புதன், 17 ஜூலை, 2024

முதல் குரல்

 

முதல் குரல்

______________________________________‍



ஒரு தாலாட்டு கேட்கிறது.

தொட்டில் இல்லை.

தாய் இல்லை.

குழந்தை இல்லை.

ஆயினும் 

ஆராரோ...கேட்கிறது.

எல்லா பச்சைக்குழந்தைகளும்

பிஞ்சு செப்பு வாயில்

மைனாக்குஞ்சுகளின் அலகுகள் போல‌

பிளந்து பிளந்து

குரல் கொடுத்தன.

கோவிலில் சிலைகள் எல்லாம்

உருகி வழிந்தன.

படைப்பின் ஒலிப்பிஞ்சுகளில்

இந்த உலகம் அதோ

வைக்கோல் வேய்ந்த‌

துணிவிரிப்பில்

அந்த குரலைக்கேட்டு

திடுக்கிட்டு விழித்தது.

விரல்கள் சின்னதாய் விரிந்தன.

சூரியன்கள் அதில்

பந்து விளையாட‌

முதல் புன்னகையில்

பனிப்பாளங்கள் நீர்ப்பளிங்கில்

பிம்பங்கள் காட்டின.

வானம் முகம் காட்டி சொன்னது.

அன்பே மலர்ந்திடு.

விரிந்திடு.


_________________________________________________

கல்லாடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக