ஞாயிறு, 31 டிசம்பர், 2017

அண்ணே....அண்ணே..(9)

அண்ணே....அண்ணே..(9)
====================================================ருத்ரா

"பாரத் மாதா கி ஜெய்"

"பாரத் மாதா கி ஜெய்"

"பாரத் மாதா கி ஜெய்"

(புதிதாய் கட்சியில் சேர்ந்த தொண்டர்)

"பெரியம்மாவுக்கு ஜெய்"

"பெரியம்மாவுக்கு ஜெய்"

"என்னங்க இப்டி கோஷம் போடுறீங்க?"

"ஆமாங்க எங்க அம்மா..சின்னம்மாவையெல்லாம் விட‌
இவங்க தானுங்களே "பெரிய்ய்ய அம்மா!"....

"??????!!!!!!!"

====================================================
(கற்பனையாய் ஒரு நகைச்சுவை)



புத்தாண்டு குறும்பாக்கள் (2018)









புத்தாண்டு குறும்பாக்கள் (2018)
===========================================ருத்ரா

தமிழருவி மணியன்

காமராஜ் காமராஜ் என்று
இவர் கூறியது
அவர் காதில் இப்படித்தான்
கேட்டிருக்குமா?
மைசூரின்
சாமராஜ் சாமராஜ் என்று.

-----------------------------------------------------

பன்னீர் செல்வம்

இருங்கள் டெல்லியைக்கேட்டு
சொல்கிறேன்
2018 பிறந்து விட்டதா
இல்லையா என்று.

-----------------------------------------------------

எடப்பாடி

ஒரே ஒரு ஊரில்
ஒரே ஒரு காலண்டர் தான்
இருந்ததாம்.
2018 கொண்டாடப்படவே
இல்லையாம்.
ஏனெனில் அது
2008 ஆம் ஆண்டு காலண்டராம்!

------------------------------------------

ரஜனி

குடு குடுப்பை காரராய்
வந்து
வாழ்த்து சொன்னார்.
நல்ல "காலா" வருகுது!
நல்ல "காலா" வருகுது !

-----------------------------------------------

தினகரன்

2018ல் 2017 இருக்கிறது.
2017 ல் ஆர்.கே நகர் இருக்கிறது.
ஆர்.கே நகரில்  அவர்கள்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அதிமுக எங்கே இருக்கிறது என்று

----------------------------------------------------

ஜெயக்குமார்

அவர் எங்களைச்
சொல்லவில்லை.
எங்கோ
ஏழு மலை தாண்டி
ஏழுகடல் தாண்டி
ஒரு குட்டித்தீவில்
அதை விட குட்டியாய்
உள்ளக்கட்சியை
குறிப்பிடுகிறார்.

--------------------------------

செல்லுர் ராஜு

அவர் சும்மா
ஜோக் அடிக்கிறார்.
அவர் ரசிகன்
அல்லவா நான்.

-----------------------------------

ஸ்டாலின்

சாதகமா?
பாதாகமா?
என்றா கேட்டீர்கள்?
அது அவர் படம்.
ஷூட்டிங்க் எப்போது?
தெரியாது.

------------------------------------------------------

மோடிஜி

மோடிஜி
மோடிஜி
மோடிஜி
...................
இதற்கு மேல்
எழுதினால்.
எச்.ராஜா சீறுவார்
இந்துக்கள் மனம்
புண்  பட்டது என்று!
-----------------------------------------------------
(நகைச்சுவைக்கவிதைகள்)












நகைச்சுவை (6)

நகைச்சுவை (6)
================================================ருத்ரா.

"என்ன அந்த ரசிகர்களெல்லாம் அந்த குதி குதிக்கிறாங்க! என்னவாம்?

தலைவர் அரசியல்ல குதிச்சு தேர்தல்ல நிக்கப்போறாராம்? இந்த ஒரு தீபாவளியே போதுமாம் இனிமே நூறு வருஷத்துக்கு தீபாவளியே கொண்டாட மாட்டாங்களாம்.

===================================================

அண்ணே..அண்ணே (8)

அண்ணே..அண்ணே (8)
==========================================‍‍‍‍‍‍‍=======ருத்ரா

"என்னடா 20 ரூபாய்  நோட்டையே திருப்பி திருப்பி
பாத்துக்கிட்டு இருக்கே."

"ஆமாண்ணே..மோடிஜி செல்லாதுன்னு சொல்றதுக்குள்ள போய்
மாத்தீரணும்."

"ஆமாண்டா போய் பாங்க்ல மாத்திரு."

"ஆமாண்ணே...இந்த பாங்கு எங்கேண்ணே இருக்கு?"

"எந்த பாங்குடா?"

"அதாண்ணே...நம்ம   "வோட்ஸ் பாங்கு"..

"????!!!!!"

==========================================================






ரஜனி உடைத்தது பலூன் அல்ல!

ரஜனி உடைத்தது பலூன் அல்ல!
================================================ருத்ரா

அந்த‌
"ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்"
பூசணிக்காய் உடைந்தது!
ஆனால்
நிச்சயம் அது பலூன் அல்ல.

இந்த கருப்பின் நெருப்புவண்ணம்
தீட்டிய சாசனம்
அன்றைய‌
வெள்ளைச்சாசனத்தின்
மேக்ன கார்ட்டாவுக்கு
சற்றும் சளைத்தது அல்ல.
ஆனால்
ஒரு அரசியல் வெளிச்சத்தின்
சுதந்திர வேட்கை இது.


"நான் அரசியலுக்கு வருவது உறுதி
தனிக்கட்சி தொடங்குவேன்.
234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
வாக்குறுதிளை நிறைவேற்றாவிடில்
மூன்று ஆண்டுகளில் ராஜினாமா.
கடந்த ஓராண்டு ஆட்சியில்
தமிழ் நாட்டுக்கே தலைகுனிவு
(அதாவது சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது)"

ஆம்!
சிங்கம்
தனியாகத்தான் புறப்பட்டிருக்கிறது.

கவியரசு வைரமுத்து
இந்த கலைஞரை தலைவராகத்தான்
பார்க்கிறார்.
உள்ளுக்குள் இவரும் நம் கலைஞர் தான்
என்ற
ஏக்கத்தை கசிய விட்டுக்கொண்டே.
அந்த
தின் ரெட் லைன்
இடைவெளி
உணமையிலேயே
ஒரு சிவப்பு விடியலுக்கு
கோடு தீட்டுமா?
தெரியவில்லை.
இவரது அரசியல் ஆன்மீகம்
விரிக்கும் கொடியின்
மூன்று வர்ணத்துள்
நான்கு வர்ணம் நிச்சயம்
புதைத்திருக்காது
என நம்புவோமாக.
மானிட நேயமிக்க
இவரது மனசாட்சிக்குள்
அலையடிப்பதில்
மற்ற மதங்களை
இடித்துத்தள்ளும் கடப்பாரைகள்
மூழ்கடிக்கப்பட்டுத்தான் கிடக்கின்றன
என்பதும் தெளிவாகத்தான்
தெரிகிறது.
இவரது
குருவின் குரலுக்குள்
ததும்புவது நிச்சயம்
குருமூர்த்திகள் அல்ல
என்பதும்  பளிச்சென்று தெரிகிறது.
இவரது ரசிகர்கள்
இனி விசில் அடிப்பவர்கள் அல்ல.
ஜனநாயகத்தின் காவலர்களாய்
இனி
விசில் ப்ளோயர்கள் அவர்கள்.
நீதிக்கும் நேர்மைக்கும்
குரல் கொடுக்கும்
எச்சரிக்கையாளர்கள்
அவர்கள்.
இப்படித்தான்
ரஜனி  ஓவியம் தீட்டியிருக்கிறார்.
புரியாதவர்களுக்கு
அது ஒரு பிக்காஸோ ஓவியம்.
சிலர்
அதை ரவிவர்மாசட்டத்துள்
அடக்கிப்பார்த்தாலும்
அதில் ஒரு சமுதாயச்சீற்றமும்
வரணங்கள் அற்ற ஒரு
ஓவியத்தைக் காட்டவே செய்கிறது.

நம்மை நாம் நன்றாக
கிள்ளிப்பார்த்துக்கொள்வோம்
இது நிச்சயம்
சினிமா  அல்ல என்று.

=========================================================
31.12.2017










சனி, 30 டிசம்பர், 2017

ரஜனி ரஜனி தான்

ரஜனி ரஜனி தான்
==========================================ருத்ரா

அவர் சொல்லும் வாக்கும்
இன்னும்
கைதட்டல் மழையில்
விசில் பிரளயங்களில்
ரசிகர்களின் உலகத்தில்
கொடி தூக்கி நிற்கிறது!
ஆனால்
இப்போது பூனை
பையிலிருந்து வெளியேறிவிட்டது.
அந்த காலம் வரும்
அப்போது ஆண்டவன் சொல்வான்
என்றார்.
இப்போது
"காலா"வுக்குப்பிறகு
வரும் ஆண்டவன் சொல் தான் அது
என்றும்
அது பலப்பல ஆண்டவன்களின்
சொல்களில் இருந்து
வடிகட்டி வரும்
சொல் தான் என்றும்
சொல்லியே விட்டார்.
பாக்ஸ் ஆஃபீஸ்களும்
ஏரியா விற்றுத்தீர்தல்களும் தான்
(எப்போதோ விற்றுத்தீர்ந்திருக்கும்
என்று
அந்த ஆண்டவன்களுக்கு
தெரியுமோ தெரியாதோ
என்பது
அவருக்கு நிச்சயமாய் தெரியாது.)
அவர் கையெடுத்துக்கும்பிட்டுக்காட்டும்
ஆண்டவன்!
அரசியல் பற்றி இனிமேல் தான்
அவர் ஆனா ஆவன்னா படிக்கப்போகிறார்
என்பதை
கண்டிப்பாய்
நாம் நம்புவோமாக!
ஏனெனில்
குறுக்குவழி அரசியல் பற்றி
கடுமையாய் கூறிவிட்டார்.
அதனால்
ஆற்றுக்கு குறுக்கே
கட்டியிருக்கும் பாலம் கூட‌
அவருக்கு
மிகவும் உறுத்தலாய் தோன்றி
ஆற்றின் கரை வழியே தான்
நடப்பார்.நடப்பார்.
அங்குலம் அங்குலமாய் நடப்பார்.
அப்போதும்
அவர் அரசியலின்
அந்த கரைக்கு எப்படி போவது
என்று
ரசிகர்களுடன்
ஃபோட்டோ எடுத்துக்கொண்டே
வினாக்கள் எழுப்புவார்!
ஆத்மீகம் சுடரச்செய்.
மதத்தை மற்றவரிடம் திணிக்காதே.
இவருக்கு இவரது குரு சொன்ன‌
மணியான கருத்துகள்.
டெல்லிக்காரர்கள் இதை நோக்குவார்களா?
இவர் சினிமா வியாபரம் செய்தாலும்
சில படங்களின் நஷ்டத்தை
இவர் ஏற்றதே இவரது ஆத்மீகத்துவமான‌
கண்ணியம்.
அதனால் ரசிகர்கள் மிக உயரமான‌
முதலமைச்சர் நாற்காலியை அல்லவா
இவருக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.
இருப்பினும்
தமிழர்களின் உயிரான பிரச்னைகளுக்கு
இவரது யோக முத்திரைகள்
தீர்வு சொல்லுமா என்பதும்
ஒரு பில்லியன் டாலர் கேள்வி தான்.
கனவு தான் சந்தோஷம் என்கிறார்.
அது புலித்தோல் ஆசனத்தின் தியானம்.
அரசியலின்
நனவு எனும் புலிச்சவாரி செய்ய‌
மறுபடியும் "சங்கரை"த்தான்
கூப்பிடவேண்டும்.."க்ராஃபிக்ஸ்" செய்ய.
இருப்பினும் இந்த மக்களின் மனசு பூராவும்
ரஜனி தான்.
ரஜனி ரஜனி தான்.
காலண்டரின்
முப்பதாம் தாள் மட்டுமே
கிழிக்கப்பட்டிருக்கிறது.
ஓ! அன்பான ரசிகர்களே!
அன்பிலும் அன்பான‌
உங்கள் ரஜனி ரசத்தின்
கடைசிச்சொட்டுக்கள் அந்த‌
முப்ப‌த்தொன்றாம் தாளிலும்
ஒட்டிக்கொண்டு
துளிர்த்து இருக்கின்றன.
அவர் உருட்டும்
அந்த கடைசி பகடைகளில்
பூகம்பம் தோன்றுமா?
இல்லை
பூக்கள் தான் (காதில்)
சூட்டிக்கொள்ளவேண்டுமா?
விடியட்டும் பார்க்கலாம்.
மர்மம் இல்லை.திகில் இல்லை.
இவரது வினோத
"பிக் பாஸ்"விளையாட்டில்!
ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என‌
பாட்டு முழங்கும்
பூசணிக்காய்கள் மட்டுமே
உடைகின்றன.

================================================================











வெள்ளி, 29 டிசம்பர், 2017

A Poetry of Positions

A Poetry of Positions
===============================Ruthraa E.Paramasivan
Ours
is a nation of motley ideologies.
To worship
we have gods more than our population.
caste and creed rule all the roost
with broken wings and dreams.
Even our knowledge and wisdom
is soiled with
myopic flavors!
A man without humanity
here
takes all the positions.
A book without a letter
is read with hollow murals and mosaics.
Our freedom means
fetters around all the corners.
The media never bother about this..
their concern is
noththing but
hitting hitting and hitting rates.
Our philosophy is an empty Tower
where the weeds and worms
are with feeds
of all sorts of non-sense and ill-sense.
===================================

இதோ வாய் திறந்து விட்டார் ரஜனி!

இதோ வாய் திறந்து விட்டார் ரஜனி!
========================================ருத்ரா

இதோ வாய் திறந்து விட்டார் ரஜனி!
ஆமாம்
இதோ வாய் திறக்கப்போகிறார்.
வார்த்தைகளின் வெள்ளம்
சீறத்துவங்கும்!
அலைகள் ஆர்ப்பரிக்கும்.
ஒரு விரல் தான்
அசைப்பார்.
அத்தனை கோடி விரல்களும்
மின்னணுப்பொறி பட்டன்களை
அழுத்தும்.
அவர் வருவார்.
அவர் கையில் நம் செங்கோல்.
அவர் தான் கடவுள்.
அவர் கொஞ்சம் கண்ணைமூடினாலும்
அதுவே
குண்டலினி சக்தி.
அந்த சக்தி
காவிரியை திருப்பி
நம் மண்ணுக்குள்
கொண்டு வந்து விடும்.
இந்த பரங்கிமலையையும்
பல்லாவரம் குன்றையும்
பார்த்து பார்த்து சலித்தவர்களுக்கு
இமயமலைகளுக்கெல்லாம்
ஒரு இமயமலையாய்
ஒரு புதிய இமயமலையை
நம் செங்குன்றம் அருகேயே நிறுத்தும்.
ஒரு மந்திரச்சொல்லே
ஒரு பெயர் ஆகும்.
அதை எப்படி திருப்பிப்போட்டாலும்
அப்படியே ஒலிக்கும்.
ஆம்.."பாபா."
பாஷா பாஷா என்று
ஒரு படத்தில் தூள்  கிளப்பியது
போல் தான் இதுவும்.
லஞ்சம் ஊழல்கள்
எனும்
அசிங்கமான சொற்கள்
அகராதியிலிருந்து
அறவே கழுவி கழுவி ஊற்றப்படும்.
துட்டுக்கு ஓட்டு
மூச்!
அப்புறப்படுத்துங்கள்
அந்த அற்பப்பதர்களை.
இதோ
பொற்காலம்
நம் இமை தூரத்தில்.
.....................
அதெல்லாம் இருக்கட்டும்.
காலம் வரும்போது மாற்றம் வரும்.
என்கிறார்.
அது காலமா? "காலா"வா?
நமக்கு தெரியவில்லை.
நாம் சாதாரண ரசிகர்கள் .
தலையை சொரிந்து கொள்வதை தவிர
வேறு என்ன செய்வது?
தலைவரோடு போட்டோவுக்கு
போஸ் கொடுப்பதே போதும்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகள்
எல்லாம்
இனி காணாமல் போய்விடும்.
மேலும் இப்போது
எம்.ஜி.ஆர் பாடல்களோடு
இழைந்து நிற்கிறார்.
எம் ஜி ஆர்  டி எம் எஸ்ஸுக்கு
வாயசைத்தார்.
ரஜனியும் எம்.ஜி.ஆர் வாய் அசைவிற்கே
வாய் அசைக்கிறார்.
"வாய்ஸ்" கொடுத்தவர்
வாய் அசைப்பில் வந்து நிற்கிறார்.
இனி என்ன சொல்லப்போகிறாரோ?
"காலம்" தான் பதில் சொல்லும்
என்கிறார்.
எல்லாவற்றுக்கும்
போதாத காலம் ஒன்று வரலாம்.
ஆனால் காலத்திற்கேவா
இப்படி  போதாத காலம் வருவது?
சரி.
அப்புறம் என்ன?
வீட்டுக்கு போய் உங்கள்
குழ்ந்தை குட்டிகளோடு போய்
சந்தோஷமாக இருங்கள்.

தலைவர் பிரகடனம் ஏதாவது உண்டா?
.................................
.................................
சற்று பொறுங்கள்
இன்னும் ஒரு தாள் பாக்கி
தினசரி காலண்டரில்.
அந்த இலையும் உதிரட்டும்
வசந்தம் வந்து
விடியட்டும்.

===================================================





வியாழன், 28 டிசம்பர், 2017

ஒரு சொர்க்கவாசல் வழியே ஒரு நரகத்திற்கு....


ஒரு சொர்க்கவாசல் வழியே ஒரு நரகத்திற்கு....
====================================================ருத்ரா

ஹரி எனும்
நாராயணனை
ஒரு தூண் பிளந்து
குடல் கிழித்து தான்
தரிசிக்கவேண்டுமா ?
ஆம்.
வேதாந்திகள் மூளைக்காட்டுக்குள்
திசைகளை தின்று விட்ட‌
அந்த அடர்ந்து காட்டுக்குள்
சிக்கித்திணறி
மாய்ந்து கிடந்தபோது
இருட்டே தான்
இன்னும் பெரிய இருட்டாய்
விசுவரூபம்  காட்டியது.

நாராயணன் எனும்
மனிதன்
நாராயணன் எனும்
இன்னொரு மனிதனுக்குள்
புகுந்து
அவன் கண்ணீரில்
அவன் சிந்தும் வியர்வைகளில்
ரத்தங்களில்
தோய்ந்து பார்ப்பதே
நாராயணீயம்.
பிரபஞ்ச உயிர்மை என்ற‌
இயற்பியல் நீச்சலின்
"போஸான் அல்லது ஃபெர்மியான்"களின்
அறிவு வெள்ளத்தில்
நீந்திக்களிப்பதே
நாம் பெறும் "மகா ஞானம்"

இன்னமும்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம்
என்று
வரப்பு கட்டும்
நம்  வடிகட்டிய முட்டாள்தனங்கள்
எரிந்து நாசமாகுவதன் ஒளியே
ஒரு சொர்க்கவாசலுக்கு
வெளிச்சம் காட்டும்.
நரன்+அயணம்..
மனிதனில் வெளிப்படு.
மனிதனில் வாழ்ந்திரு.
மனிதமே உன்
மூச்சுக்காற்று.
பாம்புப்படுக்கையல்ல அது!
அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவன் வாயில் மண்ணு
என்று பொட்டில் அறைந்து
சொன்னபோதும் கூட
மதமாச்சாரியங்களின்
போதை மழையே
நம் மண்ணின் மனங்களை
அரித்துக்கொண்டு போய்விட்டது.
கீழவெண்மணியில்
கருகிப்போன‌
அந்த நந்தனார்கள்
வேண்டியது நியாயமான கூலியே!
தில்லைக்கூத்தன் தரிசனம் அல்ல.
தீய்ந்து போன
அந்த மனிதங்களின்
அடி உரத்தில்
மின்னல் பயிர்களாய் வந்த
வெளிச்ச சிந்தனைகள்
நம் கந்தல் வானங்களுக்கு
ஒரு "கதிர் ஆடை" கட்டிவைக்கும்.
அந்த "மானிட ஆற்றலை"
கண்டு கொள்வதே
ஞானத்தின் ஞானம்.
அதை
இன்னும் சிந்தனையின்
படிக்கட்டுகளில் ஏறி
தரிசனம் செய்யாதவர்கள்
ஒரு சொர்க்கவாசல் வழியே
சென்றாலும்
நரகம்
நோக்கியே  தான் நகர்கிறார்கள்.

=======================================================


நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்.

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்.
=====================================================ருத்ரா

ஆம்.
வேதாந்திகள் மூளைக்காட்டுக்குள்
திசைகளை தின்று விட்ட‌
அந்த அடர்ந்து காட்டுக்குள்
சிக்கித்திணறி
மாய்ந்து கிடந்தபோது
நாராயணன் எனும்
மனிதன்
நாராயணன் எனும்
இன்னொரு மனிதனுக்குள்
புகுந்து
அவன் கண்ணீரில்
அவன் சிந்தும் வியர்வைகளில்
ரத்தங்களில்தோய்ந்து
பிரபஞ்ச உயிர்மை என்ற‌
"போஸான் அல்லது ஃபெர்மியான்"களின்
வெள்ளத்தில்
நீந்திக்களிப்பதே அது.
இதில்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம்
என்று
வரப்புகட்டும்
வடிகட்டிய முட்டாள்தனங்கள்
எரிந்து நாசமாகுவதன் ஒளியே
ஒரு சொர்க்கவாசலுக்கு
வெளிச்சம் காட்டும்.
நரன்+அயணம்..
மனிதனில் வெளிப்படு.
மனிதனில் வாழ்ந்திரு.
மனிதமே உன்
மூச்சுக்காற்று.
பாம்புப்படுக்கையல்ல அது!
நந்தனார்களின்
கீழவெண்மணியில்
கருகிப்போன‌
அந்த மனிதங்களின்
அடி உரத்தில்
மின்னல் பயிர்களாய்
வெளிச்ச சிந்தனைகளை
மகசூல் ஆக்கித்தரும்
அந்த சேற்றுமண் இதயங்களில்
நலம் தரும் சொல்லாய்
அந்த "மானிட ஆற்றலை"
கண்டு கொள்வதே
ஞானத்தின் ஞானம்.
அதை
இன்னும் சிந்தனையின்
படிக்கட்டுகளில் ஏறி
தரிசனம் செய்யாதவர்கள்
ஒரு சொர்க்கவாசல் வழியே
நரகம்
நோக்கியே நகர்கிறார்கள்.

=======================================================



சாவி



சாவி 
=================================ருத்ரா

அந்த கடல்மேல்
நீல விளிம்புகளில்
தள தளக்கும் 
அந்த கம்பளத்தின் மேல்
நடக்க ஆசை.
அதற்கு நான் ஒரு
தேவகுமாரன் ஆகவேண்டும்.
இந்த சாதாரண ஆபாசங்களின்
மானிடக்கூட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
ஓஷோக்களும் சென்களும்
கண்களை மூடி
உன் மனதைத்திறந்தால்
ஏழு கடல்களும்
உன் காலடியில் தானே
என்றார்கள்.
அன்று கண்களை மூடியவன் தான்
இன்னும் திறக்கவில்லை.
....................
....................

"சரி சரி சீக்கிரம் ஆகட்டும்
அந்த சதைக்கூளங்களை
போஸ்ட் மார்ட்டத்துக்கு
அனுப்புங்கள்..."

நடு ரோட்டிலா
தியானம் செய்தேன்.?


பரவாயில்லை
நான் படித்த 
ஒரு விஞ்ஞானப்புத்தகம்
ஏதோ ஒரு வழியின்
"ஸிப்பை" திறந்து விட்டிருக்கிறது.
"ஒரு புழுக்கூடு"(வொர்ம் ஹோல் )வழியே
வேறொரு பிரபஞ்சத்தில் இருக்கிறேன்.
ப்ரேன் காஸ்மாலஜி எனும் 
சவ்வுப்படல பிரபஞ்சத்தில் 
துடிப்பின் இழைகளாய் 
பரவி இருக்கின்றேன் 
(ஸ்ட்ரிங் தியரி)

வெப்பத்தின் நுட்ப ஆற்றல் 
புரட்டிப்போடுகிறது
பிரபஞ்ச்சத்தின் மைய விசைகளை.
அந்த டிஸ் ஆர்டரே 
என்ட்ரோபி எனும் சாவியாய் 
பிரபஞ்சங்களை எல்லாம்.
பூட்டுகின்றது  திறக்கின்றது.
என் விரலில் தான் 
அந்த சாவி சுழல்கின்றது. 

இப்போத
உங்கள்  பிரபஞ்சமே
என் காலடியில்.

=============================================

புதன், 27 டிசம்பர், 2017

மீண்டும் ரஜனி

மீண்டும் ரஜனி
============================================ருத்ரா

எங்கள் அன்பான ரஜனி அவர்களே!
நீங்கள் இன்னும்
"டார்ஸான்" போன்ற‌
காமிக் புத்தகங்களின்
சூபர் ஸ்டார் ஆகத்தானே
எங்களிடையே
வலம் வருகிறீர்கள்.
உங்களை ரசிக்கும் போது
எல்லோருமே...
எழுபது எண்பது வயதுக்காரர்கள் கூட‌
ஏழு எட்டு வயதுடைய‌
உற்சாகத்தின் பொங்குமாங்கடல்
ஆகிவிடுகிறார்கள்.
ஆனால் இந்த‌
அம்புலிமாமாக்காடுகளிலிருந்து
எப்போது
மீண்டு வரப்போகிறீர்கள்?
காலா என்றாலும் சரி
கபாலி என்றாலும் சரி
ஏன் கணினியுக வீரன்களாய்
ஜனித்து வரும்
எந்திரன் மற்றும் அதன் வெர்ஷன்
2.0 என்று
எப்படி வந்தாலும் சரி
உங்கள் "பஞ்ச்" டயலாக் ஆயுதங்களில்
இந்த பருப்பு ஒன்றும்
வேகாதே!
திரைஉலகத்தின்
உங்கள் கருப்பு மீசையோ
அல்லது
கருப்பு வெளுப்பு மீசை தாடியோ
எங்களை
இன்னும் இளமை துடிப்பதாய்
இன்னும் அந்த‌
கானல் நீர் ஆற்றுக்குள் தான்
இழுத்துப்பொகிறது.
பக்கத்தில்
ஒரு தமிழ் அருவியை
நீங்கள் வைத்துக்கொண்டாலும்
அது நம் திராவிட ஊற்றுக்கண்ணை
(ஏன் நீங்களும் கன்னடத்திராவிடன் தானே)
அவித்து விடலாம்.
நீங்கள் தமிழக எல்லையிலிருந்து தான்
எங்கள் மூவேந்தர் பண்பாட்டோடு
மூண்டெழுந்து வந்திருக்கிறீகள்
என்பதையும் நம்புகிறோம்.
சொந்த சகோதரர்கள்
வாய்க்கால் வரப்புச்சண்டைக்கு
வெட்டு குத்து வரைக்கும்
போவது போலத்தான்
காவிரிச்சண்டையும்.
அது காவிரித்து பூவிரித்து
கரை விரித்து வந்ததெல்லாம்
தமிழன் உழைப்பின் ரத்தத்தில் தான்.
அதற்காக அது இன்றைய‌
தமிழனின் தாகம் தீர்க்கும்
தனிஉடைமை என்று இவர்கள்
கேட்கவே இல்லை.
திராவிடச்சகோரத்துவம் தான்
அதன் இன்றைய தண்ணீர் வடிவம்.
இந்தப்புரிதலில்
ஓட்டைகள் எப்படி வந்தன?
அவை எப்படி அடைக்கப்படவேண்டும்
என்பதே இன்றைய‌
உயிரான பிரச்னை.
இதற்கு அம்புகளும் கோடரிகளும்
தேவையில்லை.
அணை என்ற‌ பெயரில்
காவிரியின் குறுக்காக வைக்கப்படும்
ஒவ்வொரு கல்லும்
திராவிடசிமிண்டு பூசப்பட வேண்டும்.
திராவிடச்சகோதரர்களை
ஒன்று படுத்தும்
தமிழனின் கையோடு
உங்கள் கைகள்
கை கோர்த்து கொள்ளட்டும்.
திராவிடம் எனும் அடி நெருப்பு
ஒரு ஒற்றுமையின்
ஊழி நெருப்பும்
அதில் தமிழ் எனும்
ஆழி நெருப்பும் சங்கமிப்பது தானே.
உங்கள்ஆத்மீகம் கூட‌
தமிழனின்
சிந்துவெளிப்படுகையிலிருந்து தான்
சிந்தனைப்பொறிகளை
சிதற விட்டிருக்கிறது.
அந்தப்பொறிகளை வைத்து
சாதி மத வேறுபாடுகள் களைந்த‌
ஒரு மனித நீதிச்சுடருக்கு
உங்கள் ஆத்மீகம் கூட‌
ஒட்டு மொத்த சமுதாயத்தின்
மனசாட்சி எனும்
அக்கினிக்குழம்புக்குள்
முத்துக்குளித்து
ஒரு விடியலை கொண்டுவரும்
என்று
இவர்கள் உங்களை நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையின் உதயமாய்
உருவெடுத்து வாருங்கள்.
இந்துத்வா என்பதற்கும்
இந்து என்பதற்கும்
உள்ள இடைவெளி என்ன என்று
உங்களுக்கு புரிந்திருக்குமே.
வெறியூட்டும் மண்டைஓடுகளுக்கு
குங்குமம் பூசி
கும்பாபிஷேகம் நடத்துவது அல்ல‌
தமிழனின் ஆத்மீகம்.
அடிப்படையில் அது
தமிழ் ஒளியில் ஒரு
உலக மானிடம் பூக்க வைப்பதே ஆகும்.
இந்த சுடரேந்தியாக‌
எங்களிடையே வலம் வரும் நாளே
உங்கள் திருநாள்.
எங்கள் பெருநாள்.
அது வரை
ரசிகர்களோடு
ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும்
உங்கள் பொம்மை விளையாட்டு என்பதும்
எங்களுக்கு இன்னொரு சினிமா தான்.
திரையின் நட்சத்திரமாக‌
ஜிகினாப் பூவேந்தி
நீங்கள் வருவதைவிட‌
தரையின்
கண்ணீர்ப்பூவாக‌
வியர்வையின் மகரந்தமாக‌
எங்களோடு எங்களாக‌
நீக்கள் உலா வருவதே
எங்கள் உவப்பு.
எங்கள் உயிர்ப்பு.
எங்கள் ஈர்ப்பு.
வருக வருக‌
எங்கள் இதயம் நுழைந்து
ஒரு உதயம் காட்ட‌
நீங்கள் வருக வருகவே!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================================



"சொடக்கு போடும் நேரத்தில்…" (குத்துப்பாட்டு அல்ல)

"சொடக்கு போடும் நேரத்தில்…"
(குத்துப்பாட்டு அல்ல)
=========================================ருத்ரா இ.பரமசிவன்

காலத்தின்
இந்த சந்து பொந்துகளில்
ஓடிக் களைப்பது யார்?
ஊடிக் களிப்பது யார்?
ஒரு பூகம்பம்
லட்சம் பேரை தின்று விடுகிறது.
நாஸா
பிரபஞ்சத்தின் காது குடைந்து
சங்கீதம் கேட்கிறது.
மில்லியன் ஒளியாண்டு தூரத்து
ஒரு பூமியில் கூட‌
என்னை மாதிரி
ஒரு ருத்ரா
என்னென்னவோ
எழுதிக்கொண்டிருக்கலாம்.
திடீரென்று
அப்துல் கலாம்
நம் முன் எழுந்து நிற்கலாம்.
இளம்பிஞ்சுகளின்
அரும்புக்கனவுகளில்
கூடு கட்டி கிடப்பதற்கே
வந்தேன் என்கலாம்.
நோபல் பரிசு விஞ்ஞானியின்
டி.என்.ஏ ஆர்.என்.ஏ தியரி
ஊசி மருந்தின் வழியே
புற்று நோய் நரகத்துள் புகுந்து
அதை
நாசம் பண்ணி விடலாம்.
தூக்குப்போட்டுத்தொங்கி
யாரோ ஒருவர்
இந்த உலகத்தின் மீது
காறி உமிழும் களங்கத்தை
செய்யாது தப்பித்து விடலாம்.
நம்பிக்கையின்
பசுந்தளிர் தலைநீட்டி
மன இறுக்கத்தின்
பாறாங்கல்லை
தவிடு பொடியாக்கலாம்.
காலத்தை
சொடக்கு போடும்
உங்கள்
விரலில் வழியும்
மூளையின்
பல்ஸை
பொறுத்ததே அது.
பொறுத்து பொறுத்தாகிலும்
பொருத்தமாகவே
சிந்தியுங்கள்.

=====================================================
06.01.2017ல் எழுதியது.

நடுகல் பீலியும் நார்அரி கலமும்


நடுகல் பீலியும் நார்அரி கலமும்
===============================================ருத்ரா

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
நுரையத் தரூஉம் நறவக் காட்சியான்
வேட்டுவன் யான் கூற்றம் கொண்டு
போயினும் ஓர் ஊழ்  வந்து மீட்டிய காலை
விண்ணின் இழிந்து ஓர் உயிருள் புகு தர
வேந்துகடன் ஆற்றும் நசைமிக்கூர‌
அகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌
வெண்ணிப்பறந்தலை வீழ்படுத்தாங்கு
விண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே!
என்னே பாழ் இது? ஈனப்படுகுழி
வீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌
சிலம்பும் புலம்பும்.எவன்செயும்?
இணரிடை ஊரும் அம்புல் எறும்பாய்
மீள் தர ஆங்கு எவ்விடையாயினும்
தோற்றிடும்  யான் நம் அருமைச்செம்மொழி
காத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு
எத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து
வெல்குவன்  வெல்குவன் அதன்கண்
 உருகெழு பிறப்பின் மண்சுவை தமிழ்ச்சுவை
நனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்
மீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.

=====================================================

வீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு
நடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து
நினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்
படித்தேன். "அதியமான் நெடுமான் அஞ்சி"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்
"நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலம்..." (புறம் 232)
என்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.
இது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்
மறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி
தமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌
அவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.

(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)

===================================================ருத்ரா
27.12.2012

எச்சரிக்கையாய் ஒரு நகைச்சுவை !

எச்சரிக்கையாய்  ஒரு நகைச்சுவை !
====================================================ருத்ரா

வடிவேலு

"என்னண்ணே வண்டி வருமா?"

என்னத்த கன்னையா

" வருஉஉஉஉஉம் ....ஆனா   வராஆஆஆஆ து!.."

வடிவேலு

"என்னண்ணே சொல்றீங்க?..சரிண்ணே..ஏருங்கண்ணே போகலாம்.."

(வண்டியில் ஏறிக்கொள்கிறார்கள்.கொஞ்சதூரம் போனபிறகு ....)

"டமார்."

( இது தான் "டிசம்பர் முப்பத்தொண்ணா?"
ஓட்டுனருக்கு ஏறுநருக்கும் ஒரு எச்சரிக்கை மிக மிகத்தேவையான
காலகட்டம் இது )

==================================================================



செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஓங்கி உலகளந்து......

ஓங்கி உலகளந்து......
======================================ருத்ரா 

ஓங்கி உலகளந்து
மூன்றாவது அடியை
மாவலியின் தலையில் வைத்து
அமிழ்த்திய‌
நெடுமாறனை 
உள்ளே உணர்ந்து மகிழ்ந்து கலந்து
பாடியிருக்கிறார் 
அருள் மிகு ஆண்டாள்.
அவரது இனிய தமிழ்
எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்
எழுத்துப்போதை தான்.
அதில் ஊறிக்கிடக்கும்
பக்திப்போதையை எல்லாம்
தெளியவிட்டு சிந்தித்தால்
நமக்கு ஒரு கேள்வி பிறக்கிறது.
மாவலி ஒரு சிறந்த மக்கள் ஆட்சியாளன் என்று
மலையாளத்தில் இன்றும்
மலர்க்கோலங்கள் இட்டு
அவனைக்கொண்டாடுகிறார்கள்.
இறைவன்
அடே மாவலி
நீ என்னை (விஷ்ணுவை) விட்டு
சிவனை ஏன் போற்றுகிறாய்
என்று நேரிடையாக கேட்டிருக்கலாம்.
அதை விட்டு
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்
அவன் பலவீனத்தைப்பயன்படுத்தி
இரண்டடி நிலம் வரைக்கும்
குள்ள அந்தணர் வேடத்தில்
தாழங்குடை பிடித்து நின்றவர்
மூன்றாவது அடியில் விஸ்வரூபம் எடுத்து
அவனை அமிழ்த்திக்கொன்றதில்
என்ன நியாயம்?
எனவே
ஓங்கி உலகளந்து நின்றது
மாவலி தான்.
புராணங்களின் சப்பைக்காரணங்கள் எல்லாம்
தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை!
இதுவும் கூட‌
ஒரு மார்கழி சிந்தனை தான்.

====================================================
19.12.2015.

மகிழ்ச்சி நிறைந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி நிறைந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்
================================================ருத்ரா

தினம் தினம் தான்
சூரியன் உதிக்கிறது.
ஆனால்
அன்றொரு நாள்
உதித்த சூரியனுக்கு
வியப்பு தாங்கவில்லை.
மாட்டுக்கொட்டிலில்
பனித்துளிகள்
பூச்சொரிய பிறந்த
அந்த பிஞ்சு உதிர்த்த
"குவா குவா"வில்
இது தான் எல்லோருக்கும்
கேட்டது.
"கடவுள் ஒரு பூச்சாண்டி அல்ல.
தண்டனை தருவதற்காகவே
உங்களுக்கு
அச்சம் தருவதற்கும்
அவர் அவதரிக்க வில்லை.
பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு.
உன் மனச்சாட்சியையே
கடவுளாக விசுவாசி.
அப்புறம்
உலகம் முழுதுமே
அன்பு புன்னைகைகளின்
மொத்தமான ஒரு பூச்செண்டு தான்."
ஆம்
அந்த பூச்செண்டே
இதோ இனிய விடியலாய்
விண் பிளந்து
மண் அளந்து
மலர்ச்சி காட்டுகின்றது.!

==========================================

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

புத்தகம்.



புத்தகம்.
==============================ருத்ரா இ பரமசிவன்

வாழ்க்கையை
சொல்லும் புத்தகம்
வாழ்க்கை மட்டுமே.
எத்தனை பக்கங்கள்?
அது
நீ புரட்டுவதை
பொறுத்தது அல்ல.
நீ படிப்பதை பொறுத்ததே.
அதில் பக்கங்களே
இல்லாமல்
ஆயிரம் பக்கங்கள்
புரட்டியிருப்பாய்
அது உன் காதல்!

=====================================

ஜனநாயக "தர்மம்"


வாழ்க ஜனநாயகம்.
============================================ருத்ரா

"மணி"யான தங்கள் வாக்குகள்
"மணி"யாகிப்போன
ஒரு பரிணாமத்தில்
அதை வாங்கி வாங்கி
இதை விற்று விற்று
மக்கள் அளித்திருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்.!
பிச்சைக்காரர்களின்
தட்டில் தான்
சில்லறைகள் விழும்.
ஆனால் ஓட்டுக்கு
இறைஞ்சுபவர்களின் 
தட்டிலிருந்து "கட்டு கட்டு"களாய்
பிச்சையெடுக்கும்
இந்த "இன்விசிபிள் ஹேண்ட்ஸ்"
 யாருடையவை?
இந்த கைகள் 51 சதவீதம்
இப்படி பிச்சையெடுத்துவிட்டால்
இதுவும்
விந்தையான ஜனநாயக "தர்மம்"
ஆகி விடும்.
வலுவாக ஆளவேண்டிய
ஜனநாயகம்
"ஐயா தர்மம் போடுங்க சாமி"
என்று ஈனக்குரல் எழுப்பி 
நசுங்கிப்போனதை
இதோ
வர்ண வர்ண தோரணங்களில்
கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஆம்
மீண்டும் சொல்வோம்
வாழ்க ஜனநாயகம்.

===============================================

சனி, 23 டிசம்பர், 2017

அண்ணே..அண்ணே..(வாக்கு எண்ணிக்கை)

அண்ணே..அண்ணே..(வாக்கு எண்ணிக்கை)
===============================================================ருத்ரா

(ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..)

அண்ணே..அண்ணே..
(ஓடிவருகிறார்)

ஏண்டா? என்ன ஆச்சு? எந்த கட்சிடா லீடிங்க்?

அண்ணே...திமுக லீடிங்!

என்னடா சொல்றே?

ஆமாண்ணே ..திமுக தான் ..அதாவது தினகரன் முன்னேற்றக் கழகம்...

????!!!!!

======================================================

வேலைக்காரன்

வேலைக்காரன்
==========================================ருத்ரா


"உலகத்து தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
நீங்கள் இழப்பது ஒன்றும் இல்லை
உங்கள் அடிமைச்சங்கிலிகளை தவிர."

என்ற கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோவுக்கு
குப்பத்தது குத்தாட்டங்களிடையேயும்
ஒரு அக்கினி ரோஜாவின்
நாற்றை பதியம் இட்டிருக்கிறார்
இயக்குநர் மோகன் ராஜா.
"சர்ப்லஸ் தியரி ஆஃப் வேல்யூ"
"தியரி ஆஃப் எக்ஸ்ப்லாய்டேஷன்
ஆஃப் சர்ப்லஸ் வேல்யூ"
மார்க்ஸ் சொன்ன
சுரண்டல் நுட்பம் இது தான்.
உற்பத்தி செலவு
ஆயிரத்தில் ஒரு மடங்கு
இருந்தாலும்
அதி நவீன கணக்காயர்களைக்கொண்டே
அதை "உல்டா"வாய் ஆக்கி
சந்தைக்கடலில்
அந்த "உபரி மதிப்பை"
அப்படியே பாக்கெட்டில்
போட்டுக்கொள்வதே
கார்ப்பரேட்டின் "அனக்கொண்டா"த்தனம்!
இந்தப்படம்
அதை தன் காமிராக்கண்ணின்
காட்சி மற்றும் திரைக்கதைத் தெறிப்புகள்
மூலம் காட்டியிருக்கிறது.
இதன் மூலம்
வெறும் மசாலா இயக்குனர்களிடமிருந்து
வேறு பட்டு
எங்கோ ஒரு சிகரத்தில் போய்
உட்கார்ந்து கொண்டார்
மோகன்ராஜா அவர்கள்.
அந்த சிகரத்துக்கும் மேல்
வைப்போம் நாம்
ஒரு மகுடத்தை அவர் தலைமீது!

ஊதாக்கலர் ரிப்பனை வைத்துக்கொண்டு
பாட்டுப்பாடி
வெற்றியின்
தன் முதல் அத்தியாயத்தை
எழுதிய சிவ கார்த்திகேயன்
இப்போது
அந்த "இமாலய"கயிலாயம் வரை
உயரம் ஏறி
கலக்கியிருக்கிறார்.

வில்லனாய் நடித்தாலும்
நடிப்பின் பல்கலைகழகம் ஒன்றை
தனக்குள்
பதுக்கிவைத்துக்கொண்டு
செதுக்கிக்கொண்டே இருக்கும்
அற்புத நடிப்புக்கலைஞர்
ப்ரகாஷ் ராஜ் என்பது
நாம் அறிவோம்.
அந்த "கில்லியில்"
செல்லம் செல்லம் என்று
பதறும் அந்த உணர்ச்சிக்குழம்பு
விஜயை கூட‌
பாடம் படித்துக்கொள்ள செய்யும்
நுட்பம் அது.
இந்தப்படத்தில்
அது முற்றிலும் புதுமையானது.
நயன தாரா
ஒரு "மின்காந்த"ரோஜா!
படத்தின் "குவாண்டம் மெக்கானிக்ஸ்க்கு"
அவர் புன்னகை
ஒரு ஸ்விட்ச்சை தட்ட
நிச்சயம் தேவைப்படுகிறது.
நிழல் படிந்த அவர் கண்களில்
ஒரு "பிளாக் ஹோல்"கவர்ச்சி
என்பது நடிப்பின் புயல்
மையம் கொள்ளும் பெருஞ்சுழி.

ஃபகத் பாசில் பற்றி
நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அவர் மலையாள முத்திரைகள்
வெற்றி குவிக்கும்
சின் முத்திரை என்பதில்
ஐயமே இல்லை.
கணினி அறிவு
மக்கள் நலம் எனும்
வாய்க்காலுக்குள்
பாயவிடாமல்
விஞ்ஞான பரிணாமத்துக்கும்
அதை வளரவிடாமல்
அழகிய படம் எடுக்கும்
நல்லபாம்பாகவே
வைத்துக்கொண்டிருக்கும்
கார்ப்பரேட் உத்திகளின்
பாம்புபிடாரனாக‌
நன்கு "படம்" காட்டியிருக்கிறார்
ஃபாசில்.
வேலைக்காரன் என்ற‌
பழைய படம்
சூப்பர் ஸ்டார்களின்
குத்தாட்டங்களை மட்டுமே
குத்தகைக்கு எடுத்திருந்தது.
இந்தப் படம் தான்
அதன் சமுதாய அர்த்தத்தை
அற்புதமாய் காட்டீருக்கிறது.
மார்க்ஸின்
அந்த "மூலதனத்தை"க்கூட‌
மூலதனமாக்கி
ஒரு படம் பண்ணமுடியும்
என்ற துணிச்சல் காட்டிய‌
மோகன்ராஜா.. சிவகார்த்தியன்
குழுவினரை
நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
அது
என்ன கூச்சலா?
இரைச்சலா?
இல்லை இல்லை
அடி நாதமாய்
இதயங்களை கிள்ளுகின்ற‌
இனிமைப்புயல் அது என்று
நம்மை புல்லரிக்க வைப்பது
அநிருத்.......
ஆம்  அநிருத் எனும்
இசைச் சுநாமியே அது.

=====================================================















வெள்ளி, 22 டிசம்பர், 2017

முகமே இல்லாத ஒரு ஜெயமோகன்

முகமே இல்லாத ஒரு ஜெயமோகன்
====================================================ருத்ரா

வெண்முரசம் என்று
தலையணை தலையணைகளாக‌
பரண்களில் கிடக்கும்
பழைய முரண்களை
குவித்துக்களிக்கும்
ஜெயமோகன்களுக்கு
சமுதாயப்புரட்சி பற்றி
பீறிடும் எழுத்துக்களை
எப்படியாவது
மழுங்களிடித்துப்பார்ப்பதே
இலக்கிய வேள்விகள் ஆகும்.
இப்படி
மனத்துக்குள் மகிழ்வதற்கே
மக்கள் கவிஞர் இன்குலாப்
பற்றிய விமர்சனத்தை
அவர்
வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஆட்சியில் தான்
விருது நிராகரிப்புகள் அதிகம்.
இலக்கியம் என்பது
சிந்தனையை
கூர்தீட்டிக்கொண்டிருப்பதே ஆகும்.
அந்த உரசலில்
சமுதாய தீப்பொறிகள்
தெறிப்பதில்
புதிய யுக வெளிச்சம் தோன்றும்.
பழைய பஞ்சாங்கங்களை
புதிய நவீனத்துவம்
புதிய புதிய பின்  நவீனத்துவம்
என்ற பாணிகளில்
படைத்து
சிந்தனைகளை
சிரச்சேதம் செய்யும்
ஆதிக்கத்துக்கு
ஆலவட்டம் வீசுபவர்களுக்கு
இன்குலாப் குடும்பத்தினரின்
விருது நிராகரிப்பு
கோபமூட்டியதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை.
புளியமரத்துக்கதையையும்
அதில் குடியிருக்கும்
சித்தாந்த காழ்ப்பின்
வேதாளங்களையும் மட்டுமே
இங்கு பதியம் இட்டு
கும்மியடித்துக்கொண்டிருக்கும்
விஷ்ணுபுரத்துக்காரர்களுக்கு
சிவப்பு விடியல் சமாசாரங்கள்
மகா அலர்ஜியை
உண்டு பண்ணுவதால் தான்
அந்த விருது நிராகரிப்பை
எகத்தாளத்துடன்
கெக்கலிப்பு செய்கிறார்.
முகமே இல்லாமல்
ஜெயமோகன் அவர்கள்
கண்ணுக்கே தெரியாத
ஒரு முகத்தை
முகமாக மாட்டிக்கொண்டு
கிழிந்து போன கனவுகளுக்கு
முகாம் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.
அவர் எழுத்துக்கள் தமிழ் வாசம்
தாங்கியிருப்பதால் தான்
தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள் அவரை!
அந்த உரிமையை
அவர் தமிழ் இனத்துக்கே
கத்தி தீட்டும்
எழுத்துக்களாய் ஆக்கி
தூவி விட்டதும் உண்டு.
இன்குலாப் என்ற
மனித நேய சமுதாய வார்ப்பை
அவர் பழமை வாதம் கொண்டு
முடக்க நினைக்கிறார்.
அவர் பேனாவின் கூர்மை
தமிழின் கதிர்வீச்சு தந்தது தான்.
பழைய நூற்றாண்டுகளின்
மரவட்டையாய்
அவர் சுருண்டு கிடக்கட்டும்
பரவாயில்லை.
அவற்றின்
மத ஆதிக்கத்தை
வர்ண வர்ண மத்தாப்பு கொளுத்தி
மாய்மாலம் பண்ணும்
"காவி"யத்தை அவர்
நிறுத்திக்கொள்வதே
அவர் எழுத்துக்களுக்கு
அவர் காட்டும் கற்பு நெறி.

============================================









கடவுள்கள்





கடவுள்கள்
=====================================ருத்ரா

கடவுள் கனமானவர்.
ஆம்
அது ஒரு சிலுவையின் கனம்.
கடவுள் கூர்மையானவர்
ஆம்
உடம்பில் ஆணிகள்
அறையப்பட்டபோது
தெரிந்தது.
கடவுள் ரத்தமானவர்.
ஆம்
அது அங்கே பெருகியபோது
தெரிந்தது.
அப்போது அவர் சொன்னார்.
"கடவுளே
தான் என்ன செய்கிறோம் என்று
இந்த கடவுள்களுக்கே
தெரியாது.
இவர்களை மன்னியும்."
இந்த வசனத்தில்
ஒன்றல்ல
கோடி கோடி கடவுள்கள்
இருக்கிறார்கள்.

=========================================================






வியாழன், 21 டிசம்பர், 2017

அண்ணே.. அண்ணே (6)



அண்ணே.. அண்ணே (6)
===========================================ருத்ரா


 அந்த கேஸ்ல எத்தனை முட்டைகள்னு
கண்டுபிடிச்சிட்டாங்களாண்ணே ?

ஏண்டா அத வச்சு என்னடா பண்ணப்போறே ?

பந்தயம் கட்டி அத்தனை  முட்டைப்பரோட்டாவையும்
திங்கப்போறேண்ணே.

அடேய்...அடேய்..அடேய்..
(மயக்கம் போட்டு விழுகிறார்)

============================================================






2ஜி

2ஜி
===================================ருத்ரா

திராவிடன் எனும்
சூரனின் சம்ஹாரம்
"சுப்பிரமணியன் சாமிகள்"மீது.

(ஒரு விளக்கவுரை)

(அதாகப்பட்டது...
சூரன் வடிவில் வந்த
சுப்ரமணியர்
சுப்ரமணியர் வடிவில்
வந்த  சூரனை
சம்ஹாரம் செய்கிறார்.)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________

ஊடகங்கள் இப்போ
ஊசி குத்திய‌
பலூன்.

_________________________________

அம்மாவின் ஆன்மா
அந்த அம்மாவையே
மன்னிக்காது.

___________________________________

பத்தாண்டுகள் வரை
உடுக்கை
அடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
"இஞ்சி தின்று கள்குடித்து
தேளும் கொட்டியது" போல் ஆனது.


‍‍‍‍‍______________________________________

சைஃபர்களை வைத்து சூதாடிய
சகுனிகளின் பாரதம் இது.
இந்த "சைஃபர்கிரைம்"
செய்தவர்களுக்கு
யார் தண்டனை கொடுப்பது?

_________________________________________

அண்ணா அவர்களே!
ஆரிய மாயை
ஆரிய சூழ்ச்சி
என்று எழுதிய‌
உங்கள் நுட்பம்
இன்று புரிந்தது.
இவர்கள் கொடி தூக்கியும் நீ..
இவர்கள் இடி தாக்கியும் நீ..
இன்றும்
இருக்கிறாய்
திராவிடத்தின்
திராவகக்குழம்பாய்!
அதனால்
எரிந்து
வீழ்ந்தது அநீதி.

_______________________________________________







புதன், 20 டிசம்பர், 2017

எத்தனை அம்புகள்?

எத்தனை அம்புகள்?
=========================================ருத்ரா

எத்தனை திசைகள்?
எத்தனை அம்புகள்?
அன்றாட அவலங்கள்
மனிதனை
மல்லாத்தி படுக்கவைத்து
குற்றுயிரும் குலைவுயிருமாய்
அம்புப்படுக்கையின் பீஷ்மர்
ஆக்கி விட்டது.
பொருளாதாரம்
அவன் குரல்வளையை நெறிக்கிறது.
"கன்ஸ்யூமர் சர்ப்லஸ்"
அதாவது
"நுகர்வோர்களின் உபரி பயன்பாடு"
எனும் பொய் மயக்கத்தை
அவர்களின் கோட்பாடுகள்
காட்டியதெல்லாம்
கானல்நீர் என்று காட்டிவிட்டது.
லாபம் எனும்
குத்தீட்டி கொண்டு
வேட்டையாடும் இந்த‌
விலையேற்றங்களின் விளையாட்டில்
மனித மதிப்புகள்
மயானத்தில்
புகையெழுப்பிக்கொண்டிருக்கிறது.
அப்புறம்
அரசியல் சூதுகள்.
இந்த சூதுகள் எப்போதும்
மனிதனை
கவ்விக்கொண்டே தான் இருக்கின்றன.
அதில்
பழகிப்போய்
மரத்துப்போய்
அவன் விறைத்துப்போய்
அதையே தர்மம் என்றும்
அதுவே வென்று கொண்டிருக்கிறது
என்றும்
காக்டெயில் குத்தாட்டங்களில்
மூழ்கி விடுகிறான்.
அதனல்
அரசியல் நீதியும் கோட்பாடுகளும்
அவிந்தே போய்விட்டன.
சாதி மதங்களும்
"பிணம் தின்னும் சாஸ்திரங்களும்"
மனிதனின்
சமூக விஞ்ஞான தாகத்தை
சமாதிக்குள் அமிழ்த்தி வருகின்றன.
அவன் மொழி இன மாண்புகள்
யாவும்
ஆயிரம் ஆண்டுகளாய்
ஒரு ஆதிக்கத்துள்
ஆவியாய் மறைந்து கொண்டிருப்பதன்
ஓர்மையும்
அவனுள் இல்லாமல்
அடக்கி ஒடுக்கப்பட்டு
காய்ந்த சருகாகிக்கிடக்கிறான்.
இதன் சிகரமாக‌
இவன் வாக்குகள்
பண அம்புகளால் துளைக்கப்பட்டு
ரத்தச்சேற்றில்
இதோ வீழ்ந்து கிடக்கிறான்.
இவன் தான்
தமிழன் எனும் மனிதன்.

============================================



செவ்வாய், 19 டிசம்பர், 2017

தேடல்




தேடல்
=================================ருத்ரா

"உன் சிரிப்பை
மறுபடியும் பார்க்க
நான் இங்கே தானே
அடையாளம் வைத்தேன்.
அந்த பூக்குவியலில்
எந்தப்பூ அது?"
ஒவ்வொரு பூக்காரியிடமும்
அவன்
தேடிக்கொண்டிருக்கிறான்.

=====================================

கில்லர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கில்லர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
======================================

கில்லர்ஜி!
இணையத்தில்
ஒரு
இணையற்ற‌
சொல்லர்ஜி!
உங்களுக்கு
என் அன்பான 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் ருத்ரா

நான் எங்கே?

நான் எங்கே?
==============================================ருத்ரா

அந்த புல்கற்றைகளினூடே
கால்விரல் நுழைத்து நடக்கின்றேன்.
ஆகாயத்தின் மேகப்பஞ்சுகளின்
பிசிறுகளை
மூக்கிலும் கண்ணிலும்
ஏந்திக்கொண்டு நடக்கின்றேன்.
நட்சத்திரங்களை பொடி செய்து
காலின் கீழ்
யார் இந்த கோலம் போட்டார்கள்?
ஊசிக்குருவிகளும் தேன்சிட்டுகளும்
என் அக்குள் இடைவெளிக்குள்
சிறகுத்துடிப்புகளை
கவிதையாக்கி விட்டு
தம் விடைதெரியாத கேள்விகளுக்குள்
அந்த கீழ்வானத்தில்
வீழ்கின்றன.
தட்டாம்பூச்சிகளின்
கிர்ரென்னும் சிறகுகள்
என் செவிமடல்களில்
போதை ஏற்றுகின்றன.
பளிங்கு நொறுங்கினாற்போன்ற‌
அந்த சிறகுப்படலங்களில்
படுத்துக்கொண்டு
என் எதிர்ப்படும்
எல்லா யுகங்களையும்
எட்டி உதைக்கின்றேன்.
வண்ணத்துப்பூச்சியின்
சிறகு மடிப்புகள்
என்னைக்கவ்விக்கொண்டு
பிக்காஸோவையும்
ரவிவர்மாவையும்
என் ரத்தக்குழம்புக்குள்
வானவில் விளாறுகளாய்
விசிறியடிக்கின்றன.
தூரத்தில்..
மிக மிக தூரத்தில்..
பனிவிழுதுகள் நெய்த ஆடையை
முண்டாசுகட்டிய‌
பன்மலை அடுக்கங்கள்
எதையோ
மௌனமாய் எதிரொலிக்கின்றன.
பச்சைஇலைக்குடைக்குள்
மரத்தின்
பருத்த தொடைகளில்
மண்ணின் நரம்புகள்
கண்ணாடி இழைகளாய்
நெளிகின்றன.
விடி வானமா? அந்தி வானமா?
நீலக்கடலின் நுரை ஜரிகைக்கம்பளத்தில்
கிண்ணம் கவிழ்ந்து
சிவப்பு ஒயின் சித்திரச்சிதறலாய்
தெறிக்கிறது
தெளிக்கிறது
வெறிக்கிறது
விழிக்கோளங்கள்
நீள நீள விழிக்கின்றன.
எல்லாமாய் எனக்கு தெரிவது
ரசம் பிழியும் அல்லது வழியும்
இனிய இரண்டு உதடுகள்.
நான் எங்கே?
கரைந்து போய்விட்டேன்.

===============================================

கார்ட்டூன்



கார்ட்டூன் 
=====================================ருத்ரா 


திங்கள், 18 டிசம்பர், 2017

நகைச்சுவை (5)

நகைச்சுவை (5)
=====================================ருத்ரா

செந்தில்

அண்ணே..குஜராத்லெ பிஜேபி தோத்திருக்கு..காங்கிரஸ் ஜெயிச்சிருக்கு..

கவுண்டமணி

என்னடா சொல்ற ஞானப்பழம்? என்னண்ணு புரியலையேடா.

செந்தில்

சரிண்ணே..இப்படிப்பாருங்க.கண்ணாடித்தம்ளருலே..பாதிக்கு  தண்ணீர் இருக்கு.உங்களுக்கு என்ன தெரியுது?

கவுண்டமணி

தம்ளர்லெ தண்ணி இருக்கு.

செந்தில்

அட..நல்லா உத்துப்பாருங்கண்ணே..தம்ளருலே பாதியில ஒண்ணுமேயில்ல..குஜராத்லே பிஜேபி தோத்துருக்கு...

கவுண்டமணி

அடேய்..சொட்டத்தைலையா..களிமண்ணுத்தலையா..
எம்முன்னாலே நிக்காதே..ஓடிப்போ

=======================================================================

மாதங்களில் நான் மார்கழி!

மாதங்களில் நான் மார்கழி!




மாதங்களில் நான் மார்கழி!
=========================================================ருத்ரா

மாதங்களில் நான் மார்கழி.
ஏனெனில்
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ண பளிங்கு உயிர்த்துளி  எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்பூள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
நின்றவண்ணமும்
கிடந்த வண்ணமுமாகவே
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
நான்கு மறைக்குள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.
இதை நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து நகர்ந்து
என்னைத் தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்கபாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.
பாடங்கள்
சந்தியாவந்தனத்துடன்
மனப்பாடம் செய்யப்படுவதற்கானவை அல்ல.
பாடங்கள்
படிக்கப்பட வேண்டியவை.
அறியப்பட வேண்டியவை..
"மறை'க்கப்படவேண்டியவை அல்ல.
அறியப்படுவதற்காக
அப்புத்தகங்கள் திறக்கப்படுவதே
உங்கள் சொர்க்க வாசல்.



=================================================================

அண்ணே..அண்ணே (5)

அண்ணே..அண்ணே (5)
===========================================ருத்ரா

"அண்ணே மறக்காம எனக்கு ஓட்டுப்போட்டுருங்கண்ணே. சுயேச்சையாநிக்கிறேண்ணே."

"சரிடா..எத்தனையாவது நம்பர்? என்ன சின்னம்?"

"அதெல்லாம் தெரியாதுண்ணே..நீங்களாப்பாத்து போட்டுருங்கண்ணே"

"அதெப்பிடிடா.."

"எப்பிடியாவது போட்டுருங்கண்ணே...நானே அவிய்ங்களுக்கு
போடப்போறேண்ணே..கை நீட்டி நோட்டு வாங்கிட்டேண்ணே..
போடலைன்னா..சாமி கண்ண குத்திரும்லா..நீங்களாவது எனக்கு
போட்டுருங்கண்ணே..."

"அடச்சீ..உனக்கெல்லாம் ஒரு நாடு..ஒங்களுக்கெல்லாம் ஒரு ஜனநாயகம்...கண்ல முழிக்காதே ..ஓடிப்போய்டு..."

===========================================================
(நகைச்சுவைக்காக)

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் (4)

ஆர்.கே.நகர் (4)
=====================================ருத்ரா


தினகரன்

பட்டுவாடாக்களின்
வியூகத்துக்குள் மாட்டியிருக்கிறார்.
ஆனால் அபிமன்யூ அல்ல.

மதுசூதனன்

ரெட்டை இலையின் பெரியகுடை
கையில்.
குடை கந்தல் ஆகிவிடுமோ?

ஸ்டாலின்

கருத்துக்கணிப்புகளின் கவசம் போதுமா?
மௌனமாய் ஒலிக்கும்
கலைஞரின் உரைகளே காவலுக்கு வரும்.

சீமான்

நோட்டுகள் ஓட்டுகளோடு
உரசும் பொறிகளையும்
பொறி வைத்துப்பிடிக்கும் பேச்சு.

கரு.நாகராசன்.

டெபாசிட்டுக்கு ஆபத்து.
ஆம்.ஜேட்லி அவர்களின்
நிதி மசோதாவால்.

வாக்காளர்கள்

அபூர்வ ஜனநாயகப்பறவைகள்.
கூண்டில் வைத்துக் காப்பாற்றி..அந்த‌
வேதனைகளையும் வேடிக்கை பாருங்கள்.

தேர்தல் ஆணையம்

ஓட்டுப்போடுபவர்களின் நாணயம்
எனும் ஊசிமுனையில் நிற்கும்
எட்டடுக்கு மாளிகை.

ஆளுநர்.

துடைப்பம் ஏந்தியிருப்பதால்
கோமாளியல்ல...ஆட்சி கவிழ்க்கும்
"ஷரத்து"க்களும்  இவரிடம் உண்டு.

=====================================================




சனி, 16 டிசம்பர், 2017

"அருவி"

"அருவி"
=====================================ருத்ரா

கொட்டோ கொட்டென்று
கொட்டுகிறாள்.
ஒரு நயாகராவைப்போன்ற‌
பெண்ணியத்தின்பிரமாண்டம்
ஆனால்
ஒரு கும்பக்கரை போல்
"க்ளுக்"சிரிப்பு போல்
பிச்சிப்பூக்களின் அருவியாய்
அதிதி பாலன்..
அற்புத முக பாவனைகள்.
கதாநாயகி என்றால்
எத்தனை அடாவடித்தனத்தை
காட்டவேண்டும்?
கண்ணி வெடியா இவள்?
கடைசி வரை
வெடிக்கவே இல்லையே.
ஆனால்
வெடித்துவிட்டால்
எவ்வளவு சிதிலங்கள் ஆகவேண்டுமோ
அதையும் விட ஆயிரம்
கோரமுகங்களை
பாலியல் புரிதல் நோக்கிய‌
மனிதனின் வக்கிரங்களை காட்டுவதில்
மௌனமான‌
ரங்கோலிகளாய் விரிக்கின்றாள்.
கூட வரும் அறைத்தோழி
திருநங்கை
ஒட்டுமொத்த பார்வையாளர்களின்
உருவகமா?
இந்த போலிகளுக்கு
ஆண் என்றும்
பெண் என்றும்
அடையாளங்கள் எதற்கு?
விற்கப்பட்ட பொருளின்
"லேபிள்" உரித்தபின் உள்ள‌
மனநிலையில்
வரும்
எரிச்சல்
அல்லது
ஏமாற்றம்
அல்லது
சமாளித்துக்கொண்டு
கொஞ்சம் சந்தோஷப்படுவது
போன்ற கதம்ப கலைடோஸ்கோபிக்
உணர்ச்சிகள் தானே வாழ்க்கை.
இந்தப்படம்
நன்றாகவே நம்மை
தோலுரிக்கிறது.
அந்த "பச்சை ஜட்டி" ஜோக்குகள்
நம்மை பச்சையாகவே
மூக்கை உடைக்கின்றன.
இயக்குநர் இப்படத்தின்
இதயத்துடிப்பு.
அவர் ஆளுகை அபாரம்.
டிவி ஊடகங்கள் என்பது
ஒரு சவ்வூடு பரவலாய்
சமுதாயத்தின்
உள் துடிப்புகளை
அதன் கங்கு கண்களை
இயல்பாய் காட்டாமல்
ஹிட் ரேட்டை உயர்த்தும்
பரபரப்பை மட்டும் 
சாணி பூசுவது போல்
அலங்கோலம் ஆக்கும்
வெற்று ஆரவாரத்தை நன்றாகவே
காட்டுகிறது படம்.
 இயக்குநர்
ஆயிரம் ஜெயகாந்தன் பேனாக்களை
ஒன்றாய் குவித்துக்கொண்டு
அக்கினிப்பிழம்பை
மெல்லிய தேன் வருடல் போல்
நமக்கு கொடுத்திருக்கிறார்.
தேன் தானே என்று
நக்கிப்பார்த்தால்
நாம் பஸ்பம் தான்.
நம் மனசாட்சி கொழுந்து விட்டு எரிகிறது.
அருவியோ
கொட்டிக்கொண்டே இருக்கிறாள்.
ஆனால்
அது நிச்சயம் கண்ணீர் அல்ல.

=============================================================





கரப்பான் பூச்சிகள்.

கரப்பான் பூச்சிகள்.
=================================================ருத்ரா இ பரமசிவன்.

எத்தனை கொடிகள்?
கொடிகளில்
எத்தனை வர்ணங்கள்?

தேதி அறிவித்தவுடனே
"ராமாயி வயதுக்கு வந்து விட்டாள்" பாணியில்
வாக்காளர் பட்டியலுக்கு
மஞ்சள் நீராட்டு.
தனி அதிகாரிகள்.
தனி ஜீப்கள்.
அதற்கப்புறம்
கொசு மருந்து அடித்தால்கூட‌
கொடுந்தண்டனை தான்.
கொடியில் கொத்துப்பூவோடு
இரண்டு இலையும் வரக்கூடாது.
கிழக்கே சூரியன்
உதிக்கும்போதெல்லாம்
அதிகாரி வந்து
கருப்புத்தாள் ஒட்டி
இருட்டடிப்பு செய்திடுவார்.
மக்கள் "ஹலோ" என்று
"கை" குலுக்க கை நீட்டினாலும்
கைகளுக்கு விலங்கு தான்.
பலசரக்குக்கடைகளில்
வசூல் ஆன "கரன்சி" நோட்டுகள் கூட‌
தன் "கற்பு"க்கு சாட்சி சொல்லியாக வேண்டும்.
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்
தேர்தல்
"பார பட்சமின்றி" நடக்கிறது
என்ற நாடகம்
நாடு முழுதும் அரங்கேற்றப்படும்.
மஞ்சள் குங்குமம் பூசி
தேங்காய் உடைத்து
கற்பூரம் கொளுத்தி
கணிப்பொறிகளும் தயார்.
பஞ்சப்படியுடனும்
பயணப்படியுடனும்
ஊழியர்கள்
வாக்காளர் பட்டியலுடன்
இங்க் பேட் ஸ்கேல் சகிதம்
அணிவகுத்து வந்திடுவார்.
கத்தி பூட்டிய துப்பாக்கிக்குழலுடன்
காவல் காரர்கள்
அந்த பெட்டியை காக்கும்
பூதமாக
பின்னால் பூட்ஸ்காலுடன்
தடதடப்பார்கள்.
நேரம் காலம் பார்த்து
பிரம்ம முகூர்த்தம் பார்த்து
வேட்பார்கள்
வாக்காளர்களிடம்
கிசுகிசுப்பார்கள்.
இலவசமாக‌
என்ன வேண்டும்?
காம‌தேனுவா?
கற்பக விருட்சமா?
இந்திர லோகமா?
வேண்டுமானால்
சட்டசபையை
உங்கள் வீட்டு
மாட்டுக்கொட்டிலுடன் கூட‌
கட்டிவைக்கத்தயார்
நீங்கள் விரும்பும் நாட்களுக்கு.
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
ஜனநாயகம் என்ற ஒரு
பாரிஜாதப் பூ இருக்கிறதாமே
எழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
அதை நாங்கள்
எடுத்து வருகிறோம்.
வாக்குப்பெட்டியை
நாங்கள் கவனித்துக்கொள்ளுகிறோம்.
பாரிஜாதப்பூ நிச்சயம் கிடைக்கும்
அப்புறம் அதை
நீங்கள் காதில் வைத்துக்கொள்ளுங்கள்.
..................
.................

மரா மரங்களூக்கிடையே
அம்புகளும் பாய‌
கூர்மை தீட்டிக்கொள்ளுகின்றன.

குறித்த நாளில்
தேவர்கள் பூமாரிப்பொழிய‌
"புதல் மறைத்து வேடுவர்களும்
புள் சிமிழ்த்தனர்."

மின்சாரத்தொண்டை மட்டுமே உள்ள‌
இதயம் இல்லாத‌
நீண்ட மைக்குகள் சாட்சியாக‌
தட்டி தட்டி முதுகு தேய்ந்த
மேஜைகளின் சாட்சியாக‌
ஒரு நவாப் நாற்காலி ஏலத்துக்கு
சும்மா ஒண்ணு ரெண்டு மூணு சொல்லும்
மற்ற‌ நாற்காலிகள் சாட்சியாக‌

அதோ சுவரில்
கம்பீரமாய் மீசையைக்க்காட்டும்
அசோகசக்கரத்து சிங்கங்கள் சாட்சியாக‌

ஜனநாயகம் ஜனங்களுக்கே
விற்கப்பட்டது
சந்தைக்கு வந்தது.

எங்கே நடந்தாலும்
எப்படி நடந்தாலும்
எப்போது நடந்தாலும்
நம் தேர்தல்
எனும் தேர் நகரும்போது
அடியில்
கரப்பான் பூச்சியாய் நசுங்குவது
"கண்ணியம் மிக்க
அந்த ஜன நாயமே."

==========================================





வெள்ளி, 15 டிசம்பர், 2017





"புதல் மறைத்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.."
=====================================================ருத்ரா இ பரமசிவன்.

எத்தனை கொடிகள்?
கொடிகளில்
எத்தனை வர்ணங்கள்?

தேதி அறிவித்தவுடனே
"ராமாயி வயதுக்கு வந்து விட்டாள்" பாணியில்
வாக்காளர் பட்டியலுக்கு
மஞ்சள் நீராட்டு.
தனி அதிகாரிகள்.
தனி ஜீப்கள்.
அதற்கப்புறம்
கொசு மருந்து அடித்தால்கூட‌
கொடுந்தண்டனை தான்.
கொடியில் கொத்துப்பூவோடு
இரண்டு இலையும் வரக்கூடாது.
கிழக்கே சூரியன்
உதிக்கும்போதெல்லாம்
அதிகாரி வந்து
கருப்புத்தாள் ஒட்டி
இருட்டடிப்பு செய்திடுவார்.
மக்கள் "ஹலோ" என்று
"கை" குலுக்க கை நீட்டினாலும்
கைகளுக்கு விலங்கு தான்.
பலசரக்குக்கடைகளில்
வசூல் ஆன "கரன்சி" நோட்டுகள் கூட‌
தன் "கற்பு"க்கு சாட்சி சொல்லியாக வேண்டும்.
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்
தேர்தல்
"பார பட்சமின்றி" நடக்கிறது
என்ற நாடகம்
நாடு முழுதும் அரங்கேற்றப்படும்.
மஞ்சள் குங்குமம் பூசி
தேங்காய் உடைத்து
கற்பூரம் கொளுத்தி
கணிப்பொறிகளும் தயார்.
பஞ்சப்படியுடனும்
பயணப்படியுடனும்
ஊழியர்கள்
வாக்காளர் பட்டியலுடன்
இங்க் பேட் ஸ்கேல் சகிதம்
அணிவகுத்து வந்திடுவார்.
கத்தி பூட்டிய துப்பாக்கிக்குழலுடன்
காவல் காரர்கள்
அந்த பெட்டியை காக்கும்
பூதமாக
பின்னால் பூட்ஸ்காலுடன்
தடதடப்பார்கள்.
நேரம் காலம் பார்த்து
பிரம்ம முகூர்த்தம் பார்த்து
வேட்பார்கள்
வாக்காளர்களிடம்
கிசுகிசுப்பார்கள்.
இலவசமாக‌
என்ன வேண்டும்?
காம‌தேனுவா?
கற்பக விருட்சமா?
இந்திர லோகமா?
வேண்டுமானால்
சட்டசபையை
உங்கள் வீட்டு
மாட்டுக்கொட்டிலுடன் கூட‌
கட்டிவைக்கத்தயார்
நீங்கள் விரும்பும் நாட்களுக்கு.
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
ஜனநாயகம் என்ற ஒரு
பாரிஜாதப் பூ இருக்கிறதாமே
எழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
அதை நாங்கள்
எடுத்து வருகிறோம்.
வாக்குப்பெட்டியை
நாங்கள் கவனித்துக்கொள்ளுகிறோம்.
பாரிஜாதப்பூ நிச்சயம் கிடைக்கும்
அப்புறம் அதை
நீங்கள் காதில் வைத்துக்கொள்ளுங்கள்.
..................
.................

மரா மரங்களூக்கிடையே
அம்புகளும் பாய‌
கூர்மை தீட்டிக்கொள்ளுகின்றன.

குறித்த நாளில்
தேவர்கள் பூமாரிப்பொழிய‌
"புதல் மறைத்து வேடுவர்களும்
புள் சிமிழ்த்தனர்."

மின்சாரத்தொண்டை மட்டுமே உள்ள‌
இதயம் இல்லாத‌
நீண்ட மைக்குகள் சாட்சியாக‌
தட்டி தட்டி முதுகு தேய்ந்த
மேஜைகளின் சாட்சியாக‌
ஒரு நவாப் நாற்காலி ஏலத்துக்கு
சும்மா ஒண்ணு ரெண்டு மூணு சொல்லும்
மற்ற‌ நாற்காலிகள் சாட்சியாக‌

அதோ சுவரில்
கம்பீரமாய் மீசையைக்க்காட்டும்
அசோகசக்கரத்து சிங்கங்கள் சாட்சியாக‌

ஜனநாயகம் ஜனங்களுக்கே
விற்கப்பட்டது
சந்தைக்கு வந்தது.

================================================ருத்ரா இ.பரமசிவன்
16 நவம்பர் 2013ல் எழுதப்பட்ட கவிதை.
தேதி முக்கியத்துவம் இழந்து போனது.
 சம்பவங்கள் மட்டுமே நமக்கு இன்னும்
"சம்பவாமி யுகே யுகே"










வியாழன், 14 டிசம்பர், 2017

எங்கே அந்த அட்டைக்கத்திகள்?

எங்கே அந்த அட்டைக்கத்திகள்?
===============================================ருத்ரா

ஆர்.கே.நகர்
இந்திய ஜனநாயகச்சீற்றங்களில்
தனித்த ஒரு தீவு ஆகிப்போனது.
ஜனநாயகத்தின் குரல்வளை
கரன்சிகளால்
நெறிக்கப்பட்டு நாக்குத்தள்ளிப்போய்
நிற்கிறது.

இந்த ஆட்சி மாற்றப்படவேண்டும்
என்பவர்கள்
பேச்சடங்கி மூச்சடங்கிப் போவதேன்?
கொசஸ்தலை யாறு கழிவுகளால்
கழுத்து நெறிக்கப்படுவதாய்
கண்ணீர் விட்டவர்கள்
இந்த ஓட்டுப்புழுக்கள்
நோட்டுகளால் நசுக்கப்படுவதை
காணாமல் கண்பொத்தி
விளையாடுகின்றனரா?

எல்லா தொகுதிகளுக்கும்
தேர்தல் அறிவியுங்கள் என்று
சூளுரைத்தவர்கள்
இந்த ஒற்றைத்தொகுதியில்
ஓட்டுப்போடும் நாணயம்
சீழ்பிடித்த ஒரு நோயால்
பீடிக்கப்பட்டிருப்பதை
தடுப்பதற்காகவேனும்
தேர்தலில் நின்று
தங்கள் கத்திகள் எல்லாம்
அட்டைக்கத்திகள் இல்லை என்று
நிரூபிக்க வேண்டாமா?
முதல்வராய்த்தான் வந்து
முகம் காட்டவேண்டுமா?

ஒரு நடிகர் வேட்புமனு கொடுத்தது
கூட‌
"அது ஏதோ ஒரு சார்லி சாப்ளின் படம்"
என்று வேடிக்கைதானே பார்க்கிறார்கள்!
இது அக்கினி ஆறு
காலை விட்டால்
ஆளே இல்லாமல் போய்விடுவோம்
என்ற அச்சமா இது?

ஆனந்தவிகடனில் புயல் வீசிக்கொண்டிருந்தது
என்று பார்த்தால்
அது இந்த வாரம் கரையைக்கடந்து
எங்கோ ஒரு சினிமா தேசத்துக்கு
போய்விட்டது.

இன்னொருவரோ
சிஸ்டம் கெட்டு விட்டது என்றார்.
அப்படியென்றால்
மரணப்படுக்கையில் இருக்கும்
ஜனநாயகத்தை சாகவிட்டு விட்டு
கண்ணீர் அஞ்சலிக்கு மட்டும்
கரெக்டாக வந்து
"லேட்டாய் வந்தாலும் லேட்டெஸ்டாக வருவேன்"
என்று
அந்த கீறல் விழுந்த ரிக்கார்டு ஒலிக்கு
வந்து வாயசைப்பாரா?

மற்றொருவரோ 
அந்த சில்லறை இரைச்சல்
"மெர்சல்"ஐ வைத்துக்கொண்டு
ஆளப்போறான் தமிழன் என்று
திரைக்குப்பின்னே இருந்து
கூச்சல் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.

ஏன் இந்த "மூவேந்தர்களும்"
கூட்டணி சேர்ந்தாவது
ஓட்டு நோட்டுக்கு
விலை போகும் இந்த
கொடுமையை
தடுத்த நிறுத்த முன் வரக்கூடாதா?

தேர்தல் நிறுத்தப்படவேண்டும் என்று
கசாப்புக்கத்தியை
தூக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு
சிக்னல் கொடுக்கும் அதிகாரத்தில்
உள்ளவர்கள் கூட‌
தெரு நாடகம் நடத்தி
பாசாங்கு காட்டுகிறார்கள்.

திரைப்படத்து
நிழல்கள் வாயசைப்பின் வீரத்தில்
ஒரு ஈ கொசு கூட‌
பயப்படப்போவதில்லை!
சினிமா வாய்ஸில் சீற்றம் கொள்ளும்
தீரர்களே
வெறும் "எம்ஜிஎம்" சிங்கமாக உறுமி
ஃபிலிம் காட்டுவதையாவது
கொஞ்சம் நிறுத்திக்க்கொள்ளுங்கள்.

===============================================================












புதன், 13 டிசம்பர், 2017

ஆசை




ஆசை
=======================================ருத்ரா

இது எங்கு
வேர் பிடிக்கிறது?
எப்படி
கிளை பரப்புகிறது.?
ஆலம்பழத்தை
தின்னும் கிளிக்குள்
கடுகையும் விட சிறிதான
அந்த விதை தான்
இங்கு
எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்டு.
எல்லாவற்றின் மெமரியும்
அதனுள் தான்.
மனிதனிலிருந்து
பீறிடும் இந்த வர்ண நிழல்களில்
உண்மையின் ஒளி
மறைவு பட்டிருக்கிறது.
மனிதன்
மனிதனுக்குள்ளேயே
மூழ்க வேண்டும்.
"மனிதத்தை" மட்டும்
வடிகட்டி பார்க்க வேண்டும்.
எல்லா மனிதர்களுக்குள்மட்டும் அல்ல
எல்லா உயிர்த்துளிகளுக்குள்ளும்
தோய்ந்து திளைக்க வேண்டும்.
வெறுங்கற்பனை தான்.
இந்த மூளி அறிவில் தான்
எல்லா மதங்களும் போதனைகளும்
கிடை மட்டமாய்
படுத்து விறைத்துப்போகின்றன.
மனிதா
உன் "செல்ஃபி"க்குள்
உன்னைத் தேடுவதன் மூலம்
இந்த டிஜிட்டல் பூதம்
உன்னை விழுங்க அனுமதித்து விடாதே.
உன் கல்லறைகளை
இந்த "பட்டன்களுக்குள்"
பதியம் இட்டு விடாதே.
இது ஒரு நுண்ணறிவில் பின்னப்பட்ட வலை.
அறிவுகளை நீ கடக்கவேண்டும்.
சில்லறை ஆசைகளில் நீ
சிதிலம் ஆகாமல்
அந்தப்பேரறிவின் ஒரு
பெருஞ்சிற்பத்தை
எப்போதுமே செதுக்கிக்கொண்டிரு !

=============================================

அண்ணே ,,அண்ணே (4)

அண்ணே ,,அண்ணே (4)
===============================================ருத்ரா

"அண்ணே  இந்த தேர்தலை உடனே நிறுத்தியாகணும்னு
ஆணையருக்கு பெட்டிஷன் போடணும்ணே."

"ஏண்டா ? உன் வேட்பு மனுவைத்தான் நிராகரிச்சிட்டாங்களேடா ."

"அது கூட தெரியாம இந்த வேட்பாளர்களோட  தொல்லை
தாங்கலேண்ணே "

"என்னடா  சொல்றே ? "

"கூட்டம் கூட்டமா வாசல்ல வந்து "டோக்கன்" கேக்கறாங்கண்ணே .
பெண்களெல்லாம் ஆரத்தித்தட்டுகளோடு வெளியே
காத்திருக்காங்கண்ணே !"

"?????!!!!!"

===============================================================
(கற்பனையாய் ஒரு நகைச்சுவை)

அண்ணே அண்ணே (3)

அண்ணே அண்ணே (3)
===============================================ருத்ரா

"அண்ணே..உங்க வாக்கை எங்களுக்கே போட்டுடுங்கண்ணே"

"அண்ணே...நானும் அதையே தான் கேக்குறேன்..ஆமாண்ணே
நீங்க யாரு? வாக்காளர் இல்லையா?

"சரி தான் போங்க! இருட்டுனதுக்கு அப்புறம் பிரச்சாரம் பண்ணினா  இப்படித்தான் ஆகும்."

(தூரத்தில் "ஆணையக்காரர்களின்" ஜீப் ஒலி கேட்டு மண்டபமே
காலி. இருட்டு மட்டுமே அங்கு இருந்தது)

=============================================================

செவ்வாய், 12 டிசம்பர், 2017

ஏன் சார்?

ஏன் சார்?
=========================================ருத்ரா

"மேலும் மூணு நாலு கம்பெனிகள் இங்கே வந்திருக்காம்!"

"ஏன் சார்? முதலீடுகளை அதிகரிக்கவா?"

"அட! நீங்க ஒண்ணு!தேர்தலுக்காக‌ சட்ட ஒழுங்கு காக்க வந்த‌
துணை ராணுவக் கம்பெனிகளைச் சொல்றேன்.

==================================================
(நகைச்சுவைக்காக)

12.12.17

12.12.17
=======================================ருத்ரா

அன்புக்கும் அன்பான‌
எங்கள் ரஜனி அவர்களே!
நூறாண்டுக்காலம்
நீங்கள் வாழ்க!

நீங்கள் மட்டும் அல்ல
நாங்களும் தான்
ஒரு தடவை சொன்னால்
அது நூறு தடவைகள்
சொன்ன மாதிரி!
நூறாண்டு காலம்
நீங்கள் வாழக!

வெறும் மும்பை கரிகாலனா
நீங்கள்?
தமிழ் மண்ணுக்கு
வெண்கொற்றக்குடை ஏந்தி
செங்கோல் ஏந்தி ஆளவரும்
"கரிகாற்பெருவளத்தானாக" அல்லவா
நாங்கள்
எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
காவிரிக்கு கரையெடுத்து
நீர் வளம் காத்த மாமன்னவன்
அல்லவா அவன்?
காவிரியை
பல அணைகள் மூலம்
சுருட்டிக்கொள்ளும்
சூழ்ச்சிகள் நடைபெறுகிறதே!

ஆனால்
"போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம்"
என்ற
உங்கள் "பஞ்ச்"டைலாக்
வெறும் "பஞ்ச்" ஆகி குத்தி
அந்த போர்முரசே
கிழிந்து போய்விடுமோ
என்ற அச்சமே
எங்கள் மீது கவிகிறது.

கபாலிடா நெருப்புடா
என்று
நீங்கள் தீப்பொறிகளை
பூட்ஸ்ல் பூக்கச்செய்து நடந்து
சிலிர்த்தபோது
சமூக நீதியின்நாடி நரம்புகளில் ஒரு
சரித்திரத்தின் பக்கங்கள்
சர சரக்கின்றனவே.
ஆனால் "நீட்" தேர்வு
இங்கே தீப்பற்றி எரிந்தபோது
உங்கள் இடிக்குரல்
கேட்கவில்லையே.
வழக்கமாய்
சிகரெட்டை மேலே போட்டு
கப்பென்று
வாயால் பிடித்து புகை விடுவீர்களே
அந்த புகையோடு
நாங்கள் மௌனமாக ஒன்றிவிட்டோம்.

பிறந்த நாளைக்  கொண்டாட
உங்கள் வீடு நோக்கி
வந்த ரசிகர் வெள்ளம்
நீங்கள் வீட்டில் இல்லை
என்று
திரும்பியதாய்
ஊடகங்கள்  காட்டியபோது
ஊமைத்தனமான கண்ணீர்த்துளிகள்
அங்கு
முட்டிக்கொண்டு நின்றன.

உங்கள் 67 வயது நிறைவை
இனிப்பாக்கி...
6700 கேக்குகளால்
சாலையெல்லாம் உங்களை  ஓவியமாக்கி
அகமகிழ்ந்தோமே !
தலைவா!
அது நிஜத்திலும் நிஜம்.
உங்கள்    பிறந்த நாள்
எங்களுக்கு
ஆயிரமாயிரம் தீபாவளிகள்!

டிவி ஊடகங்களில்
உங்கள்  அரசியல் புயல்
கருமையம் கொள்வது பற்றி
ஒரு இனிய பிரசவவலியின்
இன்பப்பிரளயம் பொங்கும்
என்று
காத்திருந்தால்
இதுவரை நீங்கள்
நடந்த சினிமா காற்சுவடுகளின்
ஒட்டுப்படங்களை  ஓட்டி
அவை
தன் "ஹிட் ரேட்டை " மட்டும்
தக்கவைத்துக்கொண்டனவே.

உங்கள் ஆத்மீக வாதம்
எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
இமயமலை பாபாவையும்
ராகவேந்திரரையும் நீங்கள்
எங்களுக்கு காட்டும்போது
அவர்கள்
மத நல்லிணக்கமும் மனித நீதியும்
காக்கும் "உருவகங்களாகத்தான்"
இருந்தார்கள்.
அப்போது உங்கள் கையில்
ஆத்மீகம் கூட சமூகநீதியைக்
காக்கும் "சிவாஜியின்" வாள் ஆகத்தான்
தெரிந்தது.
அந்த வாளுக்கு "மஞ்சள் குங்கும"
வெறி பூசி கொச்சைப் படுத்தி
விடமாட்டீர்கள் என்று
மெய்யாலுமே
ஆம்
மெய்யாலுமேதான்
நம்புகிறோம் !
வாழ்க எங்கள் ரஜனி!
நீடூழி நீடூழி
வாழ்க எங்கள் ரஜனி!

====================================================










கடவுளைத்தேடு!



கடவுளைத்தேடு!
===================================ருத்ரா

ஒரு ஞானியிடம்
கடவுள் இருக்கிறாரா
என்று ஒருவன்கேட்டான்.
அவர்
ஒரு வைக்கோற்படப்பை
காட்டி
இதில் தான் இருக்கிறார்
தேடு என்கிறார்.
அவன் ஒவ்வொரு வைக்கோலாக
தேடுகிறான்.
எல்லாவற்றையும் தேடி முடித்துவிட்டான்.
பார்த்துவிட்டாயா
என்று கேட்கிறார்
இல்லை
என்கிறான்.
எதைத்தேடினாய்?
எதைத்தேடினேன் என்பதே
மறந்து விட்டதே
என்கிறான்.
இப்போது உனக்கு
என்ன தெரிய வேண்டும்?
எனக்கு எதுவுமே தெரிய வேண்டியதில்லை
என்பதே
நான் இப்போது தெரிந்து கொண்டது.
ஞானி
இப்போது அவன் காலில் விழுந்தார்,
"குருவே
எனக்கு அந்த ஞானத்தை
போதியுங்கள்"
என்றார்.

=========================================

திங்கள், 11 டிசம்பர், 2017

நகைச்சுவை (2)

நகைச்சுவை (2)
==========================================ருத்ரா


அதிகாரி

தம்பி உனக்கு பதினெட்டு வயது நிறையலையே .
அப்புறம் எப்படி உனக்கு வாக்குரிமை வரும்?

பையன்

அதனால என்ன? ரூபாய் நோட்டுக்கட்டை  எங்கிட்டே
குடுத்துப்பாருங்க. மட மடன்னு  எண்ணி வைக்கிறேனா
இல்லையான்னு பாருங்க.

அதிகாரி

???!!!!!

=================================================

நிவின்பாலி

நிவின்பாலி
========================================ருத்ரா

மலையாள சிலிர்ப்போடு
தமிழ்ப்படத்துள்
ஒரு புதிய நல் வரவு.
"ரிச்சி" படத்தில்
தென்பாண்டி
அறுவாள்வீச்சு வாசனை
அதிகமாக அடிக்கவில்லையென்றாலும்
அந்த யதார்த்தமான‌
கோபமும் பழிவாங்கலும்
ஒரு புதிய பரிமாணத்தை
பதியமிட்டுள்ளது.
வில்லன் என்று வெறுமே
தள்ளிவிடமுடியாத அளவுக்கு
உள்ளுக்குள்ளிருந்து
நிமிண்டிப்பார்க்கும்
ஒரு கதாநாயகத்தனமும்
தெரிகிறது.
மலையாளப்படங்களில்
கதை வேறு
நடிப்பு வேறு
என்று துருத்திக்கொண்டிருக்காது.
தமிழ்ப்படங்களில்
வேறு வேறாய் அலங்காரம்
செய்யப்பட்டிருக்கும்
ஆனால் மலையாள மொழி
மக்களோடு சவ்வூடு பரவல் மூலம் நிரவி
மண் வாசனையை
அங்குள்ள மனங்களின்
வாசனையாக்கி விடும்.
அன்றாட‌
நடவடிக்கைகளை
யாரோ ஒரு புகழ்பெற்ற‌
எழுத்தாளர்
காகிதத்தில் எழுதி உலவ விட்டது போல்
நிகழ்வுகள் முறுக்கு ஏறி நிற்கும்.
அதனால்
நிவின்பாலி
நிஜமாய் ரவுடித்தனம் பண்ணும்
அடாவடியை அற்புதமாய் காட்டுகிறார்.
கூச்சல் இல்லை.இரைச்சல் இல்லை.
இன்னொரு பாபி சின்ஹா
என்று சொல்லிவிடமுடியாத வகையில்
ஒரு புது வடிவம் காட்டுகிறார்.
சிறுவயதில்
அபாண்ட பழி சுமத்தப்பட்டு...எனும்
சிறு பொறி
இவ்வளவு கொந்தளிப்புகள் ததும்பும்
பாத்திரமாக உலவுகிறது
என்பதை
தனித்த முத்திரையோடு
காட்டுகிறார் நிவின்பாலி.
வழக்கமாய்
வில்லனாய் கர்ஜிக்கும்
பிரகாஷ்ராஜ்
இங்கு தன் பளிங்கு துளிர்ப்புகளான‌
கண்ணீரில்
தன் மகன் வாழ்க்கை சிதைவது அறிந்து
சகிக்காமல் சகிப்பதை
நன்றாக காட்டுகிறார்.
ஃபாதரின் வெள்ளையுடைக்குள்
துடிக்கும் ரத்தம்
ஊமைச்சிவப்பாய்
சோகம் இழையோடச்செய்கிறது.
இன்னும் எத்தனையோ காட்சிகள்
மற்றும்
நடிக நடிகைகளின்
அளவாக செதுக்கப்பட்ட நடிப்பின்
அற்புத தெறிப்புகள்
நிச்சயம் பாராட்டப்படவேண்டியது தான்.
இசையும் செவிகளை வருடுகிறது.
கதையின் தளும்பல்களோடு
நெஞ்சை நெருடுகிறது.
நிவின்பாலியின் நடிப்பு தெரியவில்லை.
அந்த வைக்கம் பஷீர் அவர்களின்
"எழுத்தாளும்"
ஒரு விவரிப்பு நுட்பமாய் இழைகிறது.
இயக்குனர்
பாத்திர உருவங்களை "உருவகங்களாக"
காட்டியிருக்கிறார்.
உதாரணம் அந்த "டெமாகிரசி "சிறுவன்.
பாலசந்தர் "அச்சமில்லை அச்சமில்லையில்"
இப்படித்தான் "சுதந்திரத்தின்"
உருவகமாய்
ஒரு வளர்ச்சி  அடையாத பையன் போன்றவரை
காட்டியிருப்பார்.
"ரிச்சி"பட
இயக்குனரின் காமிராக்கண்ணில்
நிறையவே "உஷ்ணம்" இருக்கிறது.
நிவின்பாலி சினிமாக்கதையை
இலக்கியமாய்
தன் பாத்திரத்தில் பூசிக்கொண்டு
உயிர்ப்பு காட்டுகிறார்.

========================================================