ஞாயிறு, 31 மார்ச், 2019

கரும்பின் எந்திரம் பிழியல் அன்ன

சங்கநடைச்செய்யுட்கவிதை
============================.
(11/ 07/2016 ல் எழுதியது)


கரும்பின் எந்திரம் பிழியல் அன்ன
=====================================ருத்ரா இ பரமசிவன்.

கரும்பின் எந்திரம் பிழியல் அன்ன‌
கனவு இடை கனவு மேல் கனவு கீழ்
படுமனம் இரட்ட கனைகுரல் கேட்டோய்
சுரும்பின் பொறிசிறை ஆர்த்தெழு செய்யும்
மணிஒலியுள்ளும் ஒலிக்கும் சிரிக்கும்
ஒள் எயிற்று பயிர்ப்பின் புதைக்கும்
ஓவா நோவு உள் கண்டு வெதும்பி
நனைந்தலைக் கானம் நசைஇ செல்ல‌
ஆழ்சுரம் சுழிப்ப அருநிழல் பூத்த‌
யாறு கடாம் நிமிர் தோள் வெற்ப.
நெகிழ் வளை நிலம் சொரியக்கண்டு
குவளை விழியும் வற்றா சுனையாய்
கண்ணீர் நிழல ஆங்கே உன் கொடுநகை
கொல்லும் என்னே. இஃ து காண் தீயின்
நோவு எனை எரித்து எரித்து உயிர்க்கும்.

============================================

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
==================================================ருத்ரா


"அடேய்..எங்கேடா கெளம்பிட்டே.."

"தேர்தல் நேரம்..அதான் கட்சிக்கூட்டங்களை பாக்கப்போறேன்"

"சரி தாண்டா. கட்சிக்கூட்டம்லாம் போதுண்டா.ரெண்டும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைக தானே."

"போதும்ணே.. ஆ  ஊண்ணா இதத்தான் சொல்றீங்க..இதக்கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு."

"ஏண்டா சலிச்சுக்கிறே?"

"சரிண்ணே..ரெண்டு மட்டைய விடுங்க..அந்த மூணாவது மட்டையும்
அதே குட்டையிலே ஊறிகிட்டு தானே கெடக்கு..."

"எதுடா மூணாவது மட்டை?"

"ஒவ்வொரு வாட்டியும் சலிக்காம கை வலிக்காம கைய நீட்டி நீட்டி
ஓட்டுப்போட்டுக் கிட்டே இருக்கோமே..நாம தான் அந்த மூணாவது மட்டை.."

"டேய்..டேய் ஞானப்பழம் ஒனக்கு ஞானம் நெறையவே முத்திப்போச்சுடா. தோ வர்ரேன்."

இவர் கையை ஒங்கி அடிக்கபோகிறார் .அவர் ஓடிப்போய் விடுகிறார்.

====================================================================


என்னைத்தேடாதே



என்னைத்தேடாதே
=============================================ருத்ரா

கடவுள் தான்
நமக்கு எப்படியெல்லாமோ
வளைந்து கொடுக்கும்
ரப்பர் ஷீட் ஜியாமெட்ரி
அதாவது டோபாலஜி.
இது எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
பூஜ்யத்தையும் தான்.
அடிப்படைத்தேற்றம் இது.
கடவுள் எல்லாம் தான்
நாத்திகமும் சேர்த்து தான்.

கடவுள் சொல்கிறார்.
நீ தேடு.
என்னைத்தேடாதே.
ஏனெனில்
நான்
உன்னில் என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

வேத வேதாந்தங்களின்
சல்லடையில் ஒழுகிப்போனேன்.
ஞானங்களும் விஞ்ஞானங்களும்
ஒழுகிப்போயின.
தங்கி நின்ற
நான்கு வர்ணக்கசடுகளும்
பிராமண அகங்காரங்களும் தான்
உங்கள்
அர்ச்சனைகளில்.

எல்லாமதங்களும்
பாவங்களையும்
தண்டனைகளையும்
போதிக்கின்றன.
எல்லா மதங்களின் சாரம்
எல்லாம் மனித வாழ்க்கை தானே.
மனிதனை சமாதிக்குள்
தள்ளிவிட்டு
ஓ! கடவுள்களே
ஏன் இந்த பிணங்களை
வீணைகள் என்று சாதிக்கிறீர்கள்.
இவற்றை மீட்டும்போது
உங்கள் ஒப்பாரிகள் சகிக்கவில்லை.
நீங்கள் இல்லை என்று ஆனபிறகு
எதற்கு இந்த
கல்லாப்பெட்டிகளும்
கஜானாக்களும் ?

மனிதம் கூட‌
ஹிக்ஸ் போசான் மாதிரி
ஒரு திடுக்கிடும் தியரியை
தந்து கொண்டிருக்கிறது.
மனித நீதி
கண்ணுக்குத் தெரியாத‌
கதிர் வீச்சாக‌
அந்த மண்ணில் பாறையில்
ஏன்
விண்வெளியின் விலா எலும்புக்குள்ளும்
துளைத்து துளைத்துக்கேட்கிறது?

பத்தாம்பசலிகளே
மறித்துக்கொண்டு நிற்காதீர்கள்.
புதிய கேள்விகளே
இனி நம் நுழைவாசல்கள்!

====================================================


நிழல்களின் நிறம்.




நிழல்களின் நிறம்.
====================================ருத்ரா


பச்சை இலைகள் வடிகட்டி
ஊற்றிய நிழல் மழையில்
நனைந்து
உட்கார்ந்தேன்.
மனித உயிர்களின் வேர்கள்
இந்த மரங்களை
ஒட்டியே உள்ளன.
இதில் மறைந்திருந்த  முரண்பாடுகள்
திடீரென்று
"அனக்கோண்டா"வாய்
வாய் பிளந்து நின்றன.

இந்த பச்சை உலகங்களை
வெறும் பச்சை நோட்டுக்காக
சிதைக்க
கோடரி தூக்கும்
அந்த பச்சைகாட்டுமிராண்டித்தனத்திடம்
ஏன்..இப்படி?...
என்ற கேள்வியை வீசினால்
கோடரியாய்
இந்த சொற்களை
நம் மீது அது வீசுகிறது.
"உனக்கு வெயிலைத்
தாங்க முடியவில்லை.
எனக்கு பசியைத்
தாங்க முடியவில்லை."

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்.
காட்டிலே
அங்கொரு பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு!
தீம் திரி கிட..தீம் திரி கிட..
பாரதி தாளமிட்டான்!

வறுமையின் நிறம் சிவப்பு தான்!
இந்த பச்சை நிழல்கள் கூட
சிவப்பு மத்தாப்பை
கொளுத்துகின்றனவே.
ஆம்.
இப்போது இந்த நிழல்கள் கூட
எரிகின்றன!

================================================







சனி, 30 மார்ச், 2019

"கருப்பு வெள்ளையில்" நயன் தாரா ("ஐரா")


"கருப்பு வெள்ளையில்" நயன் தாரா ("ஐரா")
===================================================ருத்ரா


நயன் தாராவின் இரட்டை வேடம்
அவரது கதாநாயக உயரத்தைந
இன்னும் ஒன்றிரண்டு
இமயமலைகளுக்கு மேல்
கொண்டுபோய் விட்டது.
கருப்பு என்றால்
சமுதாயத்தின் நசுங்கிபோன‌
அடித்தட்டு என்றும்
வெள்ளையே தெய்வத்துக்கு
முகத்திற்கும் மூக்கிற்கும்
அருகில் வைத்துக்கொண்டு
கொஞ்சப்படும் நிறம் என்றும்
ஒரு தேவா அசுர நினைப்பு
இயக்குனருக்கு எப்படி வந்தது
என்று தெரியவில்லை?
எத்தனையையோ படங்களில்
பார்த்திருக்கிறோம்
ஆவிகள் அல்லது பேய்கள்
வெள்ளையாகத்தான் இருக்கும்.
கள யதார்த்தம்
நம் உலக வரலாற்று ர‌த்தம் சிந்தல்கள்
இன்னும் நம்
புராண அஞ்ஞான அதர்ம யுத்தங்கள்
எல்லாம் இப்படி ஒரு
இரட்டை வேடத்தில் வந்து
முனை கூட்டியிருக்கிறது.
நயன் தாரா அந்த கருப்பின்
நடிப்பில் "வெளுத்து" வாங்கியிருக்கிறார்.
வெள்ளை யமுனாவின் மனத்தின்
அடி ஆழம் அப்படி ஒரு கருப்பாய்
பவானியாய் வந்திருக்கிறாள் என்
நாம் எடுத்துக்கொள்ளலாம்.
பவானியின் முகத்தில்
படரும் உணர்வுகள்
மற்றும் அவள் உடல் மொழிகள் எல்லாம்
நயன் தாராவுக்கு நடிப்பில்
நிறைய புதிய மைல்கற்களை
நட்டுகாட்டியிருக்கின்றன.
பேய் என்பது
மனத்துக்கள் கருவுயிர்த்து
மனதையே உடலாக்கி
மனதுக்குள்ளேயே
தன் வக்கிரத்தை கன்னிக்குடம்
உடைத்துக்கொண்டு
பிரசவிக்கும் ஒரு மனக்குழவி.
அதன் அசுரத்தனமான விசுவரூபத்தை
அதன் ஒவ்வொரு மயிர்க்கால்களின்
பயங்கரத்தையும் திகிலையும்
மிக மிக அற்புதமாக
காட்டிருக்கிறார் நயன் தாரா.
வெள்ளை நயன் தாராவோ
பளிச்சென்று ப்ளீச் செய்தது போல்
ஒரு சிறு புன்னகையில் கூட‌
தியேட்டருக்குள் வெளிச்சம்
பாய்ச்சுகிறார்.
அந்தக்காலத்தில்
ஜெயலலிதா அவர்கள்
இந்த மாதிரி இரட்டை வேடத்தில்
ஜெயசங்கருடன் திகில் காட்டி
அதிர வைத்திருக்கிறார்.
ஆனால் நயன் தாராவின்
இந்த இரட்டைவேட நடிப்பில்
வேடம் இரட்டையானாலும்
பல முனைப்பரிமாணங்களில்
தன் நடிப்பை கலைடோஸ்கோப்பு
ஆக்கியிருக்கிறார்.
மற்ற நடிகர்களிடமும்
கலங்கரை வெளிச்சம் போல்
அது சுழன்று சுழன்று
அவரவர் பாத்திரத்து  நடிப்பின்
கூர்மையையும் செறிவையும்
நன்கு காட்டியிருக்கிறது.
கோலமாவு கோகிலா பாணியில்
யோகி பாபு அவர்கள்
சிரிக்க வைக்க முனைந்தாலும்
அதிலும் நயன் தாராவின் பாத்திரமே
துணையாக நிற்கிறது.
இது போன்ற காமெடியைப் பார்த்து
வயிறு குலுங்க சிரிக்கவேண்டுமானால்
"அவ்வை சண்முகி"யில்
மணிவண்ணனும் டெல்லி கணேஷும்
அந்த சண்முகியிடம் செய்யும்
சேட்டைகள்
ஒரு நகைச்சுவைக்கோட்டையாய்
இன்றும்
நின்று கொண்டிருப்பதைப்பார்க்கலாம்.
யோகிபாபு சில்லறை சில்லறையாய்
அல்லது சொட்டு சொட்டாய்
வசனம் உதிர்த்தாலும்
அந்த "டைமிங்க்"தான்
நம்மை சிரித்து ரசிக்க வைக்கிறது.
இதில் கதையை நகர்த்துவதிலும்
அவருக்கு ஒரு பங்கு இருக்கிறது.
பெண் என்றால்  பேயும் இரங்கும்.
ஒரு பெண் இன்னொரு பெண்ணை
பேயாய் வந்து துரத்துவதில்
பெண்ணுக்கும்
பேயாய் ஆகிய பெண்ணுக்கும்
இடையில் ஒரு திடுக்கிடும் பள்ளத்தாக்கு
இருக்கிறது.
ஒரு விதமான  சைக்காலஜிகல் தீம்
வைத்து தைக்கப்பட்டிருக்கிறது இந்த படம்.
இயக்குநர் படத்தோடு
ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி
பயணித்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்!

==================================================================




கல்யாணி தீர்த்தம்





கல்யாணி தீர்த்தம்.
=========================================ருத்ரா



"நானு"க்குள் பாதாளக்கரண்டியை

வீசியிருக்கிறேன்.

டாஸ்மாக்குக்குள் போய்

ஒரு குவாட்டர் கட்டிங்கில்

மனிதன் பீஸ் பீஸாய் ஆகி விடுகிறான்.

அங்கே ஊறுகாய் தொட்டுக்கிற‌

சமாச்சாரம் மாதிரி தான் இதுவும்.

ஆனா

இது ரமணா பட்டணம் பொடி.

"நான்" என்ற அந்த சொல்லின்

நமைச்சல் தாங்க முடியலே.

ஆத்மாவை இப்படி ரவை ரவையாய் ஆக்கி

அதிலும் "ஸ்ட்ரிங்" துடிப்பிழையாய் ஆக்கி

ஒரு ஹோலொகிராஃபிக் வெளியில்

குவ்வாண்டம் டெலிபோர்ஷன் மூலம்

எங்கு வேண்டுமானாலும்

போங்கள் வாங்கள்.

பெருமாளின் தொப்பூள்கொடி வழியாய் போய்

அந்த பிரம்மனை

கொஞ்சம் வெளியே அனுப்பிவைத்து

புதிய மனுஷாளை படைத்து விட்டு

அப்புறம் கிழே இறங்குங்காணும்.

இப்படியெல்லாம் தான்

ரிஷிகள் யோசித்தாள்

அந்த சோமச்செடியை நசுக்கிய‌

சாறை உறிஞ்சிய பிறகு.

அப்புறம் அவா சொல்றதுலே

பாதி பெரியவாள்.

பாதிக்கு மேலே பெரியார்வாள்.

உபநிஷதம் உபனிஷதம்னுட்டு

பொசுக்கு பொசுக்குன்னு

கூட்ஸ் வண்டி விடரேழே

பிரஹ்மம் ப்ரக்ஞான கனம்னு

ஒண்ணு வருது பாத்தேழோ

இதெ எங்க திருநெல்வெலிக்காரா

சொல்வா

"ஓர்மை"ன்னு.

பிரபஞ்சத்துக்கு ஒரு ஓர்மை உண்டு.

காலபரிமாணத்தை

தலைகீழ் வர்க்கத்துல கொண்டுபோய்

அதெ காணாம கரச்சுப்பிடுங்கோ

அப்போ

ப்ளாங்க் கான்ஸ்டாண்ட் காணாம போய்டும்.

ஆனா "ஆலன் குத்" விஞ்ஞானி சொல்றான்

அப்பொதான்

ஸ்கேல் எனும் அளவு

தாறுமாறாய் பூதாகாரமாய்

எக்ஸ்பொனென்ஷியல் உருப்பெருக்கம்

அடைகிறதாம்.

அது பிரபஞ்ச உட்கிடக்கை.

கருப்பொருள் உரிப்பொருள்

கரும்பொருள் எனும் டார்க் மேட்டராய்

ஈர்ப்புக்கு மல்லுகட்டுகிறது.

கூர்மையான அந்த ஓர்மை

மனிதன் கிழிந்த பாயில்

வாய் கோணி

வரட்டிமேல் படுக்கப்போகும் முன் கூட

குறிச்சொல் ஒலிக்குமாம்.

மனம் உடல் உயிர் வெளி ஈர்ப்பு

எல்லாம் திருக்கி முறுக்கி

பிசைந்த நாத்திக பிரசாதம் இது.

இதில்

நாராயாணனும் இல்லை.

சிவனும் இல்லை.

நியுரானும் பேர்யானும்

புணரும் நிகழ்ச்சியில்

கிராண்ட யூனிஃபிகேஷனில்

ஊளை நாயும்

உடுக்கை ஒலியும் ஒன்றிப்போகும்.

புரிகிறதா..



பி.ஹெச்டியும் இல்லை

ஒரு வெங்காயமும் இல்லை.

"நான் ஹோமோஜெனஸ் ஹைபர்ஜியாமெட்ரிக் ஃபங்ஷனுக்கு"

சூத்திரம் எழுதி வைத்து

உலகத்தையே தடலாடியாய் உருட்டித்தள்ளிவிட்டு

சுருட்டி மடக்கி படுத்துக்கொண்டு

வானத்தையே வெறித்த‌

நம் ராமானுஜனும் அந்த‌

"கருந்துளை"க்கு அப்பாலும்

தூண்டில் வீசி விளை யாடிய அற்புதங்கள்

நிறைய உண்டு போலும்

இந்த பட்டணம் பொடியில்!



சாமி என்னென்னமோ சொல்றாரே!

ஆமா

அது நாராயணயம் இல்லெ.

"நாஸா"யணம்.

நேத்து தான் சாமிஜி

பிலடெல்ஃபியாவுல லெச்சர் குடுத்துட்டு

நேரே இங்க வந்திருக்கார்.

நம்ம வூரு பத்தமடைக்காரரு தான்



புரிஞ்சுதுண்ணா

அதுக்கப்புறம்

அகத்தியன் அருவி

கல்யாணி தீர்த்தம் குடிக்கலாம் வாங்கோ.

கவிஞர் விக்கிரமாதித்தன்

அங்கே தான்

தலையை கைக்கு வச்சு

மல்லாக்கப்படுத்து

விண்வெளியில் இடுக்கி இடுக்கிப் பார்த்து

ஏதோ ஒரு "ஓரியனின்"

நாசிக்குள் மூக்குப்பொடியை

திணிச்சிட்டு

பிரம்மத்தும்மலுக்காக காத்திருக்கார்.

அவர்ட்ட மீதிய கலந்துக்கலாம்.



========================================================

பிரம்மத்தும்மல்






















பிரம்மத்தும்மல்

=========================================ருத்ரா



"நானு"க்குள் பாதாளக்கரண்டியை

வீசியிருக்கிறேன்.

டாஸ்மாக்குக்குள் போய்

ஒரு குவாட்டர் கட்டிங்கில்

மனிதன் பீஸ் பீஸாய் ஆகி விடுகிறான்.

அங்கே ஊறுகாய் தொட்டுக்கிற‌

சமாச்சாரம் மாதிரி தான் இதுவும்.

ஆனா

இது ரமணா பட்டணம் பொடி.

"நான்" என்ற அந்த சொல்லின்

நமைச்சல் தாங்க முடியலே.

ஆத்மாவை இப்படி ரவை ரவையாய் ஆக்கி

அதிலும் "ஸ்ட்ரிங்" துடிப்பிழையாய் ஆக்கி

ஒரு ஹோலொகிராஃபிக் வெளியில்

குவ்வாண்டம் டெலிபோர்ஷன் மூலம்

எங்கு வேண்டுமானாலும்

போங்கள் வாங்கள்.

பெருமாளின் தொப்பூள்கொடி வழியாய் போய்

அந்த பிரம்மனை

கொஞ்சம் வெளியே அனுப்பிவைத்து

புதிய மனுஷாளை படைத்து விட்டு

அப்புறம் கிழே இறங்குங்காணும்.

இப்படியெல்லாம் தான்

ரிஷிகள் யோசித்தாள்

அந்த சோமச்செடியை நசுக்கிய‌

சாறை உறிஞ்சிய பிறகு.

அப்புறம் அவா சொல்றதுலே

பாதி பெரியவாள்.

பாதிக்கு மேலே பெரியார்வாள்.

உபநிஷதம் உபனிஷதம்னுட்டு

பொசுக்கு பொசுக்குன்னு

கூட்ஸ் வண்டி விடரேழே

பிரஹ்மம் ப்ரக்ஞான கனம்னு

ஒண்ணு வருது பாத்தேழோ

இதெ எங்க திருநெல்வெலிக்காரா

சொல்வா

"ஓர்மை"ன்னு.

பிரபஞ்சத்துக்கு ஒரு ஓர்மை உண்டு.

காலபரிமாணத்தை

தலைகீழ் வர்க்கத்துல கொண்டுபோய்

அதெ காணாம கரச்சுப்பிடுங்கோ

அப்போ

ப்ளாங்க் கான்ஸ்டாண்ட் காணாம போய்டும்.

ஆனா "ஆலன் குத்" விஞ்ஞானி சொல்றான்

அப்பொதான்

ஸ்கேல் எனும் அளவு

தாறுமாறாய் பூதாகாரமாய்

எக்ஸ்பொனென்ஷியல் உருப்பெருக்கம்

அடைகிறதாம்.

அது பிரபஞ்ச உட்கிடக்கை.

கருப்பொருள் உரிப்பொருள்

கரும்பொருள் எனும் டார்க் மேட்டராய்

ஈர்ப்புக்கு மல்லுகட்டுகிறது.

கூர்மையான அந்த ஓர்மை

மனிதன் கிழிந்த பாயில்

வாய் கோணி

வரட்டிமேல் படுக்கப்போகும் முன் கூட

குறிச்சொல் ஒலிக்குமாம்.

மனம் உடல் உயிர் வெளி ஈர்ப்பு

எல்லாம் திருக்கி முறுக்கி

பிசைந்த நாத்திக பிரசாதம் இது.

இதில்

நாராயாணனும் இல்லை.

சிவனும் இல்லை.

நியுரானும் பேர்யானும்

புணரும் நிகழ்ச்சியில்

கிராண்ட யூனிஃபிகேஷனில்

ஊளை நாயும்

உடுக்கை ஒலியும் ஒன்றிப்போகும்.

புரிகிறதா..



பி.ஹெச்டியும் இல்லை

ஒரு வெங்காயமும் இல்லை.

"நான் ஹோமோஜெனஸ் ஹைபர்ஜியாமெட்ரிக் ஃபங்ஷனுக்கு"

சூத்திரம் எழுதி வைத்து

உலகத்தையே தடலாடியாய் உருட்டித்தள்ளிவிட்டு

சுருட்டி மடக்கி படுத்துக்கொண்டு

வானத்தையே வெறித்த‌

நம் ராமானுஜனும் அந்த‌

"கருந்துளை"க்கு அப்பாலும்

தூண்டில் வீசி விளை யாடிய அற்புதங்கள்

நிறைய உண்டு போலும்

இந்த பட்டணம் பொடியில்!



சாமி என்னென்னமோ சொல்றாரே!

ஆமா

அது நாராயணயம் இல்லெ.

"நாஸா"யணம்.

நேத்து தான் சாமிஜி

பிலடெல்ஃபியாவுல லெச்சர் குடுத்துட்டு

நேரே இங்க வந்திருக்கார்.

நம்ம வூரு பத்தமடைக்காரரு தான்



புரிஞ்சுதுண்ணா

அதுக்கப்புறம்

அகத்தியன் அருவி

கல்யாணி தீர்த்தம் குடிக்கலாம் வாங்கோ.

கவிஞர் விக்கிரமாதித்தன்

அங்கே தான்

தலையை கைக்கு வச்சு

மல்லாக்கப்படுத்து

விண்வெளியில் இடுக்கி இடுக்கிப் பார்த்து

ஏதோ ஒரு "ஓரியனின்"

நாசிக்குள் மூக்குப்பொடியை

திணிச்சிட்டு

பிரம்மத்தும்மலுக்காக காத்திருக்கார்.

அவர்ட்ட மீதிய கலந்துக்கலாம்.




========================================================








பிரம்மத்தும்மல்
=========================================ருத்ரா

"நானு"க்குள் பாதாளக்கரண்டியை
வீசியிருக்கிறேன்.
டாஸ்மாக்குக்குள் போய்
ஒரு குவாட்டர் கட்டிங்கில்
மனிதன் பீஸ் பீஸாய் ஆகி விடுகிறான்.
அங்கே ஊறுகாய் தொட்டுக்கிற‌
சமாச்சாரம் மாதிரி தான் இதுவும்.
ஆனா
இது ரமணா பட்டணம் பொடி.
"நான்" என்ற அந்த சொல்லின்
நமைச்சல் தாங்க முடியலே.
ஆத்மாவை இப்படி ரவை ரவையாய் ஆக்கி
அதிலும் "ஸ்ட்ரிங்" துடிப்பிழையாய் ஆக்கி
ஒரு ஹோலொகிராஃபிக் வெளியில்
குவ்வாண்டம் டெலிபோர்ஷன் மூலம்
எங்கு வேண்டுமானாலும்
போங்கள் வாங்கள்.
பெருமாளின் தொப்பூள்கொடி வழியாய் போய்
அந்த பிரம்மனை
கொஞ்சம் வெளியே அனுப்பிவைத்து
புதிய மனுஷாளை படைத்து விட்டு
அப்புறம் கிழே இறங்குங்காணும்.
இப்படியெல்லாம் தான்
ரிஷிகள் யோசித்தாள்
அந்த சோமச்செடியை நசுக்கிய‌
சாறை உறிஞ்சிய பிறகு.
அப்புறம் அவா சொல்றதுலே
பாதி பெரியவாள்.
பாதிக்கு மேலே பெரியார்வாள்.
உபநிஷதம் உபனிஷதம்னுட்டு
பொசுக்கு பொசுக்குன்னு
கூட்ஸ் வண்டி விடரேழே
பிரஹ்மம் ப்ரக்ஞான கனம்னு
ஒண்ணு வருது பாத்தேழோ
இதெ எங்க திருநெல்வெலிக்காரா
சொல்வா
"ஓர்மை"ன்னு.
பிரபஞ்சத்துக்கு ஒரு ஓர்மை உண்டு.
காலபரிமாணத்தை
தலைகீழ் வர்க்கத்துல கொண்டுபோய்
அதெ காணாம கரச்சுப்பிடுங்கோ
அப்போ
ப்ளாங்க் கான்ஸ்டாண்ட் காணாம போய்டும்.
ஆனா "ஆலன் குத்" விஞ்ஞானி சொல்றான்
அப்பொதான்
ஸ்கேல் எனும் அளவு
தாறுமாறாய் பூதாகாரமாய்
எக்ஸ்பொனென்ஷியல் உருப்பெருக்கம்
அடைகிறதாம்.
அது பிரபஞ்ச உட்கிடக்கை.
கருப்பொருள் உரிப்பொருள்
கரும்பொருள் எனும் டார்க் மேட்டராய்
ஈர்ப்புக்கு மல்லுகட்டுகிறது.
கூர்மையான அந்த ஓர்மை
மனிதன் கிழிந்த பாயில்
வாய் கோணி
வரட்டிமேல் படுக்கப்போகும் முன் கூட
குறிச்சொல் ஒலிக்குமாம்.
மனம் உடல் உயிர் வெளி ஈர்ப்பு
எல்லாம் திருக்கி முறுக்கி
பிசைந்த நாத்திக பிரசாதம் இது.
இதில்
நாராயாணனும் இல்லை.
சிவனும் இல்லை.
நியுரானும் பேர்யானும்
புணரும் நிகழ்ச்சியில்
கிராண்ட யூனிஃபிகேஷனில்
ஊளை நாயும்
உடுக்கை ஒலியும் ஒன்றிப்போகும்.
புரிகிறதா..

பி.ஹெச்டியும் இல்லை
ஒரு வெங்காயமும் இல்லை.
"நான் ஹோமோஜெனஸ் ஹைபர்ஜியாமெட்ரிக் ஃபங்ஷனுக்கு"
சூத்திரம் எழுதி வைத்து
உலகத்தையே தடலாடியாய் உருட்டித்தள்ளிவிட்டு
சுருட்டி மடக்கி படுத்துக்கொண்டு
வானத்தையே வெறித்த‌
நம் ராமானுஜனும் அந்த‌
"கருந்துளை"க்கு அப்பாலும்
தூண்டில் வீசி விளை யாடிய அற்புதங்கள்
நிறைய உண்டு போலும்
இந்த பட்டணம் பொடியில்!

சாமி என்னென்னமோ சொல்றாரே!
ஆமா
அது நாராயணயம் இல்லெ.
"நாஸா"யணம்.
நேத்து தான் சாமிஜி
பிலடெல்ஃபியாவுல லெச்சர் குடுத்துட்டு
நேரே இங்க வந்திருக்கார்.
நம்ம வூரு பத்தமடைக்காரரு தான்

புரிஞ்சுதுண்ணா
அதுக்கப்புறம்
அகத்தியன் அருவி
கல்யாணி தீர்த்தம் குடிக்கலாம் வாங்கோ.
கவிஞர் விக்கிரமாதித்தன்
அங்கே தான்
தலையை கைக்கு வச்சு
மல்லாக்கப்படுத்து
விண்வெளியில் இடுக்கி இடுக்கிப் பார்த்து
ஏதோ ஒரு "ஓரியனின்"
நாசிக்குள் மூக்குப்பொடியை
திணிச்சிட்டு
பிரம்மத்தும்மலுக்காக காத்திருக்கார்.
அவர்ட்ட மீதிய கலந்துக்கலாம்.