ஞாயிறு, 30 ஜூன், 2024

ஜிகினாச்சித்தன்.

ஜிகினாச்சித்தன் சிலும்பல்கள்

__________________________________________



ஊசியும் உன்னிடம்.

நூலும் உன்னிடம்.

வெறுப்பும் உன்னிடம்.

விருப்பும் உன்னிடம்.


வாழ்க்கை

_____________________________



நூற்றாண்டுகள் தோறும்

பெருக்கியும்

மாளாத குப்பைகள்.


புராணங்கள்

________________________________


இது தான் முதல் அடையாளம்.

அப்புறமும்

கோத்ரம் என்ன என்று

கேட்பது 

பச்சை அயோக்கியத்தனம் 

இல்லையா?


சிவலிங்கம்.

_________________________________________


நாலுவிதமாய் 

மறைத்து 

நான் மறை என்றாலும்

அந்த ஆயிரம் கிழிசல்கள்

வழியே

ஆபாசம் தெரிகிறதே.


வேதங்கள்

______________________________________________


நானே படைத்தேன்.

என்னாலும் முடியாது அழிக்க.

மனிதனை நீ

அழிக்கப்பார்த்தால்

பூண்டற்றுப்போவாய்.

உன்னைக்கும்பிட இங்கே

எவருமில்லை.


வர்ணங்கள்.

______________________________________


உன்னை யார் தடுத்தார்கள்.

மந்திரங்களில்

விலங்கு மாட்டிக்கொண்டு

ஏன் இத்தனை கூப்பாடுகள்?


மோட்சம்.

_________________________________


மனிதா

உனக்குள் மின்னல் வெட்டுகிறதே!

அப்புறம்

எதற்கு இந்த தீபங்களின்

அலப்பறைகள்.


ஆராதனை

______________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக