செவ்வாய், 16 ஜூலை, 2024

நத்தைக்கூடுகள்

 


நத்தைக்கூடுகள்

______________________________________

கல்லாடன்.




கவிதை என்று

தனியாக எழுத வேண்டுமா என்ன?

சரியாகத்தான் ஆரம்பித்திருக்கிறேன்

அவளுக்கு ஒரு கவிதை...

திடீரென்று

ஒரு கை 

காகிதத்தைக்கிழித்துக்கொண்டு

கர்ஜித்தது.

ரீம் ரீமாக‌

காகிதத்தில் கருதரித்துக்கொண்டு

காலத்தையே

மலடு தட்ட வைத்திருக்கிறாயே.

ஒரு பெண்ணின் 

மின்னல் வெட்டு எப்போதாவது

உன்னை தீண்டியிருக்கிறதா?

இதையும் ஒரு

கற்பனையாய் குப்பை குவித்து

என்ன செய்யப்போகிறாய்.

இருட்டுத்திரையில்

உன் சூரியக்காதலுக்கு

ஓவியம் தீட்ட‌

அந்த தூரிகையின் மயிர்ப்பிசிறுகளை

கடித்துத் துப்பிக்கொண்டிருந்தது

போதும்.

நத்தைக்கூடுகளுக்குள்

காளிதாசர்கள் பிறப்பது இல்லை.


__________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக