வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌



ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌
==================================================================
ருத்ரா


"உன்னை என் நிழல் என்றோ
என்னை உன் நிழல் என்றோ
கூற முடியாது.
மண்ணும் விண்ணும்
ஒரே சமன்பாட்டில் வந்திருக்கிறது.
கொசு இஸ் ஈகுவல் டு அந்துப்பூச்சி கரப்பான்பூச்சி ஸ்குவேர்
என்று
இ இஸ் ஈக்குவல் டு எம் சி ஸ்குவேர் போல‌
கூறிக்கொள்ளலாம்.
உயிரை 
இவர்கள் கடைந்து கடைந்து பார்த்தும்
அதிலிருந்து
இன்னும்
ஆத்மா வெண்ணையை எடுக்கமுடியவில்லை.
காற்றின் இடைவெளிக்கும்
பிளந்து பார்த்தும் 
ஆத்மா தெரியவில்லை."

இரண்டும்
தன் காதுகளில் மொய்த்த ஈக்களை
விரட்ட‌
கொம்பை கொம்பை ஆட்டின.
வயதுகளின் மூப்பில்
இரண்டும்
எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டன!
வீட்டுக்காரன் 
எப்போதோ சொல்லிஅனுப்பி விட்டான்
இன்னும் அவர்கள் வரவில்லை

"அது சரி!
அத்வைதம் கூட‌
ஒரு யுனிஃபிகேஷன் தியரி தான் என்று
என்று
இங்கே வந்த ஒரு பெரியவர் பேசினாரே.
அவர் ரிட்டயர்டு  ஃஃபிஸிக்ஸ் ப்ரொஃபெசராமே!
அப்போ
மாட்டின் (பசு) பிறப்பு உறுப்பு 
லெட்சுமி என்று 
கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.
மனிதர்களில் பெண்களின் 
பிறப்பு மூலமான கர்ப்பகிருகங்கள் மட்டும்
எப்படி நரக வாசல்கள் ஆயிற்று?
தோ...பாரு ரொம்பப் பேசாதே"
..............

...........

அவர்கள் வந்து விட்டனர்.
கொம்புகளை சிலுப்பினாலும் விடவில்லை.
லாரிகளில்
அவை எங்கோ சென்றன.
அவற்றின் இறைச்சியில்
அத்வைதம் இல்லை.
சிவனை கறிசோறு ஆக்கி விட்டு
லெட்சுமியை மட்டும் காப்பாற்ற‌
இவர்கள் 
கசாப்பு கத்தியை உயர்த்தினார்கள்.
மனித இறைச்சி கிடைத்தது.
அந்த கத்தியும்
இறைச்சியும் 
கிசு கிசுத்துக்கொண்டன‌
"அத்வைதத்தை"

======================================================



வியாழன், 8 அக்டோபர், 2015

அது





அது
======================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

அதை இன்னமும் தேடுகிறேன்.
அது என்ன என்று
இன்னும் எல்லோரும் தேடுகிறார்கள்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் எல்லாம்
திரும்ப திரும்ப‌
கொட்டிக்கவிழ்த்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எங்கே இருக்கிறது?
என் வயிற்றிலா?
அல்லது சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
அந்த 22 அடி நீள‌ குடல்களிலா?
அந்த பஞ்சு நுரைப்பூங்காவனமாகிய‌
நுரையீரலிலா?
அல்லது
துடித்து துடித்து நுரை கக்கி ஓடி
வயதுகள் எனும்
மைல்கற்களை நொறுக்கிக்கொண்டு ஓடும்
கையளவு குதிரையான‌
இதயத்திலா?
அந்த டி என் ஏ , ஆர் என் ஏ சங்கிலிகளிலா?
மூளையின் 
அந்த மடிப்புகளிலா?
நீயூரான்ககளிலும் சைனாப்டிக் ஜங்க்ஷன்களிலும்
அதனுள் நுணுக்கமாய் 
ஜமா பந்தி நடத்திக்கொண்டிருக்கும்
அந்த "பர்கிஞ்சே" செல்களிலும்
என்று
இண்டு இடுக்குகளில் எல்லாம்
அது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறதே!
அது என்ன?
உடலின் நவத்துவாரங்கள் வழியே 
வந்து போகும் 
காற்றையும் கூட‌
பதஞ்சலி சூத்திரத்தின் படி
பக்குவப்படுத்திப் பார்த்து விட்டோமே
கையில் கிடைக்கவில்லை அது. 
கருத்தில் அகப்படவில்லை அது.
ஆம்
நான் தேடுவது அதோ அந்த...
ஒரு ஒளியாண்டு
அதாவது பத்து ட்ரில்லியன் கி.மீ
கனமுள்ள ஈயக்கட்டியைக்கூட‌
வெகு சுலபமாய் புகுந்து துளைத்து
அந்தப்பக்கம் போய்
இன்னும் பல பில்லியன் மைல்களை
கடந்து போய்க்கொண்டிருக்குமாமே
அந்த‌
"நியூட்ரினோ"வைத்தான்
"ஆத்மா"வை அல்ல!

=======================================================