வெள்ளி, 5 ஜூலை, 2024

மௌவல்க்கு கவிதைகள்

 மௌவல்க்கு கவிதைகள்

___________________________________‍‍05.07.2024




எனக்கு மிகவும் பிடித்த‌

இனிப்பான பழமொழி

"சீ சீ இந்த பழம் புளிக்கும்"

_____________________________

கல்லாடன்



நீ என்னைத்தான் 

நினைக்கிறாய் என்று

நினைக்க 

எனக்கு சில நிமிடங்கள் போதும்.

என்னை மறந்து விட‌

உனக்கு

ஒரு நொடி கூட தேவையில்லை

என்பதை 

நான் விழுங்க எனக்கு

பல நூறு யுகங்கள் 

வேண்டும்.


________________________________________

கல்லாலன்.


தர்ப்பணம்

_______________________________


நீ என்னை தமிழில்

கூப்பிட மாட்டாயா என்று தான்

மகனே

ஆண்டு தோறும்

நான் வருகிறேன்.

இப்போதும் புரியாத மொழியில்

தர்ப்பைப்புல்லை வைத்து

மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறாயே.

காக்கை கத்திவிட்டு

பறந்து விட்டது.


______________________________________

கல்லாலன்.


காதல் செய்வதை

மழைக்கு சொல்ல முடிகிறது.

குருவி கிளிகளிடம்

பகிர்ந்து கொள்ள முடிகிறது.

பட்டாம்பூச்சி சிறகுகளிடமிருந்தும்

பட்டா வாங்கி

வைத்துக்கொள்ள முடிகிறது.

அவளிடம்

ஐ லவ் யூ சொல்ல‌

எப்போது செல்லலாம் என்பதை

சொல்லும் 

சோதிடரைத்தான் இன்னும்

காண முடியவில்ல.


________________________________________________

கல்லாலன்.



ஹைக்கூ


மூன்று வரிக்குள் 

சல்லாத்துணிக்குள்

மண் தின்ன புறப்பட்டது.

___________________________

கல்லாலன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக