புதன், 26 பிப்ரவரி, 2014

பிப்ரவரி பதினாலு

பிப்ரவரி பதினாலு
==================================ருத்ரா

தூர‌ல்
தொடங்கியது.
சாரல்
வருடியது.

இது
மயில்களைத்தொலைத்துவிட்ட‌
மயிற்பீலிகளின் காடு.

உதடுகளில்
தேங்கிக்கிடக்கும்
கவிதைகள்
பொன்னில் அச்சிட்டு
பூவில் எழுத்திட்டு
இதயங்கள் பெயர்த்து வைத்து
ஊரெல்லாம்
நட்டுவைக்கும்.

அஞ்சல் அலுவலகங்கள்
வயிறு கொள்ளாமல்
நிறை மாத சூலிகளாய்
கடிதப்பை வீங்கியதில்
மாணிக்கக் கருவேந்தி
மூவர்ண அட்டைகளில்
கடல் ததும்பி நிற்கும்.

அவனை
மனதில் வரைந்து விட்டு
எறிந்து விட்ட‌ தூரிகையில்
மிச்சமான
பிக்காஸொக்களில்
புதிர் ஓவியங்கள்.

அவள் பூங்கையில்
வண்ணப்பூச்சில்
வரி வரியாய் அவன்
இதயத்து நாளங்கள்.

அம்பு தைத்த இதயம்
பச்சை குத்தியிருந்தாள்
அவளுக்கு மட்டுமே
தெரிந்தது
சிவப்பாய் ரத்தம்

கடிதம் கிடைத்ததா?
என்றான்.
கையெழுத்து இல்லையே!
என்றாள்.

படக்கென்று அவள்
கைப்பிடித்து
அவ்ன் நெஞ்சு தொட்டான்.
லப் டப் லப் டப்
என்றது கையெழுத்து.

அம்மா தந்த‌
குங்குமச்சிமிழுக்குள்
அவன் காட்டிய‌
அரும்பு மீசையே
சுருள் வண்டாய்
படுத்திருக்கும்.

நாட்காட்டியில்
பிப்ரவரி பதினான்கை
கிழித்தெடுத்து வைத்து
கிளு கிளுத்துக்கொண்டாள்.

வயதுகளின் லாவா இது
பதினாறே
உச்சிமுனை.

எரியாமலேயே
உமிழும் தீயினில்
இந்த‌
தேனீக்கள் கூடுகட்டும்.
ரீங்காரம் கேளுங்கள்
ஆயிரமாய் ஓங்காரம்
அதிர்வதும் கேட்டிடுவீர்.

========================================ருத்ரா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பெண்ணே !

பெண்ணே !  
==============================ருத்ரா

அம்மி மிதித்தது மிதித்தது தான்.
மிக்ஸி வந்தபின்
இன்னும் எதற்கு அம்மி.

"பெய்யெனப் பெய்யும் மழை"
எழுதும்போது ஞாபகத்துக்கு வந்தது
"வாசுகி"யின் கண்ணீர்.

அழாதே!பெண்ணெ!
முகம் துடைத்துக்கொள்...உனக்கு
வானம் கூட கிழித்து தரும் மின்னலை!

விமானம் ஓட்டு!நாட்டை ஆளு!
குலுங்குவது உன் வளையல்கள் அல்ல‌
இந்த உலகம்!

ராமன் காலில் சீதை விழுந்திருந்தாள்.
அதனால் தான் ராமன் கால் பட்டு
அகலிகை உயிர்த்தெழுந்தாள்.

நிலத்தை தோண்டி தோண்டி
பார்த்தது போதும் பெண்ணே !
"ஐ பேட்"உனக்கு ஆயிரம் ரெக்கைகள்.

==================================================ருத்ரா

காலை வணக்கம்.

காலை வணக்கம்.
=======================================ருத்ரா


அன்பு நண்பர்களே!

சன்னல் திறந்து பார்த்தேன்.
காலை வணக்கம்.
கோப்பையில் காப்பி
ஆறிக்கொண்டிருக்கலாம்.
அதற்குள்
இந்த வானத்து ட்காஷனில்
ஒரு நீல வண்ணம் பருகலாம்.
நுரைக்கு முன்னே
நரைத்துப்போகும் வாழ்க்கையில்
கடல்களையும் சிப்பிகளையும்
பையில் அள்ளிப்போட்டுக்கொள்ளலாம்.
நம்பிக்கை இருக்கிறது.
ஏழு அல்ல‌
ஏழு மில்லியன் ஜன்மங்கள்
எனக்கு உண்டு.
உங்கள் தோட்டத்தில் பாருங்கள்
ஒரு வளையல் பூச்சி ஒன்று
அந்த செம்"பருத்தி"ப்பூவில்
தன் கனவை ஆடையாக்கிக்கொள்ள‌
விரைந்து ஊர்ந்து கொண்டிருக்கிறது.
அது
ஏன் நானாக இருக்கக்கூடாது.?

=================================ருத்ரா இ.பரமசிவன்

வேலன்டைன் குறும்பாக்கள்


வேலன்டைன் குறும்பாக்கள்
======================================ருத்ரா


வேலண்டைன் விண்கலம் ஏறி
"செவ்வாய்"சென்று
ஒன்று தா என்றான்.

நன்றாய்ப்பார்
இது சனிக்கோள் என்றாள்
தேடினான் அங்கும் இருக்குமா
ஒரு "திருநள்ளாறு"என்று.

அட்டைகள் தோறும்
பொன்னில் "பொரித்த"
இதயங்கள்.

செல்பேசிகளில்
விநாடிகள் விழுங்கின‌
கோடி ரூபாய்களை.

பொருளாதாரம் செழித்தது.
கச்சாப்பொருளும் இச்சாப்பொருளும்
காதல் காதல் காதலே

==========================================ருத்ரா

காப்பியாற்றுப்படை.


காப்பியாற்றுப்படை.
==========================================ருத்ரா

நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌
வால் இயற்றிய வளைஇளம் நெற்றி
கண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமை
காப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்
கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.
கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌
இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌
எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌
குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌
மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவி
மலர் பொருது மற்று மண் பொருது இறங்கி
பொறிப்பரல் முரல  நீர்வழி போன்ம்
நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.
முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலை
முழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்
காட்டி காட்டி மறைக்கும் மன்றிடை
கள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்
சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்
விளைதரும் என்று பலவு வீழ்த்த‌
படப்பை தோறும் குறியின் எதிர்த்து
கிடந்துழி யாண்டு காண்குவன் மன்னே.
மணிமிடைப்பவளமும் களிற்றியானை நிரையும்
நித்திலக்கோவையுள் தொகைத்த தொகையாய்
அகம் குமிழ்த்தாள் அகவல் கேட்டேன்.
அலரி தூஉய் வெண்காடு செத்து வெரூஉய்
வல்நெடுங் கூர் ஒலி வதைபட கேட்டேன்
என் உயிர் கொல் ஓதை முளிகால் பிசைந்து
விண்ணும் நிரவி மண்ணில் வேர்க்கும்.
பஃறுளி பாய்ந்து வெஃறுளி தடவிய‌
களித்தமிழின் காப்பியாற்றுப்படை இஃது.

====================================================ருத்ரா

தலைவன் "காப்பியாற்றங்கரை" வழியே போய்
அந்த அடர்ந்த காட்டின் உள்ளொலியில்
தலைவியின் கள்ளநகைப்பொலி கேட்டு
களிக்கும் காட்சியைப்பற்றிய சங்க(நடைக்)கவிதை இது)

==================================================
(அரும்பொருளுரை தொடரும்)



ருத்ரா (இ.பரமசிவன்)






அரும்பொருளுரை
==============================================ருத்ரா

நெடிய காந்தள் மலர்கள் அடர்ந்த (மூசிய) செடிகள் அடைந்தாற்போல் உள்ள
ஆற்றங்கரையை ஒக்குமாறு
ஒளி(வால்) இயல்பானதாகவே விளங்கும்படி (இயற்றிய)வளைந்த இளைய‌
நெற்றியை உடையவள்

அந்த நெற்றியையே அகன்ற கண்ணாக்கி ஒரு (மறை)மொழியை அதன் மீது
முகப்படாம் போல் போர்த்து ஒன்றும் அறியாதவள் போல்(மடமை)நிற்பவள்

காப்பியாறு (அந்த ஊருக்கு வளம் தந்து காக்கும் ஆறு)நீர்ச்சிதறல்களால்
மெல்லிதாக இசைக்கும்(இமிழ் தரு)இனிய ஒலியால் (கிளு கிளுப்பு அடைந்து)

கன்னம் சிவந்தவளாய் மாணிக்கக்கல் போன்று ஓளிசிந்தும் அந்தக்காட்சி..

________________________________________________________________________

மூங்கில்மீது இழைந்த பாம்பின் நுண்ணிய தோல்(பாம்பு உரி)சுற்றியிருக்க‌

நீர்ச்சுனை(இலஞ்சி)யில் படிந்த நிழல் அருகுள்ள பூங்கொத்துக்குவியல்களால் (குவி இணர்)கவிந்து இருக்க‌

அது போல் எழில் உண்ட கருப்புக்கடல்(மை தீட்டப்பட்டதால்) வீசும் அலைகள்
போன்ற ஒரு மாயத்தோற்றம் செய்து ஏய்க்கும் கண்கள்

முரசுவின் மீது விழும் தடிகள் (குணில்)ஏற்படுத்தும் ஒலிகள் போன்ற உள்ளத்து ஏக்கத்தின் ஒலிகள் எதிரொலிக்க‌

ஈரம் சொட்டும்குளிர்விழிகளால்(மழைக்கண்)மிகவும் பெருகிய (பேய்)வெள்ளி போன்ற அருவி

மலர்களைத் தாக்கி மற்றும் மண்திட்டுகளைத் தாக்கி (பொருது)விழும் அருவி
புள்ளிகள் நிறைந்த கூழாங்கற்கள் நீர் ஓட்டத்தில் உருண்டு ஒலிக்க(முரல)விரையும் ஓடை போல்

நீரின் நீண்ட பாதையில் ஏக்கம் நிறைந்த அந்த (பரிதாபத்துக்கு அல்லது இரக்கத்திற்குரிய)(அளியவள்)தலைவியின் காட்சி.

_________________________________________________________________



அடர்ந்த காட்டுள் நுழைந்த வெண்கதிர் வெளிச்சம் நிறைந்த ஒரு காலைப்பொழுதில்

பொந்துகள்(சிறிய குகைகள் போன்றவை)(முழைகள்) தோறும் ஒளிந்து ஒடும் நடுங்கும் செவிகள் உடைய முயல் போல்

பொய்ச்சிரிப்பு செய்யும் தலைவி மெய்ச்சிரிப்புகளையும் அவ்வப்போது அவிழ்த்து விடுவாள் (அது எப்போது என்று யார் அறிவார்?)

அந்த சிரிப்புகளோடு சில சொற்களையும் உதிர்த்து முற்றிய விதைநெற்கள் போன்று விதைப்பாள்

அதுவும் விளைச்சல் தரும் என்று எண்ணி பலாக்கனிகள் (பலவு) மரத்தின் அடிப்பகுதியில் வீழ்த்திக்கொண்டு பழுக்கத் தோன்றும்(வீழ்த்த)

வளத்தோட்டங்களில்(படப்பை)தலைவி வந்து நிற்பதாகச்சொன்ன
இடத்தில்(குறியின்) எதிர்பார்த்துக்காத்து (எதிர்த்து)

அவளை பார்த்தே தீருவேன் என்று அங்கே (பழியாய்)கிடக்கும்பொழுது (கிட‌ந்துழி)  (மன்னே...அசைச்சொல்)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________________________________________





‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍மணிமிடைப்பவளம் (ரத்தினங்களிடையே பவளங்கள்)
களிற்றியானை நிரை (களிறு (ஆண் யானை)களின் கூட்டம்)
நித்திலக்கோவை (முத்துக்குவியல்)
இவை காதலின் சாறுதனை பிழிந்து தரும் அகநானூற்றுப்பாடல்கள்
ஆனால் அவள் இவ்வெல்லாப்பாடல்களையும் தொகுத்து அதை ஒரு தொகையாய் (தொகுத்த தொகையாய்)தந்தாள்.
அதைத் தான் அவள் நெஞ்சில் குவிந்து கூர்ந்து ஒலித்தாள்.
(அகம் குமிழ்த்தாள்)
என் நெஞ்சைக்கவ்வும் அவ்வொலி (அகவல் ஒலி)நான் கேட்டேன்.
அது எப்படி இருந்தது?
சிறு வெள்ளைப்பூக்கள்(அலரி)சிதறி தூவிய ஒரு பெரும் வெண்காடு போல‌
(வெண்காடு செத்து)ஒரு மெல்லிய அச்சத்தையும் படரச்செய்தது.(வெரூஉய்)

நீண்டதாயும் கூர்மை கொண்டு நெஞ்சு பிளப்பதாயும் அந்த ஒலி என்னை வதைப்பது போலவும் கேட்டேன்.
"என் உயிரைக்கொல்லும் ஓசை அது"என்றும் கொள்ளலாம்.
"அந்த ஒலி தானோ என் உயிர்?"என்றும் கொள்ளலாம்.
பின்னதில் கொல் என்பது அசைச்சொல்.(தானோ)
ஆனால் அந்த ஒலி "குழைவு தன்மை உடைய காற்றை"(முளி கால்)பிசைந்து செய்யப்பட்டது போன்று தலைவன் உணர்கிறான்.
அது வானம் பரவி மண்ணிலும் வேர்விடும்(வேர்க்கும்)
காப்பியாற்றின் வழி எப்படி உள்ளது?
அது பலதுளிப் பெருவெள்ளமாய் அங்கு விரிந்து படர்ந்த புல்வெளியையும் தடவி இழையும் ஆறு இது.களிப்பு பொங்கும் தமிழில் வந்த காப்பியாறு வழி ஏற்படுத்திக்கொண்டு பாயும் காப்பியாற்றுப்படை.இதில் தலைவியின் மென் சிரிப்பின் ஒலியும் சொல் துளிகளும் தூவிக்கிடந்து எழில் கொஞ்சுகிறது.

_______________________________________________________

செதில்கள்.

செதில்கள்.
==========================================ருத்ரா

காதலே!
உனக்கு ஒரு சிலை வடிக்க ஆசை.
கல் தேடினேன்.
வைரம் தான் கிடைத்தது.
உளி தேடினேன்
மனம் தான் கிடைத்தது.
சம்மட்டிக்கு..
தேவையில்லை.
நீ கனமான தருணங்களில்
காத்திருக்கப்போகிறாய்.
அது போதுமே.
உருவம்..
எதை உருவகம் செய்வது..
கைக்கு அகப்படாத கனவுப்பிழம்பா?
தலைகீழ் பிம்பங்களா?
கடலை ஆகாயத்திலும்
ஆகாயத்தை கடல் தளும்பல்களிலும்
"மார்ஃப்"செய்வதா?
ரத்த சதை உடலங்களா?
மாயத்தைப்பிசைந்த‌
வெர்ச்சுவல் ரீயலிடிகளா?
ஐ பேடுகளை
சுரண்டினேன்.
லைட் எமிட்டிங்க் டையோடு
லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே
பில்லியன் பில்ல்யன் பிக்செல்களிலும்
பிக்காஸோ
அவளை புதிர் காட்டினான்.
இருப்பினும்
அந்த நுரைப்பட‌ல‌த்தில்
கண்ணீர்த்துளிகள்..
விம்மி விம்மி வரும்
அதிர்வுகள்..
திடுக்கிட வைத்தன.
அவளா அழுகிறாள்?
காதல் கண்ணீர்த்துளிகளிலா
இங்கே அவள்
செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்?
அன்று ஒரு நாள்
என்னையே உற்று உற்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
என் முகம் அங்கு திரும்பாமல்
நானும் என் கழுத்தைத் திருகி
இந்தப்பக்கமே வைத்துக்கொண்டிருந்த
வலி எனக்கு மட்டுமே தெரியும்.
எதற்கு அப்படி மிருகம் ஆனேன்.
விடையை
காதல் எனும் அந்த‌
மிருகத்திடம் தான் கேட்கவேண்டும்.
ஆனால்
அந்த விழிகளில்
இந்த "டெட் சீ" எனும் கருங்கடல்
என் பிணங்களை அல்லவா
மிதக்க விட்டுக்கொண்டிருக்கிறது.
போதும் சிற்பமும் சிதிலமும்....
என் கைகள் அங்கே
உளி இங்கே
துண்டு துண்டாய் சம்மட்டிகள்.
எதனுள்ளோ
நசுங்கிக்கிடக்கிறேன்.
யாராவது வாருங்களேன்...
மீன் குழம்பு வைக்க‌
சொறிக்கல்லில் தேய்க்கப்படும்
மீனாக..நான்...
வெள்ளை வெள்ளையாய்
செதில்களில் இறைந்து கிடக்கிறேன்..
ஆனாலும் துடித்துக்கொண்டு..





================================================ருத்ரா



துரை.ந.உ 





Inline image 1














துரை ந.உ அவர்களே

உங்கள் தூண்டிலில்
அகப்பட்டுக்கொண்ட‌
இந்த இன்ப அதிர்ச்சியில்
ஆயிரம் சுநாமிகள்.
வலிக்கு கூட ஒரு கனபரிமாணம் உண்டு.
அது
பரிமாணமே அற்ற
காதல் என்பதை
துடிக்க வைத்து
மனத்தைத் துவைத்துவிட்டிர்கள்.

நன்றி துரை அவர்களே

அன்புடன் ருத்ரா

ஒரு பேய் நிழ‌ல்






ஒரு பேய் நிழ‌ல்
=======================================ருத்ரா

அடர்மரத்தின்
அடம்பிடிக்கும் கிளைகளின்
கூரிய‌ ந‌க‌ங்க‌ள்
வான‌த்தை கிழிக்கும்.

நீல‌ ர‌த்த‌ம்
மௌன‌ம் பீச்சும்.
என்னை உமிழும்
நிமிட‌ங்க‌ளில் எல்லாம்
காறி காறி விழுந்தது
ஒரு பேய் நிழ‌ல்.

மரம் அல்ல இது.
ஒரு விதையின் நிழல் இது.
கோடி சூரியன்களை
கருவுற்ற‌
இருட்டின் திர‌ள்
இந்த‌ நிழ‌ல்.

காற்று தூவிய‌ அசைவுக‌ள்
தூர‌த்து வெளிச்ச‌த்தை
இப்ப‌டியா
க‌சாப்பு செய்யும்?

துண்டு துண்டுக‌ளாய்
க‌ன‌வுப் பிண்ட‌ங்க‌ள்
ம‌ர‌த்தில் தொங்கின‌..

இத‌ய‌ம் வ‌ருடும்
அழ‌கிய‌ அமைதியின்
நின‌வுப்பாள‌ங்க‌ளில்
எப்ப‌டி
இப்ப‌டி ஒரு
ம‌ன வெளிச்சித்திர‌ம்?

மற‌க்க முடியுமா
இந்த மரத்தை?
எங்கள் மாணிக்க தருணங்கள்
இங்கு தான்
இன்னும் உதிர்ந்து கிடக்கின்றன.

சுற்றிச் சுற்றி வந்தோம்.
கட்டித்தழுவிக்கொண்டோம்.
இடையில் மரம்.
உயிர்த்து நின்றது.
நாங்கள் "மரத்து"நின்றோம்


ஹோ  ஹ்ஹோ  வென்று
பேரிரைச்சல்.
தலை தெறிக்க ஓடினேன்

நில்..நில்..
நில்லுடா நில்லுடா..
அப்புறம்
கேவல் நைந்த ஒலியின்
தீற்றுகள்.

அவள் குரல் தான்.
இவள் இறந்து போனதன்
ஆவி அல்ல.
அவள் இறக்கவில்லை.
இது யாருடைய‌ ஆவி?

அன்று ஒரு அழைப்பிதழ் வந்தது
மஞ்சள் பூசிக்கொண்டு.
பிரிக்காமலேயே
தெரிந்து கொண்டார்க‌ள்
என் பெற்றோர்க‌ள்
என் பிண‌த்தை போர்த்த‌
வ‌ந்த‌து அது என்று.

அதில் காம‌கோடி அம்பாள்
அனுகிர‌ஹ‌த்துட‌ன்
ரெண்டு பெயர்களுக்கு
"மாங்க‌ல்ய‌ம் த‌ந்துநானே"
இருந்த‌தில்
என் பெய‌ர் இல்லை.

சோகம் பிழிய வேண்டாம்.
சளியில் ரத்தம் வேண்டாம்.
கன்னம் புடைக்க‌
நாளங்களுக்குள்
ஊமை நாயனம் வேண்டாம்.

நாங்க‌ள்
இற‌க்கவுமில்லை.
வாழவும் இல்லை
ஆனாலும்
நாங்க‌ள் ப‌ரிசுத்த‌ ஆவிக‌ள்.

நில்லுடா..நில்லுடா
இப்போது
நான் திரும்பி பார்த்தேன்.
ம‌ர‌ம் என்னை
நோக்கி ந‌ட‌ந்து வ‌ந்த‌து.

ஆம்.
நாங்க‌ள் இற‌க்க‌வுமில்லை
நாங்கள் வாழவும் இல்லை
நாங்க‌ள் ப‌ரிசுத்த‌ ஆவிக‌ள்


அந்த‌ ம‌ர‌த்தைப்பார்க்கிறேன்.
இந்த‌
இலையுதிர் கால‌த்தில்
எலும்பு ம‌ர‌த்தின் அடியில்
அட‌ர்ந்த‌ இலைகளில்
ஊடுருவும் இதயங்களின்
ப‌ட‌ர்ந்த‌ நிழ‌ல்.

========================================================




என்ன செய்வது இந்த வேதாளத்தை?

என்ன செய்வது இந்த வேதாளத்தை?
=========================================ருத்ரா

எத்தனை தடவை
கட்டி இழுத்து
வரவேண்டியிருக்கிறது
இந்த வேதாளத்தை
முருங்கை மரமா?
ஆப்பிள் மரமா?
உஜ்ஜயினிக்காடா?
ஈடன் தோட்டமா?
மரங்களுக்குள் தேடினால்
இலைகளில் எல்லாம்
அகன்ற கண்கள்.
இலை இடுக்குகளிலும்
கூரிய கண்கள்.
கிளைகளின்
நுனிக்கொழுந்துகள் கூட‌
சூரியச்சிவப்பை
நகப்பூச்சு செய்து கொண்டு
இன்பத்துள்ளலாய்
பிறாண்ட வருகின்றன.
வாளுக்கு
அஞ்சியதாய் தெரியவில்லை.
அவளா?
அதுவா?
ஒருசிரிப்பின்
கோடியில் ஒரு பங்கு
கட்டுகிறது
ஒரு மாயக்கோட்டத்தை.
விழியின்
கோணத்தின்
பில்லியனில் ஒரு பங்கு
இந்த பிரபஞ்சத்தையும்
விழுங்கிக்கொண்டதில்
விதிர் விதிர்ப்பு எகிறுகிறது.
பேய் என்று சொல்லி
பேயை பயம் காட்டவும்
முடியாது.
பிசாசு என்று
எவனோ ஒரு கவிஞன்
பேனா நிப்பைக்கொண்டு
சீண்டி பார்த்து வீட்டான்.
நூத்தியெட்டு வகை
டைனாஸார் பெயர்களையும்
விஷ்ணு சஹஸ்ரனாநாமமாய்
சொல்லிப்பார்த்து விட்டேன்.
ஸ்பீல்பெர்கை கூப்பிடு
படம் பிடித்து விளையாடலாம்
என்கிறது.
விழுதுகள்...
சமயங்களில்
மலைப்பாம்புகள்
அல்லது
மின்னல் குழம்பில்
முறுக்கிய ஊஞ்சல்கள்.
பூவரும்புகள்
பூவெறும்புகள்
பூம்பூச்சிகள்
காற்றுடன் கலந்து
மரமெல்லாம்
உயிர்த்து நிற்கின்றன.
எங்கிருந்து கொண்டோ
இதயம் துடிக்கிறது.
இந்த இதயப்பாய்ச்சல்களில் தான்
இலைகள்
"க்ளோரோபிலை"க்கொண்டு
முகம் பூசிக்கொள்கின்றனவோ?
எனக்குள்
மன்மதக்கோடாங்கி
உலுக்கிக்கொண்டே இருக்கிறான்.
பச்சைக்கவிகையாய்
ஆலிங்கனம் செய்ய‌
ஓடிவரும்
கூர்மை மோனத்தில்
எண்ணம்
ஒடுங்குகிறது.
தேனில் கூட‌
பாம்பு நெளியல்களா?
சட்டைகள் உரிந்த்து உரிந்து
சிக்மெண்ட் ஃப்ராய்டு
நிர்வாணம் ஒரு
"ஜவுளிக்கடல்" ஆகிறது.
கிளையை வெட்டவா?
வேரை பிடுங்கி எறியவா?
கனவு லாவா
இலை நரம்புகளிலும்
இதழ் தளும்பல்களிலும்
எரித்துப் பொசுக்குகிறது.
வானத்தையும்
சாம்பலாக்கி விடும்
வெறி..
தூக்கமாயும்
தூக்கமின்மையாயும்
தலயணைகள் கிழிய‌
பஞ்சுச்சிதறல்களில்
இனிமை குழைவிக்கும்
குழறல் மொழிகள்.
எப்படி
வீழ்த்துவது இந்த வேதாளத்தை?
விக்கிரமாதித்தர்கள்
கிருதாக்களை
திரிகிவிட்டுக்கொண்டு
திகைத்து விழிக்கிறார்கள்.

==============================================ருத்ரா

துரை.ந.உ 
Feb 5
Re: [பண்புடன்] Re: என்ன செய்வது இந்த வேதாளத்தை?
Inline image 1


உயிர் ததும்பும் இப்படம் நல்கிய திரு.துரை ந.உ அவர்களுக்கு நன்றி

அன்புடன் ருத்ரா





வாழ்க நீ எம்மான்.."

"வாழ்க நீ எம்மான்.."
===========================================ருத்ரா

கம்பும் கையுமாய்
உடைகூட‌
அரையும் குறையுமாய்
அந்த இங்கிலாந்து
அரசியல் சாணக்கியன் சர்ச்சில்
"அரை நிவாரண பக்கிரி"
என்று எள்ளுமாறு
எளிய தோற்றத்தில் இருந்து கொண்டே
இந்த நாட்டு
இமயங்களையெல்லாம்
தன் சுதந்திர மூச்சுக்கு முன்னே
தூள் தூள் தான்
என
ஓங்கி நின்ற உத்தமர்.

அரசியலையும்
மதத்தையும்
காக்டெயில் செய்தா
சுதந்திரம் பெற முடியும்
என்று
முற்போக்கு வாதிகள்
முகம் சுழித்தார்கள்.
முறுக்கு மீசை பாரதியும்
"வாழ்க நீ எம்மான்"
இருப்பினும்
தேசப்பிதாவே
உறுமும் குரலில்
திலகனும் வ.உ.சி யும்
தங்கள் இதயத்துள்
அவர்கள் நம் தேசப்படத்தையே
இரத்த நாளங்கள் கொண்டு
பின்னி வைத்திருக்கிறார்களே
அதுவும் உங்கள் மனதில்
மின்னல் அடிக்கட்டும்
என்று முழங்கினான்.

எல்லாவற்றையும்
உள் வாங்கிய சமுத்திரமாய்
அலைவிரித்த தந்தையே
இப்போது
இவர்களுக்கு
கொள்ளுத்தாத்தா
ஆகிப்போனாய்.

இவர்கள் குத்தாட்டங்களின்
புழுதி மண்டலத்தில்
உன் முகம் மறைந்த போதும்
பள்ளிகளின் கலை விழாக்களில்
பிஞ்சுகள் மேக் அப்பில்
அதே கூரிய விழியோடு
சோடா புட்டிக்கண்ணாடியிலும்
அன்பில் குழைந்த ஒரு
சோதிப் பிழம்பாய்
கம்பூன்றி...கால்களில்
பூகம்பங்களையும் இடறிவிட்டு
பூப்போல நடந்து காட்டும்
அந்த அரங்கேற்றத்தில்
போர்களால் புண்பட்டுப்போகும்
பூமியைக்காத்து தரும்
"பசுமையின் நம்பிக்கை"யே
சுடர் பூக்கிறது.

அது வரை இந்த‌
பசுத்தோல் போர்த்த புலிகளும்
புலிவேஷம் போடும் பூனைகளும்
ஆடிக்கொண்டிருக்கட்டும்.
குண்டுகள் துளைத்த‌
உன் மார்புப்பூமியில்
புல் முளைத்துப்போயிருக்கும்
என்று
புளகாங்கிதம் கொண்டவர்கள்
செல்லும் பாதை தவறி
செல்லரித்துப்போனார்கள்.
அப்போதும்
உனது அந்த
"புன்னைகையே"
தினம் தினம் வரும்
"புதிய சூரியன்"

==========================================ருத்ரா


துரை.ந.உ 

Feb 1

Re: [வல்லமை] வாழ்க நீ எம்மான்".........................ருத்ரா

Inline image 2
நன்றி.திரு.துரை.ந.உ அவர்களே

சில நொடிகளில் "உஷ்" காட்டி
மறைந்த அந்த அஹிம்சை மின்னலின்
வெளிச்சத்தில் தான்
நம் இருட்டின் தீவிரவாத 
வெறிகள் எல்லாம்
தலை காட்ட முடியாமல்
புதைந்து கிடக்கின்றன.
இப்படி
ஆண்டுக்கொரு முறை வந்து
மின்னல் அடித்தாலும் போதும்.
எங்கள் அழுக்கு மனங்கள்
சலவை ஆகி விடும்.
இதை 
திருப்பி திருப்பி 
போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நம் உள்ளங்களில் 
ஆழமாய் இறங்கிக்கொண்டிருக்கும்
மானிட நேயத்தின்
மகத்தான‌
மாணிக்க நங்கூரம்
இந்தப் படம்.
தேசப்பிதாவே!

"வாழ்க நீ எம்மான்
இந்த வையகத்துக்கு எல்லாமே!"



============================================ருத்ரா

வேண்டாம் வில் அம்புகள்.

             


            இந்த ஊசியிலைக்காடுகளில்
            மனிதர்களே மிருகங்கள்.
            மிருகங்களே மனிதர்கள்.
            சொற்கள் ஊசிகளாய்
            இலை முகங்களில்
            மறைந்திருக்கலாம்.
            இந்தக்காட்டில்
            வேட்டையாட வேண்டுவது
            வில் அம்புகள் இல்லை.
            அன்பும் அறனும் உடைத்த‌
            பண்பும் பயனுமே அது.

         
                                                 ருத்ரா இ.பரமசிவன்

imagem não exibida

எழுத்தாளர்களின் தளங்கள் ~ தமிழ்ச் செய்திகள்

எழுத்தாளர்களின் தளங்கள் ~ தமிழ்ச் செய்திகள்




யாதும் ஊரே யாதும் தமிழே(1)

ருத்ரா இ.பரமசிவன் 
Feb 24 (12 hours ago)




imagem não exibida



யாதும் ஊரே யாதும் தமிழே(1)
===================================ருத்ரா


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.


கடந்த மாதங்களில் ஜனவரி முதல் தேதி 2014 ல் அமெரிக்காவின் "கள்ளிக்காட்டுக்குள்" (ஆம் அரிஸோனா மாநிலம் அன்டிலோப் கேன்யான்)பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.மெய்சிலிரிக்கும் பயணம்.அது
வைரமுத்து போன்றோர்களுக்கு ஆயிரம் கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கான கற்பனையை அள்ளி வழங்கியிருக்கும்.எனக்கு கல்லூரி நாட்களிலேயே
இந்த இலக்கிய கனவு உண்டு.கவிமேதை டி.எஸ் எலியட் எழுதிய "தி ஹாலோமென்"என்ற மனமாயைக்கவிதை இன்னும் எனக்குள் ஒரு மனக்குகையை நீளமாக வெட்டிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

ப்ரிக்லி பியர் ப்ரிக்லி பியர்
ஹியர் வி கோ ரவுண்ட் தெ ப்ரிக்லி பியர்
ஃப்ரம் ஃபைவ் ஓ க்ளாக் இன் தெ மார்னிங்..

"முள்ளுக்காடு.எங்கு பார்த்தாலும் முள்ளுக்காடு.
அது என் உடலில் தன் முள் உரசல்களால்
அருவருக்கும் படியான ஒரு இன்பக்கிளர்ச்சிகளை
கம்பளிப்பூச்சிகள் போல் ஊற விட்டுக்கொண்டிருக்கிறது.
ஞானிகள் அப்படித்தான் கூறுகிறார்கள்.
ஆனால் அந்த முட்கள் ஒரு பிருந்தாவனத்தின்
வருடல்களா? தீண்டல்களா?
அந்த மாயத்தொடுவிரல்கள் 
கொடுவிரல்களா? பொன் விரல்களா?
அர்த்தம் சொல்லி அகராதி புரட்டியா நான் பிறந்தேன்?
வெள்ளனே வானம் வயிறு கீறிய‌
அந்த இளம்பொழுதான‌
ஐந்து மணியிலிருந்தே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அல்லது
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
துப்பாக்க்கியை வெடித்து ஸ்டார்ட் சொன்ன‌
அதே துப்பாக்கி தான் என் மார்புக்குள்
குண்டு துளைக்கப்போகிறதா?..தெரியவில்லை?
வாழ்க்கையை அல்லது
எல்லா அர்த்தங்களின் அர்த்தத்தை 
தேடி தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.."

இந்த ஆளுயரக்கள்ளியில் நான்
அந்தக்கவிஞனை புணர்ந்து அல்லது உணர்ந்து
எழுதிய வரிகள் இவை.

வள்ளுவன் சொன்னானே

"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார் பெறின்"

இந்த தமிழ் அதோ அந்த கள்ளியில் பால் துளிகளை சொட்டுகிறது