திங்கள், 21 நவம்பர், 2016

கடவுள் இருக்கான் குமாரு (4)


கடவுள் இருக்கான் குமாரு (4)
============================================ருத்ரா இ.பரமசிவன்

...."ஷ்"தியேட்டர் என்று நாரதர் சொன்னது
பரமசிவனின் "கைலாஷ்" தியேட்டர்.
சீன தொழில் நுட்பக்கலைஞர்களை
வரவழைத்து
ஐஸையே குடந்து
மாளிகைகள் எல்லாம் அமைப்பார்களே
அவர்களை வைத்து உருவாக்கிய‌
சூப்பர் ஏ.சி தியேட்டர்.
அந்த தியேட்டர் உருவாக்கிய சீனர்
சாம வேதத்தை
சிவன் முன்
"மிங்க் சிங்க் மிவாம்
க்சியாம் ம்ஸியாம்"
என்று பாடிவிட்டு போய்விட்டார்கள்.
ஃபீஸ் ஒன்றும் வாங்கிக்கவில்லை.
சிவன் பதிலுக்கு
வரன் தருவதாய்
சீன மொழியில் ஏதோ கூறினார்.
அவர்களும் போய்விட்டார்கள்.
அந்த பனிஉறைவு நிலையிலும்
அவரும் நாரதரும்
தமிழ் நாட்டு சிதம்பரம் வெயிலை
அந்த பனிக்கைலாஷ தியேட்டருக்குள்
வரவழைத்து படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த குளிரூட்டிய வெயிலும்
இரண்டு தேவகன்னிகைகள்
கவரி வீசிக்கொண்டிருந்தனர்.
நடு நாயகமாய் சிவனும்
கீழே அருகில் நாரதரும் உட்கார்ந்து
படம் பார்த்து
ரசித்துக்கொண்டிருந்தனர்.
"கும் ஸாரே...பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த இரண்டு கதாநாயகிகள்
ஜி.வி பிரகாஷை
ஒட்டி உரசி ஆடிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று
ஜி.வி.பிரகாஷ்க்குப்பதில்
சிவபெருமான் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆடினார்.ஆடினார் ...
அண்டசராசர்மே ஆடியது.
தமிழ் நாட்டுத்தியேட்டர்களில்
அந்த படத்தில் அந்த காட்சியில்
ஜி.வி பிரகாஷை காணவில்லை!

(தொடரும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக