நகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)

நகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்) _____________________________________________________________________


 இரு முதிய தம்பதிகள் பேசிக்கொள்கிறார்கள். "எத்தனை வயதானாலும் இப்படி "ஜொள்"விடுவதை விடமாட்டீர்களா?" இது மனவி. "எத்தனை வயதானாலும் இப்படி "லொள்ளு" பண்ணுவதை நீங்களும்
விட மாட்டீர்களா? ஏண்டி! நவராத்ரிக்கு கோவிலுக்கு நீ தான் கூட வரச்சொன்னே!"அஷ்டலக்ஷ்மி"கள் இளமங்கைகளாத்தானே இருக்கிறார்கள்.அவர்களை பார்த்து கும்பிட்டாலும் இப்டி லொள்ளு பண்ணா  எப்படி ?

 இது கணவர்

______________________________________________________________________\

"டாக்டர் எனக்கு இனிப்பு மாத்திரைகளாக பார்த்து எழுதிக்கொடுங்கள்"

"ஏம்பா அப்டி கேக்ரெ."

"அது இல்லை டாக்டர்! சக்கரை வியாதி.வீட்ல இனிப்பே சாப்ட முடியாதே.மாத்திரையிலாவது இனிப்பு சாப்டாலாமுண்ணு தான்.."

______________________________________________________________________


ஏங்க பத்தொன்பாதாம் தேதி கண்டிப்பா தேர்தல் நடக்காதா?

ஆமா! ஏன் கேக்கரீங்க.

அன்றைக்கு நிச்சயமா ரெண்டு கன்னங்கள்ள தொளை போட்டு
தெருவையை அடைக்கறப்ல அகலமா "அலகு" குத்திகிட்டே வந்து
தேர்தல் விண்ணப்ப மனு குடுக்றதா அம்மனிடம் நேத்திக்கடன் போட்டிருக்கேனுங்களே!

______________________________________________________________________


"வலியுடன் கூடிய காய்ச்சலும் மழையும் வடக்கு மாவட்டங்களின்
கரையோரப்பகுதிகளில் இருக்கும்.இடியுடன் தொற்றுநோய்க்கிருமிகளும்
பரவலாக பெய்யும்..."

"என்ன இது ? வானிலை அறிவிப்பு அதிகாரிக்கு என்ன ஆயிற்று ?"

"இன்று தான் இங்கு ஜாயின் பண்ணினார்.நேற்று வரை அப்பல்லோவில்
வேலை பார்த்தவராம்."

-------------------------------------------------------------------------------------------------------------------------


1 கருத்து:

Kurukku Muttan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக