திங்கள், 29 ஜூலை, 2024

பெருங்கவலை

 பெருங்கவலை

_____________________________

ருத்ரா



நீ எதையாவது 

எழுதித்தான் தீரவேண்டும்

என்று இங்கு

யாருக்கும் ஏக்கம் இல்லை.

வம்புக்காய்

அந்த விசைப்பலகையில் 

தட்டுகிறாய்.

இல்லை அந்த காகிதத்துக்கும்

பேனாவுக்கும் 

கட்டாயக்கல்யாணம் 

செய்து வைக்கிறாய்.

எத்தனை சொன்னார்கள்.

எத்தனை எழுதினார்கள்.

இது 

ஏதோ இனம்புரியாத 

தினவுகளின் காடுகள்.

இந்த இருட்டுக்காடுகளில்

சூரியனின் பிய்ஞ்சு போன 

முக தரிசனங்களில்

முகங்கழுவிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த சமுதாயத்தை

நீ தான் வந்து திருத்தவேன்டியதில்லை.

அதன் நெருக்கடியை அதுவே

தீர்த்துக்கொள்கிறது.

முடியாமல் போகும்

முனையின் விளிம்புக்கு வரும்போது

அதுவே 

கொப்பளித்துக்கொள்கிறது...

ஆஆங்க்..

இதோ நான் எங்கோ

எச்சில் போல் உமிழப்படுவது 

தெரிகிறது.


____________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக