செவ்வாய், 31 ஜனவரி, 2017

எறும்பு எறும்பாய்....

எறும்பு எறும்பாய்....
====================================ருத்ரா இ பரமசிவன் 

காகிதத்தில் கவிதை எழுதத்தொடங்கினான்.
முதல் வரி
எறும்பு எறும்பாய் ஊர்ந்தன.
ஒரு எறும்பு
இரண்டு எறும்பு.
மூன்று எறும்பு.
நான்கு எறும்பு.
எறும்புகள்
எண்ணிக்கொண்டே சென்றன.
முப்பத்தைய்யாயிரங்கோடியே தொண்ணூற்றொம்பதாயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது...
நாப்பதாயிரங்கோகோகோகோகோகோகோ.....கோடி கோடி.....
வாழ்க்கையில்
காதல் எனும் இனிப்பு தேடிய‌
பயணம்பற்றிய‌
கவிதை அது...

=============================================================
ஜூலை 7  2013 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக