திங்கள், 31 டிசம்பர், 2018

HAPPY NEW YEAR (3)


HAPPY NEW YEAR (3)
============================================ருத்ரா

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
என்றன
உன் கண்கள்!
என் நெஞ்சுக்குள்
நீ இருந்து கொண்டு
அதையும் கேட்டிருப்பாய்!
காலம்
எல்லோரையும் முட்டாள் ஆக்கும்
விளையாட்டு இது.
அதையும் கூட முட்டாள் ஆக்குவதே
நம் காதல்.
நம் கண்களின் சிமிட்டல் தோறும்
நேனோ செகண்டுகள்
அனிச்ச மலர்களாய்
மெல்லிதாய் சொல்லிக்கொள்ளுமே
ஹேப்பியஸ்ட் நியூயெஸ்ட் லவ்
என்று!
"கண்ணைப்பார் சிரி"
இது காலத்தை ஏமாற்ற‌
நாம் வைக்கும்
போர்டு.

=============================================







ஹேப்பி நியூ இயர் (2)

ஹேப்பி நியூ இயர் (2)
====================================ருத்ரா

"ஹேப்பி நியூ இயர்!"
வர்ண அட்டையில் எழுதிக்காட்டினான்
பேரன்.
இற்றுப்போன தமிழ்ச்சாய்வு
நாற்காலியில்
கிடந்த தாத்தா
இருமிக்கொண்டே சொன்னார்.
"கல்லுக்கும் மண்ணுக்கும்
முன் தோன்றினாலும்
தமிழுக்கு என்றுமே
இனிய புத்தாண்டு தான்
என் அன்புப் பேரனே!"

==============================================

இதோ ஒரு புத்தாண்டு


இதோ ஒரு புத்தாண்டு
=====================================================ருத்ரா


இன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணியில்
வானம் பிளக்கப்பொகிறது.
புதிய எண்ணால் வர்ணம் பூசப்பட்ட‌
காலப்பிழம்பு
காவடி ஆடப்போகிறது.
பொங்கும் உற்சாகம்
இளைய தலைமுறையின்
பிடரியை
சிலிர்க்கச்செய்கிறது.
இசைக்கருவிகள்
தோல் கிழிந்து நரம்பு அறுந்து
ஒலிப்பிரளயத்தை பிய்த்துப்போடும்..
சென்ற ஆண்டை கணக்குத்தீர்க்கும்
ஊடகங்கள்
நிகழ்வுகளை
பழைய பேப்பர்களைப்போல்
நிறுத்துப்போடும்.
மனம் பிழிந்த மரணங்கள்
மிச்சம் இருக்கிற கண்ணீரையும்
வழித்துப்போடும்.
சினிமாப்படங்கள்
வசூல் சரித்திரங்களை முன்னே பிதுக்கும்.
மானிடம் மலர்ச்சியை வெளிப்படுத்தும்
வரலாற்று மைல்கற்கள் எல்லாம்
கவனிப்பாரற்று
பறவைகள் எச்சம் இட்டதில்
அபிஷேகம் நடந்திருக்கும்.
அட!
புத்தாண்டு பிறக்கட்டும்!
பலூன்களும் பட்டாசுகளும்
கொண்டாடி விட்டுப்போகட்டும்.
உன் சிந்தனைப்படிவங்களில்
ஏன் இந்த பாழ் நிலை?
மூளையை செதுக்கி
முற்றிய தொழில் நுட்பத்தில்
ந‌ம்
முகமே மாறிப்போனது.
நம் பல் நரம்பின்
துளிர் முனைகள் கூட
"டேட்டா"வாய் மாறி
எங்கோ ஆவணப்படுத்தப்படுகிறது.
மனித அந்தரங்கங்கள்
பாப் அப் மசாலாக்களாய்
விளம்பர எச்சில் இலைகளால்
அசிங்கப்படுத்தப்படுகின்றன.
புத்தாண்டு குத்தாட்டத்திற்கு
இந்த எச்சில் இலைகள் கூட‌
எழுச்சி கொண்டு
ஆடுகின்றன.பாடுகின்றன.
மனிதமை கழன்று போன‌
மனிதனே
இந்த காலண்டர் தாள்களா
காலப்பேரலைகளின் அடையாளங்கள்?
ஆலய மணியின் நாக்குகள்
எழுப்பும் ஓசையில்
ஒரு புனிதம் பூசியிருக்கிறோம்.

நம்பிக்கை
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
அவலம்
நம்பிக்கையின்மைகள்
எல்லாம் கலந்த‌
காக்டெயில் கிண்ணத்திலிருந்து
ஒரு விழுங்கல் பெற‌
அதோ
அந்த தருணங்கள் அழைக்கின்றன.
காளைகள் சீறுகின்றன.
இந்த தடவையாவது
அவற்றின் கொம்புகளைப் பிடித்து
அடக்கி விடு.
ஆம்.
அந்த போர்வைகளையெல்லாம்
உதறி எறி!

=====================================================





ஞாயிறு, 30 டிசம்பர், 2018

"கர் புர்" விஸ்வாஸம்.

"கர் புர்" விஸ்வாஸம்.
============================================ருத்ரா

இந்த அட்டப்புலிகளின்
கர் புர் சத்தங்கள்
தாங்க முடியல.
நிமிடத்துக்கு நிமிடம்
லட்சம் லட்சம் ஈசல்கள்
இந்த ட்விட்டர்களில்
விழுந்து மாண்டு போகின்றன.
அந்த கொல மாஸ
பொடி மாஸ் பண்ணத்தான்
இவர்
தல எடுத்துருக்காராம்.
என்னடா இது
கன்னடா கலாட்டாவா இருக்கு?
அவரு
நரச்ச தலையிலே
கொஞ்சம் வெள்ளையை
இழைய விட்டிருக்காருன்னா
இவரும்
அதே "ப்ளாக் அண்ட ஒயிட்"ல‌
"விக்"கை வச்சு செஞ்சுருக்காரு.
"ஆசை நாயகன்" அன்று ஆடிய‌
நிழல் நடனத்திலேயே
நிழலாகிப்போனவர்கள்
தமிழன் வாழும் நிஜ வாழ்க்கையை
தொலைத்தே விட்டனர்.
தமிழா! தமிழா!
உங்களை முட்டித்தள்ள வரும்
ஆதிக்க சக்திகளை நெட்டித்தள்ள‌
இந்த ஜிகினாக்காளைகளை
வைத்துக்கொண்டா
ஜல்லிக்கட்டு நடத்தப்போகிறாய்?
அந்த மெரினா கடற்கரை
செத்த மீன்கள் நாறும்
மணற்கரை அல்ல தமிழா!
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
என்று பாடினானே  கண்ணதாசன்.
அந்த மணல் எல்லாம் புண்ணாகலாமா
தமிழா!
அனல் பூக்களின் மகரந்தங்கள்
அங்கு இறைந்து கிடப்பதை
நீ அறிய வில்லையா?
சினிமாவின் சில்லறைச்சத்தங்களிலா
உன் சரித்திரம் முரசு கொட்டுவது?
"விழித்துக்கொள் தமிழா"
திரும்ப திரும்ப ஒலிப்பதால்
கீறல் விழுந்த வரிகள் அல்ல இவை.
திரும்பவே திரும்பாமல்
போய்விடுமோ
நம் செந்தமிழ் வெளிச்சம்
எனும் ஏக்கமே
இங்கு உரத்து ஒலிக்கின்றது.
"ஆம்.
மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இது.
"விழித்துக்கொள் தமிழா".

==============================================================


ஹேப்பி நியூ இயர் (1)

ஹேப்பி நியூ இயர் (1)
=======================================ருத்ரா

புத்தாண்டுகளுக்கு
மொழியில்லை தான்.
பாருங்கள்
பக்தர்களின்
இந்த பாம்புவரிசையை!
தமிழ்க்கோயில்களில்
ஆங்கிலப்புத்தாண்டுக்கு
சமஸ்கிருதத்தில்
அர்ச்சனைகள்.
ஹேப்பி நியூ இயரை
"விஷ்ணு சகஸ்ர நாமத்தில்"
ஒப்பிக்கிறார்
அர்ச்சகர்.
புரிந்துகொண்டவர்கள்
இன்னும்
புரியவில்லையே என்று
கண்மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
புரியாதவர்களோ
புரியாததற்கே  புளகாங்கிதம் கொண்டு
கன்னத்தில் தட்டி
கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
காலப்பாம்பே!
இதைப்பார்த்தாயா?
வருடங்கள் எனும் மைல் கற்களே
நகரும் அடையாளங்களாய்
சரசரவென
உன் மீது சித்திரங்களாய்
ஓடிக்கொண்டிருக்கின்றனவே!
புதிய நானோ செகண்ட்
பிறந்த உடனேயே இறந்தகாலம்
ஆனதால்
தன் நெற்றியின் மீதே
இன்னொரு புதிய நானோ செகண்டை
காலண்டராய் ஆணி அடித்து
மாட்டிக்கொண்டிருக்கிறது.
காலம் என்பதன்
அர்த்தத்தின் விளிம்பே
அர்த்தம் அற்றது என்பது தான்
ஒரு ஆச்சரியமான முரண்.
அதோ ஆலய மணி ஒலிக்கிறது.
இல்லை இல்லை
என்பதே அங்கு ஒலிக்கிறது.
நீங்கள் இன்னும் அறிவு என்பதை
ஸ்பர்சிக்கவே
இல்லை என்பது தான் அது.
ஆம்
நீங்கள் இன்னும் அதை தொடவில்லை
என்று தான்
இந்த ஆத்திகம்
நாத்திகம் சொல்ல வைக்கிறது!

======================================================



`


சனி, 29 டிசம்பர், 2018

மின்னற்பீலிகள் (7)

மின்னற்பீலிகள் (7)
============================================ருத்ரா

காதலிப்பதை விட‌
காதலிக்கப்படுவதில் தான்
காதலின் நுட்பம்
வெளிப்படும் என்று
கவிதைகள் எழுதினார்கள்.
கண்ணாடி பாட்டில்களில்
கலர் கலராய் கிடக்கும்
சாக்கலேட்டுகளைப் பார்த்து
ஏங்கும்
குழந்தையைப்போல்
காத்துக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள்
நான் காதலிக்கப்பட்டேன்.
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
எல்லையில்லை.
சாக்கலேட் மழையில் நான்.
இருப்பினும்
இனிமையாய் ஒரு ஆர்வம்
குறு குறுத்தது!
அவளிடம் கேட்டேன்.
"என்னைக் காதலிக்க என்ன காரணம்?"
அவள்
உறுத்து என்னைப்பார்த்தாள்.
அப்புறம் முகம் திருப்பிப்போனவள் தான்!
சாக்கலேட்டுகளின்
கண்ணாடி பாட்டில் உடைந்து போனது.
காதல்
உருவாக நுட்பம் சொன்ன கவிஞர்களே!
உடைந்து போகும் நுட்பத்தையும்
ஏன்
எழுதாமல் விட்டீர்கள்?

=============================================================

அண்ணே ..அண்ணே (2)

அண்ணே ..அண்ணே (2)
==================================================ருத்ரா
(ஒரு அரசியல் காமெடி)


ஏண்ணே ..ஒண்ணோடு  சைபரைக் கூட்டினா என்ன வரும்ணே ?

இவரு பெரிய்ய கணித மேதை ..சரிதாண்டா..
சைபரைக்  கூட்டினாலும் ஒண்ணு தானேடா வரும்.

அது தான் இல்லே!

என்னடா சொல்றே?

பி ஜே பி காரங்க கணக்கே வேறே. அவங்க சொல்றாங்க ஒண்ணு ப்ளஸ் ஸீரோன்னா அஞ்சுங்கறாங்க.

என்னடா ?எப்பிடிடா?

இப்ப கூட்டணின்னு முட்டை தான் இருக்கு.அத குஞ்சு பொரிக்க வைக்கிற
மெஷின் டெல்லிலே இருக்குங்கிறாங்க.

அடேங்கப்பா சாமி! அடுத்த "அமித்ஷா" நீ தாண்டா!
ஆள விடுறா ஓடீர்ரேன் ...

இவர் ஓடுகிறார் ..அவர் சிரிக்கிறார்.

==================================================================

அடங்க மறு

அடங்க மறு
==========================================ருத்ரா
கருஞ்சிறுத்தை
உறுமல்களையெல்லாம்
கபாலியாக்கி
கல்லாப்பெட்டியை
ரொப்பிக்கொண்ட சூப்பர்ஸ்டாரைப்
பார்த்து
சூடு போட்டுக்கொண்ட‌
ஜெயம் ரவி
வழக்கமான போலீஸ் மசாலா
வில்லன் மோதல்களை
சினிமா ஆக்கியிருக்கிறார்.
அவருடைய ஃபார்முலா நடிப்பில்
வழக்கமான ஃப்ரேம்
பொருத்தப்பட்டு
நரம்பு துடிக்க நடித்திருக்கிறார்.
அடங்க மறு எனும்
சொற்றொடர் இப்படத்திற்கு
பொருந்தவில்லை.
கொசு அடிக்க‌
பீரங்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

சமுதாயச்சுரண்டல்
என்பதை மட்டுமே
வேதமாகக்கொண்ட‌
ஆண்டவன் எனும்
ஆளுபவனுக்கும்

வாய்மைக்குள்
பொய்மையை
பொந்து வைத்திருக்கும்
ஆண்டவன் எனும்
கற்பனைக்கும்
மனிதன் மண்டியிடவேண்டும்.

அறிவை உதறிவிட்டு
அவர்கள் ஆணவத்தில்
அடங்கிக்கிடக்க வேண்டும்.
சாதி மத சங்கிலிகளில்
பிணைக்கப்பட்டு
மண்டியிடவேண்டும்.

இதை எதிர்த்து முழங்கு.
என்று
இக்குரலின் நெருப்புப்பிழம்போடு
வெளிப்படுவதே
"அடங்க மறு" என்பது.
வில்லன்களை வைத்துக்கொண்டு
பொம்மைப்போர் செய்யவா
இச்சொல்லை பயன்படுத்துவது?

சாஞ்சா சாயிற பக்கம்
சாயிற செம்மறியாடுகள்
இந்த சினிமா ரசிகர்கள்
என்பதை மட்டுமே
கருத்தில் கொண்டு
உருவான இப்படத்தில்
ஆழமான அந்த சொற்கள்
ஆழமற்ற சல சலப்புகளை
மட்டுமே சத்தம் காட்டுகின்றன.
மானிட நேயமிக்க‌
சமுதாய உருவம் சமைக்க‌
எவருக்கும் இங்கு முனைப்பு இல்லை.
அண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை
பூச்சாண்டி காட்டி காதில்
பூ சுற்றியிருக்கிறார்கள் நிறைய.

பொழுதை நாம் போக்கமுடியாது.
பொழுதே போ என்று நாம் அதை
விரட்ட முடியாது.
அது நம்மை விரட்டி விரட்டி
ஓட வைப்பதைத் தான்
"பொழுது போக்கினோம்"
என்று சொல்லிக்கொள்கிறோம்.
அப்படி
பொழுது போக்க
பொருத்தமான படம் இது.
அரைத்த மாவையே அரைக்கும்
கதை என்றாலும்
அலுப்பு தட்டவிடவில்லை
ஜெயம் ரவி.
பெயருக்கு ஏற்ப அவர்
"ஜெயித்து"விட்டர்.

===================================================






துடிப்போம்...

துடிப்போம்...
===========================================ருத்ரா


ஒரு பூவை நீட்டி
ப்ரோபோஸ் பண்ணினேன்.
நான் எதிர்பார்த்தது தான்.
மறுத்தாய் கடுமையான சொற்களில்.
நீ நினைத்தாய்
என்னை ஒரு ஊசியிலைக்காட்டுக்குள்
தள்ளினாய் என்று.
கூரிய முட்களில் நான்
ரத்தச்சேற்றில் கிடப்பேன் என்று.
சரி தான்.
இந்த புண்களின் காடு
என்னோடு போகட்டும்!
நீ
ஏன் இப்படி
தூக்கமில்லாமல் புழுவாய் துடிக்கிறாய்?
கோடி கோடி அனிச்ச மலர்களைக்கொண்டு
செய்தது அல்லவா உன் படுக்கை?
உன்னை நெருடுவது
நானே தான் என்று
உனக்கு
என்றைக்கு புரியும்?
புரியும் வரை
துடிப்போம் புழுக்களாய்
இந்த இதயச்சிமிழ்களில்!

============================================

சின்னப்புயல்

சின்னப்புயல்
=========================================ருத்ரா

மூளிப்பாறையாய்
மொட்டைத்தனமாய்
ஒரு பெரும்பாறை
உன் எதிரே
உருண்டு உருண்டு
நசுக்கிக்கொண்டிருக்கிறது.
"தேர்தலுக்கு"
முகூர்த்தநாள் குறித்தபின்
உன்னிடம்
காகித உளி ஒன்று
தருவார்கள்.
உன்னை இந்த நசுங்கலில் இருந்துக்
காத்துக்கொள்ள‌
ஜனநாயக சிற்பம் ஒன்று செதுக்கவேண்டும்.
இந்த அசுரப்பாறைக்கும்
ஆயிரம் கை முளைப்பதுண்டு.
அத்தனை கையிலும்
கரன்சி கரன்சி கரன்சி தான்.
ஊழல் என்னும் வாய் வழியே
உன்னைத்தின்று
உன்னை உறிஞ்சி
கொழுத்த இந்த பாறையை
என்ன செய்யப்போகிறாய்?
உனக்கு
எத்தனை திட்டம் தீட்டியது இது?
அதுவும் கூட‌
இந்த அசுர எந்திரத்துக்கு
நீ
ஓட்டுத்தீனிகள் தருவதற்கே.
உன் பட்டினியில்
அவர்கள் பசி தீர்த்துக்கொண்டார்கள்.
உன் அறியாமையில்
அவர்கள் மத்தாப்பு கொளுத்திக்கொண்டார்கள்.
சாதி மதங்கள் என்று
உன்னை பிளந்து வைத்திருக்கிறார்களே!
மூட சம்பிரதாயங்கள் கொண்டு
உன்னைப் புதைத்து வைத்திருக்கிறார்களே!
என்ன செய்யப்போகிறாய்?
சிற்பமா வடிக்கப்போகிறாய்.
இது வரை நீ
நீ வடித்தது தானே
உன்னை அற்பம் ஆக்கி
அழிவுப்பாதைக்கு
இட்டுச்சென்று கொண்டிருக்கிறது.
நீ உருவாக்கிய‌
இந்த பாறை மிருகத்துக்குள்
மறுபடியும் கூழாகி கரைந்து போகாதே.
பட்டன் தட்டி பட்டன் தட்டி
நீ சின்னப்பயலாய்
விளையாடிக்கொண்டிராதே!
இப்போதாவது நீ
ஒரு சின்னப்புயலாய் சீறினால் போதும்.
உன் அவலங்களின்
சின்னங்கள் எல்லாம்
சின்னா பின்னமாகட்டும்.
ஆம்...நீ
ஒரு சின்னப்புயலாய் சீறினால் போதும்!

===============================================




வியாழன், 27 டிசம்பர், 2018

பேசும் சித்திரம்

பேசும் சித்திரம்
================================================ருத்ரா.

தொழில் நுட்பம்
மனிதனை
மூளையின் புழு ஆக்கிவிட்டது.
அது நெளிவதற்குக் கூட‌
இந்த பிரபஞ்சங்கள் எல்லாம்
போதவில்லை.
காலம் கூட‌
இதன் தீனியாகியது.
இதன்
இப்போதைய "நேனோ செகண்டுக்குள்"
இதை நொறுக்கித்தள்ளி விட்டு
முளைவிடும்
அடுத்த நேனோ செகண்டின்
முகம் மட்டுமே
இங்கு பேசுகிறது.
ஒரு ஐந்து நிமிடம் முன்னே
குடித்த காபி கூட‌
பல நூற்றாண்டுகள் பழசாகி விடுகின்றன.
நினைவுகளை அசைபோடும்
பழைய பஞ்சாங்கப்பேர்வழிகள்
பரண்களில் தூக்கி வீசப்படுகின்றனர்.
நீ எழுதியது
எனக்குப்பிடித்தால்
"லைக்" தானே
விரல் வழியே கசிய விடுவது தானே
எழுத்தின் நிறம்!
ஆனால்
நம் விரல் வழியே
லைக்கை பிடுங்கிவிடும்
தொழில் நுட்பம் கூட வந்துவிட்டது.
நம்மை நமக்குத்தெரியாமல் கூட‌
நாமே நம்மை
அசிங்கமாக பார்க்கவைத்து
விளம்பரம் பண்ணி
காசு பார்க்கும் வியாபர அரக்கனுக்கு
கை கட்டி நிற்கும்
இந்த தொழில்நுட்பம்
ஒரு "அழகிய வளையல் பூச்சியா?"
இல்லை
நம் தலைமுறைகளையே
விழுங்கி ஏப்பம் விடும்
அனக்கொண்டா பாம்புகளா?
மானிட நண்பா!
அழிவின்
விளிம்பில் நின்று கொண்டு
அந்த கிராஃபிக்ஸையே
செல்ஃபி எடுத்து
செல்லரித்துப்போய் விடாதே!
தலையணை தலையணையாக‌
"சார்லஸ் டிக்கன் ஸ்"
நாவல்கள் எழுதிக்கொவித்திருக்கிறாரே
அந்த அழகிய படைப்புகளுக்குள்
உன் தாகம்
உன் தேடல்
உன் கனவு
எனும்
வாழ்க்கையின் வைர ஊசி
விழுந்து கிடக்கிறதே!
அதை தேடி விளையாடு.
அந்த முக்குளிப்பில்
கண்ணீர் முத்துக்களால்
நீ இடறப்படலாம்.
அப்போது உன் இதயம் உன்னை
உரசுவதை உணரலாம்.
நண்பனே! நண்பன்! நண்பனே!
நீ
இந்த சிலிகன் உடலுக்குள்
அவிந்து ஆவியாய் மறையும் முன்
உன் உயிர் பேசும் சித்திரத்தை
ஒரு முறை பார்த்துவிடு!

======================================================


ரஜினியின் "கோட்ட"

ரஜினியின் "கோட்ட"
=================================ருத்ரா இ.பரமசிவன்


மாற்றன் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அதனால்
என் வீட்டுத்தோட்டத்தின்
முல்லை கருகுவதைப்பற்றிக்
கவலையில்லை.
இதனால் தான்
தமிழனால்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று பாட முடிந்தது.
எல்லா மொழிகளையும்
அவன் தமிழ் மொழியாகவே பார்த்தான்.
இந்த"உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" தான்
அவனை
"யாதானும் ஊராமால் நாடாமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?"
என்று
கேள்வி கேட்க வைத்தது.
தமிழன் அல்லாதவன் என்று
எவருமே இல்லை
தமிழனுக்கு!
நாளைக்கே
ஒரு " ஹன்சிகா மோத்வானி "யின்
மகன்
(ஹன்சிகா அவர்களே மன்னித்துக்கொள்ளுங்கள்)
எப்படியோ
ஒரு சினிமாப் படத்தில் வெற்றிபெற்று
"நானே ஆள்போறேன் பாரு"
என்று
கோட்டைக்குள்ளும் வந்து
கோலோச்சலாம்!
அவனைப்பொறுத்த வரை
சிந்து வெளித்தமிழனே
இந்தியாவில் மட்டும் அல்ல‌
உலகத்திலேயே
பெருஞ்சுடராய் வலம் வரமுடியும்.
இந்த மொட்டைச்சிந்தனைகள் எல்லாம்
காக்கைகள் போல் கலைந்து விடும்.
விடுங்கள்.
அதோ பாருங்கள்!
"பேட்ட"
அதன் மூன்றாம் தவணை டீஸர்
கலக்கு கலக்கு என்று
கலக்கப்போகிறது.
இப்போ அந்த உச்சி நட்சத்திரம்
அமெரிக்காவில்.
நாளை "பேட்ட".
நாளை மறுநாள் "கோட்டை".
(ஸாரி ..அதுவும்
"கோட்ட"ங்கிற அடுத்தப்படம் தான்.)
எப்போதுமே நீ தாண்டா
"மொட்ட"
என்றும் அடுத்தடுத்து படம் வரலாம்.
புல்லும் பூச்சியும் கூட
இங்கே
கூட்டணிக்குத் தயார்!
ஆனால் அவையே
முதலமைச்சர் வேட்பாளர் ஆக
இருக்கவேண்டும் என்பதே
பூதாகரமான லட்சியமாய்
இருப்பதால்
ஓட்டுச்சிதறல் ஆபத்தில்
மக்களை வேட்டையாடும்
அம்புகளே
ஆள வரும் ஆபத்தே
இங்கு அதிகம்.
ஏமாற்றும் தந்திரங்களையே
மாயை ஆக்கி வியாபாரம் செய்யும்
ஊடகங்களே இங்கு மலிந்து போயின.
ஓட்டுகள் எல்லாம்
கஞ்சாப்பொட்டலங்களாய்
இந்த போதையை மடித்து சுருட்டி
வைக்கப்பட்டிருக்கும் வரை
மிகவும் மோசமான அர்த்தங்கெட்ட‌
வார்த்தை
நம்மிடம் இருக்குமென்றால்
அதன் பேர்
"விடியல்"

==================================================






விடியல்

விடியல்
=================================ருத்ரா இ.பரமசிவன்


மாற்றன் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அதனால்
என் வீட்டுத்தோட்டத்தின்
முல்லை கருகுவதைப்பற்றிக்
கவலையில்லை.
இதனால் தான்
தமிழனால்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று பாட முடிந்தது.
எல்லா மொழிகளையும்
அவன் தமிழ் மொழியாகவே பார்த்தான்.
இந்த"உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" தான்
அவனை
"யாதானும் ஊராமால் நாடாமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?"
என்று
கேள்வி கேட்க வைத்தது.
தமிழன் அல்லாதவன் என்று
எவருமே இல்லை
தமிழனுக்கு!
நாளைக்கே
ஒரு " ஹன்சிகா மோத்வானி "யின்
மகன்
(ஹன்சிகா அவர்களே மன்னித்துக்கொள்ளுங்கள்)
எப்படியோ
ஒரு சினிமாப் படத்தில் வெற்றிபெற்று
"நானே ஆள்போறேன் பாரு"
என்று
கோட்டைக்குள்ளும் வந்து
கோலோச்சலாம்!
அவனைப்பொறுத்த வரை
சிந்து வெளித்தமிழனே
இந்தியாவில் மட்டும் அல்ல‌
உலகத்திலேயே
பெருஞ்சுடராய் வலம் வரமுடியும்.
இந்த மொட்டைச்சிந்தனைகள் எல்லாம்
காக்கைகள் போல் கலைந்து விடும்.
விடுங்கள்.
அதோ பாருங்கள்!
"பேட்ட"
அதன் மூன்றாம் தவணை டீஸர்
கலக்கு கலக்கு என்று
கலக்கப்போகிறது.
இப்போ அந்த உச்சி நட்சத்திரம்
அமெரிக்காவில்.
நாளை "பேட்ட"
நாளை மறுநாள் "கோட்டை"
(ஸாரி ..அதுவும்
"கோட்ட"ங்கிற அடுத்தப்படம் தான்.
எப்போதுமே நீ தாண்டா
"மொட்ட"
என்றும் அடுத்தடுத்து படம் வரலாம்.
ஓட்டுகள் எல்லாம்
கஞ்சாப்பொட்டலங்களாய்
இந்த போதையை மடித்து சுருட்டி
வைக்கப்பட்டிருக்கும் வரை
மிகவும் மோசமான அர்த்தங்கெட்ட‌
வார்த்தை
நம்மிடம் இருக்குமென்றால்
அதன் பேர்
"விடியல்"

==================================================







பல்வரி நறைக்காய்




பல்வரி நறைக்காய்
=============================================ருத்ரா இ.பரமசிவன்

பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும்
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை
நல்லியக்கோடன் யாழிய இசையின்
நலம் கெட செய்தனை எற்று எற்று
இவள் உள் உள் முரலும் இன்சிறைத்தும்பி
உயிர்விடும் காட்சி ஒக்குமோ ஓராய்.
இலஞ்சிக் கண்கள் ஈரம் சுரப்ப‌
சிறு புள்ளும் பெருகக்களிக்கும்
சீறிலைச் சிறு கான் வளைக்கும் குன்ற!
கடுகொள் மரப்பு நீங்கியே மீள்வாய்.
இருசீர்ப் பாணி கனைகுரல் விரிப்ப‌
படுமணி நடுங்க கதழ்பரி கலிமா
நெடுந்தேர் விரைபு ஆறு கடந்து ஏகி
மெல்லுடல் நைந்த‌ பீலிஇறையவள்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே.

================================================

தலவியின் பிரிவாற்றாமைத் துன்பம் கண்டு
தலைவன் மீண்டு தோழி வருமாறு பாடியது.
______________________________________________

விளக்கவுரை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________

"வரிகள் மிக்க நறுமணக்காய் (சாதிக்காய்) தின்றாய் போலிருக்கிறது.அதனால் உன் தொண்டைவழியே வரும் அச்சொற்கள் இனிமையாய் இருந்தன.அந்த சொற்கூட்டங்களோடு நாம்  இருவரும் படுத்து  களித்த நீண்ட இரவுகள் மறந்தாயோ?மீண்டும் மீண்டும் நீ வராது நின்றதேன்?எதை நான் சொல்ல? இதன் காரணத்தின் வழி எனக்கு விளங்க வில்லையே!கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே.அது போல்மன உறுதி கொண்டவள் நான்.உண்ணப்போவதில்லை.காற்று உண்டு கூட  வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்"
என்று தலைவி கூறிக்கொண்டே போக தோழியும் சொல்லலுற்றாள்.

பல்துளைவழியே (நஞ்சு பாய்ச்சும்) பாம்பு கடித்தது போல் வலியுற்று துடிக்கிறாளோ? நல்ல பெரிய மற்றும் தொன்மை மிக்க பெரிய அந்த‌
இலங்கை (இப்போதைய திண்டிவனம்) நாட்டு "ந‌ல்லியக்கோடன்" யாழ் கொண்டு இசைத்து எல்லோரையும் மகிழ்விக்கும் அந்த நல்ல இயல்பை கெடுக்க வந்தவன் போல் இப்படி வராமல் இவளுக்கு துன்பம் செய்வது ஏன்? ஏன்? இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள் கொண்ட தும்பி போன்றது.அந்த இதயம் நின்று உயிர் நீங்கும் காட்சி காண சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்! அங்கங்கே காணும் இடங்கள் எல்லாம் சுனைகள் மிகுந்து (இலஞ்சிக்கண்கள்) நீர் வழிய சின்ன சின்னப்பறவைகள் கூட அதில் நனைந்து பெரு மகிழ்ச்சி கொள்ள சிற்றிலை மரங்களின் காடுகள் சூழும் குன்று நாட்டவனே! ஏதோ கடுமையான மறதி எனும் நச்சால் மரப்பு நோய் ன் உற்றவனே!தெளிந்து எழுவாய்.உன் நெடுந்தேர் மணியின் நடுங்கும் ஒலி "கணீர் கணீர்"என்று இரட்டை தாள அலைவுகளோடு (இரு சீர்ப்பாணி கனைகுரல் விரிப்ப) வர பல வழிகள் கடந்து இங்கு வருவாயாக.இந்த மெல்லிய உடலாள் முன்கையில் இன்னும் மெல்லிதாய் "மயிற்பீலியின் வளையல்கள்"கூட பிணியுற்றது.
("பீலி இறையவள் பிணி").அந்நோய் நீக்க விரைந்து நீ வருவாய்.


============================================ருத்ரா இ.பரமசிவன்
(ஒரு மீள் பதிவு)


புதன், 26 டிசம்பர், 2018

"கனா"வுக்குள் ஒரு கனவு



"கனா"வுக்குள் ஒரு கனவு
=======================================ருத்ரா


கிரிக்கெட் என்றால்
கம்பெனிக்காரர்கள் கொடுக்கிற‌
விளம்பர டி ஷர்ட்டுகளை
போட்டுக்கொண்டு
பனித்துண்டுகளை போட்டு
பருகும் குளிர்பானங்களில்
முத்து முத்துகளாய்
வியர்வை பூக்க‌
கிரிக்கெட் மட்டையை சுழற்றி
ஆறும் நாலுமாய்
விண்ணையும் மண்ணையும்
விண்டு காட்டி பந்துகள் அடிக்கும்
சாகசம் என்பது நமக்குத்தெரியும்.
ஆனால் ஒரு ஐஸ்வர்யா ராஜேஷை
 "கேல் ரத்னா" விருது வந்து
முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும்
அளவுக்கு சுடர் பூக்க வைத்த‌
இயக்குநருக்கு கனமான கைதட்டல்கள்.
சினிமா என்றால் அதன் எல்லை
குத்தாட்டம் தான் என்பதை அடித்து நொறுக்கி
மரக்கட்டையான கிரிக்கெட் பேட்டிலும்
உயிர்பூசி பேசவைத்த ஐஸ்வர்யாவின்
நடிப்புக்கு மணிமகுடம் சூட்ட வேண்டும்.
இன்னொரு ஆச்சரியம்!
அந்த மேட்ச் என்ன‌
ஸ்போர்ட்ஸ் மீடியாக்களில் நடக்கும்
லைவ் மேட்சா என்ன?
"போலி அசலையே போலி ஆக்கிவிட்டதோ
எனும் அளவுக்கு
யதார்த்தமான விறுவிறுப்பு
தியேட்டர் முழுவதும் தொற்றிக்கொண்டது.
அடுத்து
வீரதமிழ் மகன் "சத்யராஜ்" நடிப்பு
ஒரு சிகரம் எட்டியிருக்கிறது.
விண்ணையே சுரண்டி சவால் விடும்
உயரம் அவருடையது!
தமிழ்நாட்டு விவசாயி
நைந்து கந்தலாகி
அல்லல் பட்டு ஆற்றாத அழுதகண்ணீர்
எனும்
எரிமலைத்திரவமாய்
வழிய நிற்பதன் வடிவத்துள்
கிழிந்து போன இந்திய மேப்பை
நரம்பு அறுந்த வீணையாய்
நமக்குக்காட்டுகிறார்.
ஏழை விவசாயி மகள் விளையாடும்
கிரிக்கெட்டில்
வயற்காட்டின் குமுறல்களும்
குமிழியிடுகிறது.

அமைதிப்படை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
வால்டர் வெற்றிவேல்
ஜல்லிக்கட்டு
வேதம் புதிது
கடலோரக்கவிதைகள்
லேட்டஸ்டாய் பாகுபலி..

இவையெல்லாம்
இவருக்கு விருதுகள் தர
தகுதியாய் இருந்த போதும்
அந்த "வீரத்தமிழன்" தான்
அலர்ஜியாகி தடுக்கிறது.
தமிழன்களின் இந்த அவலம் தீர
இந்திய மண்ணின் அரசியலில்
ஒரு புதிய பரிணாமம் அல்லவா
வேண்டியிருக்கிறது!
"கனா " வுக்குள் ஒரு கனவு இது.

கஸ்தூரி மான்
தன்னிடமிருந்து தான்
அந்த மணம் வருகிறது என
தெரியாமல்
அந்த மணம் தேடி
 ஒட்டிக்கொண்திருக்குமாம்.
சிவகார்த்திகேயன்  எனும்
சிறந்த தயாரிப்பாளரை
தன்னுள்  வைத்துக்கொண்டே தான்
ஒரு சிறந்த நடிகர் எனும்
ராஜ பாட்டையில்
இது வரை ஓடிக்கொண்டே
இருந்திருக்கிறார் அவர்.
கிரிக்கெட்டையும்
விவசாயிகளின் பிரச்னையையும்
சரியான கலவையில்
தந்திருக்கிறார்.
கிராமங்கள்
சரியான விவசாயம் இல்லாமல்
மொட்டை மைதானமாய்
போகும் ஆபத்தை
உட்குறிப்பாக்கி இருக்கிறார்கள் போலும்.
அதற்குப்பதில்
கிரிக்கெட் மட்டையும் பந்துமாய் 
உழவு மாடும்
விவசாயிகளின் கண்ணீருமாய்
அவை திரையை ஆக்கிரமித்து
"சிக்ஸும் ஃபோருமாய்"
விளாசுகின்றன.

சிவகார்த்திகேயன் தன்
கலைப்படைப்பில்
நிமிர்ந்து நிற்கிறார்.

=========================================













திங்கள், 24 டிசம்பர், 2018

உன் முறுவல் பூ


உன் முறுவல் பூ
==============================================ருத்ரா

கனவு எனும்
மலைப்பாம்பு விழுங்கலில்
எனக்கு ஒரு நெடும்பயணம்.
அழகிய வட்டங்கள் அதன் மேல் தோலில்
சுருங்கி விரிந்து கொண்டிருந்தது.
நகரும் ஓவிய உடல் சுற்றிக்கிடக்கும்
என் உள்ளத்துள்ளும்
உன் உருவத்தின் தூரிகை வருடல்கள் தான்!
என்னைச்சுற்றி
இனிய மரணம்
என் உடலை முறுக்கியது.
ஆனால் கணம் தோறும் கணம் தோறும்
நான் பிறந்து கொண்டே இருந்தேன்.
அன்பே!
உன் விழி புகுந்த நான்
இன்னும் இங்கு பத்திரமாக இருக்கிறேன்.
மீண்டும் கால் பதிப்பேன்
இந்த மண்ணில்
உன் முறுவல் பூ ஒன்றை ஸ்பர்சிக்க.

============================================================

அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்.


அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்.
====================================================ருத்ரா

பலிபீடமும் வெட்டரிவாளும் தான்
கடவுள் உட்கார்ந்திருக்கும் இடமா?
ஏழை பக்தனின் நோஞ்சான் ஆடுகளின்
பலியிலா
கர்த்தருக்கு ஜீவனம்?
தண்டனைகள் மூலம் தான்
கர்த்தர் புஜபலம் காட்டவேண்டுமா?
"மாற்றி யோசி"
கர்த்தரின் கர்த்தர்
கர்த்தருக்கு கட்டளையிட்டார்.
புதிதாய் வந்து சிசுவாய்
சிரிக்கின்றான் மாட்டுக்க்கொட்டிலில்.
பனித்துளிகள் முத்தம் கொடுக்க‌
அன்பின் அமைதியின் மன்னிக்கும் மானிடத்தின்
புதிய ஏற்பாடு
பக்கங்களை புரட்டத்துவங்கியது.
மனித ரத்தத்துள்
மகத்தான சத்தமா?
விடுங்கள்
எல்லா கொலைகளையும்.
விடமுடியவில்லைதான்
ப்ளேட்டில் சூடான இறைச்சி
வாழ்க்கையின் அர்த்தத்தை பலமாக‌
கூவுகிறது.
இருந்தாலும் சாந்தாகிளாஸ்
பரிசுகள் தருகிறார்.
இதயங்களை கிண்ணங்கள் ஆக்குங்கள்.
சமாதானத்திராட்சையின் ரசங்கள்
அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்.
"மெர்ரி க்ருஸ்த்மஸ்"

========================================================

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

சீதக்காதி (1)

சீதக்காதி (1)
======================================ருத்ரா


"செத்து செத்து விளையாடுவோமா?"
இப்படிக்கேட்பார்
முத்துக்காமாட்சி எனும் நகைச்சுவை நடிகர்
வடிவேலுவுடன் ஒரு படத்தில்.
அந்தக்காட்சிகளில்
திகில் சிரிப்பு சிந்தனை தத்துவம்
எல்லாம் கலந்து வந்து
நம் வயிற்றையும்
ஒரு கலக்கு கலக்கி சிரிக்க வைக்கும்.
ஆவியாக வருவது ஆவியாக நடிப்பது
என்றெல்லாம் அந்த ஆவிக்குத்தெரியுமா என்ன?
விஜயசேதுபதி
நடிப்பின் பலப்பல உத்திகளையெல்லாம்
பிய்த்துப்போட்டு
ஊறவைத்து கொதிக்கவைத்து
காய்ச்சி வடிகட்டி கொடுத்திருக்கிறார்.
ஆவிக்குள் இருக்கும் ஆன்மாவும்
ஆன்மாவுக்குள் இருக்கும் ஆவியும்
வசனம் பேசிக்கொண்டு
பாடல் வரிகளில்..இசையில்
ரத்தமும் சதையும் கண்ணீருமாய்
ஒரு அற்புதமான பாத்திரப்படைப்பில்
அதை விட அற்புதமான நடிப்பை
சிலிர்ப்புடம் நம்மீது பீய்ச்சி அடிக்கிறார்.
ஒரு நாடகக்கலைஞன்
வாழும்போதும் நடிக்கிறான்
செத்த பிறகும் நடிக்கிறான்.
அவனைப்பொறுத்தவரையில்
வாழ்க்கையை நடிப்பது
நடிப்பதை வாழ்வது
எனும்
இரண்டுக்கும் இடையிலான
அந்த மெல்லிய செங்கீற்று
என்கிற  "தின் ரெட் லைன்"
அவன் நெற்றிச்சுருக்கங்களாய்
உயிர்த்து நெளிகின்றன.
அய்யா என்று அவரை பார்ப்பதைக்காட்டிலும்
அய்யோ! இப்படியுமா?
ஒரு உணர்ச்சிக்குவியலுக்குள்
அவர் உறைந்து கிடப்பது?
என்று வியக்கத்தோன்றுகிறது!

=======================================================



சனி, 22 டிசம்பர், 2018

தூங்காமரத்தின் தூங்கிய பழம்போல்..


தூங்காமரத்தின் தூங்கிய பழம்போல்..
===========================================ருத்ரா இ பரமசிவன்.


பாசடை அடர்கரை கான்யாற்றுப்பிழியல்
நீர்படுத்தன்ன தொடி நெகிழ்ப்பாவை
எல்லுடன் மதியும் முல்லையும் மறந்து
பெரும்பேய் ஊழி ஊர்ந்தனள் மன்னே.
கூர்நடுங் கோல்போன்ம் கரியநெடுங்கங்குல்
துயில் மடிந்தன்ன இருள்சூர்க் கானம்
செலவு உய்த்தனன் என் கொல்?
நெடுமூச்சின் கண்ணி விடு மூச்சில்
இறந்தாள் பிறந்தாள் பிறந்திறந்திருந்தாள்
மண்ணும் வானும் மரனும் மரபும்
உண்ணல் உடுத்தல் ஆயகலையும் மறந்தாள்
தூங்கா மரத்தின் தூங்கிய பழம்போல்
கனவின் கொடுஞ்சிறைப்பட்டனள் போலும்
தண்ணிய படப்பை அவன் ஆர் எழில் அகலம்
தோயக்கிடந்து நெஞ்சில் அழிந்தாள்
அளியவள் ஆங்கே அழல்வாய்ப்பட்டே.

============================================
(மீள் பதிவு.)

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
=============================================ருத்ரா

அண்ணே நான் கமல் கட்சியிலே சேர்ந்து
தேர்தல்ல நிக்கப்போறேன்.

அது எப்டிடா?

ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லாம் அவர் கூட்டணியில‌
சேரலாம்னுட்டாரு.

அதனால?

எனக்கும் ஒத்த கருத்து தான்.அவருக்கும் ஒத்த கருத்து தான்.

என்னடா சொல்றே..?புரியலையே!

அவருக்கும் நாற்காலிய பிடிக்கிற ஒத்தை கருத்து தான். எனக்கும்
நாற்காலிய புடிக்கிற ஒத்தை கருத்து தாண்ணே.

அடீங்க்! ஒனக்கு நாற்காலி கேக்குதா? மேசை மண்டைத்தலையா?

(இவர் விரட்டுகிறார்.அவர் ஓடுகிறார்.)

================================================================

LET US PLANT A TREE

LET US PLANT A TREE
===============================EPSI SHELLEY (RUTHRA)


LET US PLANT A TREE
WHOSE BRANCH
REFUSES
TO BECOME A WOOD
FOR AN AXE OR A "CROSS".

LET US SPRAY A PAINT
WHOSE BRUSH
NEVER DYE HUMAN BLOOD
IN FRENZY TINT

LET US WARP  A GLOBE
WHOSE AXIS
SHOULD NEVER BE
A HATRED WITH
CASTE CREED AND COLOUR.

LET US RAISE A HYMN
WHOSE NOTE AND THEME
BE NOT ORCHESTRATED
WITH A SONG OF
KILLER GAMES.

PEACE LOVE AND HAPPY
WILL BE OUR
NEVER ENDING
HAPPY HAPPY AND
HAPPY NEW YEAR!

=====================================



வெள்ளி, 21 டிசம்பர், 2018

கிச்சு கிச்சு

கிச்சு கிச்சு
==============================================ருத்ரா

காதலோடு கட்டிப்புரண்டு விளையாடுவது
முதலைக்குட்டியோடு விளையாடுவதைப்போல் தான்.
குட்டியாய் இருந்தாலும்
இரட்டை இமைகளில் இரட்டைக்கண்ணீர் விளையாட்டுகள்.
அன்று எனக்கு மட்டும்
புரிகிற மாதிரி சிரித்தாளே என்று
என்று
தழுவ கைகள்  நீட்டினேன்.
ஆனால் அந்தக்குட்டி கோரத்துடன் தாக்கி
வாய் பிளந்து
என் கனவுகளை அரைத்துத்தின்றது
சீற்றத்துடன்.
கூழாகிக்கிடக்கும் நான்
மீண்டும் என் உரு பிடித்து
அவள் மனத்தில் கரு பிடிக்கவேண்டும்.
அது வரை
இந்த மயில் பீலியைக்கொண்டு
அவளுக்கு
(எனக்கும் தான்)
கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருப்பேன்.

===========================================================



வியாழன், 20 டிசம்பர், 2018

நம்ம "மூணு குலசாமிகள்."




நம்ம "மூணு குலசாமிகள்."
==================================================ருத்ரா



கமல்


இன்னும் தராசு தூக்கிக்கொண்டு
பழையபேப்பர்
வியாபாரத்தை விட்டு
வரவே இல்லை.
துவக்கத்தில் தூக்கிவந்த‌
திராவிடன் தமிழன் முகமூடிகள்
இப்போது பரணில்.
சினிமாவின் கல்லாப்பெட்டிக்குள்
கூட்டணிக்கணக்கும் உண்டு.
ஊசிவெடிகளை
வசனமாக கொளுத்திப்போட்டுவிட்டு
கூட வந்தவர்களை வைத்து 
ஆனை வெடி ஓசையை
கிளப்பிக்கொண்டிருக்கும்
இவர் என்ன செய்யப்போகிறார்?


ரஜினி


குதிரைவாயின் முன்
காரட்கிழங்கு கட்டிய குச்சியை
நீட்டிக்கொண்டே
சவாரி செய்கிறார்.
ரசிகர்கள் நுரைதள்ளி நுரைதள்ளி
மேரீனா அலைகளை
கானல் நீர் திரையில்
காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆத்மீகத்தின்
முதலை வாய்க்குள் இருந்து கொண்டு
முயல்களை ரட்சிக்கவந்த பாபா!
ஓட்டுக்களைக்குவிக்கும்
கணினி "எந்திரனாக"
அடுத்த 3.0 ல் எகிறிவரும்
இந்த ஜிகினா விடியல்
காவி மேகங்களை மீறி
உண்மை விடிவானத்தின்
சித்திரம் காட்டுமா?



விஜய்


ஒரு விரல் புரட்சியின்
தன் குத்தாட்ட
அரசியல் இயக்கப்பாட்டின்
இதயம்
அராஜகவாதிகளால்
குத்திக்கிழிக்கப்படும்போது
கம்முனு இருந்து
ஜம்முனு இருந்தாரே
இது தான் அவர் உள்ளடக்கமா?
ரசிகர்களே!
தமிழின் ரசிகர்கள் எனும்
ஊழிப்பேரலைகளாக
என்றைக்கு உருவாகப்போகிறீர்கள்?
அது வரைக்கும்
இந்த சோளக்காட்டுப்பொம்மைகள் தான்
உங்கள் குலதெய்வங்களா?










புதன், 19 டிசம்பர், 2018

புது டைரி


புது டைரி
==================================================ருத்ரா

வருடம் பிறந்து விட்டது என்று
புது டைரியை பிரித்து வைத்து
என்ன எழுதலாம் என்று
பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன்.

அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது.
பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம்.
அவ்வளவுக்கு
பாழ் மணல் வெளி.

சூரியன்
தன் வெயிலை எல்லாம்
சிவப்பாய் மஞ்சளாய் வெள்ளையாய்
வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

எதை எழுத?
உச்சு கொட்டினால்
உமர் கய்யாம் வருகின்றான்.
செல்ஃபோன் ஒலி எச்சில்களில் கூட‌
ந.முத்துக்குமார் இனிமை வழிய இளமை பிழிந்தார்.

பிள்ளையார் சுழியாய் "உ"வையும் கோடுகளையும்
ஏதோ ஒரு காக்கையோ குருவியோ
எச்சம் இட்டு எங்கோ சென்றது.
முதல் தேதி என்று
சடசடத்த காலத்தின் பிஞ்சு ரெக்கைகள்
டைரியில் இறைந்து கிடக்கிறது.

என்ன எழுத?
ரத்தம் சொட்ட சொட்ட‌
ஊடகங்களில்
தலை கொய்யப்படும் காட்சிகள்
காட்டும் கொடூரங்களை
எந்த கடவுளுக்கு படையல் இடுவது?
எந்த கடவுள் முன் மண்டியிட்டு
குரல் உயர்த்துவது?
எந்த கடவுளுக்கு
மிச்சமிருக்கின்ற ஆத்மாவைக்காட்டி
சாந்தியடைய சங்கீதம் பாடுவது?
துப்பாக்கியையும் கத்தியையும்
துடைத்துப்போடும் காகிதமாய்
பயன்படுத்த‌
மனித உயிர்களா கிடைத்தது
இந்த மிருகங்களுக்கு?

பரந்து விரிந்து கிடக்கிறதே என்று
இந்த மைதானத்தை
மயானம் ஆக்கவா
வெறி பிடித்து வந்தாய் மனிதா?

கடவுளைக்கூறு போட்டு
எந்தக் கூறு சிறந்தது என்று
ருசி பார்க்க‌
மனித ரத்தமா நீ கேட்பது
ஓ!மிருகக்கூட்டமே!

எதையும் எழுதிக்கிழித்து
என்ன ஆகி விடப்போகிறது?
அறிவெல்லாம் தீப்பிடித்து எரிகிறது.
எங்கு பார்த்தாலும்
வேட்கை வேட்கை மற்றும்
வேட்கைகளின்
வேட்டை வேட்டை வேட்டை தான்!

டைரியின்
வெறும் வெள்ளைப்பக்கங்கள்
அத்தனையும்
வெறுமையால்
வெறுமையின் வெறியால்
கருப்பு ஆக்கப்பட்டு விட்டன.

எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்.
நேர்மறையாய் நம்பிக்கை கொள்ளுங்கள்.
சரி.
அதோ மழை பெய்கிறது
சாக்லேட் மிட்டாய்களில்.
நாக்குகளைக் கொண்டு கனவு காணுங்கள்.
ரத்தம் சொட்டிக்கிடந்த
அந்த கத்தியைக்கொண்டு
டைரியில் எழுதினேன்.
"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"


===============================================
08.02.2015.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

மௌனம்

மௌனம்
============================================ருத்ரா

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாது.
காதல் தாக்கிய புலி
புல்லைக்கூட
தின்றுகொண்டே இருக்கும்.
இந்த பூங்காவில்
அவள் இங்கு
முகம் திருப்பினால் தானே
ஏதாவது சொற்களை
தின்று மென்று விழுங்கி
கொட்டிக்காட்டலாம்.
அவள் மௌனம்
அந்த காக்கா முள்ளைவிட‌
கடுப்பானது கூர்மையானது.
வரச்சொல்லி உட்காரவைத்து
இப்படி
தட்டாம்பூச்சி இறகுகள் எனும்
அந்த நுணுக்கமான
"நேனோ" வினாடிகளைக்கூட
நகம் கடிப்பது போல்
கடித்து கடித்து துப்புகிறாளே !
இதிலும் ஒரு சுகமா?
அது அவளுக்கா? எனக்கா?
காதல் எனும் தொல் (லை )காப்பியத்தில்
நெடில் குறில் காலங்களுக்கு
எத்தனை
"மாத்திரை" போட்டுக்கொண்டு
தண்ணீர் குடிக்கவேண்டும்?


=================================================

திங்கள், 17 டிசம்பர், 2018

மாறி மாறி மாரி ...தனுஷ்!

மாறி மாறி மாரி ...தனுஷ்!
========================================ருத்ரா

தனுஷ் அவர்களே !
உங்கள் நடிப்பின் பரிமாணம்
ஒன்று இரண்டு ...என
எண்களைக்கொண்டா
மலர்ச்சி  கொள்வது?
மாரி 2 என்பது
ஒரு புதிய புயல் தான்.
ஆனால்
கடல் ஒன்று தான்!
காற்று ஒன்று தான்!
அலை ஒன்று தான்!
உங்கள் முத்திரை
வெறும் தபால் தலைக்கு
அச்சடிக்கும்
ஸ்டீரியோ முத்திரை அல்ல.
தேதி மாறுவது மட்டும் வளர்ச்சியல்ல
மலர்ச்சியல்ல !
சமுதாய முரண்களை களைகிறேன்
என்று தான் இன்று
எல்லாப்படங்களும்
புதிய புதிய சமுதாயக்களைகளை
பதியம் போடுகின்றன.
ரோஜாவாய் இருக்கும் காதல்
வெறும் சப்பாத்திக்கள்ளி
என்று பூதம் காட்டுகின்றன.
தசை கிழியும் அடியும் குத்தும் நம்
திசை மாற்றும் என்று
நம்புகிறீர்களா தனுஷ் அவர்களே?
மானிடத்துவத்தின்
மெல்லிய ரேகைகள் மீது
ஆதிக்கத்தின் ரோடு ரோலர்கள்
அந்த விடியல் குரல்களை
நொறுக்கி கூழாக்குவதும் உண்மை.
அதை "பட"ப்படுத்த
மிகக்கூர்மையான நடிப்பின் உளி
நிச்சயம் வேண்டும்.
ஒரு பார்வை மூலம்
ஒரு குருட்சேத்திரத்தையே
காட்டிவிடும்  நடிப்பு
உங்களிடம் கனல் வீசுகிறது.
தயாரிப்பு உலகில் நீங்கள்
நுழைந்தது
அதில் இருக்கும் உங்கள்
நல் முனைப்பையும் காட்டுகிறீர்கள்.
உள்ளுக்குள் ஒரு
"சத்யஜித் ரே"யின் நரம்புத்துடிப்பின்
கலை அதிர்வை வைத்துக்கொண்டு
இப்படி
கச்சா முச்சா குத்தாட்டங்களில்
காணாமல் போய்விடாதீர்கள்.
உணர்சசி பொங்கும் நடிப்பில்
நீங்கள் ஒரு ஏழு ஞாயிறு.
அதனால் இந்த "ஞாயிறு"களுக்கு
விடுமுறை விட்டுவிட்டு 
கல்லாப்பெட்டியின் கலக்கல்களுக்குள்
கலந்து கலைந்து போய்விடாதீர்கள்.
உங்கள்
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

=============================================




ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஊசியிலைக்காடுகள் (2)

ஊசியிலைக்காடுகள் (2)
=======================================ருத்ரா.


உயரமான சிலையில் இருந்தும்
பொறாமைப்படுகிறார் படேல்
தமிழனாக பிறக்கவில்லையெ என்று
கலைஞர் சிலையைப்பார்த்து.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____‍‍‍‍‍______________________________

இப்போது மோடிஜிக்கு
ரிசர்வ வங்கியே கோமாதா !~
ஓட்டுகளை அங்கிருந்து தான்
"கறக்க "வேண்டியிருக்கிறது.

___________________________________


தராசு தட்டுகள்
தள்ளாடுவது ஏன்
ம.நீதி மய்யத்துக்கு?


_____________________________________


தானும் ஒரு கலைஞராக வந்து
கலைஞர் சிலை திறப்புவிழாவுக்கு
கண்ணியம் காட்டினார் ரஜினி.


_____________________________________


சேக்கிழார் போகட்டும்.
எட்டுத்தொகை பற்றி கேட்டால்
எட்டுவழிச்சாலை என்கிறார்.
"தமிழுக்கு அமுது என்று பேரா?"
என்றால் "டாஸ்மாக்"என்கிறார்.

_______________________________________


குப்தர்களின் காலம் பொற்காலம்
என்கிறது வரலாறு.
படித்து படித்து புளித்து விட்டது.
இப்போது சொல்லுங்கள்
"குட்காக்களின்" காலம் பொற்காலம்.

________________________________________


இவ்வளவு நாள் கழித்து
ஸ்டெர்லைட்டுக்கு
ஆயுத பூஜை கொண்டாடுகிறார்கள்.
"கோடரியை" வைத்து.

________________________________________


கணீர் கணீர் என்று
தமிழிசை தமிழில் பேசினாலும்
சமஸ்கிருதம் தான் கேட்கிறது.


---------------------------------------------------------------

வளர்ச்சி வளர்சசி என்கிறார்கள்.
சாமியார்கள் சந்தோஷித்தார்கள்.
"நம் தாடி வளர்வதற்குத்தான்
இத்தனை நிதித்திட்டங்களா இங்கு?"

------------------------------------------------------------------


வேட்டி கட்டு!வேட்டி கட்டு!

வேட்டி கட்டு!வேட்டி கட்டு!
===============================================ருத்ரா

இன்றைய ஜிகினாக் கதாநாயர்களுக்கு
மிகவும் தேவை
குத்துப்பாட்டும் குத்துவெட்டும் தான்.
வில்லன்களை அடித்துநொறுக்கும்
கதாநாயகர்கள்
"நீ பொறுக்கியென்றால்
நான் அதை விட பொறுக்கிடா"
என்று வில்லனைப்பார்த்து சொல்லுவது தான்
படம் முழுக்க உள்ள நரம்புகளில்
ஓடவேண்டும்.
அதுவே தான் அவன் பாடும் பாட்டில்
"தெறிக்க" வேண்டும்.
வில்லன் மாதிரியான கதாநாயகர்களே
இங்கு தேவை.
தயாரிப்பாளர்கள் சகிதம்
நட்சத்திர ஓட்டல் அறைகளில்
கதையை சமைக்கும்போதே
இப்படி கதையில்
ஒரு கவுச்சி அடிக்கவேண்டும்.
என்ற
கனமான "தீம்"
சொருகப்பட்டு விடுகிறது.
அதை மறைக்க வெளிநாட்டு
பனிமலைச்சிகரங்களில் "கொரியோகிராஃ பி"
மற்றும் வெள்ளை வெள்ளையாய்
கதாநாயகிகள்!
இசை அமைப்பு எனும்
பிரம்மாண்டம்
மெல்லிய மெலொடிகளை
ஓரம் கட்டிவிட்டு
நரம்புக்கருவிகளையும்
தோற்கருவிகளையும் கொண்டு
கம்பியூட்டரில்
அடித்துத் துவைத்து
அதை விளம்பரக்கொடியில்
அவ்வப்போது காயப்போடுவதே
இசை வெளியீட்டு விழா!
இந்த இலக்கணங்களுக்குள்
உட்பட்டு
நகரமெங்கும் ஒலித்துக்கொண்டிருப்பதே
"வேட்டி கட்டு!வேட்டி கட்டு!"
"அலப்பறை" "அடிதடி" களால்
சினிமாப்பாட்டு இலக்கியம்
ரொம்பவே நசுங்கிக்கிடக்கிறது.
"சேர சோழ‌
பாண்டிக்கெல்லாம்
வேட்டி கட்டு! வேட்டி கட்டு!"
ஆமாய்ங்க!
இவிய்ங்க தமிளனுங்க!
இவிய்ங்களுக்கு இப்டித்தாய்ங்க‌
எளுதணும்னு
பேனாவில் வேறு ஏதேனும் உள்ளெழுத்து
வைத்து எழுதியிருக்கிறார்களா
என்று தெரியவில்லை.
தமிழன் அல்லாதவனெல்லாம்
தமிழனுக்கு வேட்டி கட்ட‌
பாட்டு பாடும் அவலம்
இங்கே ஏன் நேர்ந்தது?
ஏனெனில்
சினிமா
போதனைக்கு வந்ததா?
போதைக்கு வந்ததா?
என்ற கேள்வியில் தான்
இன்னும்
தமிழன் மல்லாந்து கிடக்கிறான்.
"ஆளப்பொறாண்டா தமிழன்"
என்ற கொட்டு முழக்கமெல்லாம்
தேவையில்லை.
"சிந்திக்கப்போறாண்டா தமிழன்"
என்ற சொற்களுக்கே
அவன்
வெகு தொலைவு
போகவேண்டியிருக்கிறது.
அதற்கு
இந்த குத்தாட்டங்களா
அவன் மைல் கற்கள்?

===========================================================






சனி, 15 டிசம்பர், 2018

பொமரேனியன்

பொமரேனியன்
==============================================ருத்ரா


என்ன புசு புசுப்பு?
என்ன வழ வழப்பு?
சொன்னல் சொல்படி
கேட்டுக்கொண்டு
என் காலடியில்
கிச்சு கிச்சு மூட்டும்படி
புகுந்து கிடக்கிறாய்.
ஒரு சின்ன எலும்புத்துண்டு
உன் மீது
நான் பாய்ச்சும் மந்திரக்கோல்.
எனக்காக‌
உன் பட்டு நாக்கை
தொங்கப் போட்டு
நீர் வழிய நீர் வழிய‌
என்னை பாசத்துடன்
வலம் வருகிறாய்.
நீ எனக்கு
அலங்காரம்.
நீ எனக்கு
சமுதாய அந்தஸ்து.
உன்னை வைத்து
அந்த படாடோபத்தில் தான்
என் வியாபாரம்
வசூல் எல்லாம்.
உனக்கு எறியும் கறித்துண்டுகள்
எனக்கு கோடி கோடிகள்.
பந்தை தூர எறிந்தால்
போய் கவ்வி வந்து எனக்கு
கொடுப்பது என்பதை
எப்படி உன் ரத்த அணுக்களில்
ஊற வைத்திருக்கிறேன் தெரியுமா?
அப்படித்தான்
உன் அடிமைப்பணி
என்னை
இந்த அதிகார உயரத்தில்
ஏற்றி இருக்கிறது.
தேதி அறிவித்தால் போதுமே
எல்லா ஓட்டுக்களையும் கவ்விக்கொண்டு
எனக்கு சமர்ப்பித்து
மகுடம் சூட்டி விடுவாயே.

"உர்..உர்..உர்"
உனக்கு இன்றைக்கு என்ன வந்தது?
அதோ
உன் பயங்கரமான கோரைப்பல்
தாடையை விலக்கி
என்னைக்கிழிக்கத்துடிப்பது போல்
எகிறுகிறது.
"ஏய் ஏய்..
சங்கிலியால் நன்றாக இழுத்துக்கட்டு"
சேவகனிடம் கத்தினேன்.
என் மீதா பாயத்துடிக்கிறாய்?
உன்னை அடக்க‌
ஆயிரம் சட்டங்கள் ஷரத்துக்கள்
என்னிடம் உண்டு.
இருந்தாலும்
அதன் சிறு சிறு கரு கரு
பளிங்குக்கண்கள்
எப்படி அக்கினி வீசும்
கனல் துண்டுகள் ஆகின?
"டாக்டர்
வேறு என்ன செய்யலாம்?
மலையாள ஜோஸ்யர்களை வரவழைத்து
ப்ரசன்னம் பார்க்கலாமா?
காளிக்கு யாகம் நடத்தி
அதில் பட்டுப்புடவைகள் மிளகாய் வத்தல்கள்
ஆகுதியாய் கொட்டலாமா?
இந்த வீட்டில் முந்தி இருந்தவர்கள்
இப்படித்தான் செய்திருக்கிறார்கள்"

"இப்படியே நீங்கள் பேசிக்கொண்டு
இருந்தால்
உங்களுக்கும் சங்கிலியுடன்
ஒரு தனியறை வேண்டியிருக்கும்"
டாக்டர் சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
நான்
அதன் கண்களையே பார்த்தேன்.
திகில் அடைந்து
மலையாள ஜோஸ்யருக்கு
ஃபோன் செய்தேன்.
"ஹலோ" என்பதற்குள்
தீச்சுவாலைகளின்
சுநாமிக்குள்
அகப்பட்டவன் போல் ஆனேன்.
அது என் மீது பாய்ந்து..
நான் மிச்சம் இல்லாமல்
அடையாளம் இல்லாமல்
காணாமல் போய்விட்டேன்.

====================================================








வெள்ளி, 14 டிசம்பர், 2018

தலைப்பு இடாத ஒரு ஓவியம்..

UnTitled

 -

Wassily Kandinsky


Kandinsky, Wassily (Russian/French 1866-1944) Expressionist Painter, Also known as: Vasilij Kandinskij, Vasilii Kandinskii, Vasily Kandinski.





தலைப்பு இடாத ஒரு ஓவியம்..
======================================================ருத்ரா

ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின்
தலைப்பிடப்படாத
இந்த ஓவியத்தைப்பாருங்கள்.
என்ன அற்புதம்! என்ன ஆழம்!
புரிந்து விட்டது என்றால் அழகு
புரியவில்லை என்றால் அதைவிட‌ அழகு.

இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட்
உரக்கிடங்கு போல்...

ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும்
நசுங்கிக்கிடக்கும்
ஜங்க்யார்டு போல...

ஒற்றைக்கண்ணாடியில்
கண்ணும் இல்லாமல் முகமும் இல்லாமல்
லுக் விடும்
ஒரு மௌன அம்பின் கூர்மைத்தாக்குதல்கள்
நம் நுரையீரல் பூக்களை கசக்கிவிடுவது போல்...

உலகப்போர்களின் வக்கிரங்களில்
சர்வாதிகார கொலை வேட்டையில்
மரண ஆவேசங்களின் உந்துதல்கள்
மானிட நேயத்தின் மேல்
அணுக்கதிர் பிதுக்கி
அவசரமாய் மலஜலம் கழித்தது போல்....

கொடுவாள் நிமிர்ந்து விறைத்து
விடியல் வானத்தை குத்திக்கிழிக்க‌
வாய்பிளந்த ஏதோ ஒரு கேலாக்ஸி
சோளப்பொரி கொறிப்பது போல...

இல்லாவிட்டால்
இருக்கவே இருக்கிறது காதல்..
காதலை தேடி அலையும்
பிசாசு ஏக்கங்கள்....
பிய்த்துப்போட்ட தலையணைப்பஞ்சுகளாய்
கனவுச் சிதிலங்களில்
கந்தலாய் கிடக்கும்
முத்தங்களும் ஆலிங்கனங்களும் போல...

புருசு தேய்த்த வர்ணக்குழம்பில்
இதயத்து அடி ஆழத்தின்
லாவா வழியல்களில்
எரிமலையின் எச்சில் ஊறும்
கற்பனைத்தீயின்
"நவரக்கிழி" பிழிசல்களின் ஒத்தடம் போல...

பிரசுரிக்கப்படாத படைப்புகளை
கிழித்துப்போடுவதைக்கூட
கசாப்பு செய்தாற்போல எறியும்
ஏதோ ஒரு பத்திரிகை அலுவலகத்தின்
புழக்கடை போல...

என்ன தோன்றுகிறதோ
அப்படியே கூப்பிடுங்கள்..
அப்படியே
அந்த ரத்த சதைக்கூளத்திலிருந்து
ஒரு பொமரேனியன் குட்டி
உங்கள் பாதம் நக்கிக்கொடுக்க வர‌
ஓடிவரும் தருணங்கள் போல...

================================================ருத்ரா
21.12.2014


http://www.artsunlight.com/artist-NK/N-K0002-Wassily-Kandinsky/N-K0002-066.html

இந்த சுட்டிக்கு  நன்றி.(WITH GRATITUDE)
========================================================




பூ

பூ
=============================================ருத்ரா

உனக்கு ஒரு ரோஜாவை
நீட்ட‌
நானும் வந்து கொண்டு தான்
இருந்தேன்.
ஆனாலும் அந்தக்கோடு
புனிதமானது..
புனிதத்தையும் விட மனிதமானது.
அதனால்
உன்னிடம் அந்தப்பூவை காட்டவே இல்லை
ஆம்.
அந்த நட்புக்கோடு..

நினைத்து நினைத்துப்பார்த்தால்
அது
எவ்வளவு உன்னதமானது.
எவ்வளவு பரவசமானது.
இதயங்கள் கத கதப்பாய்
நேயமோடு உருகுவது மட்டுமே
உள்ளக்கசிதல்களின் இருக்கும்
அந்த "பூமத்திய ரேகை"க்கோடு.

ஆனால்
அன்று
நீ திடீரென்று ஒரு பூவை நீட்டி
ஹாய் என்றாய்.
நான் திடுக்கிட்டேன்.
"ஏண்டா? ஃபூல் மறந்துட்டியா
ஹேப்பி பெர்த் டே டு யூ!"
..........
..........
அந்தப் பூவைக்காட்டி சொன்னாள்.
"இது என்ன பூ வேண்டுமானலும்
இருக்கட்டும்.
வாடாது
வதங்காது
சுருங்காது
ஆம் இது நம் "நட்பூ"

அவள் கோடு தாண்டிவிட்டள்.
நல்லவேளை
அந்தக்கோடு என்னால்
முறிவு படும் ஒரு நிகழ்வை
தடுத்துக் காப்பாற்றி விட்டாள்.
நன்றி..மிக மிக நன்றி
என்று
அந்தப்பூவை வாங்கிக்கொண்டேன்.

=========================================

வியாழன், 13 டிசம்பர், 2018

சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் "பெர்த் டே"



சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் "பெர்த் டே"
========================================================ருத்ரா


ரசிக அலைகள்
உங்கள் முன்னே
"கட் அவுட்டு"கள் உயரத்துக்கு
எழுந்து வந்து
வந்தனம் சொல்ல வந்ததை
வரவேண்டாம்
என்று தடுத்து விட்டீர்களே.
அந்த அன்புக்கடல்
பாசத்தில்
கொந்தளித்துக்கிடக்கிறது.

"நம் அரசியல் கட்சி
எப்போது உதயம்?"
எனும்
கேள்வி ஆயிரக்கணக்காய்
கை முளைத்து
எழும்பி எழும்பி அதிருமே!
"சும்மா அதிருதுல"
என்று எத்தனை தடவைதான்
சொல்லிக்காட்டிக்கொண்டிருப்பது?
தர்ம ச‌ங்கடங்களை தவிர்க்கும்
உங்கள் அரசியல் தர்மத்தை
ஊடகங்கள் வேறு வழியின்றி
தங்கள் பழைய படங்களைப் போட்டு
திரை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

"இதோ பாருங்கள் என் நெஞ்சை!
நம் அரசியல் கட்சி அதில் தெரிகிறதா?"
என்று எத்தனை தடவை தான்
"ராம பக்த ஹனுமான்"மாதிரி
மார்பை பிளந்து " காட்டிக்கொண்டிருப்பது?
அதனால் தான் வரவேண்டாம்
அன்புத்தடை போட்டீர்களோ?

இந்த ரசிகப்பெருங்கடலுக்கு
உங்கள் கையை ஆட்டி அசைத்தாலே
போதும்.
அதில் தெரியும் அவர்களை
ஆளப்போகும் "செங்கோல்"
அது என்று.
ஆனாலும் அந்த கானல் நீர்க்கரையில்
மெரீனாவும் இல்லை.பீச்சும் இல்லை
என்று எப்போது
புரிந்து கொள்ளுவார்களோ?
அன்று
அந்த "ஏழுபேர்"கேள்வியில்
திணறிய நீங்கள்
இந்த "ஐந்து மாநில"தேர்தலைப்பற்றி
தேங்காய் உடைப்பது போல்
சொல்லிவிட்டீர்களே!
தமிழர்களுக்கெல்லாம்
புல்லரித்து விட்டது போங்கள் !
இதேபோல்
இன்னொரு கேள்விக்கும்
பதில் சொல்லிவிட்டீர்கள் ஆனால்
நீங்கள் எங்கோ
அரசியல் சாணக்கியத்தின்
ஒரு உச்சிக்கு போய்விட்டீர்கள்
என்று பொருள்.

"வெற்றிகரமான தோல்வி "
என்றால் என்ன அர்த்தம்?

"சாக்லேட் காகிதம் எங்களிடம்
சாக்லேட் அவர்களிடம்
சமயங்களில் இரண்டுமே இனிக்கும்!"


எப்படி சோல்வீர்களோ
எங்களுக்கு தெரியாது.
இருப்பினும் தங்கள் பிறந்த நாளுக்கு
இந்த "சாக்லேட்"களுடன்
வாழ்த்துக்கள் கூறுகின்றோம் !
"சூப்பர் ஸ்டாரின் "சூப்பர் பெர்த் டே"க்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

=============================================================


புதன், 12 டிசம்பர், 2018

ஐந்து மாநில தேர்தல்.

ஐந்து மாநில தேர்தல்.
==========================================ருத்ரா

"ராமா! ராமா!
குறையொன்றுமில்லை ராமா!
வேறு என்ன வேண்டும்?
ஆயிரம் அடிக்கு மேல்
உனக்கு ஒரு சிலை வேண்டும்.
பளிங்குக்கல் அடுக்கி
உனக்கு ஒரு கோவில் வேண்டும்"
என்று தான்
வடபுலத்தவர்கள் இருக்கிறார்கள்
என தப்புக்கணக்கு அல்லவா
போட்டிருந்தோம்.
ஆனால்
"ஜனநாயகச்சீதையை"
தீக்குளிக்க அல்லவா
"சதிகள்" தீட்டினார்கள்
என்று அவர்கள் புரிந்துகொண்டு
சதிகாரர்களை
சரிவுக்குள் தள்ளி விட்டார்களே !
"கோத்ரம் இல்லாத
அற்ப பதர்களை
நாட்டைவிட்டே ஓட்டுவோம்"
என்று
அனுமார் வாலில்
தீயைக்கொளுத்தி அல்லவா
தேசமெங்கும் பரப்பினார்கள்.
ராமன் என்றால்
அன்பானவன்?
அவன் எப்படி
வம்பானவன் ஆவான்?
ராமாயண இதிஹாசங்கள்
முன்னூறுக்கும் பேல் இருப்பதாக‌
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால்
இது ஒரு புதிய ராமாயணம்.
பூமிக்குள்ளிருந்து வந்த சீதை
இவர்கள் கணக்குப்படி
பட்டியல் இனத்தவள் தானே.
அதனால் தான்
அசோகவனத்தில் கற்போடு
இருந்தவள் மீதும்
பழிச்சொல் வீசவைத்து
தீக்குளிக்க வைத்தார்கள்.
"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்"
என்று
மண்ணுக்கடியில் பிறந்தவள்
மன்னனை காத‌லிப்பதா?
என்று ஒரு சனாதன சாணக்கியன்
கடைசி வரை காத்திருந்து
பழி வாங்கியிருக்கலாம்.
நுழைந்து பார்த்தால்
நுட்பமாய் நுணுகிப் பார்த்தால்
அந்த பழைய ராமாயணம்
ஒரு "ஆணவக்கொலையின்"
ஆதி இதிஹாசம் என்று
சொல்லலாமோ?
சொல்ல‌லாமோ என்ன?
சொல்லியே விட்டார்கள்!
பழைய கதைப்படி
அந்த வில் முறிய விடாமல்
இந்த ஜனநாயக ராமர்கள் ஓட்டுகளில்
வில் வளைத்து அம்பெய்தி
ராமர் முகமூடி போட்ட அசுரர்களை
வதம் செய்து விட்டார்கள்.
வால்மீகிகளே
நீங்கள் கரையான் புற்றிலிருந்து
வந்தவர்கள் அல்ல!
வியர்வையின் கடல் அலைகளிலிருந்து
வந்து
இந்த தேசத்துக்கு உரம் ஏற்றியவர்கள்.
மானிட நேயத்து
புதிய இதிகாசங்களே
இனி உங்கள் முழக்கங்கள்!

====================================================





ஒரு குழந்தை பிறக்கிறது..

ஒரு குழந்தை பிறக்கிறது..
======================================ருத்ரா இ.பரமசிவன்.


தாய் வயிறு கிழிந்து
இப்போது தான் வந்தேன்.
அவள் மூச்சுகள் எனும்
வைரக்கம்பிகள்
வைத்து நெய்த சன்னல் பார்த்து
கனவுகள் கோர்த்தபின்
அவள் அடிவயிற்றுப்
பொன்னின் நீழிதழ்
அவிழ்ந்த கிழிசலில்
வந்து விட்டேன் வெளியே!

நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.
சூரியசெப்புகளும் கொண்டு
விளையாட மனம் வரவில்லை.
வண்ணத்துப்பூச்சிகள்
சிமிட்டும் சிறகில்
வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.
பூக்கள் எனக்கு
புன்னகை சொல்ல
வந்தன என்றார்.
புன்னகைக்குள் ஒரு
இருண்ட நீள் குகை
எப்படி வந்தது?
மான் குட்டிகள் மந்தை மந்தையாய்
மனதை அள்ளும் என்றார்.
மண்பொம்மைகளாய் அவை
யாவும் கரைந்து மறைந்தே போயின.
அடி வான விளிம்போரம்
தொடு வான இதழோரம்
சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்
கீற்று என்னை அறுப்பது
உணர்ந்தேன்.
என் தாயின் இதயச்சுவர்களில்
பாயும் குருதியில்
வலியின் குதிரைகள்
விறைத்து எகிறும்
காட்சிகள் கண்டேன்.
அழகாய் பூத்த அவள்
தாமரைச்சிரிப்பிலும்
மறைந்த ஓர் மெல்லிழை
கோடி கோடி உலகங்களின்
கனங்கொண்ட சோகமாய்
அழுகையின் லாவா
அடங்கித்தேய்ந்து
அவள் கருப்பைக்குள்ளேயே
கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.
பிரம்ம வாசலில்
பெண் ஒரு கேவலம்!
அவள் கதவு திறந்து
வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌
கேவலம் கேவலம்.
முக்தியும் நாசம் அதன்
பக்தியும் நாசம்
என்றொரு
மூளிக்குரல் மூள எரியும்
பிணத்தீ மூட்டிய‌
வேள்விகள் கொண்டா..ஞானக்
கேள்விகள் வளர்த்தீர்!
வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!
பெண்மை எனும் தாய்மையின்
தங்கமுலாம் பூசிக்கொண்டு தான்
இனி நான் பிறப்பேன்.
மானிட நேய ஊற்றாய் தான்
வருவேன்.
அப்படி நான் பிறக்கும்போது
என் விடியல் அங்கு பூக்கட்டும்!
அப்போதே நான் ஒரு பூம்புயலாய்
புறப்பட்டு வருவேன்
புதிய தோர் காலம் படைத்திடுவேன்.

======================================================
14.09.2016


ஞாயிறு, 9 டிசம்பர், 2018

"பேட்ட" ரெண்டாவது இசை வெளியீட்டு விழா

"பேட்ட" ரெண்டாவது இசை வெளியீட்டு விழா
============================================================ருத்ரா

வழக்கம்போல்
சன் டி.வி யின்
ஒளிவெள்ளமும்
இசை வெள்ளமும்
ரெண்டு சாரைப்பாம்புகள்
பின்னிக்கொண்டு
டான்ஸ் ஆடுமே
அப்படி இருந்தது.

இந்த விழாவில்
ரஜனியின்
ரெண்டு விசிலடிச்சான் குஞ்சுகளின்
ஆரவாரமான பேச்சுகள்
நன்றாய் இருந்தன.
அந்த குஞ்சுகள் வேறு யாருமில்லை
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜாவும்
இசை இயக்குனர் அநிருத்தும் தான்.

படம் எடுக்கப்பட்ட கதை கூட‌
இன்னொரு திரைப்படக்கதை ஆகலாம்
போலிருக்கிறது.
ரஜனி அவர்களின் பேச்சு அப்படி.

இன்னும் மூன்று நாளில்
அவரது பிறந்த நாள்.
அதற்கு வாழ்த்த
ஒரு விவிவிவிவிவி...ஐபி
அங்கு வந்து அமர்ந்திருந்திருந்த‌
இருக்கையை கவனித்தோம்.
யார் என்று தெரியவில்லை.
இருக்கை காலியாகவே இருந்தது.
புதிர் முடிச்சு போட்டவர்
விஜயசேதுபதி.
ரஜனி ஒரு மகா மகா கண்ணியமானவர்
என்று நிறுவிக்காட்டினார்.
விஜயசேதுபதி ஒரு மகாநடிகர்
என்று "சான்று உரை" மூலம்!

ரஜனியின் பேச்சு மிக இயற்கையாய்
எந்த வித கிரீன் ரூம் பூச்சும்
இல்லாமல் இருந்தது
ஒரு சிறப்பு.
ஆனால் விஜயசேதுபதி
சொல்லும்போது
கடவுள் வந்து இருந்தால்
இவர் நடிப்பை அவரே பாராட்டியிருப்பார்
என்று குறிப்பிட்டார்.

அந்த காலியான சேரில்
கண்ணுக்குத்தெரியாமலேயே
உட்கார்ந்திருந்த அந்த‌
விவிவிவிவி...ஐபி
இப்போது யார் என்று புரிந்திருக்கும்!

திடீரென்று
அந்த இருக்கையில்
ஒரு காகிதம் வைக்கப்பட்டு இருந்தது.
யாரும் இல்லை.
அப்படி அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?

"நான் ஒரு பிரபஞ்சத்துக்கு கண் சிமிட்டினால்
அது நூறு பிரபஞ்சத்து வெளிச்சம் தரும்.
நானே ஒரு சூப்பர்ஸ்டார் ..
இங்கே எப்படி இன்னொரு சூப்பர் ஸ்டார்?
சரி இருந்துட்டுப்போகட்டும்
வாழ்த்துக்கள்.
கடவுள் எல்லாம் கிடையாது.
அதனால தான் இந்த சேர்
இப்போது மட்டும் இல்ல
எப்போதும் காலியாத்தான் கிடக்கும்!
ஆன்மீகம்ங் கிறதும் ஒண்ணுமில்ல.
இவர் அதெல்லாம் சொல்றதுக்கு
காரணம்
சிக்மண்ட் பிராய்டு சொல்லிவிட்டார்.
அவருக்குள் இருக்கிற உள் முரண்பாடுகளே அது."

யாரோ கட கடவென்று ஓடி
எழுதியிருந்த காகிதத்தை
மேடையில் வாசிக்க கொடுத்தார்.
அவர் வாசித்தார்
"பாபா பாபா பாபா ...பாபா..."
விசில்கள்  பறந்தன.
ஆம் இன்னும்
விசில்கள் பறந்துகொண்டே இருக்கின்றன.

=====================================================
(கொஞ்சம் கற்பனை சேர்த்தது)

















பறையோசை அல்ல இது!

பறையோசை அல்ல இது!
================================================ருத்ரா

சாதிவெறியின்
ஆணவக்கொலையால்
கணவனை இழந்த
பெண் "கௌசல்யா"
அவர்கள் இப்போது
நிரூபித்து விட்டார்கள்
ஒரு பெண்மையின் ஆண்மையை!
"கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்"
என்ற இளங்கோ அடிகள் கூட‌
இப்போது வாழ்த்துவார்.
பெண்மையின்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
உண்மை உண்மை பெண்ணே
நீ இனி
அந்த வெறும் நிழல் எனும்
திங்கள் அல்ல!திங்கள் அல்ல!
இந்த கண்ணகி
உடைத்த சிலம்புப்பரல்களில்
மாணிக்கமா? முத்தா?
என்ற விசாரணைகள் இப்போது  இல்லை.
மனித சம நீதியா? சாதி மத நீதியா?
என்ற பரல்கள்
உடைந்து சிதறி
சமூக நீதியின் வெளிச்சம் காட்ட‌
வந்திருக்கிறாய்
ஓ! பெண்ணே!
அந்த லட்சியத்தின்
தூரத்து இடி முழக்கத்தை
நம் அருகேயே கேட்கும்
இதய முழக்கத்தின்
பறையோசையாய் பறைசாற்றும்
இயக்கப்புயல் சக்தி அவர்களே
ஆணவக்கொலை இனி பயமுறுத்தும்
சொல் அல்ல.
சமுதாய அடி நாதத்தை
ஆவணப்படுத்த வந்த‌
இந்த பறையோசையில்
மறையப்போகிற‌
ஆதிக்க ஓசைகளை
அடித்து நொறுக்கப்போகும்
ஒரு பூகம்ப ஓசை இது.
உளுத்துப்போன அந்த‌
மறையோசைகளை
"பேயோட்ட"வந்திருக்கும்
சிந்தனை அலைகளின்
அதிரோசை இது.

==========================================================

சனி, 8 டிசம்பர், 2018

வெள்ளைக்காகிதங்கள்

வெள்ளைக்காகிதங்கள்
===========================================ருத்ரா

ஒரு கட்டு கணினி காகிதங்கள்
என் மேஜையில்
காத்துக்கிடக்கின்றன.
உட்கார்ந்து ஒரு தாளை உருவி எடுத்து
மேஜையில் வைத்துக்கொண்டு
பேனாவை கையில்
உருட்டி உருட்டி யோசித்துக்கொண்டிருந்தேன்.
இன்னும்
அந்த சஹாரா பலைவனத்தில்
வெப்பம் மட்டுமே மூச்சு விட்டுக்கொண்டிருந்தது.
எங்கோ ஒட்டகங்களின்
அழிந்து போன காலடிச்சுவடுகள்
வரிசை வரிசையாய்.
எனக்கான அந்த "பாலைவனப்பசுஞ்சோலையை"
எட்டி எட்டி தேடுகிறேன்.
மூளித்தனமான தருணங்கள் உருள்கின்றன.
முகமெல்லாம் மணல் சிதறல்கள்.
எதை எழுதுவது?
கண்ணுக்கெட்டிய பாழ்வெளி
அலை வீசிக்கொண்டிருந்தது.

அந்த குட்டி மண்சுவரை ஒட்டிய‌
பூவரசமரத்தில்
ஒரு இலையை ஒடித்து
பீபீ செய்து கன்ன உப்ப‌
நாதஸ்வரம் வாசித்தேன்.
ஓசையும் வரவில்லை.
நாதமும் வரவில்லை.
சும்மா ஊதிக்கொண்டிருந்தேன்.
சோப்புக்குமிழி ஊதுவது போல்.
என் காத்திருப்பின் மெல்லிய சல்லாத்துணி
என்னை வாரி வாரி சுருட்டியது.
இந்த வழியாய் தானே
நீர்க்குடம் சுமந்து வருவாள்.
அந்த குட்டைப்பாவாடைக்கு கொஞ்சமும்
பொருந்தாத பெரிய குடம்.
இன்னும் வரவில்லை.
எனக்கும் இன்னமும் அதை
எழுதிப்பார்த்துக்கொண்டே இருக்கும்
தெம்பும் வரவில்லை.
தாகம் மட்டும் ஆயிரம் சஹாராவாய்
எதிரே விரிந்து கிடந்தது.
சிதை அடுக்கியது போல்
அந்த கட்டுக்காகிதங்கள் மேஜையில்.

==============================================================






"பொரிவிளங்கா"

"பொரிவிளங்கா"
=================================ருத்ரா இ பரமசிவன்


"வாயி வய்வு"
நரம்பு நைந்து
வாய் கோணிக்கொண்டதில்
தன் பேத்தி "வடிவை"
இப்படித்தான்
அவன் கூப்பிட்டு
அவள் சுருள் முடியை
தடவுகிறேன்
என்று சிக்கல் ஆக்குவான்.
ஆத்திரத்தில் ரெண்டு உப்புக்கல்
குறைந்தற்கு
கரண்டியோடு சாம்பாரை
தன் "நற் பாதி" (பெட்டர் ஹாஃப்)மீது
இப்படித்தான் மோதி அடிப்பான்.
அர்த்தநாரீஸ்வரன்
ஒரு கன்னத்தை
மறு கையால் இப்படித்தான்
அடித்துக்காட்டி
அன்பே சிவன் என்று
உலகுக்கு காட்டினானா?
தொண்டை மேட்டில்
தங்க பூண் பிடித்த‌
அந்த ருத்திராட்சக்கொட்டை
தாமஸ் ஆல்வா தந்துவிட்டுப்போன‌
கிராமஃபோன் காந்தஊசிக்கூடு போல‌
நடுங்கி நடுங்கி ஆடும்
அவன்
"நமச்சிவாயா"
என்று அரற்றும் போதெல்லாம்.
அம்ச்சீய்யா அம்ச்சீய்யா
என்று அவன் குழறுவது
அந்த "ந‌மச்சிவாயத்தை"தான்
பஞ்சாட்சரம்
பஞ்சடைந்த அவன் விழிகளில்
தண்ணீர் வடித்தது.

ஆத்திரமெல்லாம் வடிந்தபின்
அது
மூத்திரமாய்
கை வழி கால் வழி
வழியும் ஒரு
யாத்திரையின் விளிம்புக்கு
வந்து விட்டான்.
குழி விழுந்த அந்தக்கயிற்றுக்கட்டிலை
கோடரிகொண்டு துண்டாக்கி
தெருமுனையில் வீசப்போகும்
நாட்களை சந்திக்க‌
அவன் மீது மொய்க்கப்பொகும்
ஈக்களும் எறும்புகளும்
காத்துக்கொண்டிருக்கின்றன.

அவனுக்கு இன்று புரிகிறது.
கருப்புப்பிழம்பில் எல்லாம்
கருப்பாய் தான்
தெரிகிறது.
எத்தனை தெய்வங்கள்?
எத்தனை வேதங்கள் வசனங்கள்?
மனிதனுக்கு மனிதன் பரிமாறிக்கொள்ளும்
மானிட வாசனையை
அவன் முகர்ந்து பார்த்ததே இல்லை.
அதனால்
தன்னையே
பங்கு போட்டுக்கொண்டு வாழவந்த‌
மனைவியிடம் கூட‌
தன் அந்தரங்க திமிர்வாதத்தை
காட்டிக்க்கொண்டிருந்தான்.

படிகலிங்கத்துக்கு
பாலாபிஷேகம் செய்யும்போது
தானே எல்லாம்
என்ற மதர்ப்பு மட்டுமே
கற்பூரத்தீ முனையில் கரி பிடித்து நிற்கும்.
அன்று ஒரு நாள்
அந்த "சகதர்மிணி" அறியாமல்
அந்த பூஜையறை பக்கம் தலை காட்டி விட்டாள்.
வீட்டுக்கொல்லையில்
மாட்டுக்கொட்டத்தில்
சாணி நாற்றம் பிடித்துக்கொண்டு
"விலகியிருக்கும்" நாட்கள் அல்லவா அது?
எப்படி அங்கே அவள் வரலாம்?
கிணு கிணுவென்று அடித்துக்கொண்டிருந்த‌
பூஜை மணியை கோபமாய்
அவள் மீது விட்டெறிந்தான்.
அவள் நெற்றியில் ரத்தம் கொட கொடத்தது.

மேலே தொங்கிய‌
ரவிவர்மாவின் ஓவியத்தில்
சிவனும் பார்வதியும்
அருகே அருகே அணைத்துக்கொண்டு..
அந்த காட்சியில் கூட‌
தெயவ ஆலிங்கனத்தின்
ஒரு வியர்வை நாற்றம் வீசும்படி அல்லவா
அந்த ஓவிய மேதை
தூரிகை கொண்டு தூவி வைத்திருந்தான்.
ஆனாலும்
அவன் பக்தியின் உச்சம்
அங்கு அதீதமான ஒரு கவுச்சி வாடையைத்தான்
அங்கு நிரப்பியது.
அவள் அலறல் கண்டுகொள்ளப்படவேயில்லை.

இன்று
அவன் விழிமுன்னே
எதையோ கண்டு
மிரண்டு கிடக்கிறான்.
மெய்ப்பொருள் பொய்ப்பொருள்
எல்லாமே
சலமும் சளியுமாய்
கடல் பிளந்து காட்டுகிறது.
அது பாதையா?
அவனை விழுங்கும்
வாயா?

அவன் மிரண்டுகிடக்கிறான்.
பொருள் விளங்காப் பொருள் தேடி
பொய்யின்
பொடிப்பொடியாய் உதிர்ந்து கிடப்பதை
உணர்ந்து கொண்டானோ?
உணர்ந்ததை உரைக்க முடியவில்லை.

"பொய்விய்ங்கா..பொய்..பொய்விய்ங்கா பொய்.."
அந்தக்கிழவன்
குழறிக்கொண்டே இருக்கிறான்.
விடிந்தால் தீபாவளி..
வடை சட்டியில் எண்ணெயின் நுரைகள்
கொப்பளித்துக்கொண்டே இருக்கின்றன.

அன்பு பேத்தி ஓடி வருகிறாள்..
அந்த பொக்கைவாயில்
தீபாவளி பட்சணத்தை வைத்து
தின்னச்சொல்கிறாள்.
"பொரி விளங்கா தாத்தா
உங்களுக்கு பிடிச்ச‌
பொரி விளங்கா தாத்தா"
பேத்தி பரிந்து ஊட்டுகிறாள்.
"பொருள் விளங்கா பிறப்பின்
பொருளை
அந்தக்கிழவன் புரிந்து கொண்டானா?
தெரியவில்லை.
பேத்தியின் பிஞ்சுக்கைகளின் முன்
இந்த பிரபஞ்சமே வெறும் கந்தல் கூளம் தானோ ?
அவன் விழிகள் விறைத்தன.
அவன் தலை தொங்கிவிட்டது.
தூரத்தில் கேட்டது
பட்டாசு முழக்கம்.

=============================================================
22.10.2014







"தலித்"தா? "தனித்"தா?

"தலித்"தா?  "தனித்"தா?
=====================================ருத்ரா

மனிதநேயத்தை
காமிரா கண் வழியே காட்டி
உலக நோக்கர்களையே
திசை திருப்பிய‌
இளைய புயலாய் சீறும்
திரு.பா.ரஞ்சித் அவர்களே.
பட்டியல் மக்களை
ஒரு கூட்டணியாக‌
நீங்கள் திரட்டும்
உங்கள் முயற்சி
அநியாயங்களை எதிர்த்து
கொப்புளிக்கும்
மனித நீதியின் குரல் தான்.
அதில் ஐயமே இல்லை.
இதுவும்
ஒரு "நோட்டா" இயக்கம்
போன்றது தான்.
ஆனால்
மனுநீதிக்காரர்களின்
சீண்டலில்
இந்த ஜனநாயகம்
மனுநீதிக்காரர்களின்
ராட்சச வாயின் கோரப்பற்களிலேயே
இரையாகப்போய்விழும்
அபாயம் ஒன்று இருப்பதை
நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா?
ஏற்கனவே
பட்டியல்காரர்கள்
என்ற முத்திரையே
எங்களுக்கு அசிங்கம் என்று
ஒரு பிரிவை
பிரித்து ஆளும் தந்திரம் காட்டி
அந்த தலித் எனும்
சிறுத்தைக்கயிற்றை
அறுத்துக்காட்டுவதில்
முனைந்து விட்டனவே
அந்த மூர்க்க சக்திகள்!
உங்கள் மொழியில்
விடியல் என்றால்
காலாவும் கபாலியும் தானா?
ஜிகினாக்களின் "பஞ்ச்"களில்
அவை வெறும் சில்லறைச்சத்தங்களாக‌
தேய்ந்து மறைந்த பின்னும்
மீண்டும்
ரஜனியில்லாமல்
இந்த ஜனநாயகத்தைக் கதாநாயக‌னாக்கி
தேர்தல் கால்ஷீட் வாங்கி
ஒரு வினோத திரைப்படம்
ஓட்டலாம் என்று எண்ணிவிட்டீர்களா?
அனுமனையே
தலித் ஆக்கி
அந்த அடித்தட்டு மக்களின்
பக்தியையே நெருப்பாய் ஆக்கி
ஒரு "லங்கா தகனத்தை"
ஓட்டுப்பெட்டிக்குள்
ஒத்திகை பார்க்கும்
இவர்களின் "பாசிச"க்காட்டின்
அந்த பொறியில் விழவா
உங்கள் இந்த‌
கோபமும் ஆவேசமும்?
ரஜினிக்குள் இருக்கும்
காவி நாயகனை
காவிய நாயகன் ஆக்கிவிடும்
பாமர அலைகளை
எதிர்த்தா உங்கள் எதிர்நீச்சல்
வென்றுவிட முடியும் என்று நம்புகிறீர்கள்.
ரஜினியை
கபாலியின் நிழலாக இல்லாமல்
நிஜமான கபாலியாய் உலவச்செய்ய‌
உங்களால் முடியுமா?
சினிமாவை இயக்கி வைப்பது வேறு.
சித்தாந்தங்களை உயிர்க்க வைப்பது வேறு.
மானுட இயக்கத்தின்
இலட்சிய வீரன் அவர்களே!
திரு.பா.ரஞ்சித் அவர்களே!
காட்டாறு ஆகுவதை விட‌
நின்று நிகழ்த்தும் வரலாறே
வீரியமான ஆறு!

==========================================================








உருண்டு விழுந்தது..

உருண்டு விழுந்தது..
===================================ருத்ரா

எனக்கு உயிர் இருக்கிறது.
ஆனால் வாய் இல்லை
வயிறு இல்லை.
அதனால் அதற்கு
நாளும் நான்
வாள் தீட்டத்தேவையில்லை.

எனக்குள் மூச்சுகள் இருக்கின்றன.
உங்கள்
மணிபூரகமும் ரேசகமும்
கும்பகமும்
மற்றும் பதஞ்சலிகளும்
இந்த பெருங்காய டப்பாவுக்குள்
அமுத அடைசல் தான்.
நான் மூச்சுகளின் கிட்டங்கி.

மூச்சுகள் உண்டு
பேச்சுகள்?
நாகப்பாம்புகளின்
மூச்சுகள் மட்டுமே உண்டு.
அது நெடிய நீண்ட ஏக்கம்!
கிலோக்கணக்கில்
அடைத்து வைத்த வெடிபொருளாய்
சொற்கள் உண்டு.
அந்த எழுத்துக்குள் கூட‌
ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்ன
கருந்துளையின்
கருவிழி உண்டு.
பிரஞ்சங்களை நான் பிரசவிக்க முடியும்.
இருப்பினும்
அந்த உதடுகள் இல்லை.
முத்தமிட முடியவில்லை.
எல்லோரும் அந்த தேனில்
திளைந்து கிடக்கிறார்களே!
அதன் ஒரு சொட்டையாவது
நான் நக்கிப்பார்க்க முடியுமா?
ஆம்.
காதல் எனும்
மூச்சுகளின் பிரளயம் அது.
என் குழாயை உருவிக்கொண்டு
அந்த மின்னலின் தொப்பூள் கொடியை
கொஞ்சம்
சொருகி விடுங்களேன்..
ம்ம்ம்...சீக்கிரம்
நான் முடியப்போகிறேன்...

.............

.......

சடாரென்று
ஒரு நர்ஸின் கவனக்குறைவால்
உருண்டு விழுந்தது
அந்த‌
ஆக்சிஜன் சிலிண்டர்.

================================================
24.08.2015

குகை.

குகை.
=========================================ருத்ரா

தியானம் செய்யுங்கள்.
உங்கள் உள்ளொளி பெருகும்
என்றார்கள்.
உங்கள் மனதைக்கொண்டே
உங்கள் மனதுக்குள்
சுரங்கம் வெட்டுங்கள்
என்றார்கள்.
சரி
என் மனதை உலைக்கூடத்தில்
காய்ச்சி வார்த்து
மண்வெட்டி செய்து விட்டேன்.
அதற்கு பிடி போட வேண்டுமே.
எதைக்கொண்டு போடுவது
என்று கேட்டேன்.
சரியாகக்கேட்டாய்.
அந்த இருட்டுச்சுரங்கத்தில்
கேள்வி எனும்
தீக்குச்சியை உரசு.
உனக்கு பிடி கிடைக்கும்.
பிடியை பிடித்துக்கொள் என்றார்.
அந்த குகைக்குள்
வீசப்பட்ட கேள்வி இது.
"ஏண்டா ..மீண்டும்
இந்த குகைக்குள் போய்
என்ன மிருகம் ஆகப்போகிறாய்?"

=============================================


வெள்ளி, 7 டிசம்பர், 2018

"ஏலியன்"

"ஏலியன்"
===========================================ருத்ரா


வாழ்க்கை என்றால் என்ன‌
என்று
தெரிந்து கொள்ள‌
ஒரு ஏலியன் கண்ணுக்குத்
தெரியாமல்
என்னுடன் வந்து
உட்கார்ந்து கொண்டது.
நான் சாப்பிடுவது..
சாப்பிடுவதற்காக‌
வேலை செய்வது...
வேலை கிடைப்பதற்காக‌
படிப்பது...
படிப்பதற்க்காக
கல்லூரி வனங்களில் திரிவது..
அப்படி திரியும்போது
நான் சில மின்னல் முகடுகளை
காண நேர்ந்தது...

என்று காரண காரிய‌
சங்கிலித்தொடரை அது
பின் பற்றி வந்தது.

நான் சந்தோஷமாக இருப்பது...
அதற்காக‌
ஒரு அகநானூற்று
உணர்வுக்காட்டில் நான் புகுந்தபோது
அதுவும் புகுந்தது.
அப்போது
நான் பார்த்த அவள் விழிகள்
என்னை சுருட்டிக்கொண்டன.
நான் இப்போது
எங்கே இருக்கிறேன்?
எனக்கே தெரியவில்லை.
பாவம்
அந்த ஏலியன்
என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறது.
என் காலடி ஒலி கேட்டு
என்னைத்தொடர்ந்து வந்து
கேட்டது.
"மூச்சு இறைக்க இறைக்க‌
ஓடிக்கொண்டிருக்கிறாயே?
இது தான் உன் வாழ்க்கையா?"

"இது வாழ்க்கை அல்ல.
வாழ்க்கைக்குள் ஒரு வாழ்க்கை."

"என்ன சொல்கிறாய்?"

இதை காதல் என்பார்கள்
என்று சொல்ல நினைத்தேன்.
அதைப் புரியவைப்பதற்கு
நான் ஒரு "அவதார்"படத்தை அல்லவா
போட்டுக்காட்ட வேண்டும்.

"உனக்கு என்ன வேண்டும்?"

அது கேட்டது.

"அந்த விழிகள் அந்த விழிகள்..
என்று கவிதையில் சொன்னேன்.."

அதற்குப்புரிந்ததா?
தெரியவில்லை.

அந்த ஏலியனின் கண்கள்
"ப்ளாக் ஹொல்கள்!"
எத்தனை ஆயிரம் பிரபஞ்சங்கள்
அதனுள் உறிஞ்சப்பட்டுள்ளனவோ?

"அது தான் உன்
வாழ்க்கைக்குள்.. வாழ்க்கைக்குள்..
...வாழ்க்கைக்குள்...வாழ்கையா?"

அது ஏதோ ஒரு
பாலிநாமியல் கணித
சூத்திரங்களைத் தான்
அப்படி சொல்கிறதோ?
அதுவும் தெரியவில்லை..

சற்று இரு.
நானோ விநாடிகளுக்குள்
இந்தாப்பிடி இதை.
இதைத்தானே தேடி தேடி ஓடினாய்.

"என் கையில் ரத்தப்பிழம்புடன்
அந்த விழிகள்.."

"அடே! கொலை காரா!
ஏலியா..ஏலியா.."

...................
"ஏண்டா!
என்ன இது பினாத்தல்..
எலி பெருச்சாளி என்று..
போதும்டா பகல் கனவு.
எழுந்திருடா"

அம்மா எழுப்பினாள்.

========================================================







கடைசியில்..








கடைசியில்..
==================================ருத்ரா

வாழ்க்கையை
காதலி என்றார்கள்.
வாழ்க்கையைத்
தேடி தேடித்தான்
கடைசியில்
கண்டுபிடித்து
உன் வீட்டுச்
சன்னல் பக்கம்
வந்தேன்.

========================================

வியாழன், 6 டிசம்பர், 2018

ஒரு இசை வெளியீட்டு விழா

ஒரு இசை வெளியீட்டு விழா ==========================================ருத்ரா

உன் கால்களின் கீழ்
என்ன தட தட அதிர்வுகள்?
பாறைக்குழம்பு "புளிச்சென்று"
துப்பி விடப்போகிறதோ?
தீயின் லாவாக்கூந்தல்
வகிடு பிரித்துக்கொண்டு
ஓடி ஆழகு பார்க்கத்துடிக்கின்றதோ?
தெரியவில்லை.
சீஸ்மோகிராஃப் எனும்
"நடுங்கல் அளவைக்கருவி"
ரிக்டர் ஸ்கேல் ஆறோ ஏழோ என்று
வரைபடம் காட்ட ஆயத்தப்படுகிறது.
என்ன இந்த அதிர்ச்சி?
ஓ!
சூப்பர் ஸ்டார்
பாடும்  பாட்டில்
ஆடும் காளியாட்டமா இது?

"பேட்ட"
கோட்டை வரைக்கும்
போகுமா?
இல்லாட்டி
மேக் அப் கலைக்கும்
"கிரீன் ரூமோடு" சரியா?
அது "கிரீனா காவியா?"
அடுத்த இயக்குனர்
அவர் கண்ணில் படும் வரை தான்
இந்த பூகம்பம்.

===============================================




பிரம்மசூத்திரம் எனும் நாத்திக சூத்திரம் (3)

பிரம்மசூத்திரம்  எனும் நாத்திக சூத்திரம் (3)
===================================================ருத்ரா


பிரம்ம சூத்திரத்தில் மொத்தம் 555 சூத்திரங்கள் உள்ளன.இவற்றை "குறு வரிகள் " எனலாம்.ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பிரம்மம் என்ற அது என்ன?
அதில் என்ன தான் இருக்கிறது.அதை எதைக்கொண்டு விவரிப்பது என்ற நுண்மையான ஒரு தவிப்பு தென்படுகிறது.உண்மையான ஞானம் பிரம்மம் பற்றியது மட்டும் தானா? ஞானத்தின் மூளித்தன்மையில் ஞானத்தின் முழுத்தன்மை எப்படி வெளிப்படும்.? பிரம்மம் என்றால் என்ன என்று முழுமையாக எவரும் ஞானம் எட்டியதில்லை என்ற ஒரு ஏக்கம் நிறைந்த தேடல் ஒவ்வொரு சூத்திரத்திலும் தளும்பி நிற்கிறது.

கீழே வரும் சூத்திரங்களைப் பாருங்கள்.

(1) அததோ  ப்ரஹ்மஜிஞ்ஞாஸா 


"வாருங்கள் பிரம்மம் பற்றி அறியலாம்" என்று தொடங்குகிறது.

அத  அதஹ என்பதே "அததோ "ஆகி இருக்கிறது .
"அதாவது அதாவது ..."என்று இழுப்பது போல் தான் துவங்குகிறது.
பிரம்மம் என்பது என்று ஆரம்பித்தால் "ஏற்கனவே" நாம் பிரம்மத்தை அறிந்திருக்கிறோம் என்றும் இதைப்பற்றி மேலும் நாம் அறிவோமா க  என்று தானே தொடங்க வேண்டும்."அறிவு என்பதற்கு முன்னரே "இங்கு பிரம்மம்"இல்லை.பிரம்மம் என்பதற்குப்பிறகு தான் அறிவு அறியாமை  என்பவையெல்லாம் தோன்றியது என்று வானொலி எனும் வேதம் சொல்லியிருக்கிறது.எனவே பிரம்மம் பற்றிய ஞானம் பெறுவோம் என்று சொல்லும்போது நாம் பெற்ற ஞானத்தைக்கொண்டு பிரம்மம் அறியலாம்
என்று அது அர்த்தம் ஆனால் அது அனர்த்தம் அல்லவா.எது முன்? எது பின்?
ஞானமா? பிரம்மமா? முரண்பாடு துவங்கி விட்டது.

மளிகைக்கடையில் இஞ்சி இருக்கிறதா என்று கேட்டால் மஞ்சள் இருக்கிறது என்பார்கள்.அது போல் தான் இந்த "ஆத்திக"வியாபாரமும்."அஸ்த் "என்ற சொல் தான் அதன் வேர். அது இருக்கிறது என்ற பொருள் மட்டுமே "ஆத்திகம்"
அது எது? என்பதற்கு லட்சக்கணக்காய் சுலோகங்கள் தேவைப்படுகின்றன.
ஏதோ ஒன்று பெரிய்ய்ய்ய்யதாய் பிரமிக்க வைப்பதாய் இருப்பதை "பிரம்மம்"என்று சொல்லி விட்டார்கள்.ஆனாலும் அது எது? என்ற கேள்விக்கு
உரிய விடை "இல்லை."ஆத்திகம் நாத்திகத்தில் போய் முடியும் விளையாட்டு
இதுவே. பிரம்ம சூத்திரத்தின் இந்த 555 சூத்திரங்களும் இப்படித்தான்

இஞ்சிக்கு பதில் மஞ்சள்
மஞ்சளுக்கு பதில் மிளகு
மிளகுக்குப் பதில் கடுகு
கடுகுக்குப் பதில் சுளகு
.........................................
சரி தான்
கடையைப்
பூட்டப்போகிறீர்களா?
சரி ..
சாவியை எடுங்கள்
சாவி இல்லை
பூட்டு இருக்கிறது.
...............

இப்படித்தான் (விஞ் ) ஞானம் எனும் சாவி இல்லாமலேயே பிரம்மம் எனும்
கனத்த பூட்டை காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------









அண்ணே ..அண்ணே

அண்ணே ..அண்ணே
==============================================ருத்ரா

அண்ணேங் !..அண்ணேங் !
(விக்கி விக்கி அழுகிறார்)

ஏண்டா அழறே...அம்மாவுக்கு இரங்கலா?
ஆமாண்டா ..ரொம்ப சோகமாத்தாண்டா இருக்கு.
ரெண்டு வருடம் ஆயிப்போச்சு..

அத விடுங்கண்ணா ...ரெண்டு வருஷம் ஆயிப்போச்சு தான்.

வேற என்னடா?

அண்ணே ..சில மாதங்களுக்கு முன்னால தான்
அவங்க மறுபடியும் செத்துட்டாங்கண்ணே ..

என்னடா..என்னென்னமோ சொல்றே..

ஆமாண்ணே ...அவங்களுக்கு சிலை செஞ்சதா   சொல்லி
வேற யாரோட சிலையைக்கொண்டு வச்சாங்கல்லாண்ணே ...

அப்படி இல்லடா ...சிலை சரியா வரல்லேன்னாங்கடா ..

ஆமாண்ணே ..அம்மா அது வரைக்கும் அவங்க
ஆன்மாவோட வாழ்ந்துகிட்டு இருந்தாங்கண்ணே ..
அவங்க இறந்ததே
அந்த சிலையைப்பார்த்தப்புறந்தாண்ணே...

என்னது?

ஆமாண்ணேங்க்க் ...(விக்கி விக்கி அழுகிறார்)

ஐயோ சாமீடா .... நான் போறேண்டா...

(இவர் ஓடுகிறார்.அவர் அழுதுகொண்டிருக்கிறார்.)

===========================================================



ஊசியிலைக்காடுகள்

ஊசியிலைக்காடுகள்
====================================ருத்ரா


வங்கிக்கடன்


இந்த சல்லடையில்
இந்தியப்பொருளாதாரம்
ஒழுகிப்போனது.


தேர்தல்


ஜனநாயகத்துக்கு
மலர் வளையம் வைக்கிறார்கள்
ஓட்டுக்கள் என்ற பெயரில்.


வெற்றிடம்


தலைமைக்கு அல்ல.
வாக்களிப்பவர்களின்
தலைகளுக்குள் தான்.


தலித்


அனுமன் மட்டும் தானா?
அந்த சுடுகாட்டுச் சிவன்
ஐந்தாவதாய்
அடியில் கிடக்கிறான்.


அவரும் இவரும்


நேருஜி  கையில் புறா.
மோடிஜி கையிலோ
விளையாட
விமானப்பொம்மை.


அம்மாவுக்கு அஞ்சலி


நூறாண்டுக்கு எங்கே போவது?
இடைத்தேர்தல் தூரமே
எங்களுக்கு நூற்றாண்டு.


பாக்ஸ் ஆஃ பீஸ் அரசியல்.


ஹஹ்ஹா ஹா ..கண்ணா.
அது "பேட்ட" இல்ல!
நான் போற "கோட்டை "


ராகுல்


மோடிஜிக்கு கலக்கம்.
நேருவுக்கு
இவ்வளவு "பெரிய நீண்ட
நிழலா?"


ராமர் சிலை


குடிமக்களே
பயப்படுங்கள்!
இந்த பயம் தான்
இனி ராமராஜ்யம்!


=================================================

மின்னற்பீலிகள்(6)

மின்னற்பீலிகள்(6)
====================================ருத்ரா

"எப்போதோ
ஒரு வெள்ளியிழையை
பளிச்சென்ற சிரிப்பாய்
அவள் என் மீது  வீசினாள்
அதன் பிறகு
எத்தனை தடவை?...
எத்தனை தடவை ?...
எத்தனையோ தடவைகள்....?
அவள் வாய் திறப்பாள்
என்று
அவள் கண்பார்த்தேன்.
அவள் இமைகள் கூட
திறக்கவில்லையே.
ஒரு கனவின் கீற்றாய்
அவள் இதழ்கள் பிரியும்
என பார்த்தேன்.
இறுகி அல்லவா கிடந்தன
அந்த பவளத்திட்டுகள்.
அலிபாபா குகை போல்
பாறாங்கல் மூடிக்கொண்டன
பல வருடங்களாய்."
...........................
...........................
எப்போதோ திறக்க வேண்டிய
என் சொல்
இன்று அவன் "கவிதைக்கு"
"லைக்" போட்டது.
சூடான கண்ணீர்த்துளிகளையும்
சேர்த்து.
ஏம்மா ?அழுவுற .
என் இரண்டு வயது
குட்டிப்பெண் கேட்டாள்.

=================================================

புதன், 5 டிசம்பர், 2018

பிரம்ம சூத்திரம் எனும் நாத்திக சூத்திரம் (2)

பிரம்ம  சூத்திரம் எனும் நாத்திக சூத்திரம் (2)
====================================================ருத்ரா

பிரம்மம் என்பது கடவுளைக் குறிக்கிறதா? இல்லையா? என்பதை பிரம்ம சூத்திரம் கடைசிவரை சொல்லவே இல்லை.
அது இல்லை
இது இல்லை
அவன் இல்லை
அவள் இல்லை
இது இல்லை
இவன் இல்லை
இவள் இல்லை
எதுவும் இல்லை
எவனும் இல்லை
எவளும் இல்லை
பிறப்பு இல்லை
இறப்பு இல்லை
வர்ணம் இல்லை.
நாமம் இல்லை.
எல்லையில்லை
.............................
............................

இந்த "இல்லைகளை " சூத்திரங்களின் மாலையாக தொடுத்திருக்கிறார்
"பாதராயணர் "எனும் வியாசர்.உபநிஷதங்கள் சொல்லும் வரிகளே இந்த மாலையின் நாராக இருக்கிறது.வேதங்கள் என்பவை "வானொலிகள்".அந்த ஒலிகள் சுருதி எனப்படும்.மீண்டும் அவை சொல்லப்பட்டுள்ளபோது அவை
மனித நாக்குகள் செவிகள் மற்றும் நினைவுக்குள் தொடப்பட்டு உருவாக்கப் படுவதால் அவை "ஸ்ம்ருதிகள்"எனப்படும்.

பிரம்மம் எதுவென தெரியாது .உடல் தாங்கி உயிர் இருக்கும் விலங்கு அல்லது மனிதன் மட்டுமே நமக்குத் தெரியும்.இவற்றை இயக்குவது எது என்பதும் தெரியாது.ஆனால் பிரம்மம் எனும் வெளிப்பொருளை (பரம்பொருளை ) அடையாளம் காணவேண்டும் என்றால் இந்த மனிதன் விலங்கு பூமி வானம் காற்று நீர் சூரியன் இவற்றைக்கொண்டு தான் உணரவேண்டும்.ஆகவே எல்லாவற்றையும் சேர்த்து  ஒரு உடல் (சரீரம்) போல இருப்பதை நாம் உணர வேண்டும்.அறிய வேண்டும் என்கிறது பிரம்ம சூத்திரம்.அதனால் இதற்கு
"சரீரகா சூத்திரம்"என்றே பெயர்.இதன் அடிப்படையில் வெளிப்பொருள்
(பராமாத்மா) உட்பொருள் (ஜீவாத்மா) இரண்டும் ஒன்றாய் நிரவி நிற்பதை
விளக்க முற்படும்போது பல முரண்கள் தோன்றுவதால் அவையெல்லாம்
வெறும் தோற்றம் அல்லது மறைப்பின்  தன்மை (மாயா) என்று சொல்லப்படுகிறது.பிரம்மமும் ஆத்மாவும் ஒன்று என்று நிறுவ முயல்கிறது
பிரம்ம சூத்திரம்.அப்போதும் முரண்பாடுகள் முழுவதுமாய் விளக்கப்பட
இயலவில்லை.

அடுத்தக்காக "காரண காரிய"ங்களில் தெரியும் முரண்பாடுகள்.பிரம்மம் எல்லாம் படைத்தது என்றால் பிரம்மத்தைப்படைத்தது யார்? அல்லது எது?
இது "அறிவியல் ஒழுகலாறு"(லாஜிக்) பற்றிய சிக்கல் ஆகும்.விஞ்ஞானத்தில் "குவாண்டம் என்டேங்கில்மென்ட் " இதற்கு தீர்வு சொல்கிறது.ஆனால் இந்த
ஆத்மீக சூத்திரங்கள் "கல்பிதங்களை" (கற்பனைகள்)க்கொண்டு முட்டுக்கொடுக்கிறது. எப்படி என பார்ப்போம்.?


















"பாறையில் ஒரு தேவதை"



(with Great Thanks for this LINK)


இந்த மன்றத்தில் ஓடி வரும்.....
====================================================ருத்ரா

எங்கோ பிறந்த காற்றே
இங்கு நீ வருடுவது
வரலாற்றின் தடங்களைத்தான்..
உன்னை உரித்து
அதனுள் அந்த காலத்தையும் உரித்து
உற்றுப்பார்த்த போது..
நூற்றாண்டுகளை உருட்டி உருட்டி பார்க்கும்
கலைடோஸ் சித்திரங்களாய் தெரியும்
அந்த லியொனார்டோ டா வின்ஸியின்
ஆத்மாவின் கரையோரங்களில்
எத்தனை எத்தனை
வைரத்திவலைகள்.?
அவன் விரல் வழியே
உமிழ்ந்த உயிர் கண்டு
அந்த தூரிகை கூட புல்லரிக்கும்.
அந்த சின்ன சின்ன மயிர்ச்சிலிர்ப்புகளுக்கும் தெரியும்
அது "ஆயில் வண்ணக்குழம்பு" அல்ல‌
அவன் கற்பனைக்குள்
கொப்புளித்த ரத்தம் என்று!
இதோ அந்த பளிங்கு லாவா.


"பாறையில் ஒரு தேவதை"
===============================

நான் நினைத்தேன்
அந்த நிலவையெல்லாம்
வடிகட்டி
அவள் முகத்தில் பார்க்கவேண்டும் என்று...

அந்த சொர்க்கம் எல்லாம்
உருகி
ஒளியின் இன்பத்திரட்சியை
அந்த கண்களில்
வழிய விடவேண்டும் என்று...

இருட்டு அவள் பின்னே
கவ்விப்பிடிக்க நினைத்த போதும்
முகம் கொட்டும் வெள்ளி அருவியில்
பார்வைகள் குளித்தன.
பார்வைகள் இனித்தன.
பார்வைகள் பனித்தன.

அவள் புருவ நெளிப்பில்
என் இதயம்
கூடு கட்டிக்கொண்டது.
எப்போது அந்த இமைகள் பட படக்கும்?
அந்த பொன்சிறகுகள்
என்னை கட்டிக்கொண்டு
ஒரு கனிவு உலகத்திற்கு
எப்போது கூட்டிச்செல்லும்?

இதழ்களின் அருகே
இழைவதற்கு மிகவும் நடுக்கம்.
எத்தனை சொற்கள்
என்னை புதைக்க அங்கே
சிதறிக்கிடக்குமோ?

சுருள் கூந்தலில்
எனை மொத்தமும் உறிஞ்சிக்கொள்ளும்
ஜெல்லி மீன் ஜரிகைத்துடிப்புகள்
என் உள்ளத்தை கூழாக்கி பிசைகிறது...

அப்போது தான்
முத்தம் கொடுத்திருக்கிறாள்..
வானத்துக்கு...
நாளைய சூரியனின் நெருப்புக்கன்னத்துக்கு..
போதும்..எனக்கு!
என் உயிரின்
வேர் அடியில்..வேர்த்தூவியில்...
சில்லிட்டு நிற்கிறேன்.
பிறப்பு எனும்
அந்த "பண்டோரா பேழையை"
இன்னும் நான்
திறந்து பார்க்க வில்லை..
பார்க்கவும் விரும்பவில்லை..

===========================================================ருத்ரா 
17.12.2014

பல்வரி நறைக்காய்

பல்வரி நறைக்காய்
=========================ருத்ரா இ.பரமசிவன்

பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் 
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை
நல்லியக்கோடன் யாழிய இசையின்
நலம் கெட செய்தனை எற்று எற்று
இவள் உள் உள் முரலும் இன்சிறைத்தும்பி
உயிர்விடும் காட்சி ஒக்குமோ ஓராய்.
இலஞ்சிக் கண்கள் ஈரம் சுரப்ப‌
சிறு புள்ளும் பெருகக்களிக்கும்
சீறிலைச் சிறு கான் வளைக்கும் குன்ற!
கடுகொள் மரப்பு நீங்கியே மீள்வாய்.
இருசீர்ப் பாணி கனைகுரல் விரிப்ப‌
படுமணி நடுங்க கதழ்பரி கலிமா
நெடுந்தேர் விரைபு ஆறு கடந்து ஏகி
மெல்லுடல் நைந்த‌ பீலிஇறையவள்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே.

================================================

தலவியின் பிரிவாற்றாமைத் துன்பம் கண்டு
தலைவன் மீண்டு தோழி வருமாறு பாடியது.
______________________________________________

விளக்கவுரை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________

"வரிகள் மிக்க நறுமணக்காய் (சாதிக்காய்) தின்றாய் போலிருக்கிறது.அதனால் உன் தொண்டைவழியே வரும் அச்சொற்கள் இனிமையாய் இருந்தன.அந்த சொற்கூட்டங்களோடு நாம்  இருவரும் படுத்து  களித்த நீண்ட இரவுகள் மறந்தாயோ?மீண்டும் மீண்டும் நீ வராது நின்றதேன்?எதை நான் சொல்ல? இதன் காரணத்தின் வழி எனக்கு விளங்க வில்லையே!கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே.அது போல்மன உறுதி கொண்டவள் நான்.உண்ணப்போவதில்லை.காற்று உண்டு கூட  வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்"

என்று தலைவி கூறிக்கொண்டே போக தோழியும் சொல்லலுற்றாள்.

பல்துளைவழியே (நஞ்சு பாய்ச்சும்) பாம்பு கடித்தது போல் வலியுற்று துடிக்கிறாளோ? நல்ல பெரிய மற்றும் தொன்மை மிக்க பெரிய அந்த‌ இலங்கை (இப்போதைய திண்டிவனம்) நாட்டு "ந‌ல்லியக்கோடன்" யாழ் கொண்டு இசைத்து எல்லோரையும் மகிழ்விக்கும் அந்த நல்ல இயல்பை கெடுக்க வந்தவன் போல் இப்படி வராமல் இவளுக்கு துன்பம் செய்வது ஏன்? ஏன்? இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள் கொண்ட தும்பி போன்றது.அந்த இதயம் நின்று உயிர் நீங்கும் காட்சி காண சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்! அங்கங்கே காணும் இடங்கள் எல்லாம் சுனைகள் மிகுந்து (இலஞ்சிக்கண்கள்) நீர் வழிய சின்ன சின்னப்பறவைகள் கூட அதில் நனைந்து பெரு மகிழ்ச்சி கொள்ள சிற்றிலை மரங்களின் காடுகள் சூழும் குன்று நாட்டவனே! ஏதோ கடுமையான மறதி எனும் நச்சால் மரப்பு நோய் உற்றவனே!தெளிந்து எழுவாய்.உன் நெடுந்தேர் மணியின் நடுங்கும் ஒலி "கணீர் கணீர்"என்று இரட்டை தாள அலைவுகளோடு (இரு சீர்ப்பாணி கனைகுரல் விரிப்ப) வர பல வழிகள் கடந்து இங்கு வருவாயாக.இந்த மெல்லிய உடலாள் முன்கையில் இன்னும் மெல்லிதாய் "மயிற்பீலியின் வளையல்கள்"கூட பிணியுற்றது.
("பீலி இறையவள் பிணி").அந்நோய் நீக்க விரைந்து நீ வருவாய்.