மெய்யெழுத்துக்கள் அல்லவா

இவன் எழுத்து.

ஏனெனில்

இவன் ஜெயகாந்தன்.

__________________________________

சொற்கீரன்

செவ்வாய், 17 மார்ச், 2026

கண்டு கொள்ளமாட்டேன்.

 

நீயும் நானுமா?
___________________________________
எனக்கு வேண்டுமென்றால்
நீ
நரியை பரியாக்கிக்கொள்ளுவாய்.
நானும் ஆட்கொள்ளுவேன்.
நீ
சிந்தித்து
சிவலிங்கத்தை
சிலுவையாகவோ
போதிமரமாகவோ
உருவமற்றோ
மாற்றினால்
உன்னைக்கழுவேற்றுவார்கள்
நான்
கண்டு கொள்ளமாட்டேன்.
___________________________________
சொற்கீரன்

VANNADAASAN KAVITHAI/17.03.26

 

உடைந்த சிலேட்

_____________________________________

வண்ணதாசன் அவர்களே

அந்த உடைந்த கண்ணாடியில் 

தெரிந்த உங்கள் முகம்

உங்கள் உடைந்த சிலேட்டு

காட்டிய செந்தமிழ் உருவத்தின் 

சரித்திரமாக தெரிவது தானே

ஒரு உன்னத கவிதை வடிவம்.

உங்கள் கவிதைகளில்

முற்றுப்புள்ளிகளில் தான்

கவிதையின் அக்கினி கொழுந்து வீசிக்

காட்டும் முருகியல் வெளிப்படுகிறது.

அருமை வரிகள் அவை.

இப்படி ஒரு அழகியலில்

நம் தேச வறுமைக்கந்தலை

அழகாக காட்டியிருக்கிறார்

கி ரா அவர்கள்

வேட்டி எனும் சிறுகதையில்!

வேட்டியின் அந்தக்கிழிசல்

நம் தேசப்படம் வறுமையில் கிழிந்து

காட்டும் சரித்திரம் என்பதை

சொல்லாமல் சொல்லியிருப்பார்

கி ரா அவர்கள்.

இலக்கிய மேதைகளுக்கு

எழுதும் வரிகள்

அவர்கள் மடியில் புரளும்

பொம்ரேனியன்கள் தான்

அல்லது

உறுமும் சிங்கங்கள் தான்.

______________________________________

சொற்கீரன்