திங்கள், 30 ஜனவரி, 2017

"ருபர்ட் ப்ரூக் "கின் கவிதை

January 29, 2017

Love

Rupert Brooke
Love is a breach in the walls, a broken gate,
    Where that comes in that shall not go again;
Love sells the proud heart’s citadel to Fate.
    They have known shame, who love unloved. Even then,
When two mouths, thirsty each for each, find slaking,
    And agony’s forgot, and hushed the crying
Of credulous hearts, in heaven—such are but taking
    Their own poor dreams within their arms, and lying
Each in his lonely night, each with a ghost.
    Some share that night. But they know love grows colder,
Grows false and dull, that was sweet lies at most.
    Astonishment is no more in hand or shoulder,
But darkens, and dies out from kiss to kiss.
All this is love; and all love is but this.
Facebook Like Button  Tweet Button
This poem is in the public domain.

About This Poem

“Love” was published in Volume 1, Number 3 of the Blue Review in July 1913.
Rupert Brooke was born on August 3, 1887, in Rugby, Warwickshire, England. His books include Poems(Sidgwick & Jackson, Ltd., 1911) and an anthology entitled Georgian Poetry, 1911-12 (Poetry Bookshop, 1912), which he compiled with Edward Marsh. He died on April 23, 1915.
"ருபர்ட் ப்ரூக் "கின் கவிதை

காதல் உடைப்பெடுத்தால்......
=====================================


காதல் உடைப்பெடுத்தால் 
சுவர்கள் பிய்ந்து போகும் 
கிழிந்த உடம்புகளாய்..
வாசல் கதவுகள் முறிந்து கிடக்கும்.
வெளியேறும் காதல் உணர்சசி 
மறுபடியும் அந்த கூட்டுக்குள் போய் 
அடைவதில்லை.
காதல் தன்னை செதில் செதிலாக 
செதுக்கிய அந்த 
பெருமிதம் விடைத்த இதயக்கோட்டையை 
அந்தோ ! விதியெனும் 
ஒரு சூதாடிக்கு விற்றுவிடுகிறது.
ஒரு காதல் மறுதலிக்கப்படும் 
அவமானக் கழுமரத்தில் 
சிதைந்து சிதிலமாகிறது.
ஆனாலும் 
அந்த இரண்டு உள்ளங்களின் 
அக்கினித்தாகம் எரிக்கும்போது 
சூரியன்கள் கூட கருகி விழும்.
அவை அந்த வாய்களுக்குள்
தாக்க வெக்கையை தணிக்கும்
எலுமிக்கப்பழங்களாய் திணிக்கப்படும்.
அந்த ஊமை வலி மறக்கடித்து 
மரத்துபோக வைக்கப்படும்.
அதன் ஊடு கசிவுகளில் 
அழும் கேவல்கள் கீற்றுகளாய் சிதறும்.

சொர்க்கத்து கற்பனையை அப்படியே நம்பிவிடும்
இளைய உள்ளங்கள் தழைய தழைய
அந்த கந்தல் கனவுகளின் கைகளில் வீழ்ந்து கிடக்கும்.
தனிமையை தழுவிப்போனவர்களாய்
இரவைப்பிசைந்து கிடப்பார்கள்.
ஓவ்வொருவரும்  சல்லாத்துணி உருவங்களாய்
சல சலத்து ஓடும் ஆவிக்கூட்டங்களுடன்
கலந்து கிடப்பார்கள்.அந்த இரவு அவர்களுக்கு
அவற்றோடு தான் பந்தி விரிக்கப்படும்.
யார் யாரை தின்பது?
காதல் காதலையே தின்னுமா?
அவர்களுக்கு தெரியும்
காதல் குரூரமாய் வளர்கிறது என்று.
அந்த பொய் வளர்சசி பொலிவற்று
வற்றிக்கிடந்தாலும்
அடியில் இனிப்புக்கடல் அவர்களுக்கு
அலைகளில் ஆர்ப்பரிக்கும்.
காதல் தழுவலில் கைகள் அந்த
மின்னல் ஸ்பரிசத்தை உணராது.
தோள்களில் காமம் களியூரக்  கலந்தாலும்
ஏதுமே தெரியாது.
காதல் எனும் புனித வியப்பு
எங்கோ புதையுண்டு போகும்.
இருளடித்துப்போகும் ஒரு குகை வரும்.
இதழுக்கு இதழ் அந்த
முத்தங்களின் மின்பாய்சசலில்
எல்லாமே எங்கோ புதையுண்டு போகும்.
காதல் இறந்து போகும் புள்ளி இதுவே.
ஆனாலும்
காதல் எல்லாம் இதுவே.
இதுவே தான் எல்லாமும் காதலாய்.
காதல் காதலை காதல் செய்யும்
காதல் இதுவே தான்.

==========================================
மொழி மறு வார்ப்பு :--- ருத்ரா இ பரமசிவன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக