வெள்ளி, 25 நவம்பர், 2016

துருவநட்சத்திரம்

துருவநட்சத்திரம்
==================================ருத்ரா இ பரமசிவன்


தமிழ் திரைவானில்
ஒரு துருவந‌ட்சத்திரமாய்
தன் நடிப்புக்கு
ஒரு புதிய அடையாளத்தை தர‌
இப்போதே தன்னை
அதற்குள் அடைகாத்து
ஒரு நட்சத்திரத்தின் குஞ்சை
சிற்கு வைத்து தருவார் விக்ரம்
என்ற நம்பிக்கை
கோலிவுட்டில்
நாற்று உருவில் பதியமாகிக்கொண்டிருக்கிறது.
இடையில் ஒரு "வாலு நட்சத்திரம்"
மோதுவது போல் இருக்கிறது.
இரண்டையும் மோதவிடாமல்
ஒரு தனிப்பாதை போட்முயல்வதில்
விக்ரமர் வல்லவர் தான்.
அன்னியனில் அவர் நடித்த நடிப்பு
இன்னமும் அது ஒரு
"எம் ஜி எம்" சிங்கம் போல்
பிடரிமயிரை
முன் விழும் நிழல் அருவியாய் வைத்து
தியேட்டரே கிடு கிடுக்க‌
உறுமும் அந்த ஒலி இன்னும்
நம் நெஞ்சில் கிலி ஏற்படுத்திக்கொண்டிடுக்கிறது.
"காசியில்" அவர் எங்கோ பார்த்த மாதிரியான‌
ஒரு நிலைகுத்திய அரைவிழியில்
நம்மை ஊடுருவி துளைத்ததை
நம்மால் தாங்க இயலாது.
"என் மனவானில்..."பாட்டு
நம் உள்ளத்தை
சப்பாத்திக்கு மாவு பிசைகிறது.
தெய்வத்திருமகளில் (னில்)
பாப்பா விளையாட்டு விளையாடி
பார்ப்பவர் மனதில் எல்லாம்
உருகும் பனிச்சிற்பம் செதுக்கிவிட்டாரே.
அதனால் தான் துருவநட்சத்திரத்திற்காக‌
நம் மனத்தின் அகண்ட வானம் முழுதும்
துண்டு போட்டு இடம் பிடித்து வைத்திருக்கிறது.
இவ்வளவிலும் முதல் படமான‌
சேதுவில் காதல் அவரை பிழிய பிழிய‌
முறுக்கி எடுத்திருப்பதற்கு ஏற்றார்போல்
முறுக்கு விழுந்து அப்புறம் முறுக்கு அவிழ்ந்து
மூளைப்பூவின் நடுவில்
ஏற்படும் அந்த வண்டு குடைச்சலில்
துவள்ந்து விழுந்து கிடப்பதில்
தன் நடிப்பை உயர்த்தி நிமிர்த்தி வைத்திருப்பாரே.
எல்லாம் சரிதான்
கௌதம் மேனன்
எனும் நுட்பம் நிறைந்த காமிராக்கண்ணின்
பார்வைக் கூர் முனையில்
ஒரு பிரம்மாண்ட வானம் காலின்
தன் ஒற்றை விரலில் நின்று காட்டப்போகும்
அந்த சர்க்கஸ் நம் ஆவலை
தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறது.
வரட்டும்,காத்திருப்போம்.
======================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக