புதன், 25 ஜனவரி, 2017

விலங்குகள் நல வாரியம்

விலங்குகள் நல வாரியம்
======================================ருத்ரா

விலங்குகளை நலமாக‌
காப்பாற்றி வைக்கிறார்கள்.
விலங்குகளை பத்திரமாக‌
காப்பாற்றி வருகிறார்கள்.
விலங்குகள் பாதுகாப்புக்கு
பாடுபடுகிறார்கள்.
விலங்குகளை பயன்படுத்துவதில்
மிகவும் நேசம் காட்டுகிறார்கள்.
விலங்குகளை பூஜித்து
கொண்டாடுகிறார்கள்.
இந்த விலங்குகளை
சுதந்திரமாக வைக்க வேண்டுமாம்
போராடுகிறார்கள்.
ஆம்!
மனிதனின் உரிமைகளுக்கு
விலங்குகள் மாட்டவே
இந்த‌
விலங்குளை பத்திரமாக‌
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழுக்கு விலங்கு பூட்ட‌
பாவம் இந்த வாயில்லா
விலங்குகள் தான்
அவர்களுக்கு கிடைத்ததா?

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக