புதன், 23 மார்ச், 2022

பொற் காலச்சுவடிகள்

பொற் காலச்சுவடிகள்

--------------------------------------------------


https://www.facebook.com/kallidaians/photos/a.230586160843132/999759537259120/



சாலை மற்றும் மரம் இன் படமாக இருக்கக்கூடும்




_______________________________________

1950 களில் இங்கு வந்து 

அந்த பெஞ்சில் அமர்ந்து

வாங்கிய காற்றில்

வாழ்க்கையின் வண்ணப்படங்கள்

இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கல்லிடைக்குறிச்சியே!

உன் மண் வாசனையில்

உலகின் ஏதோ ஒரு முனையில்

அதோ இருக்கிறதே

அந்த "கலிஃபோனியக்கடற்கரை"

அங்கிருந்து கூட‌

கிச்சு கிச்சு தாம்பாளம்

கியா கியா தாம்பாளம்

என்று விளையாடத்தோன்றுகிறது.

______________________________________23.03.2022

கவிஞர் ருத்ரா

செவ்வாய், 22 மார்ச், 2022

உலக கவிதை தினம்

 உலக கவிதை தினம்

_____________________________________

ருத்ரா



"ஒரு அரை பெக் போட்டால் போதும்

கவிதை வரும் என்றானே

என்று

போட்டேன்.

ஊகூம்..கவிதை வரவில்லை.

தலை சுற்றலும் நிற்கவில்லை."

இது 

இந்த உலகம் எழுதிய கவிதை.


_____________________________________


செவ்வாய், 15 மார்ச், 2022

ஜெய் பாதாள பைரவி

 ஜெய் பாதாள பைரவி

_____________________________________ருத்ரா


1950 களில் ஒரு புகழ்பெற்ற மந்திரவாதிக்கதை ஒன்று படமாக்கப்பட்டது.எஸ் வி ரங்காராவ் என் டி ராமராவ் போன்றோர் நடித்த அற்புதமான திரைப்படம் அது.நமக்கு பிடிபடாத விஷயங்களை அப்படி ஆகாசத்திலிருந்து வரவழைத்துப் பார்க்கும் இயல்பை சித்தரிக்கும் படமே. குவாண்டம் மெகானிக்ஸ் கூட அப்படியொரு "ஜெய் பாதாள பைரவி" தான்.ஏனென்றால் இந்த குவாண்டம் மெகானிக்ஸை விஞ்ஞான உலகுக்கு கொண்டுவந்த "நீல்ஸ் போர்" கூறுவதைப்பாருங்கள்.

"குவாண்டம் மெகனிக்ஸ் என்றால் என்ன என்று அறிபவன் முதலில் "அதிர்ச்சி"அடைந்தாக வேண்டும்.அப்படி அதிர்ச்சி அடையாதவன் குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி அறிந்தவனாகக்கருதப்பட மாட்டான்." 

சரி.உலகப்புகழ் பெற்ற "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்" சொல்வதைப்பார்த்தால் ஏதேது குவாண்டம் மெகானிக்ஸ் என்பது நிச்சயம் ஒரு "ஜீ பூம்பா" தான்.ஏனெனில் அவர் குவாண்டம் மெகானிக்ஸ் என்பது "ரியல் ப்ளாக் மேஜிக் கால்குலஸ்" தான் என்கிறார்.

ஏன் குவாண்டம் மெகானிக்ஸ் இப்படி புதிர் ஆகி எல்லோரையும் குழப்பியது?

வேறு ஒன்றுமில்லை. நம் வடிவேலுவும் என்னத்தெ கன்னையாவும் ஒரு சினிமாவில் காமெடி செய்தார்களே

"வரூஉ உ உ ம்..ஆனா வரா அ அ து" என்று.

அதே தான் "குவாண்டம் மெகானிக்ஸ்" 

ஸ்டாடிஸ்டிகல் மேதெமேடிக்ஸ் குறிப்பிடுகிற "ப்ராபபலிடி" (அதாவதுநிகழ்தகைவு) தான் குவாண்டம் மெகானிக்ஸின் அடிப்படை.

இப்போது நாமும் அந்த பாதாள பைரவியை நோக்கி பயணிப்போமாக!


_________________________________________________________________________


திங்கள், 14 மார்ச், 2022

சுத்தமாகின

 

அந்த "வேடனும்" "செம்படவனும்" 

தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

ராமனும் கிருஷ்ணனும் 

வெளியேறி விட்டார்கள்.

கோவில்கள் சுத்தமாகின என்று 

வாத்தியங்கள் சத்தம் போட்டன.


-------------------------------------------------------------------

ருத்ரா 


வானம் அல்ல

வானம் அல்ல . . . . .

------------------------------------------------


அண்ணாந்து பார்க்கப்படுவதற்கு 

அல்ல வானம்.

உன் படிக்கட்டுகள் அவை.

படி. . படி . .படி..படி..

----------------------------------------------------

ருத்ரா 

உயர்ந்த கவிதை.

 உயர்ந்த கவிதை.

____________________________________ருத்ரா



வரிகளை

நீட்டி மடக்கி

ஒடித்து குறுக்கி

எழுதி விட்டால் 

அது கவிதையா?

சரி.

வரிகளை குவியல் குவியலாய்

அடுக்கி அழகாய்

வரிசைப்படுத்தி வைத்திருந்தால்

அது கட்டுரை.


அதற்குள்  உணர்சசித் தீ மூட்டி 

சொற்களை சமைத்து வைத்திருந்தால் 

அது 

கதை அல்லது நாவல்.


எதற்கு இந்த சிரமம்?

அதை வெள்ளைக்காகிதமாய்

அப்படியே காட்டியிருந்தால்

.............

விடுங்கள்.

மூச்.

சப்தம் காட்டாதீர்கள்.

மௌனமாய் இருங்கள்.

அதில் அது 

இன்னும் வெளிப்படவில்லை.

கன்னிக்குடம் உடையட்டும் 

காத்திருங்கள்...

இது தான்

வலி மிகுந்த ஆனால்

இருளைப்  பிசைந்து கொண்டு 

வந்த 

ஒளி மிகுந்த கவிதை.

உலகிலேயே மிகச்சிறந்த கவிதை.

ஒலியில்லாமலேயே  ஒரு

ஒலி கேட்கிறதா?


"குவா..குவா..குவா"


தலைப்பு இது தான்

"பிரச‌வம்"


_______________________________________



ஞாயிறு, 13 மார்ச், 2022

சவ்வூடு பரவல் (8)

 சவ்வூடு பரவல் (8)




எங்கே போனது எல்லாம்?


2022

2023

2024

. . . . . 

எல்லாவற்றையும் தின்றுவிட்ட‌

கணிப்பொறிகளும்

ராமர்கோயிலுமே

இங்கு மிச்சம்.


_____________________________ருத்ரா





சவ்வூடு பரவல் (7)

 சவ்வூடு பரவல் (7)




உத்தரப்பிரதேசம்

‍‍‍‍‍_________________________ருத்ரா


மக்கள் என்றால் ஜனநாயகம் 

என்று அர்த்தம் சொன்னார்கள்.

ரோடு ரோலர் அடியில் 

நசுங்கிய

இந்த மண் புழுக்களுக்கு 

என்ன அர்த்தம்?


___________________________________________________

சனி, 12 மார்ச், 2022

சவ்வூடு பரவல் (6)

 

சவ்வூடு பரவல் (6)

--------------------------------------



கடவுள்


கடவுளும் மனிதனும்

விளையாடிக்கொள்ள‌

மனிதன் செய்த‌

பொம்மை இது.


__________________________ருத்ரா

சவ்வூடு பரவல் (5)

 சவ்வூடு பரவல் (5)



பஞ்சாப்.


சிங்கம் 

அத்தனை பற்களையும் காட்டி 

உறுமியது.

பாவம் ... அத்தனையும் 

ரப்பர்!


--------------------------------------------------------

ருத்ரா.

சவ்வூடு பரவல் (4)

சவ்வூடு பரவல் (4)



இஎம்வி !



போதும் 

இந்த "மரத்துப்போன"

ஓட்டுக்களை வைத்துக்கொண்டு 

என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்.

ஆளை விடுங்கள்.


------------------------------------------------------------------

ருத்ரா 

 

சவ்வூடு பரவல் (3)

 சவ்வூடு பரவல் (3)




உடுக்கைகள்.


கோவிலில் பெரிய உடுக்கைகள் 

ஒலித்தன.

பாவம்!

சிவன் எப்பவோ அந்த 

ஹியரிங் எய்டை 

கழற்றி வைத்து விட்டான்.


------------------------------------------------------------------

ருத்ரா 

சவ்வூடு பரவல் (2)

 சவ்வூடு பரவல் (2)

-----------------------------------------------------



பஞ்சமன் 


"பிரமனை த் "  தரிசிக்க 

விஷ்ணு சஹஸ்ர நாமம் 

சொல்லிய பிறகு 

அதிலிருந்து ஒரு மனிதன் வந்து 

விழுந்தான்.

அவனை யாரும் தொடமுடியவில்லை! 

------------------------------------------------

ருத்ரா 

சவ்வூடு பரவல்

 

சவ்வூடு பரவல் (1)

---------------------------------------------



வானத்தை கையால் கொஞ்சம் 

நுள்ளிப்பார்த்தேன்.

எங்கோ  ஒரு கோவிலில்

அந்த கற்சிலைக்கு வலித்தது!

__________________________________

ருத்ரா


வெள்ளி, 11 மார்ச், 2022

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.

______________________________________‍________ருத்ரா



என்னத்தைச்சொல்ல?

உ.பி யில் நிகழ்ந்த 

ஜனநாயக எழுச்சியைப்பற்றி.

மனிதர்கள் இன்னும்

புழுக்கள் நிலையில் இருக்கிறார்கள்.

இந்த இருட்டுப்பிழம்பிலிருந்து

பரிணாம வெளிச்சத்தின் கீற்றுகள்

அந்த புழு பூச்சிகளுக்கு

என்றைக்கு விடியல் இமைவிளிம்புகளை

திறக்கும்?

எதிர்க்கட்சிகள் 

ஒன்றிணைய வேண்டும் 

இல்லாவிட்டால்

அங்கே கல்லறைகளில் தான்

ஜனநாயகம் 

எலும்புக்கூடுகளின் எச்சமாகி கிடக்கும்

என்ற திகிலூட்டும் 

உண்மையை புரிந்துக்கொள்ளாத‌

மரத்துப்போன அல்ல மரித்துப்போன‌

சிந்தனைகளின்

சித்திரமே

இப்போது நாம் பார்க்கிறோம்.

மேற்கிளையிலிருந்து 

அடிக்கிளையை வெட்டும்

பதவி வெறி விளையாட்டில்

நம் ஜனநாயகம் 

என்றைக்கோ தூக்கில் ஏற்றப்பட்டு விட்டது.

இந்த வெற்றியைக்களிக்கும்

அந்த நிழல்மிருகம்

மக்கள் மீது படர்த்தியிருக்கும்

சாதி மத சிலந்திப்பின்னல்கள்

புரிந்து கொள்ளப்படாத வரை

இந்த "ஃப்ராங்கென்ஸ்டீன்" இளிக்கும்

மரணச்சிரிப்புகளே

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.


__________________________________________


செவ்வாய், 8 மார்ச், 2022

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா?

______________________________________________

ருத்ரா





பெண்ணே!


பெரும் யுகமே நீ.


உனக்கு இந்த‌


ஒரு நாள் போதுமா?


காலப்பிழம்பின்


ஒவ்வொரு நானோ செகண்டிலும் கூட‌


உன் பங்கு தான்.


உலகத்துடிப்புகளின்


அதிர்வுகளே 


இங்கு இயக்கி எனும் இசக்கியாய்


இருப்பதாய்


கிராமத்து ஆலமரத்தடிகள்


சொல்லிக்கொண்டிருகின்றனவே.


எது எப்படி இருப்பினும்


வீடுகளில் இன்னும் காட்டுமிராண்டிகளாய்


இருந்து கொண்டு


உனக்கு நாங்கள்


கிடாய் வெட்டி பொங்கல் வைக்கிறோமே.


தெய்வம் என்று


கூப்பாடு போடுகிறோமே.


கணிப்பொறி எனும் கனமான கல்வியில்


திளைத்த போதும்


மனிதனை


ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்


என்று 


உரித்து உரித்து ஆய்வு செய்தபோதும்


மனிதம் என்பதன் 


உட்பொருளை உணரவில்லையே


இந்த மனிதன்.


பெண் என்றவுடன்


ஆண் பால் பெண் பால்


என்று ஒரு பூதம் வளர்ந்து


தீ மூட்டுகிறதே!


அறிவு எனும் ஆற்றலுக்கு கூட‌


பிகினி மாட்டி


விளம்பரம் செய்து


மிருக வதையை பங்கு மூலதனமாய்


பெருக்கி 


லாபம் எனும் சப்பு கொட்டும்


சரித்திரத்தை தானே


ஓ!மனிதா


உன் முகமும் அகமும்


வரி வரியாய் எழுதிக்குவிக்கிறது.


பச்சையாய் ஒரு 


புல் கீற்று அந்த மண்திட்டை


கிழித்துக்கொண்டு சிரிக்கிறதே


கிளர்ந்துகொண்டு ஒலிக்கிறதே


அது


உனக்கு புரியும் வரை


உன் புண்ணாக்கு 


நாகரிகங்களையெல்லாம்


கொண்டுபோய் 


குப்பையில் கொட்டு.


எரிமலைத்தினவுகளை


சிந்தனையின் தீக்குச்சி முனைகளில்


கர்ப்பம் தரித்துக்கொண்டு


எரிந்து காட்டும் பெண்மையை


மகளிர் தினக்கொண்டாட்டங்கள் எனும்


உன் மத்தாப்புகளைக்கொண்டு


அவிக்க முற்படும் வேடங்களைத்


தூக்கி யெறி.


பெண்மை எனும் கனலை


கனவு எனும் வர்ணக்குமிழியாய் ஆக்கும்


குப்பைமேடா


இந்த சமுதாயம்?


பெண்மையின்

 

அல்ல..அல்ல‌


உண்மையின் அந்த‌


யுகத் தீயில்


கழற்றி எறி


உன் முகமூடிகளை!


________________________________________________







________________________________________________________

ஞாயிறு, 6 மார்ச், 2022

இழுத்துச்சென்றன எழுத்துக்கள்.

 


இழுத்துச்சென்றன எழுத்துக்கள்.

__________________________________________ருத்ரா



உன்னைப் பற்றித்தான் 

எழுதத் துவங்கினேன்.

ஒரு இனிய மென் விடியல் போல...

பூஞ்சாரல் போல...

அந்த பவளமல்லியின் வலைவீசும்

அற்புத மணத்தைப்போல...

தன் சிறகின் அதிர்வுகளால் 

இந்த பிரபஞ்சத்தையே

உலுக்கி உதிர்க்கும் அந்த‌

ஊசிச் சிட்டுக்குருவியைப்போல...

எதைச் சொல்வது?

எதை என் மௌனத்தூரிகை கொண்டு

உன் மோகன வெள்ளத்தை வண்ணம் குழைப்பது?

எதை வருடி வருடி 

சொற்களின் அர்த்தங்களுக்குள் எல்லாம்

அர்த்தம் விளங்காமல் அர்த்தம் சிந்திக்கொண்டிருக்கும்

அந்த அர்த்தத்தை வெளியே இழுத்துக்கொண்டு வருவது?

அல்ல அல்ல..

அதோ அது

அந்த உன் விழியோரத்து

மின்வெட்டுப்பார்வையின் 

சரிந்த‌ கோணத்து

ஒரு மாணிக்கத்தருணத்தின் விளிம்பின்

எழுத்துக்குள் ஒரு நுண்ணெழுத்து அல்லவா

என்னை 

இழுத்துக்கொண்டு செல்கிறது.

நான் எழுதியதா?

நீ எழுதியதா?

தெரியவில்லை.

மண்டை உடைக்கும் கணித சமன்பாடுகளில்

ப்ளாக் ஹோல் எனும் அந்த கருந்துளை

ஒரு விஞ்ஞான அதிசயத்தை

தேனில் குழைத்த கசப்பு சூரணத்தைப்போல்

நாவில் சொட்டுகளாய் ஊறி

உள்ளிழுப்பது போல்

அந்த எழுத்துக்கள் என்னை

ஒரு இனிய சூனியத்துக்குள்

இழுத்துக்கொண்டு சென்றன.


_______________________________________________

சனி, 5 மார்ச், 2022

கனவு

 


கனவு

_____________________________________________ருத்ரா


மனதின் விளிம்பு நோக்கி

ஒரு பயணம் இது.

வாழ்வின் சந்து பொந்துகளில்

அடைந்து கிடக்கும் 

தங்கக்குமிழிகளை

கைக்கொண்டு ஏதோ ஒரு சாதனை

புரிந்ததாய் 

மனதுள் மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும்

வானவில் ஓரங்களின்

சந்திப்பு முனை இது.

இதன் சுவடு இல்லாமல்

மனித வாழ்க்கை என்பது வெறும்

நிகழ்வுகளின்

எலும்புக்கூடு தான்.

ரத்தமும் சதையுமாய் வண்ண வண்ண‌

ஆசைகள் 

மனிதனை எப்போதும்

பட்டாம்பூச்சியின் புழுக்கூட்டு மண்டலமாய்

சுற்றிச் சுற்றிப் பின்னிக்கொள்கின்றன.

ஓ!மனிதா!

உடைத்துக்கொண்டு வெளியே வா!

உன் சிறகு மூச்சுகளில்

ஏழு வண்ணத்தோகையின் சிலிர்ப்பாய்

ஒரு இனிய புயல்

வீசி வீசி உன்னை

உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்.

இந்த வாழ்க்கை அவலங்களின்

பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து

புலம்பல் சேற்றில் புதைந்து விடாதே!

எழுச்சிகளின் பறவையாய்

இதோ எழுந்து விடு.

இந்த வானங்கள் உன் பாதைக்கு

ரத்தினக்கம்பளம் விரித்துக்கொண்டு

காத்திருக்கின்றன.

உன் ஆசைகள் 

உன் ஆவேசங்கள்

உன் எண்ணங்களின் மின்னல் கீற்றுகள்

எல்லாம் 

இதோ உன்னை

உனக்கே ஒரு விஸ்வரூபமாய்

எல்லாம் காட்டுகின்றன.

எழுச்சி கொள்!

இதுவே உன் முகம்.

இதுவே உன் அகம்.

இந்த உலகம் உனக்கு அசைபோட‌

சுவைகளை 

ஒரு வேர்க்கடலைப் பொட்டலமாய்

இதோ உனக்கு 

வீசி வீட்டு ஓடுகிறது.

வாழ்கையின் சுவையே

வாழ்க்கையின் அர்த்தம்.

புரிந்துகொள்.

உன் கனவு உனக்குள்

உன்னை பிரசவம் செய்து 

உன்னை உனக்குத்தரும்

அற்புத தருணங்களின் பூங்கொத்து இது.

மனிதா!

உன் சிற்பத்தை நீயே

செதுக்கிக் கொண்டே இரு!


________________________________________________

செவ்வாய், 1 மார்ச், 2022

செம்மல் அமரர் சங்கரலிங்கனார்!

 


இன்று வெறும் எலும்புக்கூடாய்

உயிரற்றுக்கிடக்கிற‌

தமிழ் நாடு எனும் பெயருக்கு

"உயிர்" தந்தவர்

செம்மல் அமரர் சங்கரலிங்கனார்!

அந்த உயிர் மூச்சில்

ஓ தமிழர்களே

இன்றாவது உயிர் பெறுங்கள்.

சமஸ்கிருத பிணத்தை நீங்கள்

இன்னுமா சுமந்து கொண்டிருப்பது?


______________________செங்கீரன்

இவன் ஒரு "அகர முதல"..மனிதன்.

 

27 பிப்ரவரி, பிற்பகல் 12:06க்கு 
1 நபர் மற்றும் தாடி இன் படமாக இருக்கக்கூடும்
பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் அன்பை ..!!!?
பில் கிளிண்டன்
(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம் ?
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர்.
இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில்
“ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்”
(Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு..
6.5 மில்லியன் டாலர்
(30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த
ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார்.
ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிவிட்டு திரும்பினார்.
ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.
ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார்.
ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள முடியாது என பணிவுடன் மறுத்துவிட்டார்.
ஐ.நா சபை விருத
20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.
பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.
பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன்,
ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார்.
அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார்
1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. 'தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்' என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.
Only service mind has a beautiful Heart's
படித்து பார்த்தேன் மனம் பதிவிட்டேன்...
E Paramasivan Paramasivan
1 கருத்து
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்
1 கருத்து

  • இவன் ஒரு "அகர முதல"..மனிதன்.

  • E Paramasivan Paramasivan
    கடவுள் என்பதற்கு அகராதி குறிப்பிட்டு எந்த சொல்லையும் தரவில்லை.மனித இனம் மற்றும் உயிர் இனங்கள் எனும் கோடி கோடி சொல்லுக்குள் தேடி அதை கண்டுபிடித்த உணர்வே வருகிறது அய்யா
    பாலம் கல்யாணசுந்தரம் அவர்களை இங்கே படித்த போது.கடவுள் இல்லை என்ற ஒரு முனையும் கடவுள் உண்டு என்ற ஒரு முனையும் மோதிக்கொள்ளும் முனை கூட ஒரு "கல்பாக்கம் தான்".அந்த அன்பின் கதிர் வீச்சு மையம் அய்யா அவர்கள்.கடவுளர்களின் அவதாரங்கள் எனும் கொலுப்பொம்மைகளைத்தான்
    இன்னும் கட்டிக்கொண்டு அதாவது இருட்டை மட்டுமே தின்று கிடக்கும் நமக்கு என்றைக்கு "கண்கள் முளைக்கும்?"________________ருத்ரா
    • விரும்பு
    • பதிலளி
    • 4 நி