செவ்வாய், 29 மே, 2018

நடுகல் பீலியும் நார்அரி கலமும்


நடுகல் பீலியும் நார்அரி கலமும்
===============================================ருத்ரா

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
நுரையத் தரூஉம் நறவக் காட்சியான்
வேட்டுவன் யான் கூற்றம் கொள்ள‌
வேந்துகடன் ஆற்றும் நசைமிக்கூர‌
அகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌
வெண்ணிப்பறந்தலை வீழ்படுத்தாங்கு
விண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே!
என்னே பாழ் இது? ஈனப்படுகுழி
வீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌
சிலம்பும் புலம்பும்.எவன்செயும்?
இணரிடை ஊரும் அம்புல் எறும்பாய்
தோற்றினும் யான் நம் அருமைச்செம்மொழி
காத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு
எத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து
வெல்குவேன் வெல்குவேன் அதன்கண்
பிறப்பின் உருகெழு மண்சுவை தமிழ்ச்சுவை
நனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்
மீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.

=====================================================

வீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு
நடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து
நினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்
படித்தேன். "அதியமான் நெடுமான் அஞ்சி"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்
"நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலம்..." (புறம் 232)
என்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.
இது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்
மறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி
தமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌
அவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.

(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)

===================================================ருத்ரா

பெண்ணே..

பெண்ணே..
===================================ருத்ரா

இந்திய சரித்திரம்
இன்னும் இமை திறக்கவில்லை.
அறிவு நூல்கள்
ஆயிரம்..ஆயிரம்..
ஆனாலும்
உன் வளையல் சத்தங்களுக்கும்
மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும்
மாங்கல்ய மாஞ்சாக்களின்
கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும்
இங்கே
எழுதாத இதிகாசங்கள்
எத்தனையோ? எத்தனையோ?
பிறப்பு எனும்
பிரபஞ்ச வாசலில்
மாணிக்கவெளியின்
மாயக்கணிதப்புதிரை
நீ விடுவிக்கின்றாய்.
ஆனால்
இந்த மண்ணின் பாஷ்யங்கள்
பிறப்பை தீட்டாக்கி
மோட்சத்தை தேடுகின்றன.
உலகத்திலேயே
கடைந்தெடுத்த போலித்தனம் அல்லவா இது!
தங்களுக்குள்ளேயே
பூட்டிக்கொண்டு
விடுதலைக்கு வீறிடுகின்ற‌
குரல்களில் தான்
ஆத்மா முதன் முதலில்
கசாப்பு செய்யப்படுகிறது.
ஆத்மாவின் "அகர முதல"வில்
பெண் தானே முதலெழுத்து.
அதை முண்டனம் செய்துவிட்டு
இறைமையின்
எந்த முகத்தை நோக்கி
இவர்கள்
கூக்குரல் எழுப்புகிறார்கள்.
பெண்களே!
கவனமாயிருங்கள்.
இந்த கணினிகளைக்கூட‌
குவித்து வைத்து சிதையடுக்கி
உங்களுக்கு
அக்கினிக்குளியல்
அரங்கேற்றப்பார்ப்பார்கள்.
ராஜாராம் மோகன் ராய்கள்
இந்த எருக்கஞ்செடிக்களின் காட்டிலிருந்து
இன்னும் ஒரு தடவை
வருவார் என எதிர்பார்க்க‌
இங்கே எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்தியாவின் பழமைவாதம்
இதோ
உங்கள் விலாப்புறத்திலேயே
கீதங்களாலும் சுலோகங்களாலும்
கவரி வீசிக் கொண்டிருக்கலாம்.
உன் உரிமைக்கு
கதிர்வீச்சுகள் நிறைந்த
ஒரு சமுதாய விஞ்ஞானம்
பின் புலமாய் இருப்பதை மறக்காதே!
காதலும்
கல்யாணமும்
உன்னை சிறைவைக்கும்
வெறும் "கட் அவுட்டு"கள் தான்.
மானிடத்தின் உறுதியான கற்கோட்டையை
நீயே தான் நிர்மாணிக்க முடியும்.
அதற்குள் இந்த‌
மீரா பஜன்களின்
ஊது பத்திகளில் கரைந்து போய்விடாதே.

===============================================================
07.08.2015ல் எழுதியது.

ஞாயிறு, 27 மே, 2018

தாமிரம்

தாமிரம்
=================================ருத்ரா

நீ
பொருளாதாரத்தின்
உலோக வடிவம்.
ஆனால்
அதில் எப்படி இந்த‌
துப்பாக்கிகள் வார்க்கப்பட்டன?
அந்த பொருளாதாரம்
மக்களை
வெறும் சாக்கடையாக‌
புற்று நோய்க் கிடங்காக‌
புகையை கக்கி இவர்களின்
உயிர்க்காற்றுகளை
அழிக்கும் எமன்களாக‌
ஆக்கும் போது
அதை எதிர்க்கும் கேள்விகள்
முணுமுணுக்கப்படும்போது
அவை வெறும்
வழக்குக்காகிதங்களாய்
இருக்க நாடகம் போட்ட நீ
கொஞ்சம் ஆவேசத்தோடு
ஆனால் அறத்தோடு
உன்னிடம் அணிவகுத்து
வந்த போது அவர்களை
குறி பார்த்து அந்த‌
அணித்தரமான கேள்விகளை
விழுங்கிவிடும் வெறியில்
மரணங்களை அல்லவா
உமிழ்ந்திருக்கிறாய்.
தூத்துக்குடியின்
இந்த உப்புக்கரித்த உடல்கள் மீது
கார்ப்பரேட் உப்பரிகைகள்
கல்லறை எழுப்பவா
ஓ! தாமிரமே
நீ இங்கு உருக்கப்படுகிறாய்?
மனிதனின்
உழைப்பில்
அந்த நரம்பின் மின்சாரத்தில்
புதிய புதிய பிரபஞ்சங்களை
உருவாக்கும்
ஆற்றலை நீ உணரவில்லையா?
மனிதனை மனிதன் சாப்பிடும்
பேராசையின்
வெறும் வணிக வடிவமல்ல‌
நீ!
"தாமிரமே" உனக்குள்
உழைப்பாளர்களின் ஒரு
ஒரு "பொன்னுலகம்"
வார்க்கப்படும் கனவு
நசுங்கி உருத்தெரியாமல்
போவதற்கா
இப்படி ராட்சசத்தனமாய்
தாக்குவதற்கு உயர்ந்து நிற்கிறாய்?

============================================




சனி, 26 மே, 2018

A "QUANTUM" PLUNGE..


A "QUANTUM"  PLUNGE..
======================================================RUTHRAA

THE SCIENCE OF COSMOLOGY IN A PURE SENSE IS PHYSICAL BUT IN ANOTHER SENSE METAPHYSICAL.THIS METAPHYSICAL FLAVOUR CAN NOT BE BRUSHED ASIDE A MYTH ORIENTED.THE SO CALLED THEORETICAL PHYSICISTS WRAP THEMSELVES IN A THOUGHT EXPERIMENT WHEN AN URGE COMES TO KNOW AND PROVE A LAW OR PRINCIPLE OF PHYSICS.MODERN QUANTUM THEORIES HINGE ON THIS TINGE OF INTUITIONS IN MYRIAD DESIGNS.THE SEED SOWN IN THIS LAND OF FANTASY RANGING FROM ALBERT EINSTEIN HIMSELF THROUGH THE FOUNDING FATHER NIELS BOHR AND UPTO  DATE RANDALL-SUNDARAM POST DOCTORAL RESEARCHES DEVIATED TO A BIG TREE OF STRING THEORY AND ITS COLOURFUL FRUITS OF BRANE COSMOLOGY.

WHEN OUR MATHEMATICAL PHYSICS EITHER INTERPOLATE OR EXTRAPOLATE THE BIG BANG THEORY SWEEPING THE BEYONDNESS PLANCK SCALE COMES AS A BULL TO PIERCE THE FABRIC OF TIME AND SPACE OR AN AMPHIBIOUS ASTRAL SPECIE  OF "TIMESPACE".BOTH THE CENTIMETER AND SECOND IS BLOWN OFF IN THE INVERSE POWERS OF SAY HUNDREDS OR THOUSANDS.OR THE CALCULATIONS RANGE FROM 10^-32 TO 10^-45 TO MAKE ALL THE TOM TOM OF BIG BANGS TO A DOOM.THE "BBB THEORY" (BEYOND BIG BANG THEORY) THOUGH ADDS MUCH CURRY OUR THEORETICAL PHYSICS FLAVOUR THE PREY EASILY

FALLS TO THE FRYING PAN OF METAPHYSICS.CAN YOU IMAGINE A POINT IN THE UNIVERSE WITH AN ESCAPE VELOCITY THAT IS MORE OR EQUAL TO THE SPEED OF LIGHT? THAT IS CALLED THE GOLDEN POINT OF SINGULARITY WHERE THE COSMOLOGY FINDS ITS OWN WOMB OR TOMB.THE FUZZY CONCEPT OF QUANTUM IS SO MUCH FUZZY THAT NEITHER POSITION NOR THE MOMENTUM SLIPS OUT OF OUR OBSERVATION ON WHICH WE HAVE TO THEORIZE THE THOUGHT OR FACT.THE MYSTERIES OF DUALISM OF A CAT WHICH IS ALIVE AND DEAD SIMULTANEOUSLY.IS THE FAMOUS GYMMICS OF ERVIN SCHRODINGER AND HIS EQUATIONS.HENCE THE CAT CHASERS FALL AS VICTIMS OF PROBABILITY AND ITS THEORIES.THIS LED HEISENBERG TO WIN A NOBEL PRIZE FOR HIS UNCERTAINTY PRINCIPLE OF QUANTUM THEORY.SO METAPHYSICS WON EVEN THE HEARTS OF NOBEL PRIZE COMMITTEE..ONLY BECAUSE OF THIS PROBABILITY QUANTUM PARTICLE HAS BEEN LABELLED AS GOD PARTICLE.THAT IS WHY EINSTEIN ALWAYS MOORED ON HIS CONTENTION THAT THESE "DICE THROWING HAPPY" BUSINESS ETC WONT WORTH THE SALT OF SCIENCE.HOW EVER BELL'S INEQUALITY PRINCIPLE ALSO CAME THERE TO CLINCH THE ISSUE

BY MEASURING THE ELECTROMAGNETIC BEAM ON ITS PATH OF ADVANCE AND RETARD OR TRANSMISSION AND REFLECTION.HERE ALSO THE SUM OF THESE TO AND FRO BEAMING OF LIGHT IS LESS THAN ARITHMETIC SUM RENDERING A PECULIAR INEQUALITY.JAMES MAXWELL WILL ALWAYS CALL THIS WEIRD ASPECT AS DEMON AS IN HIS SECOND LAW OF THERMODYNAMIC LAW.BUT BELL AND OTHERS AGAIN RESORT TO THE TOOLS OF PROBABILITY IN MEASUREMENT. STATISTICALLY SPEAKING IT IS NOTHING BUT A "QUANTUM CORRELATION" OF THAT TO AND FRO BEAMING OF LIGHT.OF THESE TWO TRAVELS IS A CORRELATION OR INTERPOLATION OR AN IMAGINARY SO TO SAY A FUZZY ONE.THE PROBLEM OF LOCALIZATION OF THE QUANTUM IS A PHILOSOPHICAL CHARMING ADDING VERY MUCH WITH OF CHAGRIN OF MYSTICISM..BUT DUE TO THE COMPLEX ANALYSIS AND ITS WONDERFUL TOOL OF MODULUS FUNCTIONS AND DIRAC'S MIND BOGGLING LINEAR OPERATORS OF KET AND BRA THE THEORY BECOMES DEEP AND BEAUTIFUL.BUT QUANTUM THEORY BY ITSELF IS AWKWARD AND WHEN IT IS COUPLED WITH GENERAL RELATIVITY TO ENTER THE ARENA OF QFT (QUANTUM FIELD THEORY) WE HAVE TO PLUNGE INTO A QUAGMIRE OF MIX THAT TELLS OR DOES NOT TELL A MYTH WHICH IS LABELING A "PHYSICS THEORY" OF "THEORY OF EVERYTHING " CONCEPTUALLY MEANING AS NOTHING.THE KEY IS"FALSE VACCUM" PACKED WITH A ELEVEN DIMENSIONAL UNIVERSE WHERE THERE MAY BE MILLIONS AND MILLIONS OF PARTICLES IN THE PLANK OF MILLION AND MILLIONS OF VIBRATIONS OF "STRINGS" OTHERWISE KNOWN OF FREQUENCIES.NOW WE ENTER THE "BRANE COSMOLOGY"

=========================================RUTHRAA E.PARAMASIVAN

(இதை  தமிழில் " நுண்மை வெளியை நோக்கி.." என்ற தலைப்பில்
பதிவு இட உள்ளேன் )

வெள்ளி, 25 மே, 2018

நடுகற்கள்

நடுகற்கள்

=====================================ருத்ரா





அது எந்த வருடம்?

ரெண்டாயிரத்து சொச்சம்

இருபத்தஞ்சா?

முப்பத்தஞ்சா?

ஏதோ ஒன்று விடுங்கள்.

மதுரையிலிருந்து

ராமேஸ்வரம் செல்லும் பாதை

அல்ல அல்ல..

ஃபோர் வே ரோடு...

மைல் கற்களில்

இந்தி மட்டுமே..

வழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி

இயற்கைக் கடன்..

மீண்டும் காரில் ஏரும் போது

அந்த மைல் கல்லை

இந்தியை எழுத்துக்கூட்டி படித்தேன்.

கீ...ழ..டி..

என்ன தமிழனின் தொன்மை

அடையாளம் அல்லவா?

காரை நிறுத்திவிட்டு

அதைச்சுற்றி பார்க்க நினைத்தேன்.

அங்கே இருந்த

தகவல் பலகைகள்.

இந்தியில்

என்னென்னவோ எழுத்துக்களை

வடாம் பிழிந்து வைத்திருந்தார்கள்.

வரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.

அதன் கீழ் ஆங்கிலத்தில்.

"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் "ஆர்யன்" சிவிலிசேஷன்"

ஐயகோ!

தமிழின் தொன்மை

வடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ?

காரில் பயணம் தொடர்ந்தேன்.

ராம..ராம..ராம....ராம....

ராமேஸ்வரம் வரைக்கும்

அந்த மைல்கற்களில் எல்லாம்

ரத்தம் வழிந்தது.

தமிழன் தமிழை மறந்ததால்

அவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்

இங்கே

அவன் அழிவை  அடையாளப்படுத்தும்

நடுகற்களாகவே தோன்றின!



திடுக்கிட்டேன்.

................

.....................

சட்டென்று விழித்துக்கொண்டேன்.

தூக்கத்திலிருந்து தான்!



இந்த‌ வரலாற்றுத் தகிடுதத்தங்களிலிருந்து

நாம்

எப்போது விழித்தெழுவது?



=========================================================

புதன், 23 மே, 2018

ஓலைத்துடிப்புகள் ( 10 )

ஓலைத்துடிப்புகள் ( 10 )
======================================================ருத்ரா


அம்மூவனார் எழுதிய "நெய்தல் செய்யுட்"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை"..

என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் "செத்த" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் "செத்தவன் கையில் வெத்தலை பாக்கு "இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த "செத்த நிலையை" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் "தங்கப்பதக்கம்" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

"செத்தென" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் "மடநடை"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் "மடம்" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் "போல" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் "போல" என்று வழங்கப்படுவதில் "சங்கத்தமிழின் சொல்லியல் முறை" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி யென்ன
வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்
இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் "செத்தையாருக்குள் வைக்கப்படும்" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி "நடைப்பிணங்களாய்"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே "செத்த" "போல" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.


வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."
=============================================ருத்ரா இ பரமசிவன்


பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

=====================================================
(பொழிப்புரை தொடரும்.)

பரிணாமம்



பரிணாமம்
============================================ருத்ரா


எதிரிகளை மயக்க‌
உடம்பு வண்ணங்கள்.
குச்சி போல் ஒடிந்து கிடந்து
உட்காரவந்த சிறு பூச்சியை
பலகாரம் பண்ணிவிடுதல்.
பாறை போல் படர்ந்து கிடக்கும்
இடத்தில்
குழு மீன்கள்
திடீரென்று காணாமல் போதல்.
பாறையே நாக்கு ஆகிவிடும்
பகீர் வேட்டை.
அழகாய் வாய் பிளந்து
இதழ்கள் முறுவலித்து
ஆடும் கிண்ணப்பூக்களில்
சின்ன வண்டுகள் சிறை.
மனிதனின் மூளை
விரிந்து பரந்து
ஒளி உமிழும் ஆலவிழுதுகளாய்
வெளியே பிதுங்கி
கேலாக்சி விண்மீன் மகரந்தமாய்
தூவி மயக்கி
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
"அவதார்"புகை மண்டலமாய்
கிராஃபிக்ஸ் காட்டுகிறது.
புடைத்த தொடையுடன் வாலுடன்
முண்டைக்கண் உருள்விழியிலும்
காதலின் பாதரசம் ஊற்றி
...
கடைசியில் அங்கும்
மனிதன் கற்றாய் கரைய‌
ஒன்று ஒன்றை விழுங்கி..
கீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌
வரணம் பூசி அழைக்கிறது.

"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ
விவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி"

பக்தி
காதல்
காமம்
கம்ப்யூட்டர்..எல்லாம் பிசைந்து
நியூரானின்
சைனாப்டிக் ஜங்ஷனில்
ஜெல்லி மீன் மயிர்த்தூவல்களால்
பர்கின் ஜே செல்களாய்
ஸ்லோகன்களில் வரிபிளக்கின்றன.

அந்த "அனன்யயோகம்"....
மக்கள் சுவாசங்களையெல்லாம் விலக்கிய‌
ஒரு "உன்மத்த" மோனம் எனும்
"என்னில்" (மயி)மனம் வை
என்கிறான் கிருஷ்ணன்
கூவி கூவி அழைத்து.

சோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து
ரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..
விழிகள் நிலைகுத்தி
செருகிக்கொள்ள வேண்டும்.
மனசு...
மனசும் மனசும் புணர்ந்து
அறிவு அறிவைக் கலந்து
ஒளிக்கும் நிழலுக்கும்
நழுவிய அந்த‌
பிம்பத்தை
கையில் பிடியுங்கள்..
மின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.
ஞானத்தின் போதை அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.
"ஹிக்ஸ் போசானை" கையில் பிடித்துவிட்டு
செர்ன் எனும்
நுணணணுக்கூடத்து வளையங்களின்
வளையல்களின்
ஒரு கிளுகிளுப்போசைக்கு
தவம் இருக்கும்
அந்த விஞ்ஞானம்
இன்னும்
ஒரு கிண்ணத்தைக்கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..
பரிமாணத்தின் கிண்ணத்தை.

============================================================

ஞாயிறு, 20 மே, 2018

எடியூரப்பா அவர்களே..

எடியூரப்பா அவர்களே..
==================================================ருத்ரா

உங்களுக்கு
எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த ஜனநாயகத்தை காத்ததில்
உங்களுக்கே பெரும்பங்கு!
முரட்டுத்தனமாய் அந்த‌
பொய்க்கால் குதிரைகளை வைத்து
அவர்கள் சொன்னதைப்போல்
ஒரு "அஸ்வமேதயாகம்"
நடத்தியே தீருவேன் என‌
அடம் பிடிக்காமல்
தடம் மாறியதற்காக
எங்கள் பாராட்டுகள் உரித்தாகுக.
உங்களை வில்லை வளைக்கச்சொல்லிவிட்டு
இங்கே
சில துருப்புச்சீட்டுகளை
வளைக்க அவர்கள் அனுப்பிய அம்புகள்
அந்த அம்பராத்தூணியிலேயே
முனை முறிந்து போய்விட்டன.
நீதி மன்றம்
இப்படி ஒரு சீற்றத்தை
ஜனநாயகத்தைக்காக்கும்
கேடயமாக அளிக்க முன்வந்தது
ஒரு திருப்பு முனை தான்.
அந்த தராசுமுள்ளில்
மாயமாய் ஆர்ப்பரித்த‌
ஒரு சர்வாதிகாரம்
கழுவேற்றப்பட்டிருப்பது தான்
அந்த திருப்புமுனையின் நெருப்பு முனை!
எடியூரப்பா அவர்களே
உங்கள் உருக்கமான உரை
டில்லியிலும் எதிரொலிக்கும்.
வர்ணபேத தூரிகைகொண்டு
சாதி மத பூதங்களை விஸ்வரூபமாக்கும்
தந்திரத்தை
வளர்ச்சி மந்திரமாக‌
ஜபிக்கும் அவர்களும் புரிந்துகொள்வார்கள்.

உங்கள் ராஜினாமாக்கடிதம்
இந்த சட்டமன்றம் எனும்
சுயம்வர மண்டபத்தில்
ஒரு வில் முறிந்த சப்தத்தை
எதிரொலித்தது.
ஜனநாயகத்தை ஜனநாயகமே
காத்துக்கொண்ட ராமாயணம் இது.
மாரீசன் சுபாகுகள் கவிழ்ந்து போனார்கள்.
வால்மீகி ஓலையை திருப்பிவைத்து
எழுதத்துவங்கி விட்டார்.
ராமர் பட்டாபிஷேகம் என்பது
மக்களின்
இந்த ஜனநாயக பட்டாபிஷேகம் மட்டும் தான்
என்று.
மற்ற சுலோகங்களையெல்லாம்
சுருட்டிவைத்துக்கொள்ளுங்கள்
என்று
மக்கள் அவர்களிடம் சொல்ல வைக்கும்
ஒரு வாய்ப்பு தந்ததற்கு
எடியூரப்பா அவர்களே
உங்களுக்கு மிக மிக நன்றி.


=============================================================


வேறொன்றும் இல்லை.

வேறொன்றும் இல்லை.
============================================ருத்ரா.

அந்த கத்திமுனையில்
நின்றுகொண்டு
உண்டு உடுத்து படுத்து
கனவுகளையும் தின்று
கொட்டை போட்டு
வித்தை காட்டுகிறேன்.
அதன் கூரிய முனை
அல்லது
மயிற்பீலி வருடல்
கூட‌
என் குடல்களை
சரிய வைத்து விட்டன.
ஒவ்வொரு எழுத்தும்
எனைத் தின்பதற்காக‌
தூண் பிளந்த சிங்கங்களாய்
புதிய புதிய கூரான‌
நகங்களையும் பற்களையும்
அறிவு ஆக்கி
இருட்டை கிழிக்கிறது.
"ஹரியைக்"காட்ட அல்ல.
ஏற்கனவே நம் அஞ்ஞானங்களால்
கந்தலாய் கிடக்கும்
ஹரியை மறைத்துகொள்ள.
இந்த
எழுத்துக்கள்
சொற்கள்
ஒரு நீண்ட குகையாய்
ஒரு ஜனனமே
மரணத்தின் கொட்டாவியாய்
வாய்பிளந்து அழைக்கிறது.
பிறப்புகளையும் இறப்புகளையும்
கழுவி தூய்மைப்படுத்தி
ஏதோ ஒன்றை
சலவை செய்து காட்டுகிறது.
உண்மையைத்தேடி
விடும் இந்த அம்புகள்
அத்தனையும் பொய்.
பொய்யைத்தவிர
வேறொன்றும் இல்லை.

=============================================

புதன், 16 மே, 2018

ஜிகினா முகடுகள்

ஜிகினா முகடுகள்

==================================================ருத்ரா



இலைகளின் பின்னலில் அதன்

கண்களில்

கண்ணடிக்கிறது இளஞ்சூரியன்.

அந்த நெருப்புக்குழம்புக்கும் கூடவா

கனிவாய்

ஒரு காதல் வேண்டிக்கிடக்கிறது?

நெருப்பு உமிழ்ந்த நெருப்பு உயிர்த்துளிகளுக்குள்

கூட‌

விஜய்சேதுபதிகளும் நயனதாராக்களும்

கை கோர்த்து இதழ் சுழிக்கும்

வண்ணக்கலவைகளின் எண்ண மயக்கங்களும் தான்

ஃபோட்டோஸ்பேர்களும் கொரானா மண்டலங்களும்!

ஓ! சூரியனே

உனக்கு வேண்டுமா

கொஞ்சம் பெப்ஸ்ம் கிக்ஸ்ம்?

அந்த தர்ப்பூசணி பிலிம் துண்டுகளை

முக வேர்வை தோய‌

சுவைத்துப்பார்!



அப்புறம்

நீ விழித்து எழுவதும்

படுக்கையில் போய் விழுந்து தூங்கிக்கொள்வதும்

அந்த விரி கடலும்

நிமிர் மலைகளும் இல்லை

இந்த கோடம்பாக்கத்து

ஜிகினா முகடுகள் தான்.



====================================================
24.07.2017 ல் எழுதியது.

செவ்வாய், 15 மே, 2018

பாலகுமாரன்

பாலகுமாரன்
=======================================ருத்ரா

மெர்க்குரிப் பூக்கள் எனும்
தொடர்கதை மூலம்
மற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத‌
ஒரு நெருடல் மூலையில்
தன் பிரகாசத்தை துவக்கினார்.
அவர் எழுத்துக்கள்
துண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல்
சொல் கோர்த்து வந்து
பக்கங்கள் நிறையும் போது
சிந்தனையின் கூர்மை அங்கே
பொய்மான் கரடு போல்
ஒரு பிரமிப்பான உவமையை
வேர் பிடித்து நிற்கும்.
அற்புத எழுத்தாளர் சுஜாதாவை
அடுத்து நிற்கும் நிழலா இவர்
என்று சில சமயங்களில் தோன்றலாம்.
இரும்புக்குதிரை தாயுமானவன்
போன்ற நாவல்கள்
இவர் தனித்தமைக்கு உயர்வான சான்றுகள்.
நவீனத்துவம் பின் நவீனத்துவமாக‌
முரண்டு பிடித்துக்கொண்டு
பிரசவம் ஆகும் போது
அந்த இலக்கியத்தின் வடிவத்தை
கன்னிக்குடம் உடைத்து
ரத்தம் சொட்ட சொட்ட‌
தமிழ்ச் சொற்களில் பிழிந்து தந்தவர்.
மிஸ்டிக் தனமாய் முகம் மறைக்கும்
அவர் குங்குமப்பொட்டில்
ஏதோ அபிராமி வழிபாடு தென்பட்டபோதும்
ஜெயகாந்த யதார்த்தத்தை
நிறைய தூவித்தருவார்.
படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கத்தோன்றாத‌
அருமையான நடை.
கரடு முரடாக நம்மை எங்கோ
தள்ளிக்கொண்டு போய்
ஒரு குகைக்குள் முட்ட வைப்பார்.
ஆம் ஆன்மீகத்தின் நெருக்கடிக்குள் தான்
நாத்திகம் நாற்று பாவுவதாக‌
காட்டுவார்.
வாழ்க்கையின் முற்றிப்போன‌
முரண்பாடுகள் தான்
தத்துவம் என்று உட்பொதிவாய்
நிறைய எழுதியுள்ளார்.
ஆம் ஒரு கோணத்தில் அந்த‌
வெண்தாடியில் சிவப்புப்பொட்டு
இனம் புரியாத ஒரு "மார்க்ஸ்"
போல தோன்றலாம்.
எழுத்தில்
அவருடைய அதிரடி நடைகள் தான்
சினிமாக்களுக்கு "வசனம்" எழுத
அழைத்துச்சென்றது.
கமல் ரஜனியோடு
இவர் வசனமும் அங்கே நடித்தது
என்றால் மிகையாகாது.
"நான் ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி"
என்ற "ப்ஞ்ச்"
நாளைய நமது செங்கோல் ஆகலாம்.
ஆனாலும் அந்த செங்கோல்
இவரது பேனாவிலிருந்து தான்
கிளைக்கின்றது.
எழுத்தை ஒரு மவுன ஆயுதம்
ஆக்கியவர் பாலகுமாரன்.
நாத்திகத்தின் ஒரு காக்டெயில் வாடையுடன்
ஆத்திக தோற்றம்
பொய்மை எனும் விசுவரூபம்
எடுப்பதை நாம் இவர் கதைகளில்
பார்க்கலாம்.
சிந்தனைகளின்
சைக்கடெலிக் எனும்
காமாசோமா வண்ணக்கலவையில்
சைகோத் தனங்களின்
சவ்வூடு பரவல் தான்
மனித வாழ்க்கை என்றே
தன் கதைகளில் நிறுவி நிற்பார்.
உபனிஷதங்கள் எனும் வைக்கோற்படப்பில்
நாத்திக ஊசி கிடப்பதை
கையில் எடுத்து தன் கதையின்
கந்தல் யதார்த்தங்களை அழகாய்
தைத்துத் தந்து இலக்கியம் படைத்தவர்
இந்த எழுத்துச்சித்தர்.
இவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

===========================================================


திங்கள், 14 மே, 2018

இரும்புக்குதிரை

இரும்புக்குதிரை
=========================================ருத்ரா

இது படத்திற்கான
விமர்சனம் அல்ல.
படம் வந்த விதத்திற்கான‌
விமர்சனம்.
காற்று வேகத்தில் பறக்க‌
காத்திருக்கும்
மற்ற படக்குதிரைகளின் முன்னே
இந்த "இரும்புக்குதிரை"
எப்படி முன்னே வந்தது?
லாயக்காரனும் குதிரையும்
ஒன்றாக இருக்கும் வசதியினால்
இது முன் வந்ததா?
திரைப்படத்துறையில்
நலிவடைந்த
காயம்பட்ட‌
குதிரைகளுக்கு எல்லாம்
மருத்துவம் செய்து
புத்துயிர் ஊட்டிய‌
விஷாலா
இப்படி கேள்விக்கணைகளால்
துளைக்கப்படுகிறார்?
உண்மையிலேயே இது ஒரு திரைப்படம் தானா?
இல்லை நூல்விட்டுப்பார்ப்போம்
என்று
யாரோ தங்கள் ராஜ்யத்துக்கு
யாகம் செய்ய வலம்வர விட்ட‌
அஸ்வமேதயாகக்"குதிரையா"?
இதில் என்ன உள்குத்து இருந்தாலும்
ஒரு கியூ வின் நியாயம்
முறிக்கப்படுவதில் எந்த‌
நியாயமும் இல்லை.
செப்பண்டி! ஜருகண்டி என்றால்
புளகாங்கிதம் அடைபவர்
தமிழா!நீடு வாழ்க!
என்பதில்
ஒரு கடாமுடா ஓசையைத்தான்
அவர் கேட்கிறாரோ?
என்ற ஐயமே
இங்கு தலைதூக்குகிறது?
"போங்கடா..
நீங்களும் உங்கள் தமிழ்ப்பற்றும்!
"மாட்டாடு மாட்டாடு மல்லிகே"
என்று
அங்கம் மகிழ்ந்து பாடியவர்க்கு
தங்க அரியாசனமும்
செங்கோலும் வெண்கொற்றக்குடையும்
சமர்ப்பிக்க‌
மந்தை மந்தையாய்
அந்த வசூல் சந்தைக்கு
வரிந்து கட்டிக்கொண்டிருப்பவர்கள் தானே
நீங்கள்.
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
நாமே மணம் முகர்ந்து பாராட்டுவது
நம் பண்பு தான்.
அதற்காக
அப்பூக்கள் நம் காதில்வைக்கப்படும்
தந்திரம் கூட புரியாமல் இருந்தால்
என்ன செய்வது?
அதற்காக‌
போர்வாளை எடடா என்று
அடடா புடடா என்பதில்
அர்த்தங்கள் ஏதும் இல்லை.
நம் காவிரியின் உயிர் ஓட்டத்தை
திசை திருப்ப
தினம் தினம் இந்த ஊடகங்கள்
கெட்டி மேளம் தட்டிக்கொண்டு தான்
இருக்கின்றன.
போகட்டும்
இந்த இரும்புக்குதிரைகள்
நேர்த்தடத்தில் ஓடட்டும்
என்ற கோரிக்கையுடன்
நம் பயணம் தொடர்வதே அறிவுடைமை!

=====================================================





ஞாயிறு, 13 மே, 2018

ரஜனி அவர்களே!

ரஜனி அவர்களே!
===========================================ருத்ரா


ரஜனி அவர்களே!
இவர்கள் அலைமோதுகிறார்கள்
நீங்கள் தான்
ஆட்சி அமைக்க வேண்டும்
என்று.
நீங்கள்
"2.0" வுக்கும்
"காலா"வுக்கும்
அல்லது
இனிமேல் எடுக்கப்போகும்
"கேங்க்ஸ்டரு"க்கும்
இந்த ரசிக அலைகளை
வைத்துக்கொண்டு
கோட்டை கட்டுகிறீர்கள்.
இவர்களும் ஒரு கோட்டையைத்தான்
கட்டுகிறார்கள்.
நீங்களும் ஒரு கோட்டையைத்தான்
கட்டுகிறீர்கள்.
எது அட்டை?
எது அசல்?
உலகம் எல்லாம்
உங்கள் முகவரி தான்.
உங்கள் முகத்தில் தான்
எங்கள் முகவரி இல்லை.
தமிழ் மண் வேர்த்து விறு விறுக்கும்
காவிரியின் வேர்வையில்
கரையெழுப்பிய கரிகாலன் வேர்வை தானே
ரத்தமாய் இருந்தது.
தமிழர்களை யுத்தத்தில்
ரத்தம் குடிக்க நினைத்த‌
அந்த சாளுக்கியர்களிடமா
இருந்தது காவிரி?
இந்த வரலாற்றைச் சொல்வதாய்
தெரியவில்லையே
காலா.
சொல் (கரி)காலா!
ஒரு மும்பை தாதாவுக்குள்
கருப்பு வைரத்தின் கிம்பர்லிகள்
இருக்கலாம்.
தமிழனின் தாகமும் வேகமுமாய்
இருக்கிற காவிரிக்கு
கொந்தளித்த தமிழனைப்பார்க்காமல்...
அந்த தமிழ் மண் கந்தலாய் ஆனதையும்
கணக்கில் எடுக்காமல்
சில அசம்பாவிதங்களால்
கசங்கிய சில காக்கிச்சட்டைகளுக்கு
நீங்கள் கர்ஜித்ததன்
அர்த்தம்
இன்னும் இந்த விசில் அலைகளுக்குப்
புரியவில்லையே!
காவிரியைச்சுருட்டி
வடவர்கள் பையில் போடும்
திட்டம் ஏதோ இருக்குமோ
என்ற அச்சம் இங்கே
படர்ந்து கிடக்கும்போது
தென்னிந்திய நதிகளை இணைப்போமா
என்று நீங்கள்
கிச்சு கிச்சு தாம்பாளாம்
கியா கியா தாம்பாளம்
என
மணலைக்குவித்துக்கொண்டு
விளையாடுவார்களே
சிறுவர்கள்
அதைப்போல அல்லவா பேசி
விசில் மழையில் நனைந்திருக்கிறீர்கள்!
காலாவில்
அந்த அடித்தட்டு மக்களுக்கு
நரம்புகள் சூடேற்றி
பஞ்ச் டயலாக்குகளிலும்
பாஞ்சு பாஞ்சு எகிறும் காட்சிகளிலும்
நீங்கள்
பின்னி பெடல் எடுத்திருக்கலாம்.
ஆனாலும்
கண்ணா! இன்னும் காலம் வரவில்லை அரசியலுக்கு!
என்று
உங்கள் கானல் நீர் படகுப்பயணம்
யாருடைய கொடி அசைப்புக்கு
காத்திருக்கிறது என்று
உங்களை மொய்த்துக்கிடக்கும்
பொய் அலைகளுக்கு தெரியவில்லை
என்று
இந்த "மெய்" அலைகளுக்கு நன்கு தெரியும்.
எங்கள் தமிழின்
ஒவ்வொரு "உயிர்மெய்"ஒலிப்புக்குள்ளும்
அந்த உண்மையின் குரல்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

====================================================




ஒரு பரிணாமம்

2014-06-28_10-46-32_211.jpg



ஒரு பரிணாமம்
========================================ருத்ரா

காத்து காத்து
கல் மீது உட்கார்ந்தேன்.
எப்போது வருவாய்?
காலம் நீண்டது.
சுருண்டது.
நெளிந்தது வளைந்தது..
பாம்பை பார்த்தவனுக்கு
கயிறு கூட பாம்பு தான்.
பாம்பையே பார்த்தறியாதவனுக்கு
பாம்பை கயிறு என்று
கையில் எடுப்பான்.
நீ
எத்தனையோ முறை என்னிடம்
பேசியிருக்கிறாய்.
கண்களை வீசியிருக்கிறாய்.
அந்த ஒரு பார்வையில்
வந்த ஒரு சொல்
இப்போது வரை
காத்திருப்பு எனும்
மலைப்பாம்பாய்
என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அது
முறுக்கினாலும் இன்பம்.
திருக்கினாலும் இன்பம்.
நீ
விழுங்கும் வரை காத்திருப்பேன்.

====================================================
படம் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் ஸூ. 20.07.2014.

தேடிக்கொண்டிருக்கிறேன்.

தேடிக்கொண்டிருக்கிறேன்.
==================================== ருத்ரா இ.பரமசிவன்

அதைத்தான் இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கால்சட்டை போட்டுக்கொண்டு
கோலி விளையாடிய போது
கனமான அந்த
கண்ணாடி கோலி குண்டுகளால்
அவன் கைவிரல் மூட்டுகளின்
மொழியை உடைத்து விடவேண்டும்
என்ற வெறியைத்தேடினேன்.
தட்டாம்பூச்சி சிறகுகளை
காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு
கிர்ரென்று அது போடும்
ஓசைக்குள்
அர்த்தம் புரியாத‌
நியாய வைசேஷிகத்தையும்
பூர்வ உத்தர மீமாம்சங்களையும்
தேடினேன் என்று
சுருக்கம் விழுந்த வயதுகளில்
நினைவுகளை சவைத்துத் துப்பும்போது
தெரிந்து கொண்டேன்.
அவளிடம் என்ன இருந்தது என்று
தெரியாமலேயே
அவளிடம் இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
வேறு வேறு கூட்டில்
இருவருக்கும்
ஆறேழு குஞ்சுகள்
சிறகடித்துக்கிடந்த போதும்
இன்னமும் அதைத் தேடிகொண்டிருக்கிறேன்.
இப்படி தேடுவது என்பது
டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களின்
அமுத ஊற்றுகளின் சங்கிலி.
கடவுள் என்பவனுக்கு
இந்த ஊற்றுகளை
சுவைக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து
பாக்கு புகையிலையோடு
நுண்ணிய கணிதத்தில் சுருட்டி
வாயில் போட்டு
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
மூளையோடு குதப்பிக்கொள்ள‌
அந்த கடவுளுக்குள்
ஒரு "எட்வர்டு விட்டன்"
இறங்கித் தூர் எடுக்கவேண்டுமே.
"குவாண்டம் நுரை"கோட்பாடு வரை
சூன்யத்துள் சூன்யத்தையே
பாதாளக்கரண்டி போட்டு..
ஹிக்ஸ் போஸான் தான்
அந்த ரகசியம் என்று
ஆற்றல் பிழம்பை உடைத்து
அந்த கொட்டையை எடுக்க‌
செர்ன் எனும் அணுவுலைக்குள்
நோண்டி நொங்கு எடுக்க..
தேடிக்கொண்டிருப்பதில்
அவனையும்
எப்படி கட்டி இழுத்துக்கொண்டிருப்பது?
கும்பாபிஷேக நெய்ப்பிசுக்கில்
அவன் நாக்கினால் சப்பிக்கொண்டிருக்கட்டும்.
நான் தேடுவதில்
பிரபஞ்ச நரம்புக்கூட்டங்கள்
தாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.
பேசாமல் அந்த தர்ப்பணங்களை
அவன் தின்று கொண்டிருக்கட்டும்.
துருப்பிடித்த ஸ்லோகங்களை
டிங்கரிங்க்கு அனுப்பி அல்லவா
நிமிர்த்திப்பார்க்க வேண்டும்.
கடவுளை கடவுளே
ஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து
பார்த்ததில்லை.
நானும் அதைத்தான் தேடுகிறேன்.
அவனுக்குப்பதில்
அவனுக்காக நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று
தெரியாமல்
இன்னமும் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

====================================================
20.03.2016ல் எழுதியது.



சனி, 12 மே, 2018

"நில் "

"நில் "
==========================================ருத்ரா இ பரமசிவன்.


நிழலை தேடி நடக்கிறேன்.
நேற்றுச்சொற்பொழிவில் தான் சொன்னார்கள்
எனக்குள்ளே
மாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று.
கடவுள் தேடி கை கூப்பினேன்.
முதுகுக்குப்பின்னே
எல்லாவேதங்களையும் மூட்டை கட்டி வைத்திருப்பதாய்
ஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்.
அந்த கனமான மூட்டையை பிரிப்பானேன் என்று
மயிற்பீலிகள் என்னை பிசையட்டும்
என்று விட்டு விட்டேன்.

காதலில் விழுந்தேன்.
அவள் சிதறிய புன்முறுவலே போதுமானது.
இனி என்ன பாஷ்யங்களின் தேவை இருக்கப்போகிறது?
மின்னல் விழுதூன்ற‌
தலையணை முகட்டினிலே
தூக்கத்துள்ளும்  தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்.

அரிசி புளி வத்தல் என்று
அந்த அஞ்சறைப்பெட்டி இடுக்குகளுக்குள்ளும்
தேடிப்பார்ந்தேன்.
வெள்ளிமீசையில் மினுக்கிய‌
நுண்ணிய பூச்சிகள் கூட‌
தன் வசம் "ஒரு நோவா" கப்பல் இருப்பதாகவும்
எல்லாப்பிரளயங்களுக்கும்
இங்கு புகலிடம் என்று
மீசையை மீசையை ஆட்டி
எதோ பிரசங்கம் செய்வது போல் இருந்தது.
என்ன சொல்கிறாய் என்று
என் சுண்டுவிரலை அதன் மீது வைத்தேன்.
அப்புறம் அதைக்காணவில்லை.
நசுங்கிப்போயிருந்தது.

வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கேட்டேன்.
அகராதி புரட்டப்போனவர்கள்
கல்லறைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைச்சுற்றி
என்னையும் சேர்த்து தான்
அநியாயங்களும் அக்கிரமங்களும்
மலிந்து போயினவே
என்ன செய்ய‌
என்று அவர்களைக்கேட்டேன்.
கையில் நிறைய
வில் அம்புகளையும்
மழுவாயுதங்களையும்
கோடரிகளையும் கலப்பைகளையும்
சங்கு சக்கரங்களையும்
மயில் ரெக்கை கொத்துகளோடு
புல்லாங்குழல் வாசிக்கும்
கிரீடங்களையும் கொடுத்தார்கள்
நீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று.
சரி என்று கிளம்பினேன்.
"நில்
இதையும் எடுத்துக்கொள்."
என்ன இது?
அரிதாரம் என்றார்கள்.
இதோ
அதை அங்கே தூவுகிறேன்
நம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
நாரதரின் சப்பளாக்கட்டையிலிருந்து
நாதன் முடி மேலிருக்கும் நல்ல பாம்பு வரைக்கும்
எல்லாம் இங்கு அரசியல் தான்.

======================================================

வியாழன், 10 மே, 2018

"செம வெய்ட்டு.."

"செம வெய்ட்டு.."
======================================ருத்ரா

காலா பாடல்
செம ஹிட்டுக்கு
அரங்கேற்றம் ஆகிவிட்டது.
அது என்ன "செம"?
அதாண்ணே.."செம்மை" என்பதன்
குறுக்கம்.
அப்புறம் "வெய்ட்டு"?
அத விடுங்கண்ணே!
அதில் ஒரு கொந்தளிப்பு இருக்கிறது.
காதல் என்றாலும்
சமுதாயம் என்றாலும்
இந்த பரபரப்பு தாண்ணே
இனிப்பு நெருப்பு எல்லாம்.
சூப்பர் ஸ்டாரின் மாப்ளை
"கொலவெரி"யில் தான்
கொஞ்சும் தமிழை
கைமா போட்டார்.
இருபத்திஒன்றாம் நூற்றாண்டு
இளைஞனுக்கு
யாழ் நரம்புகள்
காதுகளை கிழிக்கவேண்டும்.
ரத்தம் வடிந்தாலும்
இனிமை இனிமை இனிமை தானே
அவர்களுக்கு.
ரசிகர்களின் கடல்வெள்ளம்
ஆர்ப்பரித்ததில்
எல்லாம் அடி பட்டு போய்விடும்!
ஆங்கில "ராப்"பும்
மக்கள் இசை என்ற பெயரில்
கானாக்களுமே
காதுகளை நிறைக்கின்றன.
மெல்லிசை இன்னிசை எல்லாம்
புதிய பரிமாணங்களை
போர்த்துக்கொண்டு
ஒலியைத் "தூள் கிளப்புகின்றன"
பக்தி பாடல் கேசட்டுகளைப்போல‌
இவையும் இந்த
ரசிகர் கடல்வெள்ளத்துக்குள்
விற்பனையை தூள் கிளப்பும்.
உரிமை முழக்க‌
போராட்டப்பாடல்கள் தான்.
அவற்றிற்கு என்றுமே
நம் வணக்கங்கள் உண்டு.
ஏறத்தாழ‌
அரைநூற்றாண்டுக்கு முன்
கண்ணதாசன் வரிகளில்
"துடிக்கும் ரத்தம் பேசட்டும்!"
என்று
"துலாபாரம்"
நம் நெஞ்சையெல்லாம்
கிளர்ந்ததே
அந்த வரிகளின் இசையில்
இவற்றை
"சைபர்"பதியம்
போட்டுக்கொள்ள வேண்டியது தான்.

=============================================

இது சொற்பொழிவு அல்ல‌



இது சொற்பொழிவு அல்ல‌
========================================ருத்ரா இ பரமசிவன்.

சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும்.

"பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன்

ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம்.
இவன் சாப்பிட்டுருவான் நீ போ..

பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு..

சாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன்.

உனக்கு வேண்டாமா
அந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்...

தாயின் அன்பு பசியை போக்க இப்படி ஆரம்பித்த போதும்
குழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது
அவளது செயற்கையான அம்புகளே பாய்ந்தன.

அன்ர்ஜுனன் மீதும்
கிருஷ்ணர்
இந்த அம்பு மழையைத்தான் பொழிந்தார்.


அர்ஜுனன் இப்படித்தான்
அடம்பிடித்தான் போர்க்களத்தில்.
கிருஷ்ணர் கையாண்ட தந்திரங்கள்
எல்லாம் சமஸ்கிருத பாஷையில் இருந்தாலும்
மேலே சொன்னதைப்போன்றவை தான்.

சாங்கிய யோகம்
கர்ம..ஞான..சன்யாஸயோகங்கள்
விஞ்ஞான ஞான யோகங்கள்
அக்ஷர பிரம்ம யோகம்
ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
விபூதியோகம்
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ யோகம்
குணத்ரய...ச்ரத்தா த்ரய விபாக யோகங்கள்
தேவாசுர சம்பத் விபாக யோகம்
விஸ்வரூப தரிஸன யோகம்.
பக்தி யோகம்
புருஷோத்தம யோகம்
மோக்ஷ ஸன்யாஸ யோகம்

பாருங்கள் ஆச்சரியமாக இல்லையா?
கொலைகள் மிகுந்த அந்த கொல்லம்பட்டறையில்
இந்த ஈக்களுக்கு (யோகங்களுக்கு) என்ன வேலை?

யுத்தம் வேண்டாம் என்பதற்கு
"அமைதியை"ப்பாடும்
இனிய ரீங்காரங்களான‌
இந்த தேனீக்களை (அதே யோகங்கள்)
ரத்தத்தில் மொய்க்கும்
நாற்றம் பிடித்த ஈக்களாக மாற்றும்
ரசவாதமே இந்த வாதங்கள்.

இப்படி போர்க்களத்தில்
ஞான வேள்விக்கு அவசியம் என்ன?
அதற்கு
அர்ஜுனன் துவக்கிய வினாக்கள் மூலம்
கிருஷ்ணர்
கதி கலங்கி போனது தான் காரணம்.
அது விஷாத யோகம் எனப்படுகிறது.

குறி வைத்து அடிப்பதில் மன்னன் அல்லவா
அர்ஜுனன்.
வேதஞானத்தை வைத்தே
பிரம்மத்தின் மீது
பிர்ம்மத்தின் மர்மஸ்தானத்தின் மீதே
குறிவைத்து அடித்து விட்டான்.
அதில் வெல வெலத்ததன் விளைவே
கிருஷ்ணர் இத்தனை யோகங்களை
கொட்டிக்கவிழ்க்க வேண்டியிருக்கிறது.
பதிலுக்கு
அர்ஜுனனின் மீதும்
அதே பாணியில்
குறிவைத்து அடிக்கிறார் கிருஷ்ணர்.


//2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா

விஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து

உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு

தகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச்

சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத்

தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது.

இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான்.

அர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன்

உண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர்

புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக

வந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி

பகவான் தூண்டுகிறார்.//

http://srimadbhagavadgitatamil.blogspot.com/

மேற்கண்ட இரு சுலோகங்களும் அர்ஜுனனின் மையவிசையை

நிமிண்டிப்பார்க்கும் வேலையைத்தான் செய்கிறது.

இரண்டாவது சுலோகத்தில் அவரது குறி இது தான்.

அர்ஜுனா நீ என்ன ஆர்யன் தானே? வெட்கமாயில்லை உனக்கு?
வேதங்களில் ஆரியன் அல்லாதவனான திராவிடன் வேள்விகளின்

எதிரி.கடவுள்களின் எதிரி.அதாவது வேறு கடவுளைப் பற்றி பேசுபவர்கள்.
சிவனைபற்றி ஒரு விரோத மனப்பான்மை விஷ்ணு பக்தர்களிடம் இருந்த
போதும் சிவனும் விஷ்ணுவும் கூட்டணியாக இருந்து செய்த வதங்கள் பற்றி
நிறைய புராணங்கள் இருக்கின்றன.ஒரு வேளை சமன (சமண) மதம் பற்றிய‌
சிந்தனைகளை அர்ஜுனன் செய்ய ஆரம்பித்து விட்டானோ என்றும் கூட இந்த
தாக்குத‌லின் குறியாக இருக்கலாம்.பாண்டவர்கள் வனவாசம் என்றபெயரில் வாழ்க்கையை அதன் எளிமையை மனிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடே அர்ஜுனன் "காண்டீபத்தை நழுவ விட்டது"

"பொட்டைப்பயலா நீ"

மூன்றாவது சுலோகத்தில் "க்லைப்யம்" என்ற அந்த "கிருஷ்ணரின்" சொல்லில் மேற்கண்ட எள்ளலும் உசுப்பலுமே வெளிப்படுகிறது.

"ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் " என்ற வரியில்

"மன உறுதியில்லாத "சூத்ரனை"ப்போன்ற கோழையா நீ?"என்று கேட்கிற‌ மேல்தட்டு வர்க்க ஆவேசம் வெளிப்படுகிறது.

முதல் அத்தியாயத்தின் (அர்ஜுனனின் விஷாத யோகம்)47 ஸ்லோகங்கள் போக
எழுநூறு ஸ்லோகங்களின் மிச்ச சொச்சம்  யோக தத்துவங்களில் மிடைந்த அம்புகளில் எல்லாம் வர்ணாசிரம விஷமங்களும் யுத்த நெடியுமே அதிகம்.போர்க்களத்தில் நரம்பு முறுக்கேற்றவேண்டிய அவசியத்திற்கு இந்த நுண்மையான யோகங்கள் அவசியமே இல்லை.இதே பாணியில் கிருஷ்ண பகவானை உட்கார வைத்து வியாச பகவான் அர்ஜுனன் உருவில் உபதேசங்களின் மழை பெய்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.அந்த "யோகங்கள்"பாவம்  என்ன செய்யும்?

குழம்பியவனை தெளியவைப்பதற்குப்பதில் மேலும் குழம்பச்செய்து வில்லேந்த வைக்க கிருஷ்ணரின் தந்திரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் பிள்ளைக்கு சோறூட்டும் தாய் சொன்னதைப்போல கிருஷ்ணர் சொல்லும் யோகங்களில் எல்லாம் "விசுவரூப தரிஸன யோகம்" தான்
"பூச்சாண்டியைக்கூப்பிடுகிறேன் சாப்பிடுகிறாயா இல்லையா" என்று மிரட்டும் ரகம்.பிள்ளைக்கு சோறூட்டுவதும் யுத்தம் புரிய அம்பு தீட்டிக்கொடுப்பதும் ஒன்று இல்லை தான்.இருப்பினும் அதர்மத்தை அழிக்க தர்மத்தை ஏவி விட்டதாக நினைத்துக்கொள்வோம்.பாண்டவர்கள் கூட அந்த "அதர்மத்தில்" உள்ள முன் எழுத்து "அ" வை கண்டுகொள்ளவே இல்லை.அதை பூதாகரம் ஆக்கியவர் கிருஷ்ணர் தான்.அந்த "அ"வை அழிக்கும் போதும் பின்னாலேயே அந்த தர்மமும் அழிந்து போனதாகத்தானே மகாபாரதம் முத்தாய்ப்பு வைக்கிறது.ஏனெனில் கிருஷ்ண தத்துவம் என்பது பரமார்த்த உருவகம்.மனித உருவங்கொண்ட அந்த கடவுள் அவதாரம் லட்சக்கணக்கான மக்களின் ரத்தவெள்ளத்தில் தான் சம்பவாமி யுகே யுகே என்று காட்டவேண்டுமா?
ஒரு பெண் துகிலுரியப்படும்போது "உடுக்கை இழந்தவளின் உடுக்கையாக"
ஓடி வந்த அந்த பரமாத்மாவால் யுத்தம் புரியத்தூண்டும் "நியூரானை" அன்றே அழித்திருக்க முடியாதா? அந்த லட்சக்கணக்கான ஸ்லோகங்களின் ஒவ்வோரு ஒலித்துளியும் சத்யமேவ ஜயதே என்று சொல்லிக் கொண்டிருக்குமே. பகவான்களின் செயல்கள் எல்லாம் வெறும் பி.சி சர்க்காரின் இந்த்ரஜால் காமிக்ஸ் மட்டும் தானா?

//72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.//


அர்ஜுனனை வில்லேந்த வைப்பதற்காக சொன்ன யோகங்களின் சாரம் எல்லாம்
"போர் வேண்டாம்" என்பதில் தான் வந்து நிற்கும்.

சாங்கிய யோக அத்தியாயத்தின் 72வது ஸ்லோகம் மேலே சொல்லியிருப்பதை பாருங்கள்.

மனிதன் கடவுள் ஆவதே பரிமாணத்தின் உச்சம்.இந்த கடவுள் நிலையில் தர்ம அதர்ம மயக்கங்கள் மறைந்து போகின்றன.இந்த பிரபஞ்சத்தின் இத்தகைய மயக்கநிலைகளையெல்லாம் உரித்துப்போடுவதே மகா நிர்வாணம்.கடவுளுக்கு உடலே இல்லை அப்புறம் நிர்வாணம் எங்கே வந்தது?மண் பெண் பொன் ஆசைகளின் வடிவங்கள் தானே போர்கள்.இந்த பிரம்ம நிர்வாணம் அடைந்த பிறகு அர்ஜுனனுக்கு "காண்டீபம்" கண்ணுக்கே தெரியாதே.

ஒவ்வோரு ஸ்லோகமும் அந்த "பரமார்த்தம்" (பரம்பொருள்)பற்றி பேசும்போது
கடைசியில் அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தையே "பிரம்மாசிரமமாக" அல்லவா மாற்றியிருப்பான்.அங்கே பாஞ்சாலுக்கு துகில் அளித்தவன் இங்கே பார்த்தனின்
துகில்களை (பேராசை போன்றவற்றை)அழித்தவனாக (பிரம்ம நிர்வாணம்)அல்லவா தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். அப்படியிருந்தும் அர்ஜுனன் "சரி சரி" பகவானே எல்லாம் புரிந்து கொண்டேன் என்று கன்னத்தில்
அடித்துக்கொண்டு போர் புரிய கிளம்பி விட்டான் என்றால் ஒரு உண்மை நிரூபணம் ஆகி விட்டது.

இன்றைய தமிழன் அன்றைய தமிழனின் மிச்ச சொச்சம் என்பதும் அன்றைய அர்ஜுனன் இன்றைய தமிழனின் அச்சு வடிவம் என்பதும் தான் அது.

இன்று கோவிலில் தமிழர்கள் மணிக்கணக்காய் ஸ்லோகங்கள் கேட்டுவிட்டு
எல்லாம் புரிந்து விட்டது என்று வீடு திரும்பி மறுபடியும் சம்சார டி.வி சீரியலை தொடர்கிறார்களே அது போல் தான் எழுநூறு ஸ்லோகங்களையும் கேட்டு விட்டு "சாமி ஏதோ மந்திரம் சொல்கிறார்" சரி சாமி நமோ நமஹ
என்று யுத்தம் தொடங்கி விட்டான்.அத்தனை அர்த்தம் அவனுக்கு புரியாது.புரிந்தால் மகாபாரதம் திசை மாறியிருக்கும் என்பது கிருஷ்ணரும் அறிவார்.

அன்றும் இன்றும் என்றும் இதுவே தான் சமஸ்கிருதத்தின் அல்லது "த்ரமிள சமஸ்கிருதத்தின்" நிலை.

==============================================================
20.07.2014ல் எழுதியது.

புதன், 9 மே, 2018

காலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.

காலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.
===================================================
ருத்ரா

இது நிச்சயம் வடிவேலு காமெடி அல்ல.
இது மௌனமாய் ஒரு வெடி வைக்கும் சமாச்சாரம்.
தன்னைச்சார்ந்த சமூகத்தை சிந்திக்கும்
ஒருவர் இயக்கும் படம்.
அது சிறப்பிலும் சிறப்பு.
இந்த நாற்பத்திமூன்று ஆண்டுகளில்
ஸ்கிரிப்ட் எனும் திரைக்கதை
எனக்கு முன்
ஒரு திரைபோட்டு உட்கார்ந்து கொண்டு
இப்படி
இந்த சமுதாயத்தை
அதன் பிரக்ஞையின்
"ஸிப்பை"கிழித்து திறந்து காட்டியதில்லை.
இது திரைக்கதையின் பிரசவம் அல்ல.
மொத்த சமுதாயம்
நிறத்தாலும் மதத்தாலும்
பிரிந்து சல்லடையாய் இருப்பதை
அதன் ஒவ்வொரு கண் வழியேயும்
ரத்தம் ஒழுகுவதை
வலிமிகுந்த அந்த‌
நிசப்த யுத்தத்தை
மௌன இரைச்சல்களை
அட்லான்டிக் சீறல்களாய்
காட்ட முனைந்ததே
ரஞ்சித் எனும்
இன்னொரு இமயம் எனக்கு.
அதிலும் என்னை பயணிக்க வைத்துவிட்டார்.
ஆம்.
எனக்கு பாபா
ஒற்றைக்குழலோ இரட்டைக்குழலோ
வைத்த துப்பாக்கி அல்ல.
பல முனை சுழலும்
எந்திரத்துப்பாக்கி.
மனிதன் கருப்பு அல்ல.
பார்ப்பவர்களே
தன் ஒவ்வொரு ரத்த சிவப்பு அணுவைக்கூட‌
தார் பூசிக்கொண்டு
தர்க்க குதர்க்கங்களில்
பொந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மானிடம் என்ற
நியாயமும் உண்மையும்
சாக்கடைக்கருப்பில் அமிழ்த்தப்பட‌
இந்த காலா கருப்பன்
ஒரு போதும் அனுமதிக்க மாட்டான்.
அந்த முரட்டுப்பாறையை
பொடி பொடியாக்க‌
பாபாவையும் நான் ஆயுதம் ஆக்க‌
தயங்க மாட்டேன்.
இப்படித்தான்
சீறுகிறார் குமுறுகிறார்
ரஜனி அவர்கள்
அந்த திரையிசை வெளியீட்டு விழாவில்.
கடல்போல் எதிரே ரசிகர்கள்!
இத்தனையும் லட்சக்கணக்கான
வெறும் விசில்கள் தானா?
விடியல் காணத்துடிக்கும்
செங்கடல் பிளந்து கொண்டு
விடை தேடும் ஆவேசம் தான்
இது என்றால்
இந்நேரம் மோடியும் அமித்ஷாவும்
கர்நாடகாவைகூட மறந்து
இங்கு வந்து உட்கார்ந்து
"கௌடில்யரின் கடுஞ்சூத்ரத்தை "
சோழி போட்டு
குலுக்கிக்கொண்டிருப்பார்களே!
ஆம்
"இலங்கையைத்தாண்டுரா ராமா!
தண்ணீர் கொண்டுவா ராமா!
காவிரித்தண்ணீர் எல்லாம்
மறந்துருடா ராமா ராமா!
என்று ஒரு கயிற்றை
ஏற்கனவே
அவர் இடுப்பில் கட்டி யாகி விட்டது.
நாம் இழுக்க இழுக்க
அவர் இப்படித்தான் பேசுவார்
என்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்
பதியம் போடப்பட்டு விட்டது.
இந்த பாக்ஸ் ஆஃ பீஸ் ரொப்பும்
சமாச்சாரம் பற்றி
அலட்டிக்கொள்ள தேவையில்லை.
சினிமாக் கட்டத்தில்
என்ன வேண்டுமானாலும்
அவர் உமிழட்டும்.
இது தான் "அரசியல் இருக்கு"
என்று அர்த்தம்.
சினிமா கட்டத்தை விட்டு வெளியே
அந்த அரசியல் இருக்காது.
இது "அரசியல் இல்லை"
என்று அர்த்தம்.
எங்களது "அர்த்த சாஸ்திரம் "மட்டுமே
அவரிடம் இருக்கும்.
போகட்டும் விட்டுவிடலாம்.
அவர் கருப்புசட்டையை
துவைக்கப்போட்டால்
கசக்கிப்பிழிந்து வெளியே வருவது
காவி வர்ணமே."

=================================================













செவ்வாய், 8 மே, 2018

"இருட்டு அறையில் முரட்டுக்குத்து"

"இருட்டு அறையில் முரட்டுக்குத்து"
==============================================ருத்ரா

சரியான குத்து.
முகம் எல்லாம் ரத்தம் வழிகிறது.
நியாயங்கள்
கழுவேற்றப்படவும்
தராசு முள் பயன்படுகிறது.
இருட்டறையில்
பிலிம் கழுவி
வெளிச்சத்திலும்
அவர்கள் காட்டியது
மரண இருட்டு.
ஆபாசங்களின் ஆபாசம் இது.
ஆம் இது
சொற்கூட்டங்கள்
பிசைந்த
காகிதங்களில்
உயிர் எழுத்துக்கள்
அல்லது
எழுத்தின் உயிர்கள்
கற்பழிக்கப்படும்
ஆபாசம் இது.
மண்ணின் நீதியை
மக்களின் உரிமையை
கசாப்பு செய்யும் ஆபாசம் இது.
படத்தின் பாகம் 2
இன்னும் சில நாளில் ரிலீஸ்!
வாயில் ஈ என்ன‌
டினோசார்கள் நுழைந்தால் கூட‌
தெரியாமல்
வாய் பிளந்து கேட்கிறீர்கள்.
இது என்ன சினிமாக்கதையா?
அவர்கள்
நம் காவிரியை
நம் மீதே எச்சிலாய்
புளிச்சென்று
துப்பும் ஆபாசம் இது.
பரவாயில்லை என்று
முகத்தைத்துடைத்துக்கொண்டு
அடுத்த "துட்டு"க்கு (ஓட்டுக்கு)
கியூவில் நிற்க தயார் ஆகி விட்டீர்களா?
உயிர் இழந்த ஜனநாயகத்தை
ஆலிங்கனம் செய்துகொள்ளும்
ஆபாசம் தானே இது.
என்ன ஏது என்று தெரியாமல்
பட்டன் தட்டுவது தானே அது!
வள்ளுவன் இதைத்தான் அன்றே சொன்னான்
பொட்டில் அறைந்து!
"...இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று."

===================================================



மண்டமர் மருள்விழி

துரை.ந.உ vce.projects@gmail.com

(இந்த படத்துக்கு திரு.துரை ந.உ. அவர்களுக்கு மிக்க நன்றி)

மண்டமர் மருள்விழி
=========================================ருத்ரா இ பரமசிவன்.

அடுகளம் கண்டு அகலம் மொய்த்த‌
ஆயிரம் வேலின் புண்ணுமிழ் குருதியின்
தொலைச்சிய காலையும் மெல்ல நகும்
மெய்வேல் பறித்து களிற்றொடு போக்கி
இழிதரும் பஃறுளி உயிர்வளி பற்றி
இன்னும் இன்னும் கைபடு இரும்பிலை
எறிந்து பகை செறுக்கும் எரிவிழி குன்றன்.
புறப்புண் மறுத்து வடக்கிருந்து வீழ
இருத்தல் நோன்ற சேரல் அண்ணி
செயிர்க்கும் அண்ணல் படுவேல் மறந்து
வால்நகை செய்து கண்ணில் மின்னும்.
இருவேல் உண்டு என் உள் துளைக்க‌
குவளையுண்கண் அவள் நீள்விழி ஆங்கு என
இறும்பூது கொள்ளும் இன்னகை உதிர்க்கும்.
மண்பெறு அதிர் உறு மயிர்க்கண் முரசம்
உய்த்து ஒலியோடு ஓரும் தலைவன்
ஊண்மறுத்து உணக்கிய போழ்தும்
அவள் கொடுவில் புருவம் பண்ணிய மீட்டும்.
வெண்ணிப்பறந்தலை வெஞ்சமர் அட்ட‌
விழுமிய மார்பின் புண்ணுழை வேல்மழை
அனிச்சம் படர்ந்த அகலம் ஆகும்
அவள் தண்ணெடு வேல் விழி தொட்டனைத்தே
தொலையும் அகப்புற மற்றும் புறபுறப்புண்ணே.
முன்புகு வேலும் பின்படும் புண்ணென‌
களப்பழி நாணும் தகைத்த மறவன்
செருப் பட்டு அழிதல் ஒன்றே ஒள்மறம்
மற்றை புண் இனம் தள்ளியே ஏகும்.
கண்விழி வேல் அவள் வீசிய காலை
புண் எற்று.மண் எற்று.மற்று
அவள் எள்ளிய நகையே உயிர்ப்பறி செய்யும்.
பேழ்வாய் உழுவை எதிரும் பணைத்தோள்
புலிநகக் கீற்றும் பொன்னுரைத் தீற்றன்ன‌
அவள் வால் எயிறு பொறிகிளர் கீற்றும்
ஒக்கும் தீஞ்சுவை படுக்குமென உணருமால்.
மறம் பட்ட ஞான்றும் அவள் மடம் பட்ட ஞான்றும்
ஒருபால் பட்டு உயிர்த்தேன் அருந்தும்.
கடுஞ்சமர் தைதய நூறி புண்வழிந்துழியும்
அவள் மண்டமர் மருள்விழி மருந்து கொடு ஒற்றும்.


=======================================ருத்ரா இ பரமசிவன்.
இந்த சங்க நடை  செய்யுட்கவிதையை 
16.02.2015ல் எழுதினேன்.



திங்கள், 7 மே, 2018

திருட்டும் தீர்ப்பும்

திருட்டும் தீர்ப்பும் 
================================அமானுஷ்யபுத்ரன் 


மனத்தின் சந்து பொந்துகள் 
மலை முகடுகள் 
அங்கெல்லாம் 
ஒளிந்து கொள்ள ஓடுகிறாய். 
நீயே 
களவாடப்பட்டவன் தான். 
டி.என்.ஏ யின் 
முறுக்கிழையில் 
அமினோ அமிலங்கள் 
குத்தாட்டமும் குதியாட்டமும் 
போட்டுக்கொண்டதினாலும் 
அதன் இரண்டு உயிர்கள் 
ஏதோ ஒரு நள்ளிருட்டில் 
ஊஞ்சல் ஆடியதினாலும் 
வந்து விழுந்தாய். 

அந்த மனுஷ புத்திரனின் 
"ஜெனடிக்" சூத்திரம் 
எங்கிருந்தோ 
எதிலிருந்தோ 
கையாடப்பட்டது தான். 
பட்டினத்தார் சொன்னாலும் 
ஒன்றுதான். 
டாக்டர் ஹர்கோபிந்த் கொரானா 
சொன்னாலும் ஒன்றுதான். 
செல் எனும் 
உயிர்ச்சிற்றறைக்குள் 
ஒளிந்து கொண்டாலும் 
உன் நிழல் 
உன்னை திருடுகிறது. 
உன்னைத்தின்கிறது. 
உன் எலும்பையும் தாண்டி 
உன்னுள் 
விறைத்துக்கொண்டிருக்கும் 
லட்சக்கணக்கான 
ஆண்டுகளின் 
அச்சுப்பதிப்பு எல்லாமே 
அச்சப்பதிப்புகள் தான். 
அதனால் 
கல் எலும்பு ·பாசில்கள் கூட 
ஏ.கே 47 களை 
கருவுற்று வைத்திருக்கின்றன. 
இந்த இரத்தவெறி 
எத்தனை எத்தனை 
இருபத்தியன்றாம் நூற்றாண்டுகளை 
கவசம் வைத்துக் கொண்டு 
வந்தாலும் 
அது அழிக்கப்பட வேண்டும். 
அது துடைத்தெறியப்பட வேண்டும். 
ஏ புதிய மானிடமே 
உன் புதிய சுவாசத்தில் 
அன்பின் சூறாவளிகள் 
சுழற்றி வந்து வீசட்டும். 

ஆனாலும் 
அந்த திருட்டு சுமை 
உன் மீது 
இன்னும் ஏறியிருக்கிறது. 
உன் முதுகில் 
உன் நெற்றியில் 
கண்ணுக்கு தெரியாத 
அந்த முத்திரை 
நீ பண்ணும் கலவரங்களில் 
களேபரங்களில் 
நன்கு தெரிகிறது. 
புரட்டி புரட்டி படித்துப்பார்க்கலாம். 
"இந்த தம்ளர் இந்த ஓட்டலில் இருந்து 
திருடப்பட்டது.".... 
திருடப்பட்ட அந்த வெறி... 
உன்னை நீயே சுரண்டிக்கொள்வது... 
உன்னை நீயே படுகொலை செய்து கொள்வது... 
உனக்கு நீயே பாசாங்கு காட்டிக்கொள்வது... 
உன்னை நீ கனவு கான்பதற்குப்பதில் 
உன்னை நீயே உணவு ஆக்கிக்கொண்டாய்... 
உன் மானுட ஒளிக்கு 
கருவறை கட்ட அடித்தளம் போட்டு 
முகம் தெரியாத 
ஏதோ ஒரு அதிகாரியிடம் 
"பிளான்" அப்புரூவலும் வாங்கி 
பூசை செய்து சூடம் கொளுத்தி 
நீ கட்டிடம் எழுப்பியபோது 
நீ கண்டாய்.. 
ஒரு பொய் நின்றது. 
கள்ளத்தனத்தின் பெரும்பூதம் 
உன் முன் நின்றது. 
உன் கருவறையை 
புனிதமாக்க வந்தவன் என்று 
சொன்னாய். 
ஆனால் 
வைரக்கல் பதித்து 
சலவைக்கல் விரித்து 
நீ பூவேலை செய்ததெல்லாம் 
உன் கபாலங்களைக் 
குவித்து வைக்கும் 
"குடோனு"க்குத் தான். 
எல்லாம் திருடப்பட்டது தான். 

கொலைவெறியில் 
சூடேறிய வாசகங்கள் எல்லாம் 
திருடப்பட்டது தான். 
துப்பாக்கிகள் மனிதனை 
திருடிக்கொண்டன. 
எல்லாம் திருடப்பட்டது தான். 
கடவுள்களும் சைத்தான்களுமே 
அந்த திருட்டு வழக்குக்கு 
கூண்டில் ஏறி 
நின்று கொண்டிருக்கிறார்கள். 
தீர்ப்புகள் 
எழுதுவதற்கும் 
அவர்களே 
அங்கு அமர்ந்திருக்கிறார்கள். 

==============================================
(அமானுஷ்யபுத்ரன் என்கிற 
ருத்ரா இ பரமசிவன் எழுதியது.)
(23-2-2008 ல் "வார்ப்பு" இதழில் வெளியானது)

மராமரங்கள்

SDC12305.JPG


மராமரங்கள்
===================================ருத்ரா இ.பரமசிவன்



மறைந்து கொள்ளத்தானே வேண்டும்
உனக்கு.
இதையே மராமரங்களாக்கிக்கொள்.

தெய்வம்
காதல்
சத்தியம்
தர்மம்
அதர்மம்
ஜனநாயம்
ஆத்மீகம்
நாத்திகம்
சாதி மதங்கள்.

எப்படி வேண்டுமானாலும்
பெயர் சூட்டிக்கொள் மனிதனே!
இவற்றிலிருந்து
கள்ளிப்பால் சொட்டுவது போல்
ரத்தம் கொட்டுகிறது
தினமும் உன் சொற்களில்.
மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்
கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய்.
உன் பிம்பங்களுக்கு
நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய்.
மனிதனுக்கு மனிதன்
உறவாடுவதாய் நடத்தும்
உன் நாடகத்தில்
அன்பு எனும்
இதயங்கள் உரசிக்கொள்வதில்
உனக்கு பொறி தட்டுவதல்லையே
ஏன்?

உன் வீட்டுக்குப்பையை
இரவோடு இரவாக‌
அடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.
மறுநாள் காலையில்
உன் வீட்டுவாசலில்
சூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்
மீன் எலும்பு மிச்சங்களும்
மற்றும் மற்றும்
உன் கால் இடறுகிறது.
மாம்பழம் நீ சாப்பிடவில்லை.
மீன் சாப்பிடவில்லை.
எப்படி இது?
உன்னைப்போல்
அடுத்த வீட்டுக்காரன்
விட்ட அம்புகள் இவை.
உன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.
அதனால்
உன் வீட்டுத்திண்ணைக்கு
இந்த கனமான இரும்புக்கிராதிகள்.
என் நிழலைக்கூட இன்னோருவன்
எச்சில் படுத்தல் ஆகுமா?
என்று
தனிமை வட்டம் ஒன்றை
உன் கழுத்தை இறுக்கும்
கயிற்றுச்சுருக்காய் வைத்துக்கொண்டிருக்கிறாய்.

பார்
இந்த மரங்களை.
பட்டாம்பூச்சிகள் கூட
இங்கே வந்து
படுக்கை விரிப்பதுண்டு.
சிறு குருவிகளும்
தங்கள் சுகமான குகைகளை
குடைந்து கொள்வதுண்டு.
அவைகளின்
அஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்
அவற்றின் பூக்குஞ்சுகளே.
பொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்
அவற்றின் பசியாற்ற‌
இந்த நீலவானம் முழுதும்
உழுது விட்டு
இப்போது தான் வந்திருக்கின்றன.

நல்ல உள்ளமும் தீய உள்ளமும்
அம்பு போட்டு
விளயாடும் இடங்களே
மனங்கள் எனும் மராமரங்கள்.
மரத்தில் மறைந்த மரமும்
மரத்தை மறைத்த மரமும்
இந்த கள்ளிகளுக்கும் தெரியும்.
அவற்றின்
முட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.
இயற்கையின் உள்ளுயிர்
கூடு விட்டு கூடு பாயும்
வித்தையில் தான்
எல்லா விஞ்ஞான‌ங்களும் இங்கே
கழைக்கூத்தாடித்தனம் செய்கிறது.
இங்கே
வரிசையாய் நின்று கொண்டிருப்பது
திருவள்ளுவரா? திரு மூலரா?
ஐன்ஸ்டீனா? நீல்ஸ் போரா?
ஹெய்ஸன்பர்க்கா?பெட்ரண்ட் ரஸ்ஸலா?
நம் ராமானுஜனா?இல்லை ராமானுஜரா?

=============================================
20.05.2014 ல் எழுதியது.