சனி, 28 ஜனவரி, 2017

குறுக்கே வந்த நந்தி.


குறுக்கே வந்த நந்தி.
















மத்திய ஆதிக்கம் தமிழக உரிமைகளை  விழுங்காமல் குறுக்கே வந்து தடுத்தது  ஜல்லிக்கட்டு அறப்போர்!


இடி தாக்கி
இங்கே ஒரு
பள்ளம் விழுந்தது.
இட்டு நிரப்ப
கள்ள நிழல்கள்
போட்டிக்கு வந்தன.
காளை ஒன்று
இடையே புகுந்தது.
தமிழ்க்காளை
ஒன்று
இடையே புகுந்தது.
கோயில் காளை தானே
குங்குமப்பொட்டு  வைத்து
கும்பிட வைப்போம் என்று
சகுனிகள்
பகடை உருட்டி
சாணக்கியங்கள்
பலப்பல
செய்திட்டாரே.
விடைத்த காதுடன்
விறைத்த கொம்புடன்
காளையே  இங்கு
கேள்வித்தீ
வளர்த்து நிற்கும்.
திருட்டுகள்
போல வந்த
இருட்டுகள்
விலகி ஓடும்!

========================================ருத்ரா இ பரமசிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக