செவ்வாய், 22 நவம்பர், 2016

அரிஸோனாவில் ஒரு அந்திசாயும் நேரம்!





முட்களின் உட்கிடக்கை..
==============================================ருத்ரா
பாலைவனம் போல்
பகலவன் மட்டுமே
பாய்விரித்து படுத்துக்கிடக்கும்
மாநிலம் என்றாலும்
கட்டிடங்களின்
அழகிய சோலையுடன்
அழகு மிளிர்வது
அமெரிக்காவின் அரிஸோனா
அரைப்பனை உயர‌
அந்த கள்ளிக்காட்டிலும்
சூரியத்தூவலின்
ஆரஞ்சுவண்ணகுளியலில்
"வைரமுத்துக்கள்"
கவிதையாய் குவிந்துக்கிடக்கும்.
அந்த முட்களின் தாண்டவத்திலும்
ஒரு உட்கிடக்கை உண்டு.
இருப்பினும்
டி.எஸ்.எலியட்டின்
"வீ ஆர் தெ ஹாலோமென்"
அந்த முள்ளின் நிழற்காட்டிலும்
வாழ் தத்துவத்தின்
ரோஜாக்களைப் பூத்து நிற்கும்.
கள்ளோ காவியமோ
என நாவல் படைத்த‌
டாக்டர் மு.வ கூட‌
இங்கிருந்து எழுதியிருந்தால்
"முள்ளோ காவியமோ"
படைத்திருப்பார்.
மனிதன்
இன்றைய
"சோளக்காட்டுப்பொம்மை" உடையில்
(ஸ்கேர் க்ரோ)
நாகரிகத்தின் சிகரத்தில்
உட்கார்ந்து இருக்கிறான்.
ஏன்?
ஆணும் ஆணும் கூட‌
பெண்ணும் பெண்ணும் கூட‌
"மாங்கல்யம் தந்துநாநே"
பண்ணிக்கொள்ளலாம் என்கிறான்.
இந்தியாவின்
யோகாவையும் புராணங்களையும் தான்
தன் கிழிந்து தொங்கும்
ஜீன்ஸ் பாக்கெட்டுகளில்
திணித்து வைத்துக்கொண்டிருக்கிறான்.
ஃபண்டாஸி ஃபில்ம் என்ற பெயரில்
ஹாலிஉட்டையே
நம் இதிஹாசக்கற்பனைகளால்
சவைத்து சவைத்து
"பாக்ஸ் ஆஃபீஸ்"வசூல்கள்
அள்ளிக்குவிக்கிறான்.
மனிதனைக்காணவில்லை.
மூளையும் இதயமும் உணர்ச்சிகளும்
இங்கே
டாலர்களாக குவிகின்றன.
மனிதன்
இங்கே எங்கேயோதான்
நசுங்கிக்கிடக்கிறான்.
அவன் கிரீச்சொலிகள்
கேட்கின்றனவா?
உங்களுக்கு?

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக