வெள்ளி, 31 டிசம்பர், 2021

Happy New Year

 


Happy birthday to all of you!

with this NEW BORN moment 

of NEW YEAR!

Brimmed all with  new,

sans 

caste colour creed

and gods!

sans all those

fenses and flags

bounde at barbed-wires

with more blood stained

than those Rosy 

Dawns...

your own universes are

at your own

big bangs  and big crunches...

your own 

brane-cosmic designs

with your powerful 

Quantum Computing

with all your

"Fourier Transfoms"

and

all those "Slap-Sticks"

for a wonderful SHOW!

 Now let your 

that nearest candle

the SUN smile

at you with all its

ORANGE flares!

Happy New Year 

to

all and all and all and...

all of YOU!

_____________________________RUTHRAA


தமிழா!தமிழா!

 


தமிழா!தமிழா!

____________________________________________ருத்ரா

தமிழா!தமிழா!

இந்தக் குரல் உனக்கு கேட்கின்றதா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்னே

இமயங்களுக்கும் இமயமாக‌

உயர்ந்து நின்றவன் நீ.

இன்று வெறும் கூழாங்கற்களாய்

உருண்டு கொண்டிருக்கிறாய்.

உனக்கு எடுபிடியாய்

மந்திரம் சொல்ல வந்த இரைச்சல் மொழி

உன்னையே இரையாக்கிக்கொண்ட‌

அவலம் இன்னுமா

உனக்கு புரியவில்லை?

அறுபது வருஷம் என்றும்

தமிழ் வருஷப்பிறப்பு என்றும்

அறுபது உளறல் பெயர்களை

நாரதர் தந்த அழுக்கு மூட்டைகளாய்

முதுகில் இன்னமும் 

சுமந்து கொண்டிருக்கிறாயே.

பிலவ போய் சுபகிருது வருகிறது என்று

உன் மீது "ஜலம்"தெளித்து

ஸ்லோகம் சொல்லி 

புனிதப்படுத்த வருவார்களே

அந்த எச்சில் மொழி தெறித்தா

உன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் போகிறாய்?

"வள்ளுவன் தன்னை  உலகினுக்கே  தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" என்ற

எட்டயபுரத்து எரிமலைக்கவிஞனின்

வீறு கொண்ட நெஞ்சத்தை

எங்கே தொலைத்தாய் சொல்?

சொல் தமிழா சொல்!

அறிவொளி காட்டி

அடர் இருள் நீக்கிய‌

நம் வள்ளுவப்பெருந்தகை

நற்பெயர் ஏந்திய‌

தமிழ்ப் புத்தாண்டே வருக வருக என‌

சொல் தமிழா சொல்!


_______________________________________________________



ஞாயிறு, 26 டிசம்பர், 2021

தடாகம்

 தடாகம்

____________________________________

ருத்ரா




நான் கடவுள்.

நீ மனிதன்.

உன்னைப்படைத்தவன் நான்.

உன் அறிவு

வெறும் தும்மல் எனக்கு.

கூகுள் என்பாய்.

ஞானங்களையெல்லாம்

சுருட்டிவைத்திருக்கிறேன் என்பாய்.

அது

என் கைரேகைகளின்

கோடி...கோடி..கோடி...

(எத்தனை கோடிகள்

உன் கம்ப்யூட்டர்களின் மூலம்

போட்டுக்கொள்ள முடியுமோ 

போட்டுக்கொள்)

கோடிகளில் ஒரு பங்கு கூட இல்லை.

உன் விஞ்ஞானம்

என் மூக்குப்பொடி டப்பியில்

ஒரு சிட்டிகை கூட இல்லை

அதிலும் நேனோ நேனோ ..நேனோ

துளி தான்.

ஒரு பிரபஞ்சத்தை நீ யோசித்தாலேயே

உனக்கு தலை சுற்றும்

அது போல் "மீண்டும்"

கோடி கோடி ..என்று அடுக்கிக்கொண்டே

போகும் அளவுக்குள்ள‌

பிரபஞ்சங்களைப் பற்றி 

நீ என்ன சொல்கிறாய்?

இப்போதாவது

என் விஸ்வரூபத்தை

உன்னால் பார்க்க முடியுமா

என்று யோசித்தாயா?

. . . . . . . . . . .

. . . . . . . . . .  .

அசையாத நீர்ப்பிம்பத்தை உடைய‌

அந்த தடாகத்தில்

என்னைப்பார்த்து தான்

இவ்வளவும் பிதற்றினேன்....

நான் சவைத்த சூயிங்க் கம்

தடாகத்தில் விழுந்து

வட்டமாய் பெரிய பெரிய வட்டமாய்

பிம்பங்கள் விரிந்தன?

அவ்வளவு பிரம்மாண்ட விடையை

இத்தனை சிறிய கேள்வியா

தெறிக்க விட்டது?

அந்த விஸ்வரூபம்

மனிதனா?

கடவுளா?

கேள்வியை எறிந்ததும் மனிதனே.

விடையை தெறிக்க விட்டதும் மனிதனே.

இதில்

கடவுள் எங்கிருந்து வந்தார்?

மனிதனின் பிம்பம்

கடவுளிடம். 

கடவுளின் பிம்பம் 

மனிதனிடம்.

தடாகமும் அலைகளும்

தம்முள் சொல்லிக்கொண்டன.


____________________________________________

26.12.2015 மீள்பதிவு

வெள்ளி, 24 டிசம்பர், 2021

இன்று உதித்தது.

 இன்று உதித்தது

___________________________________________"விடிவானவ‌ன்"



இன்று உதித்தது

ஒரு நற்செய்தி

இரண்டாயிரத்து 

இருபத்தியொன்று சொச்சம்

ஆண்டுகளுக்கு முன்பு

இதே பனித்துளிப்பூக்களுக்கிடையே

மாட்டுக்கொட்டிலில்

மகத்தான நம்பிக்கையை

மனிதனுக்கு ஊட்டுவதற்கு.

மனதுக்குள்

மனிதன் கட்டிவைத்திருந்த‌

"பரமண்டலத்தை"

அன்பின் 

அமைதியின்

இதயவடிவில் 

கையோடு கொண்டு வந்தது போல்

பொன்சுடர் புன்னகை ஏந்தி

வந்தது அந்த பிஞ்சுமுகம்.

துப்பாக்கித்தோட்டாக்களெல்லாம்

தோற்றுப் போகும்படி

அந்த இடங்களில் இனி

பூக்களே வந்து

நிரம்பிக்கொள்ளட்டும்.

மானிட நேயத்து மாணிக்க வருடல்களே

உலகமெலாம் கதிர் வீசட்டும்.

அடக்குவதற்கு வந்த அந்த‌

சிலுவைகள் இனி

சிதிலங்களாய் சிதறுண்டு போகட்டும்.

புதிய சுதந்திரத்தின்

"பிறப்பு" ஒலித்து இசைக்கட்டும்.

இனி

பாவங்களும் இல்லை.

அதன் சம்பளமாக‌

மரணங்களும்  இல்லை.

மனிதன் மரணத்தில் முற்றுப்புள்ளியாக‌

முடிந்து விடுவதற்காக‌

பிறப்பு ஏற்பதில்லை.

மனிதம் அன்பின் ஆற்றோட்டமாய்

என்றும் 

ஓடிக்கொண்டிருக்கவே

இன்றும்

பிறப்பு ஏந்தி நம்மிடையே

முகம் காட்டிச்சொல்கிறது

நற்செய்தியை..

அன்பே எல்லாம்.

அன்பினிலே தான்

எல்லாம் என்று. 

நமக்கு

அதுவே

எல்லாம் இன்பமயம்.

"மெர்ரி கிருஸ்த்மஸ்"


______________________________________

25.12.2021..         00‍.35 A M

சொன்னார்கள்.

 சொன்னார்கள்.

____________________________ருத்ரா



சொன்னார்கள்

அவர் அவதரித்த பின்

அதர்மங்கள் அழியும் என்று.

சொன்னார்கள்

அவர் தன்

அன்பினால் இந்த‌

ரத்தக்கறைகளைக்

கழுவினார் என்று.

சொன்னார்கள்

அவரின்

ஒரே வெளிச்சத்தால்

இருட்டுகள் யாவும் 

கரையும் என்று.

சொன்னார்கள்

அவர் போதனைகளால்

மக்களின்

மயக்கங்களெல்லாம்

மாயும் என்று.

சொன்னார்கள்

ஆகாயத்தைப்பார்த்து

அவர்கள் சொன்னதே

வேதம் என்று.

விசுவாசம் காட்டுங்கள் 

விசுவரூபம் காட்டுகிறேன் என்று.

என்னவெல்லாமோ

சொன்னார்கள்.

இன்னமும் இங்கு

ஒலிக்கின்றன‌

அழுகுரல்கள்.

இன்னமும் இங்கு

துடிக்கின்றன‌

கொலைப்பட்டு

மனித உயிர்கள்.

ஒளிந்து கொண்டிருக்கும்

கடவுளே

இது கண்ணாமூச்சி

விளையாட்டு உனக்கு.

நாங்கள் கழுமரங்களில் 

வதை பட்டுக்கொண்டா

உனக்கு இத்தனை 

வழிபாடுகளை செய்வது? 

நம்பிக்கை தேடி

ஒரு ஊசிமுனையில்

இந்த கனமான உலகத்தை

நிறுத்திக்கொண்டா

எங்கள் கீதங்களைப்

பாடிக்கொண்டே

இருக்கவேண்டும்?

ஆதிக்க மிருகங்களின்

கோரைப்பற்களில் 

இரையாகிக்கொண்டே

எங்கள் அவலங்களை

ஆரோகணம் அவரோகணம்

ஆக்கி

முழங்கிக்கொண்டிருக்கிறோமே!

பாழ் மண்டபத்து

வௌவ்வால்களாய்த்

தொங்கிக்கொண்டிருக்கிறோமே!

என்ன செய்வது?

எதைத்தேடுவது?

........

ஆம்!

அதைத்தான் 

நானும் கேட்கிறேன்.

என்ன செய்வது?

எதைத் தேடுவது?

எதை அறிவது?

நம்மோடு தொங்கிக்கொண்டிருக்கிற‌

அந்த கடவுள் தான் 

கேட்கிறார்.

காத்திருங்கள்

அவர் தேடித்தெளியும் வரை

அவர் அறிந்து முடிக்கும் வரை

வெறும்

தலை கீழ் வேதாளங்களாய்!


_______________________________________



 

புதன், 22 டிசம்பர், 2021

சிந்துபூந்துறை

 சிந்துபூந்துறை

_________________________________

ருத்ரா



ஒரு திருநெல்வேலிக்காரனின்

நினைவுக்குள்

பளிங்குப்படித்துறையாய்

நீண்டுகிடப்பது

சிந்து பூந்துறை.

கரைத் திட்டில் அந்த‌

பனங்குட்டி நிழல்களில்

இன்னும் சொட்டு சொட்டாய்

உதிர்ந்து கொண்டிருப்பது

புதுமைப்பித்தனின்

"கயிற்றரவு"

சிந்தனைகளின் 

எழுத்துச்சிதிலங்கள் தான்.

அந்த சிறுகதை 

பிளந்த உதடுகளில் வழியும்

சொல் ஒலிப்புகளில்

நியாய வைசேஷிக தத்துவங்கள்

கடவுளை

பனைமரத்து சில்லாட்டைகளில்

வடிகட்டித்தரும்

அந்த அரைகுறைப் புளிப்பு இனிப்பு

பதனீரை ஊறிஞ்சுவது போல‌

எழுதிக்காட்டியிருக்கிறார்

புதுமைப்பித்தன்.

சிந்துபூந்துறைக்கும் 

வண்ணாரப்பேட்டைக்கும் 

நடுவே படுத்துக்கொண்டு

ஊர்ந்து கொண்டிருக்கும்

தாமிரபரணியைக்கூட‌

தன் எழுத்தின் தீக்குச்சி கொண்டு

உரசி உரசி 

நெருப்பு பற்றவைத்து அதில் அவர் 

சமுதாயத்தின்

இனிப்பையும் கசப்பையும்

பரிமாறியிருக்கும் நுட்பமே

சிந்துபூந்துறையின் கருப்பை கிழிந்த‌

பனிக்குட உடைப்புகள் தான்.

அவர் எழுத்துக்களின் பிரசவம் 

ஒரு ஏழைக்குமாஸ்தா வீட்டு

கிழிந்த பாயில் 

அரங்கேறும் வெப்பத்தில்

ஒரு உயர்வான இலக்கியம்

குவா குவா என்ற 

ஒலிப்புகளோடு ஒரு

புதிய யுகத்தின் முகத்தை

பதிவு செய்யும்.

ஒவ்வொரு தடவையும் அந்த‌

சிந்துபூந்துறை ஆற்றில்

நான் முக்குளி போடும்போதெல்லாம்

ஏதோ ஒரு புதிய‌

முலாம் பூசி எழும் ஓர்மையை

தைத்துக்கொண்டு வருவதையும் 

உணர்கின்றேன்.

அந்த ஆற்றுக்குள்ளும் ஒரு

ஆற்றுப்படை 

ஊர்வலம் போவதை

நான் படித்து படித்து

அந்த பனங்காட்டு சலசலப்புகளின்

பனைச்சுவடிகளில்

பதிந்து கிடப்பதை பிய்த்துக்கொண்டு

வெளியேற முடியவில்லை.


________________________________________________





செவ்வாய், 21 டிசம்பர், 2021

என்... இ சி ஜி வரிகள்.

 என்... இ சி ஜி வரிகள்

__________________________________ருத்ரா



இதை விட்டு விட்டுப் போய்விட்டாய்.

சந்தர்ப்பம் கிடைத்தது என்று

தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

அந்த சிறிய நாய்க்குட்டி

வெல்வெட் உடம்பில்

சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

எத்தனை நாளாய் காத்திருந்தேன்.

திருட்டுப்பழி 

ஏதோ ஒரு காக்காவின் எச்சம் போல்

என் மீது விழுந்த போதும்

பரவாயில்லை என்று முகத்தைத்

துடைத்துக்கொண்டேன்.

இருப்பு கொள்ளவில்லை.

தொலைபேசியில் அதைப்பற்றி

உன்னிடம் விசாரித்தேன்.

முகத்தோடு முகம் வைத்து

முத்த மழை பொழிவேனே!

என் இதயத்துள் எல்லாம்

இனி வெறும் சஹாரா பாலைவனம் தான்

அதை நீ பார்த்தாயா

என்று கேட்டாய்.

நான் 

மனத்துள் சொல்லிக்கொண்டேன்.

இது தானே 

என் இதயம் அருகே இருந்து

இன்னொலிப்பிஞ்சுகள் மூலம்

உன்னை

என் மீது யாழ் வாசித்துக்கொண்டிருக்கிறது.

அப்படியா?

தெரியாது என்றேன்.

ஒரு வாரம் போய் விட்டது.

அந்த வெல்வெட் குரல் இழைகளில்

அவள் தான்

வழ வழத்து தன் உள்ளம் வருடினாள்.

ஒரு நாள் எனக்கே

அவள் படும் துயரம்

பிசைந்து பிசைந்து உருட்டித்தள்ளியது.

அவளை வியப்பில் ஆழ்த்த‌

திடீரென்று

அதை அவளிடம் கொண்டுபோய்

கொடுத்து விட்டேன்.

அவள் முகத்தில்

ஆயிரம் மத்தாப்பூக்களின் நந்தவனம்!

ஒன்றுமே சொல்லத்தோன்றவில்லை

அதை படக்கென்று

தன் ரவிக்கைக்குள் செருகிக்கொண்டாள்.

எனக்குத்தான்

அது குலைப்பது

இந்த வானத்தை முழுவதுமே

கிடுகிடுப்பது போல் இருந்தது.

உனக்கு கேட்கிறதா?

என் செல்லப்பொமரேனியனே!

என் கைகளில் வைத்து

எப்போதும் கொஞ்சிவிளையாட‌

உன்னைத்தானே என் இதயக்கார்ட்டூன் போல்

இந்த கைக்குட்டையில் 

பூத்தையல் போட்டு வைத்திருந்தேன்.

அவள் முகம் மகிழ்ச்சியில்

பூரித்துக்கொண்டே இருந்தது.

அவள் கைக்குட்டையை 

எடுத்து வைத்துக்கொண்டால்

மலர் போன்ற 

அவள் எண்ணத்துடிப்புகளை

விஸ்வரூபமாக்கி 

மீண்டும் அப்படியே

அதில் என் துடிப்புகளை மடித்து வைத்து

அதை என் அருகே

அமர்த்தி வைத்த 

"போன்ஸாய்" ஆக்கி

அதன் மின்னல் நிழல்களில்

ஆழ்ந்திருப்பேன் என்று தான் 

நினைத்திருந்தேன்.

இப்போதும் கேட்கிறது

காது மடல்களை

உடுக்கையாக்கி

சன்னக்குரலில் குலைக்கும்

அதன் அமுத ஒலிகள்..

அந்த தையல் கோட்டு ஓவியத்தின்

வரிகளில்

என் இ சி ஜி வரிகள்...


__________________________________________







"கல்யாண்ஜி"


திரு வண்ணதாசன் அவர்களுக்கு ..... ========================================= திரு வண்ணதாசன் அவர்களுக்கு "சாஹித்ய அகாடெமி விருது"அளிக்கப்பட்டதற்கு மிக மிக மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

"கல்யாண்ஜி" என்ற பெயரில் அற்புதமான கவிதைகள் படைத்திருக்கிறார். அவர் கவிதைகளில் மெய்மறந்து ரசித்தவை எத்தனை எத்தனையோ உள்ளன. அவர் எழுத்துக்களை அசைபோட்டதே இக்கவிதை.


"கல்யாண்ஜி"
===========================================ருத்ரா


கவிதை என்றதும்
கல்யாண்ஜியைத் தாண்டி
போக முடியவில்லை.
யாரோ முகம் தெரியாத‌வ‌ள்
வைத்துச்சென்ற‌
ம‌ல்லிகைப்பூவை பார்த்து
தெருப்புழுதியைக்கூட‌
பிருந்தாவனம் ஆக்கிவிடுவார்
காத‌லின் நுண்ணிய‌
நிமிண்ட‌ல்க‌ளை
சில சொல் தூண்டில்க‌ளில்
துடிக்க‌ துடிக்க‌
பிடித்து விடுவார்.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளின்
சிற‌ந்த‌ க‌விதைக‌ளை
ச‌ட்ட‌ம் போட்டு மாட்ட‌லாம்.
இவ‌ர்
வெறும் ச‌ட்ட‌த்தை ம‌ட்டும்
மாட்டியிருப்பார்.
உள்ளே நுழைந்த‌வ‌ர்க‌ளே
உருகிக் க‌ரையும் க‌விதைக‌ள்.
யதார்த்த‌த்தை
பிச்சு பிச்சு எறிவார்.
சிந்திக்கிட‌ப்ப‌தோ
"பாரிஜாத‌ங்க‌ள்".
அவ‌ர் பெய‌ரில் ஒட்டியிருக்கும்
"ஜி"
ஏதோ ச‌ட்டையில் ஒட்டியிருக்கும்
பூச்சி அல்ல‌.
புதுக்க‌விதையின்
ஜீன்.
ஓடிப‌ஸ் காம்ப்ளெக்ஸில்
சிக்மெண்டு ஃப்ராய்டு
சித்திர‌ம் வ‌ரைவ‌து போல்
இந்த‌ ச‌முதாய‌ ந‌மைச்ச‌ல்க‌ளை
சொறிந்து விடும்
கிளி இற‌கு தைல‌ங்களின்
வார்த்தைப்பிழிய‌ல்க‌ளே
இவ‌ர் "ந‌வ‌ர‌க்கிழிச‌ல்க‌ள்".
த‌ட‌ம் புரியும் வ‌ரை
ஒத்த‌ட‌ம் சுக‌மான‌து.
தி.லி டவுன்
வாகையடி முக்கு
அல்வாக்கடை
இவையெல்லாம்
இவர் எழுத்துக்களை
வாசனை பிடித்துக்கொண்டே இருக்கும்.
அல்வாப்பொட்டல காகிதத்தின்
துணுக்கு எழுத்துக்கள் கூட
இவரைச்சொல்லியே
இனிக்கும்.
எழுத்துக்களே எழுத்துக்களுக்கு
அல்வா கொடுக்கும்
அவர் அக்குறும்பில்
"குறுக்குத்துறை"
முக்குளிப்புகள் ஏராளம்.

====================================

23 நவம்பர் 2012 ல் எழுதியது. 

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

"நான்"

 "நான்"

________________________________ருத்ரா



என் இருப்பை உணர‌

"நான்"என்ற சொல்லை

உரித்து உரித்துப்பார்த்தேன்.

எக்சிஸ்டென்ஷியலிசம் என்று

அதை அழகாய் 

சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

பாம்பு போல்

அறிவின் என் நீள நாக்கை வைத்து

அந்த சொல்லை

நக்கி நக்கிப் பார்த்தேன்.

இலக்கணம் அடையாளம் செய்தது

"தன்மை" என்று.

அந்த "நானை"என் எதிரே 

நிறுத்திய போது

"முன்னிலை" என்றது.

அதே "நானை" எங்கோ

தூரத்தில் வீசினேன்.

அது படர்ந்து பரந்து

படர்க்கை ஆகி

இந்த மண்ணை ருசித்தது.

மண்ணுக்குள்ளிருந்து

தலை நீட்டிய "நான்"களையெல்லாம்

வருடிக்கொண்டது.

மனிதன் நிற்கும் இடம்

இலக்கணக்குறிப்புக்குள்

அடைபட்ட போது

மனிதனின் உள்ளுக்குள்ளிருந்து

அடங்காத மனிதன்

ஆர்த்தெழுந்தான்.

சிந்தனை என்னும் அலைகளின்

பிழம்பில்

அவன் எங்கெங்கோ சென்றான்.

விண்வெளியின் அங்குலங்கள்

கோடி மோடி மைல்களின் கூட்டமாய்

ஒளியாண்டு என்னும் அலகுக்குள்

மிடையப்பட்ட போதும்

அவன் அறிவுச்செல்களின்

மின் துடிப்புகள்

தகவல் கடல்களின் திவலைகளில்

இழைந்து நின்றன.

கடவுள் என்ற சொல் அவன் மீது

எறியப்பட்ட போது

அவன் அறிவின் தேடல்

கொஞ்சம் காயம்பட்டது.

கொஞ்சம் மூளியாகிப்போனது.

விண்வெளிப்படலங்களில்

ஆற்றலின் அதிர்விழைகள்

ஆயிரம் ஆயிரம் முனையங்களாய்

முகம் காட்டின.

அதில் ஒரு முகமே எலக்ட்ரான்.

இப்போது

புரிந்து கொண்டான்

நான் 

நீ 

அவன் 

எல்லாமே 

இந்த துடிப்பில் தான்

எல்லாம் ஆகின.

ஒலிப்புகளை ஒலி பெருக்கி 

அதிருத்ர யக்ஞம்

என்று

கூப்பாடு போட்டுக்கொண்டார்கள்.

பெரும் தீயைத்தான்

ருத்ரன் என்றும்

சமகம் நமகம் என்றும்

ஸ்லோகங்களால் உருப்பெருக்கினார்கள்.

அது 

ஒரு பக்கம் அழிவு.

ஒரு பக்கம் ஆக்கம்.

இந்த விண்பிண்டத்தின்

மூன்று ஆற்றல்களை 

விஞ்ஞானிகள் ஒருமை எனும்

சிம்மெட்ரிச் சிமிழுக்குள்

அடைத்தார்கள்.

நான்கு ஆற்றல்களையும்

அதாவது ஈர்ப்பு விசையையும்

அடைத்து வைக்க 

சூப்பர் சிம்மெட்ரிக்குள்

விஞ்ஞானத்தின் விரல்களைக்கொண்டு

சூத்திரம் எழுதினார்கள்.

அது அண்டவெளிகளையும் 

தாண்டிச்சென்றது.

மொத்தமும் 

அதிலிருந்து பிதுங்கும் சவ்வுமே தான்

இந்த அண்டங்களின் 

அலகுகள்.

பல்க் அன்ட் ப்ரேன் என்று

சமன்பாடுகள் காட்டினார்கள்.

ஸ்ட்ரிங்க் தியரி எனும்

அதிர்வெளி இழையங்களே

இங்கு கோடி கோடி 

ஆற்றல் துகள்களாய்

விரிகின்றன.

தமிழில் உருவகமாய்

"பொன்னார் மேனியன் புலித்தோலை

அரைக்கு அசைத்தவன்"

என்றார்கள்.

ஹிக்ஸ் போசான்

எனும் விரிசடைத்தாண்டவன்

வீறு கொண்டு நிற்பதை

"அச்சங்களாக்கி"

அர்ச்சித்துக்கொண்டனர்.

நான் எனும் செதில்கள்

உதிரத்தொடங்கின.

அதிரத் தொடங்கின.

பக்தி உடுக்கையாகி ஒலித்தது.

அறிவு தூண்டில் விசியதில்

அகப்பட மறுத்ததும்

அகப்பட்டு அடங்கி வந்தது.

மனிதன் ஆண்டவன் ஆனான்.

ஆண்டவன் மனிதன் ஆனான்.

பொய்மை வர்ணங்கள்

மறைந்தே போயின.

மறைகள் எல்லாமும் 

மறைந்தே பொயின.


________________________________________

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

_______________________________________

சொற்கீரன்.



எத்தனை காலத்துக்குத் தான்

கடவுள் என்றும்

தங்கத்தேர்கள் என்றும்

இந்த‌

"லாலி பாப்"களை 

வைத்துக் கொண்டிருப்பீர்கள்?

கண்ணுக்குத்தெரியாத‌

நிகழ்வியல் காரணிகளைக்கூட‌

ப்ராபபலிடி எனும் 

கணிதக்கூறுகள் ஆக்கி

மனிதன்

அந்தக் "காலம்"என்ற

குறும்புக்காரனின்

காதுகளைத்திருகி

பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

அந்த இருட்டின் புள்ளியை விட்டு

நகரவே மறுப்பதற்கா

இத்தனைப்பிரகாசமாய்

மத்தாப்பு 

கொளுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?

அறிவுடைமை எல்லாம் உடைமை

என்ற ஒளியேந்தி

நமக்கு 

விழியேந்திக்கொடுத்தானே வள்ளுவன்!

அந்த மனிதனின் பிறந்த நாளைத்தாங்கிய‌

நம் "தமிழ்ப்புத்தாண்டு"

இதோ வருகிறது.

இப்போதாவது

விழிகளைத் திறவுங்கள்!

எச்சில் தெறிக்க‌

செவிகளை காயப்படுத்தும்

இரைச்சல் துண்டுகளை

விளங்கா சொற்களாய்

நம் மீது எறியும்

அந்த புது"வருஷத்துக்கு"

பல்லக்கு தூக்கி தூக்கி

மூச்சிறைத்தது போதும் தமிழர்களே.

வாழ்க வள்ளுவம்!

வாழ்க தமிழ்!


________________________________________




கீறல்கள்

  கீறல்கள்

_____________________________________

ருத்ரா


புலியின் பற்களும் நகமும்

கூட‌

மழுங்கிப்போகும்

உமிழப்பட்ட சில சொற்களின்

நச்சுக்கூர்மையில்.

அவை சிற்றுளிகள்

அன்பின் கோடுகளை

விரித்து

சிற்பமாக்கும் போது

அந்த சொற்கூட்டம்

உயர்ந்த நாகரிகத்தின் அடையாளம்.

சொற்களே!

நீங்களும் கூட கவனமாயிருங்கள்

உங்களை

பிரசவித்துக்கொள்ளும் போது.

காலப்பறவையின் எச்சங்களாய்

நீங்கள்

எழுத்துக்களில்

மிஞ்சி விட்ட போது

அதுவே

வரலாறாய் யுகங்களுக்குள்

உயிர் பாய்ச்சிப் பாய்கிறது.

"கல் பொரு சிறு நுரை"

என்று

சுவடிகளில் கீறினான்

ஒரு தமிழ்க்கவிஞன்.

கல்லும் ஒரு சிறு நுரையும்

அந்த கடற்கரையின்

தருணங்களில் மோதி மோதி

மௌனமாய் ரத்தம் வடித்தது

காதலை வெளிப்படுத்தி.


_______________________________________


வெள்ளி, 17 டிசம்பர், 2021

நம் விடியல்களே

 நம் விடியல்களே

_________________________________ருத்ரா



கடவுளும் மதமும்

கை கோர்த்து நமக்கு

கத கதப்பு ஊட்டுவது போல்

உணர்கின்றோம்.

குறிப்பாக‌

நாம் துன்பங்களில்

தோய்ந்திருக்கும் போது

இந்த உணர்வு தான்

எங்கிருந்தோ நீளுகின்ற கைகளில்

"காக்டெயில்" ஏந்தி

நம்மை வண்ணக்கனவுகளில்

வலி நீக்கும் மயிலிறகுகளாய்

வருடிக்கொடுக்கின்றன.

சமரசம் செய்து கொள்ளாத‌

கெட்டி தட்டிப்போன 

அறிவு அங்கே

பொய்மை வெப்பத்தில் 

ஆவியாகிப்போய் விடுகின்றது.

உணர்ச்சிகளின் "பேரிடர்களில்"

நம் தீவுகள்

மூழ்கிப்போகும் அபாயங்களே

நம் 

வாழ்க்கைப்பயணத்தின்

மைல் கற்களாய்

நம்மை இழுத்துக்கொண்டு ஓடுகின்றன.

சிந்திக்கும் நிழல் ஓரங்களில்

கொஞ்சம் இளைப்பாறுங்கள்.

இந்த அறிவின் மங்கல் மூட்டங்கள்

விலகி ஓடட்டும்.

வெளிச்சங்கள் 

நம் பசிக்கு உணவு ஆகட்டும்.

அப்போது

நம் இமை விளிம்பில்

படிந்திருப்பது

நம் விடியல்களே!


________________________________________________

அன்புள்ள திரு.சிவசங்கரசுப்ரமணியன்

 அன்புள்ள திரு.சிவசங்கரசுப்ரமணியன்

___________________________________________________



என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நம் கல்லூரி நாட்கள்

ஏதோ ஒரு இனம்புரியாத‌

வானத்தின் விடியல் விளிம்புகளை

பொன் வண்ண சிவப்புக்கோலத்தில்

பதியம் இட்டுத் தந்ததை 

மறக்க இயலுமோ?

சமுதாயம் ஒரு பெரும் ஊற்று

எழுச்சி கொள்ளும் கனவுகளுக்கு!

அதன் விலங்குகளை உடைக்கும்

சம்மட்டியும் அதில் தான் இருக்கிறது.

நுட்பமாய் ஒரு பாடம்

படிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அருமை நண்பனே!

நீடு நீ வாழ்க!

எழுச்சியோடு உனக்கு என் வாழ்த்துக்கள்

என்றும் உரித்தாகுக!


அன்புடன்

இ பரமசிவன்.

16.12. 2021

அன்பிற்குரிய திரு முரளி அவர்களே

 அன்பிற்குரிய திரு முரளி அவர்களே

ஜே கே அவர்களை 

அவரது சிந்தனைப்படிவங்களை

நன்றாக செதுக்கிக்காட்டியிருக்கிறீர்கள்.

இறப்பு என்பது நினைவுச்சுமைகளை

களைந்து விடுவது மட்டுமே என்றும்

முக்தி ஆன்மா போன்ற பூச்சாண்டித்தனங்கள்

அற்றது என்றும்

அவர் கருதுவது ஒரு தெளிவான‌

சிந்தனை ஓட்டம் என்றும்

ஒரு பளிங்குப்புத்தகம் ஒன்றை

உங்கள் விரிவுரையில்

பக்கம் பக்கமாய் புரட்டிக்காண்பித்திருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி.

இறப்பு பற்றி எண்ணுவது கூட‌

ஏதோ ஒரு இருட்டுக்கடை அல்வா சாப்பிடும்

இனிய நினைவு என்று

அவர் படிவங்களை வைத்து

காட்டியிருக்கிறீர்கள்.

இங்கு இரு சுமைகளை அழகாக காட்டுகிறீர்கள்,

சுமையை சுமக்காத ஒரு சுமை.

சுமையில் சுமக்கப்படும் ஒரு சுமை.

இரண்டுமே எண்ணங்கள் தான்.

இவற்றை எறிந்து விடுவதும்

மீண்டும் 

இன்னொன்றை தன் தோளில்

தூக்கிக்கொள்வதுமே

இறப்பு அல்லது இருப்பு ஆகிறது

என்று சிந்திப்பது

மிக மிக அருமை.

மீண்டும் நன்றி.


அன்புடன்

கவிஞர் ருத்ரா

ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி.

 ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி.

____________________________________________

ருத்ரா



ஜே கே ஒரு திறவுகோல்

ஆனால் 

அதை வைத்து ஒரு 

சிறிய ஜன்னலைக்கூட‌

திறக்க முடியாது

என்று அவரே எண்ணுகிறார்.

ஆம் 

இந்த "எண்ணுதல்கள்"தான் சிறை.

இதிலிருந்து விடுபட்டு

கூடவே ஒரு நீரோடை போல் 

வருகின்ற‌

அந்த கால இழையைப்பற்றிக்கொண்டு தான்

நம் "எண்ணுதல்"களை

உற்று நோக்க வேண்டும்.

இதில்

எந்த குருவும் இல்லை

எந்த உபதேசமும் இல்லை.

வேதங்கள் இல்லை

மதங்கள் இல்லை.

இவை நம்மை 

ஏற்கனவே வளைத்துக்கொள்ள‌

நம்மீது

அச்சிடப்பட்டவை.

இந்த எழுத்துக்களை களைந்த

ஒரு நிர்வாணத்தையே

எண்ணுதல் ஆக்கி

உற்று  நோக்கவேண்டும்.

அந்த தூய பளிங்கு பிம்பம்

மனித அன்பும் 

சமுதாய நேயமும் தான்.

இந்த எண்ணுதல்கள் உரிக்கப்பட்டு

நம் மடியிலேயே கிடக்கும் 

தருணங்களும் நேரலாம்.

நாம் நம்மில் எப்போதும்

மூழ்கிக்குளித்து

திளைக்கும் போது

அந்த திளைக்கும் நிகழ்வில்

ஒரு பொது மனிதன் 

உருவாகிறான்.

கணித மொழியில்

அவன் அவனை வைத்தே

உருவாக்கிய அப்ராக்ஸிமேஷன் ஆக‌

ஒரு பிரபஞ்ச மனிதனை நெருங்கியவனாக‌

அவன்

ஆகி விடுகிறான்.


_____________________________________




வியாழன், 16 டிசம்பர், 2021

வாழ்ந்தே தீருவோம்.

 வாழ்ந்தே தீருவோம்.

__________________________________ருத்ரா.


காசிக்குப் போ!

கர்மம் தொலைக்க‌

அல்லது

கர்மம் தேட.

இயங்குவது தானே

கர்மம்.

வாழ்க்கை எனும் இயக்கம்

என்பதே

சமுதாய ஓட்டத்தில்

இயைந்தது தான்.

சமுதாயத்தை பிய்த்து எடுத்துவிட்ட‌

மனிதம்

அல்லது மனிதம் தொலைத்த‌

சமுதாயம் 

இரண்டும் 

அந்த கங்கையில் எறியப்படும்

பிணம் தானோ?

நம் ஜனநாயகம் கூட‌

ஒரு கங்கைக்கரையில் தான்

நின்று கொண்டிருக்கிறது.

ஆறாக தெளிந்த சிந்தனையாக‌

ஓட வேண்டியதில்

ஏன் இத்தனை அறியாமைக்குப்பைகள்?

நாளை கணினி எனும்

எலிப்பொறிக்குள் நுழையும் முன்

வெறும் மசால் வடையை

கொறிக்க ஓடும் எலிகளாகவா

நாம் இன்னும் இருப்பது?

மானிட நீதியும் உரிமையுமே

நம் வெளிச்சங்கள்.

பட்டன் தட்டும் நம் கைவிரலில் தான்

நம் வாழ்க்கை மதம்

பொதிந்து கிடக்கிறது.

இருட்டை மட்டுமே 

பூசித்துக்கொண்டிருந்தால்

நம் கிழக்குகள்

ஒளியை இழந்த உழக்குகள்

எனும் பொய்மை வரலாற்றில்

புதையுண்டு போகும்.

நம் வாழ்க்கையை நாம்

உரிமையோடு

வாழ்ந்தே தீரவேண்டும்

என்னும்

இந்த மதத்தைத் தவிர 

எந்த மதமும் 

நமக்கு சம்மதம் இல்லை.


_____________________________________________




புதன், 15 டிசம்பர், 2021

ஓ மனிதா!

 https://www.msn.com/en-in/video/news/historic-human-made-object-touches-sun-for-first-time-know-about-nasa-s-solar-probe-mission/vi-AARQliZ?ocid=msedgntp


ஓ மனிதா!

அறிவின் வைரக்கிரீடம் 

சூட்டிக்கொண்ட உனது

இந்த வெற்றியின் முன்

அந்த சூரியன் 

நாணம் கொண்டு முகம்

புதைத்தது.

அந்த சூரியனை புராண புருஷனாய்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

ஸ்லோகக்காடுகளுக்குள்

புதையவிட்டு

தன் அறியாமையால்

அந்த நெருப்பையே

அழுகவிட்டுக்கொண்டிருந்த‌

நம் இருட்டு

இன்று இமை உரித்தது.

ஆம்.

நம் விண்கருவி இன்று

அந்த சூரியனின் புருவங்களுக்கு

மை தீட்டி 

அழகு பார்த்து

அந்த வெப்ப மூச்சின் 

நுண் துகளை விஞ்ஞானத்தின் அறிவில்

ருசி பார்த்து விட்டதே!

அந்த சூரியனுக்கு சொல்கிற‌

"போற்றிகள்"

ஓ! மனிதனே

உனக்கும் தான் கேட்டிருக்கும்.

இந்த பிரபஞ்சத்தின்

வாசலில் நீர் தெளித்து உன்

அறிவின் ரங்கோலி கோலம்

போட முனைந்த 

மானிட அறிவே

இனி நம் கோடி சூரியன்கள்.


___________________________________________

ருத்ரா

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ரஜினிக்கு ஒரு அன்பான வாழ்த்து.

 ரஜினிக்கு  ஒரு அன்பான வாழ்த்து.

________________________________________ருத்ரா


உங்களுக்கு

எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

வரலாற்றில் சில திருப்பங்களை

செய்து காட்டுவது என்பது

உங்களுக்கு

சிகரெட்டுகளை வாயால் 

கேட்ச் செய்து காட்டும்

அபூர்வ கிரிக்கெட் விளையாட்டு 

என்பதை நாங்கள் அறிந்தோம்.

"அந்த ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்"

விளையாட்டுக்கு நீங்கள்

சென்ற தேர்தலில்

வர மறுத்ததே அந்த இனிய திருப்பம்.

இருப்பினும்

தலைக்கு மேலே கள்ளச்சிறகுகள்

பட படத்துக்கொண்டிருப்பதை

நீங்கள் கவனம் வையுங்கள்.

நீங்கள் கன்னடத்தமிழர் என்றாலும்

அதிலும் ஒரு கனல்வீசும்

திராவிடம் கதிர் வீசிக்கொண்டிருப்பதை

நாங்கள் அறிவோம்.

காவிரி என்னும் வரப்புச்சண்டைகளுக்கு

அப்பாலும்

ஒரு வரலாற்றுச்சண்டைக்கு

நம் கரங்கள் கோர்த்துக்கொண்டிருக்க வேண்டும்

என்ற‌

ஒரு நுட்பம் 

உங்கள் புன்னகையில் சுடர்கிறது

என்பதை நாம் அறிவோம்.

நோபல் பரிசு பெற்ற நம் தேசிய கவிஞர்

"பஞ்சாப சிந்து குஜராத மராட்டா.."

என்று பாடிய பின்

அந்த "திராவிட"வில் தான்

நம் வருங்கால இந்தியா

அலையடித்துக்கொண்டிருக்கிறது

என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

"முல்லைப்பெரியாறுகள்" "மேக தாட்டு"க்கள்

எல்லாம் 

முட்டுக்கட்டைகளாக தெரிந்தாலும்

முற்றிய தமிழ் வீச்சின் திராவிடமே

இமயப்பனிச்சிகரம் வரையிலும்

சுவடு காட்டிகொண்டிருக்கிறது.

தமிழர்கள் தமிழுக்கு உயர்ந்து நின்ற போதும்

இந்திய மொழிகள் யாவற்றையும்

இணைத்தே அந்த 

"தொல் காப்பியத்துள்"

வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தம்மை நைந்து போகவிட்டுகொண்டிருந்தாலும்

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின்

மண் தான்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்று ஒலித்தது.

அந்த சிந்துவெளித்தமிழின்

வெளிச்சத்தை ஏந்தி இன்றும் சொல்கிறோம்.

"உலக மானிடம் மலர்க!

அதில்

உலகத்தமிழும் சுடர்க!"

இதே இதய வீச்சில்

உங்களை வாழ்த்துகிறோம்.

நூறாண்டு..நூறாண்டு 

நீவிர் வாழ்க!


________________________________________________________


நெஞ்சு பொறுக்குதில்லையே...

 நெஞ்சு பொறுக்குதில்லையே...

_____________________________________ருத்ரா



"அஞ்சி அஞ்சி சாவார்..இவர்

அஞ்சாத பொருள் இல்லை

அவனியிலே...."

அந்த எரிமலைக்கவிஞன் கூட‌

மனம் நொந்து அல்லவா

இவ்வரிகளைப் பாடியிருக்கிறான்.

அந்த வஞ்சனைப்பேய்கள்

சாதி மத வர்ணங்களைப்

பூசிக்கொண்டு  தானே

நம்மிடையே குத்தாட்டம் 

போட்டுக்கொண்டிருக்கின்றன.

கோடிக்கணக்கில் 

பணம் கொட்டி 

கோவில்கள் 

புத்துருவம் பெறுகின்றன.

அங்கே

இறைவன் 

எந்த தூண் மறைவில் 

ஒளிந்திருக்கிறான்?

எந்த துரும்புக்குள்

அலையடிக்கும்

பாற்கடலை பாய்விரித்து

படுத்துக்கொண்டிருக்கிறான்?

வேலைப்பாடும் கலை நேர்த்தியுமாய்

மிடையப்பட்ட‌

அந்த சலவைக்கல்லின்

எந்த சதைத்திரட்சிக்குள்

புடைத்துக்கொண்டிருக்கிறான்?

எங்கோ கிராமங்களில்

புழுக்களாய் நசுக்கப்படும்

சூத்திர ஜந்துக்களில்...

அல்லது

அதற்கு அடியிலும் 

ரத்தச்சேற்றில் 

குற்றுயிர் குலைஉயிராய்

முனகிக்கொண்டிருக்கும்

உயிர்ச்சிதலங்களில்...

மற்றும் 

பிற மதங்களில் ஒலிக்கும்

வழிபாடுகள்

பாதுகாப்பற்ற கூடங்களில்

அடித்து நொறுக்கப்படும் 

அவலங்களிலிருந்தெல்லாம் மீள..

நம் 

"ஜன கண மன"..

சுருதி சேர்த்துக்கொண்டிருப்பதை

இந்தப்பேய்கள் 

ஏன் விழுங்கிவிட ஆட்டம் போடுகின்றன?

இவர்களின் பிரம்மத்தின் குரல்

எங்கோ பாஷ்யங்களில்

ஒலி பரப்பிக்கொண்டிருப்பதைக்

கூட‌

அதில் கசியும் மனிதத்தின் ஒரே

ஆத்மாவைக்

கூட‌

கேட்க மறுக்கின்ற‌

அரக்கத்தனமான செவிகளை உடைய‌

ஒரு மூர்க்கம் அல்லவா

இங்கே மூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

ஓ! பாரதி எனும் செந்தமிழ்ப்பிழம்பே!

"தனி ஒரு மனிதனுக்கு 

உணவு மட்டும் அல்ல‌

அதன் வாழ்வு உரிமையும் 

மறுக்கப்படும் என்றால்

அதன் தடைகளை

தட்டி நொறுக்கத்தயங்காதே"

என்று

நீ கோடு காட்டிவிட்டுப்போயிருக்கிறாய்.

அந்த இமய உச்சியில் நின்று

முழங்குகிறோம்!

வாழ்க மக்கள் ஜனநாயகம்!

வெல்க மக்கள் ஜனநாயகம்!


__________________________________________








சனி, 11 டிசம்பர், 2021

"எல்லோரும் நல்லவரே"

"எல்லோரும் நல்லவரே"

_________________________________ருத்ரா



அந்தக்காலத்தில்

"கிருஷ்ண பக்தி"யை

அந்த திரைப்படத்தில்

சொல்லடி பட்டு கல்லடி பட்டு

நைந்து நைந்து உருகிப்பாடிய‌

அந்த பெருங்கலைஞர்

பி யு சின்னப்பா அவர்களின்

குரல் வெள்ளத்தை

எவராலும் மறக்க முடியாது.

ஆனால் இன்றோ

ஒரு கிருஷ்ணனை 

இன்னொரு கோவிலுக்குள் நுழைத்துக்

குடம் குடமாய்

வெறித்தீயைக் கொண்டு குளிப்பாட்டி

இந்த கிருஷ்ணனை 

குளிர்விக்கப் போகிறார்களாமே!

அரசியல் சாசனத்தை

அந்த அரசியல் சாசனத்தின்

சந்து பொந்து ஷரத்துக்களைக்கொண்டே

சுக்கு நூறாய் கிழித்தெறிந்து விட்டு

இந்த மகாபாரதத்தை

கொலை பாதகம் எனும்

பளிங்கு கற்களாலும் 

சலவைக்கற்களாலும்

அடுக்கி அடுக்கி வெறும்

கோவில்களின் வறட்டுத்தூண்களில்

தூக்கி நிறுத்தப்போகிறார்களாமே!

உயிர்ப்பு நிறைந்த கோவில்களுக்குள்

மானிட நேயம் தானே

மயில் இறகுக்கிரீடமும் 

புல்லாங்குழலும் ஏந்தி

அமைதி கீதம் மூலம் 

கிருஷ்ண கானத்தை 

எதிரொலிக்க முடியும்?

கிருஷ்ணம் எனும் 

இந்த "கறுப்பு மனிதர்களின்"

உள்ளக்கிடக்கையை

அந்த வெள்ளை "எஜமானர்களா"

அடித்து நொறுக்க ஆவேசப்படுவது?

மனிதர்களை சாதி மத வர்ணம் பூசி

ஆதிக்க மிருகங்கள் தன் காலடியில்

போட்டு

மிதித்து நசுக்கிக்கூழாக்கவா

இந்த "சப்பளாக்கட்டைகள்"

இரைச்சல் போடுகின்றன?

"எல்லோரும் நல்லவரே"

என்ற அந்த மனிதத்தின் 

பூங்குரல் புகைந்து போகவோ

இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

"ஹரே ராம! ஹரே கிருஷ்ண!

என்ற கீதங்களுக்குள்

இந்த கசாப்புக்கத்தியை 

செருகியவர்கள் 

யார்?யார்?யார்?.

கேள்விக்கணைகள்

சல்லடையாய்த் துளைக்க...

அந்த பாடல் வரி

நம் பாரதத்தின் குருத்தெலும்பிலும்

சிலிர்த்து நிற்கிறதே!

"எல்லோரும் நல்லவரே"


____________________________________________

 


சனி, 4 டிசம்பர், 2021

புளு சட்டை மாறன்

 புளு சட்டை மாறன்

‍‍‍___________________________ருத்ரா


இவர் படத்தில்

பிணம் ஒரு உருவகம்.

மனிதன் 

பிறக்கும்போதே

பிணமாய் பிறந்து

பிணமாய் வாழ்ந்து

அவன் இறுதியில்

மனிதம் பற்றி நினைக்கையில்

மீண்டும் பிணமாகவே கிடந்து

பிணமாய் மறைகிறான்.

அது வரைக்கும் 

அவனைச்சுற்றி சுற்றி வரும்

மொழி 

இனம் 

சாதி மதம்

அரசியல்

லாபம்

பொருளாதாரம்

மற்றும் 

இந்த நடைப்பிண வாழ்க்கையின்

கலைடோஸ் வண்ணத்திருப்பங்களே

இங்கு

கும்மி அடித்து

கும்மாளம் போடுகின்றன.

ஒட்டு மொத்தமாய்

அரசியலின் உள்கிடக்கை

அடித்து துவைக்கப்பட்டு

அலசப்படுகின்றன.

ஒரு ஆழ்ந்த சமூகசிந்தனையாளனுக்கு

தேசியம் என்பதே

தேசிய விரோதம்.

நேசனலிசத்தின் எதிர்மறை

இன்டர்நேசனிலிசம்.

இந்த எதிர்மறையில் கூட 

முதன் முதலில் 

ஒரு நேர்முறையின் வீச்சு தந்தவன்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்றவன் தானே.

தேசியம் என்ற சொல்லில்

வெறிகிளப்பும் போர் முரசுகள்

லட்சக்கணக்காய் மனிதர்கள்

கொல்லப்பட்டு பிணங்களாய் குவியும்

அவலங்கள்.

இந்த கொலைத்தீப்பந்தங்களில்

குளிர்காயும்

தன்னலப்பேய்கள்.

இதை வைத்துக்கட்டப்படும்

அரசியல் பொருளாதாரக்

கோட்டை கொத்தளங்கள்..

இறுதியாய் இதனடியில்

நசுங்கிப்போகும் 

"மனிதம்"...

இதுவே தேசியத்தை

பச்சைக்குத்திக்கொண்டு

தேசவிரோதம் 

ஆகிப்போகிறது.

முகமூடிகளை மாற்றி மாற்றிப்

போட்டுக்கொண்டு

கடவுளும் சைத்தானும்

எதிர் எதிராய் உட்கார்ந்து

சொக்கட்டான் ஆடும் 

விளையாட்டு தான்

இங்கே தத்துவங்கள்.

இவர்கள் உட்கார்ந்து

விளையாடும் மேடை....

மனிதம் கல்லறையில் 

காணாமல் போய்விடும்

இடமே அது.

புளு சட்டை மாறன்

அப்பட்டமாய் தோலுரிந்து கிடக்கும்

சமூக அவலங்களின் 

ஒரு நீலப்படத்தை

மிக மிக காரமான 

சிவப்பு மிளகாயாக  தந்திருக்கிறார்.

உறைக்குமா இது

ஒரு விடியலுக்கு?


_____________________________________

வெள்ளி, 3 டிசம்பர், 2021

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


____________________________ருத்ரா




மனிதா 


ஒரு நொடி போதும் உனக்கு


உன் சூழ்நிலைகளை


சுருட்டி


உன் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள.


உன் சிந்தனைப் பதிவில்


தடம் ஏற்படுத்திக்கொள்ள.


நீ 


என்றாவது எண்ணிப்பார்த்தது


உண்டா?


உன்னோடு 


உன் அருகே


இருப்பவர்கள்


மானிட நேசம் கொண்டவர்களா?


என்று.


இன்னும்


விலங்கியல் மிச்சங்களின்


விலங்கு மாட்டிக்கொண்டவர்களா?


என்று.


அப்படியென்றால்


நீயும் அந்த வட்டத்துள்


ஒடுங்கிக்கொண்டாயா?


என்று.


இந்த கேள்விகள் தான்


நம் திறவுகோல்கள்.


இவை நமக்கு இல்லாமல் இருப்பதே


வெளிச்சம் படாமல் நாம்


இருள் பூசி நிற்பதற்கு


காரணம்.


நாம் மழுங்கடிப்பட்டுக்கிடக்கிறோம்.


பலப்பல நூற்றாண்டுகள் 


கழிந்த பின்னும்


நாம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை


நம் காலத்தை தொலைத்து விட்டோம் 


என்பதை.


நம் மனிதமே நம்மை விட்டு


பிய்ந்து கிடப்பதை


நாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை.


நாம் விழித்துக்கொள்ள 


இமைகள் திறக்கும் போதெல்லாம்


போதை நனைக்கும் அருவிகளில்


சொர்க்கக் கனவுகளில்


துவண்டு போய் விடுகிறோம்.


என் கத்தி


இன்னொருவன் முதுகில்...


என் முதுகில்


இன்னொருவன் கத்தி...


இந்த நச்சுச்சங்கிலியை


பின்னிவைத்த சாதி ஏற்பாடுகளில்


மனிதம் தன் சவப்பெட்டியை


தானே சுமந்து செல்கிறது.


கடவுள் முகம் பார்க்கும்போது


அந்த கண்ணாடியில்


சைத்தான் தெரிகிறது.


சைத்தான் 


அந்தக்கண்ணாடியில்


கடவுளாய் 


ரூபம் காட்டுகிறார்.


உடன் பயணிக்கும்


என் இனிய நண்பனே!


அடித்தட்டில் நசுங்கிக்கிடக்கிறவர்களின்


பிதுங்கிய ஒலிக்கீற்றுகளில்


ரத்தம் பீறிடும் தருணங்களே


நம் காலச்சுவட்டின் கன பரிமாணங்கள்.


போதும்!


வில் அம்பு ஏந்திய அந்த ராமர்களை


அங்கே எங்கேயாவது ஒளித்து வையுங்கள்.


உங்கள் அழுக்குகள் அகற்றப்பட‌


"சலவைக்கல்" கட்டிடம் எழுப்புங்கள்.


வர்ணங்களை கொண்டு வதம் செய்யும்


சாஸ்திரங்களை அப்புறப்படுத்துங்கள்.


மனிதமுகம் யாவும் அன்பின் ரோஜா தானே.


சமூக ஒருமை சிந்தும் மகரந்தங்களில்


அந்த ரோஜா புன்முறுவல் செய்யட்டும்.


அந்த சமாதானபூச்செண்டு போதும் இனி.


எதற்கு இன்னும் அந்த ஆயுதக்கிடங்குகள்?


இனி எதற்கு


சாதிபடிமங்களில் வெறியைக்கொண்டு


குளிப்பாட்டும் கும்பமேளாக்கள்?


எல்லாம் தொலையுங்கள்!


பளிங்கு வானமாய் துடைத்து வையுங்கள்.


மானிடத்தின் விடியலுக்கு


அந்த கனத்த சன்னல்களை


திறந்து வையுங்கள்!


_________________________________________

வியாழன், 2 டிசம்பர், 2021

"மாநாடு".

 "மாநாடு"

_______________________________ருத்ரா


இப்படத்தின் கதாநாயகன் 

சிம்புவா?

கதையா?

இயக்குநரா?

தயாரிப்பாளரா?

பட்டியலை நீட்டிக்கொண்டே

போகலாம்.

இதில் உள்ளே

நீறு பூத்த நெருப்பாய் இருந்து

உமிழ்ந்த 

நம் சுதந்திர வரலாற்றுச்

சீற்றத்தின் லாவாவில்

இழையோடிய சிவப்புக்குள்

இருந்த பச்சையான உண்மையே

இப்படத்தின் கதாநாயகன்.

இந்திய தேசத்தின் எழுச்சி வடிவம்

பிளவு இல்லாதது.

பிசிறு இல்லாதது.

மதங்களின் அழுக்குகள் முகம் காட்டாத‌

காட்டாற்று வெள்ளம் அது.

சிந்திய ரத்தம்

இந்து இஸ்லாம் 

என்ற வேறுப்பாட்டால்

ஆபாசம் அடைந்ததில்லை.

ஆனால்

நம் விடுதலை விடியலின்

விளிம்பில் எப்படி

அந்த கீறல் 

மறுபடியும் ரத்தம் சிந்திய‌

விரிசல் ஆனது?

அந்த கோர விரல்களும் அதன்

கூரிய நகங்களும்

இன்னும் 

இன்றும்

இந்த காவல் கோட்டங்களில்

ஏதோ ஒரு பசிக்காக‌

கூர் தீட்டிக்கொண்டிருக்கிறதே.

ஏன் அந்த மரண மூட்டம்

நம் ஜனநாயக உயிர்ப்பின் கழுத்தில்

காலை வைத்து மிதித்துக்கொண்டிருக்கிறது?

"ராம் அவுர் ரஹிம்" ஆக 

இழைந்து வெள்ளைத்துப்பாக்கிகளை

அடித்து நொறுக்கிய‌

கரங்களிடையே

"ராம் யா ரஹிம்"

என்ற வேற்றுமை வெறி

எப்படி ஊடுருவியது?

இடிக்கப்பட்ட மசூதியின் சிதலங்களும்

புதிய கோவிலின் பளிங்குக்கற்களும்

அருகருகே 

நம் சின்னங்களாக..

நம் வரலாற்று ஏடுகளின் மீதுள்ள‌

தூசிகளாக...

"மனிதம்" மொத்தமாய்

கல்லறைக்குள் அடங்கிப்போய்விடுகிற‌

ஒரு அதர்மத்தின் பிம்பமாக...

எச்சமாகிக்கிடக்கிறோம்.

இது தீயாய் நம்மை சுட்டுபொசுக்கும்

வெப்பமே

இந்த "மாநாடு".


________________________________________