சனி, 20 ஜூலை, 2024

குற்றால அருவி.

 


குற்றால அருவி.

_______________________


இத்தனை பேர்

இத்தனை நாளாக‌

குளித்துக்கொண்டிருக்கிறார்களே

அந்த திவலைகளின்

கவலைகளை கேட்டறிந்தார்களா?

அந்த மணித்துளிகளின்

உள் பொதிந்து இருக்கும்

மனத்துளிகளை

ஓர்மையோடு தழுவியதுண்டா?

எங்கோ

வானம் கிழிந்து கொடுத்த‌

நீர்ப்பிழம்பு

பாறையில் மண்டை சிதறி

சூரியன் குத்தி குத்தி

கொப்பளித்த‌

அந்த ஏழுவர்ண ரத்தத்திலா

இவர்கள் குளியல்?

மரத்துப்போன மனிதர்களுக்கு

மண்ணும் பாறையும் கூட பேசும்

என்று

தெரிந்திருக்கவா போகிறது?


____________________________________________

கல்லாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக