வியாழன், 25 ஜூலை, 2024

ஏலியன்களின் ஏளனச்சிரிப்பு

 


ஏலியன்களின் ஏளனச்சிரிப்பு
________________________________________
எப்சி.



எதற்கு இந்த மானங்கெட்ட பிழைப்பு?
யார் கேட்டது இதை?
யார் குரல்?
இது எல்லா இடத்திலும்
எதிரொலித்தது.
என்ன இது?
ஒன்றும் புரியவில்லை.
ஊடகங்கள் புலம்பின.
விண்குழல்கள்
(ஆமா...அந்த யூ டியூபுகள் தான்)
அலறின.
கோவில்களில் விசேஷ பூஜைகள் யாகங்கள்.
யாருடைய மானத்தைப்பற்றி
யாருக்கு இங்கு அக்கறை?
குறும்புத்தனமான அரசியல் வாதிகள்..
குழப்பம் செய்யும் இல்லூமினாட்டிக்கும்பல்கள்...
இவர்கள்
யாரேனும் கிளப்பியிருப்பார்களோ?
போலிங் பூத்துகள் அருகில் தான்
இது கேட்டுக்கொண்டே இருக்கின்றனவாம்.
அப்படியா..
அப்படி என்றால்
எதிர்க்கட்சிகளின் சேட்டைகள் தான்
என்று பரபரப்பு செய்திகள்.
ஏதோ வடநாட்டில் ஒரு மூலையிலிருந்து தான்
எல்லா இடத்துக்கும்
இந்தக்குரல் பரவியிருக்கிறதாம்.
ஒரு வழியாய்
எம் எஸ் என் செய்தியில்
விவரம் வந்து விட்டது.
அந்தக்குரலின் ஒலி அலையை
டி சைஃபர் செய்தார்களாம்.
எங்கோ மில்லியன் ஒளியாண்டு தூரத்திலிருந்து
நம் கோள் மாதிரி உள்ள கோளிலிருந்து
இப்படி கோள் மூட்டி இருக்கிறார்களாம்
ஏலியன்கள்.
நாங்கள் உங்களைப்போலவே ஊடுருவிக்கொண்டு
உள்ளே புகுந்திருக்கிறோம்
என்று
உலகத்தின் ஒருபல்கலைக்கழக
ஆராய்ச்சி அறிக்கை ஒன்று கூறுகிறதே
அதைக்கேட்டுமா உங்களுக்கு
சுரணை வரவில்லை?
"ஆலிவுட்டுக்காரன் தான் ஊசிப்போனகதைகளை
கம்பியூட்டரில் முக்கியெடுத்து
படம் பண்ணி ஏமாத்துகிறான் என்றால்
நீங்களும்
அந்த துரோண அஸ்வத்தாமா
ஊசல் சமாச்சாரங்களை
புரட்டு புளுகு எண்ணெயில்
பொரித்து எடுத்து
வசூல் தந்திரங்களை
காட்டிக்கொண்டிருக்கிறீர்களே..."
அந்த ஏலியன்களின் ஏளனச்சிரிப்புகள்
நிற்கவே இல்லை.
_____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக