"ஈறு"கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் இவன்.
"மாறா மாறன்"
கவிதைகளின் மாறன்.
ஈறு தெரிய சிரிப்பவரின்
(கவிஞர் வண்ணதாசன்)
சிரிப்பில்
ஊறும் ஊறும்
கோடிக்கவிதை இன்பம்.
நீடூழி நீடூழி வாழ்க இவன்!!!
_______________________________
சொற்கீரன்
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
"ஈறு"கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் இவன்.
"மாறா மாறன்"
கவிதைகளின் மாறன்.
ஈறு தெரிய சிரிப்பவரின்
(கவிஞர் வண்ணதாசன்)
சிரிப்பில்
ஊறும் ஊறும்
கோடிக்கவிதை இன்பம்.
நீடூழி நீடூழி வாழ்க இவன்!!!
_______________________________
சொற்கீரன்
"உத்தமபுத்திரன்"கள் போல்
கவிதைக்கவசம்
அணிந்து கொண்ட
இரட்டையர்கள் தான்.
இவர்கள்
வில்லன்களும் அல்ல.
கதாநாயகர்களும் அல்ல.
இருவருக்கும்
பராம்ப்டர் ஒருவரே தான்.
அது
சொற்பிரளயம்.
சோற்சுவாசத்தின்
வண்ண வாசல்களின்
எந்த வாசல் வழியாகவும் வந்து
இந்த கற்ப்னைப்பிரபஞ்சத்தின்
அஞ்சறைப்பெட்டியைத்திறந்து
கனவு மசாலாக்களை
தெளித்து விடுவார்கள்.
அதில்
கல் மட்டும் அல்ல புல்லும்
சு"வாசிக்கும்"
___________________________________________
சொற்கீரன்
வண்ணதாசன் அவர்கள்
எட்டிப்பார்த்த
கண்ணாடி சன்னலில்
கவிதையாய்
துளிர்த்திருந்தார்
பழனி பாரதி.
வளையல் பூச்சிகள் கூட
வளையல் ஓசைகளை
க்ளுக் என்று
காட்டியிருக்குமோ?
கவிதைக்கண்ணாடி
தூளாய் நொறுங்கி
கலைடோஸ் சித்திரங்களில்
மனம் நொறுங்கிய
மழை ஊசிகளை
நனைய விட்டிருந்தது.
_________________________________
சொற்கீரன்.
ஆயுள் கடத்தும் விஞ்ஞானிகள்
BIO HACKING..........
மறந்து போ
மரத்துப் போ
சுருக்கமாய்
மதம் என்றொரு அபினி
கண்டு கொண்டான் மனிதன்.
பண்டை சித்தர்கள்
மூலிகைகளில்
மருந்து களில்
போதையில்
Father of biohacking hints that highly-addictive drug could be the next longevity breakthrough
"என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"
________________________________________________
"என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"
அந்த உருமியில்
இன்னும் சுருண்டு சுருண்டு
அலை ததும்பிக்கொண்டிருக்கிறார்
அந்த "கண்மணி ராசா" அவர்கள்!
எங்கள் கல்லிடைக்குறிச்சியின்
அந்த "வேம்படியம்மன்" கொடையின்
பந்தல் அடியின் வட்ட வட்ட சூரிய ஒளியின்
காசு மழையில் நனைத்து
அந்த உருமியோடு
சுருதி சேர்த்து நின்றிருக்கிறேன்.
அது இசையா?
இழைவா?
ஓங்காரங்களின் அந்த மகா ஓங்காரத்தை
உரித்துக்காட்ட
இமயப்பனி உருகி
அந்த சிவன் இன்னும்
கருதரித்து வரவில்லை.
அந்த உருமிக்குள் தான்
டி என் ஏ ..ஆர் என் ஏக்கள் எல்லாம்
சங்கிலி கோர்த்துக்கிடகின்றன.
எழுபத்தெட்டு மேள்கர்த்தாக்கள்
இடுப்பு வலி யெடுத்துக்கிடக்கட்டுமே
இந்த உருமியே
மூச்சுகளின் உருவம் எல்லாம் காட்டும்
பேருருவம்.
________________________________________
சொற்கீரன்.
கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது
Scientists solve 90-year-old mystery in quantum physics
"பொரு விளங்கா"லட்டு போன்ற உருண்டை எங்கள் திருனெல்வேலிச் சீமையிலே ஒரு சுவையான "மிட்டாய்" இந்த குவாண்டம் அப்படித்தான் அதன் பொரு(ள்)விளங்காமலே கூட இனிக்கிறது திடுக்கிடும் சுவைகளுடன்.பொருள் விளங்கா அதன் சுவை மிக மிக அருமையானது.பாருங்கள் 90 வருடமாக புரியாமலே இருந்த புதிர் இப்போது தான் அவிழ்ந்து "தீர்வுகளை"க்காட்டுகிறது. அது என்ன? பாருங்கள் மேற்கண்ட அந்த லிங்கில்.(மிக்க நன்றியுடன்)...
எண்ணிக்கொண்டே
எண்பதாம் ஆண்டும்
வந்து விட்டோம்.
கனவும் ஏக்கமும் காட்டின
இன்னும் நூறு நூறு
மைல்க்கல் தூரமென்று.
துன்பம் இன்பம்
விரவிக்கிடந்தோம்.
ஆயினும்
எப்போதும் அது
இனிமையே!
என்றும் அது
இனிமையே!
நம் சுதந்திரம்!
_______________________________
சொற்கீரன்