திங்கள், 31 ஆகஸ்ட், 2020

படேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

படேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்

_________________________________________ 

ருத்ராவின் கவிதைகள்




கொரோனா போட்டது 

நாட்டை துண்டு துண்டாய்.


படேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

‍‍‍‍‍‍________________________________



கண்ணாடியில் உன்

கல்லறை


மது

‍‍‍‍‍_________________


இது என்ன மொழி?

ஹீப்ருவா? லத்தீனா?


பசி

________________

ஜனவரி பெப்ருவரி

அப்புறம் பெட்டியில் டெலிவரி.


கொரோனா கேலண்டர்.

_________________________


இது எவனுக்கு வேணும்?

ஓட்டுக்கு துட்டு போதும்.


தமிழ்

________________________


குதிரையைப்பூட்டி

ஜட்கா ஓட்னா பாத்துக்கலாம்


இந்தி

______________________


இருந்தவர் இறந்தவர் ஆவார்.

இறந்தவர் இருந்தவர் ஆவார்.


வாக்காளர் பட்டியல்.

___________________________


ஊரடங்காவது ஒண்ணாவது

அடங்காது ஆர்ப்பரிக்கும்


அருவி.

___________________________


வகிடு பிரியாமல் விழுகிறது

சீவி விடு என்று


ஐந்தருவி.

______________________________________

‍‍‍‍‍ருத்ராவின் கவிதைகள்





"பாப் கார்ன்"

 "பாப் கார்ன்"

======================================ருத்ரா


அந்த மேகங்களில் வா

உன்னை உப்பு மூட்டை தூக்கி

விளையாடுகிறேன்.

மழையில் அந்த பஞ்சுப்பொதிகள்

கரைந்து போகும் வரை

விளையாடலாம் வா.

அப்புறம் அன்னத்தூவிகளாய்

மெதுவே இறங்கி இறங்கி

விழுவோம்.

வானத்தின் நீலம் முழுதும் பருகி

அந்த நீல சங்கு பூக்களாய்

மண்ணில் பூத்திருப்போம்.

பனித்துளிகள்

அவற்றில் முத்துகள் கோக்கட்டும்.

வா!விளையாடுவோம்! வா!

விடியல்களிலும் அந்திகளிலும்

அந்தச்சிவப்பு

முத்தங்களின் நாணச்சிவப்பில்

சங்கமித்துக்கொள்ளட்டும்.

அன்பே!

காதல் என்னும் விளையாட்டு

முள் மண்டிய புதர்கள்

எனும் முரட்டு மண்ணை ஸ்பர்சிக்கும் வரை

விளையாடலாம்.

மீண்டும் அதோ

வானவில்லின்

ஏழு வண்ணங்களை முறுக்கிச்செய்த‌

கனவு ஊஞ்சல்களில்

ஆடி விளையாடுவோம் வா!

என்ன சொற்கள் தானே செலவு.

அந்த சொக்கட்டான் விளையாட்டில்

நம் காதற்சொற்களை

அள்ளி வீசி வீசி 

மீண்டும் அந்த மேக மண்டலத்துள்

மறைந்து கொள்ளலாம் வா.


=========================================

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

பூனைக்கு மணி கட்டுவது யார்?

 பூனைக்கு மணி கட்டுவது யார்?

=================================================ருத்ரா


இந்த கேள்வி

வரலாற்றுத்த‌டங்களின் 

பல நூற்றாண்டுகளின் 

பல திருப்புமுனைகளில்

கரை தட்டி நின்று

கரை உடைத்த 

வெள்ளமாகி இருக்கிறது.

எப்படியோ யாராலோ

அந்த அபாய ஒலி எழுப்பப்பட்டு

யுகப்பிரளயங்கள் 

நிகழ்ந்திருக்கின்றன.

வெள்ளைய ஆதிக்கம் 

நம்மை விட்டு நீங்கி

நொறுங்கி விழ

எத்தனை எத்தனை உயிர்கள்

நம் மூவர்ணத்தீக்காட்டுள் விழுந்து

உயிர்ச்சுடர் ஏற்றி இருக்க்கிறது?

இப்போதும் 

நம் ஜனநாயகத்தின் ஆணிவேரை

கருவறுக்க‌

கரையான் கூட்டங்கள்

மொய்த்திருக்கின்றன.

மானுடம் எனும் மாணிக்க ஒளியை

சாதி மத மத்தாப்பு நெருப்பு கொண்டு

கொளுத்தப் பார்க்கின்றன.

தீனமான எதிர்ப்புக்குரல்களை

ஆட்சி எனும்

ராட்சச எந்திரங்களால்

கூழாக்கத்துடிக்கின்றன.

பெரும்பான்மையினர் 

சிறுபான்மையிலும் சிறுபான்மையாக‌

உள்ள 

சுயநலக்கும்பல்களால்‌

சிதறடிக்கபடும்

"பஞ்ச தந்திர"க்கதைகள்

அரங்கேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நம் தேசப்பிதாவைத் தின்ற‌

குண்டுகளுக்கு

கும்பாபிஷேகம் நடத்தும்

சிலந்திவலைகளே

நம் தேசப்படத்தைக் கவ்விப்பிடித்திருக்கின்றன.

மதச்சார்பற்ற நம் அரசியல் சாசனத்தையே

அவர்கள் அமர்த்தலான‌

மான் தோல் ஆசனமாக்கி அமர்ந்து

அடிநிலை மக்களின் வாழ்வுக்குவியலையே

ஆகுதியாக்கி

யாகம் நடத்துகிறார்கள்.

அந்த புகைமூட்டத்திலேயே

கணிப்பொறியை

அதன் கருத்தறியாமல் 

தடவி தடவி இந்த மக்கள்

தடம் புரண்டு வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

இன்னும்

அந்த கேள்வி கூர் நகங்களில்

ரத்தம் சொட்ட சொட்ட 

கேட்கப்படுகிறது.

"பூனைக்கு மணி கட்டுவது யார்?"

=======================================================


சனி, 29 ஆகஸ்ட், 2020

ஏழு வர்ண ர‌த்தம்.

 


ஏழு வர்ண ர‌த்தம்.

___________________ருத்ரா

(நான்கு ஹைக்கூ)


மலையிலிருந்து விழுந்ததில் 

ஏழு வர்ண ர‌த்தம்.


சூரிய ஒளியில் அருவி.

______________________ருத்ரா


பள்ளிக்கூடம் போகாமலே

பாஸ் பாஸ் 

சின்னப்ப தாஸ் தாஸ்


கொரோனா பல்கலைக்கழகம்

____________________ருத்ரா


செவ்வாய் தோஷத்துக்கு

என்ன பரிகாரம்?

"இஸ்ரோ"அம்மனுக்கு பொங்கல் வை.


ஒரு சைஃபை

____________________ருத்ரா


எலும்பை நொறுக்குகிறாய்.

உடம்பை பிசைகிறாய்.

அன்பான அனக்கொண்டாவே!


காதல்

________________________ருத்ரா





சலவைக்கல்


குறும்பாக்கள் 

________________________


சலவைக்கல் தான்

அழுக்கு இன்னும் போகவில்லை.


கோயில்

‍‍‍‍‍___________________________ருத்ரா


மனங்களின் நிழல்கள் அங்கே.

நாங்கள் மட்டுமே இங்கே!


புலம் பெயர்ந்தோர்

______________________________ருத்ரா


நேற்றுப்பார்த்த தங்கள் முகங்களை

தேடின பறவைகள்.


வறண்டு விட்ட குளம்

______________________________ருத்ரா 


ஹிட்லருக்கு ஒரு நாற்காலி.

முசோலினிக்கு ஒரு நாற்காலி.

உலக நாடுகள் மரத்துப்போயின.


இலங்கை

_________________________________ருத்ரா


அவள் கண்ணை கசக்கினாள்.

பெற்றோர்கள் கண் கலங்கினார்கள்.

மாப்பிள்ளையிடமோ "வைரமோதிரம்"


ஒரு வழியனுப்பு


‍‍‍‍‍_________________________________ருத்ரா


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

எங்கள் அன்பான திரு வசந்த குமார் அவர்களே

 எங்கள் அன்பான திரு வசந்த குமார் அவர்களே


கவலைக்கிடம் 

என்ற செய்தியை

விரட்டிக்கொண்டு 

வந்து விட்டதே நீங்கள்

காலமான செய்தி.

காங்கிரஸ் எனும் பேரியக்கத்தினை

வெறும் பேருக்கு ஒரு இயக்கம் 

என்றில்லாமல் 

அதன் நரம்போட்டத்தில்

விறு விறுப்பேற்றிய தீரர் அல்லவா

நீங்கள்.

உங்கள் இழப்பு 

நடைபெற வேண்டிய 

ஒரு குருட்சேத்திரத்தின்

பெருந்தேர் ஒன்று 

அச்சு முறிந்தது போன்ற‌

இழப்பு அல்லவா?

தமிழ் நாடே அறியும் 

அண்ணணின் தமிழ் ஓசைக்கும்

ஆதார சுருதி யாக துணை நின்று

காந்தியம் வளர்த்தவர் நீங்கள்.

பொருட்களைத்தான் 

தவணையில் விற்றீர்கள்

உங்கள் இதயத்தை

இயக்கத்துக்கு மொத்த வியாபாரம்

செய்துவிட்டீர்களே!

கன்னியாகுமரி முனையில்

சூரியனும் சந்திரனும் ஒரு சேரத்

தோன்றுவது போல்

உங்கள் வாழ்கையும் அரசியலும்

ஒரே முனையில் நின்று

காமராஜர் கனவு நோக்கிய‌

பயணத்தை நீங்கள் 

தவற விட்டதில்லையே.

மீண்டு வருவீர்கள் என்று...

இந்த வரியை முடிக்கும் முன்

கொரோனாவின்

கொடும் நாக்கு வாரிச்சுருட்டிக்கொண்டதே!

நேரு அவர்களின்

புன்னகை ரோஜாவைத்தான்

டி.வி காட்சியில்

உங்கள் முகம் தனில் கண்டுநின்றோம்.

காந்தியத்தின் பூச்செண்டே!

மீண்டும் அந்த சாதி மத பேதமற்ற‌

யுகம் பூக்க‌

எங்களிடையே 

ஒரு விசையாகி நிற்பாய்!

அதன் திசையாகியும் நிற்பாய்!

வாழ்க உங்கள் புகழ்!


==============================================







வியாழன், 27 ஆகஸ்ட், 2020

பத்துப்பாட்டு

 பத்துப்பாட்டு

______________________ருத்ரா


ராகங்களோடு வந்தது

கண்ணீர் 


நாதஸ்வரக்குழாய்

_________________________1


கயிறு வடம் ஆகிப்போனதன்

கொண்டாட்டம்.


கெட்டி மேளம்

___________________________2


இவன் ரத்தம் மட்டும்

மண்ணில் ஊறுகிறது.


விவசாயி.

‍‍‍‍‍‍‍_____________________________3


சரிந்த குடலே அங்கு

வெற்றி மாலை.


ஜல்லிக்கட்டு

_____________________________4


காதலுக்கும் இனி

அர்ரியர்ஸ் தான்.


ஆன்லைன் கல்லூரி.

_____________________________5


அரிசியோடு கவசம்.

இனி தேனாறு பாலாறு தான்.


ரேஷன் கார்டு.

_____________________________6


பாடம் நடத்தும் பேராசியர்

திரும்பிய போது தான் பார்த்தோம்

தேசிய பொருளாதாரத்தை.


கிழிந்த கோட்டு

______________________________7


சிரார்த்த சடங்குகள் முடிந்தவுடன்

அப்பா கேட்டது "கேட்டது."


பெரியார் படம் எங்கே?


______________________________8


பக்கடாவும் டீயும் தான்

இனி பல்கலைக்கழகங்கள்.


புதிய கல்விக்கொள்கை.


________________________________9


புற்றீசல் என்றால் என்ன என்று

இப்போது தான் புரிந்து கொண்டோம்


மசோதாக்கள்


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________10

புதன், 26 ஆகஸ்ட், 2020

கண்ணாடி வளையல்கள்.

 கண்ணாடி வளையல்கள்.

(ஹைக்கூ)

_______________________________________ருத்ரா


பெண்ணே! எங்கிருந்து

நான் இப்படி உடைந்து தூளாகும்

ஒலிகளை எழுப்புகிறாய்?

__________________________________


உன் கைகளில் வீணையில்லை

எப்படி இந்த இசை

விண்ணையும் கரைக்கின்றது?


___________________________________


வளையல்கள் அல்ல அவை.

அந்த கண்ணாடி விரியன்கள்.

கொத்தாமல் கொத்தின என்னை.


__________________________________


அந்த கண்ணாடி உரசல்களில்

என் இதயம் முழுதும்

தீப்பொறிகள்.

_____________________________________


வளையல்களை நீ கழற்றி 

வைத்தாலும் கவலையில்லை. 

ரிங்க் டோன் வைத்துக்கொண்டேன்.


_______________________________________




செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

நான்கு ஹைக்கூ

 நான்கு ஹைக்கூ

_____________________________ருத்ரா


பட்டன் தட்டினோம்...

அதற்காக பார்லிமெண்ட் 

தூண்களில் எல்லாம்  மசோதாக்களா?


ஜனநாயகம்.

_____________________________ருத்ரா



இனி சமூக இடைவெளி

விட்டு தான் தேர்தல்.

இரு பத்தாண்டு இடைவெளியில்!


கொரோனா எனும் தேர்தல் ஆணையம்.

_______________________________ருத்ரா

இனி இது சித்ரகுப்தன் கணக்கு.

இருந்தவர்களை இறந்தவர்களே 

அதிகம்.


வாக்காளர் பட்டியல்

_______________________________ருத்ரா



எப்போ வச்சுக்கலாம்?

இவரைக்கேள் என்றது கிளி.

படத்தில் இருந்தது கொரோனா.


தேர்தல்

_____________________________ருத்ரா


மூணு ஹைக்கூ

  மூணு ஹைக்கூ

______________________________________


காதோரம் கிசு கிசு.

உப்புக்கரிக்கும் இனிப்பாய்  காதல்.


கடற்காற்று.


____________________________ருத்ரா


ஏமாந்தது கொக்கு

மீனென்று.


நீரில் அவள் முகம்.

_______________________________ருத்ரா



அவன் எழுத இவன் அழிக்க‌

குறும்புக்காரப் பயல்கள்.


நண்டும் அலைகளும்

______________________‍‍‍‍‍‍_____________ருத்ரா





இரண்டு ஹைக்கூ

இரண்டு ஹைக்கூ

______________________________________


பட்டாம்பூச்சிகள் ஏமாந்து போயின.

மகரந்தம் கிடைக்க வில்லை.


கொடியில் அவள் பூப்போட்ட சேலை.


__________________________________ருத்ரா


நிலா வந்து வந்து

வெள்ளி முலாம் பூசியது.


சன்னலில் அவள்


_____________________________ருத்ரா


திங்கள், 24 ஆகஸ்ட், 2020

ஒரு ஹைக்கூ

 ஒரு ஹைக்கூ

_______________________


ஆகா கவிதை அற்புதம்!

எழுதப்பட்டிருந்ததோ

குழந்தை மலம் துடைத்த காகிதம்.


இலக்கியம்

_____________________________ருத்ரா

உன் விடியலுக்கு "அகர முதல‌"

 உன் விடியலுக்கு "அகர முதல‌"

____________________________________ருத்ரா

சுதந்திர தினம் 

மரியாதை குண்டுகளை 

உமிழ்ந்து விட்டு 

அந்தக் கொடியுடன்

சுருண்டு மடங்கித்

தூங்கப்போய் விட்டது.

என் அருமை தமிழ் மக்களே

சுதந்திரம் இன்னும்

உங்களுக்கு கண்விழிக்க வில்லை

என்று

எப்போதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் கண் விழிக்க 

உங்கள இமைகளை விரிக்கும்போதெல்லாம்

அந்த ஆதிக்க மொழியின்

பாறாங்கல் உங்களை நசுக்கிக்கொண்டு தான்

இருக்கிறது.

உங்கள் குழந்தகளின் பேரக்குழந்தைகளின்

இனிய பிறந்த நாள் விழாக்களிலும்

"ஜென்ம நட்சத்திர" அர்ச்சனைகளாக‌

அந்த ஆதிக்க மொழியின் காலடியில் தான்

போய் விழுந்து கிடக்கப்போகிறது.

இன்னும் இன்னும்

நீங்கள் புது மனைகள் புகும்போது

உன் தமிழின் பூரிப்பும் மனப்பொங்கலும்

அவர்களின் கோமியத்திலும்

அவர்களின் 

அந்த இரைச்சல் புகை மூட்டங்களிலும்

ஆழப்புதைக்கப்பட்டு விடுகிறது.

மீண்டும் மீண்டும்

ஆயுத பூஜை அது இது என்று

அந்த வேதாளங்களின்

வாய்க்குள் எப்போதுமே விழுந்து

கிடக்கப்போகிறீர்கள்.

தீபாவளி எனும் அவர்களின்

எந்திரன் ஆன நரகாசுரன்

உங்களையே அசுரன் ஆக்கி

உங்கள் மீதே பட்டாசுகொளுத்திப்போட்டு

ஆனந்தக்கூத்து ஆடப்போகிறான்.

வாராது வந்த மாமணி போல்

"கொரோனா" வந்து கொஞ்சம்

திரை போட்டு மறைத்துக்கொள்ள வந்திருக்கிறது.

ஓ என் அருமை தமிழ் மக்களே

இந்த "பண்டிகை" உற்சாகங்களில்

அந்த உல்லாச மத்தாப்புகளை

கொளுத்தி மகிழுங்கள்!

அதற்கு இப்போதே 

மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்.

ஆனால் இம்முறையேனும்

அந்த நரகாசுரன் உங்கள் கையிலிருந்து

நம் தமிழ் இன எழுச்சியின்

ராக்கெட்டுகள் சீறிக்கிளம்பட்டும்

அவர்களின் தந்திரக்கோட்டையை

அது தவிடு பொடியாக்கட்டும்.

அதற்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆம் தீபாவளி வாழ்த்துக்கள்.

அவை தீபங்கள் இல்லை

உன் விடியலுக்கு "அகர முதல‌"

பாடும் இனிய தீப்பொறிகள்.

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்!!


====================================================

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

‍________________________________________ருத்ரா


சிரிக்கமுடியவில்லை

கவசம்.

பார்க்கமுடியவில்லை

கருப்புக்கண்ணாடி.

அந்த நீண்ட அழகிய கைகளும்

தெரியவில்லை

கவிதை பேசும் கணுக்கால்களையும்

வண்ணச்சீறடிகளையும்

தரிசிக்கவே முடிய வில்லை

மெல்லிய சல்லாத்துணியில்

அந்த சன் ஸ்ட்ரோக்குக்கும்

அல்ட்ரா வைலட் கதிர்வீச்சுக்கும்

கவசம் கவசம் கவசம்.


அப்புறம்

எந்த எழவடா 

காதலிக்கத்துவங்குவது?


பெண்ணே

உன்னைக் காண இயலாத

ஏக்கமும் தாகமுமே

இப்படி கொப்பளிக்கிறது.

காதலின் கதிர்வீச்சுக்கு கவசம் இல்லை.

அறிவியலில் "குவாண்டம் டன்னலையும்"

துளைக்கும் 

கணித சமன்பாடுகள்  உண்டு.

காதலின் குவாண்டம்

இதோ உன் குங்குமப்பூ சிவக்கும்

கன்னங்களையும் பார்வையால்

வருடுகிறது.

சி ப்ளஸ் ப்ளஸ் ஜாவா இன்னும்

அந்த மலைப்பாம்பின் குகை என்னும்

பைத்தான் என்று

எந்த மொழியில் புகுந்துகோண்டாலும்

"காணாத உன் கண்களின்"

மொழி 

என் நெஞ்சுக்குள்

"மாறன்" பதியமிட்ட‌

கரும்புக்காடுகள் இனிமையின்

அடர்மழையை பரப்புகிறது.

பெண்ணே

உன் கண்கள் வாழ்க!

அதன் வழியே நம்

காதலும் 

வாழ்க வாழ்க வாழ்கவே!


============================================

புதன், 19 ஆகஸ்ட், 2020

குறும்பாக்கள் (ஏடு...3)

 


குறும்பாக்கள் (ஏடு...3)

___________________________________ருத்ரா



அந்த "பிரம்மம்" வேதாந்தத் துப்பாக்கியால்

பதிமூன்று தமிழர்களை சுட்டுத்தள்ளின.

ஸ்டெர்லைட்.

___________________________________ருத்ரா


வாசலில் நிறுத்தியிருந்த காருக்கு

சருகுகளால் தினமும் அபிஷேகம்.


இலையுதிர் காலம்

__________________________ருத்ரா


தமிழ்நாட்டைக் கூறு போட

அவர்கள் கசாப்புகத்தியை

இவர்கள் தீட்டுகிறார்கள்.


2வது தலை(வலி)ந‌கரம்.

_______________________ருத்ரா


சேர சோழ பாண்டியர்கள் வேண்டாம்.

இந்த குறுநில மன்னர்களே போதும்

தமிழன் வரலாற்றுக்கு.


2ஆவது தலைநகரம்

___________________________ருத்ரா.


தலையில் அடித்துக்கொண்டது

கொரோனா.

தலைநகர அரசியல்

_________________________ருத்ரா


நிறுத்து உன் பேனாவை.

பட்டாக்கத்தியை இந்த 

பட்டாம்பூச்சிகளின் மீதா எறிவது?


கவிதை

__________________________ருத்ரா

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

எஸ்பிபி

 எஸ்பிபி

‍‍‍‍‍‍_____________________ருத்ரா


இசைக்கடலே!

உன்னில் ஆர்ப்பரித்த அலைகள்

எல்லாம்

ராகங்களின் குமிழிகளாய்

எங்கள் நுரையீரலுக்குள் தான்

உலா வருகின்றன.

கொரோனா அரக்கனே

உனக்கு நுரையீரல் தானே 

வேண்டும்.

எங்கள் நுரையீரலைத்தின்று

பசியாறு.

அவன் இசை இன்னுமா

உன்னை 

அந்த கள்ளிப்பூவிலிருந்து

ரோஜாக்களாய்

பரிணாமம் அடையச்செய்யவில்லை.

"என்ன சத்தம் இந்த நேரம்"

என்ற அவன் பாட்டு

மௌனத்தை மட்டும் பிசையவில்லை.

அந்த அருவி

அந்த கிளைகள் எல்லாவற்றிலும்

"அவதார்" படத்தின்

அந்த உயிர்க்காட்டின் 

அபூர்வங்களைப்போல‌

தன் குரல் அமுதத்தையல்லவா

பூசி வைத்திருந்தான்.

புயல் காற்றுப் பிழம்பு கூட‌

மூச்சிறைத்து மூச்சிறைத்துப்போய்

தோற்று நின்றது

மூச்சு விடாமல் பாடல் வரிகளை

ஒரே தேன்சொட்டில்

இனிமைக்கடலாக்கினானே

ஒரு பாட்டில்.

அந்த மெல்லிய மூச்சின்

மயில்பீலிகளை

உன் கோர நகங்களால்

கிழித்து விடாதே.

ரீ ஆக்சி ரிபோ நியூக்கிளிக் ஆசிட்

என்று எப்படியாவது

உன் உச்சரிப்பை வைத்துக்கொள்.

ஆனால் 

எங்கள் எஸ்பிபி எனும் உயிரொலியை

எங்களிடையே உலா போக விடு.

அவன் பாடும் இன்ப அதிர்வுகள் முன்

பூகம்பங்கள் கூட‌

பச்சைப்புல்லாய் படுத்துக்கிடக்கும்.

கொரோனா எனும் 

கடவுளே

எத்தனை எத்தனை லட்சம் பேர்களை

குணமாக விட்டு எங்களிடம் 

தந்திருக்கிறாய்.

இவனையும் எங்களுக்கு தந்து விடு.

முட்கிரீடம் தரித்த தெய்வமே.

இவன் இசைக்கிரீடம் மீண்டுவந்து

இந்த உலகத்தை தேன்மழையால்

நனைத்துக்கொள்ளட்டும்.

ஓ!வைரஸ் கடவுளே

இந்த மனிதன் 

எங்கள் கடவுள்களின் கடவுளுக்கெல்லாம்

உள் நின்று உருக்கி

இசையின் உயிர்ப்பானவன்.

அவனை வாழ விடு.

உனக்கு கோடி கோடி நன்றி.

============================================

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

17.08.20 குறும்பாக்கள்

 17.08.20 குறும்பாக்கள்

______________________________________


ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்த ஆடு கழுத்து வரை தாவுகிறது.

அய்யனார் கையில் கத்தி.


ருத்ரா

____________________________________


கசக்கிப் பிழிந்தாயிற்று. 

உஜாலா தான் விடவேண்டும்.

நீரில் நிலவு.


ருத்ரா

_____________________________________


இங்கே புல்லுக்குள் எல்லாம்

ராணுவ டாங்கிகள்.

நத்தைகள்.


ருத்ரா

_____________________________________


கீரி பாம்பு வித்தையில் 

தினமும் டமாரச்சத்தம். 

டிவியில்  கொரோனா 


ருத்ரா

_____________________________________


கணினிகளில் தட்ட அச்சம்.

ஓட்டுகள் என்று 

உட்கார்ந்து விடுவார்களோ ?

ஜனநாயகம்


ருத்ரா

___________________________________


கொரோனா வடிவத்திலும்

தும்பிக்கையோடு வருவார்.

விநாயகர் சிலைகள்.


ருத்ரா

__________________________________

சனி, 15 ஆகஸ்ட், 2020

சுக்கா? மிளகா?

சுக்கா? மிளகா?

=========================================ருத்ரா


சுக்கா?மிளகா? சுதந்திரம்

என்று காரசாரமாய் கேட்டானே

பாவேந்தன்

இன்னும் அது நமக்கு

உறைக்கவே இல்லையே.

சுந்திரம் எனும் கத்திமுனையில்

நின்று கொண்டு

காவடிகள் ஆடுகின்றோம்.

மூன்றாவது மொழி படிக்கும்

சுதந்திரம் நமக்கு இருக்கிறது.

ஆனால் அது நம் முதல் மொழியை

வரலாற்றுக் குப்பையில்

கொட்டத்தயாராக‌

வாய்பிளந்து நிற்கிறது.

தேன் தடவிய சொற்களுடன்

மிரட்டல் தொனியையும் கொஞ்சம்

கலந்து பிசைந்து ஊட்டி

வரும் தேர்தலில் 

தமிழ் நாட்டின் ஆணிவேரை

அசைத்துப்பார்க்க நினக்கிறது

மத்தியை ஆளும் கட்சி.

ராமனையும் கிருஷ்ணனையும்

நம் தோளில் ஏற்றி

அவர்களுக்கு 

"பல்லக்கு" தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தஞ்சாவூர் பொம்மை போல‌

எப்படி வைத்தாலும் 

நிமிர்ந்து கொள்ளும் ஒரு

ரகசிய கம்பியூட்டர் அல்காரிதம் கூட‌

நாளை "பட்டன்"களில் இருக்கலாம்.

அதனால் தான் 

கையில் கொத்து கொத்தாக‌

மசோசாதாக்களை வைத்துக்கொண்டு

தமிழ் மொழியையும் 

தமிழ் இனத்தையும்

கொத்து பரோட்டா போட‌

தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஒரு சூன்யத்துக்குள்

பலமின்றிக் கிடப்பதால்

ஒரு வரலாற்றுப்பேரிடர் இந்தியாவை

விழுங்கக்காத்திருக்கிறது.

மக்கள் இதைப்பற்றி சிந்திக்கும்

சுதந்திரம் இல்லாத ஒரு சுதந்திரத்தில்

"லேசர்"கலை நிகழ்ச்சிகளில்

தூசுக்களாகிபோனார்கள்.

என்று தணியும் இந்த‌

"சுதந்திர தாகம்?"


==============================================





வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பிரம்மம் இல்லாத பிரம்மசூத்திரம்.

 பிரம்மம் இல்லாத பிரம்மசூத்திரம்.

==============================================ருத்ரா 

பிரம்மம் என்றால் சோறு என்று வைத்துக்கொள்வோம்.அது  சட்டியில் இருப்பதாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது.அதில் சோறு இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதே பிரம்மசூத்திரம்.சோறு என்று குறிப்பிட்டிருப்பதற்கு காரணம் இந்த உலகில் எந்த உயிருக்கும் உடனே  முதலில் வேண்டுவது உணவு தானே. அதன் பசியாறியபின்  தானே அது  சுற்றுப்புறங்களை உற்றுப்பார்க்கிறது.இதில் சோற்றின் மெய்ப்பொருளைப்பற்றி அதற்கு கவலையில்லை.அந்த மெய்ப்பொருளை பிரம்மம் என்று வைத்துக்கொண்டால் அதைப்பற்றி தேடும் அறிவு தான் இங்கே "பிரம்மம்" இங்கே அனுமானம் கொள்ளப்ப்படுகிறது சோற்றின்  மீது என்ன பசி இருக்கிறதொ  அதே பசி தான் இங்கு இருக்கிறது.ஆனால் இதற்குப்பெயர் "அறிவின் அதாவது அறிந்துகொள்வதன்"பசி என்கின்ற "ஞானத்தேடல்" என்று படோடபமாக கூறிக்கொள்ளலாம்.அந்த   மூடிக்கிடக்கும் சட்டியில் என்ன இருக்கிறது என்பதை  பற்றிக்கற்பனை செய்து அதோடு அதுவரை தான் அறிந்தவற்றையும் சேர்த்து கலக்கியடிக்கும் வேலையைத்தான் "வாதராயணர் எனும் வியாஸர்"  செய்திருக்கிறார். ஆனால் தான் எழுதிய அந்த சொற்கள் எல்லாம் மேலே சொன்ன கலக்கியடித்தல் எனும் "காக்டெயிலை" சுருக்கமாக அதாவது சூத்திரங்களாக அமைத்து அவர் எழுதியிருப்பது தான் இங்கே மிகவும் பாராட்டத்தக்கது.அவர் இந்த நூலில் 

555 சூத்திரங்களை எழுதியிருக்கிறார்.இதை ஒரு நூல் கண்டு போல எடுத்துக்கொண்டால் அதன் அடி முடி தெரியாது தான்.அவர் ஒரு வரிசைப்படி எழுதியிருந்த போதும் நாம் அந்த நூல்  கண்டின் ஏதாவது ஒரு இழையைப்பிரித்தால் அவர் எண்ண ஓட்டத்தின் "குறுக்குவெட்டுத்தோற்றத்தை"அறியலாம்.

அதை வைத்தே (1.2,22) என்னும் சூத்திரத்தை இங்கு பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

"விசேஷண் பேத வ்யபதேசாப்யாம் ச ந   இதரௌ" 

இதைச்   சேர்த்து எழுதினால் 

விசேஷண்பேதவ்யபதேசாப்யாம் ச நேதரௌ"  ஆகும்.


இதன் பொருள்


நியாய வைஸேஷிகாவில் முக்கியமாகக்கருதப்படும் பிராதானா எனும் முதற்பொருளும் அதன் உட்கூறுகளாக தனிப்பட்ட பொருளும்இவர் சொல்லும் பரமாத்மா ஜீவாத்மா அல்ல என்கிறார். அவை வேறு விதமானவை என சொல்கிறார். ஒரு உட்கூறு என்பது முதற்பொருளின் தன்மையது தான். அது போல முதற் பொருளும உட்க்கூறின் தமையது தான். இதைத்தான் நம் அத்வைதமும் ஒன்றிழைக்கிறது. அப்படி அல்ல என்று மறுக்கிறார் வேதராயணர். ஆனால் இதற்கு அவர் அடுத்த சூத்திரத்தில் சொல்லியிருப்பதைப்பார்த்தால்  அது இன்னும் வேடிக்கை


"ரூபோஉபன்யாஸ்ச "


(ரூப உபன்யாஸ்ச)


இந்த வித்தியாசங்கள் வடிவம் ப‌ற்றியவை என்கிறார்.வாதராயணர். நியாவைசேசிகள் இது அறிந்தது தானே.உட்கூறு மிக்கச்சிறு வடிவம் உடையது.முதற்பொருள் ஒரு பிரமாண்ட வடிவுடையது யாவரும் உணர்ந்தது தான் இதில் என்ன வாதம் தேவை என்கிறார்கள் நியாய  வைசேசிகள்.ஆனால் அவனிடமிருந்து (ப்ரம்மன்) தான் உயிர்விசை உருவாகிறது" எனும் முண்டோபனிஷத வரிகளை (2.1.3) முன் வைக்கின்றனர்.சரி அப்படியென்றால் பிரம்மம் எனும் அந்த மூல வடிவம் யாராலும் பார்க்கப்படவில்லை அல்லது பார்க்கப்பட முடியாது எனும் போது அதற்கு எப்படி ஒரு வடிவத்தை நீங்கள் காட்டுவீர்கள்? என எதிர் வாதம் புரிகின்றனர் நியாவைசேசிகள்.அதற்கு எப்படியாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற வாதராயணர் ஆதரவாளர்கள் இதற்கும்  அதே முண்டகோபனிஷத வரிகளைக்காட்டி (2.1.10)"எல்லாமே "புருஷா தான்"என்கின்றனர்.இந்த புருஷாவைத்தான் "புருஷ சூக்தம் ஆக்கி அதில் நான்கு வர்ண சனாதனத்தை பின்னாளில் வந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்துக்கு ப‌யன்படுத்திக்கொள்கின்றனர். அதை விடுங்கள். அது வேறு விஷயம்.

இந்த நிலையில் வைஸ்வாநரன் என்று இன்னொரு சொல்லை இதனுள் சொருகுகிறார்கள் எப்படியாவது "பிரம்மதை"பார்க்கவே முடியாதனிலையில்  அல்லது அறிவின் புலத்துக்குள் கொண்டுவரவே முடியாத போது"அதற்கு உருவம் சமைக்கிறார்கள்.அதுவே "வைஸ்வாநரன்"என்பது.அதன் விவரம் என்ன? பார்போம் அடுத்த சூத்திரத்தில். மயிர் பிளக்கும் வாதங்களைக்கொண்டு தான்இங்கே பிரம்மம் காட்டப்படுகிறது.இது கானல் நீரில் படகு விடுவது ஆகும். 

"

இந்த சூத்திரத்துக்கு சங்கராசாரியார் அவர்கள் உரை எழுதியிருக்கிறார். அவர் எல்லா உபநிஷதங்களையும் கரைத்துக்குடித்து அதை இதில் நிரவ விட்டிருக்கிறார். இந்த சூத்திரத்தில் வாதராயணர் என்ன சொல்ல வருகிறார் என்றால் இவர் காலத்தே சிறந்த நூலாக கருதப்பட்டிருந்த நியாய வைஸேஷிகா எனும் நூலின் உட்பொருள்களை தவறு என்கிறார். அதாவது பிரம்மம் என்பதைப்பற்றிச்  சொல்ல வந்த அவர் நியாயவைஸேஷிகாவின் அடிப்படையை தகர்ப்பத்தையே நம் நோக்கமாக இந்த பிரம்மசூத்திரத்தில் நிறுவ முயன்றிருக்கிறார். எனவே பிரம்மசூத்திரம் பிரம்மம் பற்றிய நிலையை அப்படியே வைத்து விட்டு அந்த வாதச் சண்டைகளுக்கு மட்டுமே எழுதப்பட்டதாக தோன்றுகிறது.  

=========================================================

(தொடரும்)


திங்கள், 10 ஆகஸ்ட், 2020

குறும்பாக்கள்

 குறும்பாக்கள்



அடுப்பு ஓய்வு 

எடுத்துக்கொண்டது


டப்பாவில் பீஸா‍‍‍‍

____________________ருத்ரா


பிரம்மாவைக்கூப்பிட்டது.

சதுரங்கம் விளையாட.

கோரோனா

‍‍‍‍‍‍_______________________ருத்ரா


விரைவில் மாறும்

இந்தியாவின் தலைநகரம்

அயோத்தி

______________________ருத்ரா


சர்வாதிகாரத்துக்கு

இறுதியாய் வந்த பெயர்

ஜனநாயகம்.


‍‍‍‍‍‍________________________ருத்ரா


முதலில் கவசம் தான் தயாரித்திருக்கிறோம்

ஆயுதத்திற்கு இனிமேல் ஆர்டர்

கோரோனா


__________________________ருத்ரா










ஹே! ராம்!

 

ஹே! ராம்!

================================ருத்ரா


மதம் கடவுள் என்பவை 

தன் பரிணாமத்தை இழந்தபோது

இவர்கள் 

கண்டு பிடித்தது தான்

அந்த பரிமாணத்தின் கல்லறையை.

அதற்கு 

அந்த குழந்தை ராமன் என்னசெய்வான்.?

குழந்தைத்தனமாக‌

கீழ்ச்சாதி மக்களுக்கும்

அவன் அன்புகாட்டினால்

இந்த தடவை அவனையே

ஆக்கினிப்ப்ரவேசம் புகுத்திவிடுவார்கள்.


ஹே! ராம்!

======================================



oosiyilkaatukal...mikavum athikamaanap parvaikaL

 

ஊசியிலைக்காடுகள்............ருத்ரா

பார்வைகள்

1.71ஆ0
4 ஆக.5 ஆக.6 ஆக.7 ஆக.8 ஆக.9 ஆக.10 ஆக.02004006008001ஆ1.2ஆ
4 ஆக., 2020, முற்பகல் 5:30:00123
5 ஆக., 2020, முற்பகல் 5:30:00114
6 ஆக., 2020, முற்பகல் 5:30:00124
7 ஆக., 2020, முற்பகல் 5:30:00110
8 ஆக., 2020, முற்பகல் 5:30:001,009
9 ஆக., 2020, முற்பகல் 5:30:00117
10 ஆக., 2020, முற்பகல் 5:30:00114

அதிகம் பரிந்துரைத்தவர்கள்

www.google.com
12
www.blogger.com
1
www.google.co.in
1
www.indiblogger.in
1
பிற
1.7ஆ

சிறந்த பரிந்துரையாளர்களின் URLகள்

பார்வையாளர்கள்

உலாவிகளின்படி பக்கப்பார்வைகள்
Chrome
727
Firefox
327
Mobile Safari
303
Safari
158
MSIE
66
Silk
25
SamsungBrowser
24
CriOS
18
GSA
18
பிற
45
மேலும்
ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின்படி பக்கப்பார்வைகள்
Windows
830
Android
462
Macintosh
205
iPad
75
Linux
50
Unix
34
iPhone
25
hp-tablet
24
Unknown
4
பிற
2
மேலும்