திங்கள், 1 ஜூலை, 2024

பரிணாமங்கள்


பரிணாமங்கள்.

--------------------------------


சாமிகள் ஏன்

சாமிகளை கும்பிடவேண்டும்?

மக்களே

"கோடிக்கால் பூதமாக" அவதாரம் 

எடுத்த சாமிகள்.

இந்த சாமிகளுக்கு 

வேறு சாமிகள் எதற்கு?

இப்போது புரிகிறதா

எதற்காக நமக்கு இத்தனைக்கோவில்கள்?

மக்கள் என்று 

ஒன்று திரண்ட ஆற்றலை

உடைப்பதற்கு 

உருவான சூழ்ச்சிக்கூடங்களே இவை.

மக்களே

உங்களுக்குத்தேவை பள்ளிக்கூடங்களே.

இந்த பஜனைக்கூடங்கள் அல்ல.

பக்தி

என்று நீங்கள் தினம் தினம் 

காய்ச்சும் சாராயங்களே

உங்களை சாக்கடை ஆறுகளில்

மூழ்கடிக்கின்றன.

அறிவின் புதிய புதிய 

பரிணாமங்களே

உங்கள் 

வாழ்க்கைப் பட்டறைகள்

‐---------------------------------------------

ருத்ரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக