புதன், 28 ஆகஸ்ட், 2024

எழுந்து வா!

 


என்ன அரசியல் இது?

மதம் என்பதும் 

கடவுள் என்பதும்

தனிப்பட்ட உள்ளத்திரைகளின்

மூடல் அல்லது விலக்கல் ஆகும்.

கோவில் என்று

கல்லில் கட்டியிருந்தாலும்

அது

மொத்த மக்களின்

முகம் பார்க்கும் கண்ணாடி.

அது பூகங்களின்

முண்டைக்கண்களுமாய்

கோரைப்பல் விரிப்புகளின்

ரத்தம் சொட்டும்

வெறித்தனங்களுமாய்

புராணப்புளுகுகளின்

கிட்டங்கியுமாய் 

சாதிகள் எனும் 

வெட்டரிவாள்களின்

கொலைக்களங்களாயுமாய்

பரிணாம் அடைந்த போது

ஆட்சி அரசியலின் 

வரலாறுகள் எல்லாம்

ரத்தக்காட்டாறுகள் 

பொங்கிப்பாயும் 

பூமியாகிப்போனது.

மனிதன் தான்

தன் "மனிதத்தையே"

விண்ணை முட்டும்

பிரம்மாண்டமாய்க்காட்டி

பொய்மை மயக்கங்களை 

பொடிப்பொடியாக்கும்

கூரிய அறிவின்

வீச்சுகளோடு

எழுந்து வர வேண்டும்!

மானிடனே

எழுந்து வா!


__________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக