ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

தேனருவி.

 

தேனருவி

_____________________________________

சொற்கீரன்


அழுது தீர்த்துவிடு.

அதன் பின்னே 

முட்டித்துரத்திக்கொண்டு

வரும்

சிரிப்புகளுக்கு

வழி கிடைக்கட்டும்.

துன்பத்தை கவிதையாக்கும்

பேனாக்களை

பரணில் எறி.

மகிழ்ச்சியின் 

மயில்பீலிகள் போதும்

உள்ளம் வருடும்

குறுந்தொகைகள் எழுத.

கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்

கண்காணாத இடத்திலிருந்து

கண் கசக்கிக்கொண்டு

கண்ணீரை அருவியாய் கொட்டும்

"தேனருவி" 

ஏன் உனக்கு உப்புக்கரிப்பதில்லை.


____________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக