ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கந்தலும் கிழிசலுமாய்..

 கந்தலும் கிழிசலுமாய்

வந்தவனே கடவுள்?

தாறுமாறாய் இன்னும் 

அதை கிழிப்பதே

மதங்கள்!

__________________________________

சொற்கீரன்.



உன்னால் என்ன செய்து விட முடியும்?

 

உன்னால் என்ன செய்து

விட முடியும்?

உன்னால் முடியும் தம்பி

என்று

ஜிகினாப்பட்டங்கள்

கச்சா பிலிமின் வானத்தில்

எத்தனை

மிதக்க விட்டோம்?

அன்று இமயத்தில் தமிழ்க்கொடி

என்று

முழங்கித்தீர்த்தோம்.

தமிழின் முதுகெலும்பு இன்று

முறிந்து கிடக்கிறது.

குவிந்து கிடக்கும் இந்த‌

ஈசல் சிறகுகளிலிருந்து

ஏதாவது ஒரு "மின்னல் பூச்சி"

விண்ணில் ஏறி

நம் விடியல் காட்டி விடாதா?

________________________________________

சொற்கீரன்



புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

 


புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

_____________________________________________


(01.08.2026 ல் திரு வண்ணத்தாசன் அவர்கள்

முகநூலில் எழுதிய கவிதை)



மண் இடம் மாற்றிக்கொண்ட

விண்ணில்

விடிவெள்ளிகள்.

கை நிறைய மனம் நிறைய‌

அள்ளிக்கொண்டதில்

விரல் இடுக்குகளில்

குற்றாலப்பிழியல்கள்.

குளித்துவிட்டு தலை துவட்டும்

அந்த குற்றாலத்துண்டு

இழைச்சன்னல்கள் தோறும்

சூரியக்கண்களின்

ஏழுவர்ணப் பார்வைகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

சொற்கீரன்