கந்தலும் கிழிசலுமாய்
வந்தவனே கடவுள்?
தாறுமாறாய் இன்னும்
அதை கிழிப்பதே
மதங்கள்!
__________________________________
சொற்கீரன்.
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கந்தலும் கிழிசலுமாய்
வந்தவனே கடவுள்?
தாறுமாறாய் இன்னும்
அதை கிழிப்பதே
மதங்கள்!
__________________________________
சொற்கீரன்.
உன்னால் என்ன செய்து
விட முடியும்?
உன்னால் முடியும் தம்பி
என்று
ஜிகினாப்பட்டங்கள்
கச்சா பிலிமின் வானத்தில்
எத்தனை
மிதக்க விட்டோம்?
அன்று இமயத்தில் தமிழ்க்கொடி
என்று
முழங்கித்தீர்த்தோம்.
தமிழின் முதுகெலும்பு இன்று
முறிந்து கிடக்கிறது.
குவிந்து கிடக்கும் இந்த
ஈசல் சிறகுகளிலிருந்து
ஏதாவது ஒரு "மின்னல் பூச்சி"
விண்ணில் ஏறி
நம் விடியல் காட்டி விடாதா?
________________________________________
சொற்கீரன்
புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்
_____________________________________________
(01.08.2026 ல் திரு வண்ணத்தாசன் அவர்கள்
முகநூலில் எழுதிய கவிதை)
மண் இடம் மாற்றிக்கொண்ட
விண்ணில்
விடிவெள்ளிகள்.
கை நிறைய மனம் நிறைய
அள்ளிக்கொண்டதில்
விரல் இடுக்குகளில்
குற்றாலப்பிழியல்கள்.
குளித்துவிட்டு தலை துவட்டும்
அந்த குற்றாலத்துண்டு
இழைச்சன்னல்கள் தோறும்
சூரியக்கண்களின்
ஏழுவர்ணப் பார்வைகள்.
______________________________________
சொற்கீரன்