சனி, 27 ஜூலை, 2024

விழி




ஆமாம்

அவள் வீசிய விழித்தூண்டிலில்

நான் மாட்டிக்கொண்டு தான் 

இருக்கிறேன்.

துடி துடித்துக்கொண்டு தான்

இருக்கிறேன்.

இதிலிருந்து விடுபட்டு

அவள் புன்முறுவல்களால்

பூசிய கனவுகளை மீண்டும்

நான் உடம்பெல்லாம் 

அலகு குத்திக்கொள்ள வேண்டுமா?

இல்லை

கைபேசியில் அவளிடமிருந்து 

நான் கேட்க விழைகின்ற அந்த‌

சொல்லுக்கு

என்னை முழுதும் கரையான் புற்றுகளால்

மூடிக்கொண்டு

தவம் கிடக்க வேண்டுமா?

துடித்துக்கொண்டே இருந்தால் போதும்..

இந்த துன்பத்தின் 

ஒரு பரிமாணம் மட்டும் போதுமே..

தூண்டில் வீசப்பட்டவனை விட‌

தூண்டில் வீசிய அந்த கண்களை

வி ஆர் கேமிராவில்

நானும் பார்த்துக்கொண்டு தான்

இருக்கிறேன்.

இந்த துடிப்புகளோடு சங்கமிக்க‌

அந்த துடிப்புகளும்

என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை

பார்த்து விட்டேன்.

அப்புறம் என்ன?

ஓ காந்தப்பார்வைகளே!

வானம் முழுதும்

விழிகளை நிரப்பி

தூண்டில் முள் மழை பெய்தாலும்

துடிக்கக்காத்திருக்கிறேன்.


________________________________________________‍‍‍‍‍

எப்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக