ஞாயிறு, 20 நவம்பர், 2016

தருணங்கள்



தருணங்கள்




ருத்ரா இ.பரமசிவன்
___________________________________________________

உன்னை
எப்போது பார்த்தேன்?
என்றைக்கு பார்த்தேன்?
அந்த அந்தி வானச்சிவப்பு
அடையாளம்
கடலில்
அன்றொரு நாள்
தூரல் விழுந்தது.
அதன் மெல்லிய துளி
துல்லியமாய் ஹலோ என்று
சொல்லிவிட்டுத்தான்
கடலில் விழுந்தது.
அந்த சுவடும்
நினைத்தால் வந்து சொல்லும்.
ஒரு மின்னல் எழுத்து
வானத்தில் வரியாய் ஒரு
சாட்சிக்கையெழுத்து
போட்டுவிட்டுத்தான் போனது.
உன்னால்
மறுக்கவும் முடியாது.
மறக்கவும் முடியாது.
=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக