நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
நாவலத் திறனில் நற்றமிழ் காட்டி
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
நாவலத் திறனில் நற்றமிழ் காட்டி
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
-------------------------------------------------
சேயோன்
ஒரு தேர்தல் விவரிக்கப்படுகிறது
( an election is described )
By "ஆலிவர் கோல்ட்ஸமித்"
புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதிய கட்டுரை இது.தலைப்பை மட்டுமே மகுடமாய் சூட்டிக்கொண்டு வரும் எழுத்துக்களின் ஊர்வலம் இது.
பிளந்து கிடந்த ஒரு
நடு இரவில்
ஊமையாக சிமிட்டிக்
கொண்டிருந்த
நட்சத்திரங்களின் சாட்சியாக
சுதந்திரக்கொடியை
விரித்துக் கொள்ளுங்கள்
என்று
கொடுத்து விட்டுப் போனான்
அந்த வெள்ளையன்.
இந்த வெள்ளையனோ
மூவர்ணத்துள்ளும்
அந்த நாலு வர்ணத்தையும்
சேர்த்து சுருட்டி
மிச்சர் பொட்டலம் போட்டு
கொடுத்திருக்கிறான்.
வர்ண வர்ணமாய்
அந்த சாதிமத வெறிகளின்
அபினிச்சித்திரங்களே
இங்கு தேர்தல் சினிமாக்கள்
---------------------------------------------
சேயோன்
நூலகம்
-------------------------------
அட்டை
போட்டுக்கொண்டு
சட்டை மாட்டிய புத்தகங்கள்
வரலாறுகளாய்
நெளிந்தோடின.
விஞ்ஞானங்கள்
பொய்த்தோல் உரித்து
உண்மையின்
இமைகள் விரித்தன.
புராணங்கள் எனும்
அம்புலிமாமாக் கதைகள்
ஆயிரம் குவிந்து கிடக்கட்டும்.
ஆங்காங்கே மூலைகளில்
சாதி மத "நூலாம்படைகள்"
படிந்து கிடந்த போதும்
படிக்கப்படவேண்டும்
புத்தகங்கள்.
அந்த இண்டு இடுக்குகள்
எல்லாம்
அறிவின் ஆவேச
சுநாமிகளால்
துழாவி துழாவி
அடித்துச் செல்லப்படட்டும்.
மானுடத்தின்
கூர் அறிவு எல்லா
இருட்டுச்சிப்பங்களையும்
அழித்தொழிக்கட்டும்.
சிந்தனைச்சுடர்கள்
ஓங்கித்தெறிக்கட்டும்.
---------------------------------------------
ருத்ரா.
என்ன இது?
துன்பம் நெஞ்சைப்
பிசைந்து கொண்டிருக்கிறது.
எதை நினைத்து?
எல்லாவற்றையும் தான்.
என்ன சொல்கிறாய்?
இந்த இ சி ஜி யை பார்.
உன்னோடு
நீ பேசிக்கொள்வது...
----------------------------------
ருத்ரா.
உன்னோடு
நீ பேசிக் கொள்வது
எப்போது?
தூங்கும் போது
கனவில் பேசுவது என்பது
உன் ஆழ் மனக்
குமிழிகள் ஆகும்.
அந்த சோளத் தட்டையில்
எந்தக் கோட்டையும்
கட்ட முடியாது.
கண்ணாடியின் முன் நின்று
தலை வாரும் முன்
அந்த சீப்பின் பல் வரிசையில்
விரல்களைக் கொண்டு
கொஞ்சம் "யாழ்"
வாசிப்பீர்களே
ஒரு மரங் கொத்திப்பறவை
...... ... . .. .... . - - - .. ...
அது ஏதோ "கட கட் கட கட"
என்று அந்த மரத்தில்
தந்தி அடித்துக்
கொண்டிருக்கிறது
..
உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே.
பாரதி தான் பாடினார்.
அச்சா! அச்சா!
ஜாவ்! ஜாவ்!
அனுமார் படைகள்
தமிழின் மீது
கதாயுதங்களைக்கொண்டு
..................
அச்ச மூட்டுகின்றனவே.
------------------------------------
"என்னடா பொல்லாத
வாழ்க்கை?"
சினிமாப் பாட்டு
வரிகளுக்குள்ளும்
சித்தர்களின் சவ்வு மிட்டாய்
காலப் பறவையே!
உன் சிறகுகளை நீ
சட சடக்கும் போது
சரித்திரம் செதில் செதிலாக
உதிர்ந்தது.
வெண் கொற்றக்
குடை நிழலுக்குள்ளும்
முடை நாற்றம் வீசியது.
போர்களால் ரத்த ஆறுகள்.
வாள் வீச்சுக்களில்
தலைகள் உருண்டன.
ஆனால்
வாய் வீச்சுகளில்
அறிவு முளைவிட
சிந்தனை பொறிகளும்
தெறித்தன.
உமிழ்ந்த விடியல்கள் தோறும்
உதிர்ந்த சூரியன்கள்
பல் விளக்கி
வாய் கொப்புளித்துக்
கொண்டன.
ஆற்றங்கரைகளில்
நாகரிகங்கள் விழித்துக்
கொண்டன.
வெயில்
----------------------------------ருத்ரா.
வெயில் தன்
குருட்சேத்திரத்தை
தொடங்கி விட்டது.
சாலை ஓரங்களில்
சிவப்பு சிதற சிதற
குருதியை கூறு கட்டி
வைத்தாற் போல்
வியாபாரத்துக்கு
காத்து கிடக்கும்
தர்பூசணி பழத்துண்டுகள்
வண்ணதாசன்
கவிதைத் துண்டுகள் என
ஈக்கள் மொய்த்ததாய்
ஆம்...தேனீக்கள்
மொய்த்ததாய்
அந்த தூங்கு மூஞ்சிமரக்
கிளைகளை சலசலக்க
வைத்துக்
கொண்டிருக்கி ன்றன.
---------------------------------------------
என்ன யோசனை ?
மாமரத்தினடியில்
அந்த குத்து கல்லில்
உட்கார்ந்து கொண்டிருக்கும்
என் மீது விழுந்த
ஒரு மாஞ்சருகு கேட்டது.
எதை யோசிப்பது
என்று தான் தெரியவில்லை.
.
"..மனித க் காதல் அல்ல ..அல்ல.."
----------‐--------------------------------------------
ருத்ரா
குகை நன்றாகவே
எதிரொலித்தது.
அதனால் படம் சூப்பர்.
குகை
மலைப்பிளவில் அல்ல.
மனப்பிளவே அது.
"ஸ்கிசொபெர்னியா"
மனிதம் மிருகம் தெய்வம்
எல்லாம் சேர்த்து
ஒரு காக்டெய்ல் காதலும்
நுரைத்து அதில் பூக்கலாம்.
நமக்கு தடுக்கி விழுந்தால்
அந்த புராணங்கள் தான்.
போகட்டும்.
ஆனால் இந்த படம்
மனிதம் மகத்தானது என்பதின்
ஒரு "பிரம்ம சூத்ர" பிரம்மாண்டம்
என்றாலும் மிகை இல்லை.
ஆனாலும்
ஆஹோ..ஓஹோ..என்று
கமல ஹாசனின்
காதல் கோணங்கித்தனமே
இங்கு கொண்டாடப்படுவது
மட்டுமே
பச்சையான கொச்சை.
-----------------------------------------------
வெயிலுக்கு ஒரு பொழிப்புரை .
-----------------------------------------------------
ருத்ரா
இலை இடுக்குகள் வழியே
ஒழுகிய வெயில்
நிலத்தில்
கல்வெட்டு எழுத்துக்கள் போல
புதிர் அசைவுகள் காட்டின.
நிழல்களும்
ஒரு ஆற்றின் ஓட்டத்துள்
துள்ளும் மீன்களாய்
தோற்றம் காட்டின.
என் மீது உதிர்ந்தது போல்
இரவின் மிஞ்சிய
எச்சில் விண் மீன்கள்
"உரு வெளி" காட்டின.
இந்த இலைகள் முடைந்த
குடைக்கு வெளியே
மொட்டை வெயில்
நம்மை
உரித்து தொங்க போட்டு விடும்.
சட்..!
இதற்கு மேல்
வெயிலுக்கு ஒரு பொழிப்புரை
என்று
என் பேனா என் மீதே
ஊற்றிக்கொண்டு ஏமாற்றுவதை
பொறுத்துக்கொள்ள முடியாது.
" உஸ் ..அப்பாடா என்ன வெயில்?"
----------------------------------------------------
முதல் கல்
-------------------------------------ருத்ரா
பாவம் செய்த அவள் மீது
முதல் கல் எறிய
யாராவது பாவம் செய்யாதவன்
முன்னே வரட்டும்.
கடவுள் கட்டளை இட்டார்.
யாரும் முன் வரவில்லை.
கனத்த மவுனம் தான் நீடித்தது.
திடீரென்று
அவர் நெற்றியில்
ஒரு கல் எறிய பட்டது.
ரத்தம் வழிந்தது.
பாவத்தை படைத்தவன் மீது
அந்த பாவமே
கல் எறிந்து கொண்டது.
சிரித்துக் கொண்டே
அவர் நடக்கத் தொடங்கினார்.
----------------------------------------------------
கூச்சல்கள்
-------------------------------------------ருத்ரா
கேள்வி கேட்கத் தெரிந்த
மிருகமே
மனிதன் ஆனது.
மனிதனால் மட்டுமே
கடவுளையும்
கேள்வி கேட்க முடிந்தது.
கேள்வியும் மனிதனே
விடையும் மனிதனே
என்ற
அறிவு மட்டுமே
இங்கு "கடவுள்" ஆனது!
மற்றவை எல்லாம் வெறும்
கூச்சல்கள் ஆனது.
-------------------------------------------------
மனிதா
அறிவின் உச்சாணிக்கொம்பில்
நின்று எப்படி
இந்த அறிவின்மையை
கொடி கட்டி
வாழ்த்துப் பா பாடுகின்றாய்?
கேட்டால்
மெஷின் லேர்னிங்க்
என்று
பொம்மலாட்டம் நடத்துகிறாய்.
கணித நுட்பங்களும்
அறிவியல் கோட்பாடுகளும்
சந்தை மொழியின்
கணினி எந்திரங்களில்
லாபச் சக்கைகளை
கோடி கோடிகளாய்
குவிப்பது மட்டும் தானா
உன் குறிக்கோள் ?
மனிதம் மக்கிய
குப்பைகளைக் கொண்டு
நீ செய்த
செயற்கை மூளைகளும்
செயற்கைக் கடவுள்களும்
அதோ!
I
தேர்தல்.
----------------------------------------ருத்ரா
கரடு முரடாக
கணினிகளின்
காட்டாறு
துரத்துகிறது.
ஆற்றின்
மேலோட்டத்தில் நின்று
ஓநாய்கள் கூச்சல் இடுகின்றன...
ஓட்டுகளுடன்
கீழ் ஆற்றில் நிற்கும்
ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து
"நீங்கள் நீரை
அசுத்தப்படுத்துகிறீர்கள்".
---------------------------------------------------
நம் ஜனநாயகம்
சுடு காட்டு சிதையில்
வைக்கப்பட்டு விட்டது
என்பதை
"சண்டிகார் "
காட்டிவிட்டதே.
அப்புறம் என்ன
இந்த
"கருத்துக்கணிப்பு"
குருட்டாட்டங்கள் ?
தராசு முள்
வெற்றி என்று
சொன்ன போதும்
நம் நம்பிக்கைகள்
அந்த
மார்ச்சுவரிக்குள் தானே
கிடக்கின்றன ?
-----------------------------------------------
ருத்ரா
தமிழ் வாழ்க
----------------------------------------
சொற்கீரன்.
தமிழ் வாழ்க
என்று கத்திய
ஈசல் கூட்டம்
இறகுகள்
உதிர்த்தது தான்
மிச்சம்.
காதலின் நுண்தொகையான
அந்த "குறுந்தொகை"
வரிகளில் உள்ள
மொழியின் ஓர்மையில்
உணர்வின் கூர்மையில்
என்றாவது
சிலிர்த்தது உண்டா ?
"கல் பொரு சிறு நுரை..."
எனும் சொல்லோட்டத்துள்
ஊர்ந்து பார்த்தது உண்டா?
அரக்கு மாளிகை
----------------------------------------ருத்ரா.
எப்படி
சுத்தி சுத்தி வந்தாலும்
ஓட்டுக்கான "வசந்த விழா"
விரைவில் தொடங்கி விடும்.
பல கட்டங்களில்
பகடைக்காயாக
மக்கள் உருட்டப் படலாம்.
அந்த பழைய சகுனிகள்
அதர்மமாய் பகடை
உருட்டியிருக்கலாம்.
ஆனால்
இவர்களின் பகடைகளே
அதர்மம் தான்.
சாதிகள் வர்ணத்தீ
மூட்டிக்கொண்டதில்
மனிதம் சாம்பலானது.
மூட்டிய தந்திரங்கள்
மந்திரங்களில்
மகுடம் சூட்டிக்கொண்டு
ஆள வந்திருக்கிறது.
அதே பட்டன் தான்.
அதே தட்டல் தான்.
இந்த மாயக்குதிரையை
தகர்த்து எறியுங்கள்.
உங்கள் வரலாறுகள்
தொலையும் முன்
உங்கள் வழிகளை
மீட்டெடுங்கள்!
-----------------------------------------------
வாக்காளப் பெரு மக்களே!
நம் ஓட்டை கம்ப்யூட்டரின்
ஓட்டு எனும் பாஸ்வேர்டு
உங்களிடமே.
இதை ஓட்டுகின்ற
மண் குதிரை ஜனநாயகமும்
உங்களிடமே.
உங்கள் எதிர்க் குரல்களின்
குரல் வளையை குறி வைக்கும்
ஏவல் எந்திரங்கள்
அவர்களிடமே.
உரிமைக்குரல் உங்களிடமே.
எந்த உரிமை என்று
நீங்கள் நினைக்கும் உரிமையை
நினைக்க வைப்பது
அவர்கள் உரிமை.
அவர்கள் ஊடகங்களில்
அவர்களுக்காக
அவர்கள் கருத்துகளில்
புழுக்களாக
நெளிந்து கொண்டிருக்கும்
உரிமை மட்டுமே உங்கள் உரிமை.
-----------------------------------------------------
ருத்ரா.
"சங்கச்செம்மல்" விருது பெறும்
பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர்
ப.பாண்டியராஜா அவர்களுக்கு
ஒரு வாழ்த்து மடல்
----------------‐---------------------------------------
சொற்கீரன்.
சங்கத்தமிழா?
அப்படியும் ஒரு தமிழ் இருக்கிறதா?
என்று
தமிழனின் வரலாற்று மிச்ச சொச்சம்
ஒரு இருளில் மண்டிக்கிடக்கும் போது
மின்னல் வெட்டாய்
தங்கள் "தொடரடைவுகள்" எனும்
படைப்புகள் மூலம்
பேரொளி பாய்ச்சிய
தமிழ்ஞாயிறே!
எங்கள் நெஞ்சங்களில்
தமிழின் ஆயிரம் இமயங்கள்
விம்மிப் புடைக்கும்
ஒரு பெருமிதத்தை
நல்கி விட்டீர்களே!
நன்றி நன்றி
கோடி நன்றி தங்களுக்கு!
அந்த பனை ஓலைகளில்
புதைந்து கிடந்த
தமிழின்
"கிம்பர்லி"வைரங்களை
சுடர் விடும்படி எங்களுக்கு
தந்து விட்டீர்கள்.
இல்லாவிட்டால் நாங்கள் அந்த
கூச்சல் மொழி ஈசல்கள் போல
இறகு உரிந்து கிடப்போம்.
மீட்டுத் தந்தீர்கள் உயர்
வானத்து நம் செந்தமிழை !
-------------------------------------------------
சன்னல் திரைச்சீலைகள்
ஆடுகின்றன
சலங்கை கட்டிக்கொள்ளாமல்.
என்ன வந்தது அவைகளுக்கு?
கோபம் தான்.
மாமிச நாற்றம் பிடித்த
வில் அம்புகளால்
தீட்டு இல்லையாம்
வேட்டுவனின்
எழுத்தாணி உமிழ்ந்த
எழுத்துக்களாலும்
தீட்டு இல்லையாம்.
வால்மீகியே
உன்னைக்கொண்டல்லவா
உன் வழிவந்த அந்த
மானிட இழையையே
வெட்டி முறிக்கின்றார்கள்.
"ஆமாம்
என் கதாநாயகனையே
இவர்கள்
என்ன பாடு படுத்தினார்கள்?
இவர்கள்
என்ன காரணம் வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளட்டும்
அந்த சரயு நதியில்
அவன் தற்கொலை
செய்து கொண்டதற்கும்
அந்த மன உளைச்சல்களே காரணம்
அந்தக் கண்ணீர்
ஒரு ஊழித்தீயாக
அம்பு விடத்தான் போகிறது.
நான் எழுதாமல் விட்ட
கடைசி வரிகளும்
அவையே தான்.
-------------------------------------------------
ருத்ரா.
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு.
எங்கும் சுதந்திரம்......
எங்கும்.....தந்திரம்....
எங்கு....ந்திரம்....."
கிராமஃபோன் பொட்டியில
ஊசியை மாத்துங்கபபா..
ஊசிப்போனது ஊசியில்லே.
உளுத்துப்போன
சாதி மத பேதங்கள்.
-----------------------------------------
ருத்ரா.