செவ்வாய், 30 நவம்பர், 2021

குரல்கள்

 குரல்கள்

____________________________ருத்ரா


ஆண்டவனே!

எங்கள் கூக்குரல்கள்

உனக்கு எட்டாத உயரத்தில்

நீ

ஊஞ்சல் ஆடுகிறாய்.

எங்கள் சிந்தனையில் 

நீ நிழலாடுவது மட்டுமே

மட்டுமே தெரிகிறது.

எங்களுக்கு விருப்பமான‌

புன்முறுவல்கள் பூத்த‌

ஒரு முகத்தை உன் மீது

மாட்டி வைத்து 

உன்னைத் தினம் தினம்

குளிப்பாட்டுகிறோம்

எங்கள் ஆராதனைகளால்.

எங்களுக்கு நீ புரிந்து கொள்ளும்

மொழியில் 

இல்லாவிட்டாலும்

உன்னை எங்கள் இதயத்துடிப்புகளில்

ஏந்தி

ஒலிகளை உன் மீது தூவுகிறோம்.

எவரோ 

ஏதோ 

சொன்னதை 

உன் மீது முழங்க வைக்கிறோம்.

"மனிதா....நிறுத்து.

உன் குப்பைகளை என் மீது

கொட்டுவதை நிறுத்து.

பன்றிகள் உறுமுவதும்

மாடுகள் கத்துவதும்

நாய்கள் குரைப்பதும்

ஏன்

இந்த சில்வண்டுகள்

ரீங்காரம் செய்வதும் கூட‌

எனக்கு புரிகிறது.

நீ ஒலிப்பது

எனக்கு புரியவில்லை.

உன் கூச்சல்களில்

சவுக்கடிகள் கேட்கின்றன.

ரத்த விளாறுகளில் தோல் உரிந்து

கிழிந்த இதயங்கள்

முனகுவதே கேட்கிறது.

மிதிக்கின்ற கால்களின் அடியில் 

குரல்வளைப் பிஞ்சுகளின்

நசுங்கிய குரல்கள் கேட்கின்றன.

நீ வீசியெறியும் சொற்கள் எல்லாம்

பாறாங்கற்களாய்

என்னையே 

கூழாக்கி

கூளமாக்கி..."

"ஐயோ...போதும் இறைவா!

புரிந்து கொண்டோம்

உன்னை நாங்கள் துன்புறுத்துவதை.

இந்தக்கல்லையும் மண்ணையும்

மதம்பிடிக்க வைத்து

நாங்கள் வெறியாட்டம் ஆடுவதை.

கடவுள் என்பது

அந்த அடிவானத்துக் கரை அல்ல.

அதற்கு நீந்த நினைக்கும்

சிந்தனை மட்டுமே."


____________________________________

ஞாயிறு, 28 நவம்பர், 2021

ஜனநாயகம் வெல்லட்டும்

 ஜனநாயகம் வெல்லட்டும்

_________________________________ருத்ரா


ஜனநாயகம் 

ரோஜாவா?

தாமரையா?

அந்த இரண்டும் 

இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்

அது இனிப்பான‌

ஒரு ஆப்பிள்.

அந்த ஆப்பிள்களை

கொள்(ளை)முதல் செய்ய வந்த‌

அரசுவின் செல்லப்பிள்ளைகளாய்

கார்ப்பரேட்டின் சூட் கோட்டு அவதாரத்தில்

இருந்து கொண்டு

கொடூர ரத்த உறிஞ்சிகளாய் 

வந்து அச்சம் ஊட்டியதில்

விவசாயிகள் எனும் சிங்கங்கள்

சிலிர்த்து எழுந்தன.

"அதன் கர்ஜனை அலைகள்

நாளை 

அந்த கணினிப்பட்டன்களில்

அமர்ந்திருக்கும் 

நம் நாற்காலிகளின் கால்களை

முறித்துப்போட்டுவிட்டால் என்ன செய்வது?"

இது ஏற்படுத்திய அந்த 

நரம்பு நடுக்கமே

வேளாண் சட்டங்களின் வாபஸ் அரங்கேற்றம்.

விவசாயப்போராளிகளின்

உறுதியான நோக்கங்கள்

அந்த ஆப்பிள் கனிகளை

ஜனநாயகம் காக்கும் கேடயமாய்

பரிணாமம் அடையச்செய்து விட்டன.

இந்த சாணக்கியர்களோ

எம் எஸ் பி எனும் 

உயிர்க்கவசத்தை தந்திரமாய்

உடைத்து நொறுக்கவே

இத்தனை நாடகமும் நடத்தினர்.

பேச்சு வார்த்தை என்கிற‌

ரப்பர் வடம்பிடித்து

அந்த "பொம்மைத்தேரை" இழுப்பதாய்

பாவனைகள் காட்டினர்.

எத்தனை பழிச்சொற்களை

கூர் தீட்டிய அம்புகளாக்கி எய்தனர்.

தன் உயிரை உழைப்பை

வேர்வைச் சேறாக்கி அதில் இந்த‌

தேசத்தின் சோறாக்கி தந்தவர்களை

தேசவிரோதிகள் எனத்தூற்றிய‌

அந்த வன்முறைச்சொல்லாடலை

தூள் தூளாக்கினார்களே!

அவர்களின் 

கலப்பைகளே இங்கு

கனரக பீரங்கிகள்!

கோடிக்கணக்கான கிசான்கள் 

அப்பாவித்தனமாய் அந்த முண்டாசுகளில்

இருக்கட்டும்

நம் "ராம பாணத்தை"வைத்து

இவர்களை அந்த கார்பரேட்டுகளின்

அடிமைகள் ஆக்கி விடலாம்

என்று தானே அந்த‌

பண்ணைச்சட்டங்கள்

அவசர அவசரமாய் "குரல்"வாக்கெடுப்பில்

பிரசவிக்கப்பட்டன.

ஆனால் அந்த அரைகுறைப்பிரசவத்தில்

குரல்வளை நெறிக்கப்பட்டது

நம் ஜனநாயகம் அல்லவா.

அந்த அழுக்கு முண்டாசுகளின்

உள் சீற்றம் காட்டிய சுநாமியில்

இவர்கள் கட்டி வைத்த‌

"அரக்கு" மாளிகைகள் அடித்துச்செல்லப்பட்டனவே.

எழுநூறு உயிர்களை ஆகுதியாக்கி

வளர்த்த இந்த அக்கினி உழவர்களின்

வேள்விகளில்

அவர்களின் தந்திர சனாதன வேள்விகள்

எல்லாம் சாம்பல் ஆகட்டும்.

ஜனநாயகத்தின் அறுவடையை

அர்த்தம் உள்ளதாக ஆக்கிய‌

ஏர் உழவர்கள் இந்த‌

போர் உழவர்கள்!

ஒற்றுமையே ஜனநாயகம்.

இந்த‌

ஜனநாயகமே என்றும்

வெல்லட்டும்.


______________________________________

28.11.2021

வெள்ளி, 26 நவம்பர், 2021

வாருங்கள் ஓட்டாளர்களே!

 வாருங்கள் ஓட்டாளர்களே!

________________________________ருத்ரா.


ஓட்டாளர்களே!

இந்திய ஜனநாயகம் 

அதன் தேசியக்கொடியை

மானிட சமநீதி

மானிட நேயம்

சமூக உணர்வு

இவற்றில் பின்னி சுற்றிய‌

ஒரு "தொப்பூள் கொடியில்" தான்

பதியம் இட்டிருக்கிறது.

இதை மறைக்கும் 

மாய மந்திர மூட்டங்களாய்

மத முகமூடி மாட்டிக்கொண்டு

வரும் 

பாரத மாதாவிடம் கேளுங்கள்.

தாயே உன் புத்திரர்கள்

ஒரே வார்ப்பில் உதித்தவர்கள் தானே.

அவர்களுக்கு 

வேற்றுமை வர்ணம் பூசும்

சதிகளின் சாஸ்திரங்களை

உருவாக்கியவர்கள் கையிலா

இந்த நாட்டைத்தருவது?

இந்தக்கேள்விக்கு பதிலாய்

இப்போது அந்த தாயின் கண்களில்

கண்ணீர் வெள்ளம்.

பாரத புத்திரர்களே!

இந்த "பேரிடர்"களை நீங்கள்

கடப்பதற்கு

ஒற்றுமையோடு

ஒரு "நோவா"கப்பல் கட்டுங்கள்.

அதில் இந்த நாட்டு

ஓட்டாளர்களின் சிந்தனைகள்

ஒரு முகமாய் குவிக்கப்படவேண்டும்.

சீறிப்பாயும் ஆதிக்கவெறி பிடித்த‌

அந்த அலைகளை அடக்கவேண்டும்.

அந்த அலைகளை கடக்கவேண்டும்.

அந்த அலைகள மிதித்து

அதன் மீது நடக்கவேண்டும்.

அதோ

மதநல்லிணக்கத்தை அடையாளம் 

காட்டும் புறாக்கள்

சிறகு விரித்து உங்களை

வரவேற்கட்டும்.

பளிங்குகற்கள் அடுக்கி

இவர்கள் கோவில் எழுப்பலாம்.

ஆனால்

அதன் இருட்டுமூலைகளில் தான்

இவர்கள் வௌவ்வால்கள்

பசியோடு 

உங்கள் மீது பாயக்காத்திருக்கின்றன.

அறிவு வெளிச்சம் ஏந்திப் புறப்படுங்கள்.

கணினியின் 

படுகுழியில் விழுவதற்கு முன்

உங்கள் சமதர்மப்பார்வையின்

அல்காரிதத்தை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் புதிய யுகத்தின்

"பாஸ் வர்டை" தொலைத்து விடாதீர்கள்.

மானிடத்துச் சமூகநீதியின்

சமத்துவமான சிந்தனைக்கீற்றுகளே

அந்த "பாஸ் வர்ட்".

இது வரை

தோற்பதற்காக ஜெயித்தது போதும்.

இம்முறை

ஜெயிப்பதற்காகவே ஜெயித்துக்காட்டுவோம்

வாருங்கள் ஓட்டாளர்களே!


_____________________________________________________







வியாழன், 25 நவம்பர், 2021

குலை குலையாய் முந்திரிக்காய்..

 குலை குலையாய் முந்திரிக்காய்..

___________________________________________ருத்ரா


"குலை குலையாய் முந்திரிக்காய்

நரியே நரியே சுற்றிவா...."

எல்லாவற்றையும் விழுங்கலாம்.

நரியே நரியே ஓடிவா!


இந்த சாணக்கியர்களின்

ஆட்டம் துவங்கி விட்டது.

மக்கள் என்றால் வெறும்

கணிப்பொறிகளில் விழும் குப்பைகள்

தானே!

கடவுள் புராணங்களோடு

மதவெறித் தீ மூட்டி

அதையே தேசியம் ஆக்கி

ஆயிரம் கூச்சல்கள் போடலாம்.

அவ்வளவும் நமக்கு ஓட்டுக்கரன்சிகள்.

அதை வைத்து

கீரி பாம்பு வித்தை காட்டி

நம் ஜனநாயக முற்றங்களில்

மசோதாக்குப்பைகளை

மனம் போனபடி வாரி இறைக்கலாம்.

அவை சட்டங்கள் எனும்

பாறாங்கல்லாய் இந்த ஓட்டுப்புழுக்களை

நசுக்கி கூழாக்கலாம்.

அப்புறம் ஓட்டுக்கரன்சிகள் விழுவதில்

தடங்கல் ஏற்பட்டால்

நாம் போட்ட அந்த மசோதாக்குப்பைகளை

மீண்டும் அகற்றி

"தூய்மை நாயகன்"களாய்

வலம் வரலாம்.

நாம் எதற்கும் அஞ்சவேண்டாம்.

நம் கையில் கண்ணுக்குத்தெரியாத‌

அந்த சூலமும் வில் அம்பும் இருக்கிறது.

ரத்தம் வழிய வழிய

அதன் மிரட்டல் பிம்பங்களும் இருக்கின்றன.

அந்த "மாட்டுச்சாணத்தை விடவா"

வலிமையான பீரங்கிக்குண்டுகள்

நமக்கு வேண்டும்?

நான்கு வர்ண புகை மூட்டமும்

இருக்கிறது.

அப்புறம் என்ன?

"குலை குலையா முந்திரிக்காய்"

விளையாட்டு தான்.


___________________________________________

செவ்வாய், 23 நவம்பர், 2021

குவாண்டம் அறிவோம்‍‍ (1)

 

குவாண்டம் அறிவோம்‍‍  (1)

____________________________________________________________ருத்ரா இ பரமசிவன்


குவண்டம் என்பது அறியவில் பயணத்தின் அழகிய மைல்கல்.மனித அறிவு ஆற்றல் அல்லது அறியும் ஆற்றலின்

நுண்மை அடுக்குகளை வெளிக்கொணர்வதே குவாண்டம் தான்.அறிவுத்திரட்சியை இரு கூறாய் பிரிக்கலாம்.

அதில் நாம் அறிந்ததும் அறியாததும் அல்லது அறிய முயல்வதுமான ஒரு குழம்பியம் அல்லது கலம்பகம் இருக்கிறது.நாம் அதை அறிந்துவிட்டோமா?இல்லையா?என்ற கேள்வி ஏதாவது ஒன்றைப்பற்றி நாம் குறிப்பிடும் இடத்தில் "அதுவா? அது இல்லையா?"என்ற கேள்வியைப்போன்றது தான்.இந்த உறுதியின்மையே (அன்செர்டனிடி)

தான் குவாண்ட இயற்பியலின் உள் சாறு எனலாம்.அதனால் தான் இதைக்குழம்பியம் என்று குறிப்பிட்டேன்.இதை ஆங்கிலத்தில் ப்ராபபிலிடி என்று குறிப்பிடுகிறார்கள்.ஆனால் குவாண்டம் என்னும் போது அதன் மொழி ஆங்கிலம் அல்ல என்பது உண்மை யெனினும் "பராபபலிடி" எனும் சொல்லே தான் குவாண்டத்தின் மொழி என்று நாம் சொல்வது மிகையாகாது.

(தொடரும்)



குவண்டம் என்பது அறியவில் பயணத்தின் அழகிய மைல்கல்.மனித அறிவு ஆற்றல் அல்லது அறியும் ஆற்றலின்

நுண்மை அடுக்குகளை வெளிக்கொணர்வதே குவாண்டம் தான்.அறிவுத்திரட்சியை இரு கூறாய் பிரிக்கலாம்.

அதில் நாம் அறிந்ததும் அறியாததும் அல்லது அறிய முயல்வதுமான ஒரு குழம்பியம் அல்லது கலம்பகம் இருக்கிறது.நாம் அதை அறிந்துவிட்டோமா?இல்லையா?என்ற கேள்வி ஏதாவது ஒன்றைப்பற்றி நாம் குறிப்பிடும் இடத்தில் "அதுவா? அது இல்லையா?"என்ற கேள்வியைப்போன்றது தான்.இந்த உறுதியின்மையே (அன்செர்டனிடி)

தான் குவாண்ட இயற்பியலின் உள் சாறு எனலாம்.அதனால் தான் இதைக்குழம்பியம் என்று குறிப்பிட்டேன்.இதை ஆங்கிலத்தில் ப்ராபபிலிடி என்று குறிப்பிடுகிறார்கள்.ஆனால் குவாண்டம் என்னும் போது அதன் மொழி ஆங்கிலம் அல்ல என்பது உண்மை யெனினும் "பராபபலிடி" எனும் சொல்லே தான் குவாண்டத்தின் மொழி என்று நாம் சொல்வது மிகையாகாது. 



ஞாயிறு, 14 நவம்பர், 2021

a man wriggles like a worm

 a man wriggles like a worm

when he is thoughtful of
his olden days
when he figures out an
invisible finger to write
a long and long sentence
charmed with nostalgic foolery
and when
he is like a pen thrown
amidst the farthest clouds
of non-sensical imaginations
that impost poetry of moments!
iam also picking one such a
pebble along the shore of death
where the pinches of sand
sing a lullaby and eulogy
at the edge of my bed and pillows.
_________________________ruthraa
விரும்பு
கருத்துத் தெரிவி

வெள்ளி, 12 நவம்பர், 2021

எழுந்து வா!

 எழுந்து வா!

________________________________

ருத்ரா


என்னை கவிஞனே?

என்ன எழுதப்போகிறாய்?

உன் மேக மண்டலங்களும்

உன் பிரபஞ்சத்துக் "கருங்குழிகளும்"

உன் சிந்தனைகளையெல்லாம்

விழுங்கித்தீர்த்து விட்டனவே என்ற‌

மனச்சோர்வு

உன்னை 

இந்த படுக்கையில் வீழ்த்திவிட்டதோ?

இந்த மக்களை புடம் போட்டு புடம் போட்டு

மீண்டும் 

ஆனா ஆவன்னா...

எழுதுவதாய் எண்ணமோ?

உண்மையான சுதந்திரம்

அச்சமும் பேயாட்டங்களுமாய்

நிறைந்து போய் விட்ட‌

இந்த சாதி மத இருட்டுக்காடுகளை

பொசுக்கி விடுவது தானே!

ஆனால் 

அறியாமையின் இந்த சொக்கப்பனை

ஆகாயம் முழுவதும் தீ நாக்குகளாய்

எழுந்து சாம்பல் ஆக்கத்துடிக்கின்றனவே!

உண்மை தான்.

கவிஞனே!

உன் எழுத்துக்கள் வெறும்

இலக்கண இலக்கிய முகடுகளில்

உலவிக்கொண்டிருப்பதல்ல 

என்பதை இப்போதாவது புரிந்து கொள்.

மானிட ஆற்றலின் 

உள் எழுச்சியிலிருந்த 

அந்த எரிமலைக்குழம்பிலிருந்து

உன் எழுத்துக்களை

அச்சு கோர்க்கும்

ஒரு சீற்றத்தோடு எழுந்து வா!

இந்த மயில்பீலிகளையும்

பட்டாம்பூச்சிகளயும்

வருடிக்கொண்டிருக்கும் 

அந்த "ஃப்ராய்டிச"ப்பிறாண்டல்களிலிருந்து

எழுந்து வா!

இவர்கள் எழுப்பும் உயரமான சிலை

அந்தக்கடவுளை இடித்து

காயப்படுத்தியது தான் மிச்சம்.

மனித ரத்தம் பருகவா

கடவுள் அத்தனை உயரத்தில்

காத்துக்கொண்டிருக்கிறார்?

மனிதம் எழுப்பிய அறிவு தாகம்

கடவுளை இன்னும் எட்டவில்லை.

இந்தக் கூச்சல்கள் நிற்கட்டும்.

ஓ! கவிஞனே!

உன் உயிரெழுத்துக்குள்..மெய்யெழுத்துக்குள்

ஓராயிரம் முழக்கங்கள்

மானிடத்து மணி முழக்கங்கள் ஆகி

ஒலிக்கட்டும்.

உன் எழுத்துப்புயலில்

இந்த குப்பைகள் விலகி ஓடட்டும்!

புதிய யுகமாய்

எழுந்து வா!


_________________________________








வியாழன், 4 நவம்பர், 2021

மின்னுகின்றன....

 மின்னுகின்றன.

‍‍‍‍__________________________________ருத்ரா


என் இரவை நான்

நார் உரித்து அதிலிருந்து

கனவு இழைகளை

நெசவு செய்த என்

நெய்தல் பாட்டுகளில்

கண்ணுக்கு எட்டா கடலிலிருந்து

அலைகள் பிளிறும்.

ஓங்காரம் கேட்கும்.

அடி ஆழத்தின் வக்கிரங்கள்

வண்ண வண்ண பவளத்திட்டுகளாய்

என் காகிதங்களில்

கரு தரிக்கும்.

ஒற்றை ஆள் ஒரு சமுதாயமா?

கால்களின் விரலிடுக்கின் பரல்களில்

ஒரு கூழாங்கல்லைக்கேட்டேன்.

கரை மணல் சர சர வென்று

பின்னணி இசை அமைத்தது.

விளங்காத கேள்வி அது?

என் கண்ணீரின் ஒற்றைச்சொட்டில்

உங்கள் அவலங்களும் சீற்றங்களும்

பிம்பம் காட்டும் வாய்ப்பு உண்டா?

புரியாததை வைத்து புரிந்து கொள்.

இல்லாததை இருப்பதாகக்கொள்.

கட கடவென்று சிரித்துவிட்டு

ஒரு ஒலி மறைந்து தேய்ந்து விட்டது.

அது என்ன கட்டளை?

யாருக்குத் தெரியும்?

என் தோளில் கட்டளைப்பலகையை 

சுமந்து கொண்டு

மிக மிக உயரமான சிகரங்களிலிருந்து

வேக வேகமாய் இறங்குகின்றேன்.

பலப்பல நூற்றாண்டுகளின்

துருவேறிய படிமங்கங்கள்

பொடிபோடியாய் உதிர்ந்து விட்டன.

அந்த வெறிக்குரல்களுடன்

கழுத்துகளை சீவித்தள்ளும்

வாள் முனைகள் மட்டும்

அந்த சூரிய வெளிச்சத்தில்

தக தக வென்று மின்னுகின்றன...

ஆனால் 

இப்போது துப்பாக்கிக்குண்டுகளாய்.


_____________________________________________

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

_________________________________ருத்ரா



விழா என்று

வரிசை வரிசையாக‌

தீபங்கள் ஏற்றுகிற நாட்டில்

அவை ஒவ்வொன்றும்

ஒரு விடியல் குஞ்சு என்ற‌

ஓர்மை அந்த திரியில் 

பற்ற வில்லையே அது ஏன்?

அந்த எண்ணெய்க்குள் துடிக்கும்

நம் இதயவிளிம்புகளின்

எண்ண ஓட்டத்தின் ரத்தம்

வழிவதில்லையே ஏன்?

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாய்

நம் சிந்தனையின் சதுப்புக்காடுகளில்

சாதி மதங்களே

அசுரன்கள் ஆகி கோரைப்பல் 

காட்டுகின்றன.

அதன் வேர்களின் வயது

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்

என்று

நம் அறிவின் கீற்றுகளை நசுக்கி

கூழாக்கி 

மூச்சுத்திணறும் பாரமாய்

நம்மை அமுக்கிக்கொண்டிருக்கின்றன.

"என்னைத் திறந்து பார்க்க வேண்டுமா?

அதன் கொத்துச்சாவி அந்த 

உளறல் மந்திரக்காரன்களின்

இடுப்பில் தான் இருக்கிறது.

அவனிடம் போ"

என்று சொல்லும் கடவுளா

நம்மை ஆட்கொள்ளுவது?

அந்த ஆட்கொல்லிகளின் பிடியில்

இருந்து மீட்டா

அந்த ஆண்டவனை நாம் தேடுவது?

பாருங்கள் இன்னும்

இருட்டைப் பிய்த்து பிய்த்து வைத்துதான்

தீப விழா நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

உயிர்கள் உள்ள வெறும் 

நகர்வன இனமாய்

காலத்தின் கழிவுகளிலேயே நாம்

களிப்புக்கொண்டிருக்கிறோம்.

மனித அடையாளம் இல்லாமல் இந்த‌

விலங்கு முத்திரைகளோடு

காலம் கழிகின்றது.

மானுடம் என்ற சுவடே இல்லாத‌

மானிடர்கள் இந்த மண்ணில்

ஊர்ந்து கொண்டிருக்கும் அவலங்கள்

அகலும் நாள் என்ற ஒரு நாள்

அரும்பவே அரும்பாதா?

தெரிய வில்லை.

இந்த இருட்டுகளின் அகல்விளக்குகளில்

என்றைக்காவது

ஒரு நாள் 

புடைக்கும் நம் 

கழுத்து ந‌ரம்புகளின் 

சுருதிகளில் யுகமாற்றத்தின்

ஒரு லாவா மலர் விரிக்கும்!

இருப்பினும் எல்லோருக்கும் 

எப்போதுமே

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


_____________________________________


புதன், 3 நவம்பர், 2021

ஆர்ப்பரித்து வா!

 


ஆர்ப்பரித்து வா!

________________________________ருத்ரா



மானிடனே

நீ மரம் ஏறினால் மட்டும் 

போதாது.

அதன் உச்சியில் ஏறி

பழம் பறித்துப் போடுவது

இருக்கட்டும்.

உன் தலையில் விண் இடிக்கும்

ஒரு உணர்வு தட்டுப்பட வேண்டும்.

அதுவே

உன் கேள்வியின் திரிமுனை.

உன் அறிவு கிளர்ந்து ஒளிர்ந்து

பரவ வேண்டிய முனை.

மனிதன் என்று

நீ தலை நிமிர்த்திய போதே

உன்னை அமுக்கிக்கொண்டிருந்த‌

ஆதிக்கப்பின்னல்கள்

கட்டறுத்து விழும் காட்சி

கண்முன் தெரிகின்றதே!

இதை மறைக்கும் அபினி மூட்டங்கள்

பொய்மைக்கதைகள் பேசி

உன்னை இன்னும்

கீழே கீழே புதைக்க‌

மந்திரங்கள் பொழிகின்றார்கள்.

இது வரை நீ கேட்ட 

நரகாசுரன்கள் எல்லாம் நீயே தான்!

உன்னை நீயே வெடித்துச்சிதறி

விளையாடும் 

இந்த அறியாமை விலகும் வரை

உனக்கு விடியலும் இல்லை.

குளியலும் இல்லை.

அடர்த்தியான இந்த அமாவாசை இருட்டே

உன் கண்களில் குடியிருக்கும்.

தமிழா! விழி!

வெடித்த பட்டாசுகளின்

காகிதக்குப்பையா நீ?

இந்த காகிதக்கூளங்கள் தான் இனி

உன் அரசியல் சாசனம் ஆகிபோகும்

ஆபத்து

உன் பிடறியை உந்தித்தள்ளுவதை

உணர்ந்திடு தமிழா!

டன் டன்னாய்

சுலோகங்களை உன் மீது

கொட்டிக்கவிழ்த்து

உன் முகமே

அடையாளம் இழந்துவிடும் முன்

தமிழ் எனும் கோடிச்சுடர்

முகமாய் பூத்து வா!

அண்டமே அதிர 

உன் தமிழை

ஆர்ப்பரித்து வா!

தமிழா!

நீ ஆர்ப்பரித்து வா!


‍‍‍‍‍‍______________________________

செவ்வாய், 2 நவம்பர், 2021

ஜெய்பீம்

 ஜெய்பீம்

_____________________________ருத்ரா

(திரைப்படம்)


நம் மண் 

அரச அமைப்புச்சட்டங்களால்

அடர்ந்த ஆலமரக்காடுகளாய்

இருட்டிக்கிடந்த போதும்

மனித சமூக நீதியின்

அருகம் புல்லும் 

கால்நடைகளுக்கு 

அங்கே இங்கே என்று

தலை காட்டுவதுண்டு.

இந்த 74 ஆண்டு கால இருட்டை

ஒரு சில தீக்குச்சிகள் 

மத்தாப்பு வெளிச்சம் காட்டி

மனத்தில் கிளு கிளுப்பு ஊட்டி

"நெஞ்சத்தையும்" கொஞ்சம் 

கிள்ளிக்காட்டி வலிக்க வைக்கும்

"அகாடெமி" வெளிச்சங்களில்

தீயின் கீற்றுகளும் கொஞ்சம்

வலம் வந்து போகின்றன.

நடிப்பு சூப்பர்.

காமிரா படுசூப்பர்.

இந்த மண்ணின் 

தண்டனை ஆயுதங்கள் எல்லாம்

ஆயுத பூஜையின் 

மஞ்சள் குங்குமத்துக்கு மட்டுமே

காத்திருக்கின்றன.

ஆண்டு தோறும் 

அந்த காகித அசுரனை

நிஜம் போல காட்டி

பொய்மையின்

காகித வெடிகளில் அவனை சிதறடிக்கின்றன.

சாதி மதங்களின் வெறித்தீயில்

ஜனித்த அசுரன்களுக்கு

மயிற்பீலி சாமரங்கள்

அசைந்து கொண்டே இருக்கின்றன.

அதில் இந்த‌

ஜெய்பீம் மெழுகுவர்த்திச்சுடர்

அணைந்து விடுமோ என்ற‌

அச்சத்தையே நிழல் காட்டுகின்றன.


________________________________________________

(இது விமர்சனம் அல்ல)







எதிரே ஒரு முட்டுச்சந்து

எதிரே ஒரு முட்டுச்சந்து

________________________________________ருத்ரா



ஜனநாயகத்தை நோக்கி

பயணம் போகின்றவர்களே!

வரும் 2024 ல்

நீங்கள் எதிர்கொள்ளும் மைல்கல்

அந்த பயணத்தின்

கல்லறையின் மேல் நடப்பட்ட‌

இறுதிக்கல் ஆக இருக்கலாம்.

அது உங்கள் சுதந்திர சுவாசத்தின்

பூங்காவாய் மாறும்

மாற்றத்தின் மாயம் 

நடக்கும் உங்கள் நடையில் இருக்கிறது.

உங்கள் பார்வையில்

அந்த புதிய பாரதம்

ஒரு வேங்கையின் விழிகளாய்

எச்சரிக்கை கொண்டு உற்று நோக்குகிறது!

மனித நாகரிகத்தை 

குழி தோண்டி புதைக்கும்

சாதி மதக்காடுகள்

ஒரு மரண இருளை

இன்னும் வெளிச்சம் என்று சொல்லி

புராணங்கள் குவித்துக்கொண்டிருக்கின்றன.

ஓட்டாளனே!

எதிரே உன்னை எதிர் கொள்வது

ஒரு முட்டுச்சந்து.

அந்த முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு

உன் முகம் நொறுங்கிப்போகாதே!

கதிர் முகம் காட்டு!

அந்தக்கனலில் இந்த‌

தூசுகள் கருகித்தொலையட்டும்!

துணிந்து செல்!

வெற்றி உனதே!


__________________________________________