வியாழன், 29 ஆகஸ்ட், 2024

எழுத்தாளர்

 


கையில் காகிதமும் பேனாவுமாக‌

ஒரு எழுத்தாளர்

கடவுள்  முன் நின்று

பேசிக்கொண்டிருந்தார்.

நீங்கள் யார்?

உங்கள் உள்ளடக்கம் என்ன?

அதை

சொற்களில் பிசைந்து 

உருட்டித்திரட்டி எழுதிப்பார்க்கிறேன்.

ஃபோட்டோவுக்கு போஸ்கொடுப்பது போல்

கொஞ்சநேரம் நில்லுங்கள்.

உறைந்து போன நிலையில்

என்றார்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது

என்று நான் 

ஏற்கனவே உங்களை 

எழுத வைத்திருக்கிறேனே

அப்புறம் என்னாவது?

அவர் மடக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக