திங்கள், 29 ஜூலை, 2024

கவிதை

 

கவிதை

_________________________________

எப்சி.


மின் வெட்டு.

கும்மிருட்டு.

நானும் என் அதுவும் மட்டுமே.

வெளிச்சம் வரும் வரை

எழுத்துக்கள் கோர்த்துக்கொண்டிருந்தேன்.

இடறி விழாத கற்பனையில்

பின்னி பின்னி

எழுதிக்கொண்டே போனேன்.

குபீர் என்று

வெளிச்சம் வந்தது.

இருட்டையெல்லாம் அழித்து விட்டது.

என் எழுத்துக்களையும் தான்.


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக