திங்கள், 1 ஜூலை, 2024

துக்கடாக்கள்

 துக்கடாக்கள்

________________________________________________




ஒவ்வொரு கவிதையும் 

கவிஞனின் கழுமரம் தான்

ஒரு லைக் கூட‌

கிடைக்காத வரை.

____________________________________

நொந்தலாலா.


கையில்

கீ பேடு இருக்கிறது

என்பதற்காக

எழுத்துக்களை கசாப்பு

செய்து கொண்டிருப்பவனே

டிஜிடல் கவிஞன்.

_____________________________________

நொந்தலாலா.


சொற்களை

முறித்து வெட்டி நீட்டி

அப்புறம்

மின்னலைக்குழைத்து

தேன் பூசி

"அவள்" என்ற‌

சொல்லையும் சேர்த்து

அந்த எலும்பு முறிவுகளுக்கு

மாவுக்கட்டு போட்டேன்.

ஆகா!ஓகோ!

என்றார்கள்.


ஒரு காதல் கவிதை

_____________________________________

நொந்தலாலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக