வெள்ளி, 26 ஜூலை, 2024

கரையான்களின் பேட்டிகள்

 கரையான்களின் பேட்டிகள்

_________________________________




கவிதைகள்

ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

பறந்து கொண்டிருக்கின்றன.

மண்ணிலும்

விண்ணிலும்

புழு பூச்சி புல் கல் கட்டை என்றாலும்

பேனாக்கள் விடுவதாயில்லை.

அவற்றைப் பிதுக்கிப்பார்த்து

அவற்றின் அசைவுகள் எல்லாம்

காதல் காதல் காதல்

காதல் தவிர வேறொன்றும் 

இல்லை என்று

எழுதிக்குவிக்கின்றன.

இந்தக் காகிதங்களைத் தின்னும்

கரையான்கள் கூட‌

"ருசியோ..ருசி" என்று

பேட்டி கொடுக்கின்றன.

____________________________________

எப்சி







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக