புதன், 23 நவம்பர், 2016

"சைத்தான்" மீது ஏன் இந்த சத்தம்?


"சைத்தான்" மீது ஏன் இந்த சத்தம்?
========================================ருத்ரா இ.பரமசிவன்

"தினமலரின்"
பத்தொன்பது ஸ்டில்களில்
விஜய் ஆண்டனியின்
பரிமாணம் தெரிகிறது.
கண்களில்
தேடல் அக்கினி வீசுகிறது.
அமைதிக்கடலாயும்
அவை அழ்ந்து கிடக்கிறது.
கதாநாயகி முகத்தாமரையில்
"சரிதா"வின் நடிப்பு
ஆழம் காட்டுகிறது.
விஜய் ஆண்டனி
ஒரு படத்தில்
ஏதோ  யோகாவில்
ஒரு ஆயுதம் முறுக்கேற்றுகிறார்
மனத்தை
மனத்தின் மீது
கூர் தீட்டி.!
அப்புறம்
கைவிலங்குக் காட்சிகள்!
ஒரு படம்
தலைப்பாகை விபூ தியுடன்
சுருள் அரிவாள் மீசையில்
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
லுக் விடுகிறது.
உள்ளே அவநம்பிக்கை
வெளியே நம்பிக்கையா?
இது கூட ஒரு கார்ட்டூன்  தான்.
கடவுளுக்கா?
சை த்தானுக்கா?
பத்தொன்பதாவது படம்
ஒரு முத்திரை.
அந்த அனுதாபத்தின்
பின்னே
அது என்ன?
ரௌத்ரமா?
குரூரமா?
உணர்சசியின் விளிம்பு...
குமிழிகள்
உள்ளே கொதிப்பது
கர்ப்பம் தரிக்கும் ஒரு வெப்பம்!
சைத்தான் மீது ஏன் இந்த சத்தம்?
அறியும் போது
நல்ல கருத்து கெட்ட கருத்து
போன்றதே ஞானம்.
மனிதன் ஒரு அடிப்படையான
கேள்வியில்
பிண்டம் பிடிக்கப்பட்டவன்.
பிண்டம் பிடித்தது..
கடவுள் எனும் சைத்தானா?
சைத்தான் எனும் கடவுளா?

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக