வெள்ளி, 11 நவம்பர், 2016

அச்சம் என்பது....

அச்சம் என்பது....
========================================ருத்ரா


சர்க்கஸில் யானை தான்
யானையை விட
பெரிய முரட்டு சைக்கிள் ஓட்டும்.
"அச்சம் என்பதை மடமை"
என்று காட்டும் சிம்பு
இனி சிங்கம் என்று
பெயர் வைத்துக்கொள்ளலாம்.
அப்படி ஒரு சிலிர்ப்புடன்
சிங்கம் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போல்
படு கம்பீரம்.
ஏற்கனவே சிங்கம் ஒன்று இரண்டு
என்று சூர்யா சிம்ம கர்ஜனை
செய்து விட்டாலும்
சிங்கம் என்று பெயர் வைக்காமலேயே
கர்ஜித்து கதைக்குள்
ஒரு பூகம்பத்தை விதைத்து விடுகிறார்.
சாதாரண மசாலா விபத்து காதல்
என்று அந்த பைக் ஓடினாலும்
ஒரு த்ரில் அல்லது திகில்
எப்படியோ இதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அது தான் கௌதவ மேனன் கலை ஸ்பரிசம்.
அது யார் மஞ்சிமா மோகன்?
வெறும் பொம்மைபோல் பூசிவைத்த
முகம் அல்ல அது.
அந்த முகத்தில் ஒரு இதயம் துடிக்கிறது.
மூளையும் இதயமும் இடம் மாறும்
பஞ்ச் டைலாக் சிம்புவிடமிருந்து
பஞ்சு மிட்டாய் இனிப்பை
புயல் போல வீசிக்காட்டுகிறது
என்றால்
அந்த புயல் மையம் மஞ்சிமா!
இப்போதைய படவரிசையில்
ஏதோ ஒரு புதிய பரிமாணம் இதில்
தெரிகிறது.
தற்போதைய "போல் வால்ட்டில்"
ஒரு நம்பிக்கையின் ஜம்பில்
"விண்ணைத்தாண்டி" "வெளியில்"
வந்து விட்டார்.
இனி மிதப்பதும் பறப்பதும்
நடிப்பின் இன்னொரு பிரபஞ்சத்துக்குள்
பாய்வதும்
அவருக்கு ஒன்றும் கடினம் அல்ல!

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக