சனி, 29 ஜூலை, 2017

தெருவெல்லாம் ஜி.எஸ்.டி


தெருவெல்லாம் ஜி.எஸ்.டி
_____________________________‍‍‍‍‍__________________ருத்ரா

அந்த தெருவில்
ஒருவர் நடந்து கொண்டிருந்தார்.
திடீரென்று
மூணு சிங்க முத்திரை பதித்த
ஜீப் ஒன்று
அவரை வழி மறித்தது.
சி.ஜி.எஸ்.டி
எஸ்.ஜி.எஸ்.டி
எல்லாம் சேர்த்து
25 ரூபாய் கட்டவேண்டும் நீங்கள்
என்றனர்
ஜீப் அதிகாரிகள்..

"எதற்கு சார்?.." என்றார்
அந்த பாதசாரி.

"உங்கள் பேர் தானே
"தக்காளி" ராமசாமி?"

"ஆம்"..

"அந்த தக்காளிக்குத்தான் ஜி.எஸ்.டி."

"அது நான் ஏதோ ஒரு நாடகத்தில்
நடித்ததற்கு கொடுத்த பட்டம்  சார்"

"அப்படியானால் இவரிடம்
கேளிக்கை வரியாக‌
இன்னும் ஒரு செட் ஜி.எஸ்.டி
கலெக்ட் பண்ணுங்கள்"

பாதசாரி மயக்கமடைந்து விழுந்தார்.

____________________________________________________

நண்பனே...நண்பனே...நண்பனே..



நண்பனே...நண்பனே...நண்பனே..
==============================================ருத்ரா

மேலே கண்ட வரிகளில்
"மூச்சிறைத்து மீண்டும் மூச்சிறைத்து "
வரும் இந்த இசைவரிகளில்
எனக்கு தெரிவது
இந்திய மக்கள் இயக்கத்தின்
அந்த புயல் மூச்சுகளின்
இ.சி.ஜி வரிகள் தான்.
ஆம்! நண்பனே!
உன் நுரையீரல் இடுக்குகளில்
காஷ்மீரிலிருந்து
கன்யாமுகுமரி வரை
எதிரொலிக்கிறது.
பாட்டாளிகளின் வேர்வை
சிந்து கங்கை மற்றும்
நம் அருகே சலசலக்கும்
சிந்து பூந்துறை வரை
துளித்துளியாய் பெருகுகிறது.
தன் வேர்வையையே பருகி
தாகம் தீர்த்து
தன் பசியிலேயே
அடுப்பு வைத்து உலை மூட்டிக்கொள்ளும்
உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதக்குரல்
அணுக்கதிர் விரிக்கிறது.
நண்பனே...நண்பனே...நண்பனே..
அது கனவு இல்லை.
ஆம்..அது கனல்!
இந்திய உறக்கத்தின்
மதம் கனத்த இமை மூட்டங்களை
உரித்து எழுப்பும்
உயிர் வெப்பம் அது.
உன் பயணம் வெற்றி பெற‌
எப்போதும் என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ருத்ரா இ.பரமசிவன்

(நண்பனுக்கு ஒரு கவிதை)

செவ்வாய், 25 ஜூலை, 2017

நான் ஒரு பிராமணன்?

நான் ஒரு பிராமணன்?
=========================================ருத்ரா

ஆம்.
நானும் ஒரு பிராமணன் தான்.
உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை.
பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை.
பூணூல் போடவில்லை.
கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம்
எனக்கு உண்டு.
கோவில்களில்
யாகம் நடத்தி
அதி ருத்ர ஹோமங்களுக்காக‌
ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி
பூர்ண ஆகுதிக்கு
அந்த நீண்ட மர அகப்பையில்
எல்லாவற்றையும்
பொசுக்கப்போகிறேன் என்று
அடையாளமாய்
சில தானியங்களையும்
தனங்களையும்
தீயின் நாக்குகளுக்கு
கொடுக்க வில்லை தான்.
ஆனாலும் நான் பிராமணன் தான்.
பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான்.
பிணங்களைச் சுடுகிறவன் நான்.
ஆனாலும் நானும் ஒரு பிராமணன் தான்.
மும்மலங்களை கழுவுவதற்கு முன்
நான்காவது ஐந்தாவது ஆறாவது...
இன்னும் இன்னும்
மலங்களை அள்ளி சுத்தப்படுத்துபவன் நான்.
ஆனாலும் நானும் பிராமணன் தான்.

பிராமணத்துவம் என்பது
எல்லா உயிர்களிடமும்
எல்லா கல் மண் கட்டைகளிடமும்
தன் பிராணத்தைக் கரைத்து ஊற்றி
பிரமன் எனும் அந்த சூன்யனையும்
துரத்திப்பிடித்து
அவன் வாய்க்குள்ளும்
உன் பிராணனச்செலுத்தி
அவனை நீயாகவும்
உன்னை அவனாகவும் உணர்வது.
சமம் ஆதி எனும்
சமாதியை
கல் மண் புழு பூச்சி மனுஷன்
ஆகிய எல்லாவற்றுள்ளும் (ஆதி)
சமம் அடைவதே ஆகும்.
சமம் ஆப்தம் என்று
நிறை குடம் ஆக இருப்பதாய்
நாம் இந்த மானிடத்தைப்பார்ப்போமே!
நம் ஒன்பது ஓட்டைகளின்
உவமானத்தை கொள்ளிக்குடத்தில்
நீர் "ஒழுக" காட்டியபோதும்
"ஒழுக்கம்" இன்னும் நம்மிடம்
விழுப்பம் பெறவில்லையே!


இதை அடைந்த பிராமணன்
ஒருவர் கூட இல்லை.
ஏன்?
பூமியில் அவதரிக்கும் பிரமன் கூட‌
இந்த சமாதியை அடைய இயலாது.
ஏனெனில்
அவன் தானே இந்த சமாதி.
சமாதிக்குள் சமாதியை தேடுவது
விதர்க்கம் ஆகும் குதர்க்கம் ஆகும்.
ஆம் முரண்பாடுகளை
சூத்திரபடுத்தியிருக்கிறார்கள்
நமக்கு முன் வந்தவர்கள்.
ஒவ்வொரு தீக்குச்சியாய் கொளுத்துகிறார்கள்.
எரிந்ததும் அணைந்து விடுகிற‌
அந்த மின்மினிபூச்சிகளை
பிடித்துப்பார்ப்போமா?

அதஹ யோகாநுசாசனம்.

யோகம் சித்த விருத்தி நிரோதஹ‌

ததா த்ரஷ்டும் ஸ்வரூபே அவஸ்தானம்

விருத்தி ஸாரூப்ய மிதரத்ர

விருத்தயம் பஞ்சதயம க்லிஷ்டா(அ)க்லிஷ்டா

ப்ராமண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌

ப்ரத்யக்ஷானு மானாகமா ப்ரமாணானி

விபர்யயோ மித்யாக்ஞானமதத் ரூபப்ரதிஷ்டம்

சப்தக்ஞானானுபாதீ வஸ்து சூன்யோ விகல்ப‌

அபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா

அனா பூதவிஷயா(அ) ஸம்ப்ரோமோஷஹ ஸ்ம்ருதி

யோகம் என்றால்
சித்த விருத்தி நிரோதம் என்றும்
அந்த விருத்தி அஞ்சு வகைப்படும் என்றும்
அவை
ப்ராமண வ்பர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌
என்றும்
அவற்றின் முகங்கள்  இவை என்றும்
அடுக்குகிறார்
இவை அந்த பொருளில்லாத பொருளுக்கு
பொய்மெய்ப்பொருளின்
அல்லது
"ஏதோ ஒன்றான பொருண்மை"யின்
(அப்சொல்யூடிஸம்)
முகமூடிகளை
ஒவ்வொன்றாய் கழற்றி எறிகிறார் பதஞ்சலி!
சமாதி...சாதனா...விபூதி...கைவல்யம்

சாதனா என்பது
சமாதி அடைவதற்கான வினைப்பாடுகள்.
விபூதி என்பது
முன்சொன்னவற்றின் பலன்கள் எனும் சித்திகள்
கைவல்யம் என்பதே விடுதலை.
"கேவலம்" என்ற தூயசொல் நம்மிடம்
எப்படி கேவலப்படுத்தப்படுகிறது.
அந்த பிரமம் இன்னும் அவமானப்பட்டதாய்
அலட்டிக்கொள்ளவில்லை.
(இது) "மாத்திரம் தான் அல்லது மட்டும் தான்"
என்ற அர்த்த உள்ள சொல் அனர்த்தம்
ஆகியிருப்பதே
நம் தத்துவ சிந்தனைகளின் தற்போதய சித்திரம்!

எதிலிருந்து எதன் விடுதலை?
புருஷத்தை பற்றியிருக்கும் ப்ரகிருதியிலிருந்து
புருஷமே விடுதலை.
இதுவே "அப்சொல்யூட்"முனையம்.
சூத்திரங்கள் புரிந்தனவா?

இதைப்பாருங்கள்
இதுவும் ஒரு சூத்திரமே!


"எஸ்
இஸ் ஈக்குவல் டு ஹெச் க்ராஸ்
டிவைடெட் பை
2 எம் ஐ
மல்டிப்லைடு பை ஹோல் இன் ப்ரேக்கெட்
ப்சை டு தி பவர் ஆஃப் ஸ்டார்
இண்டு
இன்வெர்டெட் ட்ரையாங்கிள்
ப்ஸை மைனஸ்
ப்ஸை இன்வெர்டெட் ட்ரையாங்கிள்
ப்ஸை டு தி பவர் ஆஃப் ஸ்டார்"

இது உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

இது "ஹெய்ஸன்பர்க் அன்செர்டன்டி ப்ரின்சிபிள்"படி
எஸ் எனும் ப்ராபலிடி ஸ்ட்ரீம் டென்சிடிக்கு
குவாண்டம் மெகானிக்ஸ் கொடுக்கும் சூத்திரம்.

இந்த சூத்திரங்கள் எல்லாம்
சூத்திரன்களுக்கு புரியும்போது
எந்த சூத்திரமும் எல்லா சூத்திரன்களுக்கும்
புரிந்து விடுமே
எனவே பதஞ்சலியையும்
இப்படி பல்லைப்பிடித்துப் பார்த்தால்
ஒன்றும் குடிமுழுகிப்போவதில்லை.

இருந்தாலும்
பதஞ்சலி மன ஆகாயத்தையே
அக்கு வேறு ஆணி வேறு
பிரித்துப்போட்டிருக்கிறார்.
மனத்தையே பூராவும் தோண்டியெடுத்து
அந்த புழுக்கூட்டில்
ஒரு மின்னல் பிழம்பை ஊற்றுகிறார்.

சமாதி என்று விறைத்த கட்டையாய்
பார்த்தபின்
பிராமணன் பிராமணன் அல்லாதவன்
என்பதும்
விறைத்துப்போன உறைந்து போன‌
தத்துவ சாரமே.

உள்ளத்தூய்மை
பல்லுயிர் நேயம்
பிரபஞ்ச நேயம் எனும்
ஹொலோகிராஃபிக் காஸ்மாலஜியை
பிரியமாக அணுகுவது
இவை மட்டும் போதும்.
மற்ற அடையாளங்கள் தேவையில்லை.
எனவே
நானும் பிராமணன்.
அல்லது
பிராமணன் இல்லை.

============================================================

திங்கள், 24 ஜூலை, 2017

ஜிகினா முகடுகள்

       

Attracting cycles and Julia sets for parameters in the 1/2, 3/7, 2/5, 1/3, 1/4, and 1/5 bulbs
https://en.wikipedia.org/wiki/Mandelbrot_set





ஜிகினா முகடுகள்
=====================================================ருத்ரா

இலைகளின் பின்னலில் அதன் 
கண்களில்
கண்ணடிக்கிறது இளஞ்சூரியன்.
அந்த நெருப்புக்குழம்புக்கும் கூடவா
கனிவாய் 
ஒரு காதல் வேண்டிக்கிடக்கிறது?
நெருப்பு உமிழ்ந்த நெருப்பு உயிர்த்துளிகளுக்குள்
கூட‌
விஜய்சேதுபதிகளும் நயன்தாராக்களும்
கை கோர்த்து இதழ் சுழிக்கும் 
வண்ணக்கலவைகளின் எண்ண மயக்கங்களும் தான்
ஃபோட்டோஸ்பேர்களும் 
கொரானா மண்டலங்களும்!
" சேது"என்று ஒரு படம்!
அதை ஒரு முறை பார்.
நீயும் காதலிக்க 
தொடங்கிவிடுவாய்.
அதில் காதலன் காதலுக்கு தன் மூளைப்பெட்டியை 
உடைத்து திறந்து 
காதலின் ""காம்ப்ளெக்ஸ்"கணிதத்து 
"ஜூலியா செட் " "ஃப்ராக்டல் ஜியாமெட்ரியை"
அப்படியே திறந்து திறந்து காட்டுவான்.
ஒரு பொறாமைத்தீயில் 
இவ்வளவு வெயிலை எங்கள் மீது 
ஏன் காறி உமிழ்ந்து கொண்டிருக்கிறாய்? 
ஓ! சூரியனே
உனக்கு வேண்டுமா?
கொஞ்சம் பெப்ஸும்  கிக்ஸும் ?
அந்த தர்ப்பூசணி பிலிம் துண்டுகளை
முக வேர்வை தோய‌
சுவைத்துப்பார்!

அப்புறம்
நீ விழித்து எழுவதும்
படுக்கையில் போய் விழுந்து 
தூங்கிக்கொள்வதும்
அந்த விரி கடலும்
நிமிர்  மலைகளும் இல்லை....
இந்த கோடம்பாக்கத்து
ஜிகினா முகடுகள் தான்.

====================================================

அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
=====================================================ருத்ரா

"அண்ணே! ஒரு ஆடு அப்பாவியாய் தப்பி இந்த பக்கம் வந்து விட்டதே!
அதை எப்படிண்ணே கூப்பிடறது?"

"ஆடு குட்டி"ன்னு கூப்புட்டுட்டா போச்சு!

=============================================================
நகைச்சுவைக்காக.

கார்ட்டூன் (3)

கார்ட்டூன் (3)
====================================================ருத்ரா



ஞாயிறு, 23 ஜூலை, 2017

விக்ரம் வேதா


விக்ரம் வேதா
==========================================ருத்ரா

சினிமாத்திரை
இப்போது தான்
" பாகுபாலிகளின் "
க்ராபிக்ஸ் பிரமாண்டங்களில்
சதை பிடித்த‌
யானை குதிரைகளை
சற்று தூசி தட்டியிருக்க்கிறது.
மாதவனும் விஜயசேதுபதியும்
ஆடும்
இந்த பச்சைக்குதிரை விளையாட்டில்
பச்சை ரத்தம் சிந்தி
பழி தீர்க்கும்
விக்ரமன் வேதாளம் ஆட்டம்
படு உக்கிரம்.
நடிப்பிலும் அப்படியே இருவரும்  அதி உக்கிரம்.
ஒருவர் தோள்மீது ஒருவர் என்று
இது ஒரு வகையான ரிலே ரேஸ் தான்.
அம்மாஞ்சி முகத்தில்
பால் வடிந்து கொண்டிருந்த மாதவன்
எப்படி இப்படி
ஒரு தூண் பிளந்த நரசிங்கம் ஆனார் ?
"இறுதிச்சுற்றி"லிருந்து   தான்
அவர் ஆரம்பம் செய்திருந்தார்
நடிப்பின் சிலிர்ப்பை.
விஜய சேதுபதியின் குரல் கூட‌
நடிக்க முடியுமா என்று
நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் அவர்.
காதல் காட்சிகளும்
இசையும்
இந்தப்படத்தில் பொதிந்து வைத்த‌
கன்னித்தீவு சமாச்சாரங்கள்.
ரசிக்கும் படியான இந்த மூலை முடுக்குகளும்
ரசிகர்களுக்கு சுவையான
"கையேந்தி பவன்" தான்!
விக்கிரமாத்தினும் வேதாளமும் கதை
ஏதோ  முப்பத்திரண்டு பொம்மைகள்
சொல்லியதாமே!
முப்பத்திரண்டு பீசுகளை ஒன்றாக்கி
தைப்பதும்  பிரிப்பதும்
இயக்குனர் வேலை தான்.
அதுவே  படத்தின் கலர் ஃ புல்  மசாலா!
ஆனால்
திகில் விரவிய   வி று விறுப்பு எனும்
வேதாளத்தை மட்டும்
விஜய்சேதுபதியின்   முதுகில்
கண்ணுக்குத் தெரியாத
இன்னொரு வேதாளமாய் சுமக்கவிட்டிருப்பது
அற்புதமான கலை !

===================================================















சனி, 22 ஜூலை, 2017

நகைச்சுவை (33 )

நகைச்சுவை (33 )
================================================ருத்ரா

செந்தில்

எண்ணே !எனக்கு ஒரு ஆசை !

கவுண்டமணி

ஏண்டா "போனி குதுரை "தலையா!  சும்மா இருக்க மாட்டயே .
என்ன கை துரு துருங்குதா? எக்குத்தப்பா போய் "அரசாங்க களி "
திங்க போயிராதேடா.

செந்தில்

அதாண்ணே ! வேலூர் மதுரை புழல் களி எல்லாம் சாப்பாட்டுச்சுண்ணே !
நாக்கு நம நமங்குது ! சிக்கன் சிக்ஸ்டி பைவ் அது இது இது ன்னு
ஸ்டார் ஓட்டல் கணக்கா போடுறாங்களாமல்ல .
தானே
கவுண்டமணி

என்னடா சொல்ற நீ.

செந்தில்

அதாண்ணே .."பெங்களூர்" ஒண்ணு தாண்ணே பாக்கி!

கவுண்டமணி

அடேய் ..அடேய் ..இருர்ரா ..ஒன்னே..

(கவுண்ட மணி கால் செருப்பை கழற்றுகிறார் .செந்தில் ஓடி தப்பி விடுகிறார்)

=================================================================
நகைச்சுவைக்காக எழுதியது.

ஒற்றை ரோஜாப்பூ

ஒற்றை ரோஜாப்பூ
===========================================ருத்ரா

கட்டம் போட்ட டி ஷர்ட்டில்
கண்ணாடி பார்த்து
மீசை தடவி
சிகையை சீர் திருத்தி
சிரித்துக்கொண்டேன்.
இப்படி
யாருடனாவது உன் மனக்கண்ணாடியில்
புன்னகை செய்.
அது
பூவாக இருக்கலாம்.
புழுவாகவும் இருக்கலாம்.
மனிதனாகவும் இருக்கலாம்.
அண்டை அயல்..
அப்புறம்
ஆகாயம் கடல் என்று
உருண்டு புரள்.
உன்னைச்சுற்றி
புழுக்கூடு கட்டுவதே
கனவு என்பது.
ஒரு நாள்
உன் ரத்தஅணுக்கள் எல்லாம்
வர்ணபிரளயம் தான்.
அந்த சீமைக்கருவேல முள் கூட‌
அப்போது
ரோஜாக்களின் நந்தவனம்.
உன் புன்னகை
எங்கும் எதிலும்
பிரதிபலிக்கவேண்டும்.
வானத்தின் முகம் கூட‌
அதில்
தன் சுருக்கங்களை
நீவி விட்டுக்கொள்ளும்.
ஒரு புன்னகை
மனிதரிடையே தொற்றிக்கொள்ளும்
மகத்தான தொற்றுநோய்.
ஆம்.
அது மானிட மகிழ்ச்சியை
எல்லோரிடமும்
பரப்பிவிடும் நோய் தான்.
வெறுப்பும்
வெறியும்
காழ்ப்பும்
கடுமையும்
இந்த நோய் தாக்கி
அழிந்தே போய் விடும்.
முகச்சிமிழிலிருந்து
ஒரு சிட்டிகை
புன்னகை போதும்.
இந்த பூமிக்கு
நோய் ஒழிப்பு எனும்
இம்மியூனிடி தரும்
இன்ப உற்று இது.
அய்யா தர்மம் போடுங்க சாமி
என்ற நோக்கில்..
என் நசுங்கிய அலுமினிய தட்டை
நீட்டுகிறேன்.
"புன்னகை"எனும்
அந்த ஒற்றை ரோஜாவை மட்டும்
வீசியெறியுங்கள் போதும்.
இந்த உலகத்தின்
துப்பாக்கிகள் எல்லாம்
அதில் இறந்தே போகும்.

=================================================






ஒரு அரசியல் ஜோக்

ஒரு அரசியல் ஜோக்
====================================ருத்ரா

கோவணாண்டிகளாய் இருந்தாலும் தேர்தல் வரும்போது எல்லாரும் இந்நாட்டு  மன்னர் என்று அந்த கோவணத்தையே முண்டாசு மகுடம் சூட்டிக்கொண்டு ஓட்டுப்போட வரும் நம் நாட்டு ஜனநாயக சப்பாணி
ஒருவர் ஒரு கிளி ஜோஸ்யக்காரரிடம் செல்கிறார்.நாட்டு நிலவரம் பற்றி அலசுகிறார்கள்.

கிளி ஜோஸ்யக்காரர்

சப்பாணி நீயும் இந்நாட்டு புது மன்னர் ஆகி மூணு ஆண்டு முடிஞ்சுபோச்சு.நீ படுற வேதனையெல்லாம் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான் அப்புறம் ....

சப்பாணி

"கொஞ்ச நாளைக்கு   தானா அப்புறம்......"  சொல்லுங்க ஜோசியரே !

கிளி ஜோஸ்யக்காரர்

""கொஞ்ச நாளைக்கப்புறம்     ...அதுவே உனக்கு பழக்கமாயிடும்"

=====================================================================


வெள்ளி, 21 ஜூலை, 2017

"போனால் போகட்டும் போடா !"

"போனால் போகட்டும் போடா !"
====================================================ருத்ரா

சினிமாக்கள்
கர்னாடக சங்கீதத்தை மட்டும்
கச்சா பிலிம் குடலுக்குள்
சுருட்டிக்கொண்டிருந்த நேரம்.
அப்போது திடீரென்று
1952ல்
ஒரு திருப்பமே "பராசக்தி"
தமிழ் உரையாடல்
வெள்ளமென‌
ஒலி யருவியென‌
உணர்ச்சி பிழிந்து
திரைப்பட நிழல் காட்டில்
ஒரு சூரியனாய் சுடர் வீசியது.
அதுவே சிவாஜி!
அப்புறம்
எத்தனை எத்தனை படங்கள்!
கன்ன நரம்புகளில்
நடிப்பின் மின்னல் தெறிப்புகள்.
கண்கள் மின்னுவதில்
பட்டாம்பூச்ச்சிக்காடுகள்.
அவரது
ப வரிசைப்படங்களில்
நடிப்புக்கலையின்
அகர முதல வின்
பல்கலைக்கழகம் காணலாம்.
எந்த பாத்திரமும் அவருக்கு
கரை தளும்பும் நடிப்பின் சமுத்திரங்கள்.
திரை உலகம் புகுந்த புதிது.
வில்லன் பாத்திரமா?
அவர் ஒதுக்கவில்லை.
"துளி விஷம்" கூட‌
அவருக்கு
நடிப்பின் பாற்கடல் கடைய
ஒரு வாய்ப்பு தான்.
மனோகரா
உத்தம புத்திரன்
அந்த நாள்
திரும்பிப்பார்
பட்டியல் இட
எண்ணிக்"கைகள்" கூட அசந்து போகும்.
எத்தனையோ
வாழ்க்கையின் நெருடல்களை
அற்புதமாய் காட்டினான்.
ஆனாலும்
"பாசமலரில்"
ஒரு உயிர் எப்படி
துடித்து துடித்து இறக்கிறது
என்பதை
அந்த எமன் பார்த்திருந்தால்
அந்த இறப்பு மண்டலத்தையே
சுக்கு நூறாக்கியிருப்பான்.
மறுபடியும்
அவன் இவனிடம்
அந்த மரணத்தைப்பார்த்து
ரசிக்க தன் மனத்தைக்கல்லாக்கி
இருப்பான் போலும்.
அந்த இறுதிக்காட்சிக்கு
"கட்" சொல்லி
நடித்தது போதும்
எழுந்து வா மகனே
என்று
கலைத்தாய் கதற கதறக்கேட்டும்
சென்று விட்டாயே
இது என்ன நடிப்பு?
ஒரு மரணம் கூட உனக்கு
உயிர்ப்பான நடிப்புதான்.
நவராத்ரியில் கூட‌
துடித்து துடித்து
அந்த தண்ணீர்த்தொட்டியில்
விழுந்தாயே!
அது வெறும் தொட்டி அல்ல‌
ஏழுகடல் கொண்டு நிரப்பிய‌
எங்கள் கண்ணீர்த்தொட்டி.
இவர்கள்
உன் சிலையை அங்கும் இங்கும்
அலைக்கழிக்கிறார்களே!
போகட்டும்
உன் நடிப்பில் அந்த பாட்டில்
அலட்சியமாக கை அசைத்தாயே
அது தான் நினைவுக்கு வருகிறது!
"போனால் போகட்டும் போடா!"

==============================================





வியாழன், 20 ஜூலை, 2017

அறிவுஜீவிகள்

அறிவுஜீவிகள்
===============================================ருத்ரா

அறிவு ஜீவி (1)

ஸ்டார் ஓட்டல்கள் என்பது நம் நாட்டுக்கலாச்சாரத்தைக்காட்டும் கண்ணாடி.

அறிவு ஜீவி (2)

அப்படியென்றால் ஒரு சிறந்த ஸ்டார் ஓட்டல் எங்கே இருக்கிறது என்று
சொல்ல முடியுமா?

அறிவு ஜீவி (1)

ஓ! அதற்கென்ன! சகல வசதிகளுடன் இருக்கும்... பரபரப்பாக பேசப்படும்
ஒரே சிறந்த ஸ்டார் ஓட்டல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் தான்
இருக்கிறது என்று சொல்கிறார்கள்


=======================================================
நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.

செவ்வாய், 18 ஜூலை, 2017

நகைச்சுவை (32)


நகைச்சுவை (32)
============================================ருத்ரா

செந்தில்

அண்ணே...நம்ம கமல்....

கவுண்டமணி

என்னடா சொல்லப்போறே...வயத்தக் கலக்குதடா..

செந்தில்

அவர் இல்லீங்க...அண்ணே

கவுண்டமணி

என்னடா நொண்ணே...சீக்கிரம் சொல்லித்தொலைடா ..

செந்தில்

ஒரே லஞ்சமும் ஊழலும் பெருகிப்போச்சு..

கவுண்டமணி

டேய்...டேய்...நிறுத்துடா..

செந்தில்

ஏண்ணே... பதறுரீங்க...ஏதோ "ஜம் ஜம் ஜமைக்கா"ன்னு ஒரு குட்டித்தீவுல
தான் லஞ்சம் ஊழல்னு சொல்லி மக்கள் போராடுறாங்க

================================================================
நகைச்சுவைக்காக எழுதியது...

ஞாயிறு, 16 ஜூலை, 2017

மோடிஜி எழுதும் குறும்பாக்கள்

மோடிஜி எழுதும் குறும்பாக்கள்
============================================ருத்ரா

ஆர்.எஸ்.எஸ்


எனக்கு மட்டும் அல்ல‌
இந்தியாவுக்கே இது தான்
ஆக்ஸிஜன் சிலிண்டர்.


விமானம்


நம் பாராளுமன்றம் எங்கே இருக்கிறது?
இதில் தான் ஏறி
சுற்றி சுற்றி தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஜி.எஸ்.டி


"கூஸ் அன்ட் சர்விஸஸ் டேக்ஸ்"
பொன் முட்டையிடும் வாத்து.
கார்ப்பரேட் காரர்களுக்கு.


மாட்டிறைச்சி


ஒரு கிலோ மாட்டிறைச்சியை பாதுகாக்க‌
நூறு கிலோ மனித இறைச்சி
தேவைப்படுகிறது.


பாண்டிச்சேரி


இந்த சுண்டைக்காயைப் பிடிக்க‌
எங்கள் ராட்சசத்தூண்டில்
கிரண் பேடி.


அதிமுக‌


இவர்களிடம் தான் இருக்கிறது
எங்கள்
வாக்கு வங்கி.


சமஸ்கிருதம்


இந்த விஷ ஊசி இருக்கும் வரையில்
இந்தியாவில் எந்த மொழியும்
வாயைத் திறக்க முடியாது.


யோகா


நம் நாட்டுப்பொருளாதாரத்தின்
"யோஜனா பவன்" இனி
"யோகா பவன்" தான்.


====================================================


மீண்டும் ஒரு அலை

மீண்டும் ஒரு அலை





மீண்டும் ஒரு அலை
==============================ருத்ரா

ஏதும் தோன்றவில்லை.
எதிரே
இரைச்சல் போடும்
அலைகள் கேட்கவில்லை.
மூழ்கப்போகும்
சூரியன் கூட‌
ஏதோ சொல்லத்துடித்து
சொல்லாமல்
சிவப்பாய் கக்கிவிட்டு
கரைந்து விட்டான்.
என்ன சொன்னாள்?
அந்த ஒலி மட்டும்
கோடரியாய்
என் நெஞ்சை பிளந்து விட்டது.
அந்த சொல்
இன்னும் விளங்கவில்லை.
விளங்காமலேயே
போய்விடக்கூடாது
என்று
அலைகள் தன் முந்தானையைக்கொண்டு
இந்த கரை முகத்தை
ஒற்றிவிட்டு ஒற்றிவிட்டுப்போகுமே
அங்கு..
தன் விரல்களால்
எழுதி விட்டுச் சென்றிருக்கிறாள்..
எழுத்துக்கள் அழிந்து
மிச்சம் தெரிந்தது
இது மட்டுமே..
...விடு."
மறந்து விடு
மன்னித்து விடு
உன் மனதை தந்து விடு.
எந்த "விடு" அது?
எதுவும் தோன்றவில்லை.
என்ன விடுகதை இத
தொடவும் மாட்டேன் என்கிறது
விடவும் மாட்டேன் என்கிறது
மீண்டும் ஒரு அலை
அந்த "விடு"வுக்கும் விடுதலை.
எனக்கு எதுவும் தோன்றவில்லை.
மிச்சம் உள்ள எழுத்துக்களை
அந்த ஆழத்துக்குள் தேடிக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு அலை..
வரட்டும்.
என்னை இழுத்துக்கொண்டு போக!

============================================

செவ்வாய், 4 ஜூலை, 2017

கார்ட்டூன்  (2)

கார்ட்டூன்  (2)
======================================ருத்ரா

திங்கள், 3 ஜூலை, 2017

இலக்கு நம் இதயம் மீதிலே

இலக்கு நம் இதயம் மீதிலே !
==============================================ருத்ரா

நினைத்தால் காறி உமிழத்தோன்றுகிறது.
மேற்கே இருந்து வெள்ளைக்காரன் வந்து
நம் கழுத்தில் கத்தி வைத்தான்.
நம் அம்பத்தாறு தேச ராஜாக்களின்
வாரிசு அந்தரங்கத்தில் நுழைந்து
நம்மைக் கூறு போட்டான்.
ஏற்கனவே கூறு கெட்டுத்தானே
நாம் கிடந்தோம்.
என்ன நாய் பிழைப்பு இது?
ஆறுவகை மதம்பிடித்துக்கிடந்தோம்.
ஆறு கடவுளும்
நான்கு வர்ண வரப்புக்குள்
நம்மை நசுக்கி மிதித்தன.
கடவுளா அப்படி செய்தது?
இவை
அரசு நுகத்தடியை மக்கள் கழுத்தில் மாட்ட‌
சாதி சம்ப்ரதாய தில்லு முல்லுகள்.
சுயராஜ்யம் என் பிறப்புரிமை என்றார்கள்.
வந்தேமாதரம் முழங்கினார்கள்.
நாக்கு தொங்க  முண்டைக்கண் துருத்த‌
இடுப்பில் கபாலங்கள் கோர்த்து
ஆடையுடுத்த‌
பயங்கர காளிக்கு
மற்ற மதங்களை பலி கொடுக்கவே
கூர்வாள் தீட்டினார்கள்.
ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி
என்று கர்ஜித்தார்கள்.
எல்லாம்
சாதி மத சாக்கடையாறுகளில்
கும்பமேளா நடத்துவதற்குத் தான்.
குரங்குகள் போட்ட பாலத்தை
ராமன் போட்டதாய் சொல்லி
கடலில் ஆழமாய் பாதை போட்டு
வணிகம் செய்யும் பொருளாதாரத்தை
சிதைத்து விட்டார்கள்.
ஆக்கிரமிப்பு செய்து
உட்கார்ந்து கொண்டவர்கள்
அதன் பின் வந்தவர்களை
ஆக்கிரமித்தார்கள் என்று
அடித்து விரட்ட
அதிரடி கும்பல்கள் சேர்த்து சேர்த்து
வாக்கு வங்கிகளை குவித்தார்கள்.
மனித உரிமை எனும்
கீச்சுக்குரல் கூட பொறுக்காது
தெருவெல்லாம் கசாப்புக்கடை ஆக்கினார்கள்.
எங்கள் உயிரினும் மேலான தேசியக்கொடியே !
சுதந்திரப்போர்களில்
ரத்தம் முக்கிய உன் சிவப்பு வர்ணத்தை
சாதி இந்து காவி வர்ணமாய் மாற்றி
அதையும்
கார்ப்பரேட் ஆக்கி
நம் பாரதப்பண்பையே
சுரண்டித்தின்ன சூதுகள் செய்தார்கள்.
இந்த சூதாட்டத்திற்கு
பகடை உருட்டும்
சகுனிகளை வீழ்த்துவதற்கே
இனி நாம்
தேர்(தல்) வடம் பிடிக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகமே
அதன் நேரான பாதை!
வெற்றி நம் இமை மீதிலே!
இலக்கு நம் இதயம் மீதிலே!

==================================================




அறிவு ஜீவிகள் பேசிக்கொண்டால்...


அறிவு ஜீவிகள் பேசிக்கொண்டால்...
=================================================ருத்ரா

அறிவு ஜீவி (1)

பாத்தீங்களா! நம்ம பிரதமர் ஜி.ஏஸ்.டி யை எவ்வளவு எளிதாக்கிச் சொல்லிவிட்டார்.."குட் அன்ட் சிம்பிள் டேக்ஸஸ்"ன்னு சொல்லிவிட்டார்.

அறிவு ஜீவி (2)

மதத்தை அடிப்படையா வச்சு அவர் சொன்னதை இப்படியும் எடுத்துக்கலாம்
"காட்ஸ் அன்ட் ஸேடான் டேக்ஸஸ்"

==========================================================

ஞாயிறு, 2 ஜூலை, 2017

கார்ட்டூன்

கார்ட்டூன்
=========================================ருத்ரா



ஆழ்ந்த இரங்கல்கள்

தோழர் சௌந்தர் மறைவு
எனக்கு
என் இருப்பிடத்தைச்சுற்றிய‌
ஒரு பூகம்ப அதிர்ச்சி.
என் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும்
அவரது சிற்றுளி ஒலித்திருக்கும்.
என் அருகே நடைபயின்று வரும்
"ஞான பீடம்" அவர்.
அவர் பாராட்டு சுகத்தை
எதனோடு ஒப்பிடுவது?
அந்த "தாஸ் கேபிடல்" பக்கங்களின்
சர சரப்பு ஒலிக்கீற்றுகளில்
ஒரு விடியல் பூச்சு
என் சூரியனை எனக்கு காட்டிநிற்குமே
அதைத்தான் சொல்லவேண்டும்.
ஆழங்காண இயலா
என் ஆழ்ந்த இரங்கல்கள் அவருக்கு!

====================================செங்கீரன்
02 ஜுலை  2017


சௌந்தர் என்றொரு தோழர்

சௌந்தர் என்றொரு தோழர்
======================================ருத்ரா

அடுத்த தெருவில் வசிப்பவர்.
பார்க்கும்போதெல்லாம்
நின்று பேசுவார்.
முகம் நிறைய மத்தாப்பூக்களின்
வெளிச்சம்.
அந்த பேச்சில்
என் கவிதையைக் கொஞ்சமாவது
தொடாமல் அகலுவதே இல்லை.
நான் எழுதிய கவிதையின்
உட்புறம் நுழைந்து
அதில் மிகவும் களிப்புறுவார்.
கவிதை எழுதிய என் காகிதங்களில்
நரம்போட்டமாய் நிற்பவர்.
நான் சாவதற்குள்
ஒரு இலக்கிய விருது பெறுவேன்
என்று நம்பிக்கை
எனக்கு இருந்ததில்லை.

அன்று திடீரென்று செய்தி வந்தது
அவர் இறந்து விட்டார் என்று.
எனக்காக உயிர்ப்புடன் நின்ற
அந்த "ஞான பீடம்"
சரிந்ததாய் நான் மிகவும்
துயர் உற்றேன்.
என் கவிதைகள் என் முன்னே
அலங்கரிக்கப்பட்ட
பூத உடலாய்  படுத்துக்கிடந்தது.
மரணம் எனும் கவிதை
காற்றாய் என் காகிதத்தில்
பட படத்தது.
அது அவர் எழுதியது.
சாகித்ய அகாடெமிகளில்
எனக்கு ஒரு
சாகாத அகாடெமியாய்
எங்கோ ஒரு தொலைத்தூர
விண்பூக்களில் இருந்து கொண்டு
என் கவிதைக்குள்
தினமும் வருகிறார்.

=========================================
இரவு  11.30 மணி ..02 ஜுலை 2017


அண்ணே! அண்ணே (5)

அண்ணே! அண்ணே (5)
=============================================ருத்ரா

டேய் சேதி தெரியுமா?

என்னண்ணே?

திருப்பூரில் ஏதோ தனியார் பின்னலாடை நிறுவன ஊழியர்களுக்கு
"ஜி.எஸ்.டி" கொண்டாட்டத்துக்காக விருந்து குடுத்திருக்காங்க!

என்ன விருந்துண்ணே? "கறி விருந்தா?"

இல்ல..."வரி விருந்து"

==========================================================
நகைச்சுவைக்காக எழுதியது.

இதோ ஒரு வாமனாவதாரம்.

இதோ ஒரு வாமனாவதாரம்.
=============================================ருத்ரா

கையில் தாழங்குடையில்லை.
முன் குடுமியோ பின் குடுமியோ இல்லை.
மேலும்
ஒழுங்காய் ஆளும் அரசன் தலையில்
ஏறி மிதித்து
அவனை பூமிக்குள் அழுத்தும்
சாணக்கியத்தனம் ஏதும் இல்லை.

பாருங்கள்
மத்திய பிரதேசத்தில் ....
இவர் பெயர் பெஸோரி லால்
அம்பது வயது ஆகியும் உயரம் 29 அங்குலமே !
அவரை தன் குழந்தை போல்
தன் இடுப்பில் ஏந்தி
மத்தாப்பூ சிரிப்பை சிந்தும்
பெறாத அந்த தாயின் அன்பு
கோடி மேல் கோடி பெறும் .
அம்பது வயது குழந்தையின்
அந்த புன்னகையில் கூட
ஆயிரம் காந்திப் புன்னகைகள்
சுடர் பூக்கின்றன!

பாருங்கள் இந்த அற்புத காணொளியை!

http://www.msn.com/en-in/video/viral/aged-50-and-only-29-inches-tall-born-different/vi-BBDyu5L?ocid=spartanntp

சனி, 1 ஜூலை, 2017

அண்ணே! அண்ணே! (4)

அண்ணே! அண்ணே! (4)
==============================================ருத்ரா

அண்ணே! எம் ஜி யார் நூற்றாண்டு விழா இன்னும் நான்கு ஆண்டுகளுக்கும் நடக்கும்னு சொல்றாங்கண்ணே!

அது எப்படிடா?

"மாராத்தன்" ஓட்டப்பந்தயமாம். இந்த மூணு அணியும்   மாறி மாறி சென்னைக்கும்டெல்லிக்கும் ஓடிகிட்டே இருப்பாங்களாம்...

=====================================================
நகைச்சுவைக்காக எழுதியது.

கண்ணாடித்தொட்டி மீன்கள்

கண்ணாடித்தொட்டி மீன்கள்
========================================ருத்ரா இ.பரமசிவன்
(தலைப்பு:உபயம்:"ஞானக்கூத்தன்)

நல்லவேளை
பௌராணிகர்களின்
சப்பளாக்கட்டையிலிருந்து
நான் தப்பித்தேன்.
இல்லாவிட்டால்
இந்த "அழுகிய நான்கு வர்ணத்தை"
சிருஷ்டித்த அந்த
சுவடிகளைக் காத்ததற்கு
நானும் அல்லவா
பொறுப்பு ஏற்க வேண்டும்!
அந்த "சோமுகாசுரனை"க்கொன்றதால்
இந்த கண்ணாடித்தொட்டியெல்லாம்
ரத்தத்தொட்டி அல்லவா ஆகியிருக்கும்.


========================================



தண்ணீர்த்தொட்டி மீன்கள்
~ ஞானக்கூத்தன்

இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?





காதல் ஜோக்ஸ் (2)


காதல் ஜோக்ஸ் (2)
=====================================ருத்ரா

"ஞாபம் வருதே ஞாபகம் வருதே"
______________________________________

காதலி

ஏன் எப்போ பார்த்தாலும் பீச் பார்க் என்று வரச்சொல்லுகிறீர்கள்?

காதலன்

தியேட்டர்களில் தமிழ்ப்படம் பார்க்கும் போதெல்லாம் மூடு அவுட் ஆகி விடுகிறது.

காதலி

ஏன் அப்படி ஆகிறது?

காதலன்

பின்னே என்ன! எல்லாப்படத்திலும் காதல் காட்சிகள் என்றால் அதை கல்லூரிக்கட்டிடங்களில் காட்டுகிறார்கள்.அதுவும் அதே "அண்ணா பல்கலைக்கழக "சிவப்புக்"கட்டிடங்களில்"

காதலி

ஏன் சிவப்பு நிறம் கண்டு மிரள்கிறீர்கள்?

காதலன்

கூடவே என் "செமஸ்டர் அர்ரியர்சும்"அல்லவா ஞாபகத்துக்கு வருகிறது.

==================================================================

இது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல!


இது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல!
===========================================================

தோழர் மோசிகீரனார்


மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும்  நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக் கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்!
ஆனால், உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்.
                                 - ஞானக்கூத்தன் (1938-2016)

(இது ஞானக்கூத்தன் பாட்டு )



ஞானக்கூத்தன் அவர்களே!
உங்களுக்கு
தமிழ்ப்பற்று பற்றி
கவிதை எழுதிக்கொள்ள‌
நியாயங்கள் இல்லை தான்.
ஆயினும்
தமிழ் இலக்கியத்துக்கும்
மகுடம் சூட்டியிருக்கிறீர்கள்
இது நிச்சயம்
உங்களுக்கு ஒரு நிழற்குடை
அமைத்துக்கொள்ள அல்ல.
ஆனாலும்
மோசிகீரன் அந்த‌
மன்னனுக்கு தமிழின் உருவகம்.
அங்கே படுத்து உறங்கியது
பயணக்களைப்பால் அயர்ந்த‌
ஒரு தமிழ்!
அதனால் அவன் கவரி வீசியது
தமிழுக்குத் தான்.
ஆனால் தமிழுக்கு
புகழ் சூட்டப்படும்போதெல்லாம்
அதை புழுதியாக்கி
நையாண்டிக்கவிதைகள் எழுதி
உங்கள் உள் நச்சரிப்புகளை
ஏன் இப்படி சொறிந்து கொள்ளுகிறீர்கள்?
நீங்கள் சிறந்த கவிஞர்
உங்கள் தமிழ்ப் புதுக்கவிதைகள்
எங்களுக்கு புதிய இலக்கிய ஊற்று.
அதனால்
நீங்களும் அந்த முரசு கட்டிலில்
அதை அவமானப்படுத்தும் நோக்கில் இல்லாமல்
கொஞ்சம் படுத்து
கண்ணயர்ந்து விட்டீர்கள் என்று தான்
பொறுத்துக்கொள்கிறோம்!
எங்கள் பாராட்டுக்கவரிகளை
உங்களுக்கு வீசுகிறோம்.
வாழ்க தமிழ்!
வாழ்க உங்கள் தமிழ்ப்புதுக்கவிதைகள்!
=============================================ருத்ரா இ பரமசிவன்