செவ்வாய், 30 மே, 2023

அகழ்நானூறு 42.

 



அகழ்நானூறு 42.
உரை இன் விளக்கப் படமாக இருக்கக்கூடும்

அகழ்நானூறு 43

 



அகழ்நானூறு 43


டிக்கெட் ஸ்டப் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அகழ்நானூறு 44

 

அகழ்நானூறு  44

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________சொற்கீரன்


குடந்தை செவிய குறுமுயல் தழீஇய‌

சிலம்பி சிறையினம் சில் ஒலி கூர‌

பளிக்கின் அன்ன படர்நிழல் முன்றில்

புல்வாய் மிதிபடு சீறடி தோறும் அவள்

சிற்றடி ஒற்றிய பொறிபடு எல்லின் 

வலைக்கண் வடிக்கும் வயமான் வெற்ப!

விசைத்த வில்லர் கொடுவரி உழுத 

கொல்சுரம் இறந்தும் கொன்னே சிவப்போள்

கள்ள நகையும் களிபிறங்கு கலித்த‌

கல்பொரு அருவி மணிப்பெயல் மாய்ந்து

உவக்கும் ஒருபால் அத்தம் சேர‌

ஊர்ந்தனை என்கொல்?

ஞாயிறு, 7 மே, 2023

அருமைத்தோழர் எழிலன்.






அருமைத்தோழர் எழிலன்.
___________________________________செங்கீரன்


ராமன் எத்தனை ராமனடி என‌
பாடல்கள் வந்தன என்று
யாவரும் அறிவார்.
இந்த "செங்கொடி"யேந்திய 
ராமனை நாமே அறிவோம்.
இவர் அம்புகள் சுரண்டல் அரக்கனை
விடுவதாயில்லை.
துரத்திக்க்கொண்டே இருந்தன.


தெப்பக்குளத்திலிருந்து அந்த‌
செங்கடல் புறப்பட்டது.
........................
தூள் கிளப்பிய பேரணியால்
மாசி வீதிகள் 
தூசி வீதிகள் ஆயின.
...........................
கோடிக்கால் பூதம் என‌
கிளம்பிய ஊர்வத்தால் 
வைகை கல்பாலம்
கதிரியக்கத்தின் ஒரு
கல்பாக்கம் ஆனது 
......................

மறு நாள இந்தப்பேரணிக்கவிதை
தீக்கதிரில் வந்தது.
ராமன் அவர்கள் என்னிடம் வந்து
"செங்கீரன்"கவிதை அருமை
அந்த மாசிவீதி..தூசிவீதி தூள்!
என்று அந்த பளிங்குச் சிரிப்போடு 
சொல்லிக்கொண்டே போனார்.
அந்த தோழனின் உள்ளம் 
எப்போதுமே
ஒரு செவ்வான விடிவானம் தான்.
இப்படி பரிமாறிக்கொள்ள‌
இந்த இடைவெளிக்குள்
ஒரு மரணமா
எழுது என்று காகிதம் நீட்டுவது?
இந்த உணர்வே என்னை
ரம்பமாய் அறுக்கிறது.
"செவ்வணக்கம்"என்று
விடைப்பாக சல்யூட் 
வைக்க முடியவில்லை.  









அகழ்நானூறு 41"

 அகழ்நானூறு 41

________________________________________________சொற்கீரன்



பொருது இறங்கு வன்பெயல் 

கழுவிய வானின் வறள் மஞ்சின்

வாலா வெண்மழை புல்லென் நிரவிய‌

கள்ளி நனந்தலை கால் இடற‌

கடுங்கண் பரலிய வெட்சுரம் இறந்து

முள்படர் இலவம் செம்பூ மறைப்ப‌

மண்ணிய நிழலின் நனைதரு குளியல்

நீந்திய ஆற்றின் ஒரு சிறை ஆங்கே

பொறி மாவின் இரலை திரிமருப்பின்

கவின் மிகக்கிளறி அவள் நகை புண்செய‌

கலிமா எறிஉளைச் செலவின் கடுகி

புதல் ஒளிச்சிறந்த வைகறை போன்ம்

விரிதரு வெள்ளிய அகல்வான காண்பின்

அதுவும் அவள் இள முறுவல் மின்னி வரிய‌

நோதல் காழ்த்து ஊழ் ஊழ் உறுத்த 

அஞ்சு வரு நீளிடை அருஞ்சுரம் பெயர்ந்தான்.


______________________________________________‍‍‍

 இடைக்காடனார் பாடல் அகம்..139

(inspiration)

அகழ்நானூறு 41

  அகழ்நானூறு 41

________________________________________________சொற்கீரன்

(பொழிப்புரையுடன்)


பொருது இறங்கு வன்பெயல் 

கழுவிய வானின் வறள் மஞ்சின்

வாலா வெண்மழை புல்லென் நிரவிய‌

கள்ளி நனந்தலை கால் இடற‌

கடுங்கண் பரலிய வெட்சுரம் இறந்து

முள்படர் இலவம் செம்பூ மறைப்ப‌

மண்ணிய நிழலின் நனைதரு குளியல்

நீந்திய ஆற்றின் ஒரு சிறை ஆங்கே

பொறி மாவின் இரலை திரிமருப்பின்

கவின் மிகக்கிளறி அவள் நகை புண்செய‌

கலிமா எறிஉளைச் செலவின் கடுகி

புதல் ஒளிச்சிறந்த வைகறை போன்ம்

விரிதரு வெள்ளிய அகல்வான் காண்பின்

அதுவும் அவள் இள முறுவல் மின்னி வரிய‌

நோதல் காழ்த்து ஊழ் ஊழ் உறுத்த 

அஞ்சு வரு நீளிடை அருஞ்சுரம் பெயர்ந்தான்.


_________________________________________




பொழிப்புரை

---------------------------------------------------சொற்கீரன்  


விண்ணிலிருந்து பெய்யும் மழை நிலத்தில் மோதி ஒரு பெருமழையாய் மாறி மண்ணைக் கழுவிய பின் வானம் வெளிறிய நிலையில் மேகங்களும் தூய்மையற்று வெற்றுத்தூரலை பெய்யும்.அது புல்லிய அதாவது சிறு ஒலிகளாய்ப் பரவும்.அந்த பாழிடம் கள்ளிகளால் மண்டிக் கிடக்கும்முள் படர்ந்த இலவமரத்து செம்பூக்களின் மறைப்பு நிழல் குளிப்பாட்டிய குளியல் நனையலில் களித்து அந்த காட்டு வழியை கடக்கிறான்.அப்போது அங்கொரு பக்கம் ஒரு புள்ளிமான் திருகிய கொம்புகளுடன் காட்சி தரும் அதன் இணை சச் மானுடன் அழகிய கிளர்ச்சியூட்டும் ஒரு காட்சியைக் காண்கிறான்.அவள் காதலியின் (தலைவி) இனிய புன்சிரிப்பு தான் அது.ஆனால் அது பிரிவாற்றாமை எனும் நோயால் அவன் உள்ளத்தை புண்படுத்துகிறது.தான் செலுத்தும் குதிரையின் பிடறி சிலிர்க்க விரைந்துசெல்கிறான்.அவன் அவளை நெருங்கி செல்ல செல்ல ஒரு ஒளிமிகுந்த வைகறைக் காட்சியால் புல்லும் ஒளிபூத்து சிரிப்பது போல் காண்கிறான்.அதில் விரியும் அகன்ற வெளியாய் காட்சி தரும் வானமும் கூட அவள் இளமை பொங்கும் புன்முறுவல் வரிகாட்டும்.அது மீண்டும் மீண்டும் உரம் பெற்று அவன் உள்ளத்தில் உறுத்தல் செய்து துன்புறுத்தும்.அந்த உறுத்துதலின் உந்துதலில் அச்சம் தரும் அந்த நீண்ட காட்டுவழியையும் அவன் பெயர்த்து முன் சென்றான்.   


---------------------------------------------------------------------------------------------------------------------------

இடைக்காடனார் எனும் சிறந்த சங்கப்புலவர் அகநானூற்றின் 139 ஆம் பாடலை வெகு நுட்பத்துடனும் அழகுடனும் இயற்றியுள்ளார். அதில்  "வாலா வெண்மழை"எனும் சொற்றொடரை அவர்   ஆண்ட விதம் நோக்கி நோக்க மகிழத்  தக்கது.பொருள் தேடிச்   செல்லும் தலைவன் அந்த காட்டுவழியில் தலைவியின் பிரிவாற்றாமையால் நெஞ்சுருகியாதையே இங்கு பாடல் ஆக்கியுள்ளேன்.  சங்கப்பாடல்களில் இத்தகைய செறிவு மிக்க வரிகளை நான் அகழ்ந்த்டுத்து "அகழ்நானூறு " என்ற தலைப்பில் 40 பாடல்கள் வரை நான் சங்கநடைசெய்யுட் கவிதைகளாக மின் இதழ்களில் பதிவு இட்டுள்ளேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.


  


சனி, 6 மே, 2023

"ஊர்வசி ஷோபா"




"ஊர்வசி ஷோபா"

___________________________________ருத்ரா



70 களில் திரைப்படங்கள்

கூர்மையான கதைகளால்  

பட்டை தீட்டிக்கொண்டதில்

சினிமா எனும் அந்த 

ஜினிமாக்காடுகாடுகளில்

நடிப்பின் வைரமாக 

கிடைத்தவரே

"ஷோபா"

காளி எனும் முரட்டு அண்ணனின்

பிஞ்சுச்சிரிப்பும் 

நுங்கின் மென்மையின் 

பூரித்த கண்களும் கொண்டு

வலம் வந்த தங்கையாக 

வந்தார் ஷோபா.

ரஜினி காந்தின் 

கரடு முரடு பாத்திரம்

அவள் புன்முறுவலின் முன்

குழைந்து தவித்தது.

ஒரு குழந்தைத்தனம் நிறைந்த முகம்

காதலின் மின்னல் பூசிய வானமாக‌

அண்ணன் முன் மலர்ந்து நின்ற நடிப்பு

நம்மால் மறக்க முடியாதது.

அந்த அதிரடி அண்ணன் ரஜினிகாந்த்

அவள் முன் குழைந்து அன்பின் பூவாய்

சிலிர்த்தது அந்த நடிப்புக்கு

ஒரு புதிய பரிமாணம் ஆகும்.

"முள்ளும் மலரும்"

அள்ளும் நம் நெஞ்சை ஷோபாவின் நடிப்பால். 

3 ஆம் சார்லஸின் முடிசூட்டு விழா.

 



3 ஆம் சார்லஸின் முடிசூட்டு விழா.

______________________________________ருத்ரா



மியூசியத்தில் இருந்த 

மன்னராட்சியின் 

கிரீடம் இன்று

தூசி தட்டப்படுகிறது.


_______________________________________

வெள்ளி, 5 மே, 2023

(கண்ணாடிப் பிரபஞ்சம்.)

 



மிர்ரர் யுனிவர்ஸ்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________--------------------                இபியெஸ்

(கண்ணாடிப் பிரபஞ்சம்.)

அந்த ஒற்றைப்புள்ளியை

வானில்

ரொம்பநேரமாய் உற்றுப்பார்த்தேன்.

புதன், 3 மே, 2023

views on 02.05.2023

 https://www.blogger.com/blog/stats/week/2789668714818661908

சுஜாதா

 




சுஜாதா

.................................................ருத்ரா.

தமிழ் எழுத்துக்குள்

பூலியன் அல்ஜீப்ராவின்

பூதம் காட்டி

புல்லரிக்க வைத்தவன்.

கணினிகள் இங்கு

கண்விழிக்காத போதே

இவன் சிறுகதைகள் நமக்கு

மடிக்கணினிகளாகிப் போயின.

மடி வாசனையற்றதாய்

அக்கிரஹாத்துக் காற்றையும்

அலசித்தந்தவன்  இவன்.

இவன் படைப்பில் அந்த

ஊஞ்சல் எனும் சிறுகதையின்

கிரீச் ஒலிகள்

ஆயிரம் ஞானபீடங்களை

தனக்குள் இன்னும்

அடைகாத்துக் கொண்டிருக்கின்றன.

...............................................................


செவ்வாய், 2 மே, 2023

தடம் தெரிகிறது.

 




மே தினம் 

‍‍‍‍‍____________________________செங்கீரன்


அந்த கண்ணீரின் தடம் தெரிகிறது.

துப்பாக்கி எச்சில்கள் 

ரத்தமாய் பெருகிய ஆற்றின்

ஆழமும் தெரிகிறது.

அந்த வரலாறு எப்படி

வெறும் பஞ்சப்படிக்கு எழும் 

கோஷங்களாய் மட்டும்

மெலிந்து போனது?

சுரண்டல் அரக்கன் நவீனமாய்

கணினி வழியே

மொத்த மானிடத்தின்

மஞ்சா சோத்தையே

விழுங்கிக்கொண்டிருக்கிறதே.

சந்தைப்பொருளாதாரத்தில்

எப்படி அந்த 

"தாஸ் கேபிடலின்"உயிர் நரம்பு

இற்று வீழ்ந்தது?

அன்று உலகைப் புரட்டிப்போட்டு

மக்கள் பொருளாதாரத்துக்கு

பாடம் எடுத்தவர்கள்

இனம் தெரியாத ஒரு ஆதிக்கப்பாய்சலுக்கு

சிலுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தந்த மண்ணின்

இன எழுச்சிகளின் ரத்தம் சிந்தி

எப்படி ஓடினால் என்ன?

நம் கையில் 

அணு குண்டுகளும் 

பெட்ரோல் பணங்களும் 

குவிந்தால் போதும் என்ற‌

சித்தாந்ததை அல்லவா

முந்தி விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் ஜனநாயக்கக்

குரல்வளைகள் முறிக்கப்பட்டபோதும்

உலக வர்த்தகம் எனும்

சூத்திரக்கயிறு கொண்டு

பம்பரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்களே.

அதனால் கார்ப்பரேட்டுகளின் 

பன்னிரெண்டு மணி நேர வெலை

எனும் மத்தாப்பு வெளிச்சங்கள்

அந்த செஞ்சூரியனை மறைக்கப்பார்க்கின்றன.

செயற்கை அறிவு 

இயற்கை மனிதனின்

உழைப்பு வேர்வையின் உப்புக்கரித்த கடலை...

அந்த சமுதாய வெள்ளத்தை...

க்யூபிட்களாக‌

மாற்றி விடும் முன்

ஒரு மாற்றத்தின் சீற்றம் கொள் தோழா!

சீற்றம் கொள்!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________________