வியாழன், 8 ஆகஸ்ட், 2024

எதை.....

 

எதை.....

______________________________________

சொற்கீரன்



உன்னை மறக்க முடியவில்லை.

மூளக்க்கு முடிந்தால்

இதயத்துக்கு முடியவில்லை.

இரண்டுமே சட்டை செய்யவில்லை

என்றால்

மீன்கொத்திப்பறவை

அதிரும் அந்த நீலச்சிவப்பு 

வண்ணச்சுழலில்

மீன்கள் மாட்டிக்கொள்வது போல்

என் பார்வை உன் விழிக்குள்

என்றோ செருக்கிக்கொண்டு கிடக்கிறது.

விடுதலையும் வேண்டும்.

மீண்டும் 

விலங்கும் மாட்டிக்கொள்ள வேண்டும்.

சிறைக்கோட்டமும் வேண்டும்.

அதை உடைக்கும் 

ச‌ம்மட்டிகளும் வேண்டும்.

இந்த முரண்பாடுகளை

நட்பு என்றும் நழுவிக்கொண்டு

ஓடியிருக்கிறேன்.

பிறகு அதை த்ழுவிக்கொண்டு

அதை நீக்குவதற்கும் 

ஓடிக்கொண்டிருக்கிறேன்.

போதும்.

காதல் என்று கொஞ்ச‌மேனும் 

உச்சரிக்காதீர்கள்.

அந்த சொல்லும் அதன் அர்த்தமும்

ஒரு அடர்த்தியான மங்கல் காட்டின்

புகை மூட்டத்தில்

பிம்பம் காட்டிக்கொண்டே இருக்கட்டும்.

மனத்தின் விளிம்புகள் 

சுக்கு நூறாகும் வரை

அது வெறும் குவார்ட்டர் கட்டீங் தான்.

அது என்னடா எழவு என்று

உடைத்து நீங்கள் நொறுக்கும்போது

அந்த கண்ணாடி சில்லுகள் ஓவ்வொன்றும்

இனிக்கும் 

சில்லுக்கருப்பட்டி தான்.

அமைதியுறுங்கள்.

அமைதியுரும் வரை

பனை மர உயரத்துக்கு

சுநாமிகள் எழுப்புங்கள்.

இந்த கொந்தளிப்புக்கு

எதை....

நான் திரையிட்டுக்காட்ட இயலும்?

பிரிவின் துவரம் அவளை

வெட்டிச்சிதைத்து

கடற்கரையில் அவனை நோக்கி

செதில் செதிலாக உதிர்ந்து நிற்கிறாளே

அதைத்தான் சொல்ல வேண்டும்.

"கல் பொரு சிறு நுரை"...


________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக