வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நிழல்கள்


















































நிழல்கள்
================================================ருத்ரா இ பரமசிவன் 

பூமியில் படர்ந்த மச்சங்கள்.
சூரியன் பச்சை குத்துகிறேன் என்று
பச்சை மரங்கள் வழியே
பதிந்த கிளை இடுக்குகளின்
சுவாசங்களாய் விழுந்த 
நுரையீரல் சிப்பங்கள் இந்த நிழல்கள்.
வெயிற்கேற்ற நிழலுண்டு என்ற‌
இனிய கவிதையின் 
கவிமணித்திருமுகங்கள் இவை.
போகலாம் இருங்கள்.
உங்களுக்கு கிடைக்கும்
அந்த கோடி ரூபாய்கள் அங்கே
இருக்கும் கவலை வேண்டாம்.
கோடும் கிளையுமாய்
இந்த உயிர்ச்சித்திரங்கள்
எத்தனை கோடி பெறும்.
அனுபவியுங்கள் சக பயணிகளே
அனுபவியுங்கள்!

=============================================

"டி.எஸ் எலியட் எழுதிய "உள்ளீடற்ற மனிதர்கள் ..."(4)






"டி.எஸ் எலியட் எழுதிய  "உள்ளீடற்ற மனிதர்கள் ..."(4)
=================================================
ருத்ரா இ பரமசிவன்



( செப்.2. 2001 "திண்ணை" இதழில் வெளிவந்த
 என் மொழிபெயர்ப்பு கவிதையின் மீள்பதிவு )
               
( இது மொழிபெயர்ப்பு எனும் குறுகிய வடிவம் இல்லை.அந்த மகத்தான கவிஞனின் அகம் நுழைந்து அவன் எண்ணக்கீற்றுகளை நாற்றுகளாக
நடவு செய்யும்  முயற்சியே இது.)

==================================================================


இங்கே விழிகள் இல்லை.

ஒளியின் சுவடுகளும் இல்லை.

இருட்டில் நனைந்த

கருவிழிகளில்

விடியல் வெளிச்சத்தின்

வேர்கள் பாயவில்லை.

இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல.

இருளின் படுகுழி.

இறந்துகொண்டிருக்கும்

நட்சத்திரங்களை

புதைக்கத்தயாராகும்

பள்ளத்தாக்கு இது.

மரணச்சுவைக்காக

மல்லாந்து படுத்துக்கொண்டு

வாய் பிளந்து

உடைந்துகிடக்கும்

அந்த தாடைகளில்

என்ன வார்த்தைகள் எதிரொலிக்கும் ?


மனிதனின் வீடு

வெறும் 'ஃபாசில்களின் ' சாம்ராஜ்யமா ?

சந்திப்பு நிகழும் களம் இது.

ரதத சதைகளிலிருந்து

ஒளியைத் தேடுங்கள்.

சிரையும் தமனியும் சந்திக்கும்

மயிர்ப்பின்னல் குழாய்களிலிருந்து

கசியும் இரத்தத்தில்

உதிக்கும் சூாியனின்

சிவப்பைத் தேடுங்கள்.

கருப்பு இருட்டின்

ரத்தக்குழம்பிலிருந்து

மின்னல் பூக்களை பறித்தெடுங்கள்.


ஆத்மா என்றொரு

அடங்காத வார்த்தைக்குள்

அது அடைபடுமுன்

அதில் அடைந்து கொள்ளுங்கள்.

எதற்கு இன்னமும் நாம் நடுங்க வேண்டும் ?

தேடல் சகதியினுள் வீழ்ந்து

அதையே நம்மீது சுற்றி சுற்றி

ஆக்கிக்கொண்ட

புழுக்கூடு இது.

கனவுகளின் கனம் தாங்காமல்

வர்ணமயக்கங்களின்

வெக்கை தாங்காமல்

அந்த பிரபஞ்சம் ஒரு நாள்

தும்மல் போடுவது போல்

வெடித்த துடிப்புகளில்

தேடிப்பாருங்கள்.


பேசுவதற்கு நா எழவில்லை.

இந்த ஆற்றங்கரை யோரம்

ஞான ஸ்நானங்களுக்காக

காத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆறு உப்புகிறது.

வீங்கும் வெள்ளத்தில்

தண்ணீர் விடைக்கிறது.

கரை உடைப்புகளில்

ராட்சச கன்னிக்குடம்

உடைத்துக்கொண்டு

மரண ஓலங்களின் பிரசவம் !


உடல் திசுக்களுக்குள்

சின்னா பின்னமாய்

ஹிரோஷிமா நாகசாகிகள்...

கபாலக்காடுகளிலிருந்து

மீண்டும் முளைக்கப்போகும்

ஈடன் தோட்டங்கள்....

காட்சிகள் இல்லை

கண்கள் இல்லை.

அந்த கருப்பு முண்டமான

வானத்திலிருந்து

இங்கே துருவி துருவி

பார்த்துக்கொண்டிருக்கும்

அந்த 'துருவ ' நட்சத்திரம் மட்டுமே

நம் கண்கள்.

அவிந்து போகாத

நம் அமரக்கண்கள் அவை.


உதிர்ந்து போகாத

ஆயிரம் அடுக்கு இதழ்

ரோஜாப்பூ

உன் புருவமுனையில் குவிகிறது தெரிகிறதா ?

மூடுகின்ற வானம்

திறக்கின்ற ஜனனங்களின்

சாவிக்கொத்துகளை

கண்ணுக்குத் தெரியாத

அந்த விரல்களில் வைத்துக்கொண்டு

சுழற்றுவது

புலப்படவில்லையா ?

குண்டலினியை சூடேற்றி

மூளைச்செதில்களில்

தீயெரித்து தியானம் செய்ததில்

அந்த அர்த்தங்கள்

விழி திறந்தனவா ?


பரமண்டலத்து பிதாமகனுக்கு

வெட்டுக்கிளிகள் தின்னும்

இந்த குமாரன் யோவான்

காத்துக்கிடப்பது

தெரிந்து விட்டதா ?

விரியன் பாம்புக்குட்டிகள்

இரத்த நாளங்களுக்குள் பேசும்

இரகசியங்கள்

வெளிப்பட்டுவிட்டனவா ?

இந்த அந்தி வெளிச்சத்தில்

இறப்பு எனும்

இராட்சதப் பறவை இட்ட

எச்சத்தில்

மீண்டும் மீண்டும் பிறப்புகள்...!


நம்பிக்கைச்சுவடுகள்

நத்தை உழுத வரிகளாய்...

இந்த யாத்திரையில்

அங்குலம் அங்குலமாய்

கரையும் தூரங்கள்..

ஆனாலும்

விதைகளை தின்றுவிட்டு

செடிமுளைக்க

காத்துக்கொண்டிருக்கும்

உன் கனவுகளே

உன் தோள்பட்டையில் தொங்கும்

'ஜோல்னா பைகள் '..

நடை தளராதே !

உன் முழங்கால்களில்

வானம் இடறும்.

காலடியில்

நட்சத்திரக் கூழாங்கற்கள்

சர சரக்கும் சங்கீதமே

உனது உற்றதோழன்.

நடை தளராதே!



==========================================ருத்ரா இ பரமசிவன் 




(4rth part of "THE HOLLOW MEN" by T S ELIOT)


                 IV

    The eyes are not here
    There are no eyes here
    In this valley of dying stars
    In this hollow valley
    This broken jaw of our lost kingdoms
   
    In this last of meeting places
    We grope together
    And avoid speech
    Gathered on this beach of the tumid river
   
    Sightless, unless
    The eyes reappear
    As the perpetual star
    Multifoliate rose
    Of death's twilight kingdom
    The hope only
    Of empty men.

   
   =====================================================
              https://allpoetry.com/The-Hollow-Men


===========================================================


வியாழன், 29 செப்டம்பர், 2016

நாகேஷ்

நாகேஷ்
==================================ருத்ரா இ பரமசிவன்

"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"
என்ற நிகழ்ச்சிக்கு
மடி நிறைய ஒரு கோடியை
கனமான கனவாக்கி
சுமந்து சென்று அதில்
ஒரு ரூபாய் கூட வெல்லாத‌
"தருமி"யின் புலம்பல்
எப்படியிருக்கும்?
இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்
எல்லாம் எதிரொலிக்கிறது.
சிம்ம கர்ஜனையின் எதிரே
இந்த நகைச்சுவைப் பூனையின்
கணீர் கணீர் களில்
மியாவ் களை கேட்கவில்லை.
ஒரு டைகர் நாகேஷ்
அந்த மண்டபத்துத் தூண்கள்
கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.
"கேள்வியை நீ கேட்கக்கூடாது
நான் தான் கேட்பேன்"
என்ற வசனத்தில்
அந்த வெல வெலப்பு.
ஒரு பொய் மிடுக்கு
சிவ பெருமானையே
கடுப்பேற்றிப் பார்க்கும்
ஒரு துறு துறுப்பு...
இந்த நடிப்பெல்லாம்
சொல்லிக்கொடுக்க‌
கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக்கழகங்கள் எல்லாம் பற்றாது.
இவரை
அமெரிக்க ஜெர்ரி லூயிஸ்ன் நிழல்
என்பார்கள்.
ஆனால் "சர்வர் சுந்தரம்" எனும்
படத்தில் நாம் கண்டது
நகைச்சுவை....
அடக்கிச் சிரித்து அழுகை....
காதலைக்காட்டும் அற்புத நளினம்...
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்
ஒரு டைரக்டரிடமே தண்ணி காட்டி
நடிப்பு என்று அவர் தெரிந்து கொள்ள முடியாத‌
இயல்பைக்காட்டி அவரை தவிக்க வைத்தது...
இதெல்லாம்
கோடம்பாக்கத்துக்காரர்கள்
இவரிடம் தோண்டி எடுத்த கிம்பர்லி.
இப்படி
எத்தனை படங்கள்.
எத்தனை பாத்திரங்கள்.
கே எஸ் கோபாலகிருஷ்ணன்
எஸ் வி ரங்கராவ்
நாகேஷ்
...இந்த அபூர்வ‌
பெர்முடா முக்கோணம்
திரைக்கடலில்
எத்தனை சூறாவளிகளை
கிளப்பியிருக்கிறது?
ஒரு "நீர்க்குமிழியில்"
நடிப்பின் ஏழுகடல்களையும்
தளும்பச்செய்தவர்.
இவரை மறக்க முடியாது.
இவர்
ஹிட்லருக்கு முன் நேருக்கு நேர்
நிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்
ஹிரோஷிமா நாகசாகிகள்
சின்னாபின்னம் ஆகியிருக்காது.
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ்
என்று நாம் சொன்னால்
அங்கிருந்தே கத்துவார்
ஐ ஆம் செலபா யூ கோ அஹெட்ரா
......
காதலிக்க நேரமில்லையில்
பாலையாவுக்கு கதை சொல்லும்
பாணியில்
அராபிய "ஆயிரத்தொரு இரவுகளுக்கு"
அது நீண்டு கொண்டே
விலாப்புடைக்க
சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.
சொல்லிக்கொண்டே போகலாம்..
எமனின் எருமையைக்கூட இந்நேரம்
அங்கே சிரிக்க வைத்துக்கொன்டிருப்பார்.
அந்த எமன் எப்படியோ
ஆனால் இவர்
சிரிக்கவைப்பதில் எமன்.
அவர் சாகடித்தது
நம் கவலைகளைத்தானே.

===============================================================



ருத்ராவின் குறும்பாக்கள்

இன்றைய கவிதைகள்.

ருத்ராவின் குறும்பாக்கள் (2)
=============================


மறுபடியும் 
கை அரிக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்.


இந்தியாவின் நெற்றியில் 
பாகிஸ்தானுக்கு நெற்றியடி.
நம் ராணுவவீரர்கள் அதிரடி.


ராமன் தன் மீதே 
அம்பு விட்டுக்கொண்டான்.
சிறைக்குள் புதிய ராமாயணம்.


கிராமங்களில் 
மங்காத்தா.
பஞ்சாயத்து தேர்தல்.


காந்திப்புன்னகைக்கு 
பஞ்சாங்கம் குறித்தார்கள்.
தேர்தல் தேதி.

====================================













இன்று வரிசை எண்  120  (29 செப் 2016) நேரம் ..02-06 பிற் பகல்
(3 Month Traffic Rank)


பதிவரின் பெயர் : ruthraavinkavithaikal.blogspot.com
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2014-06-27
3 Month Traffic Rank : 144
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog


இன்றைய கவிதைகள்.


ருத்ராவின் குறும்பாக்கள் 
=================


மறுபடியும் 
கை அரிக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்.


இந்தியாவின் நெற்றியில் 
பாகிஸ்தானுக்கு நெற்றியடி.
நம் ராணுவவீரர்கள் அதிரடி.


ராமன் தன் மீதே 
அம்பு விட்டுக்கொண்டான்.
சிறைக்குள் புதிய ராமாயணம்.


கிராமங்களில் 
மங்காத்தா.
பஞ்சாயத்து தேர்தல்.


காந்திப்புன்னகைக்கு 
பஞ்சாங்கம் குறித்தார்கள்.
தேர்தல் தேதி.

========================================
இன்று வரிசை எண்  120  (29 செப் 2016) நேரம் ..02-06 பிற் பகல்

(3 Month Traffic Rank)





புதன், 28 செப்டம்பர், 2016

ருத்ராவின் குறும்பாக்கள்

ருத்ராவின் குறும்பாக்கள்
=========================



அரசியல் யாத்ரீகர்களின்
புண்ணியஸ்தலம்
அப்பல்லோ.



இந்த தடவை வெள்ளம் கூட‌
வந்து ஓட்டுப் போடும்.
உள்ளாட்சி தேர்தல்



காடு கெடுத்து நாடானபின்
காட்டுமிராண்டிகளே மிச்சம்.
காவிரி


கக்கூஸ் கட்ட
ஆயிரம் கோடிக்கு டெண்டர்.
பஞ்சாயத்து தேர்தல்.


சென்ற தடவை மாதிரியே
இந்த தடவையும் (அ) தர்ம யுத்தம்.
தனித்தனி கூட்டணி.

====================================


மூடு







மூடு
=============================ருத்ரா இ பரமசிவன்

விடியல் பற்றி
விடிய விடிய பேசினார்கள்.
மக்களுக்கு
விடிய மறுத்தால் என்ன
சிசேரியன் செய்து விடலாம்
என்று ஒரு கவிஞன்
புதுக்கவிதை சொன்னான்.
மக்களுக்கு வரலாறு தெரியவேண்டும்
அரசியலின் பொருளாதாரம்
தெரிகிறதே தவிர‌
பொருளாதாரத்தின் அரசியல்
தெரியவில்லையே.
காந்திகள் எத்தனையோ ஒலித்தாலும்
புன்னகை காட்டும் காந்தியை மட்டும்
இவர்கள் மறப்பதில்லையே.
அரட்டையாய் மாறி
அறையே கலகலத்தது.
ஒரு வழியாய் தூங்கிப்போனார்கள்.
ஒருவன் மட்டும் மொட்டு மொட்டு
என்று தூங்காமல் காத்திருந்தான்.
"ஏண்டா"
என்றான் மற்றொருவன்.
"அவள் நாளை மதியம் இந்நேரம்
பஸ் ஸ்டாப்புக்கு வரும் நேரமடா!
என்றான் அவன்.
"சரி..அதற்கு தூங்கினால் தானே
கனவில் நீ சந்திப்பாய்?"
"அது அப்படியில்லைடா
இது விழித்திருந்தே
தனித்து இனித்திருந்தே
காணும் கனவுடா !"
"எப்படியோ போ"
இவன் கொட்டாவியில்
சுருங்கி மடிந்து கோண்டான்.

காலைச்சூரியன்
சுள்ளென்று
சன்னல் வழியே
வரிப்புலியாய்
கம்பி நிழல்களை
சூடு போட்டு எழுப்பினான்.
"யாரப்பா சன்னலை திறந்தது?
மூடு
தூக்கம் கலஞ்சு போச்சே"
முனகியது அந்த புதுக்கவிஞன் தான்.

==============================================



செவ்வாய், 27 செப்டம்பர், 2016

என் மனதை பிய்த்துப்போட்டு












என் மனதை பிய்த்துப்போட்டு
=====================================ருத்ரா இ பரமசிவன்

என் மனதை பிய்த்துப்போட்டு
வர்ணம் குழப்பினேன்
பிக்காஸோ என்றார்கள்.
என் எழுத்தை
தலைவேறு கால்வேறு ஆக்கி
உள்ளே ஒரு சூன்யம் வைத்து
பஞ்சுமிட்டாய் சொல்லில்
தீயை அருந்தச்சொன்னேன்
புதுக்கவிஞன் ஆக்கி
மகுடம் சூட்டினார்கள்
நடைபாதையில்
ஒரு மனிதன் கந்தலாய்
கிடந்தான்
கவிதையாய் ஓவியமாய் மனிதமாய்!
அவனை
அரியணையில்
அமர்த்த எண்ணினேன்.
ஒட்டுமொத்தமாய்
நம் ஜனநாயகமாய்
காட்சி தந்தான்.
வாருங்கள்
கைத்தாங்கலாய்
அவனை அமர வைப்போம்
என்றேன்.
யாரும் வருவாரில்லை
============================================


வாழ்க்கை வாழ்வதற்கே !





வாழ்க்கை வாழ்வதற்கே !
==============================ருத்ரா இ பரமசிவன்


வாழ்க்கை என்பது
முருங்கை மரத்து வேதாளம் என்று
வெட்டி வெட்டி எறிந்தாலும்
நம் தோள்மீது அது
ஏறிக்கொண்டே தான் இருக்கும்.
வாழ்க்கையை வெறுப்பது என்பது தான்
அந்த வேதாளம்.
வாழ்க்கையை நோக்கி
வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு
எல்லா வேதாளங்களும்
அணுக முடியாமல்
ஓடியே போய்விடும்.
இப்போது எந்த‌ வேதாளங்களும்
உன் காலடியில்.

====================================

திங்கள், 26 செப்டம்பர், 2016

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!



ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
=============================================ருத்ரா இ பரமசிவன்

இந்த
நாட்டின் முதுகெலும்பு
நீங்கள் டிசைன் செய்தது.
இளைஞர்களின் மூளை
நீங்கள் பதியம் இட்டது.
நீங்க‌ள்
அக‌ர‌ முத‌ல
ஒலித்துக்காட்டிய‌பின்
எங்க‌ள் அறிவு
நீள‌மாயும் அக‌ல‌மாயும்
ஆழ‌மாயும்
பாய்ந்து சென்ற‌து.
உங்க‌ள் கையில்
சாக்பீசும் பிர‌ம்பும்
இருந்தாலும் கூட
அதில்
ச‌ங்கு ச‌க்க‌ர‌ம்
ஏந்திய‌வ‌ன் தான்
எங்க‌ளுக்கு காட்சி த‌ந்தான்.
குரு என்னும்
சுட‌ரேந்தியாய்
நீங்க‌ள்
வெளிச்சம் த‌ந்த‌தால் தான்
உங்க‌ளுக்கு பின்னால் இருப்ப‌வ‌னின்
முக‌ம் தெரிந்த‌து.
மாதா பிதா குரு..
அப்புற‌ம் தானே தெய்வ‌ம்!
வெளிச்சம்
எல்லோருக்கும்
கிடைத்ததால் தானே
எங்க‌ளுக்கு
இந்த‌ வ‌ர்ண‌ங்க‌ளும் புரிந்த‌ன‌.
இந்த‌ இருட்டும் புரிந்த‌து.
இருப்பினும்
ஒரு கேள்வி.
ஒரு ச‌மன்பாடு ஒன்றை எழுதி
தீர்வு எழுதி கொண்டுவ‌ர‌ச்சொன்ன‌
அந்த‌ ஹோம் ஓர்க்
இன்னும் ஹோம் ஒர்க் ஆக‌வே
இருக்கிற‌து!
மக்கள் இஸ் ஈக்குவல் டு ஜனநாயம்
என்பதே அந்த சமன்பாடு.
பொதுவான‌ ம‌க்க‌ள் ஒரு சுநாமி.
அதில்
த‌னியான‌ “ஒரு”ம‌க்க‌ள் யார்?
ஏனெனில்
நாங்க‌ள் வெளிச்ச‌ம் என்று நினைத்து
அறுப‌த்தைந்து ஆண்டுக‌ளாய்
ஜனநாயகத்தை விதைக்கிறோம்.
ம‌க‌சூல் என்று பெறுவ‌தோ
பேரிருள் தான்.
நீங்க‌ள் எழுதிக்கொண்டு வ‌ர‌ச்சொன்ன‌
தீர்வு
உங்க‌ளிட‌மாவ‌து இருக்கிற‌தா?
தெரிய‌வில்லை.
ஆச்ச‌ரிய‌மாக இருக்கிற‌து.
இந்த‌ ஆச்சரிய‌ம் தான்
“ஆச்சார்ய‌ தேவோ ப‌வா”வா?

===============================================

09 செப்டம்பர் 2012 ல் எழுதியது.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

மெரீனா






மெரீனா
=============================ருத்ரா இ.பரமசிவன்

ஈசல்கள் குவிந்தன‌
வெளிச்சம் தேடி.
புழுக்கத்தின் புழுக்கூடுகள்
இங்கு வந்து
சிறகு விரித்து தென்றல் அருந்தி
கூட்டை சிதைத்து எறிந்தன.
ஆனாலும்
அந்த மணல்துளிகளை
எண்ணி எண்ணி
பொழுது போவது தெரியாமல்
காதலின் கைக்குட்டையில்
வானத்து நட்சத்திர மண்டலங்களை
பொட்டலம் போடும்
விளையாட்டில்
மும்முரமாய் இருக்கும்
இளந்தளிர்கள்
அந்த மணலில்
கனவு மரங்களை
நட்டு
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கு நடப்பது
வாழ்க்கைக்கு ஒத்திகையா?
அல்லது
வாழ்க்கையையே ஒத்திவைப்பதா?
துடிக்கும் மீன்களுக்கு அந்த‌
தூண்டிற்பொன்னை அங்கே வீசியது யார்?

============================================




பேய்















பேய்
==================================ருத்ரா

ஆற்றங்கரை மருத மரம்.
அடியில் நான்
கற்சிலையாய்
மரத்தின் கிளை ஆடும் நிழலை
ஆற்றில் சுழிப்பில்
பார்த்து பார்த்து
காலத்தருணங்களோடு
என்னை நெசவு செய்து கொண்டேன்.
நிழல் கையாட்டி விடை கொடுப்பது
தெரிந்தது.
வளையல்களுடன்
அதன் ஒலிகளுடன்....
இறுதியாய் குமிழிகளுடன்.
அவளை காப்பாற்ற‌
அவளோடு மூழ்கிபோகாத‌
கோழையாகிபோனேன்.
என் வாழ்க்கை மிச்சத்தை
ஒரு எலும்புக்கூடாக்கிக்கொண்டேன்.
காலம் இதையும்
ஒரு "நோவாக்கப்பல்" ஆக்கியது.
பிரளயத்தில் மிதந்து கொண்டு தான் போகிறேன்.
சிரிப்புகள் கூத்துக்கள் அதன் கூடுகள்
குஞ்சுகள் சிறகுகள்
எல்லாமே ஒரு தேசம் ஆகியது.
ஆனால் வெறுமையின் தேசம்.
அவள் சிரிப்பு மட்டும்
எங்கிருந்தோ இன்னும் கேட்கிறது.
உற்றுக் கேட்டு
கூர்மையாய் நான் கரைந்தே போனேன்.
மருதமர கிளையும் இலைகளும்
எதேதோ பேசின.
அப்பா..என்னப்பா?
பேசவே மாட்டேங்கிறே..
என் மடியில் இருந்த என் குழந்தையின்
குரல் இது..
ஐயோ இவ்வளவு நேரம்
குழந்தை திக்கு முக்காடிப்போயிருப்பாளே!
இறுக்க அணைத்துக்கொண்டு
முத்தங்கள் பொழிந்தேன்.
குழந்தை இப்போதும்
திக்கு முக்காடிப்போயிருப்பாளோ!
அந்த இடைவெளி எனும்
காலப்பிசாசு
செத்தொழியட்டும்
இந்த முத்தங்களின் குத்தீட்டிகளில்
செத்தொழியட்டும்.
ஹா..ஹா..ஹா..ஹா
என் சிரிப்பைக் கண்டு குழந்தை பயந்தாள்!
"அப்பா என்னாச்சு?"
"ஒண்ணுமில்லம்மா..சும்மாதான்.
ஒரு குஷியிலே தான்"
............................................
"ஹா..ஹா...ஹா..ஹா.."
"பயந்துட்டியா அப்பா?
நானும் குஷியில‌ தான்!"

==================================================

காதலும் கத்தரிக்காயும்






காதலும் கத்தரிக்காயும்
==================================ருத்ரா இ பரமசிவன்.

காதலித்து பார்
வாழ்க்கை புரியும் என்றார்கள்
வாழ்ந்து பார்
காதல் புரியும் என்றார்கள்
காதல் வாழ்க்கை புரிந்தது.
வாழ்க்கை காதல் புரியவில்லை.
வாழ்க்கையை எப்படி காதலிப்பது?
வாழ்க்கை என்பது
ஜனன -மரணக்கணக்கு.
காதல் என்பது
மரண-ஜனனக்கணக்கு
செத்து செத்து பிறப்பது காதல்.
பிறந்து பிறந்து சாதல் வாழ்க்கை.
போதும் நிறுத்துங்கள்.
காதலும் வேண்டாம்.
கத்தரிக்காயும் வேண்டாம்.
====================================

வியாழன், 22 செப்டம்பர், 2016

"அந்த கனத்த சட்டப் புத்தகம்" (அண்ணல் அம்பேத்கார்)




Dr. Bhimrao Ramji Ambedkar
Ambedkar as a young man
      https://en.wikipedia.org/wiki/B._R._Ambedkar



"அந்த கனத்த சட்டப் புத்தகம்" ( அண்ணல் அம்பேத்கார்)
======================================================
ருத்ரா இ பரமசிவன்.




பிறந்ததினம் அன்றைக்கு மட்டுமே
கொண்டாடினால் போதும்
என்று நினைத்தால்
மற்ற நாட்கள் பூராவும் இருட்டில் தான்
தடவிக்கொண்டிருக்க வேண்டும்.
பிறந்ததினம் அன்றைக்கு மட்டுமே
கொண்டாடினால் போதும்
என்று நினைத்தால்
மற்ற நாட்கள் பூராவும் இருட்டில் தான்
தடவிக்கொண்டிருக்க வேண்டும்.
ஆம் !
அம்பேத்கார் எனும் புதுயுகச்சூரியனை
என்றைக்கும்
நம் நெஞ்சில் ஏந்திக்கொள்ளவேண்டும்.


ஒரு சுதந்திரத்தின் கருவறையில்
இன்னொரு சுதந்திரத்தின் கல்லறையும்
கட்டிவைக்கப்பட்டிருந்த
விசித்திர  வரலாறு கொண்டது
நம் இந்திய தேசம்.
மனிதனை மனிதன் கைகுலுக்கிக்கொள்ளும்
மானிடப்பூவின் மாணிக்க மகரந்தங்கள்
இந்த உலகத்தின் காற்றையே
தூய்மைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்
இங்கு மட்டும் "தொட்டால் தீட்டு"
என்று அநாகரிகத்தின்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்ததே!
அதில் வெளிப்பட்ட சிந்தனைச்சீற்றத்தின்
விடியல் "உருவகமே" அண்ணல் அம்பேத்கார்!
மூவர்ணக்கொடியேந்தி சுதந்திரத்தின்
மூச்சுக்காற்றை முழங்கியவர்களின்
நரம்புப்புடைப்புகளில் எல்லாம்
நாலு வர்ணம் அல்லவா குதித்தோடிக்கொண்டிருந்தது.
தளை என்றால் தமிழில் "கட்டு"என்று பொருள்.
அப்படித் தளையில் தளைக்கப்பட்டு கிடக்கும்
கருஞ்சிறுத்தைகளின் கட்சியைத்தான்
தலித்துகளின் புதிய யுகமாய் திரட்டியவர் அம்பேத்கார்.
தலித் எனும் சிங்க மராட்டியனின் அந்தக்கவிதையில்
தமிழின் விடுதலைத்தாகமும் இருந்தது என்பது
இன்றும் நாம் காணும் உண்மை.

துப்பாக்கித் தோட்டாவுக்கு
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா? என்று
மதக்கொழுப்பு கொழுந்து விட்டு எரிந்ததில்
ஒரு சிறு பொறியே
நம் நாட்டின் விடுதலைத்தீ வெள்ளத்தை
கர்ப்பம் தரித்தது..அதை
அற்பம் ஆக்க வந்ததே சாதீயின் ஆதிக்கம்.

சாதிக்கொடுமையை
சான்றோர்களே தவறு என உணர்ந்து கொள்ளச்செய்து
தன் ஓங்கி உலகளந்த கல்வியால்
சட்டமும் பொருளாதாரமும் கற்றுத்தேர்ந்த‌
மாமேதை நம் அம்பேத்கார்.

மேன்மை மிக்க
நம் முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்கள்
கனவு காணுங்கள் என்று
சரியாகத்தான் சொன்னார்.
இன்னும் தழல் வீசும் அந்தக்கனவே
வெள்ளயனுக்கு
"சிப்பாய் கலகம்" என்று
சின்னத்தனமாய் தெரிந்த அந்த நெருப்பு
பாரதியார் கவிதையில்
அக்கினிக்குஞ்சு அல்லவா!
வெந்து தணிந்தது காடு.
வேகாமல்
மானிட தர்மத்தை இன்னும்
சாகடிக்கப்பார்ப்பதே
சாதி மதங்கள்.
நாலாம் கிளாஸ் மாணவன்
ஏதோ "இம்போசிஷன்"எழுதுவது போல்
வருஷம் தோறும் வந்து போவது அல்ல‌
"அம்பேத்கார்" எனும் பெயர்.
இதன் கனலும் கனவுமே
இன்னும் வாக்குப்பெட்டியின் உள்ளே
மண்டிக்கிடக்கும்
நூலாம்படைகளை "தூய்மை"ப்படுத்த முடியும்
என்பதே இன்றைய யதார்த்தம்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும்
தேர்தல் எனும் கும்பமேளாவுக்கு
"கரன்சியாபிஷேகம்"கொண்டு
கும்பாபிஷேகம் தடபுடல் படும்
நம் அரசியல் அவலங்களின் நோய் தீர்க்கும்
அருமருந்து
"மானிட நேயப் பார்வை" மட்டுமே.
அம்பேத்கார் எனும் புதிய யுகம்
ஆளுயர மாலைகளுக்குள்
அமிழ்ந்து போவது அல்ல.
இந்த சமுதாயப்ரக்ஞையின்
ஞான சூரியன்
வாக்குப்பெட்டியில் உதயமாவதை
அதே வாக்குப்பெட்டியில்
அடைக்கப்பெட்டிருக்கும்
அஞ்ஞான மேகங்களே
மறைத்துக்கொண்டிருக்கின்றன.
சமநீதியின் பளிங்குத்தடாகத்தில்
முதல் கல்லெறிந்து
காயப்படுத்த முற்படும்
பால் தாக்கரே சிந்தனைகள்
நம் பாரதத்தை மீண்டும்
பாதாளத்தில் வீழ்த்த நினைக்கும்
பாதகங்கள் ஆகும்.
அதனால் அனல் மிகு சீற்றத்தோடு
உச்சரிக்கப்பட வேண்டிய பெயர்
"அம்பேத்கார்"

கங்கையைக் கொண்டு
கண்ணில் கண்டதையெல்லாம்
சுத்தப்படுத்திய
அந்த சனாதனிகளின் கங்கையை
சுத்தப்படுத்தியது
அந்த கனத்த சட்டப்புத்தகம் மட்டுமே.
அந்த கறுப்புத்தங்கத்தின்
கை பட்ட புத்தகம் அல்லவா அது!
அந்த அரசியல் சாசனம் மட்டுமே தந்தது
தாழ்த்தப்பட்ட்டவர்களுக்கு சரியாசனம்.

ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!

======================================================================
ஏப்ரல் 19. 2015 ல் எழுதியது




புதன், 21 செப்டம்பர், 2016

பிம்பம்


பிம்பம்
===================================ருத்ரா

இது உலகம் அல்ல
உன் பிம்பம்.
அங்கு தெரியும்
உன் முகமே
உன் வாழ்க்கை.
உற்று ப்பார்த்து
உன் மீசையை
சரி பார்த்துக்கொண்டதெல்லாம்
போதும்!
உன் வீரம் காட்ட
வாள் சுழற்றியதும்
போதும்.
இந்த துப்பாக்கிக்குண்டுகளா
உன் வாழ்க்கை?
சாதி மாதங்கள்
உன் பார்வையை மறிப்பது
உன் பார்வைக்குள்
வரவில்லையா?
மரணங்களை
தினந்தோறும்
உன் மீதே காறி உமிழும்
காட்டுமிராண்டியாய்
காட்டுவதற்கா
இங்கு முகம் பார்த்தாய்?
சகிக்கவில்லை!
எங்கே உன் மனித முகம்!
சமாதானபூங்கொத்தோடு
ஒரு சரித்திரத்தின்
முகம் காட்டு.
போ!
ரத்தக்கறை
படிந்த உன் முகத்தை
கழுவிக்கொண்டு வா!

===============================

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

முரண்பாடுகளே அழகு.





முரண்பாடுகளே அழகு........................ருத்ரா
======================================


புரிதல்!
எதை வைத்து
எதை புரிவது?
அந்தக்கூவத்தில்
ஊறி பாதி அழுகிய‌
தென்னை மட்டை
புரிந்து கொண்டது
தென்னையையா?
அந்த கூவத்தையா?
எந்த மொழி
இங்கே 
அடையாள சத்தங்களை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது?
சமஸ்கிருதத்துள் தமிழா?
தமிழுக்குள் சமஸ்கிருதமா?
சிவனா?விஷ்ணுவா?
கல்லுருவின்
கர்ப்பப்பைக்குள்
முண்டிக்கொண்டு
முனை கூட்டுவது.
அதோ
அந்த ஈழச்சகதியில்
மூழ்கிப்போனது
துப்பாக்கியா?
தாகமா?
எங்கும் எதிலும்
இந்த‌
ஒத்தையா ரெட்டையா
விளயாட்டு தான்.
வேறு எல்லாவற்றையும்
அப்பால் வையுங்கள்.
இந்த இருட்டுப்படலத்து
வானம்
திடீரென்று
ஒரு பிறையை
ஞானவெளிச்சமாய்
தருகிறதே
அதில் கூட‌
எல்லாப்புள்ளிகளும்
கோடுகளும் தெரிகிறது.
ஒரு கோதண்டமும்
சூலமும்
அடர்த்தியான‌
இருட்கடலை
குத்திக்கிழித்து
ஒளிப்பிரளயம் 
உண்டு பண்ணுகிறதே!
ஏதோ 
எறும்புகளின் ஊர்வலம்
என்று இருந்தவன்
அது
திரும்பிவரவே இயலாத‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு
போகிறது என்றும்
அதுவே
இந்த உலகத்தை எல்லாம்
நசுக்கிக்கூழாக்கும்
மரணம் எனும்
கனமான சொல் என்று
புரிந்ததும்
அந்த வலிக்கு
ஒரு மரணம் கண்டுபிடிக்க‌
ஆசைகளை களைந்து எறி
என்றானே
அந்த அரசமரத்து முனிவன்.
அந்த புரிதலில் கூட‌
ஆயிரம் பௌர்ணமிகள்
ஒன்றாய் திரண்டு
வெளிச்சத்தை
"பிளிறின".
வெறும்
உடலையும் ரத்தத்தையும்
கொண்டு செய்யப்பட்ட ஆடுகளே
உங்கள்
வெளிச்சத்தின் மேய்ப்பர்
வந்து விட்டார்..
ஆம்.
மனிதர்களே
ஒருவர் தலையை
ஒருவர் வெட்டிக்கொள்வதில்
மிஞ்சப்போவது
ஒரு முண்டத்தின்
பரமண்டலமா?
இல்லை..இல்லை..
என் மார்பில்
தலையில்
ஆணி அடித்தாலும்
ஆணித்தரமாக‌
இதை மறித்துச்சொல்வேன்..
இன்னும் இன்னும்
இந்த 
புரிதல் காடு
அடர்த்தியானது.
அந்த ராபர்ட் ஃப்ராஸ்ட்
சொன்னது போல்
அந்தக் காடு அழகானது.
ஆனாலும்
நாத்திகத்தின்
ஒவ்வொரு மைல்கல்லாய்
பயணம் தொடருங்கள்.
அல்லது
ஆத்திகத்தின்
பன்னீர்க்காவடிகள்
பால் காவடிகளில்
பயணம் தொடருங்கள்.
ஆனால்
நிச்சயம்
அது
நீங்கள்
எதை வைத்துப்
புரிதல் செய்கிறீர்களோ
அதற்கு
எதிரானது தான்.
இந்த முரண்பாடுகளே அறிவு.
இந்த முரண்பாடுகளே அழகு.
இந்த முரண்பாடுகளே வாழ்வு.

===================================ருத்ரா
14 DECEMBER 2013

திங்கள், 19 செப்டம்பர், 2016

யானை





யானை
========================================ருத்ரா இ பரமசிவன்.

இங்கே கொலை.
அங்கே கொலை.
கொலைக்குள் ஒரு தற்கொலை.
தற்கொலைக்குள் ஒரு கொலை.
சாதிக்காரணம்.
அரசியல் காரணம்.
காவிரித்தண்ணீர்.
ஈழம்.
தமிழ் என்னும்
ஆயிரம் ஆயிரமாய்  பிணங்கள்.
ஈக்களும் மொய்க்கின்றன‌
ஊடகங்களாய்.
சினிமாக்களிலும்
சமுதாய உடல்களின்
மார்ச்சுவரி இருட்டுகள்.
நீதி மன்றங்களும்
அப்போதைக்கப்போது
மரச்சுத்தியல் தட்டுகின்றன.
வாய்தா.
ஜாமீன்.
மறுபடியும்
மறுபடியும்
சக்கரம் சுழல்கிறது.
மண் புழுக்கள் நசுங்குகின்றன.
மணற்கொள்ளை.
வீடு புகுந்து
கொள்ளை கொலை.
கிரானைட்டை வெட்டி எடுக்கிறேன்
என்று சொல்லி
மலைகளை எல்லாம்
மாமிசம் போல் அறுத்து விற்பனை.
பணம் குவிகிறது.
அதன் நிழலே
நம்மை எல்லாம் அசையாமல்
தின்கிறது.
அந்த ராட்சசப்பறவை
சிறகடிக்கிறது.
சட்டம் ஒழுங்குக்குப்பின்னால்...
ஒழுங்கு சட்டத்துக்குப் பின்னால்...
சட்டம் ஒழுங்கு
நம் வேதம்.
நம் வேதாளம் எல்லாம்...
இதனூடே
தேர்தல் ஆணையம் எனும்
மந்திரக்கோல்
ஒரு யானையிடம்
மாலையைக்கொடுத்து
போடச்சொல்கிறது.
அது
மாலையா?
மலர்வளையமா?
இந்த ஜனநாயகம் விறைத்துக்கிடக்கிறது.

===================================================

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம். (3)




புகைப்படம் ..நன்றி..."விக்கிபீடியா "   https://en.wikipedia.org/wiki/Na._Muthukumar




நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம். (3)
=========================================
ருத்ரா இ பரமசிவன்





கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார்.
அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும்
அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை.

====================================ருத்ரா இ.பரமசிவன்.






"ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்"



பால் வடியும் சிறு பருவ மகள்
பால்வெளி மண்டலமாய்
படர்ந்து சிரிக்கின்றாள்.
மகிழ்ச்சி வானம் நரம்பின் இசையை
மண்ணில் தெளிக்கிறது.
கவிதை வழியே உன்
கண்கள் மாட்டிக்கொண்டாய்.
கரடு  முரடு மலையின்  முகடு
காட்சி சுவடு உன் கண்களுக்குள்
அவள்  சித்திரப்புன்னகையாய்
எங்கும் எங்கும் சிந்திநிற்கும்!



"அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்"



சினிமாவுக்காகவா இதை எழுதினாய் நீ?
திடீர் மழையில் உன்னைச்சுற்றி
ஆயிரம் காளான் குடை கள்!
அன்பை நீட்டி அந்த வானப்பூ
மத்தாப்பு காட்டும்
தனிமைத் தருணங்களின்
தொகுப்பு அல்லவா அந்த பிஞ்சு முகம்.
குடை என்றால் மழையை தடுப்பது
கொச்சை மனங்களுக்கே !
வானம் கிழித்த உல்லாசப்பூ சிதறல்
கவிதை உள்ளங்களுக்கே!
அந்த தேவதை கன்னங்குழிய சிரித்தால்
மழைத்துளி வைரங்கள்
ஆயிரம் ஆயிரம் அல்லவா!



"சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை"


பூவின் பனித்துளி  உன் கவிதையில்
டி.வி திரைப்படம் ஆனது
அதற்குள் மலையின் முகம் தெரிய
அதன் பனிப்புகைகுள்ளும்
உன் மனக்குகை தெரியும்.
உன் ஆச்சரியங்களின் புதையல் அது.


"உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி"


இந்த மூன்று வரிகளில்
முப்பதாயிரம் அடி உயர சிகரம் ஒன்றில்
ஏறி நிற்கின்றாய்.
கவிஞர்கள் எல்லோருமே
சோப்புகுமிழிகள் விட்டு அதை
நிலவு என்பார்கள்.
ஆனால் நீயோ
நிலவையே கரைத்து ஒளிக்குழம்பாக்கி
கோடி கோடி நிலவுகளை அதில் ஒளி பெருக்கி

அதை அன்பு மகள் முகத்தில் மஞ்சள் பூசி
குளிப்பாட்டுகிறாய் .
பாவம் நிலவு
செல்லப்பூனையாய் வீட்டுக்கு போகிறது.

நா முத்துக்குமார் அவர்களே
உங்கள் கற்பனை "ஸிப்" திறந்து கொள்ளும் போதெல்லாம்
எங்களுக்குள் தாங்க முடியாத ஒரு
மனப்பிரளயம் எங்களை
உற்சாகத்தில் புரட்டிக்கொண்டு போய்விடுகிறது.

 ஒரு  பாட்டு  ஒரு காசோலை என்று
முடிந்து போகிற எந்திரத்தனமான
சினிமா வியாபாரத்தில் எச்சம் போட்டு விட்டு
பறந்து போய்விடுகிற காக்காயோ குருவியோ அல்ல நீ !

அது ஒரு ஃ பீனிக்ஸ் பறவை.
அதன் சிறகடிப்பு
இதோ எங்கள் இதயங்களுக்குள் கேட்கிறது!

மீண்டும் அடுத்த சாளரம் நீ திறக்கும்போது
வருகிறோம்
இப்போது தூங்கு
நாளை முகம் காட்டு!

இப்படிக்கு
அன்புடன் ருத்ரா

============================================================















சனி, 17 செப்டம்பர், 2016

"இந்த மன்றத்தில் ஓடிவரும் ..."(2)


"இந்த மன்றத்தில் ஓடிவரும் ........"  (2)

நம் மன்றத்துக்கு ஒடி வரும் காற்றில் தவழும் கவிதைகளுக்கு மொழியின் வேலி இல்லை.உணர்வின் பெயர்ப்புகளே இங்கு காற்றாய் வீசும்....

துன்பமே தழுவிக்கொள்கிறேன்..வா
==================================================பேப்லோ மெதினா
(IN DEFENSE OF MELANCHOLY )


வாரம் ஒரு முறையாவது
அந்த நகரத்துள் வலம் வருவேன்.
செங்கற்கள் அடுக்கிய கட்டிடங்களில்
சிவப்பு ரத்தினக்கற்கள் 
குவிந்து குவிந்து
வளர்வது போல் இருக்கும்.

ஆனாலும் அங்கு
புறாக்களையும் பூனைகளையும் கூட‌
கொல்லக் காத்திருக்கும்
கொலை வெறி உமிழும் கண்கள்.

கசாப்புக்கடைக்காரர்களின்
வீடுகளையும் கடந்து செல்வதுண்டு.
அவர்களின் வெட்டரிவாட்கள்
தூங்கா நோயால் சாணை பிடிக்கப்படும்
கொலையின் தீப்பொறிகளை அங்கு
சிதற விட்டுக்கொண்டிருக்கும்.

இருள் கவியும் ஆற்றுப்பாய்மரங்களில்
கிழிந்து கிழிந்து வெடவெடக்கும்
கடல் அலைப்பிழம்புகளில்
எங்கோ ஊளையிடத்துவங்கிவிட்ட‌
நாயின் கூரிய பற்களில்..
வந்து இழைகிறது...
ஓ!அழகிய துன்பம் எனும் பெண்ணே!
உன்னை இப்படி செதுக்கி செதுக்கிப் பார்த்து
களிக்கின்றேனோ!
மிச்சமாய் இருப்பதையும் அங்கே
சுவைப்பேன்.
அவள் அந்த குறுகிய கட்டிலில்
எனக்காக காத்துக்கொண்டிருக்கிறாள்
குண்டு குழி ரோடுகளில்
கரை புரளும் மழைநீரைப்
பார்த்துக்கொண்டு..
ஒளியெல்லாம் ஒழுகிப்போன‌
அந்த நோஞ்சான் அந்திப்பொழுதைப்
பார்த்துக்கொண்டு...
இலைகள் யாவும் நாவுகளாய்
அசைய அசைய பாடும்
அந்த மரங்களைப்பார்த்துக்கொண்டு..

=============================================================
மொழி மறு வார்ப்பு....  ருத்ரா இ.பரமசிவன்

==============================================================

In Defense of Melancholy

Pablo Medina
At least once a week
I walk into the city of bricks
where the rubies grow

and the killers await
the coming of doves and cats.

I pass by the homes of butchers
and their knives sharpened by insomnia

to the river of black sails
and the torn-up sea and the teeth of dogs.

She waits for me in a narrow bed,
watching the rain
that gathers on the broken street

and the weak light of dusk
and the singing trees.
Facebook Like Button  Tweet Button
Copyright © 2015 by Pablo Medina. Used with permission of the author.

About This Poem

“I wrote this poem after one of my walks through Boston, my adoptive city. You can’t fight melancholy, you can only join her as she listens to the trees, moved to singing by the rain.”
Pablo Medina
Pablo Medina is the author of The Island Kingdom (Hanging Loose Press, 2015). He teaches at Emerson College and lives in Boston, Massachusetts.



வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஒலைத்துடிப்புகள் (6).





    16 செப்டம்பர் 2016





ஒலைத்துடிப்புகள் (6).

===========================================ருத்ரா இ பரமசிவன்


"பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

துறைபடி அம்பி அகமணை ஈனும்"

......


ஐங்குறு நூற்றின் 168 ஆம் பாடல் இது.அம்மூவனார் பாடிய கற்பனை வளம் செறிந்த ஒப்பற்ற வரிகள் இவை..இதில் வரும் கடற்கரை காட்சியில் அடுக்கு அடுக்காய் சித்திரங்கள் விரிவது போல் காட்சியை நான் கண்டு களிக்கலாம்.வெள்ளைக்காக்காய் பார்த்தேன் என்றால் நம்மை மேலும் கீழும் பார்க்கும் இன்றைய தமிழர்கள் அப்படித்தான் பார்த்திருப்பார்களோ அம்மூவனாரை? ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் "அந்த சிறுவெண் காக்கைகளை" கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் "துறைபடி அம்பி  அகமணை" ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் "மணை" எனப்படுகிறது.இன்றும் "மணை" என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா? வாழ்க்கையில் மங்கலம் தொடங்கும் மணமேடையில் கூட "மணையில்"தான் பெண்ணும் மாப்பிள்ளையும் மணையில் அமர்ந்து தான் தொடங்குகிறார்கள்.அந்த "அம்பி"மணையில் அவ்வளவு நுட்பம் இருக்கிறது."ஈனும்" என்பதும் கூட சிறுவெண் காக்கைகள் அங்கே தங்கள் இல்லம் தொடங்க கூடு கட்டி குஞ்சுகள் ஈனுவதை குறிக்கும்.பறவைக்கூடு தானே அதற்கு "அருமணை" (அரியதாக அங்கே கட்டப்படும் கூடு என்ற  பொருளில்) அம்மூவனார் எழுதியிருக்கலாமே.மனித வாழ்க்கையையே அந்த சிறு வெண் காக்கைக்கு ஏற்றி (வீடு.... உள்ளம் என்று பொருள் பட) "அக மணை" என்றல்லவா எழுத்தாணியைக்கொண்டு கீறியிருக்கிறார்.இங்கு மேலோட்டமாய் உள்ளடங்கி இருக்கும் மணை என்று உரை செய்தாலும் "அக நானூற்றின்" காதல் மணம் அந்த மணையில் அவற்றிக்கு கூடு கட்ட உந்து விசை ஆகி இருக்கிறது என்று "உள்ளுரையும்" அதில் உளது.படகுகள் இரு முனையும் கூராக இருப்பதால் அவற்றிற்கு அம்பு என்ற சொல் வழங்குவது நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.கூராக கிழித்துச் செல்லக்கூடியவை "அம்பி" என சொல்லப்படுகிறது.அம்பு இங்கு "நீருக்கும்" ஆகி வரும் ஆகுபெயர் எனலாம்.தண்ணீர் என்ற சொல்லுக்கு அம்பு என்ற சொல் நமக்கு அப்பு (இடைப்போலி) என்றும் வழங்கப்பட்டிருக்கலாம்.வடமொழியில் அப்பு என்று ஆகியிருப்பதன் உட்குறிப்பில் தமிழின் தொன்மை நன்கு வெளிப்படுகிறது.

தமிழ்ச்சொல்லின் இந்த "அம்பியின்" அம்பு என்னில் தைத்ததையே இங்கு சங்கநடைக்கவிதை ஆக்கியிருக்கிறேன்.




துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌
==============================================ருத்ரா இ பரமசிவன்


தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்

கொடுவரி முதலை குடை தண் துறைய‌

குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌

உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்

பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து

அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்

வேங்கை வரித்த திண்கால் ஓமை

அசைவுறு காலை முரண்தர முரலும்

அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து

அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.

அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌

துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌

ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு

மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.

புலம்பல் காலொடு புள் ஓர்த்து நின்று

என்று வருங்கொல்? இடமெது?தடமெது?

குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது

குழைஇழையாடும் மழைக்கண் தோழி.







பொழிப்புரை

=============================================ருத்ரா இ பரமசிவன்


தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்

கொடுவரி முதலை குடை தண் துறைய‌

குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌

உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்

பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?



தான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் இயல்புடையது முதலை. மேல் தோல் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைப் போன்றும் வரிகளைக் கொண்டதுமான மேல் தோலை உடைய முதலை மூழ்கி மூழ்கி குளிக்கும் ஆற்றுத்துறையை உடையவனாகிய தலைவனே.ஒரு நாள் அவன் வருவான் என செய்திக்குறி அனுப்பியும் இந்த நீண்ட நெடும் இரவில் வராமல் இருந்துவிட்டான்.தூக்கம் தொலைத்து நான் மாய்ந்து விட்டேன்.என் உடலை உயிர் தின்னுவது போலவும் உயிரை உடல் தின்னுவது போலவும் எனக்கு நோய் தந்து என்னை ஆட்கொண்டு எங்கு சென்றாய்? தலைவனை நோக்கி தலைவி கேட்பது போன்ற கூற்று இது.



அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து

அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்

வேங்கை வரித்த திண்கால் ஓமை

அசைவுறு காலை முரண்தர முரலும்

அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து

அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.



கடற்கரையில் உள்ள ஒரு காட்சி அங்கே விரிகிறது.அளத்தல்(முகவை) பாத்திரமான மரக்கால் எனும் அம்பணம் ஒன்றை கவிழ்த்துப்போட்டது போன்ற ஆமையின் முதுகுப்புறத்தில் அடிக்கடி விட்டு விட்டு குரல் எழுப்பும் நாரை (குருகு) ஒன்று நிற்கிறது.அது சிலம்பின் பரல் ஒலி போல் ஓசை எழுப்புகிறது.அந்த ஒழுங்கான ஓசை திடீரென்று முரண்பட்டு ஒலிக்கிறது.ஏனெனில் வேங்கை மரத்து பட்டை வரிகளைப்போன்ற அமைப்புடைய ஆமையின் உறுதியான கால்கள் நகர்வுற்ற பொழுது நாரை அவ்வாறு கூச்சல் இட்டது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது.தலைவன் வராமல் விட்டது அவளுக்கு உள் மனத்தில் அப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டதை உட்குறிப்பாய் இக்காட்சி உணர்த்துகிறது.நரைக்கு தஞ்சம் கிடைத்தது போல் தலைவன் மீண்டும் அவளிடம் வந்து விடுவானா? அடுத்துவரும் வரிகள் அதை விவரிக்கின்றன.







அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌

துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌

ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு

மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.

புலம்பல் காலொடு புள் ஓர்த்து நிற்கும்.

என்று வருங்கொல்? இடமெது?தடமெது?

குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது

குழைஇழையாடும் மழைக்கண் தோழி.




சேறு அடைந்த உப்பங்கழியின் பக்கம் சார்ந்த (இருங்கழிப் பால)அந்த‌ கரையில் நெடுநாளாய் கிடப்பில் கிடக்கும்(பழைய) படகு (அம்பி) தனக்கே உரிய நீரில் செல்லும் பாய்ச்சலை மறந்து கிடந்தாற்போல‌ தலைவி துயரம் தோய்ந்து கிடக்கிறாள்.அதனால் அதை தோழியிடம் இவ்விதம் கூறுகிறாள்.பொன் போன்ற மஞ்சள் நிற (கடற்கரையின்)ஞாழற் பூவின் படர்ந்த புள்ளிகள்  போன்ற தேமல் (இப்பசலை நோயில்)உடம்பு முழுதும் சிற்பம் செதுக்கியது போல் (மெய்யது பொள்ளி...பொள்ளி என்றால் செதுக்கி என்று பொருள்) பொய்மைப்பூக்கள் படர்ந்தாற்போல் தோன்றும்.அதனால் நான் காற்றின் ஒலியில் ஒரு புலம்பல் கேட்டு துன்புறுவேன்.வானத்தை வெறித்து பறவைகள் பறப்பதை கூர்மையோடு உற்றுநோக்கி என்னை ஆற்றிக்கொள்ளப் பார்ப்பேன். இருப்பினும் தோழி!அவன் மீண்டும் என்று வருவான்? எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான்?என உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளே! குளிர்பார்வையால் என்னை களிப்பூட்டுவளே!.இப்படி கேள்வி கேட்பது தானே தலைவிகள் எனும் இந்த இரக்கத்துக்குரிய காதலிகளின் பண்டைய வழக்கமான கேள்வி (தொல் கேள்)கேட்கும் தன்மைகள்.




==================================================================

ஒரு குழந்தை பிறக்கிறது.




ஒரு குழந்தை பிறக்கிறது.
==============================================ருத்ரா இ பரமசிவன்



தாய் வயிறு கிழிந்து
இப்போது தான் வந்தேன்.
அவள் மூச்சுகள் எனும்
வைரக்கம்பிகள்
வைத்து நெய்த சன்னல் பார்த்து
கனவுகள் கோர்த்தபின்
அவள் அடிவயிற்றுப்
பொன்னின் நீழிதழ்
அவிழ்ந்த கிழிசலில்
வந்து விட்டேன் வெளியே!

நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.
சூரியசெப்புகளும் கொண்டு
விளையாட மனம் வரவில்லை.
வண்ணத்துப்பூச்சிகள்
சிமிட்டும் சிறகில்
வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.
பூக்கள் எனக்கு
புன்னகை சொல்ல
வந்தன என்றார்.
புன்னகைக்குள் ஒரு
இருண்ட நீள் குகை
எப்படி வந்தது?
மான் குட்டிகள் மந்தை மந்தையாய்
மனதை அள்ளும் என்றார்.
மண்பொம்மைகளாய் அவை
யாவும் கரைந்து மறைந்தே போயின.
அடி வான விளிம்போரம்
தொடு வான இதழோரம்
சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்
கீற்று என்னை அறுப்பது
உணர்ந்தேன்.
என் தாயின் இதயச்சுவர்களில்
பாயும் குருதியில்
வலியின் குதிரைகள்
விறைத்து எகிறும்
காட்சிகள் கண்டேன்.
அழகாய் பூத்த அவள்
தாமரைச்சிரிப்பிலும்
மறைந்த ஓர் மெல்லிழை
கோடி கோடி உலகங்களின்
கனங்கொண்ட சோகமாய்
அழுகையின் லாவா
அடங்கித்தேய்ந்து
அவள் கருப்பைக்குள்ளேயே
கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.
பிரம்ம வாசலில்
பெண் ஒரு கேவலம்!
அவள் கதவு திறந்து
வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌
கேவலம் கேவலம்.
முக்தியும் நாசம் அதன்
பக்தியும் நாசம்
என்றொரு
மூளிக்குரல் மூள எரியும்
பிணத்தீ மூட்டிய‌
வேள்விகள் கொண்டா..ஞானக்
கேள்விகள் வளர்த்தீர்!
வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!
என் விடியல் அங்கு பூக்கட்டும்!
அப்போதே நான் ஒரு பூம்புயல்.
புறப்பட்டு வருவேன்
புதிய தோர் காலம் படைத்திடுவேன்.

======================================================